இடுகைகள்

மின்னூல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரப்பாச்சி சொன்ன ரகசியம் நாவல் - இனி இலவசமாக யாரும் அச்சிட்டு விற்கலாம்!

படம்
  பல்வேறு ஊடகங்களில் வேலை பார்த்து வந்த பத்திரிகையாளர் திரு.பாலபாரதி அவர்களின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை பேட்டி இது. இந்த பேட்டிக்கு முன்னரே, தனது வலைத்தளத்தில் மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலை யார் வேண்டுமானாலும் அச்சிட்டு விற்றுக்கொள்ளலாம் என அனுமதியை வழங்கிவிட்டார்.  மின்னூல், ஊடக படைப்பாக்கங்களுக்கு அனுமதி தேவை என கூறியிருப்பது பொதுவுடமை ஆட்களுக்கு சற்றே கஷ்டமாக இருக்கலாம்.  குழந்தைகள் மீதான  பாலியல் வல்லுறவு பற்றிய கதையைப் பேசும் நூல்  மரப்பாச்சி சொன்ன ரகசியம். இலவசமாக, எழுதிய ஆசிரியருக்கு ராயல்டி தராமல் அச்சிட்டுக்கொள்ளலாம் என்று கூறிய முயற்சிக்கு எந்தளவு ஆதரவு இருக்கும் என்று தெரியவில்லை. ஏதாகிலும் இப்படி வெளிப்படையாக அறிவித்த திரு. பாலபாரதி அவர்களுக்கு நன்றி கூறவேண்டும்.  எழுத்தை வாழ்க்கையாக வாழ்வாதாரமாக கொண்ட எழுத்தாளர்கள் இப்படி துணிச்சலாக அறிவிப்பை வெளியிட நிறைய நெஞ்சுரம், விட்டுக்கொடுத்தல் தேவை. செல்லுமிடமெங்கும் தன்னை இடதுசாரி சிந்தனையாளர் என தைரியமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் திரு. பாலபாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்.   நூல், பாலபாரதி டாட் நெட் வலைத்தளத்தில்

இந்தியாவின் சாதனைகளைப் பேசும் மின்னூல் இந்தியா 75! - சாதனைகளும் தற்போதைய நிலையும்- அமேஸான் வலைத்தளம்

படம்
  இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த காலகட்டங்களில் இந்தியாவின் வரலாறு அனைவரும் அறியவேண்டியது முக்கியம். தேசிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்தியா 75 என்பதை பல்வேறு சாதனைகளாக அழகுற வடிவமைத்து சிறுசிறு கட்டுரைகளாக வெளியிட்டது. அதுதான் இப்படி நூலை எழுதி தொகுக்க உந்துதல் வழங்கியது. இந்த நூலை வாசிக்கும் ஒருவர் சுருக்கமாக இந்தியா இத்தனை ஆண்டுகளில் சாதித்தது என்ன, தற்போதுள்ள நிலை என்ன ஆகியவற்றை ஓரளவுக்கு உணர்ந்துகொள்ள முடியும். இந்தியாவில் சில நாட்கள் ஒருவர் தங்கினால் நூலு்ம், சில வாரங்கள் தங்கினால் கட்டுரையும், அங்கேயே ஆண்டுக்கணக்கில் தங்கினால் எதையும் எழுத முடியாது என ஓஷோ இந்தியா பற்றிய நூலில் கூறியிருப்பார். அது இங்கு நிலவும் பல்வேறு பன்மைத்துவம், முரண்பாடுகளின் கலவையாக முன்வைத்த கருத்து. நூலில் நாம் அறிந்துகொள்வது இந்தியாவைப் பற்றிய சில கோணங்களே. இது முழுமையானதல்ல. இந்தியா என்பது வெறும் வரைபடம் அல்ல. அது ஒரு மனநிலை. யாரையும் ஆளாத, ஆளும் அதிகாரம் கூட மனதில் எழாத ஆன்மாக்கள் வாழும் இ

சர்வாதிகார அதிபரின் கோமாளித்தனமான உரைகள்! - பன் பட்டர் ஜாம் - மின்னூல் வெளியீடு- அமேஸான்

படம்
  பொதுவாகவே சர்வாதிகாரிகள் ஊடகங்களை மிக திறமையாக தந்திரமாக கையாண்டு தங்கள் வசப்படுத்திக்கொள்வார்கள். இதன்படி மெகந்தியா நாட்டு அதிபர் ******** மாதம்தோறும் மக்களுக்கு வானொலி வழியாக உரையாற்றுகிறார். நாட்டின் பிரச்னைகளை பேசுவதை விட அதை மடைமாற்றி தனது கனவுகளைப் பற்றியும், தொழிலதிபராக உள்ள நண்பர்களின் முன்னேற்றங்களையும் பேசுகிறார். அதனை சாத்தியப்படுத்துவதால் என்ன நன்மை என்பதையும் வெளிப்படையாக சில சமயங்களில் உளறுகிறார்.  நாடு முழுக்க பிரிவினை, சீரழிவுகள் இருந்தாலும் அதிபரின் சொத்துக்களும் அவரின் இனாம் தாரர்களான தொழிலதிபர்களும் வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இதுபற்றிய பகடியான சில சமயம் கோபம் வரும்படியான பதினெட்டு உரைகளை இந்த நூல் கொண்டுள்ளது.  பன்பட்டர்ஜாம்  நூலை வாசிக்கும்போது, சமகால நிகழ்வுகள் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு காரணம், நாம் கேள்வி கேட்காமல் வரிசையில் நின்றுகொண்டிருப்பதே என்று உணருங்கள். சர்வாதிகார, ராணுவ ஆட்சி நடைபெறும் தேசங்களை உதாரணமாக கொண்டு எழுதப்பட்ட நூல் இது.  இதற்கான உத்வேகத்தை திரைப்படக் கலைஞர் சார்லி சாப்ளின் வழங்கினார். நூலின் அட்டைப்படத்தை அழகுற வரைந்த கதிர் அவர

ஒவ்வாமை புதிய மின்னூல் வெளியீடு - அமேஸானில் வாசிக்கலாம்

படம்
  புதிய மின்னூல் வெளியீடு ஒவ்வாமை ஒவ்வாமை என்பதை ஆங்கிலத்தில் அலர்ஜி என அழைக்கிறார்கள். இன்று, தொற்றுநோய்கள் பாதிப்பை பற்றி பலரும் பேசினாலும் கூட, அதற்கு நிகராக வளர்ந்து வரும் பிரச்னையாக நோயாக ஒவ்வாமை உள்ளது. இதனை குணப்படுத்த முடியாது. ஒவ்வாமை தரும் பொருட்களை சாப்பிடாமல், உடலுக்குள் செல்லாமல் தடுத்தால் உடல்நலம் சீர்பெறும். உண்மையில் ஒவ்வாமை என்றால் என்ன, அதை ஏற்படுத்துவது என்னென்ன பொருட்கள், நாம் வாழும் இடம், பயன்படுத்தும் பொருட்கள், உண்ணும் உணவு என்னென்ன பங்களிப்பை செய்கிறது என்பதைப் பற்றி நூல் விவரித்துள்ளது. இது சிறிய அளவிலான அறிமுக நூல்தான். ஆங்கிலத்தில் ஒவ்வாமையைப் புரிந்துகொள்ள சிகிச்சை செய்ய ஏராளமான நூல்கள் உண்டு. ஆனால் இந்த வகையில் தமிழில் இது புதிது. தமிழில் ஒவ்வாமையைப் பற்றிய எளிதாக தெரிந்துகொள்ள பாதுகாப்பாக இருக்க இந்த நூல் உதவும். நூலை அமேஸானில் வாசிக்க ஸ்கேன் செய்யுங்க.... வெப்சைட் லிங்கை கிளிக் செய்தும் வாசிக்கலாம்.... https://www.amazon.in/dp/B09TJMVW5W

இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் சைக்கோ டைரி நூலை வாசிக்கலாம்! - இணைய முகவரி இதோ!

படம்
  சைக்கோ டைரி இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் சைக்கோ டைரி நூலை வாசிக்க முடியும். விருப்பமிருந்தால் தரவிறக்கலாம். இல்லையெனில் நூல் போலவே அப்படியே வாசிக்கலாம்.  நன்றி இணைய முகவரி https://ia902307.us.archive.org/3/items/the-heist/psycho%20diary.pdf

சைக்கோ டைரி நூல் வெளியீடு- தரவிறக்கும் முகவரி இதோ!

படம்
  பொதுவாக குற்றங்களை பற்றிய நூல்கள் தமிழில் குறைவு. உளவியல் சார்ந்த கோணத்தில் குற்றங்களை பார்ப்பது என்ற வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆங்கில நூல்கள், நாளிதழ் செய்திகள் ஆகியவற்றை தழுவியே நூல் எழுதப்பட்டுள்ளது. குற்றம், அதுதொடர்பான உணர்ச்சிகள், பின்விளைவுகள் ஆகியவற்றை பற்றிய மனதிற்குள் எழும் ஏராளமான கேள்விகளுக்கு இந்த நூல் பதில் அளிக்கும் என நம்புகிறோம். நூலை தரவிறக்கி வாசியுங்கள்.  நூல் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடப்படுகிறது. இதனை வணிகரீதியாக பயன்படுத்தக்கூடாது. மற்றபடி நூலை படிக்கலாம் பகிரலாம் பரவசமாகலாம்.  சைக்கோ டைரி நூலின் பிடிஎப் முகவரி https://www.mediafire.com/file/83wrallx78g3ipc/psycho_diary_boo k_pdf.pdf/file மொபி கோப்பை தரவிறக்கும் முகவரி https://www.mediafire.com/file/v1qrnxr9shsk5ol/psycho_diary.mobi/file இபப் கோப்பைத் தரவிறக்கும் முகவரி https://www.mediafire.com/file/7o6kxokcqvxgl15/psycho_diary.epub/file கோமாளிமேடை டீம் 

இலவச மின்னூல் அறிவிப்பு - சைக்கோ டைரி

படம்
  சைக்கோ கொலைகாரர்கள், சீரியல் கொலைகாரர்கள் பற்றி நமது மனதிற்குள் நிறைய கேள்விகள் இருக்கும். கூடவே எப்படி அவர்களின் மனநிலை இப்படி குரூரமாக வன்ம மாக மாறியது என தெரிந்துகொள்ளும் ஆவலும் இருக்கும். அதற்கான பதில்களை இந்த நூல் அளிக்கும். விரைவில் இலவச நூலாக வெளியிடப்படும் நூலை தரவிறக்கி வாசியுங்கள். நன்றி! கோமாளிமேடை டீம் 

பறவையால் அழகாகிறது வானம்! - கடிதங்கள்

படம்
           பறவையால் அழகாகிறது வானம்!   அன்பு நண்பர் சபாவுக்கு , வணக்கம் . நான் செனைனக்கு வந்துவிட்டேன் . பள்ளிகள் தொடங்கிவிட்டதால் , மாணவர்கள் பஸ்ஸில் தொங்கியபடி செல்லும் காட்சிகளை இனி பார்க்க முடியும் என நினைக்கிறேன் . அறை முழுக்க தூசு காற்று போல நிரம்பியிருந்தது . வாடகைப்பணத்தைக் கொடுத்துவிட்டேன் . படிக்க வேண்டிய நூலாக நேரு எனக்காக இன்னும் காத்திருக்கிறார் . அதனை இப்போதுதான் மெல்ல படிக்கத் தொடங்கியுள்ளேன் . வரும் திங்கள் முதல் அலுவலகம் தொடங்கவிருக்கிறது . வேலைகள் நெருக்கும் என்று நினைக்கிறேன் . ஆசிரியர் சிவராமன் வீட்டுக்கு போகவேண்டும் என நினைத்துள்ளேன் . இந்த பிறந்தநாளுக்கு அவர் வீட்டிற்கு செல்ல நினைத்தே்ன் . ஆனால் பல்வேறு சிக்கல்களால் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை . அதற்காக கடிதம் ஒன்றை எழுதி அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பினேன் . மனிதர் பதறிப்போய் போனில் அழைத்து என்னாச்சு என்று கேட்டார் . அவரைப்பற்றி நான் என்ன நினைத்தேன் என்பதை உணர்ச்சிகரமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன் . பிறகு எப்போதுதான் இதனை சொல்லுவது ? அவர் கொடுத்த ஊக்கம்தான் எனக்கு என்மேல் நம்பிக

விலை பேசப்பட்ட கடவுள்- கட்டுரைகள்(அறிவியல், சமூகம், பொருளாதாரம், இயற்கை, தொழில்நுட்பம்) - மின்னூல் வெளியீடு

படம்
     இந்த நூலில் உள்ள கட்டுரைகள் சமூகம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி சார்ந்த பல்வேறு விஷயங்களை பேசுகின்றன. முடிந்தளவு ஆய்வுநோக்கில் எழுதப்பட்டுள்ளன. உலகளவில் பிரபலமான பல்வேறு ஊடகங்களில் வெளியான கட்டுரைகளை ஆதாரமாக கொண்டவை. ஆக்கப்பூர்வமான மாற்றங்களை செய்திகளை முதன்மைப்படுத்தும் நோக்கத்தை கொண்டு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதை வாசிக்கும் யாரொருவரும் உணர முடியும். எழுதப்பட்டும் கட்டுரைகளை எப்படி இருக்கவேண்டுமென பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. இதன் காரணமாகவே கட்டுரைகளின் நோக்கம் பிடிபட்டது. அதற்கேற்ப நிறைய மாற்றங்களை செய்ய முடிந்தது. இதனை வெளியிட்டு உதவிய தினமலர்  நிறுவனத்திற்கும் நன்றிகள் கோடி.  நூலை வாசிக்கவும், வாங்கவும்..... https://www.amazon.in/dp/B095KTXV9X

ஜனநாயக இந்தியா - நேருவின் உரைகள் தமிழில் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  இந்தியாவின் நவீன சிற்பிகளில் ஒருவரான நேரு, மேற்குலகில் மிகச்சிறந்த நிர்வாகி என்பதை விட சிந்தனையாளராகவே அறியப்படுகிறார். தனது வாழ்நாளில் நேரு ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவரளவுக்கு உலக வரலாற்றை ஆய்வு நோக்கில் அணுகி இந்தியாவின் நிலை என்ன எப்படி வளரவேண்டும் என்று கனவுகண்ட தலைவர் யாருமில்லை எனலாம். இந்த நூலில் மொத்தம் 24  உரைகள் உள்ளன. இவை மதவாதம், தேசியவாதம், ஹைதரபாத்தை இந்தியாவுடன் இணைத்தது, கலவரங்கள், தேசியகீதம் உருவாக்கம் பல்வேறு விஷயங்களைப் பற்றிய தனது கருத்துகளை கூறுகிறார்.  உலகம், இந்தியா, இந்திய மாநிலங்கள் பற்றி பிரதமர் ஒருவர் வெளிப்படையாக பேசுவது ஆச்சரியமான ஒன்று. இதில் அரசியல் கலக்காமல் தனது சிந்தனைகளை பேசியுள்ளார். பிரதமரின் பெருமை குலையும்போது நாட்டின் பெருமையும் குலைந்துவிடும் என்று பிரனாப் முகர்ஜி கூறிய கூற்றை நினைவுபடுத்திக்கொண்டால் நேரு சிறப்பாகவே அனைத்து விவகாரங்களையும் கையாண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும்.   காஷ்மீர் விவகாரம், இந்து முஸ்லீம் ஒற்றுமை பற்றி பேசும்போதும் இரு தரப்பினருக்குமான யோசனைகளை முன்வைத்து பேசியுள்ளார். ராணுவ தரப்பிலும் ஆதரவாக பேசவில்லை. மக்களின் எந்

பறவையால் அழகாகிறது வானம்! - இலவச மின்னூல் வெளியீடு

படம்
     இலவச மின்னூல் வெளியீடு.... விரைவில் .....       இந்த நூல் கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தவர்களைப் பற்றி குறிப்பிடுகிறது . இவர்களைப் பற்றி எழுதக்காரணம் , இதுபோன்ற உதவிகள் துயரமான காலத்தில் அனைவருக்கு்ம கிடைக்கவேண்டும் என்ற நோக்கம்தான் . தற்போதைய காலத்தில் அனைத்து மக்களுக்கும் இடையிலும் பிரிவினை வேலிகள் வேகமாக ஊன்றப்பட்டு வருகி்ன்றன . அதனை மனிதநேயமிக்க மனிதர்கள் தொடர்ந்து களைந்தெறிந்து மக்களுக்கு பாகுபாடு இன்றி உதவி வருவது மகிழ்ச்சியளிக்கிறது . இதில் குறிப்பிடப்பட்டவர்கள்தான் உயர்ந்த மனிதர்கள் என்பதல்ல . நம்மால் முடிந்த உதவியை பாகுபாடின்றி பிறருக்கு வழங்க முன்வருபவர்கள் அனைவருமே நாம் போற்றத்தகுந்தவர்கள்தான் . இந்தநூல் அதற்கான நம்பிக்கையை வாசிப்பவர்களுக்கு வழங்கும் என்று கருதுகிறேன் .  பொதுநலம் சார்ந்து உழைக்கும் பல்வேறு மனிதர்களை அறிமுகம் செய்த  நண்பர் திரு. இரா.முருகானந்தம் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம்.  

நம்பிக்கை மனிதர்கள் 2020! - நிம்மதியாக மூச்சு விட குறைந்தவிலையில் வெண்டிலேட்டர்கள்!

படம்
              நிம்மதியாக மூச்சு விடுங்கள் ! பெங்களூரூவைச் சேர்ந்த கௌதம் பசுபுலேட்டி , தனது பயோடிசைன் இன்னோவேஷன் லேப் மூலம் குறைந்த விலையில் வெண்டிலேட்டர்களை தயாரித்து வருகிறார் . இந்தியாவில் நாளுக்கு நாள் கோவிட் -19 பாதிப்பு அதிகரித்து வருகிறது . குறைவான அறிகுறிகள் கொண்டவர்கள் முதல் தீவிரமான அறிகுறிகள் கொண்டவர்கள் வரை வெண்டிலேட்டர் என்பது அவசியமான வசதியாக இருக்கிறது . ஆனால் இன்று இந்திய மாநிலங்களில் ஏழில் மட்டுமே படுக்கை , வெண்டிலேட்டர் போன்ற வசதிகள் சிறப்பாக உள்ளன . அவை , தமிழ்நாடு , கேரளம் , மகாராஷ்டிரம் , உத்திரப்பிரதேசம் , மேற்கு வங்காளம் , தெலங்கானா , கர்நாடகம் . நோய்தொடர்பான ஆராய்ச்சிப்படி 19 லட்சம் படுக்கைகள் , 48 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் , 95 ஆயிரம் ஐசியு படுக்கை வசதிகள்தான் இந்தியாவில் உள்ளன . கௌதம் , அரசு மருத்துவமனைகளோடு இணைந்து வெண்டிலேட்டர்களை குறைந்த விலையில் தயாரித்து வழங்கும் முயற்சியை செய்துவருகிறார் . ‘’’’ எங்களது நோக்கம் , அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் உயிரை பாதுகாப்பதுதான் . இதற்காக மத்திய அரசின் நிதி ஆயோக்கோடு இணைந்

தீப்பந்தம் - மொழிபெயர்ப்பு நேர்காணல் மின்னூலின் தரவிறக்க முகவரி இதோ!

படம்
நேர்காணல்களின் சிறப்பு, குறிப்பிட்ட ஒருவரிடம் பேசும்போது அவர் அந்தந்த சூழல்களின் என்ன நினைக்கிறாரோ அதை பேசவைத்து பதில்களை வாங்க வேண்டும் என்ற சவால் உள்ளது. இதன் காரணமாக கேள்விகளை சுருக்கி பதில்களை நிறைய பெறவேண்டும் என்பதே நேர்காணல்களின் அடிப்படை. இந்த நூல்களில் உள்ள 32 நேர்காணல்கள் இந்தியாவின் முன்னணி நாளிதழ்கள், மாத, வார இதழ்களில் வெளியானவை.  இந்த நேர்காணல்கள் அனைத்தும் கோமாளிமேடை வலைத்தளத்தில் வெளியானவை. வெளியானவற்றில் குறிப்பிட்ட நேர்காணல்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை செம்மை  செய்து மொழிபெயர்ப்பு நேர்காணல் நூலாக தொகுத்திருக்கிறோம். இந்த நூல் கொரோனா காலத்தில் இந்தியாவில் , உலகில் பல்வேறு துறைகளில் நடைபெற்ற மாற்றங்களை பதிவு செய்கின்றன. புனைவுகள் மட்டுமே காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று என்னிடம் பேசிய சிறுகதை எழுத்தாளர் ஒருவர் ஏளனமாக சொன்னார். எது நிலைத்து நிற்கப் போகிறது என்பதை காலம் முடிவு செய்யும். நாம் செய்யவேண்டிய எழுத்துக்கு உண்மையாக அதனை எழுதுவதும், அதனை முறையான வழியில் பிறருக்கு பகிர்வதுமே ஆகும். இந்த நூலில் முக்கியமான நேர்காணல்களாக கருதுவது அண்மையில் புற்றுநோய்

உடல் மனம் உள்ளே - உளவியல் குறைபாடுகளும் சிகிச்சைகளும் - தரவிறக்க முகவரி

படம்
உடல் மனம் உள்ளே என்ற நூல், பல்வேறு உளவியல் குறைபாடுகள், அதற்கான சிகிச்சைகள். வழங்கப்படும் மருந்துகளைப் பற்றி பேசுகிறது. பொதுவாக நாம் உடல் அளவுக்கு உள்ளத்தைப் பற்றி பேசுவதில்லை. மனிதர்கள் குழுவாக வசித்தாலும் தனிப்பட்ட மனிதர்களாகவே அவர்களுக்குள் இருக்கிறார்கள். பல்வேறு அடக்கப்பட்ட உணர்ச்சிகள், உடல் குறைபாடுகள், சிறுவயது அனுபவங்கள் ஆகியவை அவர்களின் பிற்கால வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. இதன்காரணமாகவே பல்வேறு உளவியல் குறைபாடுகளுள்ள மனிதர்கள் சமூகத்தில் உருவாகிறார்கள். இவர்களுக்கு தேவை சிகிச்சை மட்டுமே. இவர்களைக் கொன்றால் சமூகத்திலுள்ள தீமைகள் அழிந்துவிடாது என்பதை நாம் இன்னும் தெளிவாக உணரவில்லை. அதற்கான விஷயங்களை இந்த நூல் தெளிவுபடுத்தும் என்ற நினைக்கிறேன்.  இந்த நூல் அனைவருக்கும் சென்று சேரவேண்டிய நோக்கத்தில் கிரியேட்டிவ் காமன் உரிமையில் வெளியிடப்படுகிறது. இந்த நூலை தங்களது வலைத்தளங்களில் பகிர்பவர்கள் , அதுபற்றிய தகவல்களை எங்களுடைய மின்னஞ்சலுக்கு ( arapress@protonmail.com) அனுப்பி வைத்தால் நன்றாக  இருக்கும்.  ஆனந்தமாக நூலை தரவிறக்கு வாசியுங்கள். நன்றி. நூலை எழுத ஊக்கம் தந்த தோழர் பாலபாரத

என்னை மேம்படுத்திக்கொள்ள இதுவே சரியான நேரம்!

படம்
Canva.com அன்புத் தோழர் சபாபதி அவர்களுக்கு , வணக்கம் . அடுத்தடுத்த பதவியுயர்வுகள் , ஊதிய உயர்வு ஆகிய விஷயங்கள் 2019 ஆம் ஆண்டு நிறைவேற வாழ்த்துகிறேன் . இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் காமிக்ஸ்கள் , மலையாளச் சிறுகதைகள் ஆகியவற்றை வாங்கினேன் . சிறுகதைகளை இனிமேல்தான் படிக்கவேண்டும் . அலுவலகங்களில் சிபாரிசு மூலம் வந்தவர்களின் அழும்புகளைத் தாங்க முடியவில்லை . வேலைகளையும் கற்றுக்கொள்ளாமல் அதைச் சமாளிக்க சில முக்கியப்புள்ளிகளை வளைத்து ... பிரமிக்க வைக்கிறது பிழைப்புத் தந்திரங்கள் . மற்றவர்களுக்கும் சேர்த்து நானே அதிகம் யோசிக்கிறேன் . எனக்கு அமைப்புகள் வீழ்ந்து நொறுங்குவது பெரும் மனவலியைத் தருகிறது . நான் வேலை செய்யும் நிறுவனமே செங்கல் செங்கல்லாக பிரிக்கப்பட்டால் ... கஷ்டம்தானே ? புதிய அலுவலகத்திற்கு ஏற்றபடி உன்னை மாற்றிக்கொள் என நண்பர் ஏறக்குறைய மிரட்டினார் . எனவே பேரகான் ஆபீஸ் வரிசையில் செருப்பு தேடிக்கொண்டி வாங்கினேன் . இதற்கு முன்பு எளிமையாக ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டிருந்தேன் . ஏசியில் வேலை . எனக்கு கால் படுபயங்கரமாக வேர்க்கும் . எதற்கு லெதர் செருப்பு , வீண்செல

அன்புள்ள அப்பாவுக்கு.... மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு!

படம்
நாம் எப்போதும் அம்மாவிற்கு நன்றி கூறுகிறோம். அவளை நினைவுகூர்ந்து நெகிழ்கிறோம். அவள் அடையாளம் காட்டித்தான் அப்பா என்பவரை அறிகிறோம். வீட்டிற்கு, உறவுகளுக்கு, உணர்ச்சிகளுக்கு அம்மா வழிகாட்டுகிறார். புரிந்துகொள்ள உதவுகிறார்.  சமூகத்திற்கு, வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு அப்பா வழிகாட்டுகிறார். அவர் பெரியளவில் பாராட்டுகளில் பங்குகொள்வதில்லை. வெற்றியிலும் கூட ஒதுங்கியே நிற்கிறார். அப்பாவையே மகன் தன் முன்மாதிரியாக கருதுவது வரம்தான். அப்படி ஒரு அப்பா அனைவருக்கும் அமைந்துவிடுவதில்லை. சில விஷயங்களைப் புரிந்துகொள்ள நாம் உரையாடித்தானே ஆகவேண்டியதிருக்கிறது. அப்படி அதிகம் பேசாத தந்தைக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்த மின்னூல். உங்களுக்கு இந்த நூல் விரைவில் இலவசமாக கிடைக்கும். தரவிறக்கிக்கொள்ளலாம். இப்போது அதன் அட்டைப்படம் மட்டும். படம்:Pixabay

மின்னூல்,

படம்

மின்னூல் வெளியீடு

படம்
நூலகவாசியின் குறிப்புகள் அரசு கார்த்திக் மின்னூல் வெளியீடு :  http://FreeTamilEbooks.com சென்னை இவை நான் வாசித்த நூல்கள் பற்றிய சிறிய அறிமுக சுருக்கமாகும். படித்தவரின் அனுபவத்தையும், காலத்தையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட ஒன்றே. நூல்களின் மீதான இறுதித் தீர்ப்பாக இவை கூறப்படவில்லை  என்பதை மனதில் கொள்ள வேண்டும். குறிப்புகள்: அரசு கார்த்திக் தொகுப்பு: அரசமார் sjarasukarthick@rediffmail.com அன்பரசு சண்முகம் வீட்டு முகவரி: 57, கிளுவன்காடு, வடக்குப்புதுப்பாளையம்(அ), ஊஞ்சலூர்(வழி), ஈரோடு – 638152 மின்னூலாக்கம் : த.சீனிவாசன் மின்னஞ்சல் :  tshrinivasan@gmail.com உரிமை –  Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License . உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். பதிவிறக்க * http://freetamilebooks.com/ebooks/notes-of-a-reader/