இடுகைகள்

மிரட்டல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளம்பெண் கொல்லப்பட்டது சாதிரீதியான கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிதான்! பிரசாந்த் குமார், ஏடிஜிபி, உ.பி

படம்
                வல்லுறவு நடக்கவில்லை! பிரசாந்த் குமார். ஏடிஜிபி, உத்தரப்பிரதேசம் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு எதற்கு இந்தளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? செப்.14க்குப் பிறகு உளவுத்துறை தகவல்படி, சாதி மோதல்கள் நடைபெறுவதற்கான முயற்சிகள் நடைபெறவிருக்கின்றன என்ற தகவல் கிடைத்தது. எனவே அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வரும் மிரட்டல்களைத் தடுக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறையை பயன்படுத்தினோம். நாங்கள் பாதுகாப்பு வழங்காதபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தாலும் காவல்துறைதான் பொறுப்பு என்பார்கள். உள்ளூர் காவல்துறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது கடமைதான். இறந்துபோன பெண்ணுக்கு பாலியல் வல்லுறவு நடந்திருக்கும் என்கிறீர்களா? இன்னும் வழக்கு பற்றிய முறையான விஷயங்களை பதிவு செய்யவில்லை. சிபிஐ விசாரணை எதற்கு? வழக்கு வெளிப்படையாக நடக்கவேண்டும் என்பதற்காகத்தான். இதன் காரணமாக மாநில காவல்துறை, சிபிஐயோடு இணைந்து செயல்படவிருக்கிறது. சாதி மோதல்களை ஏற்படுத்த முனைந்த குழுவைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? இந்த சதியை கண்டுபிடிக்க நாங்கள் விசாரணை செய்து வரு

குழந்தை தொழிலாளர்களைப் பயன்படுத்தும் டெக் நிறுவனம்!

படம்
அமேசானின் அலெக்சா ரக டெக் ஐட்டங்களை உருவாக்க சட்டவிரோதமாக குழந்தைத் தொழிலாளர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் பயன்படுத்தி வருவது வெளியாகி உள்ளது. சீனாவில் 1500 சிறுவர்கள் இம்முறையில் பணியாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை இன்டர்ன்ஷிப் என்ற பெயரில் ஆசிரியர்கள் சகிதமாக வந்து வேலை செய்து அப்பணத்தைப் பெறுகின்றனர். இது சீன தொழிலாளர்துறை விதிகளை மீறிய செயல் என தி கார்டியன் செய்தித்தாள் தகவல் தெரிவித்துள்ளது. இதுபற்றி சீனாவின் தொழிலாளர் கண்காணிப்பு அமைப்பு, அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்படும் தொழிலாளர் கண்காணிப்பு அமைப்பும் ஆதாரங்களை திரட்டியுள்ளது. இச்செய்தி பற்றி ஃபாக்ஸ்கான், நாங்கள் பள்ளி மாணவர்களை ஓவர்டைம் மற்றும் இரவுகளில் வேலைபார்க்க வைப்பதை தவிர்ப்போம் என்று கூறியுள்ளது. ”முதலில் எட்டுமணிநேரம் என்றுதான் ஆசிரியர் கூறினார். ஆனால் பின்னர் பத்து மணிநேரம் வேலை என்று ஃபாக்ஸ்கான் மேலாளர்கள் மிரட்டுகின்றனர். வேலை செய்யாவிட்டால் உதவித்தொகை கிடைக்காது என அச்சுறுத்தலும் உள்ளது” என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத மாணவர் ஒருவர். இதனையும் சீனாவைச்சேர்ந்த தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளது.