விடை தெரியாத 5 மர்மங்கள்(தொகுப்பு:விக்டர் காமெஸி )
விடை தெரியாத 5 மர்மங்கள்(தொகுப்பு:விக்டர் காமெஸி ) பல்வேறு புலனாய்வாளர்கள் , காவல்துறையினர் , மீட்புப்படை என அனைவரையும் மறக்கமுடியாமல் அலைய வைத்து துப்பு துலக்கச்செய்தாலும் விடை தெரியாமல் பாடாய்படுத்திய 4 மர்மச் சம்பவங்களின் காக்டெய்ல் தொகுப்பு இதோ உங்களுக்காக .... டியாடோவ் மர்மத்திற்கு விடை ! 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் உரால் மலைப்பகுதியில் மலையேற்றம் செய்வதற்காக வந்த குழு ஒன்று 1 மாதமாகியும் நாடு திரும்பவில்லை என்ற தகவல் அறிந்த மீட்புப்படை சம்பவ இடத்திற்கு சென்றனர் . மைனஸ் 24 டிகிரி குளிர் மலைப்பகுதியில் அவர்களது தங்கியிருந்த கூடாரத்தை கண்டுபிடித்தபோது , கீழ்பகுதியில் வெளியே சென்றதற்கான கத்தி கீறல்கள் இருந்தன . அக்குழு தங்கியிருந்த கூடாரத்தினுள் எட்டிப்பார்த்தபோது அவர்கள் பயன்படுத்திய உடைகள் மற்றும் ஷூக்கள் , கேமரா , கம்பளி உடைகள் இருந்தன மேலும் நிறைய காலடித்தடங்கள் இருந்தன . இதில் வெற்று காலடித்தடங்களும் அடக்கம் . தீவிர தேடுதல் வேட்டையினால் மே மாதம் பனி உருகிய பிறகு 9 பேரின் உடல்களும் (7 ஆண்கள் , 2 பெண்கள் ) மீட்கப்பட்டன . அவர்களின் இறப்ப