இடுகைகள்

குற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செம்மரக்கடத்தலில் கொல்லப்படும் நபர்களை தேடிப்போகும் உதவி கலெக்டர்!

படம்
  ராமாராவ் ஆன் டூட்டி 2022 தெலுங்கு ராமாராவ் ஆன் டூட்டி தெலுங்கு ரவிதேஜா, நாசர்,திவ்யான்சா கௌசிக்   படத்தின் தொடக்க காட்சியில் வயதான முதியவர் இறந்துபோன ஆளை யாருக்கும் தெரியாமல் மண்ணைத் தோண்டிப் போட்டு புதைக்கிறார். இதற்கடுத்து, உதவி கலெக்டரான ராமாராவின் அதிரிபுதிரி அறிமுக காட்சி. படம் முழுக்க குற்றச்சம்பவங்கள், அதை எப்படி செய்கிறார்கள், அதில் காவல்துறையின் ஈடுபாடு என ஆழமாக சென்று பேசுகிறது. படத்தில் ராமாராவின் மனைவி, அவரது முன்னாள் காதலி என இரண்டுபேர் இருந்தாலும் நடிப்பதற்கான வாய்ப்பு முன்னாள் காதலியான மாலினிக்கே உள்ளது. சற்று உள்ளடங்கிய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திய நடிப்பு என்றாலும் அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். ராமாராவ் பாத்திரம், மாலினியின் கட்டாய திருமணத்தை புரிந்துகொள்ளும் விதம் முதிர்ச்சியானது. பின்னணி இசை என்றாலே ஒருவர் கர்ண கடூரமாக அலறுவது என சாம் சிஎஸ் புரிந்துகொண்டிருக்கிறாரா என்ன? இசைக்கருவிகளை சிறப்பாக பயன்படுத்தினாலே போதுமானது என தோன்றுகிறது. காதில் அந்தளவு இரைச்சல் கேட்கிறது. சமகால இசைக்கலைஞர்கள் எல்லோருமே இசைக்கலைஞர் அனிருத்தைப் பின்பற்றுகிறார்கள் போல… ப

குடும்ப வரலாற்றின் களங்கத்தை வெளிவராமல் தடுக்கும் மாயப்பபனின் கதை! - க்ரைம் - ரா கி ரங்கராஜன்

படம்
  ரா கி ரங்கராஜன், எழுத்தாளர் க்ரைம் ரா கி ரங்கராஜன் அல்லயன்ஸ் பதிப்பகம்   ஒரு முக்கியமான கதை வழியே ஏராளமான கிளைக் கதைகளைக் கூறும் முறையை எழுத்தாளர் ரா கி ர கையாண்டிருக்கிறார். அதில் பழுதும் இல்லை. வாசிப்பில் நீங்கள் எங்கேயும் குழம்பாமல் டோல்கேட்டே இல்லாத நெடுஞ்சாலைபோல சென்றுகொண்டே இருக்கலாம். பாலா, டிவி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பவள். அவளுக்கு மாயப்பன் என்பவன் போன் செய்து. அவளது தந்தையும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஜனார்த்தனன் தனது சுயசரிதையை எழுதி வருகிறார். அதில் தனது மாயப்பன் குடும்பம் பற்றிய கதை, வரலாறு வரக்கூடாது. வந்தால் அவளது தந்தை கொல்லப்படுவார் என எச்சரிக்கிறான்.   கதை இப்படித்தான் தொடங்குகிறது. பெரிதாக ரத்தம் வல்லுறவு என நீண்டு செல்லாத கதை. கதையின் போக்கில் ஏராளமான கிளைக்கதைகள் உள்ளன. இதில், சுப்புலட்சுமி தூக்கில் தொங்கிய கதை சுவாரசியமாக உள்ளது. இதில் நினைத்துப் பார்க்காத திருப்பங்களும் உள்ளன. இன்று வரும் கோர்ட் டிராமா படங்களை விட நன்றாகவே எழுதப்பட்ட கதை. இதற்கடுத்த கதையென தினேஷ், சபிதா என்ற பெண்ணால் கொல்லப்பட்ட கதையைக் கூறலாம். இதிலும் குற்றவாளிகளை யார்

சுற்றுலா போன இடத்தில் காணாமல் போன குழந்தை

படம்
  அமெரிக்காவில் இடா மாகாணத்தில் நடைபெற்ற குற்றச்சம்பவம். 2015ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் தேதி டியோர் கன்ஸ் என்ற இரண்டு வயது குழந்தை காணாமல் போகிறது. என்னவானது என்பதை இன்றுவரைக்கும் க்ளூ ஏதாவது கிடைக்குமா என காவல்துறை தேடி வருகிறது. ஆனால் எதிர்பார்த்த எந்த தடயங்களும் கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம். சால்மன் சாலிஸ் தேசிய வனப்பகுதிக்கு அருகில் ஜெசிகா மிட்செல் அவரது கணவர் டியோர் கன்ஸ் சீனியர் ஆகியோர் சுற்றுலாவுக்காக வந்திருந்தனர். டியோர் கன்ஸ் சீனியரின் தாத்தாவும் அவரது நண்பருடன் அங்கே இருந்தார். அவரிடம்தான் குழந்தை டியோர் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அவர் தனது நண்பருடன் சேர்ந்து மீன் பிடிப்பதில் தீவிரமாக இருக்கும்போது, லிட்டில் மேன் எனும் குழந்தை டியோர் காணாமல் போயிருந்தது. குழந்தையின் பெற்றோர் அருகில் இருந்த பாருக்கு மதுபானம் அருந்த சென்றிருந்தனர். குழந்தையை தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். வந்து பார்த்தால் ஒருவருக்கொருவர் நீ பார்த்தாயா என கைகாட்டிக்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி போல நின்றார்களே ஒழிய பதில் கிடைக்கவில்லை. இருநூறுக்கும் மேலான காவல்துறையினர், தன்னார்வலர்கள் இரண்டு கி.மீ. தொ

அதிகரிக்கும் கொலைக்குற்றங்கள் - தடுமாறும் அமெரிக்க காவல்துறை

படம்
  கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் ஹாக்கின்ஸ். இவர் 2019 ஆம் ஆண்டு தொடங்கி மாகாணமெங்கும் புகைப்படங்களைக் கொண்ட பில்போர்டுகளை வைத்து வருகிறார். அதில், படுகொலையாகி குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத மனிதர்களின் முகங்கள் உள்ளன. எங்களை கொன்றவர்கள் யார்? என தலைப்பிட்டு புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தகவல் கொடுக்க காவல்துறையின் தொடர்புஎண் உள்ளது. ஹாக்கின்ஸ் எதற்கு இப்படி செய்கிறார்? ஏனெனில் 1995ஆம் ஆண்டு டிசம்பர் ஆறு   அன்று, அவரது மகன் ரெகி பத்தொன்பது வயதில் தெருவில் சுடப்பட்டு படுகொலையாகி கிடந்தார் 27 ஆண்டுகளாகியும் காவல்துறையால் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை. முயற்சிக்காமல் இல்லை ஆனால் குற்றவாளி கிடைக்கவில்லை.   அந்த ஆண்டில் நடைபெற்ற 838 கொலைகளில ரெகியும் ஒருவராக பட்டியலில் ஆவணப்படுத்தப்பட்டார். மகன்தான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்த   ஹாக்கின்ஸ் மனதளவில் நொறுங்கிப்போனார். அவர் கணக்காளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஹிப் ஹாப் இசைக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த இளைஞன், அங்குள்ள உள்ளூர் குழுக்களில் சேர்ந்து சிறுசிறு கடத்தல்களுக்கு குருவியாக செயல்பட்டு பின்னாளில் உயிர் இழந்துள்ளான். ரெகி என்ற ஹாக்கின

டார்க் வெப்பில் இயங்கும் குற்றவாளிகளை, மக்கள் விடுதலைப் படை வெற்றிகொள்ளும் கதை! மை டியர் கார்டியன்

படம்
  மை டியர் கார்டியன் சி டிராமா 40 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   மக்கள் விடுதலைப்படையின் பிரிவில் இயங்கும் சிறப்பு படையின் அருமை பெருமைகளை பேசும் டிவி தொடர். மேலே சொன்னதுதான் தொடரின் அடிப்படை. எனவே, மற்ற விஷயங்களையெல்லாம் அப்படியே அமுக்கி விடுகிறார்கள். குறிப்பாக உள்நாட்டு காவல்துறையின் செயல்பாட்டையெல்லாம் தாண்டியது மக்கள் விடுதலைப்படை என காட்டுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசம் என்பதை உறுதிமொழி எடுக்கும் காட்சியில் காட்டுகிறார்கள். சீனாவில் ஒரே அரசியல்கட்சிதான் உள்ளது. அதுதான ஆளுங்கட்சி அரசை வழிநடத்துகிறது. லியாங் மூ ஷி, சிறப்பு பிரிவு ராணுவ வீரர்.கேப்டனாக உள்ளவரின் குழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் போதை தயாரிப்பு குழு ஒன்றை உள்நாட்டு காவல்துறையோடு சேர்ந்து வேட்டையாடுகிறது. அதில் ஓல்ட் மாஸ்டர் என்ற முக்கிய குற்றவாளி தப்பி விடுகிறார். அவரிடம் வேலை செய்த சாதாரண மக்கள் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படுகிறார்கள். இதில் ஜூ ரான் என்ற பள்ளிச்சிறுவன், போதைப்பொருள் வியாபாரியான அப்பாவை காப்பாற்றும் முயற்சியில் இறந்துபோகிறான். அவனது அப்பாவும், போதை தொழில் செய்யும் முதலாளி

லத்தீன் அமெரிக்காவில் மக்களின் அபிமானம் பெற்ற சர்வாதிகாரி ! நாயூப் பக்லே

படம்
  கைதிகள் சிறைக்கூடத்தில்.. - எல் சால்வடோர் நாயூப் பக்லே கிரிப்டோகாயினில் அரசு பண முதலீடு மீள முடியாத சிறைவாசம் ட்விட்டரில் சர்வாதிகாரி என அறிவித்தபோது... சால்வடோரில்   உதயமான புதிய சர்வாதிகாரி கழிவறையில் அமர்ந்துகொண்டு கிரிப்டோகரன்சியில் மக்களின் வரிப்பணத்தை முதலீடு செய்வது, அரசு உத்தரவுகளை, சட்டங்களை சமூக வலைத்தளத்தில் முதலில் வெளியிடுவது, சிறைக்கைதிகளன் அரைநிர்வாண படங்களை வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றுவது, பேஸ்பால் விளையாட்டு வீரர் போல உடையணிந்துகொண்டு ஊடகங்களை சந்திப்பது என சால்வடோர் மக்களுக்கு அந்த நாட்டு அதிபர் நாயூப் பக்லே காட்டும் காட்சிகள் நிச்சயம் புதிதான். நாட்டில் அவர் செய்யும் செயல்பாடுகளை பார்ப்பவர்களுக்கு கோமாளிக்கூத்தாகவே தெரியும். ஆனாலும் மக்கள் அதை பெரிதாக எதிர்ப்பதில்லை. என்ன காரணம் என்று பார்ப்போம். நாட்டின் புகழ்பெற்ற இமாமிற்கு மகனாக பிறந்தவர், பக்லே. அவருக்கு குடும்பத்தொழிலே விளம்பரப்படங்களை எடுப்பதுதான். அதற்கென குடும்ப ம் சார்ந்த விளம்பர நிறுவனம் உள்ளது. பக்லேவின் மூன்று சகோதரர்கள்தான், இப்போது அவருக்கு அரசியல் ஆலோசகர்களாக உள்ளனர். தனது அரசியல் செயல

கொரிய காவல்துறையில் முதல்முறையாக புரொஃபைல் செய்வதை தொடங்கும் இரு அதிகாரிகளின் போராட்டம்!

படம்
  த்ரோ தி டார்க்னெஸ் - கே டிராமா த்ரோ தி டார்க்னெஸ் கே டிராமா 12 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி   எந்த காரணமும் இல்லாமல் கொலை செய்வதில் உள்ள மகிழ்ச்சிக்கென அதை செய்யும் சைக்கோ, சீரியல் கொலைகாரர்கள் கொரியாவில் உருவாகிறார்கள். அவர்களை கொரிய காவல்துறை எப்படி எதிர்கொண்டது. அங்கு குற்றங்களை புரொஃபைல் செய்யும் பிரிவு எப்படி தோன்றியது, அதற்காக இரு காவல்துறை அதிகாரிகள் என்னென்ன சிரமப்பட்டனர் என்பதை கூறும் தொடரிது. தொடர் முடியும்போது, பிஹேவியர் சயின்ஸ் பிரிவை உருவாக்கியவர்களில் ஒருவரான சாங், தங்களது பழைய அலுவலக அறையை வெறுமையான விரக்தியான கண்களோடு பார்த்துக்கொண்டிருப்பார். அந்தக் காட்சியோடு தொடர் நிறைவுபெறும். த்ரோ தி டார்க்னெஸ் தொடரைப் பார்க்கும் பார்வையாளர்களும் கூட அப்படித்தான் மாறிப்போகிறார்கள். அந்தளவு குற்றம், குற்றத்தின் தீவிரம், ரத்தம், வெட்டப்பட்ட உடல், கொலை செய்த காரணம், வக்கிரமான மனங்களின் நியாயப்படுத்தல்கள், விசாரணைக் காட்சிகள் உள்ளன. அமெரிக்க புரொஃபைலரான ஜான் டக்ளஸ் எழுதிய மைண்ட் ஹண்டர் என்ற நூலின் கொரிய மொழிபெயர்ப்பை தொடரில் காட்டுகிறார்கள். அந்த நூலை அடிப்படையாக வ

வயதான பெண்மணிகளைத் தேர்ந்தெடுத்து வல்லுறவு செய்த மர்ம ஆசாமி

படம்
  ஒரே ஆண்டில் மக்களை மீளாத பயத்தில் ஆழ்த்த முடியுமா? அதை வல்லுறவு ஆசாமி ஒருவர் செய்தார். இவரை வெஸ்ட் சைட் ரேபிஸ்ட் என்று அழைக்கிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1974-1975ஆம் ஆண்டில் மட்டுமே 33 பெண்களை மர்ம ஆசாமி வல்லுறவு செய்தார். அதில் பத்து நபர்களைக் கொன்றார். இறந்த பெண்கள் அனைவருமே 63 – 92 வயது கொண்டவர்கள். முதிய பெண்களை தேடிக் கொல்வதால் பலரும் பீதியடைந்தனர். எனவே, சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்து துப்பாக்கி, கத்தி, கோடாரி என வாங்கத் தொடங்கினர். எல்லாம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத்தான்… வேறு எதற்கு? யார் கொலையாளி என பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களையே சந்தேகமாக பார்த்துக்கொண்டார்கள். தூங்கும்போதும் கூட கைவிரல்கள் துப்பாக்கி ட்ரிக்கரை தொட்டபடி இருந்தன. 1974ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று, மேரி   என்ற 72 வயது பெண்மணி கொல்லப்பட்டார். அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் வயதான பெண்கள் தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டனர். முன்னர் சொன்னது போல அதில், பத்து பேர் கொல்லப்பட்டனர்.   காவல்துறை முடிவு இல்லாத தேடுதலை நடத்திக்கொண்டிருந்தனர். ஆனால் கொலையாளி கிடைத்த பாடில்லை. ஆனால் அதற்கு பதிலாக வயதான பெ

அசுரகுலம் 6 - உயிர்வேட்டை மின்னூல் வெளியீடு

படம்
  அசுரகுலம் 6 - உயிர்வேட்டை அசுரகுலம் 6 - உயிர்வேட்டை நூலில் இதுவரை வாசிக்காத பல்வேறு தொடர் கொலைகாரர்கள் பற்றி விவரிக்கப்படுகிறது. முக்கியமாக அனைவருமே இளமைக்காலத்தில் கடுமையான வறுமை, பெற்றோரின் புறக்கணிப்பை, நோய்களை, குறைபாடுகளை அனுபவித்தவர்கள். உடல், மனம் ஆகியவை நோயுற அவர்களைச் சுற்றியுள்ள சூழலும் ஒரு காரணம்.  சமூகம், சட்டத்தின்படிதான் ஒழுங்கு நிலை குலையாமல் காப்பாற்றப்படுகிறது. மனிதர்களைக் கொல்வது சட்டத்தின்படி அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, தொடர் கொலைகாரர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது மரணதண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் வலிக்கு பதிலடியாக வலி என அவர்கள் செல்லும் பாதை திரும்பி வரமுடியாத ஒன்று. உயிர்வேட்டை நூலில் தொடர்கொலைகாரர்களின் உளவியலை வாசகர்கள் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன். நூலை வாங்க..... https://www.amazon.in/dp/B0C2CNFT8N அட்டைப்படம் - பின்டிரெஸ்ட் 

நீலப்பட நடிகையின் சுயசரிதை- நீலப்படம் - லஷ்மி சரவணக்குமார்

படம்
  நீலப்படம் - லஷ்மி சரவணக்குமார் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் நீலப்படம் நாவல் லஷ்மி சரவணக்குமார் அமேசான்.காம்   இந்த நாவலில் நீலப்பட நடிகையான ஆனந்தி தன்னுடைய வாழ்க்கையை சொல்கிறாள். அவள் தனது வாழ்க்கையில் சந்திக்கிற மனிதர்கள் அவளை எப்படி மாற்றுகிறார்கள், சிந்தனையில், செயலில் மாற்றம் ஏற்படுத்துகிறார்கள் என்பதை, எழுத்தாளர் ல ச கு விவரித்து எழுதியிருக்கிறார். ல ச குவின் பிற நாவல்களைப் போலவே இதிலும் வலி நிறைந்த பால்ய வாழ்க்கை நீக்கமற உள்ளது. ஆனந்தி, விலைமாதுவின் மகள். அவளது தாய் காரணமாக, ஆனந்தி எப்படி சுரண்டப்படுகிறாள் என்பதை படிக்கும்போது நமக்கு ஏற்படும் வேதனை உணர்வு அளவில்லாத ஒன்று.   நீலப்பட நடிகை என்றாலும் கூட பொதுவான சமூகத்தில் நடிகையின் உடல் எப்படி ஆண், பெண் மனங்களை ஈர்க்கிறது. அதேசமயம் சங்கடப்படுத்தும்படியாகவும் மாறுகிறது. மனதில் உருவாகும் காமத்தின் வரம்புதான் என்ன, ஒரு பெண்ணை ஆண் ஏன் உடலாக மட்டும் பார்க்கிறான், அப்படி பார்ப்பவன் மனதில் உருவாகியுள்ள எண்ணம் என்ன என நிறைய கேள்விகளை எழுப்புகிறார் எழுத்தாளர் ல ச கு.   இதன் காரணமாகவே, நீலப்படம் நாவல் முக்கியமான படைப்பாகிறது

வயிற்றைக் கிழித்து, கால்களை விரித்து, உடைகளைக் கிழித்து.. கண்டறிய முடியாத கொலையாளி

படம்
  அமெரிக்காவின் பிலெடெல்பியாவில் உள்ள ஃபிராங்க்ஃபோர்ட் மாவட்டம் திரைப்பட நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலனால் புகழ்பெற்றது. ராம்போ படத்தில் முதல் பாகம் அங்குதான் எடுக்கப்பட்டது. அதற்கடுத்து புகழ் தேடிக் கொடுத்த விஷயம். குற்றம்.   அங்கு நடைபெற்ற ஏழு கொலைகள். கொலைகளுக்குத் தொடக்கம் 1985ஆம் ஆண்டுதான். ஆகஸ்ட் மாதம், நகர பராமரிப்பு தொழிலாளர்கள் ஒரு பெண்ணின் நிர்வாண உடலைக் கண்டனர். பெண்ணின் மார்பகம் வெளியே தெரியும்படி இருக்க, அவரது உடலில் இருபது கத்திக்குத்து காயங்கள் இருந்தன.வயிறு கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தது.   ஹெலன் பேடன்ட் என்ற அந்த பெண்மணி, பல்வேறு பார்களில் புழங்கி வருபவர் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. நான்கு மாதங்களுக்கு பிறகு அடுத்த கொலை நடைபெற்றது. இதில் அறுபத்தெட்டு வயது பெண்மணி அன்னா கரோல் மாட்டிக்கொண்டார். இக்கொலையிலும் அன்னாவின் வயிறு கிழிக்கப்பட்டு மார்பெலும்பு வெளியே தெரிந்தது. உடல் பாதி நிர்வாணமாக கிடந்தது. உடலில் ஆறு கத்திக்குத்து காயங்கள் இருந்தன. முதல் கொலை நடந்த இடத்திலிருந்து அன்னா கரோல் இறந்துபோனது பத்து கி.மீ. தொலைவில்தான். அன்னாவின் வீட்டுக்கதவு, திறந்துகிடக்க