இடுகைகள்

தேர்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேற்கு வங்க தேர்தலில் மோடி தோற்றுப்போனது தேசிய அளவில் அவருக்கு பின்னடைவுதான்! - முன்னாள் பிரதமர் தேவேகௌடா

படம்
              முன்னாள் பிரதமர் தேவகௌடா இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டணி மூலம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் . இவருக்கு இப்போது 88 வயதாகிறது . மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு இப்போது உழைத்து வருகிறார் . அவரிடம் அரசியல் நிலவரங்களைப் பற்றி பேசினோம் . அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் அரசில் எப்படி மாறியிருக்கிறது என்று நினைக்கிறீர்கள் ? அன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிறைய கட்சிகள் விலகின . இன்று மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறார் . சிவசேனா கட்சி அவர்களின் கூட்டணியில் இல்லை . காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் பலவீனமாக உள்ளது . ஐக்கிய முற்போக்கு கூட்டணி 27 கூட்டணிக் கட்சிகளை ஒன்றாக இணைத்து ஆட்சி நடத்தியது . இனிமேல் அதுபோல இணைப்பு சாத்தியப்படுமா என்று தெரியவில்லை . நான் தேசிய அரசியலில் இருந்து விலகிவிட்டேன் . இப்போது கர்நாடகாவை மட்டுமே கவனித்து வருகிறேன் . நீங்கள் பிரதமராக கூட்டணிக்கட்சிகள் மூலம் பதவியேற்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டன . உங்களது பதவிக்காலத்தை எப்படி பார்க்கிறீர்கள் ? இதுபற்றி முன்னாள் கேபினட் செயலாளர் டிஎஸ்ஆர் சு

பிரியாணி மவுசு பெற்றது எப்படி?

படம்
              அனைத்து காலங்களிலும் கலக்கும் பிரியாணி ! தமிழகத்தின் தவிர்க்க முடியாத உணவு என்றால் எதனைக் குறிப்பிடுவீர்கள் ? வேறு சாய்ஸே கிடையாது பிரியாணிதான் . அனைத்து தடைகளையும் தாண்டி தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது . பிரியாணி . எண்ணெய்யில் வறுக்கப்படும் உணவு என்பதுதான் இதற்கான அர்த்தம் . இறைச்சி , முட்டை கலந்த பிரியாணி அனைத்து இடங்களிலும் கிடைப்பதோடு , ஒருவருக்கு அல்லது ஒரு கூட்டத்திற்கே என்றால் கூட தாக்குப்பிடிக்கும் திருப்தி படுத்தும் உணவாக மாறியுள்ளது . அடிப்படையில் பிரியாணி என்பது பெர்சியா நாட்டு உணவு . மொகலாயர்களின் இந்திய வருகையின்போது இங்குள்ள மக்களுக்கு இந்த உணவு அறிமுகமாகிறது . பெரு நகரங்களில் சமைக்கப்படும் பிரியாணி , இடத்தைப் பொறுத்து மாறுபடும் . மதுரையில் சீரக சம்பா அரிசியில் அதிக கறியுடன் சமைக்கப்படும் பிரியாணி சென்னையில் பாஸ்மதி அரிசியில் பெரும்பாலும் சமைக்கப்படுகிறது . எப்படி அனைத்து மக்களிடமும் பிரியாணி வெற்றி பெற்றது என்றால் , கறி , முட்டையுடன் கூடிய சத்தான உணவு . முழு சைவ சாப்பாட்டை விட குறைந்த விலையில் வாங்கி சாப்பிட முடியும் . இத்

மக்களுக்காக போராடி அன்பை வென்ற மேற்குவங்க பெண்மணி! - மம்தா பானர்ஜி

படம்
  தீதி மம்தா பானர்ஜி சுடாபா பால் பெங்குவின் வெளியீடு மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகளாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி முதல்வரான முதல் பெண் முதல்வர் மம்தா பானர்ஜி. இவரது வாழ்க்கை சிறுவயதில் எப்படி இருந்தது என்பதை எளிமையான முறையில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்த நூல் மம்தாவின் புகழ்பாடும் வகையைப் பின்பற்றவில்லை. மம்தா எழுதிய நூல், வேறு நூல்கள் பல்வேறு நூல்களைப் படித்து பல்வேறு தகவல்களை கோர்வையாக கொடுத்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் எப்படி அதிலிருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கி காங்கிரஸ், இடதுசாரி கட்சியை எதிர்க்கட்சி இருக்கைக்கு தள்ளினார் என்பதோடு, மம்தா முதல்வர் இருக்கையில் இருந்தபோது செய்த தவறுகளையும் கூறியுள்ளார்.  மம்தா பானர்ஜியை மக்களுக்கான தலைவர் என எளிதாக கூறலாம். அனைத்து போராட்டங்களிலும் மக்களின் மீது காவலர்களின் தடி படும் முன்னர் இவரது உடலில் பட்டுவிடும். அந்தளவு மக்களுக்காக ஏராளமான போராட்டங்களை செய்துள்ளார். இதன் காரணமாக தலையில் அடிபட்டு அதன் விளைவாக  மம்தாவின் குணநலன்களே மாறிவிட்டன என்றும் கூறப்படுகிறது.  மம்தா பா

சீனப்பெயர் உள்ள பழங்களின் பெயர்களைச் சொல்லுங்கள்! - விஜய் ரூபானி, குஜராத் முதல்வர்

படம்
நேர்காணல்  குஜராத் முதல்வர் விஜய் ரூபானி 2016ஆம் ஆண்டு குஜராத் முதல்வரானபோது, அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கே விஜய் ரூபானி தொடர்ச்சியாக இருக்கையில் இருப்பாரா என்று தெரிவில்லை. ஆனால் அமித் ஷாவின் அருளாசியைப் பெற்றவரை இதுவரை யாரும் அசைக்க முடியவில்லை. கோவிட்- 19 பிரச்னையை படுமோசமாக கையாண்ட முதல்வர் என்ற பெருமையைப் பெற்றுள்ளவரிடம் பேசினோம் அடுத்துவரவிருக்கும் தேர்தலில் ஜெயிக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் என இரண்டையும் சமாளிக்க திட்டங்களுடன் உள்ளோம். காங்கிரஸ் கட்சி மாநில, மாவட்ட அளவில் என எதிலும் வெல்லுவதற்கான திறனின்றி உள்ளது. குஜராத்தில் 17 ஆயிரம் கோடி ரூபாய் கடனை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். இதற்கு வட்டி கிடையாது. 1.6 லட்சம் பேருக்கு நாங்கள் வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம். மோடியில் ராமர்கோவில் கட்டும் திட்டம், இன்னும் பல்வேறு திட்டங்கள் காரணமாக மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். எங்கள் மாநிலத்தில் வேலையின்மை அளவு 3.4 சதவீதமாக உள்ளது.  குஜராத்தில் உங்கள் கட்சி 25 ஆண்டுகளாக ஆண்டு வருகிறது. எதிர்ப்புகள் வரவில்லையா? இல்லவே இல்லை. நாங்கள் மக்களுக்கான வளர

க்ரவுட் ஃபண்டிங் மூலம் தேர்தலில் ஊழல் குறையுமா?

படம்
  மக்களுக்காக மக்கள் பணம் தரலாமா? தேர்தல் என்பது பெரும் பட்ஜெட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை நடத்துவதற்கு அரசுக்கு ஆகும் செலவைவிட கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அதிக செலவு பிடிக்கிறது.  தொழிலதிபர்கள், நடிகர்கள் போட்டியிடும்போது, தொண்டர்களைத் திரட்டுவதற்கான செலவு, உணவு ஆகியவற்றை அவர்கள் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் சாதாரண நிலையில் உள்ள கம்யூனிஸ்டுகள் போன்றோர் போட்டியிடும்போது, உண்டியல் குலுக்கித்தான் நிலையை சமாளிக்க வேண்டி உள்ளது. ஆனாலும் இது போதுமானதல்ல. எனவே, தற்போது அவர் டெமாக்கிரசி என்ற இணைய வழி நன்கொடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு நீங்கள் நன்கொடைகளை வழங்கலாம்.  கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் பொருட்களை வெளியிட்டு, அப்பொருள் உங்களுக்கு பிடித்திருந்தால் நிதியுதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்களே அதே பாணிதான். தற்போது அவர் டெமாக்கிரசி நன்கொடைத் திட்டத்தில் 14 வகை நிதிகோரும் முறைகள் செயல்பாட்டில் உள்ளன. இதனை பிலால் ஸைதி தொடங்கினார். “எங்களுடைய திட்டத்தின் வெற்றியால், இன்று சர்வர் மீது சிலர் தாக்குதல் நடத்தி வலைத்தளத்தை மூட முயற்சிக்கின்றனர். டெல்லி ஆம்

சாதி அரசியல் செய்து மக்களைப் பிரிப்பது பாமகவும், பாஜகவும்தான்! - தொல்.திருமாவளவன்

படம்
                தொல் . திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சாதி அரசியல் தமிழ்நாட்டை பிரித்துவிடும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா ? ஆம் . நாங்கள் சாதி அரசியலுக்கு எதிரானவர்கள்தான் . சாதி அரசியல் செய்யும் கட்சிகளான பாமக , பாஜக ஆகியவற்றை இதற்குள் உள்ளடங்கியவையாக குறிப்பிடுகிறோம் . இக்கட்சிகள் மிக ஆபத்தானவை . பாஜக கட்சி , பிற்படுத்தப்பட்டவர்கள் ., தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்து வருகிறது . வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அவர்கள் வன்னியர் வாக்கு வங்கியை குறிவைத்து இப்படி கோரிக்கையை எழுப்புகிறார்கள் . இப்படி கோரிக்கையை வைத்து கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து தாங்கள் நினைத்த சீட்டுகளை பெற நினைக்கிறார்கள் . இந்த தந்திரமான நடவடிக்கை ஏறத்தாழ நடைமுறைக்கு ஏற்ற கோரிக்கையல்ல . இது மிரட்டல் அரசியலாக உள்ளது . அவர்கள் கோரிக்கைக்கு நாங்கள் எதிரியல்ல . ஆனால் அவர்கள் வன்னியர்களை முதன்மைப்படுத்துவதாக கூறுவது போலியானது . நீங்கள் ஈழத்தில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி கு

சமூக வலைத்தளங்களின் சக்தியும், வருமானமும்! டேட்டா கார்னர்

படம்
                சமூக வலைத்தளம் டேட்டா கார்னர். இன்று சமூக வலைத்தளம்தான் புதிய புதுமையான செய்தி ஊடகமாக உள்ளது. இதில் வெறுப்பு அரசியல் முதற்கொண்டு  நடைமுறையிலான புதிய செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் மக்களின் மனநிலை பற்றி அறிய சமூக வலைத்தளங்களை பார்த்தாலே போதும் என்று முடிவுக்கு வந்துவிடலாம். அதற்கேற்ப பல்வேறு நாடுகளில் நடைபெறும் முக்கியமாற பிரச்னைகளை சமூக வலைத்தளங்களில் அலசி பிழியப்படுகின்றன. இதைப்பற்றிய டேட்டாவை இப்போது பார்க்கலாம். உலகம் முழுவதும் செயலூக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் இயங்கும் மக்களின் எண்ணிக்கை 3.96 பில்லியன்.  உலக மக்கள்தொகையில் இது 46 சதவீதம். இந்தியாவில் 28 சதவீத மக்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அவர்களின் எண்ணிக்கை 376. 1 மில்லியன். இந்தியர்கள் வாரத்திற்கு 17 மணிநேரங்களை சமூக வலைத்தளத்தில் செலவழிக்கிறார்கள். இது அமெரிக்கா, சீனா நாடுகளை விட அதிகம். 2019ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் செலவிடப்பட்ட டிஜிட்டல் விளம்பரங்களின் எண்ணிக்கை 28%. இதன் மதிப்பு ரூ.13,683 கோடி. ஃபேஸ்புக்கின் 98 சதவீத வருமானம் விளம்பரங்கள் மூலம்தான் கிடைக்கிறது. டிவிட்டரின் வர

வேட்பாளர்களின் தகவல்களை தவறு என்றால் வழக்கு போடுங்கள்! - தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா

படம்
தேர்தல் ஆணையர், சுஷில் சந்திரா இந்தியன் எக்ஸ்பிரஸ் ரித்திகா சோப்ரா வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய விவரங்கள் தவறு என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று கூறியிருக்கிறீர்களே? நாட்டிலுள்ள ஜனநாயக முறைப்படி ஒருவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும் விவரங்கள் உண்மையாக இருக்கவேண்டும். அவர் தவறான, பொய்யான விவரங்களை அளித்துள்ளார் என்று எங்களுக்கு தெரிய வந்து விசாரணை செய்து உறுதி செய்வோம். தொடர்புடைய அரசியல் கட்சிக்கும் அறிவிப்போம். பின்னர் வழக்கு தொடர்வோம். குற்றம் சாட்டப்பட்டவர் தான் தவறு செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை அளித்தால் அதனை ஏற்போம். அப்படியெனில் நீங்கள் நேரடியாக புகார், அதில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு தொடரமாட்டீர்கள்? உண்மையில் வேட்பாளர் தனது விவரங்களை போலியாக உருவாக்கி ஆணையத்தை ஏமாற்ற முயல்வது உறுதியானால், களப்பணி அலுவலர் காவல்துறையில் புகாரை பதிவார். பின்னர், நீதிமன்றத்திற்கு இதனை எடுத்துச்செல்வோம். இதுமட்டுமன்றி, தனிநபராக கூட ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அதனை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம். ஜம்மு காஷ்மீரில் டீலிமிட

மோடியை ஏன் அனைவருக்கும் பிடிக்கிறது? - சேட்டன் பகத்

படம்
நாட்டில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்? ஆனால் மோடி எதிர்மறையாகவே அதிகம் பேசப்பட்டிருக்கிறார். இன்றுவரையிலும் கூட அப்படித்தான். ஆனால் அவரைத்தான் வலிமையான தலைவர்களாக மக்கள் கருதி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஏன் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, மன்மோகன் சிங், அத்வானி ஆகியோரை விட மோடி பெரிய தலைவராக இருக்கிறார்? தன்னை அவர் அப்படி உருவாக்கிக் கொண்டது முக்கியமானது. மன்மோகன் சிங்கை குறைத்து மதிப்பிட முடியாது. தாராளவாத சீர்திருத்தங்களை தொண்ணூறுகளில் அமல்படுத்திய நிதி அமைச்சர், முன்னாள் பிரதமராகவும் பணியாற்றியிருக்கிறார். தான் செய்யும் வேலைகளை செய்யப்போவதை எதற்கு என்று மக்கள் முன் சொற்பொழிவாற்றியது நினைவுக்கு வருகிறதா? அப்படி ஒரு காட்சி மன்மோகனுக்கே இருக்காது. ஏனெனில் அவர் இயல்பு அதல்ல. மோடி முந்தைய பிரதமரிடம் இல்லாத அம்சங்களை கொண்டிருப்பது இங்குதான். மோடி அவரது துறைசார் அமைச்சர்கள் பேசுவதற்கு முன்னர் இவரே அறிவிப்புகளை கூறிவிடுவார். எளிமையாக பேசுவார் என்பது முக்கியமானது. குறிப்பாக, குஜராத் முதல்வராக தன்னை நிரூபித்திருக்கிறார். அதேசமயம் இந்து மக்களின்  வாக்குகளைப் பெறுவதற்கான

ஒரே நாடு ஒரே தேர்தல் பின்னணி என்ன?

படம்
2017 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் பிரனாப் முகர்ஜி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைப் பற்றி பேசினார். அன்று சொன்னதை இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்ததும் மோடி அமலுக்கு கொண்டுவர முயற்சிகளைத் தொடங்கிவிட்டார். இதன் பாசிட்டிவ் பக்கம் காசுதான். ஒரே நேரத்தில் தேர்தல் என்பதால் நேரமும் பணமும் குறைய வாய்ப்புள்ளது. அதேசமயம், மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்கள் கொள்கைகள் குறித்து உரையாடவும் நிறைய நேரம் கிடைக்கும். இந்தியாவின் முதல் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. 1967 ஆம் ஆண்டு வரை தொடர்ந்த நடைமுறை, பின்னர் கைவிடப்பட்டது. காரணம், மக்களவை கவிழ்ந்ததால்தான். இந்திய அரசமைப்புச்சட்டம் 83(2), மக்களவையை தேர்தலுக்காக முன்பே கலைப்பதற்கான குறிப்புகளைக் கொண்டுள்ளது. இதேபோல சட்டம் 172 மாநில அரசுகளுக்கானது.  இதிலுள்ள சட்டச்சிக்கல், தேர்தலுக்காக மத்திய மாநில அரசுகள் தம் ஆட்சிக்காலம் முடிவதற்குள் சட்டசபையை, மக்கள் அவையை கலைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இது, அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது. ஏறத்தாழ ஒரே நாடு ஒரே

தேர்தலின் கதை!

படம்
Wishesh தேர்தலின் கதை! 1951 - 52 காங்கிரசின் காலம். இடதுசாரி, சோசலிச கட்சிகள் இணைந்து  போட்டியிட்டன.  சோசலிச கட்சியை முன்னிலைப்படுத்திய தேவ் ஆச்சார்ய நரேந்திர தேவ், பனிரெண்டு சீட்டுகளை வென்றார். கிசான் மஸ்தூர் பிரஜா பார்ட்டியின் கிருபாளினி 9 சீட்டுகளை வென்றார். தேர்தலில் ஜனதா கட்சியின் சியாம பிரசாத் முகர்ஜி 3 சீட்டுகளை வென்றார். 1957 இம்முறையும் கைக்கட்சியே வென்றது. பிளவுபடாத இடதுசாரி கட்சி 33 சீட்டுகளை வென்றது. ஜனதா கட்சி முன்னர் பெற்றதை விட இருமடங்கு வாக்குகளைப் பெற்றாலும் மைனர் கட்சியாகவே இருந்தது. அம்பேத்கரின் அனைத்திந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு(SCF) தேர்தலில் ஆறு சீட்டுகளை வென்றது குறிப்பிடத்தக்க நிகழ்வு. 1962   இந்தியாவின் மூன்றாவது தேர்தலில் கட்சிகளிடையே பிளவுகள் தோன்றின. ராம் மனோகர் லோகியா, பிஎஸ்பி கட்சியை விட்டு விலகி சோசலிச கட்சி சார்பில் நின்றார். சுதந்திர வணிகம் உள்ளிட்ட கோரிக்கைகளோடு காங்கிரஸ் கட்சியினர் சிலர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியை ஆதரித்தனர். 1967 நேரு இறந்தபின் நடந்த தேர்தல். காங்கிரஸ் இக்காலத்தில் செல்வாக்கில் பெரும் சரிவைச் ச