இடுகைகள்

மாணவர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களை மேம்படுத்தும் கல்வி சீர்திருத்தங்கள்!

படம்
  மாணவர்களை மேம்படுத்தும்  கல்வி சீர்திருத்தங்கள்!  ஆந்திரப் பிரதேச அரசு கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை, மேம்பாடுகளை் செய்து வருகிறது.   ஆந்திர அரசு, மாநிலத்திலுள்ள 62 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 80 லட்சம் மாணவர்களுக்கான (தனியார் பள்ளி உட்பட) கல்வியில் கவனம் செலுத்தி பிரமிக்க வைக்கிறது. பள்ளிக்கான பாடத்திட்டங்களை உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களோடு ஆலோசித்து உருவாக்குவது, பயிற்றுமொழியை ஆங்கிலமாக்குவது, அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்துவது என பரபரப்பாக ஆந்திர அரசு செயற்பட்டு வருகிறது.  பயிற்றுமொழியாக தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறுவது அங்கு, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இம்முயற்சி மாணவர்கள் உலகளவில் தம் அறிவை விரிவுப்படுத்திக்கொள்ள உதவும் என்கிறது ஆந்திர அரசு. ”அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக உருவாக்குவதே அரசின் லட்சியம். புதிய சீர்திருத்தங்கள் மூலம் இளைஞர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் எளிதாக கிடைக்கும்” என்கிறார் ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சரான அடிமுலப்பு சுரேஷ்.  ஆந்திர அரசு, மாணவர்களுக்கு ம

தொடக்க கல்வியில் சறுக்கும் இந்தியா! - பிரதாம் நிறுவன அறிக்கை!

படம்
pexels தொடக்க கல்வியின் முக்கியத்துவம்!  பிரதாம் தொண்டு நிறுவனத்தின் ஏஎஸ்இஆர் (Annual Survey of Education Report) 2019 அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் மாணவர்களின் தொடக்க கல்வி பற்றி பேசப்பட்டுள்ளது. உலகளவில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில், முதல் எட்டு ஆண்டுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆறு வயதில் மூளையின் வளர்ச்சி 90 சதவீதம் முழுமையடைந்து விடுகிறது. எட்டு வயது வரையில் குழந்தைகளின் உணர்ச்சி, அறிவு, ஆற்றல், சமூக கலந்துரையாடல் ஆகிய தன்மைகள் வளர்கின்றன. மேலும் பல்வேறு திறன்களை பள்ளிச்சூழல் வளர்க்கிறது. பள்ளிகளின் நிலை, 4 முதல் 8 வயது வரையிலான மாணவர்களின் திறன்கள் ஆகியவற்றை ஆய்வுக்குழு வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். இவர்களின் பரிந்துரைகள், அனுபவங்கள் அடிப்படையில் , வெளியான கல்வி அறிக்கை, தொடக்க கல்வி பற்றிய நம்பிக்கை அளிப்பதாக அமையவில்லை. ஆய்வுக்குழுவினர், 24 மாநிலங்களிலுள்ள 24 மாவட்டங்களை தேர்ந்தெடுத்தனர். இங்குள்ள கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த 39,730 மாணவர்களை  (4 முதல் எட்டு வயதுக்குட்பட்ட) ஆய்வு செய்தனர். இதில் 12.7 சதவீத மாணவர்கள் அங்கன்வாடி மையத்திற்கு செல்லாமல் நேரட

கணிதம் சொல்லி உலகை வசப்படுத்திய ஆசிரியை!

படம்
கணித நுட்பங்களை கற்றுத்தரும் ஆசிரியை!  பீகாரைச் சேர்ந்த கணித ஆசிரியை ரூபி குமாரி, தன் புதுமையான கணித நுட்பங்களால் மாணவர்களை கவர்ந்து வருகிறார்.  2014ஆம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த கணித ஆசிரியை ரூபிகுமாரி மாணவர்களுக்குக் கற்பிக்க தொடங்கினார். புதுமையான நுட்ப வழிகளில் கணிதத்தைக் கற்றுத் தந்தவர், மாணவர்களை ஈர்க்கத் தொடங்கினார். ஒன்பதைப் பெருக்க விரல்களை எப்படி கால்குலேட்டராக பயன்படுத்துவது என்று இவர் கற்பிக்கும் வீடியோ இணைய உலகில் அதிகம் பகிரப்பட்டது. இதனால் பலருக்கும் அறிந்த முகமாக ரூபி குமாரி மாறினார். இவரின் கற்றல்முறை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா முதல் இந்தி நடிகர் ஷாருக்கான் வரை ஈர்க்க, பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. பீகாரின் பங்கா எனும் சிறுநகரில் பிறந்தவர் ரூபிகுமாரி. முதல் தலைமுறையாக கல்வி கற்க விரும்புபவர்களுக்கு எளிய முறையில் கணிதத்தை பயிற்றுவிக்க நினைத்தார். ஆனால் இந்த எண்ணம் அவ்வளவு எளிதில் நிறைவேறவில்லை. 250 மாணவர்களுக்கு தனது புதுமையான கற்றல் முறையில் கற்பித்தார்.  “நான் விளையாட்டு மூலம் பாடங்களை சொல்லிக்கொடுத்தது மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பிடிக்கவி

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கும் இந்திய அரசு!

படம்
pixabay இந்திய அரசு, உயர்கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கையை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்க முயற்சித்து வருகிறது. இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சகம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயர் கல்வித்துறைக்கு ரூ.30,383 கோடிகளைச் செலவிட இருக்கிறது. இத்தொகை மூலம், நாட்டின் பின்தங்கிய பகுதிகளிலுள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்பு உள்ளது. இந்திய மாநிலங்களில் சில மாவட்டங்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியே உள்ளன. உயர்கல்வியை எட்டும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு ,மாணவர்களின் எண்ணிக்கையை 40 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது அரசு. தற்போது உயர்கல்வி படிப்புகளில் சேரும் மாணவர்களின் மொத்த அளவு 25.8 சதவீதம். அதில் ஆதி திராவிடர்கள் எண்ணிக்கை தோராயமாக 21.8%, பட்டியல் இனத்தவர் 15.9% க்கும் குறைவு. உயர்கல்வியில் இந்தியாவை பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில், தென் ஆப்பிரிக்காவைவிட(20.5%) மேலே உள்ளது. ஆனால் ரஷ்யா(81.8%), பிரேசில்(50.5%), சீனா(25.8%) ஆகிய நாடுகளை விட கீழே உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பின்தங்கிய பகுதிகளில் மாதிரி

நேரு பல்கலையில் உயர்த்தப்பட்ட கட்டணம்!- என்ன பிரச்னை?

படம்
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான் இன்றைய பெரும்பான்மையான முக்கிய தலைவர்கள், இயக்குநர்கள் என இருக்கிறார்கள். காரணம், அங்கு பாடங்களைத் தாண்டி சொல்லித்தரப்படும். தற்போது அங்குள்ள விடுதி வாடகை ஏற்றப்பட்டு உள்ளது.  தெரிஞ்சுக்கோ! டில்லி நேரு பல்கலையில் பயிலும் மாணவர்களின் 40 சதவீத குடும்பங்களின் மாத வருமானம் 12 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ்தான் உள்ளது என்கிறது அவர்களின் மாணவர் சங்கம். விடுதியில் உயர்த்தப்பட்ட தொகை 1700. இதனால் வாடகைத் தொகை 2 ஆயிரம் முதல் 2500 வரை அதிகரித்திருக்கிறது. திருப்பித்தரும் காப்புத்தொகை 5500 முதல் 12000 வரை அதிகரித்துள்ளது. மாதம் ரூ.20 என்று இருந்த மாணவர்களின் அறை வாடகை ரூ.600 ஆக மாறி உள்ளது. இரண்டு அறைகள் வாடகை ரூ.10லிருந்து 300 ரூபாயாக மாறியுள்ளது. மாணவர் விடுதி மற்றும் மெஸ் கட்டணம் 50 ஆயிரம் முதல் அறுபதாயிரம் வரை எகிறியுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை 27,600 முதல் 30 ஆயிரம் வரை. இதனால் அதிக விலை வசூலிக்கும் பல்கலைக்கழகமாக தற்போது பெயர் வாங்கியுள்ளது. 19 ஆண்டுகளாக பல்கலையின் விடுதி, மெஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பல்கல

பாடச்சுமை குறைவு - ராஜஸ்தான் மாணவர்கள் கொண்டாட்டம்!

படம்
ராஜஸ்தானில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாடநூல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நான்கு நூல்கள் தற்போது ஒரு நூலாக குறைந்துள்ளது. இதனால் மாணவர்கள் சுமக்கும் பாடச்சுமை பெருமளவு குறைந்துள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலுள்ள 33 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பாடச்சுமைகளை அரசு குறைத்துள்ளது. 1.35 கிலோகிராமிலிருந்து அரை கிலோவாக பாடப்புத்தகங்களின் சுமை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தை பிகேபிகே என்கிறார்கள். பஸ்தே கா போச் காம் என்று இதனை விரிவாக சொல்லலாம். தற்போது இத்திட்டத்தை ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை அமல் செய்திருக்கிறோம். அடுத்த ஆண்டில் நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகச்சுமையை குறைக்கவிருக்கிறோம் என்கிறார் ராஜஸ்தான் கல்வி அதிகாரி பிரதீப் குமார் போரர். கல்வி அமைச்சர் குரு கோவிந்த் டோசந்த்ரா, இதனை கடந்த செப்டம்பர் மாதம் அமல்படுத்தினார். சுமை குறைந்த பாடப்புத்தகங்கள் மற்றும் விளையாட்டு சார்ந்த புத்தகங்களின் பாடங்கள் உருவாக்கம் ஆகியவற்றை பிரதீப் குமார் கனவு கண்ட உருவாக்கியிருக்கிறார். இதில் சில குறைகள் இருந்தாலும் குழந்தைகளின் பாடம் கற்கும் திறனை இவை

கல்வியை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள்! - செய்திக்கட்டுரை

படம்
கல்வியை சிறப்பாக்கும் தொழில்நுட்பங்கள்! இந்தியாவிலுள்ள பள்ளிகள், தொழில்நுட்ப நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் செய்து கல்வி தொடர்பான சேவைகளைப் பெற்று வருகின்றனர். கரும்பலகையில் சாக்பீஸ் வைத்து எழுதும் பழக்கம் ஒழிந்து,  அரசுப்பள்ளிகளில் கூட ஸ்மார்ட் வகுப்பறை சாதனங்கள் அறிமுகமாகி வருகின்றன. புரஜெக்டர் மூலம் வகுப்பு எடுக்கப்படுவது, பாடத்திட்டங்களை டிஜிட்டல் முறையில் படிக்க அளிப்பது என பல்வேறு கல்வி தொடர்பான புதிய முயற்சிகள் உருவாகி வருகின்றன. 1995 முதல் 2010 காலகட்டத்திற்குள் பிறந்தவர்களை ஜென் இசட் என்று அழைக்கின்றனர். இத்தலைமுறையினர், முழுக்க டிஜிட்டல் உலகில்தான் வாழ்கின்றனர். இவர்களின் கல்வியும் அதைச்சார்ந்தே அமைகிறது. இணைய வகுப்புகள், பாட்காஸ்ட்கள், வி.ஆர். கருவிகள் என இவர்களின் வாழ்க்கையில் கற்றல் முறைகள் மிகவும் நவீனமாகி உள்ளன. பள்ளிகளின் டெக் தேவைகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் தீர்த்து வைக்கின்றன. 2015 ஆம் ஆண்டு இந்தியாவில்  உள்ள வகுப்புகளில் 26 சதவீதம் மட்டுமே கணினிகள் இருந்தன. ஆனால் இன்று வகுப்பறை மட்டுமல்ல பள்ளிகளே  டிஜிட்டல் வடிவில் மாறியுள்ளன. 2013 ஆம் ஆண்டு மத்திய அரசின்

நேர்த்தி எனும் தொற்றுநோய் - அனைத்திலும் ஒழுங்கு எதிர்பார்க்கிறீர்களா? ஆபத்து!

படம்
எனக்கு டிசிப்ளின்தான் முக்கியம், எனக்கு திருப்தியாகலப்பா, இது பெஸ்ட் கிடையாது, நல்லா வொர்க்அவுட் பண்ணுங்க என்ற வார்த்தைகளை நாம் மேலதிகாரிகளிடம் அல்லது ஆசிரியர்களிடம் கேட்டிருப்போம். நாமே அந்த இடத்திற்கு உயரும்போது, நமக்கு கீழிருப்பவர்களிடம் இதே வார்த்தைகளை கூறிக்கூட இருக்கலாம். இதற்கு என்ன பொருள்? நேர்த்தி. இதை சிலர் நேரடியாக சொல்லுவார்கள். நிறையப்பேர் எனக்கு இப்படி இருக்கணும் என்பதைத்தாண்டி பேசமாட்டார்கள். இதனை அவர்கள் தங்களுடைய ஸ்டைலாக நினைத்துக்கொண்டிருப்பார்கள்.  நான் வேலைசெய்த முன்னாள் பத்திரிகை ஆசிரியர் சிறந்த ஆசிரியர். ஆனால், பர்ஃபெக்ஷன் பார்ப்பவர்தான். மாதந்தோறும் வரும் பத்திரிகையை, தனது நேர்த்தியாக செய்யணும் என்ற குணத்தாலேயே  ஆறுமாத பத்திரிகையாக மாற்றினார். காரணம், காத்திரமாக உருவாக்கணும் என்று பதில் சொன்னார்.  டிசைன் செய்யும் முன்பே இருமுறை திருத்தி எழுத திருத்தங்களை இன்டிசைனில் போட்டு கொடுப்பேன். பின் டிசைன் செய்தபின் நான்குமுறை திருத்தங்கள் செய்வார். எப்போது பார்த்தாலும் நான்கு ஏ4 காகிதங்கள் டேபிளில் கிடக்கும். எது எப்போது போட்டது என தேதி எழுதி வைத்து பாத

இங்கிலாந்து மேயரின் சாதனை ஆர்வம்!

படம்
உலகம் முழுக்க வெப்பமயமாதல் பற்றி அக்கறையும் பயமும் உள்ளது. இதன்பொருட்டு அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் உழைத்து வருகின்றனர். இதற்காக இங்கிலாந்தில் புதிதாக பொறுப்பேற்ற மேயர் அசத்தலான காரியம் ஒன்றை செய்திருக்கிறார். வெப்பமயமாதல் பற்றி மாணவர்களுக்கு விளக்க பாடம் சொல்லித்தரவென ஆசிரியர்களை தொடக்கப் பள்ளியில் நியமிக்க இருக்கிறார். ஜேமி டிரிஸ்கோல் என்பவர் வடக்கு டைன் பகுதியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவர்தான் இந்த ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த முறையில் சுற்றுச்சூழல் கல்வியை ஐ.நா அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் கற்றுத்தர இருக்கிறார். இது மாணவர்களின் கல்வியை முழுமையாக்கும் என்கிறார் இவர். இம்முறையில் ஐம்பதிற்கும் மேலான ஆசிரியர்கள் , இப்பயிற்சியில் சேர விண்ணப்பித்து உள்ளனர். இந்தவகையில் சூழல் தொடர்பான கவனத்தை மேயர் தொடக்கத்திலேயே ஏற்படுத்தியுள்ளது பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நன்றி: இகோ வாட்ச்

பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறதா?

படம்
பள்ளிசெல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது!  2018-19 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, இந்தியா. ஆனால், ஆய்வில் இந்திய மக்கள்தொகை எதிர்பார்த்த எண்ணிக்கையை விட குறையும் என பொருளாதார ஆய்வறிக்கை தகவல் கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளது.  அதேநேரம் 2030 ஆம் ஆண்டு அதிகரித்து வரும் வயதானவர்களின் எண்ணிக்கையையும் இந்திய அரசு சமாளிக்கவேண்டிய தேவை உள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டியது, பள்ளிக்குச்செல்லும் 5 முதல் 14 வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை குறைவைத்தான். தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநில அரசுகளும் அரசு பள்ளிகளை மூடி வருகின்றன. காரணம், போதிய மாணவர்கள் அங்கு இல்லாததுதான். மாநில அரசுகள் புதிய பள்ளிகளைத் தொடங்குவதை விட மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை இணைப்பது நல்லது என அறிவுறுத்தல்களையும் இந்த அறிக்கை கூறியுள்ளது. இந்தியாவில் அடுத்த இருபது ஆண்டுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை குறையும். இதனால் அர

கல்வி முறையை அரசியலாக்காதீர்கள்! - சேட்டன்பகத்

படம்
இந்தியாவில் நடைமுறையில் உள்ள கல்வி முறையை கடுமையாக விமர்சித்து, பல்வேறு திரைப்படங்கள், கதைகள், வெப் சீரிஸ் கூட வெளியாகி விட்டன. நிச்சயம் கல்விமுறையில் பிரச்னைகள் இருக்கிறதுதான். அதனை சரிசெய்வது அவசியம். குறைகளை மட்டும் பேசாமல் அதனை தீர்வு செய்வதற்கான விஷயங்களைப் பற்றிப் பேசுவதும் முக்கியம். அண்மையில் கல்வி மசோதா 484 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது. இந்த விஷயத்திலும் மேற்சொன்ன பிரச்னைகள்தான் நிறைவேறின. நீண்ட மசோதாவில் தற்போது உள்ள கல்விப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வரைபடமும் இதில் உள்ளது. இதிலுள்ள மும்மொழிக் கொள்ளையை மட்டுமே எடுத்து பேசி பேசியதால், அதிலுள்ள முக்கியமான சிந்தனைகளை இன்று யாரும் பேசவில்லை. பிற விஷயங்களைப் பற்றியும் மக்கள் மறந்தே போனார்கள். மக்கள் முக்கியமாக இந்து, இந்துத்துவா, பாஜக ஆகிய விஷயங்களிலேயே நின்று விட்டார்கள். இது முட்டாள்தனமாக இல்லையா? இஸ்ரோவின் முன்னால் இயக்குநரான கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு உருவாக்கி கல்வி மசோதா இது. இதில் இந்தியாவை வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் திறன்களைக் கொண்டதாக மாணவர்களை உருவாக்கும் கல்வி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது

எதிர்ப்பு போராட்டங்கள்!

படம்
இந்தியாவில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள்! இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே போராட்டங்கள் மூலம்தான் பல்வேறு உரிமைகள் கிடைத்துள்ளன. அரசின் பல்வேறு கருத்தியல் ரீதியான ஒடுக்குமுறைகளை தன்னெழுச்சியாக மாணவர்கள் கையிலெடுக்க பின்னர் அது மக்களை ஈர்த்து போராட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. 1940 ஆம் ஆண்டு சென்னை மாணவர் சங்கம், மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை இந்த வழியில் தொடங்கியது. சட்டம் 343(2) படி பதினைந்து ஆண்டுகளில் இந்தியை ஆட்சிமொழியாக மாற்றுவதே இந்திய அரசின் நோக்கம். இந்தி பேசாத மாநிலங்கள் மத்திய அரசின் நோக்கத்திற்கு குறுக்கே நின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ்மொழி மட்டுமல்லாது தனி நாடு என்று கேட்டு போராடினர். அதற்குப்பிறகு இந்தி எதிர்ப்பு பேரலையில் காமராஜர் விருதுநகர் தொகுதியில் சீனிவாசன் என்ற மாணவர் போராட்டத்துக்கு தலைமை வகித்தவரிடம் தோற்றுப்போனார். பின்னர் மாணவர்களுக்கான அரசியலை திமுக அனைத்து கல்லூரிகளிலும் தொடங்கியது. மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் கொடுத்து அவர்களை ஊக்குவித்து, தன்னை வளர்த்துக்கொண்டது. பஸ்டே கொண்டாட்டம் மட்டும் இதன் அடையாளமல்ல. ச