இடுகைகள்

நீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்காலத்தில் ஏற்படும் நீர்தட்டுப்பாட்டை முன்னமே சுட்டிக்காட்டும் நூல்! - நூல் அறிமுகம் நவ.2021

படம்
  நூல் அறிமுகம் தி புக் ஆஃப் பாஸிங் ஷாடோஸ் சிவி பாலகிருஷ்ணன், டிஆர்எஸ் டிஎம் யேசுதாசன் நியோகி புக்ஸ் 350 மலபார் கிராமம் ஒன்றில் வசிக்கும் யோகண்ணன் என்பவர், மெல்ல வீழ்ச்சிக்கு உள்ளாவதை நூல் விவரிக்கிறது. தனக்கு தெரிந்த பழக்கமான அத்தனை விஷயங்களையும் ஒரு மனிதன் இழக்கும்போது ஏற்படும் வலியை வாசகர்கள் உணரலாம்.  எ பேர்ட் ஃபிரம் அஃபார் அன்சுல் சதுர்வேதி பான் மெக்மில்லன் 399 1942ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனி தலைவர் ஹிட்லரை சந்தித்து பிரிட்டிஷாரை விரட்ட ஆதரவு கேட்கிறார். தனி ராணுவத்தை அமைத்து போர் செய்ய திட்டமிடுகிறார் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நூல் பேசுகிறது.  பாய்ஸன் ஃபார் பிரேக்ஃபாஸ்ட் லெமோனி ஸ்னிக்கெட்  ஒன்வேர்ல்ட் 499 எழுத்தாளரே பேசுவது போல அமைந்த நூல். அவரின் கதவருகே உங்கள் உணவில் விஷம் கலக்கப்பட்டுவிட்டது என குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னாலுள்ள மர்மங்களை கண்டுபிடித்தால்தான் அவர் உயிர் பிழைக்கமுடியும். என்ன செய்கிறார் என்பதுதான் கதை.  தி எக்ஸைல் ஆப் முகுந்தா ஆர்பிட் பக்ஷி ஆலெப் புக் கம்பெனி 395 மகாவிஷ்ணு தொடர் நூல்களின் தொடர்ச்சி இது. கிருஷணனின் மகன் முகுந்தன். அவர் இப்போத

இலைகளிலுள்ள பச்சை நிறம் என்பது இயல்பானதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? இலைகளின் பச்சை நிறம் என்பது இயல்பானதா? நிலப்பரப்பு சார்ந்து நமது நிறத்திற்கும், மரபணுக்களுக்கும் உள்ள தொடர்பு போலத்தான் இலைகளின் நிறமும் அமைகிறது. அனைத்து மரங்களின் இலைகளிலும் குளோரோபில் உள்ளது. இந்த நிறமிதான்  ஒளியை இலைகளுக்கு ஈர்த்து தருகிறது. கூடவே உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் மூலம் ஒளியாற்றலை தனக்கான போஷாக்கான சர்க்கரையாக மாற்றுகிறது. இலைகளில் உள்ள வேறு நிறமிகள் குளோரோபில் அளவுக்கு திறன் கொண்டவையாக இல்லை. அவை ஆற்றலை குளோரோபில்லுக்குத்தான் அனுப்புகின்றன. மஞ்சள், ஆரஞ்சு என்றுள்ள இந்த நிறங்களை கரோட்டினாய்டு என்று அழைக்கின்றனர். இவை பீட்டா கரோட்டின் வகையைச் சேரந்தவை. பீட்டா  கரோட்டின் என்பதுதான் கேரட்டிற்கு ஆரஞ்சு நிறத்தைத் தருகிறது.  பனிக்காலத்தில் இலைகள் முற்றி வயதானவையாக மாறும். இலைகளில் இப்போது குளோரோபில் இருக்காது. பிற நிறங்களும் காணாமல் போய் மெல்ல பழுப்பு நிறத்திற்கு மாறி உடையும் தன்மையை அடையும். இலைகளில் உள்ள பச்சை நிறத்தை எடுக்கும் முறையை குரோமோட்டோகிராபி என்று அழைக்கின்றனர்.  நனைந்த காகிதத்தில் நீரில் கரையும் இங்கினால் எழுதியிருந்தால் அந்த எழுத்துகள் எப

நீரின்றி தவிக்கப்போகும் கோடிக்கணக்கான மக்கள்!- இமாலயத்தில் உருகும் பனிப்பாறைகள்

படம்
  சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா ஆகிய ஆறுகள் சூழல் மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இவற்றிலிருந்து கிடைக்கும் நீரின் அளவு குறைந்து வருகிறது. ஆறுகள் உருவாகி வரும் இமயமலையில் இதற்கான பாதிப்புகள் தொடங்குவதால் விரைவில் டெல்லி, பெங்களூரு, இந்தூர், ரூர்க்கி, நேபாளம், அகமதாபாத் ஆகிய நகரங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.  ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப்பின் சில பகுதிகள், ஹரியானா ஆகியவை சிந்து நதியினை நம்பியுள்ளன. டெல்லி, உத்தர்காண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தானின் பெரும்பகுதி கங்கை நதியை நம்பியே நிலப்பரப்புகள் உள்ளன.  அசாம், சிக்கிம், நாகலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் பிரம்ம புத்திரா ஆற்றை நம்பியே உள்ளன.  உலக மக்கள் தொகையில் 13 சதவீதம் பேர் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லி, டாகா, லாகூர், கராச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களையே அதிகம் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். உலகளவில் பார்த்தால் எட்டில் ஒருவர் என்று கூறலாம்.  இமாலயத்திலுள்ள காரகோரம் பகுதியில் உருவான பனிப்பாறைகள் மெல்ல வெப்பத்தால் உருகத் தொடங்கியுள்ளன. இதனால

நம் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் பழக்கங்கள் என்னென்ன?

படம்
              சிறிய பழக்கம் பெரிய மாற்றங்கள் தாகசாந்தி செய்யுங்கள் ! அலுவலகங்களில் வேலை செய்யும்போது ஏசி ஓடிக்கொண்டே இருப்பதால் பெரும்பாலானோர்க்கு நீர் தேவை இருக்கிறதா இல்லையா என்றே தெரியாது . தண்ணீரை அதிகம் குடிக்காவிட்டால் உடலில் இயக்கம் குளறுபடியாகிவிடும் . எலும்புகளின் இணைப்பிற்கு உயவு எண்ணெய் போல நீர் பயன்படுகிறது . உடலின் வெப்பநிலையை கட்டுப்பாடு செய்வதற்கும் , செரிமானத்திற்கு்ம் உதவுகிறது . அடிக்கடி கடி நீர் குடிப்பதை மறந்தால் உடல் , மனம் என இணைத்தும் ஒத்திசைவாக இயங்காது . நீண்டகால நோக்கிலும் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் . இனிமேல் அலுவலகத்தில் பரபரப்பாக இயங்கினால் கூட அதற்கேற்ப போனில் அலாரம் வைத்துக்கூட நீரை நேரத்திற்கு குடிக்கலாம் . இதில் ஒன்றும் வெட்கப்படவேண்டியதில்லை . நீரை அதிகமாக குடிக்கமுடியவில்லை என்றால் பழரசம் அல்லது மூலிகை தேநீர் போன்றவற்றை அருந்தலாம் . நேரமே எழுங்கள் இது கடைபிடிப்பதற்கு கடினமான பழக்கம் . இரவில் தாமதமாக படுப்பவர்கள் எப்படி சூரிய உதயம் பார்க்கமுடியும் ? தினசரி நடவடிக்கைகளை சரியானபடி அமைத்துக்கொண்டவர்களுக்கு பெரிய பிரச்னை

உயிரினங்கள் வாழ முக்கியமான சூழல்கள் என்ன?

படம்
                    உயிரினங்கள் வாழ முக்கியமான சூழல்கள் என்ன ? உலகில் 8.7 மில்லியன் உயிரினங்கள் பல்வேறு விதமான சூழல்களில் வாழ்ந்து வருகின்றன . உலகில் உயிரினங்கள் தாக்குப்பிடித்து வாழ்வதற்கான முக்கியமான காரணங்கள் என்னவென்று தெரியுமா ? உணவு , நீர் , இருப்பிடம் , வெப்பநிலை , வெளிச்சம் . வெப்பநிலை என்பது அடிக்கடி மாறினால் உயிரினங்கள் வாழ்வது சிக்கலாகிவிடும் . ஆனால் இதெல்லாம் தாண்டி இருட் படர்ந்த குகைகளில் உயிரினங்கள் வாழ்கின்றன . காற்று சுற்றுப்புறத்திலுள்ள காற்று முக்கியமானது . இதனை உயிரினங்கள் சுவாசித்துத்தான் உணவு ஆற்றலாக மாற்றப்படுகிறது . இதனை ரெஸ்பிரேஷன் என்று குறிப்பிடுகின்றனர் . வெப்பம் இதனை ஒளி , வெப்பம் என இருவகையில் கூறலாம் . குறிப்பிட்ட வெப்பநிலை அப்படியே தொடரவேண்டும் . அப்படி இல்லாதபோது உயிரினங்கள் வாழ்க்கை நிலையாக தொடர்வது கடினம் . இருப்பிடம் இருப்பிடம் என்பது உயிரினங்கள் ஓய்வெடுப்பதற்கும் , பிற எதிரி விலங்குகளிடமிருந்து ஓய்வெடுக்கவும்தான் . இப்படி இடம் இல்லாதபோது , உயிரினங்கள் எளிதாக வேட்டையாடப்பட வாய்ப்புள்ளது . உணவு

நம்ப முடியாத ஹைட்ரஜன் சக்தி! - இயற்பியல் பிட்ஸ்

படம்
  இயற்பியல்  பிட்ஸ் இயற்பியலில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று கண்டுபிடிப்புகள் நிகழ நிகழ அதுகுறித்த ஆச்சரியங்களும் வெளிப்படுகின்றன. அதில் சிலவற்றைப் பார்ப்போம்.  நேர்ப்பாதையில் ஒளிக்கதிர்கள்! டார்ச் லைட்டிலிருந்து வரும் ஒளி நேராக பாய்ந்து பொருள் மீது படிய, நமக்கு அப்பொருள் கண்ணுக்கு தெரிகிறது. இதன் பொருள், ஒளிக்கற்றைகள் நேராகத்தான் பயணிக்கும் என்பதல்ல. அவை பல்வேறு வடிவங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். 2010 ஆம் ஆண்டு கணினி முறையில் உருவான ஹாலோகிராம், பல்வேறு வடிவங்களில் வளைந்து நெளிந்து உருவங்களைக் காட்டியது.  நம்ப முடியாத ஹைட்ரஜன் சக்தி! ஹைட்ரஜன் மூலம் வாகனங்களை இயக்கமுடியுமா என ஆராய்ச்சி செய்து வருகிறது அறிவியல் உலகம். இதற்கு முக்கியக் காரணம், சூரியன் ஹைட்ரஜன் ஹீலியத்தை எரித்துதள்ளும் வேகம்தான். ஹைட்ரஜனை 620 மெட்ரிக் டன்களும், ஹீலியத்தை 616 மெட்ரிக் டன்களும் நொடிக்கு எரித்துத்தான் சூரியன் பளீரென ஒளிருகிறது. மனிதர்களின் கதிர்வீச்சு! நாம் பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமல்ல நமது உடலே கதிர்வீச்சுகளை வெளியிடும் தன்மை கொண்டதுதான். மனிதர்களின் உடல்  ஆயிரம் வாட் அளவுக்கு வெப்பத்தை வெளியி

நிலவில் சுரங்கம்!

படம்
  நிலவில் சுரங்கம் நிலவில் கால்வைத்து சாதனை செய்து இன்று சூரியன் வரை ஆராய சென்றுவிட்டனர். இப்போது மீண்டும் நிலவு மீதான ஆராய்ச்சி மோகம் ஆராய்ச்சியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. நிலவில் நமக்குத் தேவையான என்ன விஷயங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என பார்ப்போம்.  சிலிகான் நாம் பயன்படுத்தும் போன் திரை முதற்கொண்டு பயன்படும் முக்கியமான வேதிப்பொருள். நிலவில் கிடைக்கும் தூசி துப்புகளை தட்டியெடுத்து சுத்திகரித்தால் சிலிகான் பிரச்னை தீர்ந்துவிடும். இதனைப் பயன்படுத்தி சோலார் பேனல்களை தயாரித்து ஆற்றலைப் பெருக்கலாம்.  அரிய உலோகங்கள் பூமியில் நாம் சுரங்கங்கள் மூலம் சிரமப்பட்டு பெறுவது 17 அரிய உலோகங்கள். இவைதான் போன் முதல் பேட்டரி வரை நாம் பயன்படுத்த உதவுகின்றன. பாஸ்பரஸ் முதல் பொட்டாசியம் வரை நிலவில் கிடைப்பது உறுதியானால், அங்கேயே சென்று தங்குவது சுலபம். பிளாட்டினம் வகையறா உலோகங்கள் கிடைத்தால் ஃபேஸ்மேக்கர் கருவிகளை செய்வது எளிதாகிவிடும்.  நீர் பூமியில் குறைந்து வரும் நீர், நிலவின் துருவப்பகுதிகளில் உள்ளது. 2.9 பில்லியன் மெட்ரிக் டன்கள் நீர், கிடைத்தால் குடிநீராகவும், விவசாயம் செய்யவும் பயன்படுத்தலாம். இதிலிர

கட்டுமானக்கலையில் சாதனை படைத்த ரோமானியர்கள்!

படம்
இன்று அனைத்து அரசியல் , கலை தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கும் ரோம்தான் மையமாக உள்ளது . அங்கு கட்டப்பட்ட கட்டுமானங்கள் , போர் , அரசியல் சார்ந்த நூல்கள் , அறிவியல் என முன்னரே நிறைய சாதித்த நாடு அது . கொலோசியம் கட்டுமானம் பற்றி அறிவோம் . சாம்பல் கலந்த சிமெண்ட் கொலோசியத்தை கட்ட பயன்பட்டது . கொலோசியம் என்ற வார்த்தை கொலோசஸ் என்ற வார்த்தையிலிருந்து உருவானது . இது நீரோ மன்னர் கட்டிய ஏராளமான சிலைகள் கொண்ட நகரத்தை குறிக்க பயன்பட்டது . 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அமர்ந்து பார்க்கமுடியும் அரங்கம்தான் கொலோசியம் . சூரிய வெப்பம் மக்களைத் தாக்காமல் இருக்க வெலேரியம் எனும் அமைப்பு பயன்பட்டது . இங்கு கொலைவெறியாட்டத்தை பார்க்க வரு்ம் பார்வையாளர்களுக்கு எண்களை அச்சிட்ட டோக்கன்களை டிக்கெட்டாக கொடுத்தார்கள் . அவர்களை ஒழுங்குமுறைப்படுத்த மரத்தடுப்புகளும் இருந்தன . மைதானம் அதற்கு கீழே கைதிகளை அடைத்து வைப்பதற்கான இடம் , அவர்களை மைதானத்தில் வெளியே விடுவதற்கான பற்பல வாயில்கள் என கட்டுமானக் கலைஞர்ளள் இதனை உருவாக்கியிருந்தன . போர்   நிலமோ நீரோ அனைத்திலும் ரோமானியர்க

மரபணு மாற்ற உயிர்களை பிறகோள்களில் உருவாக்க முடியுமா?

படம்
பிபிசி மிஸ்டர் ரோனி பூமியில் உருவாக்கிய மரபணு மாற்ற உயிர்களை நாம் பிறகோள்களில் காப்பாற்ற முடியுமா? இம்முறையில் யோசிப்பது நல்ல விஷயம்தான். ஆனால் டிஎன்ஏ முறையில் நாம் புதிய உயிரிகளை உருவாக்கினால் அவை வாழ்வதற்கு நீர் தேவை. வெள்ளியில்  நீரும் கிடையாது பனிக்கட்டியும் கிடையாது. வியாழனில் உள்ள யூரோபா நிலவில் நீர் உள்ளது. இதில் நாம் உயிர்களை உருவாக்க வாய்ப்புள்ளது. செவ்வாய் கோளில் பாக்டீரியா தாக்குப்பிடித்துவிட்டது. சாக்கடல், அன்டார்க் பகுதியிலும் கூட நுண்ணுயிரிகள் உள்ளன. நீர் இருந்தால் அக்கோளுக்கு ஏற்றபடி உயிர்களை நம்மால் உருவாக்க முடியும். நன்றி - பிபிசி

தெரிஞ்சுக்கோ! கப்பல் உடைப்பு - டேட்டா

படம்
தெரிஞ்சுக்கோ! உலகில் தொண்ணூறு சதவீத வர்த்தகம் கப்பல் வழியாக நீர்நிலைகளில் நடைபெறுகிறது. பயன்படுத்திய கப்பல்கள்தெற்காசியப் பகுதிகளில் உடைத்து நொறுக்கப்படுகின்றன. இத்தொழிற்சாலைகள் இங்கு அதிகமாக உள்ளன. ஒரு கப்பலை முழுமையாக உடைத்து எடுக்க மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகின்றன. கப்பலிலிருந்து பெறும் இரும்பில் 90 சதவீதம் கட்டுமானத்துறையில் பயன்படுகிறது. 2016 ஆம் ஆண்டு கப்பலை உடைக்கும் தொழிலாளர் ஒருவருக்கு தரப்பட்ட கூலி ஆறு டாலர். உலகிலுள்ள கப்பல்களில் 33 சதவீத கப்பல்கள் இந்தியாவிலுள்ள ஆலங் பகுதியில் உடைக்கப்படுகின்றன. இப்பகுதியில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரம். வங்கதேசத்தில் கப்பல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் அளவு 25 %. ஒரு கப்பலை உடைத்தால் அதிலிருந்து கழிவாக பெறும் ஆஸ்பெஸ்டாசின் அளவு 6,800 கி.கி. வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இறந்த கப்பல் உடைக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1200. 1504 அடி நீளம் கொண்ட கப்பல், இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு உடைக்கப்பட்டது. நன்றி - க்வார்ட்ஸ் 

குடிநீரில் மருந்து கலக்கிறார்களா?

படம்
குடிநீரில் மருந்து கலக்கிறார்களா? ஆம். அமெரிக்காவில் நடந்த புவியியல் தொடர்பான ஆய்வில் அங்கு வரும் குழாய் நீரில் 80 சதவீதம் மருந்துகளின் எச்சங்கள் இருப்பது தெரிய வந்தது. இதில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, மனச்சோர்வைக் குறைக்கும் மருந்துகள் உள்ளடங்கும். இது அமெரிக்காவில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் உண்டு. மருத்துவமனைகளிலிருந்து வரும் கழிவுகள், அல்லது கழிவறைகளில் தூக்கி எறியப்படும் மாத்திரைகள் நீர் போக்குவரத்தில் கலப்பதால் ஏற்படும் பாதிப்பு இது. முதலில் இப்படி கலந்து வருவதை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. குறைவாகத்தானே இருக்கிறது என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் ஆய்வுகள் சொன்ன உண்மை, இவை அதிக அடர்த்தியில் நீரில் கலந்து வருகிறது என்பதே. மனச்சோர்வை போக்கும் மருந்துகள் நம் மூளையில்  இயக்கத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்தில் ந திப்படுகை அருகே வாழும் மக்களை சோதித்தபோது, அவர்களின் உடலில் கருத்தடை மாத்திரைகளின் அடர்த்தி அதிகமாக இருந்தது. இது அவர்களின் ஹார்மோன் சுரப்பை மட்டப்படுத்துகிறது. நன்றி: பிபிசி

மழையில் நனையும்போது ஒருவரின் முடி அடர் கருப்பாக தெரிவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நீரில் நனைந்தவுடன் முடி ஏன் கூடுதல் கறுப்பாக தெரிகிறது? நீரில் நனைந்த பெண்ணைப் பார்த்துவிட்டு ஏக காலமாக ரசித்துவிட்டு அறிவியல் கேள்வியை கேட்கிறீர்கள். ரைட் அறிவியல் அதிலும் உண்டுதான். இதில் நீர் செய்யும் மாயாஜாலம் ஏதுமில்லை. நீர் வெளிப்படையாக வறண்ட கூந்தலை ஈரமாக்கி ஒன்றுசேர்க்கிறது. அதில் ஒளி படும்போது நமக்கு முடியின் நிறம் கூடுதல் கருப்பாக இருப்பது போல தோன்றுகிறது. கருப்பு நிறம் என்றால் அது எதையும் பிரதிபலிப்பதில்லை என்பதை அறிவீர்கள்தானே? நன்றி: பிபிசி

சிலிகாவை சாப்பிட்டால் என்னாகும்?

படம்
சிலிகா பாக்கெட்டுகள் (க்யூரியாசிட்டி) மாத்திரைகள் தன்மை மாறிவிடாமல் இருக்க அதில் சில வேதிப்பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளை போட்டு இருப்பார்கள்.அதுதான் சிலிகா. இந்த சிலிகா பாக்கெட்டுகளை பீட்சாவுக்கு கொடுக்கும் மிளகு  போல நினைத்து தின்றால் என்னாகும்? தொண்டை வறண்டுவிடும். கண்களில் ஈரப்பதம் குறையும். வயிற்றில் கல்யாண பாத்திர வாடகைக் கடை போல சத்தங்கள் எழும். தன் எடையை விட நாற்பது மடங்கு அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது சிலிகா. பாக்கெட்டில் இருப்பது சிலிகா டை ஆக்சைடு. அதில் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. மாத்திரைகளின் ஈரத்தை குறைத்து அதன் தன்மை மாறாமல் வைத்திருக்கும் சிலிகாவை திரும்ப பயன்படுத்த 300 டிகிரி பாரன்ஹீட்டுக்கு சூடுபடுத்தவேண்டும்.  நம் உடலிலுள்ள அத்தனை நீரையும் சிலிகா உறிஞ்ச 58 ஆயிரம் சிலிகா பாக்கெட்டுகளை பயன்படுத்த வேண்டும். நன்றி: க்யூரியாசிட்டி. 

யானையின் உடம்பில் சுருக்கங்கள் ஏன்?

படம்
ஏன்? எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி யானையின் உடம்பில் சுருக்கங்கள் ஏன்? ஆப்பிரிக்க யானை ஒன்றை ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். மைக்ரோஸ்கோப்பில் பார்த்தபோது, அதன் உடலில் சிறுசிறு பள்ளங்களாக தோல் அமைந்துள்ளதை வியந்தனர். இத்தன்மை உடலில் இருந்து நீர் ஆவியாவதைத் தடுக்கிறது. ஏறத்தாழ பிற யானைகளோடு ஒப்பிட்டால் பத்து சதவீதம் நீர் குறைவாக ஆவியாவதால் உடலின் வெப்பநிலை பிரச்னை இன்றி இருக்கும்.  சேறு, மழை என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் யானை தன் கெட்டியான தோலின் மூலம் நீரைச்சேமித்து உடலின் வெப்பநிலையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.                  ஆசிய யானைகள் சற்று மென்மையான தோலினைக் கொண்டுள்ளதால் அவை ஈரப்பதமான சூழலிலேயே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்(படம்,தகவல்)- சார்லட் கார்னி