இடுகைகள்

வாசனை திரவியங்களில் ஆண், பெண் வேறுபாடு உண்டா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி ? மிஸ்டர் ரோனி ஆண்களுக்கான, பெண்களுக்கான வாசனை திரவியங்களில் வேறுபாடு என்ன? அனைத்திற்கும் ஆல்கஹால்தான் மையம். ஆனால் வேறுபடுவது, பெண்களுக்கான வாசனைகள்தான். ஆண்களுக்கு சற்று மூக்கை நெருடும் வாசனைகளையும் பெண்களுக்கு இதமான, ஆழ்ந்து சுவாசித்தால் தெரியும்படியான பூக்கள் வாசனைகளை அமைக்கிறார்கள். இதற்கான காரணம், பெண்களின் உடல் வியர்வை மற்றும் ஆண்களின் உடல் வியர்வை மணம்தான். இதனை அடிப்படையாக வைத்தே அன்றிலிருந்து இன்றுவரை பர்ப்யூம்கள், டியோடிரண்ட், சென்ட் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. அதேசமயம் இவன் வேற மாதிரி விக்ரம் பிரபு போல பாடி ஸ்ப்ரேயில் என்ன வித்தியாசம்? என அக்கா பெண்ணின் பாடி ஸ்ப்ரேயை களவாடி களிப்புறுவதும் நம் தேசத்தில் நடக்கும் காட்சிதான். நன்றி:பிபிசி

ஏமனுக்கு மானிய உதவிகளை நிறுத்தலாமா? - ஐ.நா யோசனை

படம்
ஏமன் நாட்டில் மக்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களை ஹூதி புரட்சியாளர்களுக்கு வழங்கினால் விரைவில் உணவுப்பொருட்களுக்கான மானியம் நிறுத்தப்படும் என ஐ.நா தலைவர் அறிவித்துள்ளார். ஏமனில் ஹூதி புரட்சியாளர்கள் அரசை எதிர்த்து கடுமையாக போரிட்டு வருகின்றனர். அவர்கள் கைப்பற்றிய நிலப்பகுதி சார்ந்த மக்களுக்கு உண்ண உணவில்லை. இதனை மனிதநேயமுறையில் பரிசீலித்த ஐ.நா சபை இவர்களுக்கு பதினைந்து மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உணவுப்பொருட்களை அனுப்பி வைத்தது. தற்போது ஐ.நாவின் உணவு வழங்கும் திட்டத்தலைவர் டேவிட் பீஸ்லி, ஐ.நா வழங்கும் உணவுப்பொருட்களை மக்களுக்கு வழங்காமல் ஹூதி புரட்சியாளர்களுக்கு கொடுத்தால் நாங்கள் உணவுப்பொருட்களையும் மானியம் வழங்குவதையும் நிறுத்திவிடுவோம் என அச்சுறுத்தி உள்ளனர். இதற்கு பதிலளித்த ஹீதி புரட்சியாளர்கள் சார்பான வெளிநாட்டுத்துறை அமைச்சர் ஹூசைன் அல் எசி,  தவறுகள் சிலசமயங்களில் நடைபெறலாம். ஆனால் நாங்கள் மக்களுக்கு வழங்கும் உணவுப்பொருட்களை புரட்சியாளர்களுக்கு வழங்கவில்லை. மக்களை நாங்கள் நம்புகிறோம். எங்களுக்கு ஆதரவளிக்கும் அவர்கள்தான் எங்கள் பலமும் கூட என்றார். பனிரெண்டு

இனி உங்கள் ஏசி பேசும்! - எல்ஜியின் புதிய சிப் காரணம்

படம்
எல்ஜி, ஸ்மார்ட் சாதனங்களை இயக்கும் மூளை போன்ற சிப் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதனை நியூட்ரல் சிப் என்று அழைக்கின்றனர். எல்ஜி நியூட்ரல் எஞ்சின் எனப்படும் இந்த சிப், குரல், டேட்டா ஆகியவற்றை பரிசீலனை செய்யும் திறன் பெற்றது. இந்த சேவை மேக கணினியத்தில் இணைக்காத போதும் செய்யமுடியும். மே 17 அன்று சியோலில் எல்ஜி, நியூட்ரல் எஞ்சின் என்பது மூளையின் நியூரான்களைப் போன்ற செயல்பாடுகளைக் கொண்டது என அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாக எல்ஜி தன் ஏஐ பொருட்களை திங்க் என்ற பிராண்டில் சந்தைப்படுத்தி வருகிறது. இணைய இணைப்பின்றி செயல்படும் வசதி, அதற்கான பாதுகாப்பு ஆகியவற்றை எல்ஜி மனதில் கொண்டு இதனைத் தயாரித்திருக்கலாம் என்கிறாலர் அட்னன் பரூக்கி.  புதிய எல்ஜி ஏஐ சிப், எதிர்காலத்தில் அனைத்து எல்ஜி பொருட்களையும் கட்டுப்படுத்தும் விதமாக தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக இருக்கலாம். கருவி, இணையத்தில இணைக்கப்படாமலிருந்தாலும் செயல்படுவது இதன் ஸ்பெஷல்.  இதன் அர்த்தம் இனி உங்கள் வீட்டில் வைத்திருக்கும் ஏசி, வாஷிங்மெஷின், டிவி, ஸ்மார்ட் உதவியாளர் என அனைத்து பொருட்களுக்கும் கண், காது கிடைக்கப்போகிறது என்ப

வணிகத்தையும் அரசியலையும் கலக்காதீர்கள் ட்ரம்ப்!

படம்
ஹூவெய் நிறுவனத்தை அமெரிக்க தற்போது கறுப்பு பட்டியலில் வைத்துள்ளது. இதன் விளைவாக, அமெரிக்க டெக் நிறுவனங்கள் சந்தையில் முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது. சீன அரசின் உளவு நிறுவனமாக ஹூவெய் செயல்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்ய, சீனாவின் மீது வர்த்தக தடை நடவடிக்கைகள் தீவிரமாயின. கூடுதலாக அந்நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவெய் மீதும் நடவடிக்கைகள் பாய்ந்தன. அதன் உச்சமாக அந்நிறுவன தலைவரின் மகளை கனடாவில்  கைது செய்யும் அளவு பிரச்னை முற்றியது. குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவரின் மீதான தீவிரமான கைது நடவடிக்கை என்பது குறியீடாக தொடர்புடைய நாடு குறித்தும் என்பதை யாரும் அறியாதவர்களல்ல. இதுகுறித்து ஹூவெய் நிறுவனம், இது அரசியல்ரீதியான நடவடிக்கை என்று கூறியதோடு பேச்சை இறுதிக்கு கொண்டுவந்தது. ஹூவெய் நிறுவனத்திற்கு சீன அரசின் ஆதரவு இல்லை என மறுக்க முடியாது. ஏன் ட்ரம்ப் கூட அந்நாட்டு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் பைக் நிறுவனத்திற்கு இறக்குமதி வரி விதிக்கக்கூடாது என இந்தியாவை எச்சரிக்க வில்லையா என்ன? இன்று உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் 2 வது இடம

அசுரகுலம்: ஜப்பானைக் குலைக்கும் மனநிலை நோய்!

படம்
அசுரகுலம் ஹிக்கிகோமோரி ஜப்பானில் இளைஞர்களை ஆட்டிப்படைத்த இன்றும் நடப்பிலுள்ள மனநிலைக்கோளாறு இது. குறிப்பிட்ட துறையிலுள்ள இளைஞர்கள் தன் துறை சார்ந்து சாதிக்க ஏதுமில்லை என்ற நினைப்பு தோன்றினால் முடிந்தது. வீடு புகுந்து கதவைச் சாத்திக்கொண்டு ஆறுமாதம் காமிக், அனிமே என பார்த்துக்கொண்டே இருப்பார்கள். இதில் அவர்களுக்கு நம்பிக்கை தோன்றினால் திரும்ப சமூகத்திற்கு தன் கதவுகளைத் திறப்பார்கள். இல்லையெனில் சிக்கல்தான். அவர்களுக்கும் பிறருக்கும். கடந்த பிப்ரவரியில் வந்த ஜப்பான் டைம்ஸ் செய்திப்படி, அங்கு ஹிக்கிகோமோரி பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்திற்கும் அதிகம். குறிப்பாக சொல்ல வேண்டுமா? 6,13,000. இந்த பாதிப்பு பதினைந்து வயதிலிருந்து தொடங்குகிறது. 2015 ஆம்ஆண்டு ஆய்வுப்படி 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் இப்பாதிப்பில் சிக்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த மனநிலை பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகம். பள்ளிக்கோ, வேலைக்கோ செல்லாமல் வீட்டிலேயே ஆறுமாதம் அடைந்து கிடக்கும் பாதிப்பு வயது வந்தவர்களுக்கும் உள்ளது. இது பெரும் சமூக பாதிப்பாக மாறி வருகிறது என்கி

தவிர்க்கமுடியாத திருடனின் கதை! - திருடன் மணியன் பிள்ளை

படம்
திருடன் மணியன்பிள்ளை ஜி.ஆர். இந்துகோபன் தமிழில்: குளச்சல் மு.யூசுப் காலச்சுவடு நடிகர், பாடலாசிரியர், கல்வித்தந்தை, எழுத்தாளர், அரசியல்வாதி என பலரும் சுயசரிதை எழுதியிருக்கிறார்கள். அதில் பலவற்றை நாமும் படித்திருப்போம். ஆனால் இந்த காலகட்டத்தில்தான் பாலியல் தொழிலாளி, திருடன் ஆகியோரின் சுயசரிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கேரளத்தைச் சேர்ந்த மணியன்பிள்ளை நாயர் குடும்பத்தில் பிறந்த திருடர். அவரின் திருட்டு, அவர் சந்தித்த மனிதர்கள், அவரைக் காதலித்த பெண்கள், போலீஸ்காரர்கள், சிறை அனுபவம், தொழிலதிபராக மாறியது, மறுவாழ்வு காலகட்டம் என நினைத்துப் பார்க்க முடியாத பல்வேறு உணர்ச்சிகளை வாசிப்பவரின் மனதில் எழச்செய்யும் படைப்பு. எழுத்தாளரின் திறன், மணியன் பிள்ளையின் வாழ்க்கையை அழுந்தச்சொல்ல உதவியிருக்கிறது. மணியன் பிள்ளையின் தந்தை மதுவருந்தி குடிநோயால் இறந்துவிட பசியால் துடிப்பவருக்கு அவரின் நாயர் ஜாதியே எமனாகும் அவலம் கண்களில் நீர்கட்டவைக்கிறது. அவரின் தந்தைக்கு சேரும்படியான சொத்தை சதி செய்து அபகரிக்க குடும்பமே அந்த இடத்தில் வாழ முடியாமல் வேறிடம் நோக்கி போகும் காட்சி

கவிதைகளை உயிர்ப்பிக்கும் டெக் வல்லுநர்!

படம்
பஞ்சாப் கவிதைகளை உயிர்ப்பிக்கும் பாக்.டெக் வல்லுநர்! அபிதின் பத்து வயதில் அவரது தந்தை அவருக்கு பஞ்சாபி சூபி நூல்களின் தொகுப்பை வாசிக்க கொடுத்தார். அதிலிருந்து கவிதைகள் அனைத்தும் படிக்கும் போதே அபித்துக்கு பெரும் பரவசத்தைத் தந்தன. அப்போது அவரின் வீட்டின் பெற்றோர் தங்களுக்குள் பஞ்சாபி பேசினாலும் குழந்தைகளிடம் உருதில் பேசினர். நாங்கள் பாகிஸ்தானில் வசிப்பதால், அங்கு பஞ்சாபியைப் பேசுவது மிக குறைவு. அப்படிப் பேசினாலும் அதனை சிலர் கொச்சையாக நினைக்கின்றனர். தற்போது பஞ்சாபி மொழிக்காக ஃபோக்பஞ்சாப் என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். அதோடு இம்மொழிக்கான அகராதியையும் உருவாக்கியுள்ளார் அபித். நன்றி: தி டைம்ஸ்

எப்படி கடத்தப்படுகிறது ஹவாலா தங்கம்!

படம்
கடத்தல் வாகனமாக மனித உடல் காசு கொடுத்து வாங்கும் பொருள் நாட்டையும் வீட்டையும் வளர்ப்பது உண்மைதான். ஆனால் வரிகொடுக்காமல் வரும் தங்கம்தான் இன்று நகைச்சந்தையை ஆட்சி செய்து வருகிறது. ஹவாலா முறையில் செயல்படும் உலகளாவிய வலைப்பின்னல் இதில் உள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் மட்டும் கடத்தல் வலைப்பின்னல்களால் கடத்தப்படும் தங்கத்தின் சதவீதம் 46 என சுங்கத்துறை கணக்கு சொல்லியுள்ளது. கடந்த ஆண்டு 109 கிலோ தங்கத்தைக் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு 40 கோடி. இதனைக் கடத்திக் கொண்டு வருபவருக்கு நூறுகிராமுக்கு ரூ.350 தருகின்றனர். எனவே கிலோகிராமாக கடத்தினால்தான் நல்ல வரும்படி கிடைக்கும் என கடத்தி வருகின்றனர். வெளிநாட்டு தங்கத்திற்கு 38.5 சதவீத வரியை இந்தியா விதிக்கிறது. இதனால், கடத்தல்காரர்களுக்கு கிடைக்கும் லாபம், 15 லட்சம் ரூபாய். இதில் சுங்கத்துறையிடம் ஆட்கள் சிக்கிக்கொண்டாலும் லாபம் கிடைக்கும் பாதுகாப்பான வியாபாரத்தை இந்த கள்ளக்கடத்தல் குழு செய்துகொள்கிறது. தங்கத்தை கடத்தும் ஆட்கள் அனைவரிடமும் 600 கிராம் தங்கத்திற்கு குறைவான அளவே வழங்கப்படுகிறது. பெரும்பாலும் தங்கத்தை கடத்துபவருடன் சக பயணியாகவ

போர்டிங் பாஸில் என்ன அச்சிடப்பட்டுள்ளது?

படம்
ஏர் இந்தியாவுக்கு செல்கிறீர்கள். உடனே கோயம்பேடு பஸ் போல ஏறி உட்கார்ந்துவிட முடியாது. போனவுடன் செக்யூரிட்டி செக்கிங் முடித்து, நீங்கள் ஏற வேண்டிய கேட் அருகே உள்ள கௌண்டரில் போர்ட்டிங் பாஸ் வாங்க வேண்டும். இதுதான் நீங்கள் எங்கிருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதற்கான டிக்கெட்.  இதிலுள்ள ஆறு எழுத்துக்கள் பயணிகளின் விவரங்களைக் குறிக்கும். இந்த எழுத்துகள் ராண்டம் முறையில் உருவாக்கப்படுகின்றன. இதில் பயணிகளின் விவரம், தொடர்பு முகவரி ஆகியவை பதிவிடப்பட்டிருக்கும்.  இதில் உள்ள A, F என்ற எழுத்துகள்  முதல் வகுப்பு சீட்களைக் குறிக்க பயன்படுகின்றன. y  என்ற எழுத்து எகானமி வகுப்பை குறிக்கிறது.  க்யூ என்ற எழுத்து இருந்தால் தள்ளுபடி ரேட்டில்   எகானமி வகுப்பை புக் செய்திருக்கிறீர்கள் என்று காட்டிக்கொடுத்துவிடும். அதோடு பி என்ற எழுத்து அச்சிடப்பட்டிருந்தால் விமான இருக்கை அப்டேட் ஆகும் வாய்ப்பில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எஸ்டிபிசி என்று அச்சிடப்பட்டிருந்தால் நீங்கள் செல்லும் வழியில் ஹோட்டலில் இலவசமாக தங்கிச்செல்ல முடியும் என்பதைக் குறிக்கும்.  நன்றி: மென்டல் ஃபிளாஸ்

ஆண்களின் வன்முறைக்கு காரணம் இதுதான்!

படம்
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி ஆண்கள் தீவிரமான வன்முறையில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலான கலவரங்கள், வன்முறைகள் அனைத்திலும் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகம். இதற்கு காரணம் என்ன? உலகமெங்கும் பெரும்பாலான சமூகங்களில் ஆண்களுக்கு அதிகாரம் கொடுத்து அப்படி வளர்ப்பதுதான் காரணம். பெண்களை வீட்டுவேலைகள், அடுத்த தலைமுறையை வளர்ப்பதற்கான பயிற்சிகளை கொடுத்து வளர்க்கிறார்கள். இதனால் குற்றச்செயல்களில் இயல்பாகவே ஆண்களின் பங்கு அதிகமாக இருக்கும். பரிணாமவளர்ச்சி காலகட்டத்தில் ஆண்கள் தங்களின் வலிமையை நிரூபித்தால்தான் பெண்களைப் பெறமுடியும். இதனால் வலிமை என்பது ஒருகாலத்தில் ஆண்களுக்கு சமூக அந்தஸ்தாக இருந்தது. இன்று அது வீடாக, ஐடி வேலையாக, சொத்து மதிப்பாக மாறியிருக்கிறது அவ்வளவுதான். அண்மையில் 63 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில், இளைஞர்கள் தங்கள் வயதிலுள்ள பெண்களை விட அதிக சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முக்கியக்காரணம், பரிணாம  வளர்ச்சிதான். நன்றி: பிபிசி

கொலை செய்ய எலி சொன்னது தவறா?

படம்
அசுரகுலம் சுட்டோமு மியசாகி 1988 ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பான் மக்களை பயமுறுத்தி சைக்கோ கொலைகாரரின்  பெயர் சுட்டோமு மியசாகி. அங்குள்ள சிறுவர், சிறுமிகளை மட்டும் கடத்தி சித்திரவதை செய்து கொன்று நீட்டாக பேக்கேஜ் செய்து அவர்களுக்கு வீட்டுக்கு அனுப்பி பெற்றோரின் மனநிலையை உடைப்பது சுட்டோமுவுக்கு ரொம்ப பிடிக்கும்.  சுட்டோமுவின் தாத்தா இறந்துபோன மூன்று மாதங்களுக்கு பிறகு வேட்டையைத் தொடங்கினார். அன்று ஆக.22, 1988 ஆம் ஆண்டு. மாரி கொன்னோ என்ற நாலு வயது சிறுமி வீட்டின் வெளியே தன் தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.  அவளைப் பார்க்க பார்க்க சுட்டோமுவின் மனதில் இருள் சாத்தானின் நிழல் படிந்தது. உடனே பாய்ந்தவர் அச்சிறுமியை தூக்கிக்கொண்டு  மரங்கள் நிறைந்த காட்டுக்கு கொண்டு சென்று கழுத்தை திருகி ஆசையாக கொன்றார்.  இரண்டு மாதங்களுக்குப் பிறகு மசாமி யோசிஸாவா என்ற அடுத்த இலக்கை குறிவைத்தார் இருபத்தாறு வயதேயான சுட்டோமு. அதிகமில்லை ஏழுவயதான சிறுமி. தூக்கிச்சென்று கொன்னோவைக் கொன்ற அதே இடத்தில் வைத்து கொன்றார். அடுத்து டிச. 12 அன்று நான்கு வயது சிறுமி எரிகா நன்பாவை கடத்