இடுகைகள்

பிரிவினை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டை துண்டாடிய காந்தி, ஜின்னாவின் முரண்பட்ட கருத்துகள்! - புத்தகம் புதுசு

படம்
  புத்தகம் புதுசு  ரைட்டர் - ரெபல், சோல்ஜர், லவ்வர் - தி மெனி லிவ்ஸ் ஆஃப் அக்யேயா  அக்ஷயா முகுல்  வின்டேஜ் புக்ஸ் 2017ஆம் ஆண்டு அக்ஷய முகுல் இந்து பிரஸ் அண்ட் மேக்கிங் ஆஃப் இந்து இந்தியா என்ற நூலை எழுதினார். இதில் மதம், அரசியல், தேசியம் என நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார். இந்த நூலை ஜாலியாக படிக்கலாம் என்றும் சொல்ல முடியாது. கல்விக்கானது என்றும் கூறமுடியாது.  இப்போது எழுதியுள்ள இந்த நூல் சச்சிதானந்த ஹிரானந்தா வாத்சியாயன் வாழ்க்கையைப் பேசுகிறது. இவரது வாழ்க்கை இரண்டு உலகப்போர்களை மையமாக கொண்டது. அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவுடன் கொண்டுள்ள உறவு, தனிப்பட்ட காதல் உறவு என பல்வேறு விஷயங்களை முகுல் நூலில் விவரிக்கிறார். இந்தி இலக்கியத்தில் முக்கியமான புனிதர் ஆனது பற்றி எழுதியிருப்பது வாசிக்க சுவாரசியமாக உள்ளது.  கிரிம்சன் ஸ்பிரிங் நவ்தேஜ் சர்னா ஆலெப் ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒன்பது நபர்கள் பார்க்கிறார்கள். இவர்களில் சிலர் ஆங்கிலேயர்கள், இந்தியர்கள், படித்தவர்கள் என உள்ளனர். இவர்களின் மனப்போக்கில் அந்த சம்பவம் எப்படி பதிந்துள்ளது என்பதை நாவலாக எழுதியுள்ளார் ஆசிரியர்.  எ கன்ட்ரி கால்டு சைல்

இந்திய வரலாறு குறிப்பிட்ட நெறிமுறைப்படி எழுதப்பட்டது! - மிருதுளா முகர்ஜி, வரலாற்று ஆய்வாளர்

படம்
  மிருதுளா முகர்ஜி, வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் மிருதுளா முகர்ஜி வரலாற்று ஆய்வாளர்  மிருதுளா 2012-2014 காலகட்டத்தில் ஜேஎன்யூ சமூக அறிவியல் துறையின் தலைவராக செயல்பட்டார்.  2006 -2011 காலகட்டத்தில் நேரு நினைவு அருங்காட்சியகத்தில் தலைவராக செயல்பட்டார்.  குறிப்பிட்ட முறையில் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அப்படியென்றால் இங்கு, தகவல்களை மறைக்கிறார்களா? வரலாற்றை நேரடியாக எழுதுவது என்ற அதிகாரப்பூர்வ செயல்பாடு எங்குமே நடைபெற்றது இல்லை.வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அவர்களாகவே சுயமாக ஆய்வு செய்து எழுதுகிறார்கள். இந்த வகையில் முதல்தரமான ஆய்வாளர்கள் பாடநூல்களை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். காலனி கால ஆட்சியின் சுவடுகளை தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுதுவது முக்கியம்.  பிரிவினையை ஏற்படுத்தாத உண்மையான கருத்துகள் என்றால் அவை ஏன் வன்முறையை ஏற்படுத்தும் இயல்பில் உள்ளன? நீங்கள் கூறும் விதமாக எழுதப்படும் வரலாறு அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றப்படுவதுதான். இவை இயல்பான தேடுதலால் எழுதப்படுவதில்லை.  வலது சாரி வரலாற்று ஆய்வாளர்களை வரலாறு ஆய்வுகளை செய்ய அனுமதிப்பது, நூல்களை அங்கீகரிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழ

இந்தியா ஒளரங்கசீப் அழித்த கோவில்களைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்! - பேராசிரியர் மக்கன்லால்

படம்
பேராசிரியர் மக்கன் லால், டெல்லி இன்ஸ்டிடியூட் ஆப் ஹெரிடேஸ் ரிசர்ச் அண்ட் மேனேஜ்மென்ட்.    நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதுவதில் ஏன் பிரச்னை எழுகிறது? வரலாறு எப்போதும் எழுதப்பட்டு பிறகு மாற்றி எழுதப்பட்டுத்தான் வந்திருக்கிறது. வரலாற்றை மூன்று விதமான ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள் . ஒன்று, பிரிட்டிஷ் ஆய்வாளர்கள், மார்க்சிய ஆய்வாளர்கள், மூன்று தேசியவாத ஆய்வாளர்கள். நேரு, இந்திராகாந்தி காலத்தில் இடதுசாரி ஆய்வாளர்கள் வரலாற்றை மாற்றி எழுதினர். அந்தகாலத்தில் அவர்களுக்கு வரலாற்று அமைப்பில் முக்கியமான பதவி இடங்கள் கிடைத்தன. நிதியுதவியும் செய்தனர். இப்போது நிலை மாறிவிட்டது. இடதுசாரி ஆய்வாளர்கள் இப்போது இல்லை. அவர்களின் ஆதரவாளர்களுக்கு இது கஷ்டமாக இருக்கிறது. எனவே வரலாற்றை மாற்றி எழுதக்கூடாது என கூறி வருகிறார்கள்.  வரலாற்றில் ஒளரங்கசீப்  ஒருவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி கோவில்களை அழித்தார் என்று கூறப்படுவது ஏன்? ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் ஆகியோர் வரலாற்றில் மதிக்கப்படும் இடத்தைப் பெறவில்லை. ஆனால் அவர்களைப் பறிற நாம் இன்றும் விவாதம் செய்துகொண்டுதானே இருக்கிறோம். அப்படித்தான் ஒளரங்கசீப்பையும் நாம் விவாத

நாட்டை புரிந்துகொண்டால்தான் மக்களின் உணர்வோடு இணையமுடியும்! - ஆயுஷ்மான் குரானா

படம்
அனுபவ் சின்கா, ரா ஒன் படம் மூலமாக இந்தியா முழுக்க பிரபலமானார். ஆனால் இது ஃபேன்டசி படம். அதற்குப் பிறகு அவர் எடுத்த முல்க், ஆர்டிக்கிள் 15, தப்பட் ஆகிய படங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு சிக்கல்களை அலசின. இயல்பான நடிப்பு, நாம் ஏற்கமுடியாத நிதர்சன உண்மை ஆகியவற்றை மையமாக கொண்டே அனுபவ் சின்கா படம் எடுத்துவருகிறார். இவர் எடுக்கும் படங்களுக்கு அவரேதான் தயாரிப்பாளரும் கூட. அதனால் தான் தைரியமாக பிறர் சொல்லத் தயங்கும் விஷயங்களை சொல்ல முடிகிறதோ என்னவோ, இப்போது வடகிழக்கு இந்தியா பற்றிய படமான அனெக்கை எடுத்துள்ளார். இதில் நடித்துள்ளவர், ஆயுஷ்மான் குரானா.  ஆயுஷ்மான் குரானா இந்தி சினிமா நடிகர்  அனெக் படம் பற்றி உங்களுடைய கருத்து என்ன? நாங்கள் இதுவரை பேசாத விஷயத்தை அனெக் படத்தில் பேசியுள்ளோம். இந்த நிலப்பரப்பும் கூட புதிது. ஆர்டிக்கிள் 15 படத்தில் நான் நடித்துள்ளேன். அது எனக்கு முக்கியமான படம். மாறுபட்ட குரலை பிரதிபலிக்கும் ஆளுமையாக அனுபவ் சின்கா உள்ளார். நான் அவரை நம்புகிறேன்.  கதை சொல்லுவது, சொல்லும் விஷயத்தின் உண்மை ஆகியவற்றில் யாரும் அனுபவ் சின்கா அளவுக்கு நியாயம் செயதிருக்க முடியாது.  வடகிழக்கு பற்

பெருந்தொற்று கால வேதனைகளை மறக்கவேண்டும். பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும்! - ஆஞ்சல் மல்ஹோத்ரா

படம்
  ஆஞ்சல் மல்ஹோத்ரா ஆஞ்சல் மல்ஹோத்ரா எழுத்தாளர் இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும் பிரிவினை கலவரங்கள் நடைபெற்றும் 75 ஆண்டுகள் ஆகின்றன. இன்று பிரிவினையால் பாதிக்கப்பட்ட குடும்ப வாரிசுகள் பலரும் வெளிநாடுகளில் பரவி வாழ்கின்றன. எழுத்தாளர் ஆஞ்சல் மல்ஹோத்ரா, தி லாங்குவேஜ் ஆஃப் ரிமெம்பரிங் என்ற நூலை எழுதியுள்ளார். இதில் பிரிவினை பற்றிய பல்வேறு நினைவுகளை பதிவு செய்துள்ளார். அவரிடம் இதுபற்றி பேசினோம்.  நூலில் நீங்கள் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் பேரன்கள் ஆகியோருடன் பேசியுள்ளீர்கள். இந்த சூழல் எப்படியிருந்தது? பிரிவினையால் பாதிக்கப்பட்ட தாத்தா, பாட்டிகள், அவர்களின் வாரிசுகள், பேரன்கள் ஆகியோருடன் நிறைய நேரம் செலவிட்டுத்தான் நூலுக்கான தகவல்களைத் திரட்டினேன். பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் வெளிநாடுகளில் வாழ்கின்றனர் என்றாலும் அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை எளிதாக மறக்கமுடியாது. அதனை எளிதில் அகற்றிவிடவும் முடியாது.  பெரும்பாலான பேட்டிகளை நான் பாதிக்கப்பட்டவர்களின் பேரன்கள், வாரிசுகளிடம்தான் எடுத்தேன்.

ஆதி திராவிடர்களை எப்படிபார்ப்பனியம் அடிமைப்படுத்தியது? - ஜாதியத்தின் தோற்றம் - கொளத்தூர் மணி

படம்
  கொளத்தூர் மணி ஜாதியத்தின் தோற்றம் கொளத்தூர் மணி திராவிடப் பள்ளி கோடம்பாக்கம் ஜாதி என்பது எப்படி வந்தது, அதனை நாம் சாதி என மாற்றி எழுதுவது சரியா, பார்ப்பனர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்குமான வேறுபாடு, வர்க்க, ஜாதி வேறுபாடுகள் எப்படி உருவாயின, மனு தர்மம் ஜாதி உருவாக்கத்திற்கு என்ன ஊக்கத்தை கொடுத்தது என்பதை அறிந்துகொள்ள இந்த நூலை வாசிக்கலாம்.  கொளத்தூர் மணி எளிமையாக ஜாதியத்தின் தோற்றம் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை பல்வேறு ஆதாரங்களின் மூலம் விளக்கியுள்ளார்.  மனு தர்மம் முழுக்க ஆணாதிக்கத்தின் உச்சத்தில் அன்று நிலவிய தன்மையில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கும் சான்றுகள் உள்ளன. பார்ப்பன பெண்கள் பற்றிய ஒழுக்கத்தை மனுதர்ம விதிகள் குறிப்பிடுகின்றன. பார்ப்பன ஆண், சூத்திரப் பெண் இணைந்து பெறும் பிள்ளைகள், பார்ப்பன பெண் சூத்திர ஆண் இணைந்து பெறும் பிள்ளைகள் என இரண்டுக்கும் ஏராளமான வேறுபாட்டை மனு வகுத்து வைத்திருக்கிறார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவான மனு, அன்றைய நிலையில் இருந்த ஜாதி விவகாரங்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்தி குறிப்பிட்ட கட்டுமானத்தில் கொண்டு வந்திருக்கிறார்.  ஆரியர்கள் பல்வேற

பிரிட்டிஷாரை பிற நாட்டு மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்! - எழுத்தாளர் வில்லியம் டால்ரைம்பிள்

படம்
            வில்லியம் டால்ரைம்பிள் இவர் company quartet என்ற பெயரில் நான்கு நூல்களை பாக்ஸ் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார் . அடுத்தும் பெட்டி பெட்டியாக நூல்களை எழுதும் ஆராய்ச்சி செய்து வருகிறார் . அவரிடம் பேசினோம் .    ஜேஎல்எப் பார்முலா வேலைகளை எதற்காக ஒப்புக்கொண்டீர்கள் . மக்கள் இப்போது படிப்பதை விட பார்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதாலா ? எழுத்தாளர்கள் தங்களது எழுத்துகளைப் பற்றி பேசவேண்டுமென இந்தியர்கள் விரும்புகிறார்கள் . மேலும் நாங்கள் எழுதும் நூல்கள் பத்து லட்சம் பேரில் ஒரு பகுதிப்பேர் மட்டுமே படிக்கவேண்டுமென உருவாக்குவதில்லை . நீங்கள் கூறுவதும் சரிதான் . நிறையப் பேர் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு குளிர் கண்ணாடிகளை அணிந்துகொண்டுதான் வாசிப்பு விழாக்களுக்கு வருகிறார் . ஆனால் இதிலும் கூட இளைஞர்கள் ஜெய்ப்பூர் இலக்கிய விழாக்களில் பங்கெடுத்து கேள்விகளை கேட்கத் தொடங்கியுள்ளனர் .    காலனித்துவ காலத்தை நினைவுபடுத்தும் அருங்காட்சியகம் இங்கிலாந்தில் அமைக்கப்பட வேண்டுமென கூறுகிறார்கள் . ஆனால் தங்களது மூதாதையர்கள் செய்த பாவங்களை மக்கள் மறக்க விரும்பி அத

போலிச்செய்திகளுக்கு ஏற்ப நாமும் விதிகளை மாற்றி கண்டுபிடிப்புகளை அதிகரிக்க வேண்டும்! - வான் டெர் லிண்டென்

படம்
      வான் டெர் லிண்டென் போலிச்செய்தி ஆய்வாளர் உங்களுக்கு போலிச்செய்திகளைக் கண்டறிவதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி ? உலஇரண்டாவது உலகப்போர் நடைபெற்று முடிந்தபிறகும் , பிற மனிதர்களின் மோசமான நடவடிக்கைகள் , ஆபத்தான யோசனைகளை அறிந்தபிறகுதான் இதைப்பற்றி ஆராய வேண்டும் என்று தோன்றியது . இது அனைத்து சமூக உளவியலாளர்களின் எமமும்தான் . மக்கள் எப்படி செய்திகளின் மூலம் ஆதிக்கம் செலுத்தப்படுகிறார்கள் என்பதை ஆராய நினைத்தேன் . 2015 ஆம் ஆண்டு நான் அமெரிக்க தேர்தலுக்கு முன்னர் , பருவச்சூழல் மாறுபாடு பற்றிய தவறான தகவல்களை படித்தேன் . குறிப்பாக இப்படி தவறான தகவல்களை வெளியிட்டு சுற்றுச்சூழலுக்கு பாடுபடும் மனிதர்களை முடக்க சிலர் நினைத்தனர் . இதில் ஏராளமான மூடநம்பிக்கைகள் , முட்டாள் தனங்கள் இருந்தாலும் இதன் அடிப்படை நோக்கம் மேற்சொன்னதுதான் . எங்களுக்கு முன்னிருந்த கேள்வி எப்படி இதிலிருந்து மக்களை காப்பது , அ வர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது என்பதுதான் . தவறான தகவல்களுக்கு எதிராக உளவியல் தடுப்பூசி என்ற யோசனையை எங்கே பிடித்தீர்கள் ? ஐம்பது அறுபதுகளில் பில் மெக்யூர் என்பவர் உருவ

ஜம்மு காஷ்மீரில் வெற்றிபெற்றுள்ள அசாதாரண மனிதர்கள்! - மருத்துவர் முதல் ஆசிரியர் வரை

படம்
                  காஷ்மீரில் சட்டக்கல்லூரி மாணவர் முதல் பல்மருத்துவர் , ஆசிரியர் என பல்வேறு நபர்கள் அரசியல் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் . அவர்களி்ல சிலரை நாம் இங்கு பார்ப்போம் . சபிர் அஹ்மது லோன் ரோஹமா பரமுல்லா தேசிய மாநாட்டு பணியாளராக 1999 ஆம் ஆண்டு தொடங்கி பணியாற்றினார் . பொதுமக்களுக்கான அமைதி சட்டம் அடிப்படையில் கைதான அரசியல்வாதிகளில் லோனுக்கும் முக்கிய இடமுண்டு . ஆறுமாதம் ஶ்ரீநகர் சிறைவாசம் அனுபவித்தவர் , மாநிலம் யூனியன் பிரதேச அந்தஸ்து பெற்றபிறகு விடுதலையானார் . மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நோக்கி போராடுவோம் என்பவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸகூர் அஹ்மது மிர் , என்பவரை எதிர்த்து நின்று 1500 வாக்குகள் அடிப்படையில் வென்றுள்ளார் . 2014 இல் உருவாக்கப்பட்ட சாலைகளை மேம்படுத்துவேன் என்று கூறியுள்ளார் . இர்பான் ஹபீஸ் லோன் சங்ராமா , வடக்கு காஷ்மீர் 2007 இல் காஷ்மீர் பல்கையில் சட்ட மாணவராக படித்துக்கொண்டிருந்தார் . சிந்து ந்தி நீர் ஒப்பந்தம் காரணமாக காஷ்மீருக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி போராட்டம் செய்தார் . 13 ஆண்டுகாலமாக அரசியல்

ஷியாம பிரசாத் முகர்ஜியின் வாழ்க்கை! - பிரிவினைவாதியா? இந்தியாவை ஒருங்கிணைக்க நினைத்தவரா?

படம்
    ஷியாம பிரசாத் முகர்ஜி ஷியாம பிரசாத் முகர்ஜி 1901ஆம் ஆண்டு ஜூலை 6 அன்று பிறந்தார். 1921ஆம் ஆண்டு பிஏ ஆங்கிலம் ஹானர்ஸ் படிப்பை பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். முகர்ஜி முதலில் இந்திய வங்க பிரிவினையை தீவிரமாக எதிர்த்தார். ஆனால் 1946ஆம்ஆண்டு வங்கத்தில் கொல்கத்தா, நோக்காளி ஆகிய இடங்களில் ஏற்பட்ட வன்முறை அவரது எண்ணத்தை மாற்றியது. ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் முழு உறுதியாக இருந்தவர் முகர்ஜி. மேற்கு வங்கத்தின் ஆளுநராகவும், சட்டமன்ற மேலவை தலைவராகவும் இருந்த ஹரேந்திர கூமர் முகர்ஜிதான், ஷியாம பிரசாத் முகர்ஜிக்கு வீட்டில் டியூசன் எடுத்த ஆசிரியர். முகர்ஜியின் தந்தை பெயர் சர் அசுதோஷ் முகர்ஜி. ஷியாம பிரசாத் முகர்ஜி, வங்க நிவாரண கமிட்டி ஒன்றை தொடங்கி பணியாற்றினார். பின்னர் அங்கு இருந்து இந்து மகாசபைக்கு சென்றார். அங்கு சென்றபிறகு, அந்த அமைப்பில் முஸ்லீம்கள் சேர பல்வேறு முயற்சிகளை எடுக்க நினைத்தார். ஆனால் அமைப்பின் தலைவர் வி.டி சாவர்கர் அதனை நிராகரித்தார். இதனால் அந்த அமைப்பிலிருந்து முகர்ஜி விலகிவிட்டார். 1923ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆதிக்கம் அதிகம் இருந்தது. அங்கிரு

பிரிவினைக்குள்ளாக்கி மக்களை ஆராய்ச்சி செய்யும் ஆபத்தான மனிதர்கள்! டைவர்ஜென்ட் - அலிஜீயன்ட்

படம்
          டைவர்ஜென்ட் - அலீஜியன்ட்                   டைவர்ஜென்ட் - அலீஜியன்ட்   டைவர்ஜென்ட் - அலீஜியன்ட் directed by Robert Schwentke   with a screenplay by Bill Collage, Adam Cooper, and Noah Oppenheim Based on Allegiant by Veronica Roth   Music by Joseph Trapanese Cinematography Florian Ballhaus   ஒரு நாட்டை பிரித்து அதனைக் கண்காணித்து அங்கு வாழும் மக்கள் மீது மரபணு ஆராய்ச்சி செய்கிறது ஒரு கூட்டம்.  அதனை ஒரு ஆட்சிக்குழுத் தலைவியின் மகன் தலைமையிலான இளைஞர்களின் குழு கண்டுபிடித்து தனித்தனியாக இருக்கும் நாடுகளை எப்படி ஒன்றாக இணைக்கிறார்  என்பதுதான் கதை. படத்தில் நாயகனுக்கு பெயரே 4தான். ட்ரிஸ் தான் நாயகியின் பெயர். அவரது மாசு மருவற்ற மேனியைப் போலவே அவரது டிஎன்ஏ மட்டும் பரிசுத்தமாக உள்ளது. இதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்குழுவினர், அவளை அவர்களது நாட்டிற்கு வரவைத்து அழைத்துச்செல்கின்றனர். அவளது டிஎன்ஏ மாதிரியைப் பயன்படுத்தி தூய மனித இனத்தை உருவாக்குவதே அவர்களது லட்சியம். தொடக்கத்தில் அவர்களது அம்மா பற்றி ஆராய்ச்சிக்குழுத் தலைவர் டேவிட் பேசி ட்ரிஸ் மனதை சென்டிமென்டாக மடக்குகிறார். இதனால் அவ

இளைஞர்களின் மீதான இணையத் தாக்குதல் அதிகரிப்பு!

படம்
the conversation இணையம்தான் இன்று மக்கள் கூடும் டிஜிட்டல் பொது இடங்களாக உள்ளன. மக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் கேலி, கிண்டல், வன்முறை, ஆபாசப்பதிவுகள்  என அனைத்தும் டிஜிட்டல் உலகிலும் நடைபெறுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட தகவல் அறிக்கையில் பத்தில் ஒரு இந்தியர் இதுபோன்ற இணையத்தாக்குதல்களை சந்தித்து வருவதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ எனும் தன்னார்வ அமைப்பு டில்லி பகுதியில் எடுத்த ஆய்வுப்படி, இளைஞர்கள் மீதான தாக்குதல் (13-18) 22.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இளைஞர்களில் நான்கில் ஒருவர் மார்பிங் செய்த புகைப்படத்தைப் பார்ப்பதாகவும், அதுபற்றி காவல்துறையில் புகார் செய்வதில்லை என்றும் தெரிய வந்துள்ளது. 2017ஆம் ஆண்டை விட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான இணையத்தாக்குதல் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் இணையம் சார்ந்த குற்றங்கள் 2018ஆம் ஆண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளன. இணையத்தில்  சொற்கள் சார்ந்த வன்முறை இயல்பானதாக மாறிவிட்டது. தொலைவில் இருப்பதாலும், முகம் தெரியாது என்பதாலும் தன்னுடைய மனம் போல ஒ

அசாமும் நம்மில் ஒரு பகுதிதான்- இனவெறி வேண்டாம் - சேட்டன் பகத்!

படம்
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஆவணங்களை பதிவு செய்ய கந்துவட்டிக்கு கடன் வாங்கி அசாமியர்கள் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். டெல்லி முதன்முறையாக கிழக்கிந்தியர்களை இப்படி செய்கிறது என நினைக்க முடியவில்லை. அசாமில் தீவிரவாதிகளின் போராட்டம், கலவரம், நிடோ டானியா  என்ற இளைஞரின் கொலை போன்ற விஷயங்கள் நம்மை நாமே வெறுக்க வைப்பன. கிழந்திந்தியாவின் வாசலான அசாமில் உள்ள மக்களை வெறுப்பது இந்தியாவில் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அங்குள்ளவர்களுக்கு சரியான வேலைவாய்ப்புகளை பொருளாதார மண்டலம் அமைத்து உருவாக்கலாம். பல்வேறு இசை, கலாசார நிகழ்வுகளை அங்கு நடத்தலாம். இந்திய எல்லையை ஒட்டி உள்ள மக்கள் என்பதால் எளிதாக அவர்கள் சீனாவின் பக்கம் சாய வாய்ப்புள்ளது. இந்திய அரசு தன்னுடைய மக்களாக அசாமியர்களைப் பார்ப்பது பன்மைத்துவத்திற்கு நல்லது. இனிமேலும் அசாம் மக்கள் நாம் பாகுபாட்டுடன் கேலி, கிண்டல் செய்தால் அவர்கள் இந்திய மக்களாக இருப்பது கஷ்டம். விரைவில் இதனை இதை இந்திய அரசு உணரும் வாய்ப்பு வரும். அசாமியர்களை தங்களுடன் தக்கவைத்துக்கொள்ள இந்தியா, தாய்மொழி, மண் என பிராந்திய அரசியலை கையகப்படுத்த முயற்சிக்கிறது