போலிச்செய்திகளுக்கு ஏற்ப நாமும் விதிகளை மாற்றி கண்டுபிடிப்புகளை அதிகரிக்க வேண்டும்! - வான் டெர் லிண்டென்
வான் டெர் லிண்டென் போலிச்செய்தி ஆய்வாளர் உங்களுக்கு போலிச்செய்திகளைக் கண்டறிவதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி ? உலஇரண்டாவது உலகப்போர் நடைபெற்று முடிந்தபிறகும் , பிற மனிதர்களின் மோசமான நடவடிக்கைகள் , ஆபத்தான யோசனைகளை அறிந்தபிறகுதான் இதைப்பற்றி ஆராய வேண்டும் என்று தோன்றியது . இது அனைத்து சமூக உளவியலாளர்களின் எமமும்தான் . மக்கள் எப்படி செய்திகளின் மூலம் ஆதிக்கம் செலுத்தப்படுகிறார்கள் என்பதை ஆராய நினைத்தேன் . 2015 ஆம் ஆண்டு நான் அமெரிக்க தேர்தலுக்கு முன்னர் , பருவச்சூழல் மாறுபாடு பற்றிய தவறான தகவல்களை படித்தேன் . குறிப்பாக இப்படி தவறான தகவல்களை வெளியிட்டு சுற்றுச்சூழலுக்கு பாடுபடும் மனிதர்களை முடக்க சிலர் நினைத்தனர் . இதில் ஏராளமான மூடநம்பிக்கைகள் , முட்டாள் தனங்கள் இருந்தாலும் இதன் அடிப்படை நோக்கம் மேற்சொன்னதுதான் . எங்களுக்கு முன்னிருந்த கேள்வி எப்படி இதிலிருந்து மக்களை காப்பது , அ வர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது என்பதுதான் . தவறான தகவல்களுக்கு எதிராக உளவியல் தடுப்பூசி என்ற யோசனையை எங்கே பிடித்தீர்கள் ? ஐம்பது அறுபதுகளில் பில் மெக்யூர் என்பவர் உருவ