இடுகைகள்

இந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொழியைப் பேச தெரியாமல் இன்னொரு மொழி படத்தில் நடிக்க முடியாது! - அர்ஜூன் ராம்பால், இந்தி நடிகர்

படம்
  அர்ஜூன் ராம்பால், இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால் இந்தி நடிகர் லண்டன் டயரிஸ் படத்தில் உங்களுடைய பாத்திரம் தனிப்பட்ட ரீதியில் தாக்கம் ஏற்படுத்தும்படி இருந்ததா? தனியாக யாரும் இல்லாமல் ரகசியங்களை தேடித்திரியும் துப்பறிவாளன் ஒருவரின் கதை. பொதுவாக நாம் அனைவரும் பெருந்தொற்று காலத்தில் தனியாக இருந்திருப்போம். அப்போது கூட நமக்கென குடும்பம், மனிதர்கள் என ஒரு வட்டாரம் இருந்திருக்கும். ஆனால் இப்படி ஏதுமின்றி ஒரு மனிதன் இருந்தால் எப்படியிருக்கும்? நான் ஏற்று நடித்த பாத்திரம் அப்படித்தான் எனக்குள் சுவாரசியமான தாக்கத்தை ஏற்படுத்தியது.  ஓடிடி உங்களுக்கு சவாலான பாத்திரங்களை வழங்கியதா? அப்படி சொல்ல முடியாது. கடந்த சில ஆண்டுகளாக நான் நடித்த பல படங்கள் தவறான தேர்வுகளைக் கொண்டவை. அபர்ணா சென்னின் தி ரேப்பிஸ்ட், தாக்கத் ஆகிய படங்களை நான் தேர்ந்தெடுத்தேன். இவை உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டவை. நீங்கள் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்ததே? நடிக்க கேட்டார்கள். எனக்கு தெலுங்கு மொழி தெரியாது. இந்த நிலையில் அங்கு போய் எப்படி நடிப்பது என நான் என்னால் முடியாது என மறுத்துவ

ஒருவரை பலவீனங்கள் கொண்ட மனிதராக காட்சிபடுத்தினால் பிரச்னையில்லை! - இயக்குநர் ஷியாம் பெனகல்

படம்
  இயக்குநர் ஷியாம் பெனகல் படம் -  IE ஷியாம் பெனகல் திரைப்பட இயக்குநர் முஜீப் - தி மேக்கிங் ஆப் எ நேஷன் எனும் ஷேக் முஜிபர் ரஹ்மான் சுயசரிதையை படமாக எடுத்துள்ளார். இப்படத்தை வெளியிட தயாராக உள்ளார்.  இயக்குநர் ஷியாம் பெனகல் படம் - இந்தியா டுடே பொதுவாக அரசியல் சார்ந்த ஒருவரின் வாழ்க்கையை சுயசரிதையாக எடுப்பதில் நிறைய ஆபத்துகள் உள்ளன. இதை எப்படி எதிர்கொள்ள நினைத்துள்ளீர்கள்? படத்தில் ஒருவரை மனிதராக பார்க்கும் தன்மையை இழக்கவிட்டுவிடக் கூடாது. அப்படி செய்தால், நீங்கள் உருவாக்கும் படம் சூப்பர்மேன் தனமாக வாழ்க்கையைத் தாண்டியதாக உருவாகிவிடும். ஒரு மனிதரின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவரின் பலவீனங்களையும் பார்க்கத்தான் வேண்டும். அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் பலவீனங்கள் உண்டு. அதைத்தாண்டி அவரின் திறன், பலம் இருக்கிறதா என்பதை பாருங்கள். அதை யாரும் ஒருவரிடமிருந்து அகற்றி விட முடியாது. இதை நீங்கள் மனதில் கொண்டால் எந்த பிரச்னையும் வராது.  ஷேக் முஜிபர் ரஹ்மானிடமிருந்து இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள என்ன விஷயங்கள் இருக்கின்றன? நல்ல பழக்கவழக்கங்களைக் கூறலாம். அவர் தனது மக்களை நேசித்தார். அவர்கள

கனவு காண்பதில் எந்த சமரசமும் தேவையில்லை! - சித்தானந்த் சதுர்வேதி

படம்
சித்தானந்த் சதுர்வேதி  நடிகர்.  உங்கள் வாழ்க்கை இப்போது எப்படி மாறியிருக்கிறது? கல்லி பாய் படத்தில் நடிக்கும்போது நான் ராப் பாடல்கள் மற்றும் கவிதைகளை எழுதிக் கொண்டு இருந்தேன். நான் கிடைக்கும் இடைவெளியில் பாடல்களை எழுதிக்கொண்டிருப்பேன். இதைப்பார்க்கும், விஷயத்தை கேள்விப்படும் பலரும் நான் உண்மையில் ராப்பாடகர் என நினைப்பார்கள். நான் எழுதுவது மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.  பண்டி ஆர் பப்ளி படத்தின் கதையைக்கேட்ட பிறகு, அந்த பாதிப்பில் நான் நீண்ட பாடல் ஒன்றை எழுதினேன். எனது பாத்திரங்களை மையப்படுத்தி நான் டைரி ஒன்றை எழுதி வருகிறேன். நான் அதை எழுதுவதோடு அதனை பதிவு செய்தும் வருகிறேன். நடிப்பிற்கு நான் இப்படித்தான் தயாராகிறேன். படப்பிடிப்பு தொடங்கும்போது, நான் இப்படி பதிவு செய்த எனது குரலை கேட்பேன். இது கதாபாத்திரத்திற்கு ஏற்ப தயாரித்துக்கொள்ள உதவுகிறது. நான் இப்படி பாத்திரத்திற்குள் உள்ளே சென்றபோது, அந்த பாத்திரம் எப்படி யோசிக்கும் என்றுதான் நினைப்பேன். சிந்திப்பேன். நான் இப்படித்தான் எனக்கு கொடுக்கப்படும் பாத்திரங்களை நடிக்கிறேன். எழுதுவதில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி? ச

இந்தி மொழியை விட ஆங்கிலத்தில் நிறைய தகவல்கள் ஆதாரங்கள் உள்ளன! - எழுத்தாளர் கீதாஞ்சலி

படம்
  கீதாஞ்சலி ஸ்ரீ எழுத்தாளர் டெய்ஸி ராக்வெல் மொழிபெயர்ப்பாளர் இவர் எழுதிய ரெட் சமாதி என்ற நூல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் பெயர், டாம்ப் ஆப் சாண்ட். இதனை டெய்ஸி ராக்வெல் என்ற பெண்மணி மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் தற்போது புக்கர் பரிசுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தி நூல் ஒன்று, இப்பரிசு பட்டியலில் இடம்பெறுவது அரிதானது.  கணவர் இறந்தபிறகு, மனைவி பாகிஸ்தான் செல்கிறார். தனது வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களை அடையாளம் காண்கிறார் என்று எழுதியிருக்கிறீர்கள். எப்படி இப்படி கற்பனை செய்து எழுதினீர்கள்? கீதாஞ்சலி - இந்த நூலை எழுத எனக்கு ஏழு ஆண்டுகள் ஆனது. முதிய பெண் பற்றிய பிம்பம்தான் கதைக்கு முக்கியமானது. அவள் கணவரை இழந்திருக்கிறாள். இதுவரை அவள், குடும்பம், கணவன் என வாழ்ந்ததில் பிறர் சொல்லியே அவளது வாழ்க்கை நடந்து வந்திருக்கிறது. இதன் விளைவாக அவள் தனது வாழ்க்கை மீது கொண்ட ஆர்வத்தையே இழந்திருக்கிறாள். கணவரின் இறப்பு பெரும் விடுதலையை அடையாளம் காட்டுகிறது. இனி தன்னுடைய வாழ்க்கை புத்துணர்வு பெறவேண்டும் என நினைக்கிறாள். அதன் பொருட்டே எல்லைகளால் பிரிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான்

தண்ணீரைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டி! அனுபம் மிஸ்ரா -காந்தியவாதி, சூழல் செயல்பாட்டாளர்

படம்
  தண்ணீர் குரு - அனுபம் மிஸ்ரா மகாராஷ்டிரத்தின் வார்தா நகரில் பிறந்த ஆளுமை இவர். புகழ்பெற்ற இந்தி கவிஞர் பவானி பிரசாத் மிஸ்ராவின் மகன். ஆனால் அப்பாவின் வழியில் எதையும் செய்யாமல் தனக்கான செயல்பாட்டை தீர்மானமாக வகுத்துக்கொண்ட மனிதர்.  நீர்சேகரிப்பு, மழைநீர் சேகரிப்பு முறைகளை தன் ஆயுள் முழுவதும் பிரசாரம் செய்தார். எப்படி மெல்லிய குரல் கொண்ட காந்தியின் கருத்து பல கோடி மக்களிடம் சென்று சேர்ந்ததோ அதேபோல்தான் தனது செயல்பாடு வழியாக தனது பெயரை மக்களை சொல்ல வைத்தார்.  வறட்சியில் பாதிக்க ஏராளமான மாநிலங்களுக்கு களப்பணியாக சென்றார். அங்கு சென்று, அம்மக்கள் தொன்மைக் காலத்தில் என்னென்ன முறையில் மழைநீரை சேமித்தார்களோ அதனை அடையாளம் கண்டார். இதனை ஆய்வு செய்வதோடு, நூலாகவும் எழுதினார். இப்படித்தான் எட்டு ஆண்டுகள் ஆய்வு முடிவில் ராஜஸ்தான் நீர்நிலைகள் பற்றி நூல் ஒன்றையும் எழுதினார். நூல் எழுதுவதும் அதனை வெளியிடுவதும் முக்கியம் அல்ல. அதில் முக்கியமான வேறுபாடு, ஆங்கிலம் தெரிந்தாலும் கூட மக்களுக்கு விஷயத்தைச் சொல்லுவதற்கு ஏதுவாக இந்தியில் அனைத்து நூல்களையும் எழுதினார்.  தான் எழுதிய அனைத்து நூல்களையும் கிரியேட்

நடிகர்களின் தொழில்வாழ்க்கை நீட்டிக்கப்பட்டிருக்கிறது! - இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி

படம்
  மிதுன் சக்கரவர்த்தி மிதுன் சக்கரவர்த்தி இந்தி நடிகர்  நீங்கள் 370 திரைப்படங்களுக்கு மேல் நடித்துவிட்டீர்கள். புதிதாக படம் தொடங்கும்போது பதற்றமாக இருக்குமா? பதற்றம் இருக்காது. ஆனால் நடிக்கும் குழு புதிது என்பதால் முடிந்தளவு கவனமாக இருப்பேன். அக்குழுவோடு முழுமையாக இணைய இரண்டு மூன்று நாட்கள் தேவை. ஜோக்குகளை சொல்லி அனைவரிடம் பேசினால்தான் நான் மூத்த நடிகர் என்பதை பலரும் மறப்பார்கள்.  நீங்கள் நடிக்க வந்து 46 ஆண்டுகள் ஆகிறது. அன்றிலிருந்து இன்றுவரை ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன என்று சொல்லுங்கள்.  எண்பது, தொண்ணூறுகளில் ஐந்து பாட்டு, ஐந்து பைட், நிறைய வசனங்கள் என இயங்கினோம். இப்போது முக்கியமான பாத்திரங்களில் பெரிய நடிகர்களே நடித்து வருகிறார்கள். இப்படி நடித்தால் நடிகர்களின் தொழில் வாழ்க்கை இன்னும் நீளும்.  அமேசானின் பெஸ்ட் செல்லர்ஸ் தொடரில் நடிக்கிறீர்கள் அல்லவா? அதில் போலீஸ் பாத்திரம். அவரின் பாத்திரத்தை பிறர் எளிதாக கணிக்கவே முடியாது. தனக்கென தனி யூடியூப் சேனலை வைத்து கொண்டிருக்கும் அதிகாரி. நகரில் எங்கு என்னென்ன உணவு கிடைக்கும் என பேசிக்கொண்டே இருப்பவர். அதேசமயம் இரக்கமில்லாமல் நடந்துகொ

பல்வேறு மொழிகளில் பாடலைப் பாடுவது கடினமானது! - பாடகி உஷா உதூப்

படம்
  பாடகி உஷா உதூப் உஷா உதூப்  பாடகி அண்மையில் இவரின் தி குயின் ஆப் இந்தியன் பாப் என்ற சுயசரிதை நூல் வெளியாகியுள்ளது.  நீங்கள் பதினேழு இந்திய மொழிகளிலும் நான்கு வெளிநாட்டு மொழிகளிலும் பாடியிருக்கிறீர்கள். தாய்மொழி அல்லாத மொழிகளில் பாடுவது கடினமானதா? இப்படி பல்வேறு மொழிகளில் பாடுவது கடினமானதுதான். எனக்கு தாய்மொழி அல்லாத மொழிகளில் பாடும்போது பாடலை நான் எனக்காக மூன்றுமுறை எழுதி வைத்துக்கொள்வேன். குறிப்பிட்ட வார்த்தைகளை சரியாக உச்சரிக்க இந்த முறை பயன்படுகிறது.  பாடலைப் பாட எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள்? பணம் கிடைக்கிறது என்பது முக்கியமான காரணம். அதற்கு முன்னதாக நமக்கு ரசிகர்கள் வேண்டுமே? பாடலின் தரமும், அந்த பாடல் நமக்கு கிடைப்பதும் முக்கியமானது. ரசிகர்களின் எண்ணிக்கையை விட பாடலின் தரம் முக்கியமானது.  நீங்கள் 53 ஆண்டுகள் பாடகியாக இருந்துள்ளீர்கள். இதனை திரும்பி பார்க்கும்போது எப்படியிருக்கிறது? இது கனவுப்பயணம் போலத்தான் இருக்கிறது. என்னுடைய வேலையின் முக்கியமான சாதனைகள் அனைத்துமே கடுமையான சவாலாகத்தான் இருந்துள்ளது. நான் திரைப்பட பாடகியாக மாறுவதற்கு முன்னர் நேரடியாக மேடைகளில் பாடிக்கொண்டிருந்தேன

ரத்தத்தை பின்தொடரும் கேங்ஸ்டர் குடும்பம்! - தி பவர் 2021- இந்தி

படம்
  தி பவர் - வித்யுத் ஜாம்வால் தி பவர் மகேஷ் மஞ்ரேக்கர் காட் பாதர் படத்தின் தழுவல் என கூறுகிறார்கள். மும்பையில் இருக்கும் அனைத்து  சட்டவிரோத செயல்களையும் வணிகத்தையும் தாக்கூர் குடும்பத்தினர் செய்கிறார்கள். இவர்களுக்கும் முறைகேடான வணிக சிண்டிகேட்டிற்கும் உள்ள சண்டையும், பழிவாங்கும் சம்பவங்களும்தான் கதை.  சிண்டிகேட்டில் உள்ள ராணா, மும்பையில் நிழல் உலக ராஜாவாக இருக்கும் காளிதாசை நேரடியாக எதிர்க்க முடியாமல் மறைமுகமாக எதிர்க்க நினைக்கிறார். இதற்காக அவர் செய்யும் செயல்கள்தான் கதையை நகர்த்துகின்றன.  கதை தொடங்கும்போது, காளிதாசின் மருமகன் தனது மாமனார் காளிதாசின் பொறுப்புக்கு வர ஆசைப்படுகிறார். இதைப்பற்றி பேசும்போது, காளிதாஸ் அங்கே வருகிறார். ரஞ்சித்தை அமைதிபடுத்தி அவருக்கு கோவாவில் ஹோட்டல் பிசினஸ் உள்ளது. அதைப்பார், நானும் உன்கூட வருகிறேன் என்கிறார். பிறகு கதை அப்படியே பின்னோக்கி செல்கிறது.  காளிதாசின் மகன்கள் ராம்தாஸ், தேவிதாஸ், மகள் ரத்னா. இதில் ராம்தாஸின் மனைவியின் தம்பியைத்தான் ரத்னாவுக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள், அவர்தான் ரஞ்சித். மாமனாரின் வீட்டிலேயே டேரா போட்டு அவரது இடத்திற்க

சிறந்த திரைக்கலைஞர்கள் -நடிகை சான்யா மல்கோத்ரா, திரைக்கதை எழுத்தாளர் ஷியாம், இயக்குநர் கார்த்திக் நரேன்

படம்
  நடிகை சான்யா மல்கோத்ரா ஷியாம் புஷ்கரன் எழுத்தாளர், திரைக்கதை வல்லுநர் எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் மலையாள படங்களில் இன்று சிறப்பாக திரைக்கதை அமைத்து தரும் எழுத்தாளர்களில் ஒருவராக ஷியாம் புஷ்கரன் இருக்கிறார். இவரது பங்களிப்பில் மகேஷிண்ட பிரதிகாரம், தொண்டுமுத்தலும் டிரிக்சாக்சியும், மாயநதி, கும்பளாங்கி நைட்ஸ், ராணி பத்மினி, ஜோஜி ஆகிய படங்கள் சிறப்பான வெற்றி பெற்றதோடு இவரது பெயரையும் உலகம் முழுக்க சொல்லிச்சென்றன. பகத்பாசில் இன்று முக்கியமான நடிகராக இருக்க அவரது நடிப்புத்திறன் காரணம். அதை யாருமே மறுக்க முடியாது. அதேசமயம் அவரது படத்தின் கதைகளை எழுதும் ஷியாம் புஷ்கரனின் எழுத்தாற்றலே அந்த கலைஞனை மேலும் பிரகாசிக்க செய்கிறது. மலையாள உலகை தாண்டி பகத்தை பிறரும் கவனிக்கிறார்கள் என்றால் ஷியாமின் பங்களிப்பு முக்கியமானது. திலீஸ் போத்தன், ஆசிக் அபு, மது ஸ்ரீ நாராயணன் ஆகிய இயக்குநர்களோடு இணைந்து பணிபுரிந்திருக்கிறார்.  ஷியாமின் கதை, திரைக்கதைகளை அவரது ரசிகர்கள் ஆழமாக ஆராய்ந்து பல்வேறு நுணுக்கங்களை திரைப்பட இயக்குநர்களுக்கு கூறி வருகிறார்கள். மகேஷிண்ட பிரதிகாரம் படத்திற்கு தேசிய விருது பெற்றவர் ஷியாம் எ

இந்தி, பஞ்சாபி, மலையாளத்தில் கலக்கும் புதிய(!) நடிகர்கள்!

படம்
  நடிகர், பாடகர் - தில்ஜித் தோசன்ஞ்சி அட்டகாசமான நடிகர் தில்ஜித் தோசன்ஞ்சி தில்ஜித் தோசன்ஞ்சி பஞ்சாபி மொழியில் முக்கியமான நடிகர். இப்போது இந்தி மொழி படங்களை, பஞ்சாப் மொழி படங்கள் வருகிறது என்றால் தள்ளி வைக்கும் அளவுக்கு சிறப்பாக தயாரிக்கிறார்கள். சந்தைப்படுத்தலும் அப்படித்தான். பஞ்சாபி மொழியில் தில்ஜித் நடித்த படங்கள் அனைத்துமே வசூல் மழை பொழிந்தவை. இவர் பாடி நடிக்கும் பாடல்களும் அப்படித்தான். பஞ்சாபி பாடல்களை மேற்கத்திய பாணியில் பாடுவது இவரது சிறப்பு அம்சம்.  இந்திப்படங்களிலும் இப்போது நடித்து வருகிறார். இவர் நடித்த அர்ஜூன் பட்டியாலா, குட் நியூஸ் ஆகிய படங்களில் இவரது நகைச்சுவை நடிப்பிற்காக பேசப்பட்டவை. பஞ்சாபி மொழியில் நடித்த ராக் ஹவுஸ்லா என்ற படம் தியேட்டர் வசூல் மட்டுமே இப்போதைக்கு 54 கோடிக்கும் அதிகம். இன்னும் இப்படம் அமேசானில் திரையிடப்படவில்லை.  பிலாதூரில் பிறந்தவர் குருத்துவாராவில் உள்ள பஜனைகளைப் பாடி இசையைக் கற்றுக்கொண்டவர். 2011 ஆம் ஆண்டு தொடங்கி படங்களில் நடித்து வருகிறார்.  தில்ஜித்திற்கு பிராண்ட் நிறுவனங்களின் உடை என்றால் கொள்ளைப் பிரியம். வாங்கும் சம்பளத்தில் பாதியை உடைக்கா

நம்பிக்கை தரும் திரைப்பட கலைஞர்கள்! - டைகர் ஷெராஃப், டாப்சி பானு, ரன்வீர் சிங்

படம்
  ரன்வீர் சிங் குழந்தை போன்ற கலைஞன்! ரன்வீர் சிங் இந்தி நடிகர் அமெரிக்க நடிகர் போல பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்வதோடு, இயல்பாகவும் அப்படித்தான் இருக்கிறார். அனைத்து விருது வழங்கும் விழாவிலும் கேமரா ரன்வீரைத்தான் சுற்றி சுழன்று கொண்டிருக்கும். உடையாகட்டும். கெட்டப் ஆகட்டும் தன்னைச்சுற்றி மட்டுமே பலரது கவனம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். பார்க்க மட்டுமல்ல பேச்சும் அப்படித்தான்.  வளரும்போது, பத்மாவதி படத்தில் இரக்கமே இல்லாத மன்னராக வில்லனாக நடித்தார். கல்லி பாய் படத்தில் வளர்ந்து வரும் ராப் பாடகராக மனங்களை கொள்ளையடித்தார். லூட்டெரா படத்தில் காதலித்து ஏமாற்றுபவராக நடித்திருப்பார். பேண்ட் பாஜா பாரத் படம்தான் அறிமுகப்படம். அதில் காட்டிய எனர்ஜியை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.  சினிமாவில் செய்யும் வேலையை நான் எனது முதல் நாள் அல்லது கடைசி நாள் என்று நினைத்துத்தான் வேலை செய்கிறேன். அதனால் எனக்கு இக்கலைத்துறையில சலிப்பே ஏற்படுவதில்லை. இக்கலையில் உள்ள எல்லையற்ற தன்மையே என்னை ஈர்க்கிறது. தினசரி நான் இங்கு நடக்கும் விஷயங்களை அனுபவித்து வருகிறேன்.  சிறு குழந்தை போன்ற ஆர்வத்துட

ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிகர் தெரிவது தவறு கிடையாது! - நஸ்ரூதின் ஷா, இந்தி திரைப்பட நடிகர்

படம்
  நஸ்ரூதின் ஷா இந்தி திரைப்பட நடிகர் தான் சிறுவயதாக இருக்கும்போதிலிருந்து அதிகாரத்தை எதிர்ப்பதாக நஸ்ரூதின் ஷா கூறினார். அவரின் வாழ்க்கை, கலை, வாழ்க்கை பற்றி நம்மிடையே பேசுகிறார்.  நீங்கள் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது நீங்கள் நடித்த படம்  அல்லது நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்போது எப்படி உணர்கிறீர்கள்? நான் உங்களை திருத்த நினைக்கிறேன். நான் திரையுலகிற்கு வந்து 48 நாட்கள் ஆகின்றன. 2025ஆம் ஆண்டு வந்தால்தான் 50 ஆண்டுகள் ஆகிறது. நான் எனது முதல் படத்தை வங்காள மொழியில் ஷியாம் பெனகலின் நிஷாந்த்துடன் செய்தேன். 1975ஆம் ஆண்டு நடித்த படம் அது. நான் திரைப்படம், டிவி இன்ஸ்டிடியூட்டில் படித்தபோது கிடைத்த வாய்ப்பு அது. என்னை பரிந்துரைத்தவர், அந்த மையத்தின் இயக்குநராக இருந்த திரு. கிரிஷ் கர்னாட் தான்.  ஷியாம் பெனகலின் படத்தில் நடிக்க பலரும் போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே அழகாக இருந்தார்கள். அதனால் அந்த விஷயத்தில் பலவீனமாக இருந்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது.  இந்தி திரைப்படங்களில் நான் நாயகனாக நடிப்பேன் என்று நினைக்கவில்லை. ஏனெனில் சிறிய பாத்திரங்களில் அப்போது மு

பாரத ரத்னா விருது பெற்ற சாதனைப் பாடகி! - லதா மங்கேஷ்கர்

படம்
  லதா மங்கேஷ்கர்  லதா மங்கேஷ்கர்  பாடகி இந்தி சினிமாவில் முக்கியமான பாடகி என்று சொன்னால் பலரும் அடிக்க வருவார்கள். இவரை யாருக்குத்தான் தெரியாமல் இருக்கும்? இந்திய இசைப்பாடல்களை கேட்பவர்களுக்கு லதாவின் குரல் நிச்சயம் அறிமுகமாகியிருக்கும்.  இந்திய சினிமாவில் அறுபது ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் பாடியிருக்கிறார் லதா.  1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் பிறந்தவர்.  இவரது பெற்றோர் சேவந்தி மங்கேஷ்கர், தினாநாத் மங்கேஷ்வர். லதாவின் தந்தை நாடக நடிகர் என்பதோடு இந்துஸ்தானி பாடகரும் கூட.  லதாவுக்கு அவரது தந்தை ஐந்து வயதிலிருந்து பாடகியாக பயிற்சி கொடுத்து வருகிறார். இவர் உஸ்தாத் அமான் அலி கான், உஸ்தாத் அமாநாத் கான் ஆகியோரின் கீழ் பயிற்சி எடுத்துள்ளார்.  1942ஆம் ஆண்டு லதாவுக்கு பனிரெண்டு வயதாகும்போது அவரது தந்தை காலமானார். இந்த நேரத்தில் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்யும் கட்டாயம் லதாவுக்கு இருந்தது. இவரது முதல் வெற்றி மகால் என்ற படத்தின் மூலம் கிடைத்தது. 1949ஆம் ஆண்டு வெளியான ஆயேகா ஆனேவாலா என்ற பாடல் மிகப்பெரிய வெற்றி பெற, அடுத்தடுத்து பாடல் பாடுவதற

பேராளுமைகளை சந்தித்த அனுபவத்தை சொல்ல நினைத்தேன்! - கவிஞர் குல்ஸார்

படம்
  கவிஞர் குல்ஸார் குல்ஸார் கவிஞர், பாடலாசிரியர் ஆக்சுவலி ஐ மெட் தம் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார் குல்ஸார். நூல், சினிமா, இசை, இலக்கியம் பற்றி அவரிடம் பேசினோம்.  நூலுக்கான தலைப்பை எப்படி பிடித்தீர்கள்? என்னுடைய பயணம் என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன். ஆனால் அந்த தலைப்பு மிகவும் சாதாரணமாக இருந்தது. பிமல்ராய், பண்டிட் ரவிசங்கர், மகாஸ்வேதா தேவி ஆகியோரை சந்தித்து பேசி பழகி இருக்கிறேன். இதுபோன்ற பெரிய ஆளுமைகளை சந்தித்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். அதை வெளிக்காட்டும்படியாக நூல் தலைப்பை வைத்தேன்.  நூலில் சத்யஜித்ரே, கிஷோர்குமார், சுசித்ரா சென் ஆகியோரைப் பற்றி பேசியிருக்கிறீர்கள்.  நூலில் உள்ள பதினெட்டு ஆளுமைகளை சந்தித்து பேசி அவர்களுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக உள்ளது. இவர்களில் சிலரைப் பற்றி நூலாக எழுத நினைத்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. சில மனிதர்களைப் பற்றி கவிதைகளை எழுதி வைத்துள்ளேன். அவற்றை பின்னாளில் பிரசுரிப்பேன் என நினைக்கிறேன்.  யாருடனாவது பணியாற்றவேண்டும் என நினைத்துள்ளீர்களா? அந்தப் பட்டியல் பெரிது. குருதத்துடன் பணிபுரிய நினைத்தேன். அவர் படம் எடுத

காமத்தைக் கொண்டாடிய இந்தி திரைப்படங்கள்!

படம்
  ஒருவர் பொது வாழ்க்கைக்கு வர பயப்படுவதன் காரணமே, அவரது தனி வாழ்க்கையையும் நடுத்தெருவுக்கு இழுத்து வரவேண்டும் என்பதுதான். காந்தி தன்னுடைய வாழ்க்கையை நேர்மையாக வாழ்ந்து அதனை நூலாக எழுதினார். அதன் பிரதிபலனாக அவரது நோக்கத்திற்கு நிறைய சீடர்கள் கிடைத்தனர். அதோடு எதிரிகளும் உருவானார்கள். காந்தியின் செயல்பாடு பற்றி பேசும்போது, அவரின் செக்ஸ் பரிசோதனைகளைப் பற்றி பேசாதவர்கள் குறைவு. ஒருவகையில் மனதில் ஏற்படும் பாலியல் வறட்சி இதற்கு காரணம் என்று கூறலாம்.  பாலியல் விஷயங்களைப் பேசுவது என்பது இந்தியாவில் அவமானகரமான ஒன்றாக படுகிறது. காமசூத்திரா நூல்களை எரிப்பது, காதலர்களை அடிப்பது என மனநோய் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் பற்றிய செய்திகளை நாம் தந்தியில் எப்போதும் படித்துதானே வருகிறோம். இதையெல்லாம் தாண்டி பாலியல் சமாச்சாரங்களை மக்களுக்கு சொல்ல படங்களும் வந்துள்ளன. நூல்களும் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.  காம சூத்ரா எ டேல் ஆப் லவ் (1996) இயக்கம் மீரா நாயர் நடிப்பு நவீன் ஆண்ட்ரூஸ், சரிதா சௌத்ரி சத்யம் சிவம் சுந்தரம்  1978 இயக்கம்  ராஜ் கபூர் நடிப்பு சஷிகபூர் ஜீனத் அமன் உத்சவ் 1984 இயக்கம்  கிரிஷ் கர்னாட்

நல்ல படத்தை வசூலிக்கும் தொகை தீர்மானிப்பதில்லை - ஹர்ஷ்வர்த்தன் கபூர்

படம்
            ஹர்ஷ்வர்த்தன் கபூர் இந்தி நடிகர் இரண்டு பொதுமுடக்கங்கள் ஏற்பட்டுள்ளன. திரைத்துறை சார்ந்த வேலைகள் அனைத்துமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நேரங்களில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்.  நான் அப்பாவுடன் இணைந்து டிஜிட்டல் வெளியீட்டிற்காக தயாராக உள்ள படங்களை உருவாக்கிக்கொண்டிருந்தோம். வாசன் பாலா எடுக்கவிருக்கும் படத்தில் நானும் அப்பாவும் நடிக்கிறோம். எனவே ஒருசில மாதங்கள் தவிர பிற நாட்களில் எனக்கு வேலை இருந்தது.  நீங்கள் அறிமுகமான படம் மிர்சயா வெற்றிபெறவில் லை. அடுத்து வெளியான பவேஷ் ஜோஷி படத்தில் உங்களுடைய நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அந்தப்படம் கூட சிறப்பான வெற்றியைப் பெறவில்லை. இந்த சூழ்நிலை உங்களுக்கு எப்படி இருந்தது? பவேஷ் ஜோஷி படம் பலராலும் சரியாக கவனிக்கப்படாத படமாக போய்விட்டது. அதற்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது. அவர்கள், இன்றும் கூட அதன் அடுத்த பாகத்தை எடுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கு சமூக வலைத்தளம் வழியாக இதுபோல கோரிக்கைகள் வருகின்றன. அந்தப்படம் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. நல்ல  படத்தை வசூல் தீர்மானிப்

திரைப்படமோ, வெப் தொடரோ மக்களின் மனதோடு இணையவேண்டும்! - இர்பான் அக்தர்

படம்
  இர்பான் அக்தர் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஓடிடி தளத்தில் தொடர்கள் வெற்றி பெறும் அளவுக்கு திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லையே ஏன்? திரைப்படமோ, வெப் தொடரோ எதுவாக இருந்தாலும் அது மக்களின் மனதோடு இணைய வேண்டும். அதுதான் முக்கியம். அப்படி இணையாதபோது திரைப்படமும், தொடரும் வெற்றி பெறுவது கடினம். நாம் வாழும் காலத்தில் நடக்கும் சம்பவங்களை திரைப்படமாக பதிவு செய்வது முக்கியம். அப்போதுதான் அது மக்களை கவரும்.  ராக்கி, க்ரீட், மேரி கோம் என படங்கள் குத்துச்சண்டைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வெற்றி பெறுகின்றன. இப்படி படங்கள் உருவாக்கப்பட என்ன காரணம்? இதுபோன்ற படங்கள் வெற்றியாளராக உள்ள குத்துச்சண்டை வீரன் தோல்வியுறுவது, தோல்வியுற்றவன் வெற்றி பெறுவது என  கதை அமைக்கப்படும். இது படங்களை பார்ப்பவர்களுக்கு ஊக்கமாக அமையும். குத்துச்சண்டை வீர ர்கள் பலருமே சாதாரண பின்னணி கொண்ட குடும்பங்களில் இருந்து வருபவர்கள்தான். தங்கள் உடலை தங்கள் வாழ்க்கைக்காக எப்படி வருத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் இதில் முக்கியமான அம்சம்.  பெருந்தொற்று காலத்தில் சினிமாதுறை எப்படி இயங்கியது? பதினெட்டு மாதங்களில்  சினிமாதுறை நிற

ஆஸ்கருக்கு ஒரு படத்தை அனுப்ப ஓராண்டுக்கு வேலை பார்க்கவேண்டும்! - தயாரிப்பாளர் குனீத் மோங்கா

படம்
            குனீத் மோங்கா இந்தி திரைப்பட உலகத்தைச் சேர்ந்த குனீத் மோங்கா முக்கியமான தயாரிப்பாளர் . இவர் தயாரிப்பில் வெளியான பல்வேறு படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன . வேறுபட்ட கதைக்களம் கொண்ட படங்களையும் , புதிய இயக்குநர்களையும் அறிமுகப்படுத்த தயங்காதவர் . எப்படி வேறுபட்ட மையப்பொருளைக் கொண்ட கதையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் ? எனது அம்மாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது . அதற்காகவே அதை மையப்பொருளாக கொண்ட தஸ்விதனியா என்ற படத்தை தயாரித்தேன் . எனது சிக்யா தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியமான பொருளே , அர்த்தமுள்ள கதைகள் என்பதுதான் . நான் இதற்கு முன்னர் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்துள்ளேன் . அங்கு ஏராளமான மாறுபட்ட கதைகளைப் பார்த்துள்ளேன் . பல படங்களை இப்படி தேர்ந்தெடுத்து தயாரித்துள்ளோம் . இப்படித்தான் பெட்லர்ஸ் , ஹராம்கோர் , லன்ச்பாக்ஸ் ஆகியவை உருவாயின . இதில் தோல்விகளும் உண்டு . எனக்கு இத்துறையில் வழிகாட்டவென எந்த குழுவும் கிடையாது . உதவிக்காகத்தான் சிறிய இடைவெளியை எடுத்துக்கொண்டீர்களா ? மூன்று ஆண்டுகள் என்னை நானே என்ன ச

முதலில் வாங்கிய காரை என்னால் மறக்கவே முடியாது! - அனு மாலிக், இசையமைப்பாளர்

படம்
              இசையமைப்பாளர் அனுமாலிக் இந்துஸ்தான் டைம்ஸ் தினேஷ் ரஹேஜா இருபத்திரெண்டு வயதில் உங்கள் தொழில் எப்படி இருந்தது ? டீனேஜ் வயது அல்லவா ? எனது முதல் பாடலை அன்றைய சூப்பர்ஸ்டார் ஆஷா போன்ஸ்லேவுடன் தொ்டங்கினேன் . ஹண்டர்வாலி 77 என்ற படத்தை நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மோகன் சோடி தொடங்கினார் . அதற்கு இசையமைக்க எனது தந்தை சர்தார் அலி ஒப்பந்தமானார் . அப்போது ஏதோ ஒரு பாடலை நான் ஹம்மிங் செய்துகொண்டிருக்க இயக்குநர் உடனே என்னைப் பிடித்து பாடல் ஒன்றைப் பாட வைத்துவிட்டார் . அப்போது நான் வாய்ப்புக்காக பல்வேறு ஸ்டூடியோக்களுக்கு அலைந்து கொண்டிருந்தேன் . காற்றில் காதல் இருப்பதாக தெரிகிறதே ? நான் எனது மனைவி அஞ்சுவை அவளுடைய இருபத்தியொரு வயதில் திருமணம் செய்துகொண்டேன் . அப்போது எனக்கு வயது இருபத்திரெண்டு . மிதிபாய் கல்லூரியில் நாங்கள் படித்தபோது காதல் மலர்ந்து உறவு உருவானது . முதல் பாடலை எப்போது எழுதினீர்கள் ? நான் அஞ்சுவை காதலித்துக்கொண்டிருந்தேன் . அவளை பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன் . அவள் திடீரென என்னைப் பற்றி கல்லூரி முதல்வரிடம் புகார் கொடு