இடுகைகள்

லாபம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை வைரங்களை நோக்கி நகரும் வைர விற்பனை நிறுவனங்கள்! - இயற்கை வைரத்தை அகழ்ந்தெடுக்க கூடுகிறது பொருட்செலவு

படம்
            செயற்கை வைரங்களை நோக்கி நகரும் உலகம் ! செய்தி ஆஸ்திரேலியாவின் கிழக்கு கிம்பர்லி பகுதியில் செயல்பட்டு வந்த பழமையான ஆர்கைல் வைரச்சுரங்கம் , லாபகரமாக இயங்கவில்லை என்பதால் மூடப்பட்டிருக்கிறது . பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் வைரச்சுரங்கங்கள் காமதேனு போல வைரங்களை கொடுத்துக்கொண்டே இருக்காது . ஆர்கைல் வைரச்சுரங்கம் லாபகரமாக இயங்கவில்லை என்று அதன் உரிமையாளர் ரியோ டின்டோ கூறி , அதனை மூடியுள்ளார் . 1983 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கிய இச்சுரங்கத்தில் 8 கோடியே 65 லட்சம் கேரட் வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன . உலகில் விற்பனையாகும் 90 சதவீத பிங்க் வைரங்கள் ஆர்கைல் சுரங்கத்திலிருந்துதான் பெறப்பட்டன . தொண்ணூறுகளில் அதிக விலைக்கு விற்காத தரம் குறைந்த பழுப்பு மற்றும் பல்வேறு நிறமுடைய வைரக்கற்களை வாங்கி , பட்டை தீட்டி விற்பனை செய்தது இந்தியாவிலுள்ள குஜராத் மாநில வியாபாரிகள்தான் . ஆர்கைல் சுரங்கம் மூடப்படுவதால் இனி இருப்பிலுள்ள வைரங்களை நகை வணிகர்கள் விற்கலாம் . அரியவை என்பதால் அதன் விலை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது . இனி விற்பனைக்கு வரும் வைரங்கள் ஆய்வகத

செய்தி இலவசமல்ல!

படம்
  அண்மையில் ஆஸ்திரேலியா, உள்நாட்டிலுள்ள செய்தி நிறுவனங்களைக் காப்பாற்ற புதிய சட்டங்களை உருவாக்கியது. இது அங்கு செய்திகளை மக்களுக்கு இலவசமாக கொடுத்து கோடிகளில் வியாபாரம் செய்த கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது. உடனே அவர்கள் நாங்கள் எங்கள் சேவையை வேறு நாடுகளுக்கு மாற்றிக்கொள்கிறோம் என மிரட்டல் விடுத்தனர். ஆனால் அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.  இதனால் கூகுளும், ஃபேஸ்புக்கும் ஆஸ்திரேலியாவில் தங்களது சேவைகளை முதன்முறையாக பணம் கொடுத்து பெறவிருக்கின்றனர். கூகுள், பேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பெற்று அதற்கேற்ப தகவல்களை அவருக்கு அனுப்பி வியாபாரம் செய்துவருகின்றனர். விளம்பர வருவாய் கோடிக்கணக்கில் இருந்தாலும் அதனை உருவாக்குபவர்களுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் புகார் கொடுத்ததால் ஆஸ்திரேலிய அரசு சட்டங்களை மாற்றி அவர்களை காப்பாற்ற முனைந்துள்ளது.  மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசின் முடிவை ஏற்றுள்ளது. இந்த நிறுவனம் பிங் எனும் சர்ச் எஞ்சினையும், லிங்க்டு இன் தளத்தையும் நடத்தி வருகிறது. பிற நிறுவனங்கள் இதனை வரவேற்கவில்

நிறுவனத்தை குடும்பத்தினர் நடத்துவதை விட தகுதியுள்ளவர்கள் நடத்தவேண்டும்! - சுனில் பார்தி மிட்டல், ஏர்டெல்

படம்
                சுனில்பார்தி மிட்டல் ! ஏர்டெல் நீங்கள் டெலிகாம் சார்ந்து மட்டும்தான் செயல்படுகிறார்கள் . பிற நிறுவனங்கள் போல பல்வேறு சேவைகளை வழங்கும் எண்ணம் இல்லையா ? பிற நிறுவனங்கள் வழங்காத பல்வேறு சேவைகளை ஏர்டெல் வழங்குகிறது . நாங்கள் அமேசான் , நெட்பிளிக்ஸ் , ஜீ 5 நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு சேவைகளை வழங்குகிறோம் . எங்களிடம் ஒரிஜினல் நிகழ்ச்சிகள் கிடையாது . பெரிய ஸ்டூடியோ கிடையாது என்பது உண்மைதான் . ஒருமுறை ஏடிஅண்ட்டி டைம் வார்னர் நிறுவனங்கள் இணைந்தபோது , அதன் இயக்குநரிடம் பேசினேன் . எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் வரப்போகின்றன . அப்போது நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு நிறுவனம் தேவை என்று கூறினார் . இப்படி நிறுவனங்களை இணைத்துக்கொண்டு செயல்படுவது பல்வேறு சவால்களைக் கொண்டுள்ளது . ஆனால் அந்நிறுவனம் இன்றுவரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது . ரிலையன்ஸ் நிறுவனம் 2 ஜி தேவையில்லை என்று கூறிவருகிறதே ? நாங்கள் இப்போது 3 ஜி விவகாரத்தில் உள்ளோம் . மெல்ல மக்களும் 4 ஜி சிம் கார்டுகளை வாங்கிவருகிறார்கள் . 2 ஜியிலிருந்து மக்கள் இப்போதுதான் 4 ஜிக்கு மாறுகிறார்கள்

வரி குறைவாக லாபம் நிறைவாக சம்பாதிக்கும் டெக் நிறுவனங்கள்

படம்
கூகுள், ஆப்பிள், பேஸ்புக், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் வரி குறைவாக வசூலிக்கும் நாடுகளில்தான் தங்களது அலுவலகங்களை அமைக்கின்றனர். பில்லியன்களில் லாபம் சம்பாதித்தாலும் மில்லியன்களிலேயே வரி கட்டி வருகின்றனர். இதனைக் கவனித்த புதிய அரசுகள் டெக் நிறுவனங்களுக்கு வருமானத்திற்கு ஏற்ப வரி கட்டுமாறு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசித்து வருகின்றனர். இங்கிலாந்தில்  2018ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம், 1.6 பில்லியன் டாலர்கள் லாபம் சம்பாதித்து, வரியாக 28 மில்லியன் டாலர்களைக் கட்டியுள்ளது. அதாவது அதன் மொத்த வருமானத்தில் 1.75 சதவீதம். இதே காலகட்டத்தில் கூகுள் நிறுவனம்  1.4 பில்லியன் டாலர்களை சம்பாதித்து 67 மில்லியன் டாலர்களை வரியாக கட்டியுள்ளது. உலகம் முழுக்க இருக்கும்  பன்னாட்டு வரி சதவீத அளவு என்பது பல்வேறு நாடுகளுக்கு வருவாயை ஈட்டித் தருவதில்லை என்கிறார் நிறுவனங்கள் சார்ந்த வல்லுநரான நீல் ரோஸ். மேற்சொன்ன டெக் நிறுவனங்கள் இங்கிலாந்தில் மட்டுமல்ல, இவை கிளை விரித்த அனைத்து நாடுகளிலும்  லாபம் அதிகமாகும், வரி குறைவாகவும் அமையும்படி லாபி செய்து வரிகளை திருத்தி சம்பாதித்து வருகின்றன. இதில்

ஸ்மார்ட்மீட்டர் மின்சார சேவையை ஒழுங்குப்படுத்தும்!

படம்
2017ஆம்ஆண்டு இந்திய அரசு, ஸ்மார்ட் மீட்டரை வீடுகளில் பொருத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியது. இதன்விளைவாக, எல்இடி விளக்குகளின் விலையை 80 சதவீதம் அளவுக்கு குறைத்தது. சாதாரண மின் மீட்டர்களை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.அது மின்கட்டணத்தை அளவிடுவதற்காக இருக்கும். ஸ்மார்ட் மீட்டர் உங்களது மின்பயன்பாடுகளை அளவிட்டு அதற்கான தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்வோம். எதற்கு இப்படி சேகரிக்கவேண்டும் என கேள்விகள் எழலாம். மின்சார சேவைகளை வழங்கும் பல்வேறு அரசு நிறுவனங்கள் மின்சார வீணடிப்பால் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இதனை தீர்க்கவே ஸ்மார்ட் மீட்டர் எனும் முயற்சி. இதற்காக தொடங்கப்பட்டுள்ள நிறுவனத்தின் இயக்குநர், சௌரப் குமார் இதுபற்றி பேசினார் இத்திட்டம் பற்றி விளக்குங்கள். நாங்கள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை இந்தியாவிலுள்ள டில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய இடங்களில் நிறுவியுள்ளோம்.  நாங்கள் டில்லியில் மட்டும் பத்து லட்சம் மீட்டர்களை நிறுவியுள்ளோம். பீகாரில் இப்போதுதான் பணிகளைத் தொடங்கியுள்ளோம். உத்தரப் பிரதேசத்தில் ஐந்து நிறுவனங்கள் மூலம் மீட்டர்களை நிறுவி வருகிறோம். ஸ்மார்ட் மீட்

மயிலாப்பூர் டைம்ஸ் - பிச்சைக்கு இரங்கேல்!

படம்
giphy.com பிச்சை கேட்பதை வள்ளுவர் மட்டுமல்ல, சங்க காலம் முதற்கொண்டு தவறு என்றுதான் கூறி வந்திருக்கிறார்கள். பிச்சையை எப்படி கூறுகிறார்கள் என்றால் தங்கம், வெள்ளி நாணயம் மட்டுமல்ல, ஒருவர் வளர்க்கும் கால்நடைகளின் தாகத்திற்கு தண்ணீர் கேட்பது கூட தவறு என்று வரையறுக்கிறார்கள். நமக்கு வந்து சேர்பவர்கள் வேறு ரகமாக இருக்கிறார்கள். பள்ளி தொடங்கி வேலை பார்க்கும் இடம் வரை நான் பெரும்பாலான இடங்களில் இளிச்சவாயனாகவே இருந்திருக்கிறேன். இதற்கு அர்த்தம் நான் பொருட்களை ஒருவருக்கு கொடுத்துவிடுகிறேன் என்பதல்ல. அதை தெரிந்தே செய்கிறேன் என்பதுதான்.  இன்று பாருங்கள். எங்கள் அலுவலக வளாகத்தில் உள்ள வாடிக்கையான ஓட்டுநர் எப்போதும் பதினொரு மணிக்கு அங்குள்ள திண்ணையை யாருக்கும் தரமாட்டேன் என கிடையைப் போட்டு படுத்துவிடுவார். அவருக்கு அடுத்து இருக்கும் இடத்தில் பெண் நாய் ஒன்று படுத்திருக்கும். இல்லையென்றால்  இங்குள்ள இழுத்து மூடப்பட்ட சிறப்பு அங்காடிக்கு காவல் காக்கும் வெள்ளை நிற நாய் ஒன்று படுத்துவிடும். பெரும்பாலும் திண்ணைக்கு இவர்கள்தான் ஓனர்கள் போல. எனவே புதிதாக வந்து நின்ற டாடா டியாகோ கார் அருகே இ