இடுகைகள்

?#ஏன்?எதற்கு?எப்படி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழச்சாறு vs ஸ்மூத்தி Vs கார்பன் பானங்கள் எது சிறந்தது?

படம்
pixabay உடனுக்குடன் பிழியப்பட்ட பழச்சாறு, பழத்திலிருந்து எடுக்கப்பட்ட கான்சென்ட்ரேட் என இரண்டு இருக்கிறது. இவற்றில் எது நல்லது? இரண்டிலும் வித்தியாசம் ஏதுமில்லை. கான்சென்ட்ரேட்டில் கூடுதலாக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதாவது ப்ரக்டோஸ். இது கலோரி அளவைக் கூட்டுகிறது. இது சிறுவர்களின் பற்களை பெருமளவு பாதிக்கிறது. பெப்சி, கோலா இவற்றைவிட பழரசம் சிறப்பானது என நினைப்பீர்கள். ஆனால் பழரசத்தில் சர்க்கரை அளவை குறைத்துக்கொண்டால் மட்டுமே நீரிழிவு போன்ற பிரச்னைகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். இல்லையெனில் நீரிழிவு பிரச்னை பெரியவர்களுக்கு மட்டுமல்ல ப்ரூட்மிக்ஸ் குடிக்கிற சிறுவர்களுக்கும் வந்துவிட வாய்ப்பு உள்ளது. பழங்கள், காய்கறிகளை கலந்து செய்யும் ஸ்மூத்தி பழச்சாறுகளுக்கு நல்ல மாற்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவற்றை கவனமாக தயாரிக்கவேண்டும். ஒவ்வொரு பழங்களுக்கும் உள்ள தன்மையைப் பொறுத்தே அவற்றை ஒன்றாக சேர்க்கவேண்டும். இவற்றைக் குடித்தபின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இல்லையெனில் இதிலுள்ள இயற்கையான சர்க்கரையும் கூட பற்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பழச்சாறுகளையோ

உணவுத்துறையில் பயன்படும் பூஞ்சைகள்!

படம்
பூஞ்சைகளை அறிவோம்! பூஞ்சைகள் நுண்ணுயிரிகளில் முக்கியமானவை. இவை காளான்களை புரதம் மிக்க உணவாக மாற்றுகின்றன. நேரடியாக இல்லாவிட்டாலும் பிரெட், சீஸ், சோயா சாஸ் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றன. பூஞ்சைகள் பல்வேறு உணவுப்பொருட்களை பதப்படுத்துதலில் பயன்படுகின்றன.  பூஞ்சைகளில் நூற்றுக்கும் அதிகமான நச்சு இனங்கள் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. இறைச்சிக்கு மாற்றான உணவுப்பொருகளில் பூஞ்சைகள் பயன்படுகின்றன. விஷமுள்ளவை, விஷமற்றவை என்பதில் பெரிய வேறுபாடுகள் கிடையாது. கவனமாக காளான் குடைகளை பார்த்தால் மட்டுமே அறிய முடியும். இதில் உருவாகும் நச்சை மைக்கோடாக்சின் என்கின்றனர். மைக்கோடாக்சின் என்பது பொதுப்பெயர்தான். காளான்களில் மட்டுமே உருவாகும் நச்சை அமாடாக்சின் என்கிறார்கள். வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளில் ஆஸ்பெர்கில்லஸ் பேவஸ் எனும் பூஞ்சை வளருகிறது. இதனை கவனிக்காமல் விலங்குகளோ மனிதர்களோ சாப்பிட்டு விட்டால் கல்லீரல் கெட்டு இறப்பு நேரும். மனிதர்களுக்கு கல்லீரல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு உள்ளது. நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்

உருளைக்கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?

உருளைக்கிழங்கில் என்ன இருக்கிறது? தெற்கு அமெரிக்காவில் முதல் பயிராக விளைவிக்கப்பட்டு ஏழாயிரம் ஆண்டுகளாகிறது. உருளைக்கிழங்கு பல்வேறு பட்டினி, பஞ்ச காலங்களில் முக்கியமான உணவுப்பொருளாக இருந்திருக்கிறது. அப்படி இல்லாத காலங்களில் தீனிப் பொருளாக சிப்ஸ், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் என்ற பெயரில் பரிமாறப்பட்டுள்ளது. இன்றும் சமோசாவில் உருளைக்கிழங்கை விட்டால் கதி மோட்சமில்லை. பெருமளவு விலை ஏறாத காய்கறி இது ஒன்றுதான். அதனால்தான் எப்போதும் ஓட்டல் சாம்பாரில் இதனை மிதக்க விடுகின்றனர். உருளைக்கிழங்கு புகழ்பெற்றதற்கு காரணம் அதிலுள்ள ஸ்டார்ச்தான். இதில் விட்டமின் சி, பி6, ஆன்டிஆக்சிடன்ட்ஸ், பொட்டாசியம் ஆகியவை உள்ளது. நார்ச்சத்து அதிகம். வேகவைத்து சாப்பிட்டால் சத்துகள் கிடைக்கும். பொரித்தால் கொழுப்பு ஏறிவிடும். உருளைக்கிழங்கிலும் பின்னர் நமது உடலிலும்தான். கேக், ஐஸ்க்ரீம், சாலட், பிஸ்கெட் என பல்வேறு பொருட்களின் தயாரிப்பில் உருளைக்கிழங்கு நிலைய வித்வான் போல எப்போதும் இருக்கும். காரணம் அனைத்து காய்கறிகளை விட காசு குறைவு. மாவுச்சத்து அதிகம். 1995ஆம்ஆண்டு விண்வெளியிலும் உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட

சோயா பால் குடித்தால் ஹார்மோன் மாறுமா?

மிஸ்டர் ரோனி சோயாபீன்ஸ் பயன்படுத்தினால் பெண்களைப் போன்ற உடல் அமைப்பு ஆண்களுக்கு வருமா? பசுவிலிருந்து பெறும் பாலுக்கு மாற்றாக சோயா பாலை ஆரோக்கிய வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். சோயா பாலை அதிகம் பயன்படுத்தினால் உடலில் ஹார்மோன் மாற்றம் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் நாம் நினைப்பது போல பெண்களுக்கான மார்பகங்கள் ஆண்களுக்கு உருவாகி விடாது. உணவுதான் உடலை உருவாக்குகிறது. எனவே அது சோயா உணவுகளுக்கும் பொருந்தும். பிற உணவுகளை விட அதிக புரதம் கொண்டது சோயா. நாம் சாதாரணமாக சமைத்து சாப்பிடும் பீன்ஸ் எடமாமே என்று ஜப்பானில் அழைக்கப்படுகிறது. இது முதிர்ச்சியடையாத பீன்ஸ். முதிர்ச்சி அடைந்த பீன்ஸ் மூலம்தான் டோபு, பால், சாஸ் உள்ளிட்டவை பெறப்படுகிறது. முதிர்ச்சியடைந்த பீன்ஸ் மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். பழமையான முறையில் தயாரிக்கப்படும் சோயா சாஸில் ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம். இன்று நவீன முறையில் பல படிமுறைகளைத் தவிர்த்துவிட்டு சந்தைக்காக வேகமாக தயாரிக்கின்றனர். இதனால் அவற்றில் சத்துகள் குறைவு. அடிப்படையான முறையில் தயாரிக்கப்படும் சோயா சாஸிலுள்ள ஆன்டி ஆக்சிடன்களின் அளவு

மீன் பிடிப்பதைத் தடை செய்தால் என்னாகும்?

படம்
மிஸ்டர் ரோனி மீன்களைப் பிடிப்பதை தடை செய்துவிட்டால் என்னாகும்? ஓராண்டிற்கு மீன்களை நாம் இருபது கிலோகிராமிற்கு மேல் உணவாக கொள்கிறோம். ஏறத்தாழ பிற கோழி, ஆடுகளை விட அதிகமாக மீன் உணவுகளை மக்கள் சாப்பிடத் தொடங்கியுள்ளனர். இரண்டு மடங்கு வேகமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இயற்கை நம் உணவுத்தேவைய நிறைவேற்றுகிறது. அதற்காக அதனைப் பயன்படுத்துவதும் தவறில்லை. ஆனால் அதிகளவு மீன்களை பிடித்துக்கொண்டே இருந்தால் கடல் பரப்பு கடுமையான பாதிப்பைச் சந்திக்கும். கடல் மாசுபாடும் ஏற்படும். நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீன்களை பிடித்து அதன் வழியாகவே தங்கள் வாழ்வை நடத்தி வருகிறார்கள். மீன்பிடிக்க தடை விதித்தால் இவர்களின் வாழ்விற்கு அரசு வழிகண்டுபிடிக்கவேண்டும். மேற்குலகில் சிவப்பு இறைச்சியையும் சோயா பொருட்களையும் புரத  சத்திற்காக நம்பியுள்ளனர். தெற்காசியாவில் புரதம் பெறுவதற்கான மீன்களையே பெரும்பாலானோர் நம்பியுள்ளனர். இதற்காக கடலில் மீன்களைப் பிடிக்க சில மாதங்கள் தடை விதிக்கலாம். இதன்மூலம் மீன் வளம் முற்றாக அழியாமல் காப்பாற்ற முடியும். மீன் பிடிக்க செல்பவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்

ரேடியோ அலைகளை விலங்குகள் பார்க்க முடியுமா?

படம்
மிஸ்டர் ரோனி வைஃபை மற்றும் ப்ளூடூத் சிக்னல்களை பிற விலங்குகள் பார்க்க முடியுமா? வைஃபை மற்றும் ப்ளூடூத் சிக்னல்கள் 6 செ.மீ முதல் 12.5 செ.மீ வரையிலான அலைநீளம் கொண்டவை. இந்த அலைகளை மனிதர்கள் பார்ப்பது கடினம். வௌவால்கள், சில மீன்கள் மற்றும் சில விலங்குகள் மட்டுமே இந்த அலைகளைக் காண முடியும். மிக நீளமான அலைநீளம் கொண்ட அலைகள் குறைந்த சக்தியை வெளிப்படுத்துகின்றன. இதைப்பின்பற்றி பாக்டீரியா டிஎன்ஏ கூட ஆற்றலை வெளியிடுகிறது என பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் தன் ஆய்வை வெளியிட்டார். 2009ஆம் ஆண்டு இவர் செய்த ஆராய்ச்சியால் கடும் கண்டனங்களைச் சந்தித்தார். உண்மையில் இப்படி நுண்ணுயிரிகள் ஆற்றலை வெளிப்படுத்துகின்றனவா என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரங்களும் கிடையாது. நன்றி - பிபிசி காய்கறிகளை நாம்தான் வேகவைத்துப் பயன்படுத்துகிறோம். அதை எதற்கு தண்ணீரில் கழுவ வேண்டும்? நல்ல கேள்வி. பாக்டீரியா, வைரஸ் போன்றவை வேக வைக்கும் போது அழிந்துவிடும் என்பதை உணர்ந்து கேட்டிருக்கிறீர்கள். ஆனால் செயற்கையான உரம், பூச்சிக்கொல்லி மிச்சங்கள், காய்கறிக்கடைக் காரரின் வியர்வை, அவற்றைக் கொண்டுவரும் போது ஏற்ப

பரிசு தரும்போது குழப்பம் ஏற்படுகிறதா?

படம்
மிஸ்டர் ரோனி பிறருக்கு பிறந்தநாள், திருமணம் என வரும்போது பரிசுகளைத் தேர்ந்தெடுக்க மிகவும் திணறுகிறேன். ஏன் இப்படி? எங்கள் அலுவலகத்தில் கூட ஒருவர் கல்யாணத்திற்கு ரெடியானார். அவர் பத்திரிகை வைக்கும்போதே அலுவலக சகா, நான் திருமணத்திற்கு வர முடியாது என்று சொன்னார். சொல்லிவிட்டு உடனே இன்டக்ஷன் ஸ்டவ்வை எடுத்து நீட்டிவிட்டார். அதை எதிர்பாரக்க நண்பர், சட்டென முகம் சுருங்கிவிட்டார். பின்னர் சமாளித்துக்கொண்டு பரிசை ஏற்றுக்கொண்டார். இங்கு இரண்டு விஷயங்கள் நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று திருமணம் செய்பவருக்கும் பரிசளித்த நண்பருக்கும் அவ்வளவு நெருக்கம் கிடையாது. இரண்டு, திருமணம் நடந்து முடிந்த பிறகு கூட அவர் இன்டக்ஷன் ஸ்டவ்வைத் தந்திருக்கலாம். உடனடியாக பரிசு தந்து  அதன் வழியாக நான் வரவில்லை என்பது நாகரிகமான முறை அல்ல. உங்களுக்கு நேருவதும் இதுதான். நீங்கள் பரிசளிக்கப் போகிறவர் உங்களுக்கு நெருக்கமானவர் என்றால எளிதாக பரிசைத் தேர்ந்தெடுத்து விடலாம். ஆனால் அவருக்கு என்ன பிடிக்கும், அமேசானில் விஷ் லிஸ்ட் என எதைத்தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார் என பார்க்காமல் இருந்தீர்கள் என்றால் கஷ்டம்தான

குத்துச்சண்டை மக்களுக்கு ஆர்வமூட்டுவது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி இயல்பாகவே இருவர் சண்டை போட்டால் அதைப் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறதே ஏன்? உடனே இதனை போபியா என்று கூற முடியாது. பெண்களை மணக்க ஆண்கள் ஒருவருடொருவர் போடாத சண்டையா என்ன? இதனால்தான் வண்டி விபத்தாவது முதல் ட்ராபிக்கில் வண்டியை மேலாப்பில் உரசினவர் வரை வாங்கிப் போட்டு குத்தினால் கூட வேடிக்கை பார்க்க கூட்டம் கூடுகிறது. மக்களின் ஆதிகாலத்து இயல்பை காசு பண்ணத்தால் குத்துச்சண்டை போட்டிகள் தொடங்கின. இதன் காரணமாக பிற விளையாட்டுகளை விட தற்காப்புக்கலை சார்ந்த போட்டிகள் பிரபலமாகி வருகின்றன. தன்னுடைய வலிமை மற்றவருடையதை விட அதிகம் என்று நினைப்பதுதான் இப்போட்டிக்குக் காரணம். நன்றி - பிபிசி 

கையைக் கழுவினால் போதுமா? மிஸ்டர் ரோனி

படம்
giphy மிஸ்டர் ரோனி  கையைக் கழுவினால் போதுமா? கொரோனா பீதியால் பல்வேறு அலுவலகங்களிலும் ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை ஹோல்சேல் விலைக்கு வாங்கி வருகிறார்கள். இதனால் ஏதேனும் நன்மை உண்டா என வாங்கி வைத்தவர்களை கேட்க முடியாது. எனவே நமக்கு நாமே ஆராய்ந்து உண்மையை அறிவோம். தும்மல் , இருமல் மூலம் தெறிக்கும் சளி, உமிழ்நீரில் வைரஸ் கிருமிகள் பரவுகின்றன. இதற்கு கொரோனாவும் விதிவிலக்கல்ல. மேற்சொன்ன சமாச்சாரங்களை நாம் அடக்க முடியாது. இதனால் இவை மக்கள் பெருக்கம் கொண்ட நாடுகளில் எளிதாக பரவும். மாஸ்க் அணிவதோடு, கைக்குட்டையையும் பாதிக்கப்பட்டவர்கள் வைத்துக்கொண்டால் அடுத்தவர்களுக்கு நோய் பரவாது. இவர்கள் பயன்படுத்திய டிஷ்யூ பேப்பரையும் சரியானபடி குப்பைத்தொட்டியில் போடுவது அவசியம். சானிடைசரை விட சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவும்போது கிருமிகளை எளிதாக கைகளிலிருந்து அகற்ற முடியும். அவற்றை கொல்ல முடியாது. ஆனால் சானிடைசரில் 95 சதவீதம் ஆல்கஹால் இருந்தால் வைரஸ்களை எளிதாக அழிக்க முடியும். இல்லாதபட்சத்தில் நோய் நமக்கு வராது என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இருக்கலாம். வைரஸ்கள் உங்கள் கைகளிலேயே இருக்கும். அவ்வ

சமையலுக்குப் பயன்படும் உப பொருட்கள்!

படம்
உப பொருட்கள் உணவில் பல்வேறு பொருட்கள் சுவைக்காகவும், அவற்றை குறிப்பிட்ட தரத்தில் நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. பொருட்களை நீண்ட நாட்களுக்கு சிறப்பு அங்காடிகளில் வைத்து விற்கவும் இப்பொருட்களே உதவுகின்றன. அவை பற்றி பார்ப்போம். பிரசர்வேட்டிவ்ஸ் இவை ஒரு பொருள் வேதிவினை புரிந்து அதன் தன்மை மாறிவிடாமலிருக்கவும், அதிக நாட்கள் அதனைப் பயன்படுத்தவும் உதவுகின்றன. இக்காலகட்டத்தில் அதன் மணம், சுவை, திடம் மாறாமல் இருக்க இவை உதவுகின்றன. ரெடி டூ ஈட் உணவுவகைகளில் அதிகம் பிரசர்வேட்டிவ்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்வீட்னர் சர்க்கரைக்கு மாற்றாக உதவும் செயற்கையான இனிப்பு சுவையூட்டிகள். சாக்கரின், ஆஸ்பெர்டாமே ஆகிய மாற்று இனிப்பு வேதிப்பொருட்கள் உணவுப் பொருட்களில் பயன்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதால் உணவுப்பொருட்களின் கலோரிகளை நாம் கட்டுப்படுத்த முடியும். எமுல்சிஃபயர்ஸ் திரவப் பொருட்களை ஒன்றாக கலக்கியிருப்பதை இப்படி சொல்லலாம். எண்ணெய்யையும், நீரையும் ஒன்றாக கலக்கி உணவில் சேர்ப்பார்கள். மயோனிஸ் போன்ற பொருட்களை இப்படி உருவாக்குகிறார்கள். பிளேவரிங் இயற்கையாக கிடைக்கும் உண

சிரிப்பு சமூகத்திற்கு உதவுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சிலரைப் பார்த்து நாம் பற்கள் தெரியாமல்  புன்னகைக்கிறோம். சிலரோடு வெடித்து சிரிக்கிறோம். இது எதனால் நேருகிறது? வி.ஐ.பி உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்க பணம் நீட்டுகிறீர்கள். சரவணபவன் விலையில் அவ்வளவு திருப்தி தராத உணவு அது என உங்கள் மனசு சொல்லுகிறது. தினசரி அங்கு வந்து சாப்பிட்டாலும அது உங்கள் மனதில் குறையாக இருக்கிறது. கல்லாப்பெட்டியில் உட்கார்ந்திருப்பவரிடம் காசு கொடுத்துவிட்டு மீதிச் சில்லறையை வாங்கிவிட்டு லைட்டாக புன்னகைத்து விட்டு தலையாட்டிவிட்டு நகர்கிறீர்கள். இது வற்புறுத்தலாக புன்னகை. கிரிக்கெட் வீரர் தோனியைப் பார்த்திருப்பீர்கள். சிரிக்காத சூழலில் அவர் முறைப்பது போல தெரியும். இதனால் அவர் புன்னகையுடன் இருப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார். பொதுவாக உளவியல் ரீதியாக பாருங்களேன். உங்களுக்குப் பிடித்த ஒருவருடன் பேசும்போது இயல்பாக உதடுகளைப் பிரித்து பற்கள் தெரிய சிரிப்பீர்கள். ஆனால் அதுவே பொதுவான ஒருவருடன் பேசும்போது அது சாத்தியமில்லை. மரியாதையான எளிய புன்னகை மட்டுமே செய்வீர்கள். காரணம் சமூகரீதியாக புன்னகை என்பது பிறருடன் பழகுவதற்கு அடிப்படையா

டிஜிட்டல் கருவிகள் உங்களை கண்காணிக்கின்றனவா?

படம்
மிஸ்டர் ரோனி அலெக்ஸா, சிரி, கூகுள் அசிஸ்டென்ட் இன்று அனைத்து இடங்களிலும் வந்துவிட்டது. ஸ்மார்ட்போனில் கூட ஹே கூகுள் என்று குரல் கொடுத்தால் போதும். இவை நம்மை அறியாமல் தகவல்களை பதிவு செய்யும் வாய்ப்புகள் உள்ளதா? காளத்தி நியூஸ் மார்ட்டில் ரோஸ்மில்க் கிடைக்குமா என்பது போன்ற கேள்விதான் இது. பதிவு செய்யாமல் என்ன? டிஜிட்டல் உதவியாளர்களது வேலையை உங்களைக் கவனித்து புரிந்துகொள்வதுதான். அவற்றை விழிப்படையச் செய்யும் சில வார்த்தைகளை பதிந்து வைத்திருப்பார்கள். ஹே கூகுள் என்பது போல சிரி என்றால் ஆப்பிளின் இயக்கமுறைமை தன் பணியைத் தொடங்கிவிடும். இப்படி தினசரி பலமுறை விழித்தெழுந்து உரையாடல்களை பதிவு செய்துள்ளதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன. நீங்கள் யாரிடமாவது உரையாடிக்கொண்டிருப்பீர்கள். அல்லது நெட்பிளிக்ஸில் படம் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அதில் வரும் சில வார்த்தைகள் டிஜிட்டல் உதவியாளர்களை விழிப்புணர்வுக்கு கொண்டு வரும். அப்படி வந்தால் அடுத்த ஆறு நொடிகளுக்கு ஒலிகளை பதிவு செய்யும். இதனை நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் செய்த ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது. விபத்தாக சில வார்த்தைகளைக் கேட்ட

சிலந்தி தான் கட்டிய வலையில் எப்படி மாட்டிக்கொள்ளாமல் இருக்கிறது?

படம்
giphy மிஸ்டர் ரோனி சிலந்தி தன் வலையில் இரைகளை எளிதாக வீழ்த்துகிறது. ஆனால் அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி? சிலந்தி பசையை வாயிலிருந்து குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குவித்து வைக்கிறது. அந்த இடங்களில் மட்டும் சிலந்தி நடந்து செல்வதில்லை. மேலும், அதன் கால்களில் வலையிலுள்ள பசையில் இருந்து விடுபடும்படியான அமைப்பு உள்ளது. நகம் போன்ற அமைப்பு அது. எனவே, சிலந்தி தான் கட்டியவலையில் சிக்கிக்கொள்வதில்லை. வைரஸ்கள்தான் நோயை ஏற்படுத்துகிறதா? அறிவியல்படி இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் அந்த பாதிப்பிற்கான தூண்டுதலாக இருக்கிறது என சொல்லலாம். எப்படியெனில், வைரஸ் பிற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நோய் பரப்பிய குறிப்பிட்ட விலங்குகளான வௌவால், பன்றி, கொசு ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் நேருவதில்லை. ஆனால் மனிதர்களுக்கு வாந்தி, பேதி, காய்ச்சல், உடல் கொப்புளங்கள் ஏற்படுகிறது. இதன் விளைவாக உள்ளுறுப்புகள் சேதமடைந்து மரணம் நேருகிறது. வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்திதான் காய்ச்சலை, உடல்நலிவை ஏற்படுத்துகிறது. வைரஸை முழுமையாக உடல் எதிர்ப்பதால் நமக்கு உடல் நலிவின் தீவ