இடுகைகள்

பேராளுமைகளை சந்தித்த அனுபவத்தை சொல்ல நினைத்தேன்! - கவிஞர் குல்ஸார்

படம்
  கவிஞர் குல்ஸார் குல்ஸார் கவிஞர், பாடலாசிரியர் ஆக்சுவலி ஐ மெட் தம் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார் குல்ஸார். நூல், சினிமா, இசை, இலக்கியம் பற்றி அவரிடம் பேசினோம்.  நூலுக்கான தலைப்பை எப்படி பிடித்தீர்கள்? என்னுடைய பயணம் என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன். ஆனால் அந்த தலைப்பு மிகவும் சாதாரணமாக இருந்தது. பிமல்ராய், பண்டிட் ரவிசங்கர், மகாஸ்வேதா தேவி ஆகியோரை சந்தித்து பேசி பழகி இருக்கிறேன். இதுபோன்ற பெரிய ஆளுமைகளை சந்தித்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். அதை வெளிக்காட்டும்படியாக நூல் தலைப்பை வைத்தேன்.  நூலில் சத்யஜித்ரே, கிஷோர்குமார், சுசித்ரா சென் ஆகியோரைப் பற்றி பேசியிருக்கிறீர்கள்.  நூலில் உள்ள பதினெட்டு ஆளுமைகளை சந்தித்து பேசி அவர்களுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக உள்ளது. இவர்களில் சிலரைப் பற்றி நூலாக எழுத நினைத்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. சில மனிதர்களைப் பற்றி கவிதைகளை எழுதி வைத்துள்ளேன். அவற்றை பின்னாளில் பிரசுரிப்பேன் என நினைக்கிறேன்.  யாருடனாவது பணியாற்றவேண்டும் என நினைத்துள்ளீர்களா? அந்தப் பட்டியல் பெரிது. குருதத்துடன் பணிபுரிய நினைத்தேன். அவர் படம் எடுத

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு காரணம் என்ன?

படம்
  இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அமெரிக்க வர்த்தக மையம் தாக்குதல் மட்டுமே காரணம் அல்ல. அதற்கு முன்னரே இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு இடையே முன்விரோதம் , பகை, வன்மம் என எல்லாமே உண்டு. அதனை ஊக்கப்படுத்தியது தாக்குதல் நடத்திய பத்தொன்பது தீவிரவாதிகள் என்று கூறலாம்.  கிறித்துவம், இஸ்லாம் என்ற இரு மதங்களுமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள். இதில் இஸ்லாமைப் பொறுத்தவரை அவர்கள் பிறரிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இதனை இலக்கியவாதிகள் கூட பயன்படுத்தி காபிர்களின் கதைகள் என எழுதுகிறார்கள். இதன் வழியாக அவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை.  புர்கா அணிவது, குல்லா அணிவது என தங்களை தனித்தே காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் அனைத்து நாடுகளிலும் இணக்கமான தன்மை கொண்டவர்களாக இல்லை. அமெரிக்காவில் இந்த வேறுபாடுகளை துல்லியமாக அடையாளம் காண்கிறார்கள். முஸ்லீம்களின் புனித நூலில் போர் என்பதை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதால், வன்முறையான குணம் கொண்டவர்கள் என முஸ்லீம்களை அடையாளப்படுத்த தொடங்கினர். 2010ஆம்ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்கர்களில் பாதிப்பேர் முஸ்

துப்பறியும் கதைகளின் அணிவகுப்பு! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  சென்னையில் விநாயகர் சதுர்த்தி பாடல், சோறு, பூஜை என அமர்க்களப்பட்டது. கடலில் சிலைகளை கரைக்கச் செய்யும் போது கூட்டம் அதிகமாக இருக்கும். விகடன் இதழ்கள் சிலவற்றை நிறுத்துவது பற்றி அறிந்திருப்பீர்கள்.  டெலிகிராம் செயலியில் நிறைய மின்நூல்கள் கிடைக்கின்றன. தினசரி பத்திரிக்கைகளையும் இதிலேயே படித்துக்கொள்ள முடிகிறது. பத்திரிகைகள், மாத இதழ்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சரி, தவறு என்பதைவிட காலமாற்றத்திற்கேற்ப மக்கள் டிஜிட்டலுக்கு மாறி வருகின்றன. இப்படி படிக்கும் செய்திகள் மனதில் நிற்குமா என்று கேட்கிறார்கள். தேவையான விஷயங்களை இதில் படித்துக்கொள்ள வேண்டியதுதான்.  இணையத்தில் இந்த வகையில் ஏராளமான செய்திகள், மின்நூல்கள் கொட்டிக்கிடக்கின்றன.  தாளின் விலையேற்றம், நூல்களை சேமிக்க முடியாதது என இதற்கு பின்னால் நிறைய காரணங்கள் உண்டு. சத்யஜித்ரேயின் பெலுடா சீரிசில் இரண்டு கதைகளைப் படித்தேன்.  பம்பாய் கொள்ளையர்கள், தங்கவேட்டை என்று இரண்டு நூல்களும் நன்றாக இருந்தன. மொழிபெயர்ப்பு வீ.பா. கணேசன் . மொத்தம் இந்த வரிசையில் இருபது நூல்கள் உள்ளன.  வங்காளத்தில் பியோம்க

நிச்சயமற்ற எதிர்கால வாழ்வு - கடிதங்கள்

படம்
  அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா?  போஸ்ட் ஆபீஸ் செல்ல முடியாததால், அஞ்சல் அட்டைகளை வாங்க முடியவில்லை. தபால் ஊழியர்களைப் பார்த்தாலே திடீரென எரிச்சலாகிறது. ஏன் என்றே தெரியவில்லை.  கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது  - மாயா ஏஞ்சலோ சுயசரிதையை இன்றுதான் படித்து முடித்தேன். மொழிபெயர்ப்பு அவை நாயகன். நேர்த்தியான தமிழாக்கம் மோசமில்லை. கருப்பர் இனம், பாகுபாடு, பாலுறவு என தன்னை நிர்வாணமாக முன்வைத்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட மாயாவின் துணிச்சல் வாசகர்களுக்கு வாசிக்கும்போதே பயம் தருகிறது. சிறுவயது துயர வாழ்க்கை, சூதாடும் அம்மா, கட்டற்ற பாலியல் விருப்பம் கொண்ட தந்தைமார்கள், பாலியல் வன்புணர்வு, நிச்சயமற்ற எதிர்கால வாழ்வு, தமக்காக மட்டுமே வாழ்க்கை என கருப்பர் இனம் குறித்த பதிவுகள் திகைக்க வைக்கின்றன.  வெள்ளையர்கள் காரணமின்றி கருப்பர்களை ஒதுக்கும் பகுதி படிக்கும்போதே ரத்தத்தை சூடாக்குகிறது. குறிப்பாக மாயாவுக்கு பல் மருத்துவம் பார்க்கும் பகுதி. டிஸ்கவரி ஆப் இந்தியாவில் எட்டே பக்கங்கள்தான் படித்திருக்கிறேன். சிறையில் ஒன்றே கால் ஆண்டுகள் செலவழித்து எழுதிய நூல் இது.  இப்பட

போலியான கோட்பாடுகளை மக்கள் நம்புவதற்கு காரணம் என்ன? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? பெரும்பாலான மேப்கள் ஏன் தவறாக இருக்கின்றன? பூமி உருண்டையாக இருக்கிறது. ஆனால் மேப் உள்ள தாளோ தட்டையாக இருக்கிறதே அதனால்தான். உள்ளபடியே சரியான தகவல் வேண்டுமென்றால் மேப் மிகப்பெரிதாக இருக்கவேண்டும். வரைபடத்தில் உலகத்தை எப்படி அடக்குவது என்றால் அதை சாதித்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர், ஜெரார்டஸ் மெர்கேடர். 1569இல் இவர் உருவாக்கிய முறையைத் தான் பலரும் பின்பற்றி வருகிறார்கள். இன்று கூகுள் மேப்பில் பார்க்கும் உலகைக் கூட மெர்கேடர் காட்டும் முறையைப் பின்பற்றித்தான் பார்க்கிறோம். இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால் பல்வேறு நாடுகளின் அளவு மிகப்பெரிதாகிவிடும். சில நாடுகள் மிக சிறியதாக சுருங்கிவிடும்.  மக்கள் ஏன் போலியான பல கோட்பாடுகளை நம்புகிறார்கள்? கட்டடங்களை இடிப்பது எளிது. கட்டுவது கடினம். இதைப்போலவே வதந்திகளை உருவாக்குவது எளிது. அதனை உடைப்பது கடினம்.  நம்பிக்கை ஒருவரின் மனதில் உருவாகிறது என்றால் அதற்கு அடிப்படையாக உண்மை அல்லது பொய் இருக்கலாம். எதனை நீங்கள் நம்புகிறீர்களோ அதுதான் முக்கியம். முரட்டுத்தனமான புத்திசாலிகள் கோட்பாடுகளை உருவாக்குவதோடு அதனை பரப்பவும் செய்கின்

மூக்கைச் சுரண்டி தின்னுவது சரியா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  மியூகோபேஜி - மூக்கைச் சுரண்டி தின்னுவது பதில் சொல்லுங்க ப்ரோ? பட்டாம்பூச்சி தான் புழுவாக இருந்ததை நினைவுகொண்டிருக்குமா? இது அறிவியலாளர்களுக்கே புரியாத புதிர்தான். புழுவாக இருந்து வண்ணத்துப்பூச்சியாக மாறும் நிகழ்ச்சியே வினோதமானது. புழுவை வைத்து செய்த அண்மைய ஆய்வில் வண்ணத்துப்பூச்சியாக ஆனாலும் கூட தான் புழுவாக இருந்த நிலையை மனதில் கொண்டிருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  மூக்கிலுள்ள சளியை எடுத்து தின்பதை நான் ரசித்து செய்கிறேன். இது என் ஆரோக்கியத்தை கெடுக்குமா? மூக்கின் உள்ளே வரும் திரவம், காற்றிலிருந்து மூக்கினுள் செல்லும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை பிற நுண்ணுயிரிகளைத் தடுக்கிறது. அந்த திரட்டை எடுத்து சாப்பிட்டால் அவை உடலுக்குள் சென்றால் ஆபத்துதானே? குழந்தைகள் அறியாமல் செய்யலாம் ஆனால் வயது வந்தவர்கள் இதனை அறியாமலும் செய்யக்கூடாது. சளித்திரட்டை தின்பதை அறிவியல் ரீதியாக மியூகோபேஜி என்பார்கள். இதனை ஒரு பழக்கமாக கைக்கொண்டால் ரைனோடிலேஎக்ஸோமேனியா என்று கூறலாம்.  பிபிசி சயின்ஸ்போகஸ்

15 ஆயிரம் ரூபாயில் ஸ்மார்ட் போன் வாங்கப்போகிறீர்களா? - இந்த போன்களை ட்ரை செய்யுங்கள்

படம்
  போகோ எம்3 புரோ 5ஜி உலகத்தில் ஆடை இல்லாமல் கூட இருக்கலாம். அதைக்கூட புது பேஷன் என்று சொல்லிவிடலாம். ஆனால் பழைய போனுடன் இருந்தால் வீட்டில் உள்ள குட்டீஸ் கூட மதிக்காது. எனவே இப்போது நாம் பார்க்கப்போவது பட்ஜெட் போன்கள்தான்.இந்த பதினைந்தாயிரம் ரூபாய் கேட்டகிரியில் கூட 5 ஜி லெவல் போன்களும் உண்டு. சாம்சங், போகோ, ரியல்மீ, ஜியோமி, மோட்டரோலா ஆகிய நிறுவனங்கள் போன்கள் இவை.  போகோ எம்3 புரோ 5ஜி 14,599 ரூபாய் போன். ஒருரூபாய் தந்துவிடுவார்கள் என நம்பலாம்.  5 ஜி போன் இது. மீடியாடெக் 700 சிப், 90 ஹெர்ட்ஸ்ல் திரை அடிக்கடி புத்துயிர் பெறுமாம். 5000எம்ஏஹெச் பேட்டரி, 48 எம்பி கேமரா பின்புறம் உள்ளது. மேற்சொன்ன காசுக்கு ஸ்டைலான போனு வேணும் சேட்டா என்றால், இதையே இ வலைத்தளங்களில் ஆர்டர் செய்து மோட்சம் பெறுங்கள்.  சாம்சங் கேலக்ஸி எம்32 அதிக நேரம் பைத்தியம் பிடித்த வெட்டுக்களி போல சமூக வலைத்தளங்களில் பறந்து திரிபவரா, ஓடிடியில் வெப்சீரிஸ், திரைப்படங்கள் என ஏராளமாக பார்க்கணுமே ப்ரோ என்பவரா உங்களுக்காகத்தான் இந்த போன். 12499 ரூபாயில் இருந்து விலை தொடங்குகிறது. 6ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி, அமோல்ட் திரை. 6.4 இன்ச்சில்

போதைப்பொருட்களை எப்படி வாங்குவது? - புதிய வார்த்தைகளை கற்றுக்கொண்டால் போதும்!

படம்
  மும்பை, புனேவில் போதைப்பொருட்கள் கிடைக்கும் இடம், ஸ்கோர் அட்டா என குறிக்கப்பட்டுள்ளது போதைப்பொருட்களை விற்பதும், வாங்குவதும் இப்போது வேறு லெவலில் மாறியுள்ளது. இதனைச் செய்ய குருட்டுத்தனமான முட்டாள்தனமும், முரட்டுத்தனமாக புத்திசாலித்தனமும் தேவை. கோதிம்பிர், பிகாச்சு, ஹலோ கிட்டி, அஜினமோட்டோ, சாவல், டேண்ட்ரஃப், ஜங்கிள் பாய் ஆகிய குறியீட்டுச் சொற்களை யாராவது பேசினால் உஷாராக இருங்கள். இவைதான் போதைப் பொருட்களை வாங்குவதற்கான முக்கியமான சொற்கள்.  பொதுவாக இந்த வார்த்தைகளை கேட்கும் யாருக்கும் காய்கறி மார்க்கெட்டுக்கு போறாங்க போல, தலையில் டேண்ட்ரஃப் இருக்குதாட்ட, காமிக்ஸ் நிறைய படிப்பார் போல என நினைப்பார்கள்.  வீடு மற்றும் பள்ளிகளில் யாருக்கும் தெரியாமல் போதைப்பொருட்களை வாங்கவே இப்படி சீக்ரெட் வார்த்தைகளை வைத்துக்கொண்டு பேசி வருகிறார்கள் இளைஞர்கள், பள்ளிச்சிறுவர்கள்.  கோதிம்பிர் என்றால், மரிஜூவானா, டேண்ட்ரஃப் என்றால் கொகைன், பிகாச்சு என்றால் எல்எஸ்டி மாத்திரை, ஹலோ கிட்டி என்றால் எம்டிஎம்ஏ, ஜங்கிள் பாய் என்றால் கஞ்சா என்று அர்த்தம். டாஃபி என்றால் எக்டஸி மாத்திரை, ஸ்னோமேன் என்றால் கொகைன் ஏன் இமோஜி

இந்தியாவில் மவுசு பெறும் ராம்யுன் உணவு! - கொரிய தொடர்களின் விளைவு

படம்
  பாய்ஸ் ஓவர் ஃபிளவர்ஸ் கொரிய தொடர் இந்தியாவிற்குள் கொரிய தொடர்கள் ஆர்வமாக பார்க்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம், காதலும் அதனை வண்ணமயமாக படமாக்கும் விதம்தான். டிவி தொடர் என்றாலும் கூட நிறைய செலவு செய்து அதனை எடுக்கிறார்கள். இவையெல்லாம்தான் ஆங்கிலம், இந்திய நிகழ்ச்சிகளின் மீது ஆர்வம் குறைந்து கொரிய தொடர்கள் பக்கம் மக்கள் செல்வதற்கு காரணமாக உள்ளது. கொரிய மற்றும் சீன தொடர்களில் முக்கியமான விஷயம், அவர்களின் உணவு கலாசாரம். தொடர்களில் சாப்பிடும் கிம்ச்சி, ராம்யுன், ஸ்டீக் போர்க், வறுத்த கோழி என அனைத்து விஷயங்களையும் இந்திய மக்கள் வாங்கி  சாப்பிடத் தொடங்கியுள்ளனர்.  சூப்பர் மார்க்கெட் முதல் ஹைப்பர் மார்க்கெட் வரை இவற்றை தேடி வாங்கி வருகின்றனர். 2021ஆம் ஆண்டு லாக்டௌனில்தான் சிம்ரன் டாண்டன் கொரிய தொடர்களை பார்க்க தொடங்கினார். அதுவும் கூட இந்திய மற்றும் ஆங்கிலத் தொடர்களில் சலிப்பு ஏற்பட்டுத்தான் ஓடிடி தளங்களை நாடினார். தொடர்களின் கதைகளும் கூடவே அதில் காட்டப்பட்ட உணவுகளும் அவரை ஈர்த்தன. கொரிய வறுத்த கோழி, கிம்ச்சி ஃபிரைட் ரைஸ், டம்ப்ளிங்க்ஸ், ட்டியோக் போக்கி, வேக வைத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை

எங்கெங்கோ செல்லும் பயணத்தின் கதை! கடிதங்கள்

படம்
            இனிய தோழர் முருகு அவர்களுக்கு , வணக்கம் . வணக்கம் . இதோ இங்கு இன்னும் வெறித்தனமாக பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கிறார்கள் . காற்று மண்டலம் கற்கண்டாக மாறுகிறது என ரேடியோவில் சொல்லுவார்கள் . இங்கு கந்தக மண்டலமாக மாறிவிட்டது . புகை மூட்டத்தில் மூச்சுத் திணறத் தொடங்கிவிட்டது . தினகரன் , விகடன் , இந்து தவிர்த்த தீபாவளி மலர்களில் ஆன்மிகம் தூக்கலாக இருக்கிறது என தினமலர் நாளிதழ் கூறியிருக்கிறது . இந்த ஆண்டு தினகரன் தீபாவளி மலரில் வேலை செய்துள்ளது மகி்ழ்ச்சியாக உள்ளது . வாய்ப்பு கிடைத்தால் நூலை வாங்கிப் பாருங்கள் . குங்குமத்திலிருந்து சென்றுவிட்ட வெ . நீலகண்டன் , கோகுலவாச நவநீதன் ஆகியோரின் இடத்தை முழுமையாக நிரப்ப முடியவில்லை என்பது உண்மை . தீபாவளி மலர் வேலைகளை முடித்தவுடனே அடுத்து பொங்கல் மலருக்கான வேலைகள் இருக்கின்றன . நீங்கள் ஏதாவது புதிதாக படித்தீர்களா ? நான் மாதம்தோறும் காலச்சுவடு , தீராநதி இதழ்களை படித்துவிடுகிறேன் . இனி புதிய நூல்களை விட பழைய புத்தக கடைகளில் நூல்களை வாங்கலாம் என நினைத்துள்ளேன் . பயணம் ஒன்று போதாது - தீபன் எழுதிய நூல்தான் அண்மையில் ப

வெயிலை அள்ளிப்பருகுபவனின் கதை! கடிதங்கள்

படம்
          எழுத்தாளர்  ஜெயமோகன்   இனிய தோழர் இரா . முருகானந்தம் அவர்களுக்கு , வணக்கம் . நலமா ? எங்கள் அலுவலகத்தில் தற்போது தீபாவளி மலர் வேலைகள் நடந்து வருகின்றன . கட்டுரைகளை செம்மையாக்கும் பணியைக் கொடுத்திருக்கிறார்கள் . சேலம் கல்லாங்குத்து பஜார் , திண்டுக்கல் - பழநி நடைபாதை , சிவகாசி தீக்குச்சிகள் உள்ளிட்ட கட்டுரைகள் தயாராகி உள்ளன . நிருபர் வெ . நீலகண்டனின் இடத்தை நிரப்புவது கடினமானது . அவர் ஏகப்பட்ட வேலைகளை செய்துகொண்டிருந்தார் . என்னால் முடிந்தளவு வேலை செய்து வருகிறேன் . விகடனில் ஜெயமோகன் எழுதிய வெயிலில் தொற்றிக்கொள்வது கதை , புதுவித புனைவாக ஈர்த்தது . வெயிலை அள்ளிப்பருகும் மனிதர் ஒருவரின் கதை இது . தீராத பகல் , தனது காதலியின் இறப்பு ஆகிய நினைவுகளை பசுமையாக வைத்திருக்க வெளிச்சத்தின் போதையை நாடி விமானத்திலேயே திரியும் மனிதரின் வாழ்க்கை ஆச்சரியப்படுத்தியது . குங்குமத்தில் வரும் முகங்களின் தேசம் தொடர் , நூலாக வெளியாகும்போது முக்கியமான நூலாக இருக்கும் . இந்திய நிலப்பரப்பு , மனிதர்கள் , புழுதி , நீர் , உணர்வுகள் என மாயம் நிகழ்த்தும் எழுத்து . பேச்சு மற