இடுகைகள்

தற்கொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மெல்ல தற்கொலைக்கு தூண்டும் குறைபாடு - மேஜர் டிப்ரசிவ் டிஸார்டர் -எம்டிடி

படம்
  மேஜர் டிப்ரசிவ் டிஸார்டர் வேலை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, எண்டோவ்மென்ட் பாலிசி கட்ட வேண்டிய காலம் என சம்பாதிப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கல்கள் உருவாகலாம். பொறுப்புகள் மனதிற்கு சுமையாகத் தோன்றும்போது மனச்சோர்வு உருவாகிறது. இதனை ஒருவர் எளிதில் கையாள முடிந்தால் வெளியே வந்துவிடலாம். ஆனால் மனச்சோர்வு புதிர்ப்பாதையாக தோன்றும்போது, அவர்களுக்கு திகைப்பாகிவிடும்.  மேஜர் டிப்ரசிவ் டிஸார்டரைப் பொறுத்தவரை ஒருவருக்கு முதலில் ஏற்படும் மனச்சோர்வுக்கு மட்டுமே காரணம் இருக்கு்ம். அதாவது சில வகை தூண்டுதல். அதற்குப் பிறகு ஏற்படும் மனச்சோர்வுக்கு எந்த காரணமும் இருக்காது. இந்த மனநல குறைபாடு உள்ளவர்களுக்கு சோகம் என்பதை விட அனைத்திலும் எரிச்சல் இருக்கும். தினசரி செய்யும் செயல்களிலும் அது தீவிரமாக வெளிப்படத் தொடங்கும்.  பொதுவான சமூக நிகழ்ச்சிகளில் மனச்சோர்வு குறைபாடு உள்ளவர்கள் பங்கேற்க மாட்டார்கள். சாப்பிடுவதைக் கூட ரசிக்க முடியாது. செய்கிமா 2 மெட்டல் இசையைக் கூட ரசிக்க மாட்டார்கள். சரியாக தூங்க முடியாது. உடலில் வலி இருப்பது போல தோன்றும். அவர்களுக்கு இந்த பிரச்னையிலிருந்து வெளிய

ஆறு மாநிலங்களில் மிளகாய் உற்பத்தியை தாக்கி அழிக்கும் பூச்சி!

படம்
  தெலுங்கானாவில் உள்ள விவசாயிகள், மிளகாயை அதிகம் பயிரிட்டு வருகின்றனர். அந்த மாநிலத்திலுள்ள சுபக்காபலி கிராமம் . இங்கு, திரிப்ஸ் பர்விஸ்பினஸ் எனும் பூச்சி மிளகாய் செடிகளில் மீது நடத்திய தாக்குதலில் நாற்பது ஏக்கரிலுள்ள பயிர்கள் நாசமாயின.  கடந்த ஆண்டு சித்தூரி ரவீந்திர ராவ் பண்ணையில் பூச்சி தாக்கியது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லியைக் கூட ராவ் பயன்படுத்தினார். ஆனால் எந்த பயனும் இல்லை. பிரச்னையை சொல்லி, அதற்கான தீர்வைத் தேடுவதற்குள் காரியம் கைமீறிவிட்டது. ஒரே வாரத்தில் அத்தனை பயிர்களும் நாசமாகிவிட்டன. இதனால் மனமுடைந்த ராவ் தற்கொலை செய்துகொண்டார்.  மிளகாயை பயிரிட அவர் 20 லட்ச ரூபாய் வாங்கியிருந்தார். பயிர்கள் பூச்சியால் வீணாகிவிட்டதால், கடனைக் கட்டமுடியாத விரக்தி அவரை பாதித்து வீழ்த்திவிட்டது.  மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் திரிப்ஸ் பூச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்கள் ஆகும்.   இந்தியாவில் திரிப்ஸ் பூச்சி, கர்நாடகத்தில் பப்பாளித் தோட்டத்தில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.  2018-19 ஆம் ஆண்டுகளில் அலங்காரச் செடிகளில் தி

புதிய நூல்கள் அறிமுகம் - ஆப்கன் பெண்களின் கதை, தற்கொலைகள் அதிகரிப்பது ஏன்?, ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள்

படம்
  லைஃப் இன்ட்ரப்டட் அம்ரிதா திரிபாதி அபிஜித் நட்கர்னி, சௌமித்ர பாதரே சைமன் ஸ்ஹஸ்டர் 599 இந்தியாவில் தற்கொலைகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதைத் தடுக்க என்ன வழி இருக்கிறது? இப்படி தற்கொலை செய்வதில் இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள் உள்ளனர். இதில் பல்வேறு ஆய்வுகள், செய்திகள், நேர்காணல்கள் உள்ளன. மை பென் ஈஸ் தி விங் ஆப் எ பேர்ட் ஹாசெட்  599 இந்த நூலில் ஆப்கன் பெண்களைப் பற்றிய கதைகள் உள்ளன. பதினெட்டு எழுத்தாளர்கள் கதைகளை எழுதியுள்ளனர். குடும்பம், வேலை, நட்பு, பாலினம் என பல்வேறு கருத்துகளை அடிப்படையாக கொண்டு கதைகளை எழுதியுள்ளனர். இக்கதைகளில் ஒலிக்கும் குரல்கள் அசலானவை என்பதே முக்கியமாக உள்ளது.  ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ் ரூமிலா சென் ஆக்ஸ்போர்ட் பிரஸ் இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகள், தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அவர்களின் லட்சியத்தை எப்படி மீட்டெடுக்க முடியும் என்பதை எழுத்தாளர் விளக்கியுள்ளார்.  தி ஸ்டோரிஸ் வீ டெல் தேவ்தத் பட்நாயக் ஆலெப் 499 இந்நூல் தொகுப்பில் 72 கதைகள் உள்ளன. இந்திய புனைவு மரபிலிருந்து அனைத்து கதைகளையும் உணர்ந்து படிக்க வேண்டும். அப்படித்தான் பட்நாயக் எழுதியுள்ளார். எழுத்தாளரின்

கல்வி, பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால் தற்கொலைகளைத் தடுக்கலாம்! - சௌமித்ரா பதாரே

படம்
உளவியலாளர் சௌமித்ர பதாரே சௌமித்ர பதாரே மனநல சட்டம் மற்றும் கொள்கை மைய இயக்குநர் உலகளவில் நடைபெறும் தற்கொலைகளில் 20 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. பதாரே, இதுபற்றி லைஃப் இன்டரப்டட் அண்டர்ஸ்டாண்டிங்  இண்டியாஸ் சூசைட் கிரிசிஸ் என்ற நூலை எழுதியுள்ளார். இதில் அம்ரிதா திரிபாதி, அமிஜித் நட்கர்னி ஆகிய எழுத்தாளர்களும் பங்களித்துள்ளனர்.  இளைஞர்கள், பெண்கள், எழுபது வயதானவர்கள் ஆகிய பிரிவுகளில் தற்கொலைகள் அதிகமாகியுள்ளன என கூறியுள்ளீர்கள். இந்தியாவில் தற்கொலைகள் இப்படி அதிகரிக்க என்ன காரணம்? வயதானவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு அவர்கள் தனியாக இருப்பதுதான் காரணம். மேலும் அவர்கள் தங்கள் துணையை இழந்திருப்பார்கள். சமூகத்தில் புறக்கணிப்பையும் எதிர்கொண்டிருப்பார்கள். இதைப் பற்றிய தகவல் பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இளைஞர்கள் ஏன் அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.  குடும்ப பிரச்னைகள், உறவு சார்ந்த சிடுக்குகள் இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. பிற நாடுகளில் நேரும் தற்கொலைகளுக்கு வேலைவாய்ப்பின்மை முக்கியமான காரணமாக உள்ளது. இளம் வயதில் கர்ப்பிணியாவது, பொருளாதார பற்றாக்குறை, ப

மனதிலுள்ள வெறுமையை கடந்து வருவது கடினமாக இருந்தது! - சூஜித் சிர்கார், இந்திப்பட இயக்குநர்

படம்
  சூஜித் சர்க்கார்  சூஜித் சர்க்கார்  இந்தி திரைப்பட இயக்குநர்.  இருபது ஆண்டுகளாக மனதில் நினைத்து வைத்திருந்த படத்தை உருவாக்கி வெளியிட்டு விட்டார். படத்தின் பெயர் சர்தார் உத்தம் சிங். சிலர் பாராட்டியும், சிலர் திட்டியும் விமர்சனங்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது சர்க்கார் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவரிடம் பேசி தெரிந்துகொள்வோம்.  படம் நிறைவடைந்த பிறகு உங்கள் மனநிலை எப்படி இருந்தது? இருபது ஆண்டுகளாக இந்த படத்தை உருவாக்க வேண்டுமென நினைத்திருந்தேன். இப்போது அதனை உருவாக்கியபிறகு மனதில் வெறுமையாக இருக்கிறது. படத்தை உருவாக்குவது பட்ஜெட் என்றளவில் அல்லாமல் அதன் கதையே பிரமாண்டமானது. அதனால் இதனை செய்வது தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. தயாரிப்பாளர் ரோனியிடம் எப்போதும் என்னுடைய பட ஐடியாக்களை பற்றி பேசிக்கொண்டிருப்பேன். ஆனால் இந்த படம் முடிந்தபிறகு எதையும் பேச முடியவில்லை.  எப்படி வெறுமையைக் கடந்து வந்தீர்கள்? நீங்கள் எப்போதும் உங்களை கவனித்து வளர்த்துக்கொள்வது முக்கியம். இந்த வெறுமை என்பது மிக முக்கியமான இடம். இதில்தான் பல்வேறு மக்களும் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.  இந்த நேரத்தில்

பருத்தி விவசாயின் தற்கொலை வழியாக விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டப் பார்வை! - நூல் அறிமுகம்

படம்
  நூல்கள் அறிமுகம் ராம்ராவ் ஜெய்தீப் ஹர்டிகர் ஹார்பர் கோலின்ஸ் 2014ஆம் ஆண்டு ராம்ராவ் பான்செல்னிவர் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பூச்சிக்கொல்லியை குடித்து இறந்துபோன இவர்தான், விவசாயிகளின் தற்கொலையை தொடங்கி வைத்த பெருமையைக் கொண்டவர். அன்றிலிருந்து இன்றுவரை 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.  கடந்த இருபது ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.  எழுத்தாளர் ஜெய்தீப், ராம்ராவ் வாழ்க்கை வழியாக விவசாயிகளின் வாழ்க்கை இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறார்.  ஆர்ட் சினிமா அண்ட் இந்தியாஸ் பார்காட்டன் ஃபியூச்சர் ரோச்சனா மஜூம்தார் கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ் இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு சினிமா உலகம் எப்படி வளர்ந்தது, கலைப்படங்களுக்கான இடம், வணிக படங்களின் சந்தை, சத்ய ஜித்ரே, மிருணாள் சென், ரித்விக் கடக் ஆகிய இயக்குநர்களின் பங்களிப்பு பற்றி நூல் பேசுகிறது.  தி மிட் வே பேட்டில்  கௌதம் சிந்தாமணி ப்ளூம்ஸ்பரி 2019ஆம் ஆண்டில் மோடி மீண்டும் பிரதமரானார்.  முதல் முறை ஆட்சியில் தயங்கியவற்றை இந்த முறை பெரும்பான்மை உதவ

மனநலம் பற்றிப் பேசி விருது வென்ற திரைப்படம்! - ஹாங்காங் பெண் இயக்குநர் நிக்கோலா ஃபேன்

படம்
  டாஃபோடில் என்ற  பதினெட்டு நிமிடங்கள் ஓடும் படம் உளவியல் நலம் பற்றி பேசி திரைப்பட விருது விழாக்களில் விருதுகளை வென்று வருகிறது. ஹாங்காங்கில் எடுக்கப்பட்ட இந்த படம் , தற்கொலை செய்து இறந்துபோன அம்மாவின் நினைவுகளால் பாதிக்கப்படும் இளம்பெண்ணின் கதையைப் பேசுகிறது.  2020ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்கியவர் 32 வயதே ஆன நிக்கோலா பேன். இண்டிபிளெக்ஸ் எனும் வலைத்தளத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 2019இல் யூரோப்பியன் சினிமாட்டோகிராபி விருதை வென்று, 2020இல் வான்கூவர் ஆசியன் திரைப்பட விழாவுக்கு தகுதி பெற்றுள்ளது. எனது கல்லூரி படிப்பின்போது எனது நண்பனின் அம்மாவுக்கு உளவியல் பிரச்னை இருந்திருக்கிறது. தினசரி வாழ்க்கையே இழுபறியாக இருக்கும்போது ஒருவர் அழுகிறாரா, சிரிக்கிறாரா என்று யார் பார்க்கப்போகிறார்கள்? இப்படி இருந்தபோது திடீரென அவரது அம்மா தற்கொலை செய்துகொண்டார். இந்த சோகமான நிகழ்ச்சியால் அவரது நண்பர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். நாம் உளவியல் பிரச்னைகளைப் பற்றி இன்றுதான் பேசத் தொடங்கியுள்ளோம். முந்தைய தலைமுறையினருக்கு இதில் ஆர்வமும் இல்லை, நேரமும

விவசாயம் நரகம் எனும் அப்பாவுக்கும், விவசாயம்தான் என் எதிர்காலம் என முடிவெடுக்கும் மகனுக்குமான போராட்டம்! - ஶ்ரீகாரம்

படம்
          Director: Kishor B Produced by: Ram Achanta, Gopichand Achanta Writer(s): Kishor B, Sai Madhav Burra (dialogues)         ஶ்ரீகாரம் விவசாயம் செய்யவேண்டாம் வாழ்க்கை நாசமாகிவிடும் என்று கூறும் அப்பாவுக்கும் . விவசாயம்தான் என் எதிர்காலம் என்று சொல்லும் ஐடி பையன் என இருவருக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை . மேலே சொன்னதுதான் படத்தின் முக்கியமான கதை . இதைச்சுற்றி , ஐ . டி துறை வேலை , அதிலுள்ள பிரச்னைகள் , படத்தின் நாயகனை கல்லூரி தொடங்கி வேலை செய்யும் கம்பெனி வரை துரத்தி காதல் செய்யும் சைத்ரா , கிராமத்தில் விவசாயத்தில் நஷ்டமாகி நகரத்திற்கு வந்து கூலிக்கு பிழைக்கும் மனிதர்கள் , வட்டிக்கு பணம் கொடுத்து அதற்கு அடமான நிலங்களை வாங்கி கொண்டு பணக்கார நிலக்கிழாராக மாறி ஊர் மொத்தமும் தன்னைப் புகழவே்ண்டும் , ஊரின் பெயரை ஏகாம்பர புரம் என மாற்றி வைக்கவேண்டும் என பேராசையுடன் வாழ்பவர் என கிளைக்கதைகள் உள்ளன . படத்தின் கதையைச் சொல்லும்போதே விவசாயிகளின் கஷ்டங்களைப் பற்றி நிறைய வீடியோக்களை சர்வானந்த் பார்த்திருப்பார் போல . படம் முழுக்க பொங்கல் தின்று காபி குடித்து வயிற்று பொருமல்

நாய்களுக்கு கிச்சுகிச்சு மூட்டினால் பிடிக்கும்! - உண்மையும் உடான்ஸூம்

படம்
      1. ஸ்காட்லாந்திலுள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்து நாய்கள் தற்கொலை செய்துகொள்கின்றன . ரியல் : இந்த மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை . ஸ்காட்லாந்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலம் ஒன்று உள்ளது . அதன் பெயர் ஓவர்டூன் . இங்கு செல்லும் நாய்கள் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கின்றன என்று கூறப்பட்டது . இதில் தற்கொலை என்பது மனிதர்களால் கூறப்பட்ட கருத்து . ஆனால் அங்கு சென்ற நீளமான மூக்கு கொண்ட மோப்பசக்தி அதிகமுள்ள நாய்கள் மட்டுமே கீழே எட்டிக்குதித்துள்ளன . பிற விலங்குகளின் வாசத்தை மோப்பம் பிடித்த நாய்கள் கீழே தட்டையான பரப்பு உள்ளது என தவறாக புரிந்துகொண்டு குதித்துள்ளன என்றார் நாய்களின் குணங்களை ஆராய்ந்து வரும் ஆய்வாளர் டேவிட் சாண்ட்ஸ் . இருண்ட , மேகங்கள் சூழ்ந்த , வறண்ட காலநிலை கொண்ட நேரங்களில் நாய்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும் , தீயசக்தியும் இதற்கு காரணம் என பல கருத்துகள் கூறப்படுகின்றன . இதுவரை 50 க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த பாலத்திலிருந்து கீழே குதித்து இறந்துள்ளன . 2. பள்ளிப் பேருந்துகளில் மாணவர்களுக்கு சீட் பெல்ட்டுகள் தேவையில்லை ! ரியல் : அவசியமில்ல

ஸ்மார்ட்போன் ஆப் வழியாக மாட்டிக்கொள்ளும் மனிதர்கள்! - சீன ஆப்களின் இன்ஸ்டா லோன் பயங்கரம்!

படம்
                கடன் ஆப்கள் - கடன் பெற்றவர்களை அவமானப்படுத்திக்கொல்லும் கொடூரம் ! சீனாவைச் சேர்ந்த கடன் ஆப்கள் மூலம் கேரளம் , தமிழகம் , தமிழகம் மாநிலங்களைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்துள்ள நிலை வேதனைக்குரியது . எப்படி இப்படி ஒரு நிலை ஏற்படுகிறது ? மொபைல் ஆப்கள் மூலம் இன்ஸ்டன்டாக கடன்கள் கிடைப்பதுதான் இதனை பலரும் நாடிச்செல்லுவதற்கு முக்கியக் காரணம் , பெருந்தொற்று காரணமாக வேலையிழந்த பலரும் இந்த ஆப்களில் கடன் வாங்கியுள்ளனர் . கடன் வழங்கும் சீன நிறுவனங்கள் பலரும் வங்கியல்லாத பல்வேறு நிதிநிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு செயல்பட்டு வருகின்றன . இதில் கடன் வேண்டும் என்பவர்கள் தங்களை ஒரு செல்ஃபீ எடுத்து பதிவிடுவதோடு , ஆதார் கார்டு தகவல்களையும் தர வேண்டும் . கடன்களைப் பெற்றவர்கள் அதனை கட்டுவதற்கு 91 முதல் 360 நாட்கள் காலம் தருகிறார்கள் . கடன் பெற்றவர்களுக்கு ஏழு நாட்களுக்கு பிறகு கடனை கட்டுவதற்கான நிர்ப்பந்த அழைப்புகள் தொடர்புடைய கடன் நிறுவனங்களிலிருந்து வரத்தொடங்கும் . போனில் கடன் ஆப்களை தரவிறக்கும்போது ஒருவரின் போன்புக் தகவல்கள் அனைத்தும் சீன நிறுவனங்களுக்க

கல்வி உதவித்தொகை தாமதம் ஆவதால் வேலைகளுக்கு மாறும் மாணவர்கள்!

படம்
              கல்வி உதவித்தொகை தாமதம் ஆவதால் வேலைகளுக்கு மாறும் மாணவர்கள் ! அஹ்மத்நகரைச் சேர்ந்த கமலாகர் சேட்டே , எம் . காம் பட்டதாரி . சமூக நலத்துறை மூலம் டாக்டர் அம்பேத்கர் ஸ்வாதர் யோஜனா திட்டத்தின் கீழ் இவருக்கு 51 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உறுதி செய்யப்பட்டது . இவர் ஏற்கெனவே இறுதியாண்டுத் தேர்வை எழுதிவிட்டார் . சமூக நலத்துறை எனக்கு வரவேண்டிய கல்வி உதவித்தொகையை கொரோனா காரணமாக இல்லை என்று கூறிவிட்டது . ஆண்டுகள் கடந்தாலும் உதவித்தொகை வரும் என காத்திருந்து சலித்துவிட்டார் கமலாகர் . ஆனால் இன்றுவரை உதவித்தொகை கிடைப்பதாக தெரியவில்லை . ஆண்டு வருமானமே 50 ஆயிரம் ரூபாய் வரும் கமலாகரின் பெற்றோர் எப்படி இவரின் கல்விச்செல்வுக்கு பணம் அனுப்ப முடியும் ? அரசு கல்வி உதவித்தொகையை தருவதாக சொல்லி கை கழுவியதால் பெற்றோரிடம் காசுக்கு கை ஏ்ந்தி நிற்கும் நிலை . மத்திய மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை தாமதாவது தொடர்கதையாகிவிட்ட நிகழ்வு . அண்மையில் லேடி ஶ்ரீராம் பெண்கள் கல்லூரி மாணவி ஐஸ்வர்யா ரெட்டி கல்விக்கட்டணத்தை கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட நிக்ழச்சிநாளிதழில் வெளியானது . இவர் இ