இடுகைகள்

பத்தாவது ஆண்டில் கோமாளிமேடை - தொடரும் பயணம்!

படம்
  பத்தாவது ஆண்டில் கோமாளிமேடை....  இந்த வலைப்பூவை இத்தனை ஆண்டுகள் நடத்த முடியும் என யார் நினைத்திருக்க முடியும்? எங்களுக்கே அந்த நம்பிக்கை இல்லை. என்ன எழுதுவது, எப்படி இயங்குவது, யாருக்கு என்ன தெரியும் என நிறைய கேள்விகள் இருந்தன. தொடக்க காலத்தில் எழுதிய கட்டுரைகளிலும் கூட இதுபோன்ற தடுமாற்றங்கள் தென்பட்டிருக்கலாம். கோமாளிமேடையின் ட்ரங்குப்பெட்டியில் இதற்கான சான்றுகள் உண்டு என நம்புகிறோம்.  அன்பரசு என்ற ஒருவரின் சிந்தனையில்தான் கோமாளிமேடை வலைப்பூ உருவானது. அதுதான் அடித்தளம். அதன் அடிப்படையில்தான் ஆராபிரஸ் இ நூல் பதிப்பகம் கூட பின்னாளில் உருவானது. இந்த பத்து ஆண்டுகளை திரும்பி பார்ப்பது என்பது கடினமாகவே இருக்கிறது. ஏனெனில் பாதை அந்தளவு எளிமையாக இல்லை. சந்தித்த மனிதர்களும், அவர்களுடனான அனுபவங்களும் கூட மகிழ்ச்சி கொள்ளத்தக்கவை அல்ல. ஆனால் , நகை முரணாக அவைதான் கோமாளிமேடையில் எழுதிய பல்வேறு கட்டுரைகளுக்காக அடித்தளமாக அமைந்தது.  பெரும்பாலான நேரங்களில் எழுதிய எழுத்துகள் மட்டுமே மனதளவில் பெரிய ஆறுதலாக இருந்தது. தொடக்க காலத்தில் கணியம் சீனிவாசன் அவர்கள், அன்பரசு எழுதிய  மொழிபெயர்ப்பு நூலை தனது ஃப்

அடிப்படை உரிமைகளை கோரும் போராளிகளை கண்காணிக்கும் சீன அரசு!

படம்
  கண்காணிப்பு அரசியலில் வேகமெடுக்கும் சீனா  சிசிடிவி கேமராக்களை செயற்கை நுண்ணறிவு வசதியுடன் பொருத்தி அதை இயக்கி குற்றவாளிகளை பிடிப்பது சீனாவின் சிறப்பம்சம். இதில் நாம் அறியாத ஒன்று. இதே வசதியைப் பயன்படுத்தி அடிப்படை உரிமைக்காக போராடுபவர்களை முழுமையாக முடக்க முடியும் என்பதுதான். சீனாவில் மட்டுமல்ல. அதன் ஆட்சி ஹாங்காங்கிலும் விரிவடைந்துள்ளது. அங்குள்ள காவல்துறைஅதிகாரிகளும் இப்போது சீனாவின் காவல்துறை போலவே அரசியல் உரிமை போராளிகளை கைதுசெய்து, கண்காணித்து விசாரித்து மிரட்டி வருகின்றனர். இங்கு நாம் பார்க்கப்போவது அப்படியான போராளி ஒருவரின் வாழ்க்கை பற்றியதுதான்.  ஹாங்காங்கைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆக்னஸ் சோ. இவர் கனடாவில் படிக்க விண்ணப்பித்தார். பல்கலைக்கழகத்தில் கூட அனுமதி கடிதம் வழங்கிவிட்டனர். ஆனால், அவரது பாஸ்போர்ட்டை ஹாங்காங் அரசு தர மறுத்துவிட்டது. அதை ஆக்னஸ் பெற சில நிபந்தனைகளை விதித்தது. ஹாங்காங்கில் அவர் செய்த போராட்டங்கள், பங்கேற்புகள் அனைத்தும் வருத்தம் தெரிவிப்பது, கம்யூனிஸ்ட் கொள்கை சுற்றுலாவை ஏற்கவேண்டும் என்பவைதான அவை.  ஆக்னஸூக்கு அப்படியான கருத்தியல் சுற்றுலா என்பது பற்றி எதுவ

ஜிம்பாவே மண்ணின் இலக்கியத்தை வாழ வைக்கும் வேவர் பதிப்பகத்திற்கு வயது 25!

படம்
  ஜிம்பாவேயின் கதைகளைச் சொல்லும் பதிப்பகம்! ஒரு நாவலை வாசிக்கிறீர்கள். அதன் எழுத்து நடை வசீகரமாக இருக்கிறது. உடனே எழுத்தாளரின் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புகிறீர்கள். ஆனால் உண்மையில், எழுத்தாளர் மையக்கருவை எழுதுகிறார்தான். ஆனால் அதை செம்மைப்படுத்துபவர் ஆசிரியர். ஆங்கிலத்தில் எடிட்டர். இவரை பெரிதாக யாரும் கவனப்படுத்துவது இல்லை. தமிழில் அப்படியான சிறப்பான எடிட்டர் என தமிழினி வசந்தகுமார் அவர்களைக் கூறுவார்கள். இது சற்று வெளியே தெரிந்த விஷயம் என்பதால் கூற முடிகிறது. நிறைய எடிட்டர்கள் தங்களை பெரிதாக வெளிப்படுத்திக்கொள்ளாமல் பதிப்பகங்களின் புத்தக அடுக்குகளில் இருக்கிறார்கள். இப்படியானவர்களை கௌரவப்படுத்த ஒரு விருது கூட இல்லை.  அப்படியானவர்களில் ஒருவர்தான் ஜிம்பாவே நாட்டில் வேவர் பிரஸ் பதிப்பகத்தை நடத்தும் ஐரின் ஸ்டான்டன். இவர், ஏற்கெனவே பதிப்பகத்துறையில்,  இயங்கிய அனுபவம் கொண்டவர். தனது கணவரை லண்டனில் உள்ள ஆப்பிரிக்கா சென்டரில் சந்தித்து பேசி, கரம் பிடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜிம்பாவே வந்து வேவர் பிரஸ்ஸை தொடங்கி நடத்தி வருகிறார்கள். அந்த பதிப்பகத்திற்கு இந்த ஆண்டு இ

அசுரகுல தலைவரின் இரண்டாவது பிறப்பு

படம்
  பாத் ஆஃப் சாமன்ஸ் காமிக்ஸ் மங்காபேட்.காம் அசுரகுல இனக்குழுவைச் சேர்ந்த தலைவர் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவருக்கு எமனின் அழைப்பு மூன்று முறை கேட்டால் உயிர் பிரிந்துவிடும். இந்த நிலையில், அவரது விசுவாச சீடன் யூம்யங் அமர வாழ்க்கை தரும் மூலிகையை கொண்டு வந்து வாயில் பிழிகிறான். இதனால், அவரது உடல் பலம் பெறுகிறது. அதேசமயம், ஆன்மா உடலை விட்டு வெளியே வருகிறது. அதை எமன் கொண்டு போக நினைக்கிறார். ஆனால் உடல் மூலிகையால் பலம் பெற்றவுடன் ஆன்மா உள்ளே நுழைய முயல்கிறது. உண்மையில் தலைவருக்கு பணம், செல்வாக்கு, மனைவிகள் என அனைத்துமே கிடைத்தும் நினைத்த லட்சியங்களை அடையமுடியவில்லை. அதை அடையவே அமரத்துவ வாழ்வை பெற நினைக்கிறார்.  இம்முறை எமன் செய்த விளையாட்டால் அவரது உயிர், வுடாங் இனக்குழுவில் தாவோயிசம் பயிலும் மாணவன் உடலில் புகுந்துவிடுகிறது. அந்த மாணவனுக்கு அசுரகுல தலைவரின் நினைவுகளும் உள்ளது. அந்த மாணவனின் உடலில் உள்ள இயற்கையான நினைவுகளும் இருக்கிறது. இந்த பிறப்பில் அசுரகுல தலைவர் அவரது இயல்பான தீயசக்திகளை பயன்படுத்த முடியாமல் போகிறது. அதேசமயம் அவரது எதிரிகளை நண்பர்கள் என்ற முறையில் சந்திக்க நேரிடுகிறது

உறுப்புதான குற்ற கும்பலால் மனைவி, மகளை இழக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் வாழ்க்கைக் கதை!

படம்
  ஜோசப்  மலையாளம்  இயக்குநர் - பத்மகுமார் இசை -ரஞ்ஜின் ராஜ்  வேலையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜோசப். கொலைகளை எளிதாக துப்பறிந்து கண்டுபிடிக்கும் திறமை கொண்டவர். இவருக்கு ஒரு மகள் உண்டு. மனைவி விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவரை மணந்துகொள்கிறார்.  ஜோசப்பிற்கு ஐந்து விசுவாச நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது மது அருந்திவிட்டு மலை உச்சியில் பாட்டு பாடிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். இங்கு ஒரு திருப்புமுனையாக ஜோசப்பின் மனைவி விபத்தில் சிக்குகிறார். மூளைச்சாவு அடைந்ததாக சொல்லி உறுப்பு தானம் செய்ய மருத்துவமனையில் கேட்கிறார்கள். முன்னாள், இந்நாள் கணவர்கள் இருவரும் ஒப்புதல் தருகின்றனர். ஆனால் முன்னாள் கணவரான ஜோசப்பிற்கு, ஸ்டெல்லா இறந்துபோனது வருத்தம் தருகிறது. அவர் இறந்துபோன இடத்திற்கு சென்று பார்த்து அது விபத்தல்ல கொலை என்று நண்பர்களுக்கு கூறுகிறார். யார் கொலையாளி,என்ன காரணம் என்பதை படம் நிதானமாக பேசுகிறது. இறுதியாக வரும் காட்சிகள் நெகிழ்ச்சியானவை. மனதை ரணப்படுத்துபவை.  படத்தின் தொடக்கத்தில் திலீஸ் போத்தன், அரசு அதிகாரி கொடுக்கும் மெடல் ஒன்றை வாங்குகிறார். அவர் நினைவுகளின்

காலப்போக்கில் காலாவதியாகும் முக்கிய சம்பவங்களின் நினைவுகள்!

படம்
  பெற்றோர் அடித்து உதைப்பது, சகோதரன் குளிக்கும்போது காலை நீருக்குள் இழுத்து மூச்சு திணறச் செய்வது, ஆருயிர் நண்பன் என நினைப்பவன் காசு கையில் வந்ததும், பஸ் செலவுக்கு பணம் கொடுப்பது, நினைத்து பார்க்காத நேரத்தில் கிடைத்த காதலியின் முத்தம் என நிறைய விஷயங்கள் ஒருவரின் மனதில் இருக்கலாம். அதாவது தினசரி வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விஷயங்களும் மூளையில் சேகரமாகாது. அப்படி குறிப்பாக சேகரமாகும் விஷயங்களும் மெல்ல அழிந்துகொண்டே வரும். அப்படி அழிக்கப்பட்டால்தான் புதிய விஷயங்களை சேமிக்க முடியும்.  முக்கியம் என மனதில் நினைத்த விஷயங்கள் திடீரென அழிந்துபோகும்போது, நினைவுக்கு வராமல் போகும்போது சற்று வருத்தமாகவே இருக்கும். நினைவுகள் அழிவது மட்டும் பிரச்னை அல்ல. அவற்றை நீங்கள் சேமித்த வைக்கும் இடங்கள் கூட பிரச்னையானவைதான். இதை உளவியலாளர் டேனியல் ஸ்ஹாக்டர் ஏழு பாவங்கள் என்று கூறுகிறார். நினைவுகளின் தேய்மானம், நினைவுகூர தவறுவது, தடுப்பது, தவறான அங்கீகாரம், தேர்வு, பாகுபாடு, உறுதி ஆகியவற்றைக் கூறலாம்.  உங்கள் வாழ்க்கையின் பின்னே நடந்த விஷயங்களை திரும்ப நினைவுபடுத்துவது காலப்போக்கில், சற்று கடினமாகவே மாறும். பு

கிழக்கத்திய ஞானத்தை உளவியலுக்கு கொண்டு சென்று ஆராய்ந்த உளவியலாளர் ஜோன் கபாட்ஸின்!

படம்
  இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் கிழகத்திய ஆன்மிக கருத்துகளை, பாடல்களை இலக்கியங்களை நாடத் தொடங்கின. இந்த வகையில் பௌத்த மதத்தின் தியானம், உடற்பயிற்சிகளை வெளிநாட்டினர் ஆராயத் தொடங்கினர். அப்போது பெரிதாக அதன் ஆய்வுப்பூர்வ நிரூபணத்தை கூற முடியவில்லை. ஆனால் பின்னாளில் அதன் பலன்களை அடையாளம் கண்டு கொண்டனர்.  அமெரிக்க உயிரியலாளர், உளவியலாளரான ஜோன் கபாட்ஸின் என்பவர், மைண்ட்ஃபுல்னஸ் என்ற மன அழுத்தம் குறைக்கும் முறையை உருவாக்கினார். இதில் தியானம் முக்கியமான பங்கு வகித்தது.  ஒருவர் கூறும் கருத்துகளை, செய்யும் செயல்களை முன்முடிவுகள் இன்றி அதை ஏற்பது, அந்த செயல்பாடுகளில் இருந்து தன்னை பிரித்து வைத்து இயங்குவது, மையமாக இன்றி தனித்த இருப்பது ஆகியவற்றை ஜோன் இதில் முக்கியமாக கருதினார். அதாவது, உடல் அப்படியே நிலையாக இருக்க மனம் என்ன சிந்திக்கிறது என்பதை கவனமாக பார்க்குமாறு சூழலை உருவாக்கினார். இந்த முறையில் சிந்தனைகளை எந்த கட்டுப்பாடும் செய்யாமல் அப்படியே உருவாக விடுவது, அதைப்பற்றிய எந்த முடிவும் கூறக்கூடாது.  நான் தோற்றுப்போனவன், வாழ்க்கை எனக்கு இல்லை என எந்த முடிவுக்கும் வராமல் நிகழும

தன்னை, உலகத்தை மறந்து செயலைசெய்பவன் அனுபவிக்கும் பேரின்பம்!

படம்
  ஏ ஆர் இசையமைப்பதில் தன்னை மறப்பார். மணிரத்னம், கதைகளை படமாக்குவதில் தன்னை மறந்து வேலை செய்வார். இவர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே நமக்கு பிடித்த ஏதோ ஒரு செயலில் உலகை மறந்து நம்மை மறந்து ஈடுபட்டிருப்போம்.  அப்படியான மனநிலையை ஃப்ளோ என உளவியலில் குறிப்பிடுகிறார்கள். இதை லயம், சீரான ஓட்டம் என புரிந்துகொள்ளலாம். இதை மிகாலாய் என்ற உளவியலாளர் உருவாக்கினார். தொண்ணூறுகளில் தனது கருத்தை தொகுத்து ஃப்ளோ - தி சைக்காலஜி ஆஃப் ஆப்டிமல் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நூலை எழுதினார்.  உளவியலாளர் மிகலாய், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள், பல்வேறு வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களை நேர்காணல் செய்தார். இதில் அவர்களது தொழில், பொழுதுபோக்கு ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு அனுபவங்களை அறிந்தார். இதன்படி, ஒருவர் தொழில் அல்லது ஓய்வு நேர பொழுதுபோக்கிலோ தன்னை மறந்து ஈடுபாடு கொள்வது தெரிந்தது. அதாவது, தன்னை முழுக்க செய்யும் செயலில் கரைத்து திருப்தி காண்கிறார். பொதுவாக விளையாட்டில் வெல்வது மட்டுமல்ல பங்கேற்பதற்கும் கூட ஒருமித்த கவனம் தேவை. முழு கவனத்துடன் விளையாட்டை அனுபவித்து விளையாடுபவர்களுக்கு காலநேரமே தெரியாது. இதை உளவியலா

பாலியல் சீண்டல் வழக்குகளில் நேரடி சாட்சியங்களின் உண்மைத்தன்மை!

படம்
  1979ஆம் ஆண்டு, லாஃப்டஸ் ஐவிட்னஸ் டெஸ்டிமோனி என்ற நூலை எழுதினார். இதில் விபத்து நடக்கும்போது அதைப் பார்க்கும் நேரடி சாட்சியங்கள் எப்படி தகவல்களை தவறாக புனைந்து கூறுகிறார்கள் என்பதை செய்த ஆய்வுகளின் மூலம் விளக்கியிருந்தார்.  பின்னாளில் லாஃப்டஸ், தடயவியல் உளவியல் மீது ஆர்வம் கொண்டார். 1980ஆம் ஆண்டு குழந்தைகள் மீது பாலியல் சீண்டல் பற்றிய வழக்கில் அவர் வல்லுநராக இயங்கி இருந்தார். நினைவுகள் என்பது காலப்போக்கில் பல்வேறு தவறான தகவல்களால் மாறுகிறது. தவறான தகவல்களால் நிரம்புகிறது என்பதை அடையாளம் கண்டார். ஆனால் இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது எளிதாக இல்லை.  தொண்ணூறுகளில் ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. இதில் ஜார்ஜ் ஃபிராங்களின் என்பவர், தனது மகள் எய்லீனின் தோழியைக் கொன்றார் என்பது காவல்துறையின் வழக்கு. ஆனால் இதில் நேரடி சாட்சியான எய்லீன் கூறிய தகவல்கள் நிறைய மாறுபட்டன. பல்வேறு முறை அவை தவறாகவும் இருந்தன. ஆனாலும் நீதிமன்ற ஜூரிகள், குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனையை வழங்க பரிந்துரைத்தனர். தவறுதலாக பல்வேறு விஷயங்களை சேர்த்து, இணைத்து நினைவுபடுத்திக் கூறுவதைஃபால்ஸ் மெமரி சிண்ட்ரோம் என்று உளவிய

சமூகத்தோடு இணைந்து மக்களோடு கூடி இருந்தால் மகிழ்ச்சி பெருகும்!

படம்
  மூன்று வகையான மகிழ்ச்சியான வாழ்க்கை முறைகள் உள்ளன.  சிறந்த வாழ்கை இதில் தனிப்பட்ட வாழ்க்கை வளர்ச்சி இருக்கும். குறிப்பிட்ட திட்டமிட்ட போக்கில் வாழ்க்கை செல்லும்.  அர்த்தமுள்ள வாழ்க்கை  உங்களின் வாழ்க்கை, வளர்ச்சியை விட சேவைகளை செய்வதே முக்கியமானதாக இருக்கும்.  மகிழ்ச்சியான வாழ்க்கை  சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து அதன் வழியாக மகிழ்ச்சியை அடைவது... இதில் முதல் இரண்டு விஷயங்கள் இருந்தாலே ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் ஒருவர் சமூக உறவுகளை உருவாக்கிக்கொள்வது முக்கியம். இதில் ஒருவர் மகிழ்ச்சியை அதிகளவு பெறுவதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால், இந்த அம்சம் இல்லாமலும் மகி்ழ்ச்சி சாத்தியம் இல்லை.  இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், பதற்றம் காரணமாக ஒருவருக்கு ஏற்படும துயரமான மனநிலை பற்றிய ஆராய்ச்சிகள் வேகம் பிடித்தன. உளவியலாளர் மார்ட்டின் செலிக்மன் என்பவர், 'லேர்ன்ட் ஹெல்ப்லெஸ்னெஸ்' எனும் கோட்பாட்டை உருவாக்கினார். இதில், மன அழுத்தம் மூலம் ஒருவருக்கு ஏறபடும் எதிர்மறை நிலைகளை அடையாளம் கண்டார்.  ஒருவரின் வாழ்வில் உள்ள பலத்தை அடையாளம் காண்பது முக்கியம். அதைவிட ப