இடுகைகள்

பயணம் செய்பவர்களுக்கான ஆப்ஸ்கள்!

படம்
  polar grit x coros vertix 2 பீக் ஃபைண்டர்  இந்த ஆப் மூலம் உயரமான மலைச்சிகரங்களை அடையாளம் காணலாம். ஏராளமான மலைகள் இருப்பதால், உங்களுக்கு எது தேவையோ அதை தேர்ந்தெடுத்து ஏறலாம். மலைகளை 360 டிகிரியில் பார்க்க முடியும். இதனை ஆஃப்லைனிலும் பயன்படுத்த முடியும். கட்டண சேவை தான்.  ஸ்லோவேய்ஸ்  இங்கிலாந்து மக்கள் பயன்படுத்த இலவச ஆப் இது. லாக்டௌனில் தொடங்கிய ஆப் இது. இலவசம்தான். இங்கிலாந்தின் 7 ஆயிரம் வழித்தடங்களை  ஒரு லட்சம் கி.மீ. தொலைவுக்கு கொடுத்திருக்கிறார்கள். இதனால் கதவைத் திறந்து சாலைகளைப் பார்த்ததும் மிரளாமல் பயணம் செய்யலாம்.  கோமூட் பயணிப்பதற்கான வழித்தடங்களை உருவாக்கும் ஆப் இது. வழித்தடம், ட்ராக்கர், சமூக வலைத்தளம் என பல்வேறு வசதிகளைக் கொண்ட ஆப் இது. நகர தெருக்கள் தொடங்கி மலைகள், சிகரங்கள், பார்க்க வேண்டிய இடங்கள், எங்கே தூங்குவது, குடிநீர் கிடைக்கும் இடம் என பல்வேறு விஷயங்களை ஆப் தருகிறது.  இத்தனைக்கும் சேவை இலவசம்தான். பயணம் தொடர்பான அனைத்து விஷயங்களும் கோமூட் ஆப்பிலேயே கிடைத்துவிடும்.  கோரோஸ் வெர்டிக்ஸ் 2 சாகச பயணத்திற்கு ஏற்ற ஜிபிஎஸ் வாட்ச் இது. 140 மணி நேரம் ஜிபிஎஸ் வசதியைப் பயன்பட

அப்பாவின் வெறுப்பால் குடும்பத்தை விட்டு தனி மனிதனாகும் சத்யம்! சத்யம் -2003

படம்
  சத்யம் சுமந்த் அக்கினேனி படத்தின் தலைப்புதான் நாயகனின் குணம். அவன் உண்மை சொல்லும் சந்தர்ப்பம் எல்லாம் தவறாகவே போகிறது. இதனால் அவன் வீட்டை விட்டு வெளியே போய் வாழும்படி ஆகிறது. பிறரின் நலனுக்காக தன்னையே தியாகம் செய்யும் குணம், அவனுக்கு நான்கு நண்பர்களை சம்பாதித்துக் கொடுக்கிறது. இருவர் அவனது அறையில் தங்கி நண்பர்களானவர்கள், மீதி இருவர்களில் ஒருவர் ஜோதிடர், மற்றொருவர் இவர்கள் தங்கியிருக்கும் அறைகளின் உரிமையாளர்.  படம் நெடுக நான்கு நண்பர்கள் சுமந்திற்கு எப்பாடு பட்டேனும் உதவுகிறார்கள். அவர்களுக்கும் சுமந்த் பார்ட்டி கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். விடுங்கள் கதை பார்ட்டி பற்றியது அல்ல.  சத்யத்தை நம்பும் ஒரே நபர், அவனது தங்கை மட்டும்தான். சத்யத்தைப் பொறுத்தவரை மனத்திற்கு தோன்றினால் வேலைகளை செய்வது இல்லையெனில் அதை செய்யக்கூடாது அவ்வளவுதான். இது பலருக்கும் புரிவதில்லை. ஏன் அவனது பெற்றோருக்கு கூட. குறிப்பாக அவனது அப்பாவுக்கு அவனை புரிந்துகொள்ள முடியாத இயலாமை மெல்ல கோபமாக மாறுகிறது. சத்யத்தைப் பொறுத்தவரை கவிதை எழுதுவது அதற்கான கவியுலகிலேயே இருப்பது பிடித்தமானது. இப்படி இருப்பவன் நடைமுறை வாழ்க்க

சினிமா டூ தொழிலதிபர் - இரு குதிரை சவாரி - அனுஷ்கா சர்மா, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா

படம்
  அனுஷ்கா சர்மா 2008ஆம் ஆண்டு ஷாரூக்கானின் ரப்னே பனா டி ஜோடி படத்தில் அறிமுகமானார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்தமாகி டஜன் கணக்கிலான படங்களில் தெறமை காட்டினார். 2013ஆம் ஆண்டு க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இதனை, அனுஷ்காவின் சகோதரர் கவனித்துக்கொள்கிறார். அனுஷ்கா நடிப்பதை மட்டும் பார்க்கிறார். அனுஷ்கா தயாரிப்பாளர் மட்டுமல்ல படங்களை உருவாக்கும் கதை, திரைக்கதை, படப்பிடிப்பு என அனைத்து செயல்முறையிலும் பங்கேற்று வருகிறார். 2015ஆம் ஆண்டு வெளியான என்ஹெச் 10 படம் இப்படித்தான் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 2017இல் பில்லாரி, 2018இல் பரி ஆகிய திரைப்படங்கள வெளியாயின.  பேய்க்கதை, திகில் ஆகிய படங்களையே விரும்பி தயாரிக்கிறார். பல்ப்புல் -2020, பாதாள்லோக் 2020 ஆகிய இரண்டு ஓடிடி சீரிஸ்களும் அனுஷ்காவுக்கு நல்லப் பெயரை வாங்கிக்கொடுத்தன. இப்போது நுஸ் எனும் துணிகளை வடிவமைத்து விற்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.  2018, 2019ஆம் ஆண்டுகளில் ஃபார்ச்சூன் இதழில் 50 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலிலும், ஃபோர்ப்ஸ் ஆசியா 30 அண்டர் 30 பட்டியலிலும் இடம்பிடித்தார்.  ஆலியா பட் பொது அறிவு கேள்விகள

ஐஏஎஸ் சா, அப்பாவா முடிவெடுக்க தடுமாறும் மகன்! - போருகாடு -2008

படம்
  போருடு 2008 அப்பா ரௌடி, மகன் குடிமைத்தேர்வில் வென்று நேர்காணலுக்கு செல்லவிருக்கிறார். இதுவே பொங்கலுக்கு வடகறி போல இருக்க, அவர்கள் வாழும் நகரில் உள்ள இரு மாஃபியா குழுக்களுக்கு இடையில் தகராறு. இதில் ஒரு குழுவில் நாயகனின் அப்பா இருக்க, வேறு என்ன நடக்கும்? அப்பாவுக்காக மகன், மகனுக்காக அப்பா என பாசம் ஆவேசம், ஆக்ரோஷத்தை வளர்க்க படம் 2.30 நிமிடம் ஓடுகிறது.  படத்தில் முக்கியமானது அப்பாவுக்கும், மகனுக்குமான பாசம் நேசம் முரண்பாடுகள்தான். அப்பாவைப் பொறுத்தவரை தான் ஆதரவின்றி நிற்க, தன்னை பாதுகாத்து வளர்த்த நாயக் தெய்வம். எனவே, சுயமாக அறியாமலேயே நாயக்கின் சட்டவிரோத விஷயங்களுக்கு துணையாக நிற்கிறார். அப்பா பாண்டுவுக்கு விசுவாசம் முக்கியம். அவருக்கு மகன் படித்து வேலைக்கு எதற்கு போகவேண்டும்? தன் அருகில் இருந்தாலே போதும் என நினைக்கிறார். ஆனால் மகன் அஜய்யைப் பொறுத்தவரை அப்பா மீது பாசம் உண்டு, அக்கறை உண்டு. ஆனால் அவரின் முதலாளி மீது கிடையாது. அவரின் செயல்பாடுகளை அஜய் இறுதிவரை ஏற்பதும் இல்லை.  ஐஏஎஸ் நேர்காணலுக்கான பயிற்சியில்... தற்காப்புக்கலை கற்றுக்கொண்டு அதை பகுதிநேரமாக மாணவர்களுக்கு சொல்லித்தருவதே அஜ

டைம் இதழின் செல்வாக்கு பெற்ற திரைப்படம், இசை துறை கலைஞர்கள்!

படம்
  செல்வாக்கு பெற்ற மனிதரகள்  கலை சிமு லியூ சீன கனட நடிகர் கனடாவின் ஒன்டாரியோவில் வசிக்கும் சக மனிதர் என்ற வகையில் நடிகர் சிமு லியூவின் திரைப்பட வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திறக்காத சினிமா கதவுகளை அவர் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும்  கனடா நாட்டுக்காரர்களுக்கு திறந்து வைத்துள்ளார். இனிமேல் இதுதொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளும் சிமு லியூவின் வெற்றியால் தான் சாத்தியமானது என  பிறர் கூறுவார்கள்.  சாங் சீ  திரைப்படத்தை சிமு லியூவுக்காகவே நான் மூன்று முறை பார்த்தேன். படத்தில் அவரின் நகைச்சுவை உணர்வு, போர்க்கலை பயிலும் காட்சிகள் சிறப்பாக வந்திருந்தன. தன்னைத்தானே சுய கிண்டல் செய்யும் அரிய குணம் சிமு லியூவுக்கு உண்டு. கச்சிதமான உடைகள் அவரை அழகாகவும் காட்டுகின்றன என்பது முக்கியமானது.  வெறுப்புவாதம், இனவெறி, தீண்டாமை ஆகியவற்றுக்கு எதிராக வெளிப்படையாக பேசி வரும் நடிகர் சிமு லியூ. இவர் நமக்கான சூப்பர் ஹீரோவேதான்.   சாண்ட்ரா ஓ  2 ஜோ கிராவிட்ஸ்  அமெரிக்க திரைப்பட நடிகை ஜோ கிராவிட்ஸ் அழகு, புத்திசாலித்தனம் நிரம்பியவர். அவருடன் இரவு நேரங்களில் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறேன். அப்போதுதான் நடிப்புடன் அவ

காதலை சொல்லத் தயங்கும் கோபக்கார பெண்ணின் வாழ்க்கை! - வருடு காவாலேனு 2021

படம்
  வருடு காவாலேனு 2021 தெலுங்கு - தமிழ் டப்  இயக்கம் லஷ்மி சௌஜன்யா இசை, பின்னணி - விஷால் சந்திரசேகர், எஸ்.தமன் படத்தின் சிறப்பு ரிது வர்மாவின் பாத்திரம் தான். இதனை இயக்குநரே பேட்டியில் கூட சொல்லிவிட்டார். இதில், பெண் பாத்திரமாக நாயகிக்குத்தான் அதிக முக்கியத்துவம் உள்ளது போல தெரியும். ஆனால் அப்படி கிடையாது. படத்தில் இரு பாத்திரங்கள் முக்கியமானவை. ஒன்று பூமி எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தும் இளம்பெண். அடுத்து, அவளை ஆகாயம் போல சுற்றி வளைக்க முயலும் பாரிஸிலிருந்து வரும் கட்டிடக் கலைஞன் ஆகாஷ். இவர்கள் இருவரின் காதல், ஈகோ, போட்டி, பொறாமை, ஆவேசம்தான் படமே.  காட்சிகளின் படி படத்தை அடுக்கினால் தான் படம் மட்டுமல்ல கதை சொல்வதுமே புரியும். பூமி, தரணி எனும் கட்டுமான நிறுவனத்தை நடத்துகிறாள். முழுக்க இயற்கைக்கு அதிக சேதம் விளைவிக்காத பொருட்களை வைத்து வீடுகளை கட்டுவதுதான் நோக்கம், லட்சியம், பேராசை இன்ன பிற என்று வைத்துக்கொள்ளுங்கள்.  பூமிக்கு, திருமணம் ஆகவில்லை. வயதும் 30 ஆகிவிட்டது. இதனால் அவளை வீட்டில் அம்மா கல்யாணம் செஞ்சுக்கோ என நெருக்குகிறாள். அப்பாவைப் பொறுத்தவரை கல்யாணம், காதல் எல்லாம் அவள்தான

தொழிலை அறிய அதை தொடங்கிவிடுங்கள் - கனிகா குப்தா ஷோரி, ஸ்கொயர் யார்ட்ஸ்

படம்
  கனிகா குப்தா ஷோரி  நிறுவனர், செயல்பாட்டு இயக்குநர் ஸ்கொயர் யார்ட்ஸ்  வார்ட்டன் வணிகப்பள்ளியில் படித்தவர் கனிகா. தற்போது ஸ்கொயர் யார்ட்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.  தனது தொழில் சாதனைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர் கனிகா. இளம் சாதனையாளர், வுமன் ஐகான், நாற்பது வயதுக்குள் உள்ள நாற்பது தொழிலதிபர்கள் என்ற பட்டியலிலும் இடம்பெற்று சாதித்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.  வணிகத்திற்குள் எப்படி உள்ளே வந்தீர்கள். உங்களால் ரியல் எஸ்டேட் வணிகத்தில் சாதிக்கமுடியும் என்று தோன்றியதா? குழந்தை பிறப்புக்குப் பிறகு நானும் எனது கணவரும் இணைந்து ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தோம். இத்துறையில் எந்த பாகுபாடுமின்றி வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகளை சொல்லும் நிறுவனங்களும் ஆட்களும் குறைவு.  இதற்காகவே நாங்கள் 2014இல் ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம். தொழிலை தொடங்கும் முன்னரே வரும் பல்வேறு சவால்களை சமாளிக்க முடியுமா என்று யோசித்தேன். தைரியம் வந்ததும் தொழிலைத் தொடங்கினேன். இவைதான் எனக்கு இப்போதும் தொழிலை வெற்றிகரமாக நடத்திச் செல்ல உதவுகிறது.  உங்களின் ரோல்மாடல் யார்? பெப்சி குழ

விலங்குகளை அச்சுறுத்தும் பட்டாசுகள்!

படம்
  விலங்குகளை அச்சுறுத்தும் ஒலி! 2021ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசு, பிற மாநிலங்கள் உருவாக்காத சூழல் திட்டத்தை உருவாக்கியது. காலநிலை மாற்றத்திற்கான மும்பை கிளைமேட் ஆக்சன் பிளான் (MCAP) எனும் திட்டம் தான் அது. ஆனால் இந்த திட்டத்திலும் கூட ஒலி மாசுபாடு குறிப்பிடப்படவில்லை.  மேலும், மும்பை பெருநகரில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகள் சூழல் நிலைத்தன்மை விதிகளுக்கு உட்படாதவை.  கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஜெஸ்வின்,  கிங்ஸ்லி களிறு எனும் ஆவணப்படத்தை உருவாக்கினார். இப்படத்தில், விலங்குகள் எப்படி பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டப்படுகின்றன என்பதை விவரித்தது. இப்படி விலங்குகளை இரைச்சலிட்டு விரட்டுவது புதிதல்ல என்றாலும் நவீன காலத்தில் சக்தி வாய்ந்த பட்டாசுகளைப் பயன்படுத்துவது விலங்குகளை அச்சுறுத்துவதோடு அவற்றை உடல் அளவில் காயப்படுத்தவும் செய்கிறது.  "தொடர்ச்சியாக பல்லாண்டுகளாக உருவாகி வரும் இரைச்சல், விலங்குகளின் நுட்பமான ஒலிகளை உணரும் திறனை பாதிக்கிறது. அதன் வாழிடத்தில் திடீரென உருவாகும் ஒலி அச்சுறுத்தலாக மாறி வருகிறது” என 2013ஆம் ஆண்டு ஆய்வாளர் கிளிண்டன் டி ஃபிரான்சிஸ் ,

நிழலின் சிறகு! - மொழிபெயர்ப்பு அறிவியல் நேர்காணல் - மின்னூல் வெளியீடு

படம்
  அறிவியல் நேர்காணல் நூல் என்ற வகையில் ஆராபிரஸ் - கோமாளிமேடை தனது இரண்டாவது நூலை வெளியிடுகிறது. இந்த நூலில் உள்ள மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் அனைத்துமே உலக அளவில் முக்கியமான நியூ சயின்டிஸ்ட், பிபிசி சயின்ஸ்ஃபோகஸ் ஆகிய இதழ்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.  இந்தியாவில் அறிவியல் பார்வை குறைந்து மூடநம்பிக்கைகள் தலைதூக்கும் நேரத்தில் ஆய்வுகள், அதுபற்றிய கருத்து பகிர்தல் நிறைய நடக்கவேண்டும். அந்த நோக்கில்தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், சூழலியலாளர்கள் அனைவருமே சமூகம் செல்லும் பாதையில் நடப்பவர்களல்ல.  தாங்கள் விரும்பிய பாதையில் நடந்து அதனால் புகழ்பெற்றவர்கள். வானியல், உளவியல், மருத்துவம், செயற்கை நுண்ணறிவு, பெண்களின் நலன், காட்டுயிர் வளம், காலநிலை மாற்றம் என நிறைய விஷயங்களை மனதில் பட்டபடியே அறிவியலாளர்கள் பேசியுள்ளனர். அதனை நான் படித்து உள்வாங்கி தமிழில் எழுத முயன்றுள்ளேன். நூலை இணையத்தில் வாசிக்க... https://www.amazon.in/dp/B0B4PQJ6KQ

பால் புதுமையினர் பற்றிய பயம் திரைப்படத்துறையினருக்கு உள்ளது! - இயக்குநர் ஒனீர்

படம்
  2005ஆம் ஆண்டு ஓனீரின் மை பிரதர் நிகில் என்ற படம் வெளியானது. இது, இந்தியாவின் முதல் ஹெச்ஐவி நோயாளியான டொமினிக் டி சூசா என்பவரின் வாழ்க்கையை தழுவியது. பிறகு ஒனீர் எடுத்த படம், ஐ யம் -2010. இந்த படம் இந்திப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. மாற்றுப்பாலினத்தவர்களின் குரல்களை ஒலிக்கும் இயக்குநர் ஓனீர் தனது சுயசரிதையை ஐ யம் ஓனீர் அண்ட் ஐ யம் கே என்ற நூலை எழுதியுள்ளார்.  திரைப்பட இயக்குநராக உங்களது பயணம், இத்துறையில் வெளியில் உள்ள நபராக அனுபவங்கள் என இரு பகுதிகளாக நூல் எழுதப்பட்டுள்ளது என கேள்விப்பட்டோம்.  திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர், எனது பாலின அடையாளம் என இரண்டுமே எனக்கு முக்கியமாக உள்ளது. நான் வாழும் காலத்தில் தன் பாலினச்சேர்க்கை குற்றமாக கருதப்பட்டு பிறகு அக்குற்றம் குற்றமல்ல என மாறியது. பொது இடத்தில் நான் எப்போதுமே பேசி வந்திருக்கிறேன். இளைஞர்களுக்கு அவர்களை வெளிப்படுத்த குரல் தேவைப்படுகிறது. என்னுடைய கதை அவர்களுக்கு உதவும்.  பள்ளி, கல்லூரி என பார்த்தாலும் எனக்கான முன்மாதிரிகள் வேறுபட்டவை.  நீங்கள் கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது மை பியூட்டிபுல் லாண்ட்ரெட

நீதிபதி ரமணா தெரிவித்த கருத்து சரியானது அல்ல! - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

படம்
  மக்களவை சபாநாயகர்  ஓம் பிர்லா சபாநாயகராக உங்களது சாதனை என்ன? கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் விவகாரங்கள் பற்றிய விவாதங்கள்தான். நாட்டின் முக்கியமான விவாதங்களில் நிறைய மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசியிருக்கிறார்கள். 4648 விஷயங்களை மூன்று ஆண்டுகளில் விவாதித்திருக்கிறோம். மேலும் கேள்வி நேரத்தில் முதலில் நான்கு கேள்விகள் தான்கேட்க வேண்டும். அந்த எண்ணிக்கை கூடி ஆறாக உயர்ந்துள்ளது. சட்டம் 377 படி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான எதிர்வினைகளும் அதிகரித்துள்ளன.  மக்களவையில் அமைச்சர்கள் சரிவர பதில் சொல்லுவதில்லை என்று புகார்கள் கூறப்படுகின்றனவே? என்னளவில் மக்களவை உறுப்பினர் கூறும் பதில், கேள்வி கேட்பவரை திருப்தி செய்யவேண்டுமெனவே நினைக்கிறேன். அரசு செய்யும் செயல்பாட்டில் திருப்தி என்று தான் இதற்கு பொருளைப் புரிந்துகொள்ளவேண்டும். நான் உறுப்பினரை முறையாக சரியான பதிலை வழங்குங்கள் என்று அறிவுறுத்தலாம். நான் அப்படித்தான் செயல்படுகிறேன்.  முக்கியமான அரசு அமைப்பு என்ற பெருமையை நாடாளுமன்றம் இழந்துவருகிறதா? நான் உங்களுக்கு முன்னமே பதில் கூறிவிட்டேன். நாடாளுமன்றத்தில் உற்பத்தித்திறன் தொடர்ச்சியாக