இடுகைகள்

வறுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுயத்தை அழித்து காதலை அடையாளம் காண்போம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
        தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம்   குழந்தைகளின் வளர்ப்புக்கு நிறைய பெற்றோர் பொறுப்பேற்று கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பொறுப்பை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பது மாறுபடுகிறது. குழந்தைகள் எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது, அவர்கள் என்ன வேலையை செய்யவேண்டும் என பெற்றோர் தீர்மானித்துக் கூறுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் முக்கியமான இடத்தை அந்தஸ்தை அடைய வேண்டுமென நினைக்கிறார்கள். இதற்குள்தான் அவர்கள் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஒரு பகுதியாக வைத்திருக்கிறார்கள். சமூகத்திற்கு பொருத்தமான மனிதர்களாக்க அவர்களை உருவாக்கி போர், முரண்பாடு, கொடூரங்களை செய்யும் விதமாக மாற்றுகிறார்கள். இப்படி பிள்ளைகளை வளர்ப்பதை அக்கறை, அன்பு என்று கூறமுடியுமா? ஒரு செடியை, விதையூன்றி வளர்க்க நாம் நிறைய விஷயங்களை செய்கிறோம். மண்ணைச் சோதித்து, மரக்கன்றை நட்டுவைத்து அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றுகிறோம். ஆனால் பிள்ளைகளை வளர்க்கும்போது, அம்முறையின் வழியாக  அவர்களை மெல்ல கொல்கிறோம். உண்மையில் நீங்கள் பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்கள் என்றால், உலகில் போர் நடைபெறக் கூடாது. நீங்கள் நேசிக

ஏழை மக்களின் நோய்களைத் தீர்க்க உதவும் ஃபெமா! - மோகன் முத்துசாமி, உதயகுமாரின் புதிய முயற்சி

படம்
  சென்னை வியாசர்பாடியைச்சேர்ந்தவர் மோகன் முத்துசாமி. இவர், தனது வீட்டருகே வாழ்ந்து வந்த சிறுமி, டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்துபோனதைப் பார்த்தார். அச்சிறுமியை மருத்துவம் செய்து காப்பாற்றும் அளவுக்கு அவளது தந்தையிடம் பணமில்லை. இது மோகனை யோசிக்க வைத்தது. பின்னாளில் ஃபெமா எனும் அமைப்பை தனது நண்பர் உதயகுமாருடன் சேர்ந்து தொடங்க வைத்தது. ஃபெமா என்ற தன்னார்வ அமைப்பு, ஏழை மக்களுக்கான மருத்துவ உதவிகளை, நோய்களை கண்டறியும் ஆய்வகத்தை நடத்தி வருகிறது. இங்கு 30 ரூபாய் கொடுத்து பதிவு செய்துகொண்டால் போதும். ஆலோசனை, மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்த சோதனைகள் செய்யப்படுகின்றன. சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஃபெமா செயல்படுகிறது.   ஏழை, வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கான இலவச மருத்துவ சேவைகளை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. நோய்களைப் பற்றிய விழிப்புணர்வுக்கு தெரு நாடகங்களை நடத்துகிறார்கள். கிளினிக்கிற்கு வரும் நோயாளிகள் தவிர, படுக்கையில் படுத்துவிட்ட நீண்டகால நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை, மருந்துகளை வழங்குகிறார்கள். வீட்ட

கடவுள் ஆணா, பெண்ணா, ஏன் வறுமை, மகிழ்ச்சி எங்கே, சமூகத்தின் விதிமுறை - ஜே கிருஷ்ணமூர்த்தி பதில்கள்

படம்
  ஜே கே ஜே கிருஷ்ணமூர்த்தி ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்   பயமில்லாத நிலை என்ற பழக்கத்தை நாம் எப்படி பெறுவது ? நீங்கள் பயமில்லாத நிலை என்பதை பழக்கம் என்று கூறுகிறீர்கள். அதை சரியாக கவனியுங்கள். பழக்கம் என்பது தினசரி திரும்ப திரும்ப செய்வதன் மூலம் உருவாகிறது. பயமில்லாத நிலை என்பது பழக்கங்களில் ஒன்றா? இல்லை. வாழ்க்கை, மரணம் என இரண்டையும் நேரடியாக சந்திக்கும்போதுதான் பயமற்ற நிலை உருவாகும். அவற்றை நீங்கள் நேரடியாக பார்த்து அவற்றை ஆய்வு செய்து புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை பற்றிய பயங்களிலிருந்து சுதந்திரம் பெற்று பயமற்ற நிலையை அடைய முடியும். நீங்கள் செய்யும் விஷயங்களை பழக்கவழக்கங்கள் என புரிந்துகொண்டீர்கள் என்றால் அது தவறான புரிதல். பழக்கங்களை அடிப்படையாக கொண்டுதான் வாழ்கிறீர்கள் என்றால் நீங்கள் செயல்களை செய்யும் எந்திரமாக வாழ்கிறீர்கள் என்று பொருள். பழக்கவழக்கங்களை தினசரி செய்வது வருவது என்பது உங்களை நீங்களே பாதுகாக்க சுவரைச் சுற்றி கட்டிக்கொள்வது போலத்தான். அதனால் நாம் மனதளவில் பாதுகாப்பாக உணர்கிறோம். ஆனால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், உணர்ச்சிகள

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சியைப் பிடிக்கும் இடதுசாரிகள்!

  லத்தீன் அமெரிக்க நாடுகள் பறக்கும் சிவப்புக்கொடி லத்தீன் அமெரிக்க நாடுகளில் மில்லினிய ஆண்டு தொடங்கி இடதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வென்று வருகின்றன. இங்குள்ள நாடுகள் மெக்சிகோ, ஹோண்டுராஸ், கொலம்பியா, பிரேசில், பெரு, சிலி, பொலிவியா, அர்ஜென்டினா. மெக்சிகோ ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபெஸ் ஆப்ரோடர் 2018 போதைப்பொருட்களை ஒழிப்பதாக சொல்லி நாட்டின் அதிபரான இடது சாரித் தலைவர். இந்த வகையில் முதல்முறையாக அதிபரான முதல் இடதுசாரி இவரே. இருபது ஆண்டுகளாக இவரே மெக்சிகோவை ஆள்கிறார். அர்ஜென்டினா ஆல்பெர்டோ ஃபெர்னான்டெஸ்   2019 சற்று மையமான இடதுசாரி தலைவர். பொருளாதார சீரற்ற நிலையில் நாட்டின் தேர்தலில் போட்டியிட்டு கடுமையான போட்டியில்தான் வென்று அதிபரானார். பொலிவியா லூயிஸ் அர்சே 2020 மார்க்சியர். தற்போது அதிபராக உள்ளவர் முந்தைய காலத்தில் ஈவோ மொராலெஸ் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரத்தை உயர்த்திய பெருமைக்கு சொந்தக்காரர். சிலி கேப்ரியல் போரிக் 2021 36 வயதில் நாட்டின் அதிபரான சாதனைக்கு சொந்தக்காரர். நாட்டில் பணவீக்கம் அதிகரித்து ஒருவர் வாழவே அதிகம் செலவு செய்யும் நிலையை மாற்றுவதாக சொல்லி

அறிவியல் தகவல்களை வெளிப்படுத்தும் வழிகள் - பை சார்ட், அட்டவணை, டயகிராம்

படம்
  தகவல்களை எப்படி வெளியே கூறி விளக்குவது? அறிவியல் சம்பந்தமான தகவல்களை எழுத்துக்களாக பத்தி பத்தியாக எழுதி ரிசர்ச்கேட் வலைத்தள கட்டுரை போல விளக்கினால் படிக்கும்போதே பலருக்கும் தூக்கம் வந்துவிடும். இதை தடுக்கவே பல்வேறு படங்கள், அட்டவணைகள் உதவுகின்றன. பொதுவாக அறிவியல் சோதனைகளில் சேகரிக்கப்படும் தகவல்கள், அளவுகள் ஆகியவற்றை டேட்டா என்கிறார்கள். தமிழில் தகவல்.  பொதுவாக பங்குச்சந்தை, பணவீக்கம் ஆகியவற்றின்  ஏற்ற இறக்கங்களை கிராப் வடிவில் சொல்லுவார்கள். இந்த வடிவில் ஏற்ற இறக்கங்களை எளிதாக புரிந்துகொள்ள முடியும். அனைத்து தகவல்களையும் இதே வடிவில் சொல்ல முடியாது.  பை சார்ட் நிதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது ஒரு ரூபாயில் வரவு செலவுகளை இந்த வகையில் சொல்லுவார்கள். இதனை பார்த்தாலே எளிதாக ஆண்டின் நிதி அறிக்கை எந்த லட்சணத்தில் இருக்கிறது என அடையாளம் கண்டுகொள்ளலாம். பொதுவாக எந்த அளவு, சந்தையில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு, வருமான அளவு ஆகியவற்றை பை சார்ட் மூலம் புரிந்துகொள்ளலாம். நோய்த்தாக்குதல் அளவு, வறுமையில் உள்ள மக்களின் அளவு ஆகியவற்றை சதவீத அடிப்படையில் எளிதாக புரிந்துகொள்ளலாம்.  நூறுகிராம்

இந்தியாவுக்கு ஏற்றதா காந்தியப் பொருளாதாரம்? - எதிர்கொண்ட முரண்பாடுகள்

படம்
         காந்தியப் பொருளாதாரம் முக்கியமானது எப்படி?   இன்று உலகளவில் வெளியான பொருளாதார நூல்களை எடுத்துக்கொண்டால் அதில் , ஒரு பத்தியேனும் காந்தியப் பொருளாதாரம் பற்றி குறிப்பிட்டிருப்பார்கள் . காந்தி , சுயராஜ்யம் நூலில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருக்கவேண்டுமென கூறியிருந்தனர் . இந்த கருத்தை அப்போது இருந்த தலைவர்களான கோகலே , நேரு , ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாவர்க்கர் அந்தளவு நம்பிக்கையாக எதிர்கொள்ளவில்லை . ஆனால் காந்தி அந்த சிந்தனையைத்தான் சர்வோதயா எனும் அமைப்பாக மாற்றிக் காட்டினார் . மத்திய அரசு நடத்திவரும் காதி அமைப்பும் காந்தியின் சிந்தனை வழியாக உருவான அமைப்பேயாகும் . இந்த அமைப்புகள் மூலம் கைத்தொழில் கற்ற மக்களுக்கு வருவாய் ஈட்டும் வழி கிடைக்கிறது . பாலியெஸ்டர் நிறுவனங்களுக்கு ஆதரவாக அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு கதரைப் போற்றுதும் என காந்தி செயல்படவில்லை . தான் பேசிய விஷயங்களையே செயல்பாடாக செய்து காட்டினார் . இவரது சிந்தனைகளை அடியொற்றி இரு பொருளாதார அறிஞர்கள் உருவானார்கள் . அவர்கள் - ஜே சி குமரப்பா , வினோபா பாவே என்ற இருவரும் இந்தியாவின் சுயசார்பை

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை விளையாட்டு மூலம் ஊக்குவிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் - ஷானாஸ் பர்வீன்

படம்
        விளையாட்டு மூலம் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தும் விளையாட்டு ஆசிரியர்! காவல்துறையில் பணியாற்றிய அப்பா மறைந்துவிட, குடும்பம் பொருளாதாரத்திற்கு தடுமாறியது. அந்த நிலையிலும் ஷானாஸ் பர்வீனின் விளையாட்டு ஆர்வத்திற்கு அவரின் அம்மா தடை விதிக்கவில்லை. இதனால் தான் இன்று ஷானாஸ் கால்பந்து, ரக்பி, ஐஸ் ஸ்டாக், பென்கேக் சிலாட் என பல்வேறு விளையாட்டு அமைப்புகளை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். காஷ்மீர் இளைஞர், பெண்களை விளையாட்டு வழியாக ஊக்கப்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர தனி மனிதராக பெரும்பாடு பட்டிருக்கிறார் ஷானாஸ். அரசு ஆதரவு இல்லாத நிலையில் அப்பாவின் ஓய்வூதியம் மட்டுமே அம்மா, தாய் இருவரின் வயிறு காயாமல் காப்பாற்றியது. எந்த நிலையிலும் தனது விளையாட்டு கனவை கருகவிட்டதில்லை. அதற்கு, அவரைப் புரிந்துகொண்ட தாய் கிடைத்தது முக்கியமானது. இதனால் விளையாட்டு பயிற்சிக்கு போய்விட்டு வீட்டுக்கு தாமதமாக வரும்போது, வீட்டுக்கு தாமதமாக வருகிறாள் பாருங்கள், பையன்களுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறாள், விளையாடி காயம்பட்டால் இவளுக்கு எப்படி திருமணமாகும் என பல்வேறு சாடைகள் பேசப்பட்ட சூழலி

தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது!

படம்
           ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது! இந்தியாவில் தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம், சுதந்திரமடைந்த காலம் தொட்டு தமிழ்நாடு மத்திய அரசுக்கு ஈட்டித்தரும் வரி வருவாய் அதிகம். மக்கள்நலத்திட்டங்களால் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி கிடைத்துள்ளது. ஆனால் குழந்தைகள், பெண்களின் ஆரோக்கியம் பற்றிய விவகாரத்தில் இன்னும் பின்தங்கியே உள்ளது. அண்மையில் ஐசிடிஎஸ் - தமிழ்நாடு அரசு இணைந்து செய்த மருத்துவ ஆய்வில் தமிழ்நாட்டில் மதுரை மாநகரம் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் முதலிடத்தில் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளில் 2.5 சதவீதம் பேர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் பாடிமாஸ் இன்டெக்ஸ் என்ற அளவுகோல் மூலம் அங்கன்வாடிகளில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ள நகரங்களாக மதுரை - 3,322, திருவண்ணாமலை - 2,369, சேலம் - 2,175, கடலூர் - 2,128, திண்டுக்கல் - 1,917 அடையாளம் காணப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து பற்றாக்குறை குறைவாக உள்ள மாநிலங்கள் தூத்துக்குடி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை

பழங்குடி மக்களின் விதைவங்கி!

படம்
  பழங்குடி மக்களின் விதைவங்கி! ஜார்க்கண்ட் மாநிலத்தில்  உள்ள மலைப்பகுதி மாவட்டங்கள் பாகுர், கோட்டா. இங்கு வாழும் பழங்குடி மக்கள் இனமான பகாரியா, விதை வங்கிகளை உருவாக்கியுள்ளனர். இந்த விதை வங்கியில், தாங்கள் பயிரிடும் தொன்மையான பயிர் ரகங்களைப் பாதுகாத்து வருகின்றனர். தொடக்கத்தில் நிலங்களில் பயிரிடுவதற்கான பயிர்களை உள்ளூர் வட்டிக்காரர்களிடம் பெற்று வந்தனர்.  பயிர்களை நடவு செய்து கடுமையாக உழைத்து பன்மடங்காக பெருக்கினாலும் கூட சரியான விலைக்கு விற்கமுடியவில்லை. மேலும் அவர்களின் உணவுக்காக கூட விளைந்த பயிர்களை பயன்படுத்தமுடியவில்லை. வட்டிக்காரர்களின்  பயிர்க்கடனை அடைக்க விளைந்த தானியங்களை மொத்தமாகவே விற்க வேண்டியிருந்தது. பல்லாண்டு காலமாக பாகுர், கோட்டா மாவட்டங்களில் வாழ்ந்த பழங்குடிகளின் வாழ்க்கை இப்படித்தான் நடந்து வந்தது.  பழங்குடி மக்கள், 2019ஆம் ஆண்டு நான்கு விதை வங்கிகளை உருவாக்கினர். இதற்கு டிராய்ட் கிராஃப்ட், பத்லாவோ பௌண்டேஷன், சதி ஆகிய மூன்று நிறுவனங்கள் உதவியுள்ளனர். இதற்குப் பிறகு, பயிர்களை வட்டிக்காரர்களிடம் கடனுக்கு வாங்கும் பிரச்னை மெல்ல குறைந்துவிட்டது.   பழங்குடி மக்கள் நாட்டு

புதைப்படிவ பொருட்களை அகழ்ந்து எடுத்தும் அங்கீகாரம் கிடைக்காத பெண்மணி!

படம்
  மேரி அன்னிங் அங்கீகரிக்கப்படாத புதைப்படிம சேகரிப்பாளர்! மேரி அன்னிங், இங்கிலாந்தைச் சேர்ந்த புதைப்படிம சேகரிப்பாளர். விற்பனைக்காக, கடல் சார்ந்த ஆயிரக்கணக்கான அரிய உயிரினங்களின் புதைப்படிமங்களைக் கண்டறிந்தார். முறையான கல்வி இல்லாதபோதும், சுய ஆர்வத்தால் புதைப்படிம அறிவை வளர்த்துக்கொண்டார். மேரியின் பல்வேறு புதைப்படிம கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம், அவர் வாழும் காலத்தில் கிடைக்கவில்லை.  1799  இங்கிலாந்தின் கடற்கரையோர நகரமான லைம் ரெஜிஸ்(Lyme Regis) பகுதியில் பிறந்தார். தந்தை ரிச்சர்ட் ஆன்னிங்,தச்சு வேலைகளை செய்து வந்தார். மனைவி, மேரி மூர். பிறந்த 10 பிள்ளைகளில் மேரியும், ஜோசப் மட்டுமே நோய்களைத் தாங்கி வளர்ந்தனர்.  1811 மேரியின் தம்பி ஜோசப், புதைப் படிமங்களை சேகரிக்கும்போது இக்தியோசரஸ் விலங்கின் (Ichthyosaurus) மண்டையோட்டைக் கண்டுபிடித்தான். சில மாதங்களுக்குப் பிறகு மேரி அதன் மீதங்களை கண்டுபிடித்தார். தந்தை 1810ஆம் ஆண்டு இறந்துவிட, குடும்பத்திற்காக மேரி புதைப்படிம வணிகத்தில் இறங்கினார்.  1821 6.1 மீட்டர் நீளமுள்ள  இக்தியோசொரஸ் பிளாட்டிடன் (Ichthyosaurus platydon) என்ற கடல் உயிரின பு

நேருவின் சோசலிச கொள்கையும், சோவியத் யூனியனும்! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 நேருவும், அவரின் சோவியத் சோசலிச உறவும்.  இன்று இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நிர்வாக திறனின்மைக்கு கூட மறைந்த முன்னாள் பிரதமர் நேரு குற்றம்சாட்டப்பட்டு வருகிறார். அவர் அக்காலத்தில் கடைபிடித்த கலப்பு பொருளாதாரம், சோசலிச கொள்கைகள், பெரும் தொழிற்சாலைகள் ஆகியவை அனைத்தும் இன்றைய கால கண்ணோட்டத்துடன் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. உண்மையில் நேரு சோவியத்தின் சோசலிச கொள்கைகளை முழுமையாக அப்படியே அமல்படுத்தினாரா என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கியமான நோக்கம்.  சோவியத் யூனியன்தான் சோசலிச தலைமையகம். அங்கு 1917ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சி, அதற்குப் பிறகு அங்கிருந்து உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் பல்வேறு நாடுகளில் புரட்சிக்கான காரணங்களை தேடக் காரணமாக அமைந்தன. சோசலிசம் என்பது நாடுகளுக்கு ஏற்றது போல பல்வேறு வடிவங்களுக்கு மாற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. உதாரணத்திற்கு சீனா. அங்கும் சோசலிச கொள்கைகள் உள்ளன. முதலாளித்துவத்தை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கு சர்வாதிகாரம் செய்து வருகிறது.  ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை அவர் பெரிதாக முக்கியமாக நினைக்கவில்லை. 1926-27 காலகட்டத்

பார்லே ஜியும் இந்தியாவின் உணவு பாதுகாப்பு தடுமாற்றமும்!

படம்
  1929 ஆம் ஆண்டு பார்லே பிஸ்கெட் நிறுவனத்தை மோகன்லால் தயாள் சௌகான் தொடங்கினார். அவர் வைல் பார்லே எனுமிடத்தில் வாழ்ந்தார். அந்த இடத்தின் பெயரையே நிறுவனத்திற்கு சூட்டினார். அன்று பிரிட்டிஷ் நிறுவனங்கள்தான் பிஸ்கெட் துறையில் ஆதிக்கம் செலுத்தின. அதற்கு போட்டியாக தொடங்கிய சுதேசி நிறுவனம்தான் பார்லே. முதல் பிஸ்கெட் பிராண்ட் பார்லே ஜி.   இன்று பார்லே  நிறுவனம் பல்வேறு உணவு சார்ந்த பொருட்களை தயாரித்து வருகிறது. இதிலும் அவர்களது முத்திரை பதித்த ஒரு பொருள் என்றால் அது குளுக்கோஸ் பிஸ்கெட்டான பார்லே ஜி தான். விலை குறைவு. இன்றுவரையுமே கையில் காசு இல்லாத பலரும் பார்லே ஜியை வாங்கி டீயில் தொட்டு சாப்பிட்டு பசியாற்றிக் கொள்வது பார்க்க கூடிய ஒன்று. பார்லே ஜி மகத்தான ருசி கொண்ட பிஸ்கெட் கிடையாது. ஆனால் குறைந்த விலைக்கு கிடைக்கும் ஒரு பிஸ்கெட் அதுதான்.  இன்றைய காலத்தில் பார்லே கூட ப்ரீமியம் வகையில் தனது பிஸ்கெட் வரிசைகளை உருவாக்கிவிட்டது. ஆனாலும் பார்லே ஜி பிஸ்கெட் உற்பத்தியை நிறுத்தவில்லை. இன்றும் அதனை தொடர்ச்சியாக விற்றுவருகிறது. பெருந்தொற்று காலத்தில் பார்லே நிறுவனம், பார்லே ஜி பிஸ்கெட்டுகளை இலவசமாக கொ

இந்தியர்களின் உயரம் மெல்ல குறைந்து வருகிறது!

படம்
  இந்தியர்களின் உயரம் குறைந்து வருவதாக இந்திய அரசின் தேசிய குடும்பநல ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவித்துள்ளன.  இந்தியர்கள் பொதுவாக உயரத்தை விட நிறத்தைப் பற்றிய கவனத்தை அதிகம் கொண்டுள்ளனர். ஆனால் ஒருவரின் உயரம், எடை என்பது உடல்நலத்தைப் பொறுத்தவரை முக்கியமானது. தற்போது தேசிய குடும்பநல ஆய்வுகளில் தெரிய வந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவை. 1992 முதல் 2020 வரையிலான ஆய்வுகளில் இந்தியர்களின் உயரம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.  இரண்டாவது மற்றும் நான்காவது ஆய்வுகளில் உயர மாறுதல் தெரியவந்துள்ளது. இதில் பதினைந்து முதல் இருபத்துநான்கு வயது வரையில் உள்ள பெண்கள் 0.12 செ.மீ. உயரம் குறைவாகவும், இருபத்தாறு முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களின் உயரம் 0.13 செ.மீ. உயரமாக உள்ளனர். இந்த வகையில் ஆண்களின் உயரம் முதல் பிரிவில் 1.1 செ.மீ, இரண்டாவது பிரிவில் 0.86 செ.மீ. என குறைந்துள்ளது. இதில் நாம் கவலைப்படும் விஷயமாக உள்ளது, பட்டியலினப் பெண்களின் உயரம் 0.42 செ.மீ., ஏழைப்பெண்களின் உயரம் 0.57 செ.மீ. என குறைந்துள்ளதுதான்.  ஆண்களைப் பொறுத்தவரை ஏழையான ஆண்கள், வசதியான ஆண்கள் பிரிவு என இரண்டிலுமே அவர்களின் உயரக்க

ஐஏஎஸ் கனவுக்காக தட்டுவடை விற்கும் மாணவர்கள்!

படம்
  தட்டுவடை செட் பொதுவாக சினிமாக்கார ர்கள்தான் பாலத்தின் அடியில் தூங்கினேன். அக்கா கடையில் கடன் வைத்து இட்லி வாங்கினேன். இப்படி சுதந்திரப் போராட்டமே செய்துதான் படத்தை இயக்கினேன். ஜெயித்தேன் என டிவி பேட்டிகள் முதல் யூடியூப் பேட்டிகள் வரை சொல்லுவார்கள். படிப்பிற்காகவே போராடும் நிலை இன்னும் சமூகத்தில் இருக்கிறது. அதைப்பற்றியதுதான் இந்தக் கட்டுரை.  சேலத்தில் உள்ளது கோரிமேடு. இங்குள்ள சிறிய உணவுக்கடையைச் சுற்றி இளைஞர்களாக நிற்கிறார்கள். அனைவரும் வந்தது தட்டுவடை விற்கும் கடைக்காகத்தான். இதுதான் அந்த கடையின் சிக்னேச்சர் டிஷ். தட்டு வடையை சாண்ட்விட்ச் போல வைத்துக் கொடுக்கிறார்கள். அதில், கேரட், பீட்ரூட், வெங்காயம், புதினா நிரம்பியுள்ளது. இதை தொட்டுச்சாப்பிட மிளகாய் சட்னி கொடுக்கிறார்கள்.  இதை வி கிஷோர், எம் தனகோடி என்ற இரு 12ஆம் வகுப்பு மாணவர்கள்தான் நடத்துகிறார்கள். இருவருக்குமே ஐஏஎஸ் தேர்வில் வெல்வதுதான் கனவு. எனவே தங்களுடைய குடும்பத்தை இதற்காக குறை சொல்லாமல் தங்கள் கல்விச்செலவை தாங்களே பார்த்துக்கொள்ள கடையைத் தொடங்கியிருக்கிறார்கள்.  கிஷோர், திருவேனி கார்டனில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்