இடுகைகள்

புல்டோசர் சென்றபிறகு வாழ்க்கை என்னவானது?

படம்
  பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், மதம் மாறி திருமணம் செய்தால் போதும். உடனடியாக மாநில அரசு அதற்கான தண்டனையை சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இன்ஸ்டன்டாக வழங்கி விடுகிறது. இன்றுதான் இன்ஸ்டன்ட் உப்புமா, பொங்கல் என வந்துவிட்டதே நீதி மட்டும் ஏன் தாமதமாக கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. வீடு இடிக்கப்பட்ட பிறகு நீதிமன்றம் வழக்கை விசாரித்து இடிக்கப்பட்டது சரியா அல்லது தவறா, ஊடக கருத்துக்கணிப்பு, மக்கள் கருத்து என என்ன செய்யலாம் முடிவு செய்யப்படுகிறது. பாஜக அரசின் இந்த முன்மாதிரி செயல்பாட்டால் நீதிமன்றத்தின் சுமை பெரும்பாலும் குறைந்து வருகிறது.  ஜஹாங்கீர்புரி இங்கு நூர் ஆலம் தனது மூன்று பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் வாழ்கிறார். நூர் ஆலம், கால்நடைகளுக்கான தீவனத்தை தயாரித்து அருகிலுள்ள பால்ஸ்வா பால் பண்ணைக்கு தருவதுதான் முக்கியமான வேலை. இவரது கடை இருக்கும் கட்டிடத்தை நகர நிர்வாகம் ஆக்கிரமிப்பு என சொல்லி இடித்து தரைமட்டமாக்கிவிட்டது. இதனால் நூர் ஆலம் தனது வாழ்க்கையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கியிருக்கிறார். இதற்கு ம

இந்தியாவின் காய்கறிகள் மற்றும் வாசனைப்பொருட்கள் ஆச்சரியம் தருகின்றன! - அலைன் டுகாசி, சமையல் கலைஞர்

படம்
  அலைன் டுகாசி சமையல் கலைஞர் உலகளவில் மிச்செலின் ஸ்டார் பெறுவது கடினம். அலைன் இந்த வகையில் 17 ஸ்டார்களைப் பெற்றுள்ள சமையல் கலைஞர். தனது தொழில்முறை வாழ்க்கையில் 21 ஸ்டார்களைப் பெற்றுள்ளார். இப்போது சூழல் நிலைத்தன்மை கொண்ட  தாவர உணவுகளை சமைக்கும் செயல்பாடுகளை செய்துவருகிறார். குர்கானில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தில் இகோல் டுகாசி எனும் தனது வளாகத்தை உருவாக்குவதாக கூறியுள்ளார். அவரிடம் பேசினோம்.  இந்தியா சார்ந்து உங்களுக்கு பிடித்த உணவு வகை என்ன? இப்படி கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. பிரெஞ்சு உணவு வகைகளில் பிடித்த உணவு என்றாலும் கூட கூறமுடியாது. பிரெஞ்சு நாட்டில் நான் நீண்டகாலமாக வசித்தாலும இப்படித்தான் இதற்கு பதில் கூற முடியும். இந்தியாவில் எனக்கு பிடித்த விஷயம், மக்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள். அப்புறமாக பருப்புகள். இவற்றை எப்படி பயன்படுத்துவது சமைப்பது என ஓராண்டாக கற்று வருகிறேன்.  மிச்செலின் ஸ்டார்களைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் போராடி வருகிறீர்களா? எங்களது உணவகம் மூன்று மிச்செலின் ஸ்டார்களைப் பெற்றுள்ளது. நாங்கள் நடத்தும் உணவகம் பல்வேறு வகைப்பட்டத

ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் இனவெறி காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்! - லிண்டா வில்லாரோஸா

படம்
  லிண்டா வில்லாரோசா எழுத்தாளர் பல ஆண்டுகளா கருப்பின மக்களின் உடல், மன ஆரோக்கியம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பெண்மணி. அண்மையில் அண்டர் தி ஸ்கின் - தி ஹைடன் டோல் ஆஃப் ரேசிசம் ஆன் அமெரிக்கன் லைவ்ஸ் அண்ட் ஆன் தி ஹெல்த் ஆஃப் அவர் நேஷன் என்ற நூலை எழுதியுள்ளார்.  இனவெறி என்பது கருப்பின மக்கள் கடந்த எப்படி நாட்டின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உருவாகியுள்ளது என நினைக்கிறீர்கள்? அமெரிக்காவின் நிலையை நீங்கள் பிற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் இறப்பு அதிகரிப்பதோடு, மக்களின் ஆயுளும் குறைந்து வருகிறது. கர்ப்பிணிகளின் இறப்பும் கூடி வருகிறது. இதனை பிற வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டுத்தான் கூறுகிறேன். இப்படி நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே கருப்பின மக்கள் மட்டும் சார்ந்தது கிடையாது. நாடு முழுக்க இந்த பிரச்னை உள்ளது.  அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு உடல் மனரீதியான பிரச்னைகள் உள்ளன. அவர்கள் குழந்தை பெறுவதே சிக்கலானது என கூறுவது ஏன்? பெருந்தொற்று காலத்தில் பிறரை விட அதாவது வெள்ளையரை விட பத்து வயது இளமையானவர்கள் கூட இறந்துபோனார்கள். கோவிட் காலத்தில் ஏராளமான கருப்ப

ஆள் மாறாட்டத்தால் தங்கத்திருட்ட பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் பங்காருராஜூ- இதே கோல்ட் இஹெ

படம்
  இதே கோல்ட் இஹெ இயக்கம் - வீரு போட்லா இசை - சாகர் மகதி தலைப்பில் கூறியது போல சிரிக்கும் புத்தர் சிலை ஒன்றைத் திருடுகிறார் ஒருவர். சிலையை பறிகொடுத்த கும்பல் அதை தேடுகிறபோது, மாட்டுகிறவர்தான் பங்காரு ராஜூ. நேர்மையாக இருந்து வேலை செய்யும் இடத்தில் எல்லாம் வம்பும் வழக்குமாக இழுத்துவிடுபவர். தங்க கடத்தல் பிரச்னையில் மாட்டுகிறார். எப்படி அதிலிருந்து வெளியே வருகிறார் என்பதுதான் கதை.  படத்தில் சுனில் தான் நாயகன் என்பதால், காமெடியில் அடக்கி வாசிக்க அவரது  சக நண்பர்கள் எல்லோரும் அட்டகாசம் செய்கிறார்கள். குறிப்பாக தன் நண்பன் பங்காருவிடம் கூட புரோபெஸ்னலாக திருடும் சகலகலா சங்கர். இவர் வரும் காட்சிகள் மட்டும் தான் படத்தில் சற்று ஆறுதலாக இருக்கின்றன. மற்றபடி படத்தில் வரும் காட்சிகள் 70,80 கால திரைப்படங்களில் சற்றேறக்குறைய சுட்டதுதான்.  அம்மா சென்டிமென்ட் காட்சி, அவர் சுனிலை தனது மூத்தமகனாக ஏற்பது, அவரை அடிக்கும்போது சுனில் கண்கள் சிவப்பாவது, சுஷ்மா ராஜை கடத்திச்செல்லும்போது மெல்ல அவருக்குள் கோபம் வந்து அடிப்பது என படத்திற்குள் அவர்களை அவர்களே கிண்டல் செய்துகொள்கிறார்களா என நாம் யோசிக்கும் வகையில் நி

காதலில் ஜெயிக்க சொல்லும் இரு பொய்கள் உண்மையானால்... அன்டே சுந்தரானிக்கி - நானி, நஸ்ரியா - விவேக் ஆத்ரேயா

படம்
  அன்டே சுந்தரானிக்கி நானி, நஸ்ரியா இயக்கம் விவேக் ஆத்ரேயா இசை  விவேக் சாகர் சிறுவயதில் நாடகம் நடிக்கும் சுந்தர், அதேபோல ஒரு நாடகத்தை பொய்களை மட்டுமே வைத்து நிஜவாழ்க்கையில் நடத்தினால்.... அதுதான் கதை.  விவேக் ஆத்ரேயாவின் சுவாரசியமான வசனங்களும், படம் நெடுக நீளும் ஆச்சரியமான குட்டி குட்டி விஷயங்களும் மகிழ்ச்சி தருகின்றன. படத்தை உணர்ச்சிகளின் தோராணமாக கட்ட இருக்கிறதே விவேக் சாகரின் இசை.  சுந்தர், பிராமணர். இவரது குடும்பம் பெரியது. எட்டு அண்ணன் தம்பிகள் உள்ளனர். ஆனால் ஆண்பிள்ளை என்றால் சுந்தர் மட்டுமே. இதனால், அவனை காப்பாற்றுவதே முக்கியப் பணி என சுந்தரின் அப்பா நினைக்கிறார் தனது மகனை பாதுகாக்க, அவர் ஜோசியரை நாடுகிறார். அவர் போடும் கண்டிஷன்களால் சுந்தரின் வாழ்க்கை  எந்த விஷயத்தையும் அனுபவிக்க முடியாமல் ஆகிறது. சைக்கிள் கூட லேடி பேர்ட் தான் கிடைக்கிறது. உபநயனப்படி குடுமி வைத்துக்கொண்டு பள்ளிக்கு போகிறான். அனைத்தும் ஜாதகம் தான் காரணம் என சொல்கிறார் சுந்தரின் அப்பா. இதில் உச்சமாக, காலையில் எழும்போது ததாசு தேவர் என்ற தெய்வத்தின் படம் சுந்தரின் அறையில் மாட்டப்படுகிறது.  இதையும் படத்தில் கிண்டல்

செம குறட்டை சாரே!

படம்
  எஸ்ஏபி தனது நூலில், உதவி ஆசிரியர் புனிதன் ஹோட்டல் அறையில் குறட்டை விட்டு தூங்கியதை தனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி கிண்டல் செய்திருப்பதை எழுதியிருக்கிறார். பார்க்க குறட்டைதானே ப்ரோ என தோன்றினாலும், இரவில் எழும் குறட்டை பீதி எழுப்பும். எனது அலுவலகத்தில் கூட பேசிப் பேசியே களைப்பான அலுவலக சகாக்கள் சட்டென குட்டித்தூக்கம் போடும்போது எழும் குறட்டை ஜெனரல் ஏசியை விட அதிக சத்தம் எழுப்புகிறது. நமக்கும் கூட ஆவ்வ....வ்வ.. பாருங்க சொல்லும்போதே கொட்டாவி வந்துவிட்டது. அடுத்து தூக்கம், அதன் பின்னே குறட்டைதான்.  இப்போது குறட்டை தொடர்பான சமாச்சாரங்களைப் பார்ப்போம்.  உலகில் வாழும்  45 சதவீதம் பேருக்கு குறட்டை விடும் பிரச்னை உள்ளது. அதாவது வயது வந்தவர்களுக்குத்தான் சொல்கிறேன். நான்கு நபர்களில் ஒருவருக்கு குறட்டை விடும் பழக்கம். என்பது வாழ்நாள் முழுக்க தொடர்கிறது.  க்யூப் தொழில்நுட்பத்தில் உருவாகும் குர் முதல் ப்ர்... வரையிலான ஒலி கொண்ட குறட்டைகள் நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகள், மதுபானம் அருந்துவது, உடல் பருமன் ஆகியவை காரணமாக உருவாகிறது. ஒலியின் தொனி, லயம், ஸ்ருதிக்கு மூக்கிலுள்ள தசைகளே காரணம். 

அமெரிக்க பெண்ணின் இந்திய தெய்வ முரண்பாடுகளைப் பற்றிய அனுபவத் தொகுப்பு! நூல் புதுசு

படம்
  அமெரிக்கன் கேர்ள் இன் இந்தியா லெட்டர்ஸ் அண்ட் ரீகலெக்ஷன்ஸ் 1963-64 வெண்டி டோனிகர் ஸ்பீக்கிங் டைகர் கல்கத்தாவிற்கு முதன்முறையாக டோனிகர் வரும்போது அவரின் வயது 23. அங்குதான் சிவன், விஷ்ணு கோவில்களில் இருந்த முரண்பாட்டைப் பார்த்தார். காமமும், தூய்மையும் கலந்த வடிவம் அவரை ஈர்த்தது. இந்த நூலில் உள்ள கடிதங்கள் அனைத்துமே இதுதொடர்பாக அவர் எழுதியவையாகும். இந்துமதம், அதன் மூடநம்பிக்கைகள் பற்றி முன்னமே வெண்டிகர் நூல்களை எழுதியுள்ளார்.  டு ரைஸ் எ ஃபாலன் பீப்புள் - ஹவ் நைன்டீன்த் சென்சுரி இண்டியன்ஸ் சா தேர் வேர்ல்ட் அண்ட் ஷேப்டு அவர்ஸ்  ராகுல் சாகர்  ஜக்கர்நட் பழைய சிந்தனைகளை, தாக்கங்களை முன்வைக்கும் நூல்தான் இது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியர்கள் எப்படி யோசித்தார்கள், மதம், வணிகம், உலக நாடுகளுடனான உறவு ஆகியவற்றை பற்றி பல ஆளுமைகள் பேசிய, எழுதிய கருத்துகளை நூல் தொகுத்துள்ளது.  தி பீப்புள் ஆஃப் தி இண்டஸ்  பெங்குவின்  இது ஒரு கிராபிக் நாவல். நிகில் குலாத்தி, ஜொனாதன் மார்க் கெனோயெராஸ்க் நூலில் நிறைய கேள்விகளை உருவாக்கியிருக்கிறார்கள். சிந்து சமவெளி மக்கள் யார், அவர்கள் வாழ்க்கை எப்படி முடிவுக்கு வ

புகைப்படம் எடுப்பது என்பது வேட்டையாடுவதைப் போன்றது! - பாப்லோ பார்த்லோமியூ

படம்
  பாப்லோ பார்த்லோமியூ புகைப்படக்கலைஞர்.  எழுபது, எண்பதுகளில் இருந்ததை விட ஸ்ட்ரீட் போட்டோகிராபி என்பது எப்படி மாறியுள்ளது? இன்று ஒரு பட்டனை தட்டினால் படத்தை எளிதாக பதிவு செய்து பார்த்துவிடலாம். அன்றைய காலத்தில் நீங்கள் ரோல் பிலிமை முழுக்க படம் எடுத்து தீர்த்தால்தான் அதனை புரோசஸ் செய்து படங்களை பார்க்க முடியும். அதற்கு குறிப்பிட்ட நேரமாகும். நீங்கள் வெளிப்புறத்தில் இருந்தால், படங்களை எடுத்து முடித்து அதனை எடிட் செய்து பார்க்க சில மாதங்களே தேவைப்படும். 1989ஆம் ஆண்டு நான் வடகிழக்கு இந்தியாவில் இருந்தேன். அங்கிருந்த நாகா பழங்குடிகளை புகைப்படம் எடுத்தேன். பிறகு ஸ்டூடியோ வந்து அதனை எடிட் செய்து புகைப்படங்களைப் பார்க்க இரண்டு மாதங்கள் ஆனது.  இன்று நீங்கள் பார்க்கும் காட்சிகளை கண்கள் இமைப்பதை விட வேகமாக புகைப்படமாக எடுத்துவிடலாம். ஆனால் காட்சிக்கு பின்னே உள்ள நுட்பம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. குறிப்பிட்ட காட்சியை அவுட் ஆஃப் போகஸ் உத்தியில் அல்லது போகஸ் உத்தியில் எடுக்க நினைத்தால் எப்படி எடுப்பீர்கள் என்றால் பலருக்கும் பதில் தெரியாது. பழைய கால புகைப்பட கலைக்கும் இன்றைக்கும் உள்ள வேறுபாடு இத

அமினின் கதையில் மகிழ்ச்சியான தருணங்களும் உண்டு! - ஃப்ளீ (2021) - அனிமேஷன் டாக்குமெண்டரி

படம்
  ஜோனாஸ் போகெர் ராஸ்முசென் டென்மார்க் இயக்குநர் இவர், ஃப்ளீ(2021) எனும் அனிமேஷன் டாக்குமெண்டரி படத்தை எடுத்துள்ளார். இப்படம், அமின் நவாபி என்ற ஒருவர் ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து தப்பித்து ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு வந்து அங்கிருந்து டென்மார்க் நாட்டுக்கு செல்லும் பயணத்தை விவரிக்கிறது. படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட பெருமையுடையது. இயக்குநரிடம் பேசினோம்.  உங்களுக்கு நவாபி இளம் வயதிலேயே தெரியும். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்கலாம் என்று எப்படி எப்போது தோன்றியது? டென்மார்க் நாட்டின் கிராம பகுதியில் வளர்ந்தவன். அப்போதுதான் ஆப்கானிஸ்தானில் இருந்து சிறுவன் பதினைந்து வயதில் அங்கு வாழ்வதை அறிந்தேன். அவனது கதையை தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டேன். ஆனால் முதலில் அவன் தன் கதையைக் கூற விரும்பவில்லை. நாங்கள் நண்பர்களாக இருந்தாலும் அவனது இறந்தகாலம் மர்மமாகவே இருந்தது. பதினைந்து ஆண்டுகள் கழிந்தபிறகு அவனது கதையை தெரிந்துகொள்ள மீண்டும் கேட்டேன். ஆனால் அவன் கூற முடியாது என மறுத்துவிட்டான். ஆனால் அப்போதே அவன் நான் அதைக்கூற தயாரானதும் உன்னிடம் கூறுகிறேன் என்று சொன்னான். பிறகு நான் அனிமேஷன் டாக்

நகர இளைஞரை மயக்கும் இயற்கையின் பேரழகு! வனவாசி - விபூதிபூஷன் வந்தோபாத்யாய

படம்
  வனவாசி விபூதிபூஷன் வந்தோபாத்யாய விடியல் ரூ.270 மொழிபெயர்ப்பு - த.நா.சேனாபதி நகரவாசி ஒருவர், எப்படி வனத்துக்குள் வேலை செய்ய வந்து வனவாசி ஆகிறார் என்பதே கதை.  தினந்தந்தி போல ஒருவரியில் கதையை இப்படி சொன்னாலும் படிக்கும்போது நாம் பார்க்கும் மனிதர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நாவல் முடியும் வரை புதிய மனிதர்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். நாவலின் புதிய பாணி என கொள்ளலாம்.  கல்கத்தாவில் விடுதி ஒன்றில் தங்கி வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்தான் கதை நாயகன். விடுதி மெஸ்சில் அக்கவுண்ட் வைத்து சாப்பிடுபவருக்கு, வேலை கிடைத்தால் தான் சாப்பாட்டுக்கடனை அடைக்க முடியும். இந்த நிலையில் நண்பர் அழைத்தார் என விழா ஒன்றுக்கு செல்கிறார். அங்கு நிம்மதியாக சாப்பிட்டுவரும்போது கல்லூரி நண்பர் ஒருவரைப் பார்க்கிறார்.  அவர் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் மூலம் பூர்ணியா எனும் காட்டுப்பகுதியில் உள்ள நிலங்களை கவனித்துக்கொள்ளும் வேலைக்கு செல்கிறார். நகரில் இருக்கத்தான் இளைஞருக்கு விருப்பம். ஆனால் வேலை வேண்டுமே என்பதற்காக ஜமீன் காரியாலயத்திற்கு செல்கிறார். அங்கு செல்வதற்கான பயணமே காரியாலய வாழ்க்கை 

பெண்களுக்கான எளிமையான இயற்கை இழைகளைக் கொண்ட துணிகளே லட்சியம்! - இந்து ஸ்ரீவஸ்தவா

படம்
  இந்து ஸ்ரீவஸ்தவா ஃபீல்குட் எனும் நிறுவனம் மூலம் கைகளால் நெய்யும் இழைகளைக் கொண்ட துணிகளை தயாரிக்கிறார் இந்து.  பெண்களின் அலமாரியில் 50 சதவீத உடைகளை கைகளால் நெய்த துணிகளாக மாற்றவேண்டும் என்பதே இந்துவின் லட்சியம்.  பிறருக்கு உதவவே தொழிலை தொடங்கினீர்களா என்ன? என்னுடைய மகள் தன்னுடைய உடை பற்றி எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பாள்.  வேலை செய்யும் இடம், குடும்ப நிகழ்ச்சிகள் என அவள் அணியும் ஆடைகள் அனைத்தின் மீதும் இப்படி புகார்களை குவித்தாள். மகள் என்பதால் புகார்களை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாகவே நிறைய பெண்களுக்கு தங்கள் உடைமீது குறைகள், புகார்கள் உண்டு. அப்போது இந்திய ஜவுளித்துறை பற்றிய நூலொன்றை படித்தேன். அப்போதுதான் துணிகளில் பிரச்னை இல்லை. அதை நெய்யும் இழைகள் இயற்கையானவையாக இருக்கவேண்டும் என முடிவு செய்தேன். அதை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்துவை தொடங்கினேன். தொன்மைக்காலத்தில் மக்கள் தங்கள் பகுதியில் என்ன கிடைக்கிறதோ அதைத்தான் வாங்கி உடுத்துவார்கள். நான் தொடக்கத்தில் எனது மகளுக்காகவே உடைகளை வடிவமைத்தேன். அவை எளிமையான அழகுடையவை.  உங்களுடைய ரோல்மாடல் யார்? எனக்கு கோகோ சேனல் என்