இடுகைகள்

எழுத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்றென்றைக்கும் உலகிற்கு தேவைப்படும் காந்தி! - உரையாடும் காந்தி - ஜெயமோகன்

படம்
  காந்தி நன்றி -டைம்ஸ் ஆப் இந்தியா உரையாடும் காந்தி ஜெயமோகன் என்றைக்கும் இல்லாதபடி காந்தி இன்று மக்களுக்கு தேவைப்படுகிறார். அவரின் கொள்கைகள், ஆளுமை, ஊடக வெளிப்பாடு என அனைத்துமே இன்றுமே மக்களை வசீகரிக்கின்றன.  நிறைய ஊடக ஆளுமைகள், வலதுசாரி கருத்தாளர்கள் காந்தியை அவதூறு, வசை செய்வதற்காக அவரது தனிப்பட்ட ஆன்மிக பரிசோதனைகளைப் பற்றி பேசுவார்கள். ஆனால் அப்படியும் கூட அன்றைய காங்கிரசிலும் இன்றும் கூட யாரையும் விட செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தது காந்தி மட்டுமே.  இதை ஒத்துக்கொள்ள இன்றைய காங்கிரஸ் கட்சிக்கு கூட சங்கடங்கள் தயக்கங்கள் இருக்கலாம்.  உரையாடும் காந்தி நூலில் ஜெயமோகன், காந்தி மீது மக்களுக்கு உள்ள பல்வேறு சங்கடங்கள், தயக்கங்கள், கேள்விகள், அவதூறுகள், வசைகள் என அனைத்துக்கும் பதில் அளிக்கிறார்.  இந்த நூல் ஜெயமோகனின் வலைத்தளத்தில் எழுதப்பட்ட கருத்துக்களைக் கொண்டதே.  காந்தியைப் பற்றி எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என ஜெயமோகன் இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். இதன்படி காந்தியைப் பற்றி பல்வேறு ஊடகங்களில் அறிய வந்த பொய், வதந்தி, அவதூறு, வசைகளுக்கு சலிப்பே இல்லாமல் பதில் சொல்லுகிறார்.  காந்திய

தனிப்பட்ட நேரத்தை பறிகொடுத்தேன்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  மதிப்பிற்குரிய வினோத் அவர்களுக்கு, வணக்கம்.  எங்கள் நாளிதழ் அச்சு பதிப்பு வெளியாகத் தொடங்கிவிட்டது. கட்டுரைகள் முன்னமே எழுதிவிட்டேன். சிலவற்றை மட்டுமே புதிதாக எழுத வேண்டும். நேற்று பக்கத்து அறைக்காரரான சீனிவாசனுக்கு ஆன்லைனில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க முயன்றேன். ஆனால் இறுதி நேரத்தில் பிழைச்செய்தி வந்துவிட்டது. இரவு நேரத்தில் செய்த இந்த வெட்டி வேலையால் எனது எழுத்து வேலை தடைபட்டது. வேறு வழியில்லை. நீங்கள் இன்டர்நெட் கஃபேக்கு சென்று செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன்.  நேற்று ஒருமணிநேரத்திற்கு மேல் இதற்காகவே செலவானது. இந்த நேரத்தில் சீனிவாசனுக்கு பிடிக்காத ரங்கன் என்பவரும் அவருடைய போனுக்கு பிரச்னை என வந்து பக்கத்தில் நின்றுவிட்டார். கடுப்பேற்றுவதுதான் நோக்கம். வேறென்ன?  சுப்ரதோ பக்ஷி எழுதிய நூலை மெல்ல வாசித்து வருகிறேன். நூலை எளிமையாக படிக்கும் வகையில் எழுதியுள்ளது ஆறுதலாக உள்ளது. மாலை முதல் வயிற்றுவலி தொடங்கிவிட்டது. மதியத்தில் சீனிவாசன் கொடுத்த உளுந்து வடை ஒன்றை தின்றுவிட்டேன். இரவில் எதையும் சாப்பிடமுடியவில்லை.  அமேசான் நிறுவனம் நடத்தி வந்த வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் விரைவில் மூட

தேவனின் நீரோட்டம் போன்ற எழுத்து கொடுத்த ஆச்சரியம்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று முழுக்க அறையில்தான் இருந்தேன். நீரெல்லாம் கங்கை - கடித நூலை எழுதி தொகுத்து அமேசானில் வெளியிட்டேன். உங்களிடம் உள்ள கடிதங்களை மறுமுறை வரும்போது பெற்றுக்கொள்கிறேன். நான் வடிவமைத்த அட்டைப்படத்தை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்.  ஃபேஸ்புக்கில் உள்ள உங்களது படங்களை எனது பிளாக்கில் பயன்படுத்தியுள்ளேன். இதற்கான தொகையை பிறகு தீர்ப்பேன். மிஸ்டர் வேதாந்தம் - தேவன் நாவலைப் படித்தேன். 44 வயதில் இறந்துபோன தேவனின் எழுத்து நீரோட்டம் போல செல்கிறது. கதை தஞ்சாவூரில் தொடங்கி, கும்பகோணம் சென்று பிறகு சென்னையில் மையம் கொள்கிறது.  தேசிகாச்சாரி என்பவரின் மகன் வேதாந்தத்தின் வாழ்க்கைப்பாடுதான் கதை. அரவிந்த் குப்தா அவர்களின் வலைத்தளத்தை அண்மையில் பார்வையிட்டேன். அதில் ஏராளமான நூல்கள் உள்ளன. ஆச்சரியமாக இருந்தது.  போனில் தரவிறக்கி வைத்திருந்த மின்னல் முரளி மலையாளப்படத்தை பார்த்தேன். பட்ஜெட்டில் சூப்பர் ஹீரோ படத்தை இயல்பான முறையில் எடுக்க முயன்றிருக்கிறார்கள். ஷிபு பாத்திரத்தில் நடித்த குரு சோமசுந்தரம்தான் ஈர்க்கிறார். ஜெய்ஷன், ஷிபு என இரு நபர்களுக்கு கி

இந்தியாவை பற்றிய வெளிப்படையாக கருத்துகள்! - சூப்பர் ஸ்டார் இந்தியா! - ஷோபா டே

படம்
  ஷோபா டே இந்தியா சூப்பர்ஸ்டார் ஷோபாடே பெங்குவின்  350 ரூபாய் பழைய அட்டை ஷோபா டே இந்தியாவில் வெளியாகும் தேசிய நாளிதழ்களில் ஏராளமான பத்திகளை எழுதியுள்ளார். இவரின் எழுத்து விசேஷம் என்னவென்றால், சீரியசாக போகும் ஆங்கில கட்டுரையில் திடீரென இந்தி வார்த்தைகளை புகுத்தி எழுதுவதுதான். மேலும் கட்டுரை இப்படித்தான் இருக்கவேண்டுமென்று விதிகள் இல்லாமல் மெல்லிய நகைச்சுவையுடன் எழுதுவார். கட்டுரை முழுக்க இந்தியாவைச் சார்ந்தது. இதில் இந்தியாவின் தன்மை, அங்குள்ள மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை வெளிப்படையாக எழுதியிருக்கிறார். இதனை நானூறு பக்கங்களுக்கு படித்துவிட்டு பிறகு கடைசி மூன்று பக்கங்களில் இந்தியாதான் எனது தாய் நாடு, அதனை நேசிப்பேன் என்று எழுத்தாளர் சொல்லுவது நம்பகத்தன்மையாக இல்லை.  ஆனாலும் நூலை எதற்கு வாசிக்க வேண்டும்? இந்தியாவை புரிந்துகொள்ள என இந்தியா டுடே மாதிரி தான் சொல்லவேண்டும். இந்தியாவில் நிலவும் கலாசாரம், பெண்களை வெறித்துப் பார்ப்பது, அவர்களிடம் மோசமாக நடந்துகொள்வது, வல்லுறவு, பிச்சை எடுப்பது, ஐடி கலாசாரம் புனே நகரை மாற்றி வருவது, வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் செல்வது, அரசியலில் பெருகும் ஊழ

ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிகர் தெரிவது தவறு கிடையாது! - நஸ்ரூதின் ஷா, இந்தி திரைப்பட நடிகர்

படம்
  நஸ்ரூதின் ஷா இந்தி திரைப்பட நடிகர் தான் சிறுவயதாக இருக்கும்போதிலிருந்து அதிகாரத்தை எதிர்ப்பதாக நஸ்ரூதின் ஷா கூறினார். அவரின் வாழ்க்கை, கலை, வாழ்க்கை பற்றி நம்மிடையே பேசுகிறார்.  நீங்கள் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது நீங்கள் நடித்த படம்  அல்லது நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்போது எப்படி உணர்கிறீர்கள்? நான் உங்களை திருத்த நினைக்கிறேன். நான் திரையுலகிற்கு வந்து 48 நாட்கள் ஆகின்றன. 2025ஆம் ஆண்டு வந்தால்தான் 50 ஆண்டுகள் ஆகிறது. நான் எனது முதல் படத்தை வங்காள மொழியில் ஷியாம் பெனகலின் நிஷாந்த்துடன் செய்தேன். 1975ஆம் ஆண்டு நடித்த படம் அது. நான் திரைப்படம், டிவி இன்ஸ்டிடியூட்டில் படித்தபோது கிடைத்த வாய்ப்பு அது. என்னை பரிந்துரைத்தவர், அந்த மையத்தின் இயக்குநராக இருந்த திரு. கிரிஷ் கர்னாட் தான்.  ஷியாம் பெனகலின் படத்தில் நடிக்க பலரும் போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே அழகாக இருந்தார்கள். அதனால் அந்த விஷயத்தில் பலவீனமாக இருந்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது.  இந்தி திரைப்படங்களில் நான் நாயகனாக நடிப்பேன் என்று நினைக்கவில்லை. ஏனெனில் சிறிய பாத்திரங்களில் அப்போது மு

எழுத்து திறமையை வளர்த்துக்கொண்டு சாதிக்கும் வேதாந்தம்! - மிஸ்டர் வேதாந்தம் 2 - தேவன்

படம்
  மிஸ்டர் வேதாந்தம் 2 தேவன் அல்லயன்ஸ்  மிஸ்டர் வேதாந்தம் நூலின் இரண்டாவது பாகம்.  முதல் பாகத்தில் வேதாந்தம், தலைமுறையாக பணக்காரனாக இருந்தாலும் மெல்ல குடும்ப நிலையை உணர்கிறான். ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப்போகிறது.  தஞ்சையில் இருந்த அப்பா தேசிகாச்சாரி, பணத்தை கௌரவமாக செலவிட்டு நிறைய கடன்களுக்குள் சிக்கியிருக்கிறார். அதனை பையனுக்கு நேரடியாக சொல்லாமல் தவிர்க்கிறார். படிப்பில் அவன் பட்டம் பெற்றால், தனது வாழ்க்கையைப் பாரத்துக்கொள்வான் என நினைக்கிறார். ஆனால் வேதாந்தத்தின் மனம் படிப்பில் செல்லவில்லை. அவனுக்கு எழுதுவதில் திறமை உள்ளது. அதனை வளர்த்துக்கொண்டு வேலையைத் தேடலாம் என நினைக்கிறான்.  தேசிக்காச்சாரியின் உடல்நிலை கெடும்போது, அவனது நிதிநிலை அவனது மாமா கோபாலசாமி அய்யங்காருக்கு தெரிய வருகிறது. அவருக்கு தேசிகாசாரியின் பணத்தின் மீது ஆசை. தனது பேத்திகளில் ஒருத்திக்கு வேதாந்தத்தை மணம் செய்து கொடுத்தால்,  சொத்து கிடைக்கும் என நினைக்கிறார். ஆனால் தேசிகாச்சாரிக்கு கடன் மட்டுமே இருக்கிறது என தெரிந்ததும், கடன்காரர்களோடு சேர்ந்து கூடி சொத்தை சூறையாடுகிறார். இதனால் வேதாந்தம் அத்தையோடு தங்கியிருக்கிறான

எழுத்தை நம்பி சென்னைக்கு வரும் தஞ்சாவூர் இளைஞனின் போராட்டம்! - மிஸ்டர் வேதாந்தம் - தேவன்

படம்
  மிஸ்டர் வேதாந்தம் - 1 தேவன் மிஸ்டர் வேதாந்தம் முதல் பாகம் தேவன் அல்லயன்ஸ்  வேதாந்தம் என்ற இளைஞனின் வாழ்க்கை, தடாலென ஒரேநாளில் கீழே விழுகிறது. அதற்குப் பிறகு அவன் தனது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறான் என்பதே நாவலின் மையம்.  தினந்தந்தியின் திரைவிமர்சனம் போல கதையின் கரு இதுதான் என்று சொன்னாலும் கூட நாவல் நெடுக வேதாந்தத்தின் மனநிலையை விவரிப்பது கடினமானது. சில பக்கங்களை வாசித்து விட்டு மெல்ல அவரின் மனநிலையோடு இணையும்போது நாவலை ரசிக்கத் தொடங்குகிறோம்.  தஞ்சாவூரில் வாழும் தேசிகாச்சாரி என்பவரின் மகன் வேதாந்தம். இவரின் பணம், செல்வாக்கு காரணமாக ஊரில் பெரிய மதிப்பு உண்டு. ஆனால் அவரை உண்மையாகவே மதிப்பவர்கள் குறைவு என்பதை அவர் மறைவின்போது, வேதாந்தம் கண்டுகொள்கிறான். அவனுக்கு அந்த சூழலில் ஆதரவு தருவது அவனது அத்தையும் அவளது பெண்ணான செல்லமும்தான். அத்தங்காள் செல்லம் என்றே கடிதங்களில் வருகிறது. அப்படியே வைத்துக்கொள்வோம் அழகாக இருக்கிறது அல்லவா? தேசிகாச்சாரிக்கு கிடைத்த பணம் அவரை ஆணவம் கொண்டவராக மாற்றுகிறது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பணத்தை செலவு செய்கிறார். குறிப்பாக அவரது மாமா கோபாலசாமி அய்

நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்! - த.சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
pixabay நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்!  5.4.2021   அன்பு நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். நலமா? நான் தற்போது ஈரோட்டுக்கு வந்துவிட்டேன். ஜூன் இறுதியில் நாளிதழ் வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அதுவரையில் நான் ஊரில் இருக்க திட்டமிட்டுள்ளேன். நீங்கள் கொடுத்த அடோமிக் ஹேபிட்ஸ் என்ற நூலை இங்கே படிக்க எடுத்து வந்துவிட்டேன். அதில் பதிமூன்று பக்கங்கள்தான் படித்துள்ளேன். சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு வரும் பேருந்து பயணம் பெரும் களைப்பை உடலில் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து சேலம், சேலத்திலிருந்து ஈரோடு, ஈரோட்டிலிருந்து கரூர் என மூன்று பேருந்துகளில் ஏறி எட்டு மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் பயணிக்க வேண்டும்.  இப்படி பாடுபட்டு முக்கி முனகி வீட்டுக்கு வந்தால் இரவில் மின்சாரம் இல்லை. அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா? தட்டில் சோற்றைப் போட்டு சாப்பிடும் நேரத்தில்....  நூல்களை நூலகத்திற்கு தரும் உங்களது பழக்கத்தைப் பின்பற்றி, எங்கள் ஊர் நூலகத்திற்கு தர ஒன்பது நூல்களை எடுத்து வைத்துள்ளேன். இவை அனைத்துமே புத்தக திருவிழாவில் வாங்கியவைதான்.  தேர்தல் முடிந்தபிறகு நூல்களை கொண்டு சென்று கொடுப்பேன். நூல

பத்திரிக்கை அரசியல், கற்றலைத் தடுக்கும் பரபரப்பு, கருத்து சுதந்திரம் - கணியம் சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
        த.சீனிவாசன், நிறுவனர், கணியம்     5 சுதந்திரமான செயல்பாடும் , தடையும் ! 27.1.2021 அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எங்கள் இதழ் குழுவினரை இன்னும் நிர்வாகம் ஆபீசுக்கு வரச் சொல்லவில்லை . இவர்களின் வேகமான செயல்பாடுகளால் மயிலாப்பூரிலுள்ள வாடகை அறையை யும் கூட காலி செய்யவில்லை . ஏதேனும் முடிவெடுத்தால்தான்தானே ? அறைக்கு தங்கினாலும் இல்லாவிட்டாலும் வாடகை தண்டச்செல்வு . உங்களது உதவியால் இப்போது மடிக்கணினி பிரச்னையின்றி இயங்குகிறது . இந்த அளவில் கணினி இயங்குவதே போதும் . இனிமேல் நூலை எழுதி எனது வலைத்தளத்தில் வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்ளவிருக்கிறேன் . பிறரது வலைத்தளங்களில் வெளியிடுவதற்கு இனி மின்னஞ்ச்ல்களை அனுப்ப போவதில்லை . சில வலைத்தளங்களில் நூல்களை எந்த அறிவிப்புமின்றி தகவல்களும் சொல்லாமல் வெளியிடுகிறார்கள் . பிறகு அதை நீக்கும்போது மட்டும் இப்படி செஞ்சிட்டீங்களே என பிலாக்கணம் பாடுகிறார்கள் . சுதந்திரமான கருத்துகளுக்கு நிறைய இடங்களில் ஏன் எங்கேயுமே தடைகள் உண்டு . ஸ்டார்ட்அப் பற்றிய நூலொன்றைப் படி

புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் ஜெயமோகன்! - எழுதுக - ஜெயமோகன்

படம்
  எழுதுக - ஜெயமோகன் எழுதுக ஜெயமோகன் தன்னறம் நூல்வெளி கவிதை, கட்டுரை, புனைவு ஆகியவற்றை எழுதுபவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் தோன்றும். இதைப்பற்றி யாரிடம் கேட்பது என்றும் தெரியாது. இப்படி இருப்பவர்கள், பின்னாளில்  தொழில் சார்ந்து சென்றுவிடுவார்கள். ஆனால் அவர்களின் மனதில் உள்ள  இலக்கிய ஆசை மெல்ல மங்கி மறைந்துவிடும்.  ஜெயமோகன், தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டுதான் இலக்கிய வேலைகளையும் செய்தார். அவர் தனது வாழ்க்கையில் இலக்கியத்தை முக்கியமாக எடுத்துக்கொண்டு அதனை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்தார். இதனால் தொழில்சார்ந்த வாழ்க்கையில் பதவி உயர்வு, அதிகாரம் ஆகியவற்றுக்கு முயற்சிக்கவில்லை. இதனால் அவர் இலக்கியத்தில் சமகாலத்தில் முக்கியமான எழுத்தாளராக உள்ளார்.  யாருக்குமே தொடக்க காலத்தில் எழுதும்போது நிறைய சந்தேகங்கள் வரும். அப்படி ஜெயமோகன் தளத்தில் கேள்வி கேட்டவர்களில் சிலரை தேர்வு செய்து, அதற்கு பதிலளித்து அதனை நூலாக தொகுத்துள்ளனர். இதைப் படிக்கும்போது ஒருவருக்கு எழுத்து தொடர்பான சந்தேகங்கள் ஓரளவுக்கு குறையும். தீரும்.  எழுத்து தொடர்பாக சில பழக்கங்களை ஜெ. பின்பற்றுகிறார். அதனைக் கூ

லினக்ஸை இயக்குவதற்கு ஓரளவேனும் அறிவு தேவை! - மனம் தளராத விக்கிரமாதித்தன்

படம்
  லினக்ஸ் இயக்கமுறைமையைக் கொண்ட அரசு வழங்கிய மடிக்கணியை ஓராண்டாக பயன்படுத்தி வருகிறேன். டெக் நணபர் ஒருவரிடம் பணம் கொடுத்து ஒரு 8,500க்கு வாங்கினேன்.முதலில் விண்டோஸ் இயக்கமுறைமை மட்டும் பயன்படுத்திினேன். வெகு சில மாதங்களிலேயே அதுவும் மென்பொருள் பிரச்னைகளால் பழுதானது. அப்போது எனக்கு இருந்த ஒரே வழி லினக்ஸ் இயக்கமுறைக்கு மாறுவதுதான். அந்த கணினியில் அந்த இயக்கமுறையும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. லினக்ஸ் இயக்கமுறை பற்றி அடிப்படையான சில விஷயங்களே தெரியுமே தவிர, அதில் கோப்புகளை எப்படி தேடுவது, புரோகிராம்களை இன்ஸ்டால் செய்வது பற்றி முதலில் ஏதுமே தெரியாது. பிறகு இதனை டெக் நண்பரே சொல்லிக்கொடுத்தார். எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. விண்டோசை விட சில புரோகிராம்களே மாறியிருந்தன. நிறைய அம்சங்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் இருந்தன. ஆனால், அதனை புரிந்துகொண்டு செயல்படுவதுதான் கடினமாக இருந்தது.  விண்டோசில் பிரச்னை என்றால் சிபியூவை ஒரு எத்து எத்தி, ரீஸ்டார்ட்  செய்தால் போதும். ஆனால் இந்த பார்முலா லினக்ஸில் செல்லுபடி ஆகாது.  லாக்டௌன் காலத்தில் முழுக்க அலுவலகப் பணிகளுக்கு ஈடுகொடுத்து உழைத்தது லினக்ஸ் இ

சர்ச்சைகளின் நாயகி அருந்ததி ராய்!

படம்
  எழுத்தாளர் அருந்ததி ராய் சூசன்னா அருந்ததி ராய் நவம்பர் 24ஆம் தேதி, 1961ஆம் ஆண்டு பிறந்தவர். பெண்ணியவாதியான மேரி ராய், கொல்கத்தாவின் தேயிலை தோட்ட மேலாளர் ரஜிப் ராய் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு சகோதரர் ஒருவர் உண்டு. அவரது பெயர் லலித்குமார் கிறிஸ்டோபர் ராய்.  ஷில்லாங்கில் பிறந்தவர், கேரளா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் வளர்ந்தார். இவரது இரண்டாவது வயதிலேயே பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டனர். கட்டுமானம் வடிவமைப்பு படிப்பில் பட்டம் பெற்றுள்ளார் அருந்ததி ராய். 1988ஆம் ஆண்டு அன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி தேசிய விருதை வென்றார். 1992ஆம் ஆண்டு எலக்ட்ரிக் மூன் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதினார். இதே ஆண்டில்தான் சிறிய விஷயங்களின் கடவுள் என்ற நூலை எழுத தொடங்கினார். 1996ஆம் ஆண்டில் நூல் பணியை முடித்தார். இந்த நாவலுக்கான பரிசாக மேன்புக்கரை 1997இல் வென்றார். இந்த நாவல்தான் உலகம் முழுக்க இவரை அறிய வைத்தது.  சிறிய விஷயங்களின் கடவுள் சுயசரிதைத் தன்மை கொண்ட நாவல் ஆகும். ரகேல், எஸ்தா என இரட்டையர்களின் வாழ்க்கையை அரசியல், ஜாதி பின்புலத்தில் வைத்து பேசுகிற கதை இத

ரத்ததானம் செய்து கிடைத்த பணத்தில் எழுத தொடங்கிய எழுத்தாளர்! - மனோரஞ்சன் பியாபாரி

படம்
  மனோரஞ்சன் பியாபாரி எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியை எங்கு சந்தித்தீர்கள்? நான் அந்த சமயத்தில் வாழ்க்கைப் பிரச்னைகளை சமாளிக்க ரிக்ஷா வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன். தெற்கு கொல்கத்தாவின் ஜாதவ்பூரில் தேவி அவர்களைச் சந்தித்தேன். வண்டி ஓட்டிக்கொண்டே அவரிடம் நான் ஜிஜூபிஷா என்றால் என்ன என்று கேட்டேன். ரிக்சா ஓட்டுபவர் இப்படியொரு வார்த்தைக்கு அர்த்தம் கேட்பார் என்று தேவி எதிர்பார்க்கவில்லை. நான் இதை எங்கு படித்தேன் என்று அவர் கேட்டார். நான் நிறைய புத்தகங்களைப் படிப்பேன் என்றும் பள்ளிக்கு போனதில்லை என்றும் கூறினேன். உடனே அவர் என்னுடைய பத்திரிகையில் கட்டுரை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார்.  அதற்கு அவர் ஏதாவது பணம் கொடுத்தாரா? பணமா? அதெல்லாம் இல்லை. நான் எழுதியது பர்திகா என்ற இதழில் வெளியானது. அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  இமானைப் படித்தபோது நீங்கள் எழுதவும் படிக்கவும் சிறையில் இருந்தபோது கற்றதாக கூறியிருந்தீர்கள். கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்.  நான் சிறையில் இருந்தபோது பேனாவும் காகிதமும் கிடைக்கவில்லை. கிடைத்த விஷயங்களை வைத்து கிறுக்கிக்கொண்டிருந்தேன். அங்கிருந்த கைதிகளில் ஒருவர் எனக்கு ஆறுமாதம

புதிய எழுத்தாளர்களை வரவேற்று வாய்ப்பளிக்கும் சுயபதிப்பு வலைத்தளங்கள்! - இங்கிட், வாட்பேட், கிரிட்டிக் சர்க்கிள், பிரதிலிபி

படம்
            இலக்கிய தளத்தை சுயபதிப்பு வலைத்தளங்கள் மாற்றியமைத்துள்ளனவா ?   இன்று ஒருவருக்கு எழுதும் ஆர்வமும் வேக மும் இருந்தால் போதும் . அவர் இலக்கிய சன்னிதானங்களிடம் ஆசி பெற்று நூலை வெளியிடவேண்டிய அவசியம் இல்லை . ஏராளமான இணையத்தளங்கள் இதற்கெனவே உருவாகியுள்ளன . பல்வேறு மொழிகளிலும் எழுதும் ஆ்ர்வம் கொண்டவர்கள் இதில் பங்கேற்று எழுதி வருகின்றனர் . நன்றாக எழுதும் திறன் கொண்டவர்களின் நூல்களை புகழ்பெற்ற பதிப்பகங்கள் வாங்கி பதிப்பித்து வருகின்றன . இதற்கு வலைத்தளங்களே களம் அமைத்துக் கொடுக்கின்றன . அமெரிக்க எழுத்தாளர் அன்னா டாட் இப்படித்தான் எழுத தொடங்கினார் . ஆப்டர் என்ற நாவலை தொடராக வாட் பேட் தளத்தில் எழுத தொடங்கினார் . இந்த நாவல் ஒன் டைரக்ஷன் இசைக்குழுவை அடியொற்றியது . இந்த தொடர் வாசகர்களிடையே பெரும் புகழ்பெற்று 1.5 பில்லியன் வாசகர்களின் பார்வையைப் பெற்றது . பிறகு சைமன் ஸ்சஸ்டர் பதிப்பகத்தின் மூலமாக அச்சுப்பிரதியாகி 11 மில்லியன் பிரதிகளும் விற்றுள்ளது . இணையம் இன்று அனைத்து இடங்களிலும் உள்ள மக்களை ஒன்றாக இணைத்துள்ளது . அவர்களின் வாசிப்பு பழக்கமும் முன்னேறி இணையத