பெண்களை காக்கும் சக்திவாஹினி!
பெண்களை காக்கும் சக்திவாஹினி ! - ச . அன்பரசு " பெண்களைக்கு எதிரான வன்முறை செயல்களின்போது அதன் சாட்சியாக அமர்ந்திருக்காமல் , அதனை எதிர்த்து நில்லுங்கள் " என்பது ஐ . நா சபையின் முன்னாள் செயலாளரான பான்கி மூனின் நல்வாக்கு . வரும் நவ .25- டிச .10 வரையுள்ள பதினாறு நாட்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மனித உரிமைக்கானவையாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது . இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஏ டூ இசட் வன்முறைகளுக்கு எதிராக சட்ட உதவிக்கரம் நீட்டி உதவுகிறது சக்தி வாஹினி அமைப்பு . 2001 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் ரவிகாந்த் , நிஷிகாந்த் , ரிஷிகாந்த் ஆகிய மூன்று பிரதர்ஸின் ஐடியா இது . " எங்களது ஏரியாவில் சுரங்கப்பணியாளர்கள் அதிகம் . தினசரி குடித்துவிட்டு பெண்களை அடித்து நொறுக்கி சண்டையிடுவதை பார்த்து , அப்பெண்களை காக்க உருவானதுதான் சக்திவாஹினி " என மலர்ச்சியாக பேசுகிறார் ரிஷிகாந்த் . மூன்று சகோதரர்களும் தம் தந்தையின் ஓய்வூதிய தொகையை வைத்தே சக்திவாஹினியை