இடுகைகள்

கொரோனாவால் செயலிழந்த உலகப் பொருளாதாரம்

  கொரோனாவால் செயலிழந்த உலகப் பொருளாதாரம் சீனாவில் 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று தற்போதுவரை 188 நாடுகளைத் தாக்கியுள்ளது . முன்னதாக பொதுமுடக்க அறிவிப்புகளை அறிவிக்காத நாடுகள் கூட இப்போது இரண்டாவது அலை கொரோனா தொற்றைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன . உலக நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகளும் , ஓய்வூதியம் , தனிநபர் சேமிப்பு கணக்குகள் உட்பட அனைத்தும் பெருந்தொற்று சூழலால் பாதிக்கப்பட்டன . நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் மக்களுக்காக வட்டி சதவீதத்தைக் குறைத்தன . மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன . உலக நாடுகளின் அரசுகள் மானிய உதவிகளையும் , கடன் தவணைகளை நீட்டித்து தொழிற்துறைக்கு உதவின . கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெருநிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பள வெட்டை அமல்படுத்தின . இன்னும் சில நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்தன . வீட்டிலேயே வேலை செய்யும் முறை அறிமுகமானது . உலகின் பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் வேலையிழப்பு 10.4 சதவீதம் என உலக நிதி கண்காணிப்பகம் கூறியுள்ளது . வல்லரசு நாடுகளின் பொருளாதாரம் இய

டெக் நிறுவனங்கள் எப்படி தனி மனிதர்களை உளவு பார்க்கின்றன தெரியுமா?

படம்
  உளவு பார்க்கும் ஆயிரம் கண்கள்! உலகம் முழுக்க செயல்படும் பன்னாட்டு டெக் நிறுவனங்கள், தகவல் சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்றாலும் பல்வேறு வழிகளில் அவர்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.  ஆ ப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தகவல் பாதுகாப்பு சட்டப்படி தங்களை வடிவமைத்து வருகின்றன. இதில் வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு கொஞ்சம் உத்தரவாதமான நிறுவனம் என  மக்கள் நினைப்பது ஆப்பிளைத்தான். ஆப்பிள் இயக்குநர் டிம் குக், பாட்காஸ்ட் ஒன்றில் பேசியபோது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள மாடலில் விளம்பரங்கள் மூலமாக வருமானம் அதிகம் கிடைக்கிறது. எனவே அவர்களால் மக்களின் தகவல்களைப் பாதுகாக்க முடியாது என்று கூறினார். இப்படி நேரடியாகவே விமர்சிப்பதை ஜனநாயகம் என ஏற்கலாம். ஆனால், ஆப்பிள் தகவல் பாதுகாப்பு கொள்கைகளை உலகம் முழுக்க மாற்றியமைத்துள்ளது. மக்களை கண்காணிப்பதை ஆப்பிள் இன்னும் மறைமுகமாகவே செய்யத் தொடங்கியுள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் 15இல் புகைப்படத்தில் உள்ள எழுத்துகளை நகல் எடுத்து இன்னொரு இடத்தில் பதியமுடியும். படத்திலுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ள முட

தொழில்நுட்பத்தில் மேற்கு நாடுகளை மிஞ்சும் சீனா! - எப்படி சாத்தியமாகிறது?

படம்
  தொழில்நுட்பத்தில் சிறந்த சீனா! சீன அரசு, தானியங்கி தொழில்நுட்பங்களை உருவாக்கி தனது நாட்டில் உற்பத்தி திறனை அதிகரித்து வருகிறது.   2010ஆம் ஆண்டு சீனாவில் தொழில்துறை சார்ந்த ரோபோக்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரமாக இருந்தது. ஆனால் இன்று அதன் எண்ணிக்கை எட்டு லட்சத்திற்கும் அதிகம். உலகில் மூன்றில் ஒரு ரோபோ என்ற கணக்கில் சீனா, உற்பத்திதிறனில் முன்னிலையில் உள்ளது. உற்பத்திதிறனை தொடர்ச்சியாக அதிகரிப்பதன் வழியாக சீனா, செல்வச்செழிப்பான நாடாக வளர்ந்து வருவதோடு பணியாளர்களின் ஊதியமும் கூடி வருகிறது.  முன்பு ஆண்டிற்கு ஆயிரம் டாலர்கள் என்றிருந்த பணியாளர்களின் ஊதியம், இன்று பத்து மடங்காக அதிகரித்துள்ளது. தானியங்கி தொழில்நுட்பங்களின் வரவால், பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து ரோபோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீன அதிபர் ஜின் பிங், இந்த முறையில் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம் என்பதை அடையாளம் கொண்டு கொள்கைகளை  உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.  பொருளாதார வளர்ச்சியில் மூன்று அடிப்படைகள் உள்ளன. ஒன்று, எத்தனை பணியாளர்கள் வேலை செய்கின்றனர், முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை, பணியாளர்களின் உற்பத்திதிறன் எவ்வளவு

விண்வெளியில் சத்தான உணவு!

படம்
  விண்வெளியில் சத்தான உணவு!  விண்வெளி வீரர்கள், விண்கலத்தில் பயணிக்கும்போது சாப்பிடுவதற்கான உணவுகளை சரியான முறையில் தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.  விண்வெளியில் ஈர்ப்பு விசை குறைவு. இதன் காரணமாக அங்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களின்  உடல் எடை குறைவதோடு, எலும்புகளின் அடர்த்தியும் பாதிக்கப்படுகிறது. இதற்காக வீரர்களுக்கென  சத்துக்கள் நிறைந்த உணவுகள் தயாரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு அதிக நாட்கள் தாங்கும்படி அனுப்பி வைக்கப்படுகின்றன.  பூமியில் ஒருவர் சாப்பிடும் அனைத்துப் பொருட்களையும் விண்வெளியில் சாப்பிட முடியாது. இவர்களுக்கென அமெரிக்காவின் நாசா அமைப்பு, சிறப்பு வகை உணவுகளை தயாரித்து வருகிறது. விண்வெளி வீர ர்கள் தினசரி 2,700 லிருந்து 3,700 வரையிலான கலோரிகளை உணவிலிருந்து பெறுவது அவசியம். அப்படி பெறமுடியாதபோது, அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இப்படி விண்கலனில் தயாரித்து அனுப்பப்படும் உணவு மாதங்கள், ஆண்டுகள் என கெடாமல் இருக்கும்.  பூமியில் நீங்கள் சாப்பிடுவது சிறப்பான உணவு என்றால் அது விண்வெளியிலும் சிறப்பான உணவாகவே இருக்கும் என்றார் நாசாவின் உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப்

சிப் தயாரிப்பில் நுழையும் நிலப்பரப்பு ரீதியான அரசியல்!

படம்
சிப் தயாரிப்பு  சிப்களின் தயாரிப்பு முறை கணினி மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்களில் பயன்படும் சிப்கள் காலத்திற்கேற்ப மாற்றங்களைப் பெற்று வருகின்றன.  முன்பு கணினிகளுக்கு பயன்பட்டு வந்த சிப்கள் இன்று கார், டிவி, சலவை இயந்திரம், ஸ்மார்ட்போன் என பல்வேறு சாதனங்களிலும் நீங்காத இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிப் தயாரிப்பு நிறுவனங்கள், தேவைக்கு ஏற்ப செயல்பட முடியாமல் தடுமாறின. இதன் காரணமாக, வீட்டு பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்கள் உற்பத்தி தேங்கத் தொடங்கியது. இதற்கு சிப் தயாரிப்பில் அரசு சரியாக கவனம் செலுத்தவில்லை என சிலரும், சிப் தயாரிப்பு நிறுவனங்கள்  சந்தையில் குறைவாக இருப்பதால்தான் இப்படி ஒரு பிரச்னை ஏற்படுகிறது என விமர்சனங்கள் கிளம்பின.  உலகளவில் சிப் தொழிற்துறை  40 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக உள்ளது. இன்று  நாம் பயன்படுத்தும் ஆன்லைன் வங்கிச்சேவை, மின்னஞ்சல் என பல்வேறு சேவைகளின் பின்புலத்திலும் சிப்கள் உள்ளன. 1959ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த முகமது அடாலா மற்றும் டாவோன் காங் ஆகிய இருவர், அடிப்படை கணித செயல்பாடுகளுக்காக சிப்பை உருவாக்கினார்.  புரோச

நெஞ்சின் ஓரமாய் வலி! - குடும்ப நோய் வரலாறு காரணமா?

படம்
  இதயநோய் ஏற்படுபவர்களின் குடும்ப வரலாற்றை முன்னதாக அறிந்தால் அவர்களைக் காப்பாற்ற முடியும் என லான்செட்  அக்.2021 இதழின் ஆய்வு கூறியுள்ளது.  கேரளத்தில் 750 குடும்பங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில் இதயநோய் தொடர்பான பாதிப்பு கொண்டவர்களை அடையாளம் கண்டறிந்தனர். இவர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் தேவை என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  ஐம்பத்தைந்து வயதுக்கு முன்னதாகவே ஒருவருக்கு இதயநோய் தொடர்பான பிரச்னைகள் இருக்கிறது என கண்டுபிடிப்பது அவசியம். அப்படி கண்டுபிடித்தால், அவருக்குள்ள 1.5 முதல் 7 சதவீத ஆபத்தை தவிர்க்க முடியும் என லான்செட் இதழில் வெளியாகியுள்ள ஆய்வு கூறுகிறது.  இந்த ஆய்வு கேரளத்தில் 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில்  நடத்தப்பட்டது.  சுகாதார பணியாளர்கள் 368 குடும்பங்களைச் சந்தித்தனர். அவர்களின் உடல்நிலை பற்றி கேட்டறிந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உடல்நிலையை பரிசோதித்தனர். மேலும் அவர்களின் உணவுமுறையை மாற்றியமைக்கவும் அறிவுறுத்தினர். உடற்பயிற்சி செய்யவும், மது, புகையிலையை பயன்படுத்துவதை கைவிடவும் கூறினர்

கனவுகளின் மீது கவனம் குவிக்கும் மேற்கு நாடுகள்! - கற்றதும் பெற்றதும் என்ன?

படம்
  கனவுகளின் ஆராய்ச்சி! கனவுகளை தானே கட்டமைக்கும் லூசிட் முறையில் கற்றலையும் புதுமைத்திறனையும் அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர்.  விண்வெளிக்கு சுற்றுலா சென்றுவருவது, சூரியனுக்கு விண்கலங்களை அனுப்புவது வரையில் முடியாத விஷயங்களே விஞ்ஞானிகளுக்கு கிடையாது. ஆனால் அவர்களையும் குழப்ப வைக்கும் விஷயம், கனவுகள்தான். நம் அனைவருக்கும் தூங்கும்போது வரும் கனவுகளைத் தான் இங்கு சொல்லுகிறோம். இந்த கனவுகள் அன்றாட நிகழ்ச்சிகள் அல்லது நிறைவேறாத ஆசைகளை அடிப்படையாக கொண்டிருக்கலாம். இவற்றை ஆய்வு செய்து உண்மையான துல்லியத்துடன் கனவுகளை பார்க்க அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர்.  பொதுவாக ஒருவர் கனவுகண்டு காலையில் எழுந்தால் 90 சதவீதம் மறந்துவிடவே வாய்ப்பு அதிகம். அப்படியும் அதனை கூறினால் அதில் நிறைய தவறுகள் இருக்கும். துல்லியமான தன்மை இருக்காது. கனவுகளை நாமே திட்டமிட்டு உருவாக்கினால் எப்படியிருக்கும்? கனவு காணும்போதுகூட நாம் கனவில்தான் இருக்கிறோம் என்ற விழிப்புணர்வையும், அதில்  வரும் சம்பவங்களையும் கூட நம்மால் உருவாக்க முடிந்தால் அதை லூசிட் கனவுகள் என்று கூறலாம். அமெரிக்காவின்

சிறந்த திரைப்படங்கள் -2021

  சிறந்த திரைப்படங்கள் என்பவை எல்லாம் டிசம்பர் மாதத்தில்தான் வருமா என்று தெரியவில்லை. இப்போது அப்படித்தான் படங்கள் ரிலீசாகி வருகின்றன. இந்த லிஸ்டில் உள்ள படங்கள் அனைத்தும் மேற்குலகு படங்கள். டிரெய்லர் பார்த்துவிட்டு படத்தை தரவிறக்கி பாருங்கள். படம் தரும் அனுபவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.  தி பவர் ஆப் தி டாக் ஜேன் காம்பியன் எடுத்த படம். காட்டில் ரேஞ்சராக உள்ள அண்ணனுக்கும் அவரது தம்பிக்கும் உள்ள உறவு, அவர் கல்யாணம் செய்து கூட்டிவரும மனைவி, மகன் ஆகியோருக்குமான உறவு சிக்கல்கள்தான் கதை. பெனடிக்கின் வெறுப்பு உமிழும் நடிப்பு ஏற்கெனவே பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதை விட முக்கியமானது. விமர்சனங்களை ஓரம்கட்டிவிட்டு படத்தைப் பார்ப்பதுதான்.  பேரல்லல் மதர்ஸ் பெட்ரோ அல்மோடோவர் எடுத்துள்ள மெலோடிராமா. பெனலோப் க்ரூஸ் மத்திய கால வயது பெண்ணாக நடித்துள்ளார். ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் அவரது கொள்ளுத்தாத்த கொல்லப்பட்டு உடல் தூக்கியெறியப்படுகிறது. அதற்கான நீதியை எப்படி பெறுகிறார் என்பதுதான் கதை. வலி நிறைந்த நாட்டின் வரலாற்றை இயக்குநர் உணர்ச்சிகரமாக சிறப்பாக எடுத்திருக்கிறார்.  தி வொர்ஸ் பர்சன் இன் தி

தொழில்நுட்பம் மூலம் பாகுபாட்டை குறைக்க முயலும் பெண்மணி! - அஜாயி

படம்
  அபிசோயே அஜாயி அகின்ஃபோலாரின்  சமூக செயல்பாட்டாளர் இவரது பெயரை சரியாக உச்சரிக்க சொல்லி போட்டியே நடத்தலாம். கட்டுரையில் அஜாயி என்று வைத்துக்கொள்வோம்.  1985ஆம் ஆண்டு  மே 19 அன்று நைஜீரியாவின் அகுரே என்ற நகரில் பிறந்தார். லாகோஸ் பல்கலைக்கழகம், தகவல் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் படித்தார். வணிக நிர்வாகத்தில் பிஎஸ்சி பட்டதாரி.  பியர்ல்ஸ் ஆப்பிரிக்கா யூத் பவுண்டேஷன் என்ற தன்னார்வ அமைப்பின் தலைவர். ஏழை, எளிய மக்களின் கல்விக் கனவுக்கு தோள் கொடுக்கும் அமைப்பு.  இந்த அமைப்பு வழியாக பெண்களுக்கு வருமானத்திற்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார் அஜாயி. இதன்மூலம் பெண்கள் தனியாக இயங்க முடியும். இந்த வகையில் நானூறு பெண்களுக்கு மேல் பயிற்சி கொடுத்துள்ளார்.  நைஜீரியாவில் வாழும் ஏழை, பணக்காரர்களுக்கான இடைவெளி அதிகம். அதைக் குறைக்க அஜாயின் அமைப்பு பெரும் முயற்சி எடுத்து வருகிறது.  பெண்கள் என்பவர்கள் உலகிலுள்ள புழக்கத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்கள் மட்டுமல்ல. அதனை அவர்கள் உருவாக்குவார்கள் என்று அஜாயி கூறுகிறார்.  2018ஆம் ஆண்டு சிஎன்என் தொலைக்காட்சியில் நாயகர்கள் வரிசையில் அஜ

2021 இல் புழங்கி புதிய சொற்கள், வார்த்தைகள்!

படம்
cheugy குறிப்பிட்ட விஷயத்தை  அது அடிப்படையானது என்றாலும் புரிய வைக்க மெனக்கெடுவது. இது நவீனகால நாகரிகமாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. இந்த வார்த்தை டிக்டாக்கிலிருந்து வந்தது. ஜென் இசட் தலைமுறையினர் மில்லினியலை சுட்டிக்காட்ட இந்த வார்த்தையை பயன்படுத்தினர்.  என்எஃப்டி  NFT இது நான் ஃபன்ஜிபிள் டோக்கன். இப்போது உலகம் முழுக்க பரவிவரும் முறை இது. விர்ச்சுவலாக ஒருவர் நிர்வகிக்கும் சொத்து. இதனை ஒருவர் காசு கொடுத்து வாங்கலாம் விற்கலாம். இதனை காப்பி செய்ய முடியாது. சினிமா, பாடல், புகைப்படம் எதனையும் இந்த முறையில் டோக்கனாக மாற்றலாம். இது ஒரு டிஜிட்டல் டோக்கன் என்று புரிந்துகொள்ளுங்களேன்.  critical race theory மாணவர்கள் இனம், இனவெறி பற்றி படிப்பதைக் குறிக்கிறது. அறிவுசார்ந்த குழு, இனவெறி பற்றி அதன் விளைவுகளைப் பற்றி விவரிப்பதையும் இதனோடு சேர்த்துக்கொள்ளலாம்.  ரீஜென்சிகோர் Regencycore நெட்பிளிக்ஸின் பிரிட்ஜெர்டன் என்ற தொடரில் 19ஆம் நூற்றாண்டு புத்திசாலிகள், கவர்ச்சியான பெண்களைக் காட்டுவார்கள். அவர்கள் பின்பற்றிய நாகரிக விஷயங்கள் என்று புரிந்துகொள்ளலாம்.  murraya  ஆஸ்திரேலியா, ஆசியாவின் பருவகால மர

சூழல்களுக்கு அஞ்சாத விவசாயி! விழுப்புரம் இயற்கை விவசாயி முருகன்

படம்
  பாரம்பரிய நெற்பயிர் ரகங்கள், விழுப்புரம் விழுப்புரத்தில் உள்ளது அய்யூர் அகரம் கிராமம். இங்கு உள்ளே நுழைந்ததும் ஆச்சரியப்படுத்துவது, தூய்மையான புத்துணர்ச்சியான காற்றுதான். ஒருபுறம் சிறுவீடுகள், நேரான குறுகலான தெருக்கள், ஹாரன்களை அடித்தபடி செல்லும் இருசக்கர வாகனங்கள் என்ற காட்சிகளை பார்க்கலாம். இன்னொரு புறம் அழகான பச்சை பசேல் என்ற விவசாய நிலங்களும் கண்களை கவருகின்றன.  இங்குதான் பாரம்பரிய நெற்பயிர் ரகங்களை விவசாயம் செய்து வருகிறார் விவசாயி முருகன் கே. அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் வயல்கள் நீரில் த த்தளித்து இப்போதுதான் மெல்ல அதிலிருந்து மீண்டு வருகிறது.  பருவச்சூழல் மாறுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக சரிசெய்வது கடினம். வேதிப்பொருட்களை தவிர்த்துவிட்டுத்தான் இயற்கை விவசாயத்தை இனி அனைவரும் செய்யத் தொடங்கவேண்டும். அனைவரும் இப்படி விவசாயம் செய்யத் தொடங்கினால் அடுத்த தலைமுறைக்கு எந்த பிரச்னையும் வராது என்றார் இவர்.  பூங்கார், கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா, சொர்ணமயூரி, இப்பு சம்பா ஆகியவற்றை நான் நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறேன் என்றார் முருகன்.  முப்பது ஆண்டுகளாக தன