இடுகைகள்

புலிகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கலாமா? - பதில் சொல்லும் ஆவணப்படம்

படம்
  பொதுவாக வன விலங்குகளை யாரும் சங்கிலி போட்டு கட்டி செல்லப் பிராணிகளாக்க முடியாது. ஓநாய் குலச்சின்னம் நாவலில் ஒரு மாணவர் அப்படி செய்து இறுதியில் தோற்றுப்போவார்.  கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்தால் விரியும் படம் எட்டு நிமிடங்கள் ஓடும். அதன் மையக்கதையே, புலிகள் அழிவும். அதனை சிலர் குட்டியாக இருக்கும்போதே எடுத்து செல்லப்பிராணியாக வளர்ப்பதும் தவறு என்பதைப் பற்றியதுதான்.  அமெரிக்காவில் மட்டுமல்லாது  உலகம் முழுக்கவுமே புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது தோராயமாக 3900 புலிகள் மட்டுமே உயிருடன் உள்ளன. மீதியுள்ள புலிகள் எங்கே போயின என்பதை நாம் நமது மனத்திடம்தான் கேட்டுப்பார்க்க வேண்டும். பெரும்பாலான புலிகள் வீரிய மாத்திரைகள், சூப் ஆகியவற்றுக்காக பலியாகிவிட்டன.  மீதி நினைவில் மட்டுமே காடுள்ள மிருகமான புலிக்குட்டிகளும் பல பிரபலங்களின் வீட்டில் சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படத்தில் காட்டப்படும் செல்லபிராணி காட்சிகள் மனதை ரணப்படுத்தக்கூடியது.  ஆவணப்படத்தில் ஏராளமான இயற்கை அமைப்பு சார்ந்த நிபுணர்கள் புலிக்குட்டிகளை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது ஏன் தவறு என்று பேசுகிறார்

பசுமை விருதுகளைப் பெற்ற இயற்கை செயல்பாட்டாளர்கள்!

படம்
  சுந்தர்லால் பகுகுணா சுந்தர்லால் பகுகுணா சிப்கோ இயக்கத்தை தொடங்கிய தலைவர். இமாலயத்திலுள்ள மரங்களை காக்கும் இயக்கம், காந்திய அணுகுமுறை போராட்டத்திற்காக புகழ்பெற்றது. 1980-2004 வரையிலான ஆன்டி டெரி டாம் எனும் இயக்கத்தை நடத்தி தலைமை தாங்கினார். சிப்போ இயக்கம் இவரது மனைவியினுடையது.  உத்தரகாண்டில் மரங்களை ஒப்பந்ததாரர் வெட்ட வந்தனர்.அப்போது போராட்டக்காரர்கள் மரத்தை வெட்டுவதை தடுக்க மரத்தைக் கட்டிப்பிடித்து தடுத்தனர். 1981-83 வரையிலான காலத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மரங்களை வெட்டக்கூடாது என பிரசாரம் செய்தார்.  இந்திராகாந்தியை சந்தித்து மரங்களை வெட்டுவதற்கான தடையைப் பெற்றார். இதனால் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒருவர் மரங்களை வெட்ட முடியும்.    சாலுமாரதா திம்மக்கா சாலுமாரதா திம்மக்கா கர்நாடகத்தைச் சேர்ந்தவர். 385 ஆலமரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். ஹூலிகல் குதூர் நெடுஞ்சாலையோரம் இப்பணியை செய்துள்ளார்.  குவாரியில் வேலை செய்த திம்மக்காவுக்கு முறையான கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை. மேற்சொன்ன மரங்கள் இல்லாமல் எட்டாயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வ

டேவிட் அட்டன்பரோ ஏற்படுத்திய மாற்றங்கள்தான் எனக்கு ஊக்கமூட்டின! - புகைப்படக் கலைஞர் பெர்சி ஃபெர்னாண்டஸ்

படம்
புகைப்படக் கலைஞர்  பெர்சி ஃபெர்னாண்டஸ்  பெர்சி ஃபெர்னாண்டஸ் கானுயிர் புகைப்படக் கலைஞர் புகைப்படக் கலைஞர்  பெர்சி ஃபெர்னாண்டஸ் கானுயிர் புகைப்படக்கலை மீது எப்படி உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது? தமிழ்நாட்டிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை அருகில் ராணுவப்பள்ளியில் படித்தபோது ஆர்வம் பிறந்தது. நாங்கள் அங்கு தினமும் நீர் குடிக்க வரும் யானைகளைப் பார்ப்போம். அந்த நீர்நிலையில் ஏராளமான முதலைகள் உண்டு. பக்கத்திலேயே முதலைப் பண்ணையும் இருந்தது. சிறுத்தையை அடிக்கடி பார்ப்போம்.  ஒருநாள் மாலைநேரம் நாங்கள் விளையாடிவிட்டு நீர் குடிக்க வரும் இடத்தில் இரண்டு மலைப்பாம்புகளை பார்த்தோம். குடிநீர் குழாய் காவல்நிலையத்தின் அருகில் இருந்தது. மலைப்பாம்புகள், யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் ஆகிய உயிரினங்களை நாங்கள் அடிக்கடி பார்ப்பது பழக்கமாகிவிட்டிருந்தது. கேரளாவில் உள்ள சின்னார், மூணார் ஆகிய இடங்களுக்கு நாங்கள் அடிக்கடி சுற்றுலா செல்வோம். அங்கு நாங்கள் புலி, சிறுத்தைகளை பார்ப்போம். கூடுதலாக ஏராளமான சந்தன மரங்களையும் பார்த்து ஆச்சரியப்பட்டோம்.  பிஹெச்டி படிக்கும்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மயில்களைப

எதிர்காலத்தில் ஏற்படும் நீர்தட்டுப்பாட்டை முன்னமே சுட்டிக்காட்டும் நூல்! - நூல் அறிமுகம் நவ.2021

படம்
  நூல் அறிமுகம் தி புக் ஆஃப் பாஸிங் ஷாடோஸ் சிவி பாலகிருஷ்ணன், டிஆர்எஸ் டிஎம் யேசுதாசன் நியோகி புக்ஸ் 350 மலபார் கிராமம் ஒன்றில் வசிக்கும் யோகண்ணன் என்பவர், மெல்ல வீழ்ச்சிக்கு உள்ளாவதை நூல் விவரிக்கிறது. தனக்கு தெரிந்த பழக்கமான அத்தனை விஷயங்களையும் ஒரு மனிதன் இழக்கும்போது ஏற்படும் வலியை வாசகர்கள் உணரலாம்.  எ பேர்ட் ஃபிரம் அஃபார் அன்சுல் சதுர்வேதி பான் மெக்மில்லன் 399 1942ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனி தலைவர் ஹிட்லரை சந்தித்து பிரிட்டிஷாரை விரட்ட ஆதரவு கேட்கிறார். தனி ராணுவத்தை அமைத்து போர் செய்ய திட்டமிடுகிறார் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நூல் பேசுகிறது.  பாய்ஸன் ஃபார் பிரேக்ஃபாஸ்ட் லெமோனி ஸ்னிக்கெட்  ஒன்வேர்ல்ட் 499 எழுத்தாளரே பேசுவது போல அமைந்த நூல். அவரின் கதவருகே உங்கள் உணவில் விஷம் கலக்கப்பட்டுவிட்டது என குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னாலுள்ள மர்மங்களை கண்டுபிடித்தால்தான் அவர் உயிர் பிழைக்கமுடியும். என்ன செய்கிறார் என்பதுதான் கதை.  தி எக்ஸைல் ஆப் முகுந்தா ஆர்பிட் பக்ஷி ஆலெப் புக் கம்பெனி 395 மகாவிஷ்ணு தொடர் நூல்களின் தொடர்ச்சி இது. கிருஷணனின் மகன் முகுந்தன். அவர் இப்போத

சீரியல் கொலைகாரரின் உடலில் வெனோம் புகுந்தால்.... - வெனோம் 2 - டாம் ஹார்டி

படம்
  வெனோம் - லெட் தேர் பி கார்னேஜ் வெனோம் 2 Director: Andy Serkis Produced by: Avi Arad, Matt Tolmach, Amy Pascal, Kelly Marcel, Tom Hardy, Hutch Parker Screenplay by: Kelly Marcel     எடி பிராக் இந்த முறை ஆக்ரோஷமாக அடி உதையோடு உணர்கலக்குகிறார். சீரியல் கொலைகாரர் ஒருவர் சிறையிலிருந்து தப்பிவிடுகிறார். கூடுதலாக எடியின் உடலிலுள்ள வெனோமின் சக்தி கொண்ட ரத்தத்தை சுவைத்துவிடுகிறார். இதனால் அவரது உடலில் இன்னொரு வெனோம் உருவாகிறது. இதனை எதிர்த்து போராடி வெனோம் எப்படி வெல்கிறது என்பதுதான் கதை.    வெனோம் முதல் பாகத்தில் எடிக்கும் அவரது காதலிக்கும் காதல் செட்டாக  வாய்ப்பு இருக்குமா இல்லையா என்று சந்தேகம் அனைவருக்குள்ளும் இருந்தது. ஆனால் இந்த பாகத்தில் அதற்கு சுப மங்கலத்தை பாடிவிட்டார்கள். எனவே அடுத்தடுத்த பாகங்களில் ஆக்சன் காட்சிகள் இன்னும் பீதியூட்டும்படி இருக்கும் என நம்பலாம்.    முதல் பாகத்தை விட இந்த இரண்டாவது பாகத்தில் உணர்ச்சிகரமான காட்சிகள் அதிகம். சீரியல் கொலைகாரர் தனது மனநிலையைப் பற்றி பேசுவது, எடித்துடன் நட்பாக நினைப்பது, வெனோமுடன் எடித் ஈகோ பார்த்து சண்டை போடுவது என நிறைய பிரச்னைகள் படத்த

சீக்கியர்களை கொன்ற சம்பவங்களை நானே நேரடியாகப் பார்த்தேன்! - எழுத்தாளர் எம் முகுந்தன்

படம்
        எழுத்தாளர் எம் . முகுந்தன்   நேர்காணல் எம் . முகுந்தன் டைம்ஸ் ஆப் இந்தியா கே பி சாய் கிரண்   பிரெஞ்சு தூதரகத்தில் பணியாற்ற டெல்லி வந்தவர் , அந்த நகரைப் பற்றிய நூல்களை எழுதியுள்ளார் . டெல்லி எ சாலோக்யூ என்ற நூலை எழுதி நடப்பு ஆண்டிற்கான ஜேசிபி இலக்கிய விருதை வென்றுள்ளார் . நீங்கள் டெல்லி பற்றி டெல்லி , டெல்லி 1981, டெல்லி என சாலிக்யூ என்ற நூல்களை எழுதியுள்ளீர்கள் . நீங்கள் வெளியிலிருந்து வந்து டெல்லியில் குடியேறி வெகு ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறீர்கள் . உங்கள் பார்வையில் டெல்லியைப் பற்றிய கருத்து என்ன ? அறுபதுகளில் நான் டெல்லிக்கு வந்துவிட்டேன் . அடுத்த நாற்பது ஆண்டுகளில் நகரம் ஏராளமான மாற்றங்களை சந்தித்துள்ளது . இதனை நான் வெளிப்புற தன்மையில் மட்டும் கூறவில்லை . கலாசாரம் சார்ந்தும் பேசுகிறேன் . அன்றைய காலத்தில் நகரமாக இருப்பதை விட பல்வேறு கிராமங்களின் இணைப்பு புள்ளியாகவே நகரம் இருந்தது . முபாரக்பூரில் கோதுமையும் காலிப்ளவரும் ஏராளமாக விளைந்து வந்த்து . எருமைகளும் இங்கே சாலைகளில் ஏராளமாக உலவி வரும் . இப்போது டெல்லியில் வன்முறையும் குற்றங்களும் அ

ஒருவர் இந்து என்பதை வன்முறைக்கும்பல்கள் முடிவு செய்கின்றன! - ஷோபா டே, எழுத்தாளர்

படம்
              நான் எப்படிப்பட்ட இந்து என்பதை யார் முடிவு செய்வது ? ஷோபா டே(TOI) இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் நான் என்னை மோசமான நபராக உணர்கிறேன் . அடையாளம் கண்டுள்ளேன் . இந்து என்ற அடையாளம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது . இந்து பெற்றோருக்கு பிறந்தேன் . இந்து வழியில் வாழ்கிறேன் . இதில் வெற்றி , தோல்வி , தேர்ச்சி , தேர்ச்சி பெறவில்லை என்றெல்லாம் சொல்ல ஏதுமில்லை . கூடுதலான எந்த பலன்களையும் நாம் இந்து என்பதற்காக பெற்றதில்லை . எனக்கு இருக்கும் தகுதிகளின்படி பார்த்தால் இன்றைய இந்தியாவில் நான் மோசமான இந்துவாக தோன்றுகிறது . இன்னும் கூடுதலான திறமைகளை வளர்த்துக்கொண்டால்தான் இந்துவாக இந்தியாவில் வாழமுடியும் போல தோன்றுகிறது . நான் இந்து என்பதைக் காட்ட தனி அடையாளமாக பேட்ஜ் ஏதாவது அணிய வேண்டுமா என்ன ? இப்படி செய்தால் அது பொது இடத்தில் உள்ளாடைகளை எடுத்து வெளியே காட்டுவது போலத்தானே இருக்கும் . இந்து என்பதை வெளிக்காட்டி பிறரை விட அதிக சலுகைகளை பெறுவது தவறானதாக கருதுகிறேன் . இதைக்கூட பலரும் விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பேசுவார்கள் . இதைப்பற்றியெல்லாம்

சைவ உணவால் குழந்தைகளை மெல்ல கொல்லும் அரசியல்வாதிகள்!

படம்
  மாட்டிறைச்சி அரசியல் குஜராத் மாநிலம் உலகிலேயே அதிகம் வளர்ச்சியடைந்துள்ளது என பலரும் நமக்கு விபூதி அடித்துள்ளனர். ஆனாலும் உண்மையான செல்வம் என்பது மனிதவளத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுதான். அதனை இங்குள்ள சைவ அரசியல்வாதிகள் கணநேரம் மறந்துவிட்டனர் போல.  மாநிலத்தில்  80 சதவீத குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் ஆறு மாதம் முதல் ஐம்பத்தொன்பது மாதம் வரையிலான வயதைக் கொண்டவர்கள் இதனை சொன்னது வெளிநாட்டு தன்னார்வ அமைப்பு அல்ல. ஆத்மநிர்பாராக செயல்படும் குடும்ப சுகாதார துறையின் ஆய்வுதான். ஏறத்தாழ ஒட்டுமொத்த நாடுமே மன்னர் ஆட்சிகாலத்தைப் போல மாறிக்கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில்தான் மன்னர் எந்த மதமோ, அதே மத த்தை மக்களும் பின்பற்றவேண்டும். மறுப்பவர்களை கொன்றுவிடுவார்கள். அல்லது மிரட்டி மதம் மாற்றுவார்கள். இப்போதும் குறிப்பிட்ட நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு பிடித்த விஷயங்களை மக்கள் மேல் திணித்து வருகிறார்கள்.  இதன்படி குஜராத்தில் சைவ உணவு வாசிகள், நான் - வெஜ் சாப்பிடும் பழக்கத்தை ஒழிப்பதை இப்போது தங்களது கடமையாக கொண்டுள்ளார்கள். ஏன் இப்படி என்று கே

கருத்துகளால் வேறுபட்டாலும் இந்தியாவுக்கான முன்நின்ற நேரு, காந்தி! - ஜவகரும் காந்தியும் - வெ.சாமிநாதசர்மா

படம்
  நேரு, காந்தி ஜவகரும் காந்தியும் வெ.சாமிநாதசர்மா இந்த நூல் கொஞ்சம் பழமையானதுதான். இதை இப்போது படிப்பதற்கு முக்கியமான காரணம், பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவர்கள் கருத்தியல் ரீதியாக வேறுபட்டவர்கள். அவர்கள் ஒற்றுமையாக இல்லை என்று சில மதவாத கூட்டங்கள் பிரசாரம் செய்து வருகின்றன.  இதில் பாதி மட்டுமே உண்மை. ஒருவரின் சிந்தனை இன்னொருவருடன் ஒத்து வரலாம். ஆனால் அப்படியே பிரதி எடுத்தது போலவா இருக்கும்?சாமிநாத சர்மா இந்த நூலில் காந்தி, நேரு ஆகிய இருவரின் ஒற்றுமை, வேற்றுமைகளை அழகாக பிரித்து எழுதி இருவரின் லட்சியம் எதை நோக்கியது என்பதையும் எழுதியுள்ளார்.  சுதந்திர இந்தியா என்பதுதான் காந்தி, நேரு ஆகிய இருவரின் லட்சியம். ஆனால் அதை நோக்கிய பயணத்தில் இருவரின் கருத்துகளும் எப்படி இருந்தன என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மதம், அரசியல், வளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கை ஆகியவற்றைப் பொறுத்தவரை காந்தி, நேரு ஆகியோரின் வாழ்க்கைப் பார்வை வேறுபட்டது. இதனை நேரு காந்தியின் காலத்திலேயே அவரிடமே கூறியுள்ளார்.  ஒருவகையில் காந்தி, தனது கருத்துகளை அனுபவங்கள் வழியாக மேம்படுத்திக்கொண்டே இருந்தார். ந

தமிழ் பிராமணர்களுக்கு வட இந்தியாவின் மணப்பெண்! - என்ன பிரச்னை?

படம்
  தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்கள் சங்கத்தினர், தமிழ்நாட்டில்  பெண்கள் கிடைக்காததால், பீகார். உ.பியில் பெண்களை தேடிவருகின்றனர். இந்த வகையில் 40 ஆயிரம் ஆண்களுக்கு பெண்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த தகவல்கள் சங்கம் வெளியிடும் இதழ் கூறியுள்ளது. இந்த நிலை இப்போது செய்தியானாலும் கூட பத்தாண்டுகளாக நிலை இப்படித்தான் போகிறதாம்.  முப்பது முதல் நாற்பது வரையிலான மாப்பிள்ளைகள் தங்களுக்கு ஏற்ற பிராமண பெண் கிடைக்காமல் திருமணம் நடக்காமல் உள்ளனர் என்று பிராமணர் சங்க தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.  இதற்கு என்ன காரணம் , பெண், ஆண்களின் பாலின விகிதம்தான் காரணம் என அறியவந்துள்ளது. பத்து பிராமண ஆண்களுக்கு, ஆறு பெண்கள்தான் உள்ளனர்.  குடும்பக்கட்டுப்பாட்டை பிராமணர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு கடைபிடித்துள்ளனர். இதனை அவர்களின் ஆச்சாரியர்கள் எதிர்த்தாலும் கூட அவர்கள் கேட்கவில்லை. இதனால்தான் பெண்கள், ஆண்களின் விகிதம் மாற்றம் பெற்றுள்ளது.வட இந்திய மாநிலங்களில் இந்தி பேச தெரிந்த ஒருங்கிணைப்பாளர்களை பிராமண சங்கங்கள் உருவாக்கியுள்ளன. இப்படி நிலைமை மாறுவதற்கு ஆண்மைய கருத்தாக்கம் பிராமணர்களின் ஜாதியில் இருப்பதுதான் கார