இடுகைகள்

இந்தியாவின் ராக்கெட்டுகள் முன்னேறுவது அவசியம்!

படம்
எலன் மஸ்கின் ஸ்பேக்ஸ் எக்ஸ் ஃபால்கன் ராக்கெட், 28 டன்கள் பேலோடுகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டது. இதன் மூலம்தான் நாசா, விண்வெளி வீரர்கள் அடுத்த சில ஆண்டுகளில் நிலவுக்கு அனுப்பவிருக்கிறது. ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் மிக மெதுவாக செயல்பட்டு வருகிறது. இஸ்ரோ பாகுபலி என அழைக்கும் ஜிஎஸ்எல்வி எட்டு டன்களை மட்டுமே விண்ணுக்கு கொண்டு செல்லும் திறன் உடையது. இதனை வைத்துக்கொண்டு எப்படி 2022 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்புவீர்கள். இதே கேள்வியை டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், நடுப்பக்க கட்டுரையில் எழுப்பியிருந்தார். நிலவு கடந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் இன்னும் திறன் வாய்ந்த ராக்கெட்டுகளை கோருகிறது. ஆனால் இந்தியாவிடம் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி தாண்டி வேறெதுவும் சாத்தியமான ராக்கெட்டுகள் இல்லை. 2008 ஆம் ஆண்டு இலகுவான பிஎஸ்எல்வி ராக்கெட்டில் சந்திரயான் 1 விண்ணில் ஏவப்பட்டது. இதன் எடை 1380 கி.கிதான். பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரயான் 2, 3,850 கி.கி எடையில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. எஸ்எல்வி, ஏஎஸ்எல்வி எனும் ராக்கெட்டுகளை இஸ்ரோ ஆட்களே

இந்திய தெருநாய்களுக்கு ஆதரவளிக்கும் பெண்மணி!

படம்
வீரா, ராணி, பொங்கி ஆகிய நாய்கள் இன்று அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த வருகின்றன. இத்தனைக்கும் அவை மதிப்பான உயர்ந்த ரக நாய்கள் கிடையாது. தெருவில் பிறந்து வளர்ந்தவைதான். அமெரிக்காவின் சியாட்டிலில் வாழ்ந்து வந்த ஜெசிகா ஹால்ட்ஸன், தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கல்களை பயணம் தீர்க்கும் என நம்பினார். அதற்காக இந்தியாவுக்கு வந்து டில்லியில் அறை எடுத்து தங்கினார். சொந்த சோகத்தை மறைக்க முயன்று தோற்ற நேரத்தில் தெருவில் அடிபட்டு அலறும் நாயின் குரலைக் கேட்டார். அந்த நாயை உடனே தூக்கிக்கொண்டு கால்நடை மருத்துவரைப் பார்த்தபோது, அந்நாய்க்கு இடும்பெலும்பு உடைந்திருப்பதோடு, தொற்றுநோய் பாதிப்பும் இருக்கிறது என்று கூறி மருந்து எழுதினார். இந்தியாவில் 30 இலட்சத்திற்கு மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பதை பின்னர் அறிந்துகொண்டார். தான் காப்பாற்றிய டெல்லி என்ற நாயை தன்னுடனே சிகிச்சை செய்து வைத்துக்கொண்டார். அதன் பெயரிலேயே காப்பகம் ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, இந்தியாவில் செயல்படும் பிற விலங்கு நல அமைப்புகளுடன் இணைந்து த

ரான்சம்வேரின் எதிர்காலம்! - கிரிம் ஸ்பைடரின் கையில் உலகம்!

படம்
கணினிகளைத் தாக்கும் ரான்சம் வேர் தற்போது பல்வேறு நாடுகளிலுள்ள கணினிகளைத் தாக்கி தகவல்களை சிறைப்பிடித்து காசு கேட்டு மிரட்டி தகவல்களை மீளத் தருவது நடைமுறையாகி வருகிறது. ரையுக் எனும் ரான்சம்வேர் வகை புரோகிராம் இங்கிலாந்திலுள்ள தடயவியல் நிறுவனமான யூரோஃபின்ஸ் மீது நடத்தப்பட்டுள்ளது. இதன்விளைவாக, அங்குள்ள பிற நிறுவனங்களும் மிரண்டு போயுள்ளன. அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள நிறுவனம் 5,30,000 அமெரிக்க டாலர்களைத் தருமாறு மிரட்டப்பட்டுள்ளது. பணத்தையும் பிட்காயின்களாக அக்கவுண்டில் போடுமாறு சட்டவிரோத கும்பல் மிரட்டியுள்ளது. ரஷ்யாவில் செயல்பட்டு வரும் கிரிம் ஸ்பைடர் என்ற நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ரையுக் என்ற ரான்சம்வேரை உருவாக்கியது. இதன் மூலம் இந்நிறுவனம் 3.7 மில்லியன் டாலர்களை இதுவரை சம்பாதித்துள்ளது. இமெயில அட்டாச்மென்ட் மூலம் கணினிகளை தாக்கும் ரான்சம்வேர் கணினியில் உள்ள அனைத்து கோப்புகளையும் என்கிரிப்ட் செய்துவிடும். பின் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே கணினியிலுள்ள கோப்புகளை மீட்க முடியும் என செய்தி மட்டுமே வரும். இப்போது பணம் என்றாலும் இதன் எதிர்காலம் வேறுமாதிரியான அச்சுறுத்தலாகவே இருக்க

கிரிஸ்பிஆர் குழந்தைகளை உருவாக்குவேன் - ரஷ்ய ஆராய்ச்சியாளரின் தில்!

படம்
கிரிஸ்பிஆர் குழந்தைகள் ரெடி! ரஷ்யாவைச் சேர்ந்த காது கேளாத தம்பதிகள் ஐவர்,  தங்களின் குழந்தைகளின் டிஎன்ஏவை செம்மை செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர் என்று உயிரியலாளர் டெனிஸ் டெப்ரிகோவ் தகவல் தெரிவித்துள்ளார். ரஷ்ய அரசிடம் இதுபற்றிய அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார். அரசின் அனுமதி கிடைக்குமா இல்லையா என்பதை அவரை விட பிற நாடுகளும் ஆராய்ச்சியாளர்களும் கவனமுடன் பார்த்து வருகின்றனர். காது கேளாத இத்தம்பதிகளுக்கு மரபணு வரிசைப்படி பிறக்கும் குழந்தைக்கும் காது கேட்காமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளன. இதைத் தடுக்கவே கிரிஸ்பிஆர் சிகிச்சையை நாடுகின்றனர். இதன்மூலம் ஹெச்ஐவி முதல் காது கேளாமை வரை தீர்க்க முடியும் என்று நம்புகின்றனர். சீனாவில் அரசு அனுமதியின்றி குழந்தைகளை கிரிஸ்பிஆர் செம்மையாக்கல் செய்த சம்பவம் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? BJ2 எனும் மரபணுவை மாற்றினால் பிறக்கும் குழந்தைகளின் காது கேளாமையைத் தீர்க்க முடியும் என டெனிஸ் நம்புகிறார். ஆனாலும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் உள்ள ஆய்வாளர்கள் இதற்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கான வாய்ப்புகள் உள

தீவிரவாத அமைப்பைச் சந்திப்பது பெருமையா? -ஜெர்மன் தூதர்

படம்
யா ஆர்எஸ்எஸ், கோல்வால்கர், சாவர்கர் காலத்திலிருந்தே ஜெர்மனியின் நாஜிக் கொள்கையை புகழ்ந்து பேசிவருகிறவர்கள். அவர்கள் நாஜி படையினரைப் போலவே ஷாக்கா எனும் பயிற்சி முறைகளை செய்து வருகிறவர்கள். வாஜ்பாய் காலத்தில் அரசு அமைப்புகளுக்குள் ஊடுருவ முயன்று தோற்றவர்களுக்கு, 2014 ஆம் ஆண்டு மோடி ஆதரவு தர இன்று அனைத்து அமைப்புகளையும் உடைத்து நொறுக்கி அதன் நம்பகத்தன்மையை தூள் தூளாக்கி வருகின்றனர். அண்மையில் ஜூலை 17 அன்று ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியாவிற்கான தூதர், ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை சுற்றிப்பார்த்து அதனை பெருமையாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இதுவே இணையத்தில் மிகவேகமாக பரவி வரும் செய்தி. ஆர்எஸ்எஸ், கலாசாரத் தளத்தில் முக்கியப் பங்காற்றும் அமைப்பு. கலை, அறிவியல், விவசாயம், தொழில்நுட்பம் என அனைத்து தளத்திலும் இதற்கு கிளை அமைப்புகள் உண்டு. ஜனநாயகத்திற்கு ஆதரவான அனைத்து அமைப்புகளிலும் கிளைபரப்பி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் ஜனநாயகத் தன்மையை வற்றச்ச்செய்து அதனை மற்றொரு ஆர்எஸ்எஸ் போல ஒற்றைத் தலைமைக்கு கட்டுப்பட்டதாக மாற்றி வருகிறார்கள். 2002 ஆம்ஆண்டு  குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டத

பொருளாதாரத்தை சிதைக்கும் காசநோய்!

படம்
இந்தியாவை வதைக்கும் காசநோய்! விறகு புகை, தொழிற்சாலை மாசுபாடு, பசு சாணம் ஆகியவை காரணமாக ஏற்படும் காசநோயின் அளவு தொண்ணூறுகளில் 28 சதவீதமாக இருந்து தற்போது 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் 2019 ஆம் ஆண்டு இந்தியா ஸ்பெண்ட் செய்த ஆய்வுப்படி பத்து லட்சம் பேர் ஆண்டுதோறும் இறந்து வருகின்றனர். அரசு இந்நோய்களைக் கட்டுப்படுத்துவதில் தடுமாறி வருகிறது. ஆண்டுதோறும் இந்தியா இந்நோயைக் கட்டுப்படுத்த 32 ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து வருகிறது. அதாவது அரசு அப்படிக் கூறுகிறது. இத்தொகை நடப்பு ஆண்டில் தேசிய சுகாதாரத் திட்டம், கல்வித்திட்டம், பிரதமந்திரி வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட இத்தொகை அதிகம். 2010 ஆம் ஆண்டு தொற்றா நோய்களுக்கான நாடு தழுவிய திட்டம்  தொடங்கப்பட்டது. இதில் புற்றுநோய், இதயநோய், நீரிழிவு ஆகியவை முக்கியமாக கவனிக்கப்பட்டன.  2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் இணைந்தனர். நாங்கள் மாநிலங்களுக்கு கருவிகள் வாங்க 150,000, மருந்துகள் வாங்க 250000 ரூபாய் வழங்குகிறோம். மைசூருவைச் சேர்ந்த லக்ஷம்மா, பால் கறந்து வீடுகளுக

இயற்பியல் பிட்ஸ்!

படம்
நீர் ஒரே நேரத்தில் சூடாகவும் மாறும் உறையவும் செய்யும். இதனை  டிரிபிள் பாயிண்ட் (Triple point)என்று கூறுகின்றனர். வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக நீர் திட, திரவ, வாயு நிலைகளுக்கு மாறும். மூக்கு கண்ணாடிகள் இல்லாதபோது, உங்கள் கையில் உள்ள விரல் இடைவெளியில் பார்க்கும்போது, எதிரிலுள்ள பொருட்களை ஓரளவு தெளிவாக காணமுடியுமாம். கி.மு.650 ஆம் ஆண்டு கிரேக்கர்களால் உருவான அறிவியல் துறை இயற்பியல். Physics  என்ற வார்த்தைக்கு இயற்கையிலிருந்து பெற்ற அறிவு என்று பொருள். நவீன ஜிபிஎஸ் முறை தொழில்நுட்பம் ஐன்ஸ்டீனின் E=MC 2 சூத்திரப்படி இயங்குகிறது.செயற்கைக் கோள்கள், ரேடியோ அலைகள் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்கின்றன. தகவல்: MinutePhysics படம் - கிராபிக் ரிவர் - பின்டிரெஸ்ட் ஸ்