இடுகைகள்

கூகுள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளை பாதுகாக்க களத்தில் இறங்கும் கூகுள்!

படம்
  இன்று பெருந்தொற்று காலத்தில் வாழ்கிறோம். சமூக வலைத்தளங்கள் வந்தபோதே நம்முடைய வாழ்க்கை பெரும்பாலும் இணையத்தோடு இணைந்துவிட்டது. ஒருவரைப் பற்றி தேட வேண்டுமென்றால் கூட சமூக வலைத்தளங்களின் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். மேலும் சர்ச் எஞ்சின்களில் தேடினால் ஒருவரின் புகைப்படம், குறைந்தபட்சம் அவரின் வேறு தகவல்களையும் கூட பெறலாம். ஒருவகையில் இது சிறப்பானது என நிறுவனங்கள் கூறினாலும், தகவல்களை பிறர் தவறாக எடுத்து பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே கூகுள் பதினெட்டு வயதிற்கு கீழுள்ளவர்களை பாதுகாக்க தனது நிறுவன விதிகளை மாற்றியுள்ளது.  குழந்தைகள் மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் என அனைவருமே, பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்பதால், விதிகள் மாற்ற்றப்பட்டுள்ளன. இதன்படி மைனர்கள் அனைவருமே தங்கள் புகைப்படங்களை இணையதளங்களிலிருந்து நீக்கிக்கொள்ள கூகுள் கோரியுள்ளது.  யூட்யூபில் மைனர்கள் பதிவேற்றும் வீடியோக்கள் அவர்களை பாதுகாக்கும் மோடில்தான் இயங்கும். இதில் உள்ள சேஃப் சர்ச் என்ற வசதி முதலில் பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கானது. இப்போது பதிமூன்று வயதுக்குட்பட்டோருக்காக மாற்றப்பட்டுள

டிம் பெர்னர்ஸ் லீயின் ஆராய்ச்சிக்கு கிடைக்காத அங்கீகாரம்! - சூப்பர் பிஸினஸ்மேன்

படம்
        சூப்பர் பிஸினஸ்மேன் ! டிம் பெர்னர்ஸ் லீ இந்த தலைப்பின் கீழ் இவரைப் பற்றி எழுதினாலும் கூட டிம் பெர்னர்ஸ் லீயை தொழிலதிபர் என்று கூற முடியாது . இணையத்தை இவர்தான் உருவாக்கினார் . இன்று உலகம் முழுக்க பல்வேறு ஸ்டார்ட்அப்கள் உருவாக்கப்பட்டு செயல்பட இவரது கண்டுபிடிப்பு முக்கியமான காரணம் . கிடங்கு ஒன்றில் பொருட்களை வைத்துக்கொண்டு இணையத்தில் கடையை திறந்து அதனை விற்க முடியும் தொ்ழில்நுட்பத்தை யாராவது முன்னர் சொல்லியிருந்தால் நம்புவார்களா ? இணையம் அதனை சாத்தியப்படுத்தியது .    வேர்ல்ட் வைட் வெப் என்பதை லீ கண்டுபிடித்தார் . இவரது உதவியின்றி கூகுள் , அமேசான் ஆகிய நிறுவனங்கள் உருவாகியிருக்கவே முடியாது . உலகம் முழுக்க உள்ள மக்கள் ஒன்றாக இணைய லீ வழியமைத்தார் . இன்டர்நெட் என்பதை ஏராளமான கணினிகள் இணைக்கப்பட்டுள்ளதை வைத்து வரையறுக்கலாம் . இன்டர்நெட்டை 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ராணுவ அமைச்சகம் கண்டுபிடித்தது . 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 29 என்பதுதான் இன்டர்நெட்டின் பிறந்தநாள் என்று கூறலாம் . லீ , 1955 ஆம் ஆண்டு லண்டனில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார் . இவரது

கிராபிக் சிப்களுக்கு கூடுகிறது மவுசு!

படம்
                        சிப்களின் வேகம் கூடிவருகிறது ! கடந்த ஐம்பது ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் பயன்படுத்தும் கணினிகளின் வேகம் கூடியுள்ளது . ஒப்பீட்டளவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிப்களின் வேகம் கூட்டப்பட்டு வருகிறது . இன்டலை தொடங்கிய நிறுவனர்களில் ஒருவரான கார்டன் மூரின் விதிகளின் பட வேகம் அதிகரித்து வருகிறது . 1965 இல் இதற்கான விதியை இவர் உருவாக்கினார் . சிப்களை முடிந்தளவு சிறிதாக உருவாக்கி அதன் பாகங்களையும் நேர்த்தியாக உருவாக்கி வேகத்தை கூட்டி வருகின்றனர் . மைக்ரோபுரோசசர்கள் இன்று கணினிகளின் திறனை அதிகரித்து வருகிறது . நமது வாழ்க்கையின் பெரும்பகுதி டிஜிட்டல்மயமாக மாறியுள்ளது . உணவு , போக்குவரத்து முதல் சமூக வலைத்தளம் , ரோபோட்டிக்ஸ் , மிகை மெய்ம்மை , எந்திர கற்றல் ஆகியவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது . இப்போது நாம் அதிளளவு டேட்டாவை உருவாக்கி வருகிறோம் . அதனை மேக கணிய முறையில் பயன்படுத்தி வருகிறோம் . இப்படி சேகரித்து வைக்கும் டேட்டாவை அலச நமக்கு அதிகளவு கணினித் திறன் தேவை . ஆனால் இப்படியே இந்த செயல்பாட்டை கொண்டு செல்லமுடியாது . ட்

உலகையே கட்டுப்படுத்தும் டெக் நிறுவனமாக கூகுள் வளர்ந்த கதை! சூப்பர் பிஸினஸ்மேன் - லாரி பேஜ், செர்ஜி பிரின்

படம்
      சூப்பர் பிஸினஸ்மேன் கூகுள் இரட்டையர்கள் செர்ஜி பிரின், பேஜ் பில்கேட்ஸின் மைக்ரோசாப்டைப் போன்ற ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக கூகுள் மாறிவிட்டது அதைப் பற்றியும் அதனை தொடங்கிய கூகுள் இரட்டையர்கள் பற்றி கட்டுரைகள் செய்தி வெளிவராத நாளிதழ்களோ, வார இதழ்களோ இருக்க முடியாது. அந்தளவு சர்ச் எஞ்சின் ஒன்றை உருவாக்கி மக்களை எளிதாக அதில் இணைத்துவிட்டனர். இப்போதும் சமூக வலைத்தள விஷயத்தில் நினைத்த வெற்றி பெற முடியவில்லை என்றாலும் ஆண்ட்ராய்டு விஷயத்தில் மக்களை கட்டுப்படுத்தி தான் வருகிறார்கள்.  வெற்றி பெற்ற பெரு நிறுவனம் என்றாலும் கூட பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்து வருவதோடு, வன்பொருட்கள், மென்பொருட்கள் என பலவற்றையும் உருவாக்கி வருகின்றனர். 2004இல் கூகுளின் நிறுவனர்களான செர் ஜி பிரின், லாரி பேஜ் ஆகியோரைப் பற்றி கட்டுரை பிளேபாய் இதழில் வெளியானது.  அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்று வரும் நிறுவனர்களின் திறமையை வெளிப்படையாக பாரட்டி வெளியான கட்டுரை அது. பேஜ், அமெரிக்காவின் மிச்சிகனில் பிறந்தவர். பிறகு ஸ்டான்போர்டில் பிஹெச்டி படிக்க  முடிவெடுத்து சேர்ந்தார். பிரின் ரஷ்யாவில் பிறந்தவர். இவரது பெற்றோர்

மக்களைக் கண்காணிக்கும் பெரு நிறுவனங்கள்! - தகவல் சேகரிப்பில் கொட்டும் லாபம்!

படம்
                பழக்கங்களை பின்பற்றுதல் காலையில் எழுகிறீர்கள் . எழுந்த உடனே பெரும்பாலும் முகங்களை கூட இப்போது எல்லாம் யாரும் கழுவுவதில்லை . உடனே போனில் பேஸ்புக் , வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் என பல்வேறு தளங்கள் உள்ள பதிவுகளை பார்க்கிறோம் . இரவில் தூங்கும்போது மாறியுள்ள விஷயங்களை எப்படி கவனிப்பது ? பின் கிளம்பி அலுவலகம் சென்று இணையத்தில் ஷூ வாங்குவது பற்றி தேடுகிறீர்கள் . இன்ஸ்டாகிராமில் காபியை குடிப்பது போன்ற புகைப்படத்தை டீ பிரேக்கில் பதிவிடுகிறீர்கள் . சிறிதுநேரத்தில் இணையத்தில் நீங்கள் எங்கு சென்றாலும் புதிய ஷூக்கள் பற்றிய விளம்பரங்கள் வரத் தொடங்கும் . எப்படி என்று இந்நேரம் யூகித்திரப்பீர்கள் . அனைத்து வலைத்தளங்கள் நுழைந்தவுடன் குக்கீஸ்கள் நம்மை பின்தொடர அனுமதி கொடுப்பதை மறந்திருக்க மாட்டீர்கள் . இந்த குக்கீஸ்கள்தான் நாய்க்குட்டிபோல நம்மைப் பின்தொடர்ந்து வந்து பல்வேறு தகவல்களை சேகரிக்கின்றன . அதனால்தான் விளம்பரங்கள் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் வருகின்றன . சில சமயங்கள் விளம்பரங்களை கிளிக் செய்யும்போது , கூகுள் இந்த விளம்பரம் பொருந்தவில்லையா என்று கேள்வி கே

ஆடியோ மூலமாக என்னென்ன விஷயங்களை செய்யலாம்?

படம்
              ஆடியோவில் ஆடிப்பாடுவோம் ! ஸ்மார்ட்போன்களில் குரல் மூலம் செயல்படும் உதவியாளர் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகள் ஆகப்போகின்றது . இதனை இன்னும் நாம் சிறப்பாக பயன்படுத்த கற்கவேண்டும் . அப்போதுதான் எழுதுவதை விட எளிதாக பேசி ஒரு விஷயத்தை செய்யமுடியும் என்பதை உணர்வீர்கள் . உதவியாளரால் என்ன செய்யமுடியும் ? ஆப்பிளின் சிரி , கூகுளின் ஆண்ட்ராய்டு சாம்சங்கின் பிக்ஸ்பை ஆகியவை இன்று பெரும்பாலோனாரின் போன்களில் பயன்பாட்டில் உள்ளது . இதனை முழுமையாக பயன்படுத்த அதனைப் பற்றி அறிவது அவசியம் . எனவே இதுபற்றி இணையத்தில் தேடிப் பார்க்கலாம் . அல்லது போனில் உள்ள உதவியாளரிடமே உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி கேட்டு பதில் பெறலாம் . என்ன செய்யலாம் ? இன்று வேலைகள் என்னென்ன என்பது உங்களது அற்புதமான காந்தர்வ குரலில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் . போனில் நோட்ஸ் எடுக்கும் ஆப்புகளும் இருக்கும் . அதனைப் பயன்படுத்தலாம் . இல்லையெனில் போனில் கம்பெனியே கொடுத்துளமள ரெக்கார்ட் ஆப்பை பயன்படுத்துங்கள் . பட்டனை அழுத்தி பேசி பதிவுசெய்துகொண்டு அதனை கணினியில பதிவேற்றி பேக்கப் எடுத்து வைத்துக்

வெறுப்பு பேச்சுகளை ஊக்கப்படுத்தும் சமூக வலைத்தளங்கள்! - வணிகத்திற்காக எல்லைமீறும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்திக்கும் வழக்குகள்!

படம்
            சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் வெறுப்புவாதம் ! வெறுப்பு பேச்சுகளை ஊக்குவிப்பதாக எழுந்த புகார்களின் பேரில் ஃபேஸ்புக் , ட்விட்டர் ஆகிய சமூகவலைத்தள நிறுவனங்கள் பல்வேறு வழக்குகளை சந்தித்து வருகின்றன . கடந்த ஆண்டு நவம்பர் 17 அன்று அமெரிக்க செனட் கமிட்டி முன் ஃபேஸ்புக் நிறுவனர் மா்ர்க் , டிவிட்டர் இயக்குநர் ஜேக் டோர்ஸி ஆகியோர் ஆஜராயினர் . அவர்களது நிறுவனத்தில் பகிரப்படும் வெறுப்புவாத செய்திகள் பற்றிய விசாரணையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தினர் . பேச்சு சுதந்திரம் அல்லது வெறுப்பு வாதங்கள் என்று பகிரப்படும் செய்திகளால் நாட்டில் நடைபெறும் பதற்றமான நிகழ்ச்சிகள் காரணமாகவே மேற்கண்ட நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்றது . அமெரிக்காவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டால் அரசியல் நிலை சீரற்றதாகி வருகின்றன . இந்தியாவில் நவம்பர் 21 அன்று கேரள அரசு , 118 ஏ என்ற சமூகவலைத்தள பதிவுகளுக்கா ன தடுப்புச்சட்டத்தை அமல்படுத்தியது . பெண்கள் , குழந்தைகள் இணையத்தில் கேலி , கிண்டல் செய்யப்படுவதைத் தடுக்கும் சட்டம் என மாநில அரசு கூறியது . ஆனால்

ஸ்மார்ட்போன் ஆப் வழியாக மாட்டிக்கொள்ளும் மனிதர்கள்! - சீன ஆப்களின் இன்ஸ்டா லோன் பயங்கரம்!

படம்
                கடன் ஆப்கள் - கடன் பெற்றவர்களை அவமானப்படுத்திக்கொல்லும் கொடூரம் ! சீனாவைச் சேர்ந்த கடன் ஆப்கள் மூலம் கேரளம் , தமிழகம் , தமிழகம் மாநிலங்களைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்துள்ள நிலை வேதனைக்குரியது . எப்படி இப்படி ஒரு நிலை ஏற்படுகிறது ? மொபைல் ஆப்கள் மூலம் இன்ஸ்டன்டாக கடன்கள் கிடைப்பதுதான் இதனை பலரும் நாடிச்செல்லுவதற்கு முக்கியக் காரணம் , பெருந்தொற்று காரணமாக வேலையிழந்த பலரும் இந்த ஆப்களில் கடன் வாங்கியுள்ளனர் . கடன் வழங்கும் சீன நிறுவனங்கள் பலரும் வங்கியல்லாத பல்வேறு நிதிநிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு செயல்பட்டு வருகின்றன . இதில் கடன் வேண்டும் என்பவர்கள் தங்களை ஒரு செல்ஃபீ எடுத்து பதிவிடுவதோடு , ஆதார் கார்டு தகவல்களையும் தர வேண்டும் . கடன்களைப் பெற்றவர்கள் அதனை கட்டுவதற்கு 91 முதல் 360 நாட்கள் காலம் தருகிறார்கள் . கடன் பெற்றவர்களுக்கு ஏழு நாட்களுக்கு பிறகு கடனை கட்டுவதற்கான நிர்ப்பந்த அழைப்புகள் தொடர்புடைய கடன் நிறுவனங்களிலிருந்து வரத்தொடங்கும் . போனில் கடன் ஆப்களை தரவிறக்கும்போது ஒருவரின் போன்புக் தகவல்கள் அனைத்தும் சீன நிறுவனங்களுக்க

மினி ஆப் ஸ்டோரின் பின்னணி என்ன? - கூகுளை எதிர்க்க தயாராகி விட்ட பேடிஎம் நிறுவனம்

படம்
      கூகுள் தனது பிளே ஸ்டோரில் இடம்பெறும் ஆப்களுக்கு 30 சதவீதம் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பேடிஎம் நிறுவனத்தின் பின்னால் திரண்டுள்ளன. எனவே இவர்களை முன்வைத்து பேடிஎம் நிறுவனம், பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் ஒன்றைத் தொடங்கியுள்ளது. மினி ஆப் ஸ்டோர் தொடங்குவதற்கு பேடிஎம்மிற்கு இன்னொரு வலுவான காரணமும் உண்டு. சில நாட்களுக்கு முன்னர்தான், அதிலுள்ள சூதாட்ட விளையாட்டு பற்றி கூகுளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட பேடிஎம் ஆப்பை தனது பட்டியலிலிருந்து விலக்கியது. மினி ஆப் ஸ்டோரை நீங்கள் பேடிஎம் ஆப் மூலம் அணுகி எதனையும் இன்ஸ்டால் செய்யாமல் பயன்படுத்த முடியும். இதிலும் ஆப்களை தேவை என்றால் காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். ஆனால் டெவலப்பர்களுக்கு மட்டும் ஆப்களை வாங்குவதற்கு இலவச சலுகை கொடுக்கிறார்கள். இப்போதே 300க்கும் மேற்பட்ட ஆப்கள் பேடிஎம்மில் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ 5 ஆயிரம் டெவலப்பர்களிடம் பேசி வருகிறது பேடிஎம் நிறுவனம். செப்டம்பர் 17 அன்று பேடிஎம் ஐபிஎல் தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கியது. அதில் அதிகளவு பேடிஎம் ஆப்ப

ஸ்பேம் கால் அழைப்பில் இந்தியாவிற்கு 5 வது இடம்! - இப்பிரச்னையை எப்படி தடுப்பது?

படம்
        ஸ்பேம் கால்ஸ் அண்மையில் ட்ரூகாலர் ஆப், 2019ஆம் ஆண்டிற்கான ஸ்பேம் அழைப்புகளுக்காக தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 30 பில்லியன் அளவுக்கு ஸ்பேம் அழைப்புகளை சந்தித்து உள்ளனர். ட்ரூகாலர் ஆப், 29.7 பில்லியன் அழைப்புகளை கண்டுபிடித்து தடை செய்துள்ளது. இதில் 8.5 பில்லியன் குறுஞ்செய்திகளும் அடக்கம். ட்ரூகாலர் ஆப்பை தற்போது வரை 85 பில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்பேம் அழைப்பு தொல்லைகளில் இந்தியா ஐந்தாவது இடம் வகிக்கிறது. இந்தியாவுக்கு முந்தைய இடங்களில் பிரேசில், பெரு, இந்தோனேஷியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் உள்ளன. பெருந்தொற்று காலங்களில் குறைந்திருந்த ஸ்பேம் அழைப்புகள் மீண்டும் பேக் டூ பார்மாக களை கட்டத் தொடங்கியுள்ளன. இவற்றைச் சமாளிக்க புதிய வழிகளும் உருவாகியுள்ளன. அவற்றுள் கூகுளின் வெரிஃபைடு கால்ஸ் வசதியும் ஒன்று. பொதுவாக இன்று சூப்பர் மார்க்கெட் முதல் ஹைப்பர் மார்க்கெட் வரை எங்கு சென்றாலும் மொபைல் நம்பரை பில் போடும்போது கேட்பார்கள். அங்கு இரண்டு ஆப்சன்கள் மட்டுமே நமக்கு உண்டு. ஒன்று எண்ணைக் கொடுப்பது, அல்லது எண்ணைக் கொடுக்க மறுப்பது. எண்ணைக் கொ

உங்கள் போனுக்கான சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்ஸ்கள் இதோ......2020

படம்
          சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்ஸ் ஸ்னாப்சீட் ஆண்ட்ராய்டுக்கான சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப் இது . போட்டோ எப்படி எடுத்தாலும் இதில் உள்ள ஏராளமான டூல்களை பயன்படுத்தி ரவிவர்மாக ஓவியம் போல அழகாக மாற்றமுடியும் . புகைப்படத்தை தவறுதலாக அழித்துவிட்டாலும் கூட அதனைத் திரும்ப பெற முடியும் . கூகுளின் தயாரிப்பு என்பதால் தயங்காமல் பயன்படுத்தலாம் . ஆப்பை திறந்தவுடனே பிரிவியூ பேனல் அழகாக விரிகிறது . செய்யும் மாறுதல்களை உடனுக்குடன் பார்த்துக் கொள்ளலாம் . விஸ்கோ இந்த ஆப் தனித்திறமையான புகைப்படக்காரர்களுக்கானது . இதன் சிறப்பம்சம் , ரெசிப்பீஸ் என்ற அம்சம் . எதிர்காலத்தில் புகைப்படத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களுக்காக அதனை சேமித்து வைக்க முடியும் . இலவச ஆப்பில் குறைந்த சமாச்சாரங்களைத்தான் சோதிக்க முடியும் . புகைப்பட எடிட்டிங் ஆப் என்றாலும் , இதனை சமூக வலைத்தளம் போல பயன்படுத்தால் . இந்த ஆப்பை பயன்படுத்துபவர்களின் படங்களைப் பார்க்கலாம் . நண்பர்களுக்கு நீங்கள் செய்த படங்களை பகிரலாம் . இதில் உடனே மாஸ்டர் ஆக முடியாது . அதிக நேரம் செலவழித்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து ப