இடுகைகள்

பேட்ஸ்மேன்களை பயப்படுத்துவேன்! - உம்ரான் மாலிக், பந்துவீச்சாளர்

படம்
  உம்ரான் மாலிக், பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் பந்துவீச்சாளர், சன்ரைஸர்ஸ் அணி உங்களால் வேகமாக பந்துவீச முடியும் என எப்போது அடையாளம் கண்டு கொண்டீர்கள்? 2018ஆம் ஆண்டு டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடும்போதுதான் எனக்கு பந்துவீச்சு வேகமாக வருவது தெரிந்தது. எப்போது பஞ்சாப் அணி, காஷ்மீருக்கு வந்தாலும் என்னை பந்துவீச அழைப்பார்கள். நான் உள்ளூர் அணியில் விளையாடுவேன். இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரில் 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் சோதனை முறையில் இடம் கிடைத்தது.  நான் அப்துல் சமாத் என்ற அண்ணாவுடன் பந்துவீசி வந்தேன். அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளார். அவர்தான் எனது பந்துவீச்சு வீடியோக்களை சன்ரைஸர் அணி நிர்வாகத்துக்கு அனுப்பிவைத்தார். இதனால் நெட் பௌலராக வேலை கிடைத்தது. அதில் சிறப்பாக செயல்பட்டதால் அணியில் இடம் கிடைத்தது.  வேகமாக பந்து வீசுவது உங்களை ஊக்கப்படுத்துகிறதா? நான் பந்துவீசும்போது ஒருவர் மெதுவாக பந்து வீசுகிறார் என்று  விமர்சனம் எழுந்தது. அதற்குப் பிறகுதான் நான் வேகமாக பந்துவீச முயன்றேன். இந்த ஐபிஎல்லில் பேட்ஸ்மேன்களை ஸ்டம்புகளை சிதறடித்து ஆட்டமிழக்கச்செய்திருக்கிறீர்கள். அந்த

சிறந்த வடிவமைப்பாளர் 2022 - அல்ஃபோன்சோ அல்பைசா - நிஸான்

படம்
  அல்ஃபோன்சோ அல்பைசா, வடிவமைப்பாளர், நிஸான் கார்களின் வடிவமைப்பு துறை என்பது முக்கியமானது. அதில் வடிவமைப்பாளராக சாதனை படைத்து வருபவர், அல்ஃபோன்சோ அல்பைசா. இவர், நிஸான் நிறுவனத்தின் குளோபல் டிசைன் குழுவின் துணை தலைவராக பதவி வகிக்கிறார்.  ஜப்பானின் மா எனும் மினிமலிச வடிவத்தை பின்பற்றி கார்களை வடிவமைத்து பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். கடந்த இருபது மாதங்களில் மின்வாகனங்கள் முதல் பிற வாகன மாடல்கள் வரை அனைத்து வாகனங்களின் வடிவமைப்பும் அல்ஃபோன்சாவின் கைவண்ணத்தில் மேம்பட்டிருக்கிறது. ஆரியா முதல்  இசட் எனும் கார் வரை இப்படி கூறலாம். தி ரோக், பாத் ஃபைண்டர், ஃபிரண்டியர் ஆகிய கார்களின் வடிவமைப்பும் மேம்பட்டு வருகிறது. இதற்காகத்தான் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வடிவமைப்பாளர் அங்கீகாரம் பெற்றுள்ளார்.  இசையில் கைத்தட்டுகளுக்கு இடையில் வரும் மௌனத்தைத்தான் மா என்று குறிப்பிடுவார்கள். இது வெறுமை அல்ல, ஒருவகையான அழுத்தம் எனலாம். இதனை குறிப்பிட்ட இசை அலைகள் என்றும் கூறலாம். நாங்கள் நிசான் கார்களின் வடிவமைப்பை இந்த தன்மையுடன் தான் வடிவமைக்கிறோம். சில குறிப்பிட்ட விஷயங்களை வைத்தே வடிவமைப்பை முழுமையாக

பதப்படுத்தப்பட உணவுகளுக்கு ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம்!

படம்
  இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் யுனிலீவர், பிரிட்டானியா, அமுல், ஐடிசி, பார்லே ஆகிய நிறுவனங்கள், அவர்களின் உணவுப்பொருட்கள் நன்மையா தீமையான என எளிதாக தெரிந்துகொள்ளமுடியும். இதற்காக இந்திய உணவு கட்டுப்பாட்டு அமைப்பு எஃப் எஸ்எஸ்ஏஐ, புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.  இதன்படி, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பாக்கெட்டின் மீது ஸ்டார் ரேட்டிங் இருக்கும். இது உணவில் உள்ள சர்க்கரை, கொழுப்பு, உப்பு ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.  அகமதாபாத் ஐஐடி, இதற்கான சோதனை முறையை மக்கள் 20 ஆயிரம் பேரிடம் சோதித்தது. ஸ்டார் ரேட்டிங் முறையை ஹெல்த் ஸ்டார் ரேட்டிங் - ஹெச்எஸ்ஆர் என்று குறிப்பிடுகிறார்கள். மொத்தம் 5 முறைகளை உருவாக்கி அதில் ஒன்றை உணவு கட்டுப்பாட்டு அமைப்பு தேர்ந்தெடுத்தது. அதுதான் ஸ்டார் ரேட்டிங் முறை.  தற்போது, உணவுப்பொருட்களில் கலோரி அட்டவணை இடம்பெற்றுள்ளது. இதில், நூறு கிராம் அளவுக்கான சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதோடு ஸ்டார் ரேட்டிங் முறையும் அமலாகும். இப்போதைக்கு இந்த முறையை தானாக முன்வந்து நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. இது எந்தளவு

தான் பார்த்த பெண்ணா, பெற்றோர் பார்த்த பெண்ணா- தெல்லவாரித்தே குருவாரம் - ஸ்ரீ சிம்கா, சித்ரா சுக்லா, மிஷா நரங்

படம்
  Director: Manikanth Gelli Music by: Kaala Bhairava Written by: Nagendra Pilla தமிழில் - விடிஞ்சா வியாழக்கிழமை தமிழ்ப்படம்  யூட்யூப் சேனல் வீரு, தனது வாழ்க்கைத்துணையை தானே தேடிய காதலில்  கண்டுபிடிக்கிறாரா அல்லது அவரது அப்பா தேடி வைக்கும் வரன் மூலம் கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் கதை.  வீரு, கட்டுமானத்தொழிலில் வேலை செய்து வருகிறார். நன்றாகத்தான் வாழ்க்கை  போகிறது. அவர் சிங்கிள் இல்லையா, அதனால் காதல் தேடி மது, நண்பர்கள் என  அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார். ஒருநாள் பப்பில் குடித்துவிட்டு ஒரு  க்ரூப் மீது வாந்தி எடுக்க அவர்கள் வீருவோடு  சேர்த்து அவர்களின் நண்பர்களையும் புரட்டி எடுக்கிறார்கள். காயங்களுக்கு டிங்க்சர் வைக்க மருத்துவமனைக்கு சென்றால், அங்கு  மருத்துவர் கிருஷ்ணவேணி என்கிற கிருஷ்ணாவை பார்க்கிறார்கள். மூன்றுபேரும்தான். ஆனால் வீரு காதலித்தால் அது டாக்டர் கிருஷ்ணாதான் என உறுதியாக இருக்கிறார்.  கிருஷ்ணாவும் கல்யாணம் செஞ்சுப்பியா என தந்திரமாக கேட்டு பதில் வந்தபிறகுதான், இருவரும்  காசை கரைக்க பல்வேறு உணவகங்கள், பப், சினிமா என திரிகிறார்கள். இந்த நேரத்தில் வீருவின் அப்பா அவனுக்கு கல்யாண

பெருந்தொற்று காலம் எனக்கு ஆராய்ச்சி செய்ய நேரத்தைக் கொடுத்தது! - அதிதி கார்வாரே, ஸ்வீட் பொட்டிக்

படம்
  அதிதி கார்வாரே, கேக் கலைஞர் அதிதி கார்வாரே, கேக் தயாரிப்பு கலைஞர் அதிதி கார்வாரே பேக்கர், கேக் தயாரிப்பு கலைஞர் சோசியோ லீகல் சயின்ஸ் படித்தவர். எல்எல்பி டிகிரியும் வைத்துள்ளார். ஆனால் வழக்குரைஞராக மாற வேண்டியவர், அந்த வழியை தேர்ந்தெடுக்கவில்லை.அதிதிக்கு வயது 31 தான் ஆகிறது. உலகளவில் சிறந்த சமையல் கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவத்தில் ஸ்வீட் பொட்டிக் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் ஆறு ஆண்டுகளாக பல்வேறு கேக் வகைகளை தயாரித்து அலங்கரித்து தனது கடை வழியாக விற்று வருகிறார். கேக் மாஸ்டர் யுகே 2020 என்ற அமைப்பு மூலம் இந்தியாவின் டாப் 10 கேக் மாஸ்டர் என்ற பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் அதிதி கார்வாரே.  அல்டிமேக்ஸ் இந்தியா, மேஜிக் கலர்ஸ் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக இருக்கிறார் அதிதி கார்வாரே.  பெருந்தொற்று காலத்தில் நீங்கள் அடையாளம் கண்ட நேர்மறையான விஷயங்களை சொல்லுங்களேன்.  இந்த காலகட்டத்தில் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அப்போது, நான் இனிப்புகளை, கேக்குகளை பற்றி ஆராய்ச்சி செய்தேன். முதலில் பரபரப்பாக வேலை செய்யும்போது ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் கிடைக்கவில்லை. பெரு

இந்தியாவின் சாதனைகளைப் பேசும் மின்னூல் இந்தியா 75! - சாதனைகளும் தற்போதைய நிலையும்- அமேஸான் வலைத்தளம்

படம்
  இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த காலகட்டங்களில் இந்தியாவின் வரலாறு அனைவரும் அறியவேண்டியது முக்கியம். தேசிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்தியா 75 என்பதை பல்வேறு சாதனைகளாக அழகுற வடிவமைத்து சிறுசிறு கட்டுரைகளாக வெளியிட்டது. அதுதான் இப்படி நூலை எழுதி தொகுக்க உந்துதல் வழங்கியது. இந்த நூலை வாசிக்கும் ஒருவர் சுருக்கமாக இந்தியா இத்தனை ஆண்டுகளில் சாதித்தது என்ன, தற்போதுள்ள நிலை என்ன ஆகியவற்றை ஓரளவுக்கு உணர்ந்துகொள்ள முடியும். இந்தியாவில் சில நாட்கள் ஒருவர் தங்கினால் நூலு்ம், சில வாரங்கள் தங்கினால் கட்டுரையும், அங்கேயே ஆண்டுக்கணக்கில் தங்கினால் எதையும் எழுத முடியாது என ஓஷோ இந்தியா பற்றிய நூலில் கூறியிருப்பார். அது இங்கு நிலவும் பல்வேறு பன்மைத்துவம், முரண்பாடுகளின் கலவையாக முன்வைத்த கருத்து. நூலில் நாம் அறிந்துகொள்வது இந்தியாவைப் பற்றிய சில கோணங்களே. இது முழுமையானதல்ல. இந்தியா என்பது வெறும் வரைபடம் அல்ல. அது ஒரு மனநிலை. யாரையும் ஆளாத, ஆளும் அதிகாரம் கூட மனதில் எழாத ஆன்மாக்கள் வாழும் இ

இயற்கை, சூழல் சார்ந்த நூல்கள்- வாசிப்போம் வாங்க!

படம்
  ஐ பாட் எ மௌண்டைன் தாமஸ் ஃபிர்பேங்க் ஷார்ட் புக்ஸ்  1940ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நூலின் மறுபதிப்பு. கிளாஸிக்கான நூலை, இயற்கை காதலர்களுக்காக புதிய தலைமுறைக்காக பதிப்பித்து இருக்கிறார்கள். ஸ்னோடோனியா என்ற மலைமீது உள்ள பண்ணை ஒன்றை தாமஸ் வாங்குகிறார். இதனால் அவரும், அவர் மனைவியும் சந்திக்கும் நிறைய சிக்கல்களை கூறியிருக்கிறார்.  தி ஸ்லாத் லெமூர்ஸ் சாங்க்ஸ்  அலிசன் ரிச்சர்ட் ஹார்ப்பர் கோலின்ஸ்  லெமூர் பற்றி 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர் அலிசன் ரிச்சர்ட். நூலில் காட்டுயிர் வாழ்க்கை, புவியியல், சூழல் இவற்றை உள்ளடக்கிய சமூகம் என நிறைய விஷயங்களைப் பேசுகிறார். மடகாஸ்கர்தான் நூலில் பேசப்படும் முக்கியமான இடம். அதன் ரகசியங்களை அறிய நூலை வாங்கி வாசியுங்கள்.  டீர் மேன் ஜியோப்ராய் டெலோர்ம் லிட்டில் ப்ரௌன் புக் க்ரூப் புகைப்படக்காரர் டெலோர்ம் நார்மண்டியில் உள்ள லூவியர் காட்டுக்கு செல்கிறார். அங்கு சென்று தங்கி மான்களுடன் பழகுகிறார். அதன் வாழ்க்கையைக் கவனிக்கிறார். அதைப்பற்றிய குறிப்புகள், அனுபவங்கள் நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது.  வைல்ட் சிட்டி ஃப்ளோரன்ஸ் வில்கின்சன் ஓரியன் பப்ளிசிங் மனிதர

உறவுச்சிக்கல்களை, ஆழ்மனதை, வினோதமான மனிதர்களை அறிமுகப்படுத்தும் கதைகள் - கச்சேரி - தி.ஜானகிராமன்

படம்
  கச்சேரி - இதுவரை தொகுக்கப்படாத சிறுகதைகள் தி.ஜானகிராமன் காலச்சுவடு பதிப்பகம் இந்த நூலில் மொத்தம் 26 கதைகள் உள்ளன.  இவை அனைத்துமே வாசிப்பை ஊக்குவிக்க கூடியவை. ரசித்தபடியே வாசிக்கலாம். அதில் எந்த பாதகமுமில்லை. இதில் வரும் ஸீடிஎன் =ரபெ 5 ஆர் , கச்சேரி என்ற இரு கதைகளையும் முன்னமே வாசித்திருக்கிறேன்.  ஸிடிஎன் என்பது முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல என்று பேசுபவர்களுக்கானது. இந்த கதை இன்று பசுமாட்டை வைத்து அரசியல் செய்யும் அனைவரையும் கடுமையாக பகடி செய்கிறது. இதில் வரும் கோஸ்வாமி, பசு சாணத்தில் ரயில் வண்டி தயாரிக்க முனைகிறார். எரிபொருளே இல்லாமல் தன்னைத்தானே ஓட்டிக்கொள்ளும் திறன் பெற்றது. இதைப்பற்றி நிருபர் ஒருவருக்கு பேட்டி கொடுப்பது போல அமைந்த கதை, வாசிப்பவர் யாரையும் சிரிக்க வைத்துவிடும்.  கச்சேரி சிறுகதை சிறுவன் ரங்குவுக்கும் கச்சேரி செய்யும் வித்வான் ஒருவருக்குமான அந்நியோன்ய உறவு பற்றியது. எவ்வளவு பெரிய கலைஞர் என்றாலுமே அன்புக்கும் அங்கீகாரத்திற்கும் ஏங்குபவர்கள்தானே? அப்படி வித்வானுக்கு கிடைப்பவன்தான் ரங்கு. நட்பு, அதில் பூக்கும் அன்பை பேசுகிற கதை.  நிலவு - கருமேகம் என்ற கதையை ம

இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பங்களித்த ஐந்து விஞ்ஞானிகள் - இந்தியா 75

படம்
  இந்தியா 75 நவீன இந்தியாவை உருவாக்கிய சாதனையாளர்கள் பட்டியலில் ஒடிஷாவை சேர்ந்த ஐந்து விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை பிரிவில் இவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. விஞ்ஞானிகளின் பட்டியலை ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் தயாரித்துள்ளது.  பெடங்காதாஸ் மொகன்டி, புவனேஸ்வர் நகரில் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் டீன் மற்றும் பேராசிரியராக உள்ளார். இவர், இயற்பியலாளராக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். அதில் குறிப்பிடத்தக்கது, கரும்பொருள் பற்றிய ஆராய்ச்சியாகும்.  ஜோதிர்ரஞ்சன் எஸ் ரே, நாகர்கன்டா என்று பகுதியில் பிறந்தவர். புவி அறிவியல் படிப்புகள் தொடர்பான தேசிய மையத்தில் இயக்குநராக உள்ளார். தற்போது திருவனந்தபுரத்தில் பணியாற்றுகிறார். இவர், பாறைகளின் வயதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை செய்து வருகிறார்.  விந்திய மலைத்தொடரின் வயதைக் கண்டுபிடிக்கும் புவியியல் ஆராய்ச்சியை செய்தவர் இவரே.  ஜோதிர்மயி தாஸ், ஐஏசிஎஸ் என்ற நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர், ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புற்றுநோய்க்கு எதிரான மருந்துகள் பற்ற

ஆயிரம் மரங்களை வளர்த்த பொள்ளாச்சி அரசு உதவிபெறும் பள்ளி

படம்
  பொள்ளாச்சியில் ரெட்டியாரூர் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இதில், மாணவர்களை மரக்கன்றுகளை ஊன்ற வைத்து ஆயிரம் மரங்களை வளர்த்துள்ளனர். இவற்றை நட ஊக்கப்படுத்தியவர் விவசாய ஆசிரியர் டி பாலசுப்பிரமணியன்.   இதனை நட்டவர்கள் அனைவருமே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தானே? ஆயிரம் மரங்கள் இப்போது வளர்ந்துள்ளது ஆச்சரியம் என்றாலும் இதற்கான திட்டமிடல் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருக்கிறது. இதனை பள்ளி நிர்வாகம் முன்னெடுத்து அருகிலுள்ள கிராமங்களில் விதைகளை பெற்றிருக்கிறது. தனியார் நிறுவனங்களிடமும் நிறைய விதைகளைப் பெற்றிருக்கிறது. விதைகளை முளைக்க வைத்து அவை முளைவிட்டதும் கிராமத்தினருக்கும், அருகிலுள்ள பள்ளிகளுக்கும் இலவசமாக அரசுப்பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.  பள்ளியில் விளையும் காய்கனிகளை பறித்து சமைத்து சாப்பிட சமையல் அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மதிய உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். இயற்கை விவசாயம் சார்ந்த வல்லுநர்கள், பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்

நாய்களைப் பாதுகாத்து பராமரிக்கும் பொறியாளர் பெண்மணி!

படம்
  கோவையில் உள்ளது சீரநாய்க்கன்பாளையம். இங்குதான், ஹியூமன் அனிமல் சொசைட்டி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சுவர்கள் முழுவதும் விதவிதமான நாய்கள் நம்மை பல்வேறு வித குணங்களுடன் செய்கைகளுடன் பார்க்கின்றன. ஐ லவ் யூ, யூ வில் ஃபீட் மீ என பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தெருநாய்கள், காயமுற்ற நாய்களை பாதுகாக்கும் அமைப்பு இது.  தன்னார்வ தொண்டு அமைப்பாக 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை 70 ஆயிரம் நாய்களை பாதுகாத்து பராமரித்துள்ளனர். இந்த செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தவர் மினி வாசுதேவன். இவர் தனது கணவரோடு அமெரிக்காவில் பொறியாளராக வேலை செய்து வந்தவர். பிறகே, பதிமூன்று ஆண்டுகள் கழித்து அங்கிருந்து இந்தியாவிற்கு வந்தார். இவரது கணவர் பெயர், மது கணேஷ்.  2019இல் மினி வாசுதேவனுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. சீரநாய்க்கன்பாளையத்தில் உள்ள காப்பக இடம் போதாமல், கோவை வழுக்குப்பாறை அருகில் 15 ஏக்கர் நிலத்தில் காப்பகம் ஒன்றை அமைத்துள்ளார்கள். இங்கு இயற்கை சூழலில் நாய்களை பாதுகாத்து பராமரிக்கிறார்கள். இதில் வேலை செய்யும் சம்பள பணியாளர்களின் எண்ணிக்கை