இடுகைகள்

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மருத்துவரின் கனவும், அவரை பகடைக்காயாக்கும் மருத்துவமனை சூழ்ச்சிகளும்! - எ மிராக்கிள் - துருக்கி தொடர் - முதல் பாகம்

படம்
              எ மிராக்கிள் துருக்கி தொடர் குட் டாக்டர் எனும் தென்கொரிய தொடரை ரீமேக்கியிருக்கிறார்கள் . ஆனால் காட்சிகளில் நடித்துள்ளவர்கள் நிறைய வேறுபாடுகளை காட்டியுள்ளதோடு காட்சிகளும் மாற்றப்பட்டுள்ளன . ஆட்டிசமும் , சாவன்ட் சிண்ட்ரோம் என்ற குறைபாடும் கொண்ட அலி பாபா , ஹயாத் எனும் பன்னோக்கு மருத்துவமனையில் வேலைக்கு சேர்கிறான் . அவனை அங்கு தலைமை மருத்துவராக உள்ளவர் தனது செல்வாக்கினால் சேர்க்கிறார் . காரணம் , அவனை வளர்த்து கவனித்துக்கொண்டது அவர்தான் . ஆனால் அங்குள்ள மருத்துவமனையில் அவனை வைத்தே தலைமை மருத்துவரை வேலையை விட்டு நீக்கலாம் . என அரசியல் விளையாட்டு நடக்கிறது . இந்த அரசியல் விளையாட்டு அலியை பந்தாடியதா , அவனது அறுவை சிகிச்சை நிபுணராகும் கனவு என்னவானது என்பதைத்த்தான் தொடர் சொல்லுகிறது . தொடரில் மொத்தம் 22 எபிசோடுகள் , ஒரு எபிசோடு என்பது நாற்பது நிமிடங்ங்கள் வருகிறது . ஆட்டிசம் பாதிப்பு பற்றிய எண்ணங்களை இத்தொடர் மாற்றும் என உறுதியாக நம்பலாம் . இயல்பான வாழ்க்கை என்பது ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு சாத்தியமில்லை . ஆட்டிச குறைபாட்டிற்க

தாத்தாவின் கடனை அடைக்க பொக்கிஷத்தை தேடிச்செல்லும் பேத்தி! - ஃபைண்டிங் ஓகானா

படம்
                ஃபைண்டிங் ஓகானா !   Director: Jude Weng Produced by: Ian Bryce Writer(s): Christina Strain அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஹவாய்க்கு இடம்பெயருகிறது ஓர் குடும்பம் . தாத்தாவின் வீட்டுக்கு வரும் சிறுமி , பொக்கிஷம் பற்றிய டைரியை தாத்தாவின் வீட்டிலிருந்து கண்டெடுக்கிறாள் . அப்புறமென்ன , பொக்கிஷ வேட்டைதான் . படத்தின் கதையைப் பார்த்தால் ஏதோ இந்தியா ஜோன்ஸ் ஜூனியர் என்று பெயர் வைக்காமல் படம் எடுத்திருக்கிறார்களோ என்று தோன்றும் . ஆனால் படம் நெடுக குடும்ப பாசம் , இயற்கை மீதான நேசம் , முன்னோர்களுக்கு மரியாதை , ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது என ஏராளமான சமாச்சாரங்களை வைத்து கண்கலங்க நெகிழ்ச்சியாக படம் சொல்கிறார்கள் .    நியூயார்க்கிலிருந்து வரும் குடும்பத்தின் டீன் ஏஜ் பையன் , சிறுமி , அம்மா ஆகியோரோடு ஹவாய் தீவில் வாழும் தாத்தா , அவரின் நெருக்கமான இளம் பெண்ணும் அவளது தம்பியும்தான் கதை நாயகர்கள் . ராபின்சன் பரௌன் என்ற தீவுக்கு வந்த வெள்ளைக்காரர் , புனித குகையில் பொக்கிஷங்களை மறைத்து வைத்திருக்கும் தகவலை நோட்டில் பதிவு செய்கிறார் . ஆனால் உயிர்போகும் அபாயத்திலிரு

மூளைக்கு மாத்திரை போட்டு புத்திசாலியாகும் இளைஞனும், அமெரிக்க அரசியலும்! - லிமிட்லெஸ் - வெப் தொடர்

படம்
லிமிட்லெஸ் இருபத்தெட்டு ஆண்டுகள் எதையும் செய்யாமல் கிளப்புகளில் பாட்டு பாடிக்கொண்டிருக்கும் இளைஞனுக்கு நண்பன் மூலம் என்சிடி மாத்திரை கிடைக்கிறது . மூளையின் அனைத்து செல்களையும் உற்சாகப்படுத்தி வேலைவாங்கும் மாத்திரையால் அசாதாரண புத்திசாலியாக மாறும் இளைஞன் வாழ்க்கைதான் கதை . வெப் தொடர் சீரியசான பிரச்னையை பேசினாலும் இதிலுள்ள காமெடி அனைத்தையும் ரசிக்க வைக்கும்படி இருக்கிறது . தொடரின் தொடக்கத்திலேயே என்சிடி மாத்திரையை பிரையன் பின்சுக்கு கொடுத்த நண்பர் தனது வீட்டில் கொலையாகி கிடக்கிறார் . அவரிடம் இன்னொரு மாத்திரை வேண்டும் என கேட்கப்போன பிரையன் சம்பவ இடத்தில் இருக்க அவரைப் போலீஸ் துரத்துகிறது . அதிலிருந்து அவர் மீண்டு ரெபெக்கா ஹாரிஸ் என்ற காவல்துறை அதிகாரி மூலம் எஃப்பிஐயில் ஆலோசகராக வேலைக்கு சேர்ந்து குற்றவாளிகளை பிடிக்க உதவுகிறான் . தொடரில் பிரையன்தான் நாயகன் . ஆனால் ஏராளமான பாத்திரங்களை உள்ளே சேர்ந்து போராடிக்காமல் பார்த்துக்கொண்டதோடு , காமெடிக்கான இடமும் தொடரில் அதிகமாக உள்ளது . ஜேக் மெக்டோர்மன் , ஜெனிஃபர் கார்பென்டர் , ஹில் கார்பர் , மேரி எலிசபெத் ஆகியோர்தான் இத

சுவாரசியங்கள் நிறைந்த பயணத்தை விவரிக்கும் கடிதங்கள்! - இந்தியப் பயணக் கடிதங்கள் - எலிசா பே, தமிழில் அக்களூர் ரவி

படம்
                  இந்திய பயணக் கடிதங்கள் எலிசா பே அக்களூர் ரவி மொழிபெயர்ப்பில் சந்தியா பதிப்பக வெளியீடு ப . 284 விலை . 200 இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த எலிசா பே என்ற பெண்மணியின் பயணத்தை இந்த நூல் விவரிக்கிறது . நூல் முழுக்கவே அவர் தனது குடும்பத்திற்கு எழுதிய 31 கடிதங்களாக நீள்கிறது . 1779 முதல் 1815 ஆம் ஆண்டு வரையிலான எலிசாவின் கடல் மற்றும் தரைவழிபபயணம்தான் கடிதங்களின் அடிப்படை . இந்த நூலை எதற்குப் படிக்கிறோம் , எதனால் முக்கியத்துவம் பெறுகிறது என்றால் , 1779 ஆம் காலகட்ட நிலைமைகள் , போர் , கப்பலில் அவர் சந்தித்த வினோதமான மனிதர்கள் , காட்சிகள் , பருவச்சூழல் மாறுபாடு ஆகியவை சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன . தன் கணவரோடு இந்தியாவின் கல்கத்தாவிற்கு சென்று வாழவிரும்பியவர் , திரும்ப இங்கிலாந்திற்கு வரும்போது அவரது வாழ்க்கை மாறிவிடுகிறது . அவரது கணவர் அவரை விட்டு பிரிந்திருக்கிறார் . ஆனால் தன்னை எப்படிப்பட்ட சூழலிலும் பாதுகாத்துக்கொள்ளும் நெஞ்சுரத்தை எலிசா பெற்றுவிடுகிறார் . நூலின் இறுதியில் எலிசா எழுதும் எழுத்துகள் இதனை அற்புதமாக பிரதிபலிக

வணிகரீதியான மின்விளக்குகள் கடந்து வந்த பாதை! - இதில் பங்களித்த முக்கியமான அறிவியலாளர்கள்

படம்
              வணிக ரீதியான மின் விளக்குகள் சர் ஹம்பிரி டேவி 1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியலாளர் டேவி , பிளாட்டினம் இழை மீது தனது பேட்டரியைப் பயன்படுத்தினார் . அவரது சோதனை பயன் கொடுத்தது . பின்னாளில் இந்த முறை நல்ல பயன் கொடுத்தது என்றால் அச்சமயம் பிளாட்டினம் பெரியளவு ஒளிரவில்லை . ஆனாலும் பின்னாளில் இந்த முறை மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது . வாரன் டி லா ரூ 1840 ஆம் ஆண்டு வேதியியலாளரும் , வானியலாளருமான ரூ , பிளாட்டினம் காயில் பொருத்தப்பட்ட வேக்குவம் குழாயில் மின்சாரத்தை செலுத்தினார் . இன்று நாம் பயன்படுத்தி வரும் மின் விளக்குகளுக்கான அடிப்படை இதுதான் . ஆனால் இதற்கான செலவுதான் கூடுதல் . எனவே மக்களிடையே புகழ்பெறவில்லை . ஜீன் ராபர்ட் ஹூடின் 1852 ஆம் ஆண்டு ஹூடின் தனது எஸ்டேட்டில் மின் விளக்குகளை வெளிப்படையா ஒளிர வைத்தார் . ஆனால் இந்த மின்விளக்குக்கான முறையான தொழிற்சாலை , விலைகுறைந்த பல்புகள் என அவர் திட்டமிடவில்லை . எனவே வணிக ரீதியான பல்புளள் விற்பனைக்கு வரவில்லை . ஜோசப் ஸ்வான் பிரிட்டிஷ் இயற்பியலாளர் சூழலுக்கு உகந்த பல்புகளை கண்ட

கண்டுபிடிப்பாளரை மறைத்த அவரின் அழகு! - ஹெடி லாமர் - இன்றைய வைஃபை தொழில்நுட்பத்தின் அடிப்படையை உருவாக்கியவர்

படம்
    அமெரிக்க நடிகையான ஹெடி லாமர் புகழ்பெற்ற அமெரிக்க நடிகையாகவே பலருக்கும் தெரியும் . ஆனால் அவர் பொறியியலில் ஆர்வம் கொண்டு தனது வீட்டில் க ண்டுபிடிப்புக்கான அறை ஒன்றை வைத்திருப்பது பலருக்கும் தெரியாத சங்கதி . ஆங்கில உலகில் அழகு , நடிப்பு என இரண்டும் சேர்ந்த கலவையாக மக்களைக் கவர்ந்தவர் , லாமர் . 1914 ஆம் ஆண்டு வியன்னாவில் பிறந்தார் . இயற்பெயர் ஹெட்விக் கீஸ்லெர் . நடிப்பு ஆர்வத்திற்காக பள்ளிப்படிப்பை கைவிட்டார் . முதலில் செக்கோஸ்லோவியா சென்றவர் , பின்னாளில் அமெரிக்காவிற்கு வந்தார் . அங்குதான் தனது பெயரை ஹெடி லாமர் என்று மாற்றிக்கொண்டார் . படிப்பு கைவிட்டாலும் ஏராளமான நூல்களைப் படித்து தனக்கு தேவையான அறிவைப் பெற்றுக்கொண்டார் . போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்துவது , தனது விமானத்துறை காதலரான ஹோவர்ட் ஹியூஹெஸ் மூலம் வேகமாக செல்லும் விமானத்தை தயாரிக்க உதவினார் . இதனை அமெரிக்க விமானப்படை பின்னாளில் வாங்கிக்கொண்டது . சிறு மாத்திரை மூலம் நீரை கார்பனேட்டட் பானமாக மாற்றுவது என பல்வேறு ஐடியாக்களை சாத்தியப்படுத்தினார் . இரண்டாம் உலகப்போரின்போது , மக்கள் கஷ்டப்படுவதை அவரால் ப

கடிகாரங்களை வடிவமைத்த முன்னோடி அறிவியலாளர்கள்! - மாற்றங்கள் நடந்தது இப்படித்தான்

படம்
            கடிகாரங்களை வடிவமைத்த முன்னோடிகள் பீட்டர் ஹென்லெய்ன் 1480-1542 இவர்தான் முதல் கடிகாரத்தை வடிவமைத்தவர் . அது பித்தளையில் செய்யப்பட்டது . எளிதில் எடுத்துச்செல்லும் வகையில் செய்யப்பட்ட இந்தக் கடிகாரம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது . இதன்மூலம் அவருக்கு ஜெர்மன் காஸ்டில் கடிகாரத்தை வடிவமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது . கிறிஸ்டியன் ஹியூஜென்ஸ் 1629 -1695 டச்சு நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி . பெண்டுலம் கடிகாரத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றவர் . கலிலீயோ கண்டுபிடித்த இயக்க தியரியைப் பயன்படுத்தி இந்த கடிகாரத்தை வடிவமைத்தார் . எலி டெரி 1772-1852 டெரி வீடுகளுக்கான கடிகாரங்களை தயாரிக்க தொடங்கினார் . இதற்காகவே தொழிற்சாலைகளை உருவாக்கினார் . மரசெல்புகளில் அலங்காரமான கடிகாரங்களை செய்தார் . அமெரிக்காவில் இந்த வகை கடிகாரம் பெரும் புகழ்பெற்றது . லூயிஸ் எசென் 1908-1997 எசென் , திறமையான இயற்பியலாளர் . அவர் உடலின் முதல் அணு கடிகாரத்தைக் கண்டுபிடித்தார் .

சூரியக்கடிகாரம் தோன்றியது எப்படி?

படம்
          இன்று ஸ்மார்ட்போனில் மணி பார்க்கத் தொடங்கிவிட்டதால் பெரும்பாலான கை கடிகாரங்கள் அனைத்துமே அந்தஸ்தைக் காட்டும் கடிகாரங்களாக மாறிவிட்டது . இதனால் கடிகார நிறுவனங்கள் பிராந்தியப் பெருமை பேசும் கடிகாரங்களை தயாரிக்கின்றன . தங்கம் , பிளாட்டினம் , வைரம் என அதனை அலங்கரித்து வருகின்றன . சூரியக் கடிகாரம் சூரியன் கிழக்கில் உதித்தவுடன் அதன் நிழல் எப்படி விழும் என்பதை குச்சி வைத்து கணிக்கும் முறை . மோசமானது என்று இன்று கூறலாம் . ஆனால் அன்றைக்கு இதுவே பெரிய விஞ்ஞானமுறை . ஆனால் இதை வைத்து இரவில் மணி பார்க்க முடியாது . இதற்காக நட்சத்திரங்களை கூட்டிக்கழித்து வரிசையைப் பார்த்து மணியைச் சொல்லும் முறையை கிரேக்கநாட்டு மக்கள் கண்டறிந்தனர் . எகிப்தில் நீர் கடிகாரம் கூட முயன்றார்கள் . உருளை வடிவ கட்டிடத்தில் நீரை நிரப்பி வெளியேறும் நீர் அளவைக் கணித்து நேரத்தை கண்டுபிடிக்கலாம் . ஆனால் பனிக்காலத்தில் நீர் உறைந்துவிடுவதால் இதில் நேரத்தைக் கணிக்க முடியாது . பாக்கெட் வாட்சுகள் , கைகடிகாரங்கள் பெண்டுலமாடி கடிகாரம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் அதனை மாற்றியது பாக்கெட் கடிகாரங்க

லிஸ்டர் பற்றிய ஐந்து சுவாரசியமான விஷயங்கள்!

படம்
          லிஸ்டர் பற்றி ஐந்து விஷயங்கள் ! லிஸ்டரின் அப்பா , தனது பதினான்கு வயதில் பள்ளிக்கல்வியை விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே வந்தார் . பின்னாளில் அவர் உருவாக்கிய நுண்ணோக்கி , அதன் லென்ஸ் ஆகியவற்றுக்காக பணமும் புகழும் பெற்றார் . லிஸ்டர் ஏராளமான நுட்பமான பல்வேறு கருவிகளை உருவாக்கினார் . அதனை புத்திசாலித்தனமாக காப்புரிமை பெற்று வைத்திருந்தார் . அறுவை சிகிச்சை செய்த புண்களை தைக்கும் ஊசி , காதில் நுழைந்த பொருட்களை எடுக்கும் கொக்கி போன்ற கருவி , வயிற்றிலுள்ள உறுப்புகளை ஆராயும் கருவி என சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம் . லிஸ்டர் உருவாக்கிய ஆன்டிசெப்டிக் முறையை இங்கிலாந்தில் எதிர்த்தாலும் , பிரான்ஸ் , ஜெர்மனி ஆகிய நாடுகள் அரவணைத்துக்கொண்டு பயன்படுத்தினர் . பிரான்ஸ் ப்ரஸ்ஸியா போர்க்காலங்களில் இம்முறையை பரவலாக பயன்படுத்தினர் . இன்று மருத்துவர்கள் நோயாளிகளை நம்பர் அல்லது கேஸ் என்று சொல்லித்தான் கூப்பிடுவார்கள் . ஆனால் லிஸ்டர் இந்த ஏழை மனிதர் , இந்த நல்ல பெண்மணி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி நோயாளிகளை தேற்றியிருக்கிறார் . தனது மாணவர்களிடம் நோயாளிகளின் நோ்

ஆன்டிசெப்டிக் முறையை மருத்துவர்களின் பிரசாரம் செய்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியவர்!

படம்
        ஜோசப் லிஸ்டர்       மருத்துவத்துறையில் இன்று டெட்டால் , சேப்லான் என பல்வேறு ஆன்டிசெப்டிக் மருந்துகள் கிடைக்கின்றன . இதனை அறிமுகப்படுத்தியவர் யாரென்று தெரிந்து உய்வோமா ? ஜோசப் லிஸ்டர் என்ற படிப்பில் மூழ்கி ஏராளமான தங்கமுலாம் பூசிய பதக்கங்களை பெற்ற மனிதர்தான் அறுவை சிகிச்சையை பாதுகாப்பானதாக மாற்றினார் . 1827 ஆம்ஆண்டு 5 ஏப்ரலில் பிறந்தவர் குவாக்கர் குடும்ப வாரிசு . இவரது படிக்கும் நேரம் போக மீதி நேரம் போக அப்பாவின் நுண்ணோக்கியில் ஏராளமான நுண்ணுயிரிகளைப் பார்த்துக்கொண்டிருப்பார் . இப்படிப்பட்டவருக்கு வேறு என்ற ஆசை இருக்கமுடியும் ? மருத்துவராகவே ஆசைப்பட்டார் . லண்டன் பல்கலைக்கழகத்தில் கலைப்படிப்பு பட்டம் படித்தார் . 1848 ஆம் ஆண்டு மருத்துவம் படிக்க சேர்ந்தார் . அப்போதுதான் மருத்துவத்துறையில் அனஸ்தீசியாவைப் பயன்படுத்துவது பரவலாகிக் கொண்டிருந்தது . அதில் நிறையப் பேர் சேர்ந்து பயின்று வந்தனர் . 1846 ்ஆம் ஆண்டு ஈதர் அனஸ்தீசியா வல்லுநராக உருவானார் . ஆனால் அப்போதும் பல்வேறு நோயாளிகள் நோய்த்தொற்று காரணமாக இறந்துபோனார்கள் . இதற்கு காரணம் என மோசமான காற்றான மியாஸ்மாவைக் காரண