இடுகைகள்

மருந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தற்போது புழக்கத்தில் உள்ள கொரானோ பெருந்தொற்றுக்கான மருந்துகள்!

படம்
  Baricitinib மேம்படுத்தியவர் எலி லில்லி - இன்சைட் கார்ப்பரேஷன் வகை  ஜானஸ் கைனாஸ் திறன் மக்கள் இறப்பதை 50 சதவீதம் குறைத்துள்ளது.  நிலை இந்தியாவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு தர நிர்ணய அமைப்பு  இதனை ஏற்றுள்ளது. சந்தையில் முழங்கால் வலிக்காக பயன்படும் மருந்து இது.  Sotrovimab மேம்படுத்தியவர் கிளாக்ஸ்கோஸ்மித் கிளைன் நிறுவனம் பிரிவு மோனோசினோல் ஆன்டிபாடி திறன் மக்களின் இறப்பு 85 சதவீதம் குறைந்துள்ளது.  நிலை இந்தியாவில் காத்திருப்புதான் பதில். இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம், மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.  Paxlovid மேம்படுத்தியவர் பைசர் பிரிவு ஆன்டி வைரல் திறன் இறப்பு எண்ணிக்கையை 88 சதவீதம் குறைக்கிறது. தடுப்பூசி போடாத மக்களை இறப்பிலிருந்து காக்கிறது.  நிலை இந்தியா ஒப்புதல் அளிக்கவில்லை. எப்டிஏ, அமெரிக்க அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.  Regncov மேம்படுத்தியவர் ரீஜெனரோன் பிரிவு  மோனோகுளோனல் ஆன்டிபாடி திறன் மக்களின் இறப்பை 81 சதவீதம் காக்கிறது. டெல்டா, ஓமிக்ரானுக

ஒமிக்ரான் அறிகுறி, மருந்துகள்!

படம்
  ஒமிக்ரான் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பெரிதாக அடையாளம் காட்டாது. மூச்சுக்குழலில் ஏற்படும் இருமல், சளி காய்ச்சல் என்றுதான் இதையும் அடையாளம் காண முடியும்.  சுவையுணர்வு, வாசனை முகரும் திறன் இல்லாமல் போவது ஆகியவற்றை பற்றி ஏதும் கூறப்படவில்லை. இதுவரை இதில் இழப்பு ஏதும் தெரியவில்லை.  ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிறையப் பேர் இறந்தது போல இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேராது என்று கூறப்படுகிறது.  சிகிச்சை  எல்லாமே அறிகுறிகளின்படிதான். ஓய்வு எடுக்கவேண்டும். உங்கள் மேலாளர் லீவ் அப்ளை செய்தால் தரமாட்டேன். நேராக வந்து லீவ் கேட்டாலும் சரியான காரணத்தை சொல்லவேண்டுமென வாட்ஸ் அப் அறிவிப்பில் கூட மிரட்டலாம். ஒமிக்ரானைப் பொறுத்தவரை இதுபோல எதற்கும் கட்டுப்படாது. ஊட்டச்சத்தான உணவைச் சாப்பிட்டு ஓய்வெடுத்தால் போதும்.  கொரோனாவுக்கு கொடுத்த மாத்திரைகளே போதுமானது. மேர்க், ஆன்டி வைரல் மாத்திரையான மோல்னுபிராவிர் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். மோனோகுளோனல் ஆன்டிபாடியைப் பயன்படுத்தினால் தாக்கம் 77 சதவீதம் குறையும்.  அறிகுறிகள் தென்பட்டால் ஒரே வாரத்தில் ஆன்டிபாடி காக்டெயிலை பயன்படுத்த வேண்டும். வயதானவர்களுக்கு இது மிக அவசியம்.

விகாரமான தோலும் உடைந்த மனதும்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு,  வணக்கம். நலமாக உள்ளீர்களா? இந்த வார குங்குமத்தை ஈரோட்டில்தான் வாங்கினேன். சக்தி சாரின் ஃபேமில் ட்ரீ தொடரை முன்னதாகவே படித்தேன். சிறப்பாக எழுதி வருகிறார். நாணயம் விகடனில் வேலை பார்த்த அனுபவம் உதவுகிறது என நினைக்கிறேன்.  சென்னை, காலைக்கதிர் நாளிதழில் வேலை பார்த்த வீடியோ பிரிவினரில் ஆறு பேருக்கு கொரோனா வந்துவிட்டது. எங்களுக்கு இன்னும் வீட்டிலேயே பணி செய்யும் ஆணை வரவில்லை. அப்படி கொடுத்தால் அலுவலகத்திற்கு புறநகரிலிருந்து வரும் நேரம் நிறைய மிச்சமாகும். உற்பத்தி திறனும் கூடும். இதில் எங்களது ஆசிரியருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.  ஒவ்வாமை பிரச்னை இருப்பதால் கொரோனாவிற்கான தடுப்பூசியை நான் போட்டுக்கொள்ள முடியாது. ஊசி தூண்டிவிட்டால் மீண்டும் எனது முழு உடலும் தோல் உரிந்து எரிச்சல் தொடங்கிவிடும். முகமெல்லாம் கொப்புளங்கள் வெடித்து விகாரமாக மாறிவிடும். ஊருக்கு சென்று வந்ததில் அம்மாவுக்கு சித்த மருந்துகளை வாங்கிக் கொடுத்துவிட்டு வந்ததுதான் உருப்படியான விஷயம். மற்றபடி நானும் ரூ.2 ஆயிரத்திற்கு மருந்துகள் வாங்கிக்கொண்டேன். எஸ்கேஎம் மருத்துவமனையில்

தடைகளை சமாளித்து வென்ற கார்ப்பரேட் நிறுவன பெண்கள்! - நந்தினி பிரமள், நுவ்ருதி ராய், ரிச்சா அரோரா, சமீனா ஹமீத்

படம்
                    நந்தினி பிரமள் எக்சிகியூட்டிவ் டைரக்டர் , பிரமள் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டு்ம் ஆறு பிராண்டுகள் மூலம் 418 கோடி ரூபாய் வருமானத்தை பிரமள் நிறுவனம் சாதித்துள்ளது . இதற்கு ந ந்தினியின் ஐடியாக்களே முக்கியமான காரணம் . இந்த நிறுவனத்தில் தற்போது பத்தாயிரம் பேர் பணியாற்றுகிறார்கள் . மருந்துகள் தயாரிப்பு விற்பனையில் பிரமள் நிறுவனம் சாதித்து வருகிறது . சாரிடான் , ஐபில் ஆகிய மருந்து பிராண்டுகள் இந்த நிறுவனத்துடையதுதான் . அபோட் , கார்லைட் எனும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக நந்தினி முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார் . பிரமள் நிறுவனததின் மனிதவளத்துறை மற்றும் ஐடி செயல்பாடுகளை நந்தினி கவனிக்கிறார் . இவரை அஜய் பிரமள் நிறுவனத்திற்கு அழைத்து வந்தார் . இவர் வந்தபிறகு நிறுவனம் பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்படுகிறது . தற்போது குழந்தைகளுக்கான பிராண்டு ஒன்றைத் தொடங்கியுள்ளனர் . அடுத்து மாஸ்க் , சானிடைசர் ஆகியவற்றையும் தயாரித்து விற்கும் முடிவை எடுத்துள்ளனர் . நுவ்ருதி ராய் இந்தியத் தலைவர் , இன்டெல் நுவருதியை பல்வேறு சவால்கள

மூளைக்கு மாத்திரை போட்டு புத்திசாலியாகும் இளைஞனும், அமெரிக்க அரசியலும்! - லிமிட்லெஸ் - வெப் தொடர்

படம்
லிமிட்லெஸ் இருபத்தெட்டு ஆண்டுகள் எதையும் செய்யாமல் கிளப்புகளில் பாட்டு பாடிக்கொண்டிருக்கும் இளைஞனுக்கு நண்பன் மூலம் என்சிடி மாத்திரை கிடைக்கிறது . மூளையின் அனைத்து செல்களையும் உற்சாகப்படுத்தி வேலைவாங்கும் மாத்திரையால் அசாதாரண புத்திசாலியாக மாறும் இளைஞன் வாழ்க்கைதான் கதை . வெப் தொடர் சீரியசான பிரச்னையை பேசினாலும் இதிலுள்ள காமெடி அனைத்தையும் ரசிக்க வைக்கும்படி இருக்கிறது . தொடரின் தொடக்கத்திலேயே என்சிடி மாத்திரையை பிரையன் பின்சுக்கு கொடுத்த நண்பர் தனது வீட்டில் கொலையாகி கிடக்கிறார் . அவரிடம் இன்னொரு மாத்திரை வேண்டும் என கேட்கப்போன பிரையன் சம்பவ இடத்தில் இருக்க அவரைப் போலீஸ் துரத்துகிறது . அதிலிருந்து அவர் மீண்டு ரெபெக்கா ஹாரிஸ் என்ற காவல்துறை அதிகாரி மூலம் எஃப்பிஐயில் ஆலோசகராக வேலைக்கு சேர்ந்து குற்றவாளிகளை பிடிக்க உதவுகிறான் . தொடரில் பிரையன்தான் நாயகன் . ஆனால் ஏராளமான பாத்திரங்களை உள்ளே சேர்ந்து போராடிக்காமல் பார்த்துக்கொண்டதோடு , காமெடிக்கான இடமும் தொடரில் அதிகமாக உள்ளது . ஜேக் மெக்டோர்மன் , ஜெனிஃபர் கார்பென்டர் , ஹில் கார்பர் , மேரி எலிசபெத் ஆகியோர்தான் இத

நண்பர்கள் இறப்பைக் கண்ணில் பார்த்தும் கடமையில் தவறாமல் கடிதங்களை, மருந்துகளை வீடுகளுக்கு விநியோகித்த தபால்காரர்!

படம்
            அஞ்சல் வழியாக நம்பிக்கை ! பிரதீப் சாகு அஞ்சல்துறை ஊழியர் , மும்பை அஞ்சல்துறை ஊழியர்கள் கொரோனா காலம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு கொண்டு சென்று கொடுத்து உதவியுள்ளனர் . 54 வயதாகும் சாகு , இந்தியா போஸ்டில் இருபத்தைந்து ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார் . திலக் நகர் , செம்பூர் , கோவண்டி , கர்லா என மும்பையைச் சுற்றியுள்ள நகரங்களுக்கு சைக்கிளில் கடிதங்கள் விநியோகித்து வந்தார் . அங்கு வாழும் மக்களுக்கு மிகவும் அறிமுகமான நபராக மாறிவிட்டார் பிரதீப் சாகு . ஆனால் கொரோனா காலம் மக்களுக்கு மட்டுமல்ல சாகுவுக்கும் பயம் ஏற்படுத்திய காலமாகவே உள்ளது . மூன்று குழந்தைகளுக்கு தந்தையான சாகு நோய்த்தொற்று பயம் விலகாமலேயே வேலை செய்து வந்துள்ளார் . அவரின் நண்பர்களை கொரோனாவுக்கு பலிகொடுத்தும் கூட பணியை கைவிடமுடியாமல் செய்தே ஆக வேண்டிய சூழல் . இந்தியா போஸ்ட் நிறுவனம் , கிராம ப்புறங்களில் அமைந்துள்ள பெரிய வலைப்பின்னலான அமைப்பு . மொத்தம் 1,56, 600 அஞ்சல் கிளைகள் நாடெங்கும் அமைந்துள்ளன . அரசின் நிதியுதவி , பாதுகாப்பு சாதனங்களை வீடுகளுக்கு

இந்தியா கோவிட் -19க்கான மருந்துகளை எப்படி விநியோகம் செய்யவிருக்கிறது?

படம்
      இந்தியாவில் இன்று தடுப்பூசி வழங்குவது முக்கியமான பணியாக மாறியுள்ளது . இந்த வகையில் நாட்டில் 1. 4 பில்லியன் அளவில் தடுப்பூசிகளை நாடு முழுக்க கொண்டு செல்லவேண்டிய தேவையுள்ளது . இந்துஸ்தான் சிரிஞ்சஸ் அண்ட் மெடிக்கல் டிவைசஸ் என்று நிறுவனமே நாட்டில் பெரிய சிரிஞ்ச் தயாரிப்பாளர் . 570 மில்லியன் என்ற தனது தயாரிப்பை அடுத ஆண்டில் ஒரு பில்லியனாக மாற்ற முடிவெடுத்துள்ளது . கண்ணாடி பாட்டில்களை தயாரிப்பது நிறுவனத்திற்கான சவாலாக இருக்கும் . கோவிட் -19 மருந்துகளுக்கு அதிக முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் இரண்டு . சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா , ஸைடஸ் கடிலா . சீரம் நிறுவனம் 2,100 கோடி முதலீட்டில் ஐந்து மருந்துகளை சோதித்து வருகிறது . 500 கோடி முதலீட்டில் கடிலா இரண்டு மருந்துகளை சோதித்து வருகிறது . பணக்கார நாடுகளில் 51 சத்வீத கோவிட் -19 மருந்துகள் விநியோகிக்கப்படவிருக்கின்றன . உலக மக்கள்தொகையில் இதன் பங்கு 13 சதவீதம்தான் . உலகில் 3.6 பில்லியன் அளவுக்கு கோவிட் -19 மருந்துகள் தேவை என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது . இந்தியாவில் தற்போது சீரம் மூலம் 400 மில்ல

இந்தியாவில் சிரிஞ்சுகளின் பயன்பாடு எப்படியுள்ளது?

படம்
              கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்குவதில் சிரிஞ்சுகள் முக்கிய பங்காற்றவிருக்கின்றன . அதுபற்றிய தகவல்களைக் காணலாம் . உலகம் முழுவதும் 16 பில்லியன் எண்ணிக்கையிலான சிரிஞ்சுகள் உலகம் முழுக்க ஆண்டுதோறும் பயன்பட்டு வருகின்றன . இந்தியாவில் 550 கோடி சிரிஞ்சுகள் பயன்படுத்தப்படுகின்றன . ஆண்டுக்கு 6-8 பில்லியன் அளவில் மருந்துகள் ஒருவருக்கு சிரிஞ்சுகள் வழியாக பயன்படுத்தப்படுகின்றன . ஒரு மனிதருக்கு மூன்று முதல் நான்கு சிரிஞ்சுகள் வரை பயன்படுத்தப்படுகின்றன . ஆண்டுக்கு ் 60 முதல் 90 கோடி அள்வில் சிரிஞ்சுகள் ஏற்றுமதியாகி பயன்படுத்தப்படுகின்றன . 15-20 கோடி எண்ணிக்கையில் சிரிஞ்சுகள் இறக்குமதியாகின்றன . ஒரு சிரிஞ்சின் விலை 1.9 முதல் 2.20 . விற்பனை விலை 7 முதல் 20 வரை வைத்து விற்கிறார்கள் . சிரிஞ்சுகளை 20-25 மருந்து நிறுவனங்கள் உருவாக்கி விற்பனை செய்கின்றன . 2 மிலி . 5 மிலி சிரிஞ்சுகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன .

ஆன்டிபயாட்டிக் ஆபத்து!

படம்
unsplash ஆபத்தை ஏற்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகள்!  ஆன்டிபயாடிக் மருந்துகளை இந்தியர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. 2050இல் உலகமெங்கும் இப்பாதிப்பிற்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை பத்து லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நைஜீரியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி வாங்கி உண்ணுகிறார்கள். இதன் விளைவாக , அவர்களின் உடலில் நோய்களுக்கு எதிராக ஆன்டிபயாடிக் மருந்துகளின் செயல்பாட்டுத் திறன் குன்றுகிறது. இதுபற்றி பற்றிய தகவல்களைக் கொண்ட மருந்து பாதுகாப்பு பட்டியல் (DRI) தயாரிக்கப்பட்டது. இதனை சிடிடிஇபி, வாஷிங்டன் மற்றும் ரோலின்ஸ் சுகாதாரப் பள்ளி, ஜார்ஜியாவிலுள்ள இமோரி பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர். இதில் தெரிய வந்துள்ள உண்மை, இந்தியா ஆன்டிபயாடிக் மருந்துகளைக்  கையாளுவதில் மிக மோசமான நிலையில் உள்ளது என்பதுதான். இதுபற்றி லான்சட் இதழ் 2017ஆம் ஆண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், 2002 முதல் 2012 வரையில் ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது பற்றி குறிப்பிடப்பட

ஷெட்யூல்டு டிரக் என்றால் என்ன?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி ஷெட்யூல்டு டிரக் என்று சிவப்பு நிறத்தில் ஆயின்மென்டுகளில் பிரின்ட் செய்யப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதற்கு என்ன பொருள்? ஷெட்யூல்டு டிரக் என்பதற்கு தமிழில் பட்டியலிடப்பட்ட மருந்துகள் என்று பெயர். இதிலுள்ள மருந்துகள் அடிமையாக்கும் தன்மை கொண்டவை, பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துபவை. தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளவை என அடையாளம் காணப்பட்டு அரசு மூலம் இவை பட்டியலிடப்பட்ட மருந்துகள் என கூறப்படுகின்றன. மருந்துகள் என்றால் அதில் உள்ள வேதிப்பொருட்களின் சேர்மானம் என்று பொருள் கொள்ளுங்கள். அதுவே சரியாக இருக்கும். கீழே கூறுவது அமெரிக்க அரசு விதிமுறைகளின் படி வரும் பட்டியலிடப்பட்ட மருந்துகள் 1 உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகள் இவை. இவற்றை நடப்பு காலத்தில் முறையாக மருத்துவரின் பரிந்துரை இன்றி பயன்படுத்தக்கூடாது என அரசு கூறியுள்ளது. எ.கா - ஹெராயின்,  பியோட்டே , மெத்திலீன் டையாக்சி பீட்டமைன். பட்டியலிடப்பட்ட மருந்துகள் 2 இம்மருந்துகளும் உளவியல் சார்ந்த உடல் சார்ந்த அடிமைத்தனத்தை பாதிப்பை ஏற்படுத்துபவையே. ஆனால் பட்டியல்

தடைசெய்யப்பட்ட மருந்து வகைகள்! - என்னென்ன?

படம்
giphy.com முதலில் நாம் பயன்படுத்த வேண்டாம் அரசு கூறிய தடுத்த மருந்துகள் இன்று எளிதாக சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.  எம்டிஎம்ஏ இந்த மருந்து ரத்தப்போக்கை நிறுத்துவதற்காக பயன்படுகிறது. இதனை ஜெர்மனி நிறுவனமான மேர்க் கண்டுபிடித்தது. இப்போது பெரும்பாலும் மருந்தாக அல்லது பார்ட்டிக்கான போதை வஸ்துவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1913 ஆம் ஆண்டு காப்புரிமை பெற்ற இம்மருந்து, உண்மையாக ஆராய்ச்சி செய்யப்பட்டது 1927ஆம் ஆண்டுதான். இதனை ஆராய்ந்த மேக்ஸ் ஓபர்லின், கடும் நச்சுத்தன்மை கொண்ட பொருள் இது என்று கூறினார். உளவியல் ரீதியான சிகிச்சைக்கு இம்மருந்து பயன்படும் எனவே பயன்படுத்த அனுமதியுங்கள் என மருத்துவர்கள் அரசிடம் கோரினர். 1985 வரை அரசு இதனைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. 2017ஆம் ஆண்டு எஃப்டிஏ இதனை மருத்துவர்கள் பயன்படுத்த அனுமதித்துள்ளது.  ஹெராயின்  மார்பினுக்கு மாற்றாக அதிலிருந்து மக்களை வெளியே கொண்டு வரும் என ஹெராயினை நம்பினர். இதை உங்களால் நம்ப முடிகிறதா? 1874இல் சார்லஸ் ரோம்லி ரைட் என்ற வேதியியலாளர் ஹெராயினை முதன்முதலில் கண்டுபிடித

அபிஜித் பானர்ஜியின் ஆர்சிடி நுட்பம்! - வறுமை ஒழிப்பு ஆயுதம்!

படம்
அபிஜித் பானர்ஜியின் ஆய்வு! வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை ஒழிக்க மாத்திரைகளை அரசு வழங்குகிறது. இலவசமாகத்தான். நிறைய பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் இதனை மறுப்பார்கள். காசு கொடுத்துத்தான் மருந்துகளை வாங்க வேண்டும். அப்போதுதான் அதன் மதிப்பு தெரியும்  என்று பேசுவார்கள். ஆனால் அபிஜித் உள்ளிட்ட மூவரும் அதனை மறுக்கிறார்கள். தொடக்க சுகாதார விஷயங்களை அரசு இலவசமாகவே வழங்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இதனை 1990-2000 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் நடத்திய கள ஆய்வுகளில் உறுதியாக உணர்ந்துள்ளனர். அதனை அறிக்கையாக எழுதி வெளியிட்டுள்ளனர். இதன்விளைவாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா அமைப்பு ஏழை மக்களுக்கான சுகாதாரத்திட்டங்களை சிறப்பாக திட்டமிட முடிந்தது. இவர்கள் கண்டுபிடித்த பொருளாதார நுட்பம் ராண்டமைஸ்டு கன்ட்ரோல் ட்ரையல் என்பது சுருக்கமாக ஆர்சிடி(RCT). வறுமை ஒழிப்பில் உள்ள சமூக பொருளாதார தடைகளை இவர்கள் கண்டுபிடித்தனர். அதனைத் தீர்க்கும் வழிகளையும் கூறியுள்ளனர். 2003 ஆம் ஆண்டு இவர்கள் எம்ஐடியில் அப்துல் லத்தீஃப் ஜமால் போவர்ட்டி ஆக்சன் லேப் (J-Pal) என்பதைத் தொடங்கினர். இதன்மூலம் 80க்கும் மேற்பட

மருந்துகளும் தடைகளும்! - நோய் மருந்துகளுக்கு தடை!

படம்
விளையாட்டு உலகில் ஒருவர் தங்கம் வெல்வது முக்கியமானது. அதற்குப் பிறகு அவரின் உடலின் ரத்தம், சிறுநீர் சோதனை நடைபெறும். இதில்தான் வெற்றி பெறும் பல்வேறு வீர ர்களும் மாட்டிக்கொள்கின்றனர். இதில் தடை செய்யப்பட்ட மருந்துகளை அவர்கள் பயன்படுத்தினால் பதக்கம் பறிக்கப்படும். இரண்டாம் நிலையிலுள்ள வீரருக்கு அப்பதக்கம் வழங்கப்படும். இது பெரிய அவமானம். தடை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிடுகிறோம் என்பதே வீர ர்களுக்கு தெரிவதில்லை. காரணம் இதிலுள்ள நிறைய குழப்பங்கள்தான். டெஸ்டோஸ்ட்ரோன் நமது உடலில் இயல்பாக சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்தான் இது. ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்ட்ரோன் அதிகமாக சுரந்தால்தான் அவர்களின் உடல் எலும்புகள் வளர்ச்சி பெறும். தசைகள் வளர்ச்சி சீர் பெறும். இதனை விளையாட்டு வீர ர்கள் தம் எடையைக் கூட்ட தசைகளை வலிமைப்படுத்த பயன்படுத்துகின்றனர். எப்ஹெட்ரின் ஆஸ்துமா பாதிப்பைக் குறைக்க பயன்படுத்தும் மருந்து. இதுவும் எடையை அதிகரிக்கவும், உடல் உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இந்த மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். டையூரெட்டிக்ஸ் சிறுநீரக கற்களைக் கரைக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்