இடுகைகள்

இந்தியாவில் பல்கலைக்கழகங்களின் தரம் என்ன?

படம்
அறிவோம் தெளிவோம் !   உலகளவிலான பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியலில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸின் இடம் 420.   328(2014), 341(2015), 354(2016) என உலகளவிலான ரேட்டிங்கில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் சரிவைச் சந்தித்து வருகின்றன . தரவரிசைப்பட்டியல் ஆராய்ச்சி அறிக்கைகள் அளவு , தரம் பொறுத்து அளிக்கப்படுகிறது . மத்திய பல்கலையில் 5 ஆயிரத்து 606 பேராசிரியர் பணியிடங்கள் (33%) நிரப்பப்படாமல் உள்ளதாக மனிதவளத்துறை அமைச்சர் சத்யபால்சிங் மக்களவை அறிக்கையில் ( ஜூலை 23,2018) கூறியுள்ளார் . இதில் ஐஐடியில் மட்டும் 2 ஆயிரத்து 802 பணியிடங்கள் (34%) காற்று வாங்குகின்றன .  " கடந்த இருபது ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்களில்   புறக்கணிப்பு நிலவுகிறது " என்கிறார் ஹைதராபாத் பல்கலையைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியரான லஷ்மி நாராயணன் . இந்திய அரசின் 4.13%(2014) கல்வி ஒதுக்கீடு விகிதம் இங்கிலாந்து (5.68%), அமெரிக்கா (5.22%), தென் ஆப்பிரிக்கா (6.05%) நாடுகளை விட குறைவு . 2018-2019 டாப் 100 பட்டியலில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் 51, இங்கிலாந்தில் 8 ப

ஆரஞ்சு இந்தியாவில் மக்கள் வாழ முடியுமா?

படம்
பிரதமர் மோடியை கொலை செய்ய முயற்சித்த சதிக்கு காரணம் என குற்றம் சாட்டி ஐந்து பேர்களை மகாராஷ்டிராவின் புனே போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தற்போது கடந்த மூன்று மாதங்களில் மனித உரிமை ஆர்வலர்களை சல்லடை போட்டு தேடி கைது செய்து வருகிறது காவல்துறை. ஃபரிதாபாத்தின் சுதா பரத்வாஜ், டெல்லியைச் சேர்ந்த கௌதம் நவ்லகா, மும்பையைச் சேர்ந்த வெர்னோன் கன்சால்வ்ஸ், அருண் பெரிரா, ஹைதராபாத்தைச் சேர்ந்த வரவர ராவ், கிராந்தி தெகுலா ஆகியோரின் வீடுகள் போலீசாரால் சோதனை செய்யப்பட்டு பின்னர் மேற்கூறிய மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தலித் மற்றும் ஆதிவாசிகள் தொடர்புடைய செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கியவர்கள் என்பது ஒன்றே அரசு இவர்களை சிறைப்படுத்தி சித்திரவதை செய்யக் காரணம். இதற்கு போலீஸ் கூறும் காரணம், பீமா கோரேகான் பேரணி வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதுதான். கடந்த ஜூனில் வழக்குரைஞர் சுரேந்திர கட்லிங், பேராசிரியர் சோமா சென், மனித உரிமை செயல்பாட்டாளர் மகேஷ் ராவத்(நாக்பூர்), தலித் செயல்பாட்டாளர் சுதீர் தவாலே(மும்பை), ரோனா வில்சன்(டெல்லி) ஆகியோர் அதிரடியாக கைத

உதடுகளை பயன்படுத்தி என்ன செய்யலாம்?

படம்
உதடுகளே சாவி ! பயணமே லட்சியமாய் வண்டியில் போய்க்கொண்டிருக்க டேஷ் போர்டில் உருளும் தண்ணீர்பாட்டிலை எடுத்து குடிக்கத்தோன்றும் . முகத்திலும் , உடையிலும் நீர் சிந்த எப்படி குடிப்பீர்கள் ? அதற்காகத்தான் Lyd நிறுவனம் உதடுகள் வைத்தால் பாட்டில் திறக்கும் வகையில் தண்ணீர் பாட்டிலை சென்சார் பிளஸ் பேட்டரி சக்தியுடன் தயாரித்துள்ளது . தம்ஸ்அப் ஸ்டைலில் ஒற்றைக் கையில் பிடித்து நீர் அருந்தலாம் . ஒரு துளி நீர் கார் சீட்களில் சிந்தாது . இனி பயணிக்கும்போது , ஜாக்கிங் போகும்போது வேகத்தை குறைக்காமல் நீர் பருகி பிறரை மலைக்க வைக்கலாம் . உதடுகள் ஒட்டும்வரை பாட்டில் திறந்து நீர்வரும் . உதடுகளை அகற்றினால் அடுத்தநொடி பாட்டில் சென்சார் உதவியுடன் அலிபாபா குகையாய் மூடிக்கொள்ளும் . 503 மி . லி மற்றும் 384 மி . லி அளவில் ஸ்டீலில் 79 டாலர்களுக்கு நவம்பர் முதல் சந்தையில் வாங்கலாம் .

நல்லவர் யார்? கெட்டவர் யார்?- ஆல்ட் நியூஸ் ஆய்வு

படம்
முத்தாரம் Mini உங்களுடைய இணையதளத்தில் குஜராத் உண்மைகள் என்ற தலைப்பில் ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கியிருந்தீர்கள் . இதனை உருவாக்கியதற்கான தூண்டுதல்களை கூறுங்கள் . 2014   ஆம் ஆண்டு தேர்தலின்போது குஜராத் அரசு வளர்ச்சி குறித்து தவறான செய்திகள் ஊடகங்களில் சரியா , தவறா என அறியமுடியாதபடி பரப்பப்பட்டன . சிங்கப்பூர் படத்தை குஜராத் என பலரும் வளர்ச்சி பெயரில் பகிர்ந்தனர் . 2016 செப்டம்பரில் போலித்தகவல்களை கண்டறிய வலைதளத்தை தொடங்கினோம் . போலிச்செய்திகளை எப்படி புரிந்துகொள்கிறீர்கள் ? ஒரு செய்தியை சரியா , தவறா என புரிந்துகொள்ள முடியாமல் போவது முதல்வகை . இரண்டாவது , உண்மை பாதி , பொய் பாதி என இணைந்துள்ளது என தெரிந்தே பரப்பப்படுவது . பர்தா அணியாததால் கொளுத்தப்பட்ட ஹைதராபாத் பெண் என்ற கேப்ஷனோடு காட்டப்படும் புகைப்படம் உண்மை . ஆனால் கேப்ஷன் பொய் . போலிச்செய்திகளை பரப்பும் ஆப்ஸ்களுக்கு தடை விதிப்பது சரியான தீர்வா ? நிச்சயம் இல்லை . தவறு என்றால் அரசு உடனடியாக சட்டத்தை பயன்படுத்தி நிறுவனங்களை மூடுகிறது .   செய்தி பகிர்வு செயலிகள் விளம்பரங்கள் மூலம் சம்பாதித்து வருகின்றன .

போலிச்செய்தி தளங்கள் தடை!

படம்
இணையதளங்களுக்கு தடை ! கடந்த பதினெட்டு மாதங்களில் 1,662 இணையதளங்களை , சமூகவலைதள பதிவுகளை அரசு தடை செய்துள்ளதாக தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , மக்களவையில் வெளியிட்ட அறிக்கையில் ( ஆக .3, 2018) தெரிவித்துள்ளார் . ்போலிச்செய்திகளை தடுப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இந்தியாவின் தகவல்தொழில்நுட்ப சட்டப்படி (69A,2000) ஃபேஸ்புக் 56%, ட்விட்டர் 25%, யூட்யூப் 9% பதிவுகளை முடக்கியுள்ளன . இந்திய அரசின் ஒருமைப்பாட்டுணர்வை குலைக்கும் விதமாக செயல்படும் இணையதள பதிவுகளுக்கு ஏழாண்டு சிறைதண்டனையோடு கணிசமான அபராத தொகையும் உண்டு . உலகில் 2,190 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை 9%. டவிட்டரில் 8%. பிப்ரவரி 2017 வரை வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை 200 மில்லியனாக (13%) அதிகரித்துள்ளது . ஜூலை 2018 இல் ஃபேஸ்புக் 5 லட்சம் பயனர்களைக் கொண்ட போஸ்ட்கார்டு நியூஸ் பதிவுகளை காப்பிரைட் , போலிச்செய்திகள் புகார்களினால் நீக்கியுள்ளதை பூம் இணையதளம் உறுதிசெய்துள்ளது . இதன் நிறுவனர் மகேஷ் ஹெக்டே அரசால் கைது செய்யப்பட்டுள்ளார் . போலிச்செய்திகள் பரப

பழங்குடிகளை பழிவாங்கும் ஆஸ்திரேலியா!

படம்
நேர்காணல் ! " எம் பழங்குடி மக்களை கொன்றது இனவெறிதான்" உளவியல் பேராசிரியர் பாட் டட்ஜியன் . ஆஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி இன இளைஞர்கள் பெரும்ளவில் தற்கொலையில் ஈடுபட்டு உயிரிழந்து வருகின்றனர் . கிம்பெர்லெய் பகுதியில் நிகழ்ந்த தற்கொலை சம்பவங்களின் விகிதம் தேசிய சராசரியை தாண்டிவிட்டது . பர்டி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பாட் டட்ஜியன் இது குறித்து உரையாடுகிறார் . ஆஸ்திரேலியாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் உளவியல் பட்டதாரி நீங்கள் . எப்படி இப்பாதையை தேர்ந்தெடுத்தீர்கள் . சமூகரீதியாகவும் , வரலாற்றுரீதியாகவும் எங்கள் பழங்குடி இனம் பட்ட துயரங்களையும் வேதனைகளையும் பார்த்து வளர்ந்தவன் நான் . எனவே அத்துயரங்களை கல்வி மூலம் களைந்து அவர்களுக்கு உதவவே கல்வியை தேர்ந்தெடுத்தேன் . உளவியல் மற்றும் சுகாதார பிரச்னைகளுள்ள மக்களை நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும் தேவைக்காக உழைத்து வருகிறேன் . 2012 ஆம் ஆண்டு "Australia's Lost Generation" என்ற ஆவணப்படத்தி

புகைப்படக்காரரை கைது செய்த வங்கதேச அரசு!

படம்
அராஜக கைது ! வங்கதேசத்தின் பிரபல புகைப்படக்கலைஞர் ஷகிதுல் ஆலம் , அரசுக்கு எதிராக அல்ஜஸீரா டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார் . அறுபத்து மூன்று வயதான புகைப்படக்காரர் ஷகிதுல் ஆலம் , பேட்டி வெளியான மறுநாள் காலை பத்துமணிக்கு டாகாவிலுள்ள வீட்டில் 20 போலீசார் அவரை கைது செய்துள்ளனர் . ஊடகத்தில் அரசின் மீதான ஊழல் கறையை ஏற்படுத்துவதாக வங்கதேச ஐ . டி சட்டப்பிரிவு 57 படி கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது . சர்ச்வாரண்ட் இல்லாத மஃப்டி போலீசார் பத்திரிகையாளர்கள் , மனித உரிமையாளர்கள் என பலரையும் மேற்சொன்ன சட்டப்பிரிவில் கைது செய்து சிறையிலடைத்து வருகிறது வங்கதேச அரசு . கைது செய்யப்பட்டு 12 மணிநேரத்திற்கு பிறகு ஆலம் கைதான செய்தி ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது . கோர்ட் வளாகத்தில் ' போலீஸ் தன்னை லாக்கப்பில் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்தது ' என ஊடகங்களிடம் ஆலம் கூறியது அவரது ஆதரவாளர்களை கொதிப்படைய வைத்துள்ளது . போக்குவரத்து விதிகளை சீர்த்திருத்தக்கோரி வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் அங்குள்ள ஊழல் செறிந்த சூழலை உலகுக்கு வெளிச்சமிட்டு காட