இடுகைகள்

ஜனநாயகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாடநூல்களில் ஜனநாயகத்தன்மை குறைகிறது! - கர்நாடக அரசு பாடநூல்களில் ஏற்படும் புதிய மாற்றம்

படம்
  எழுத்தாளர் தேவனூர் மகாதேவா கர்நாடகத்தில் உள்ள 10ஆம் வகுப்பு பாட நூல்களில் சில எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டு புதிய எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். எப்போதும்போல இதை எப்படி நீக்கலாம், அவருடையதை எப்படி சேர்க்கலாம் என விவாதங்கள் கிளம்பியுள்ளன. இப்போது கன்னடம் மற்றும் சமூக அறிவியல் நூல்களில் இடம்பெற்ற எழுத்தாளர்களைப் பார்ப்போம்.  எழுத்தாளர்களின் படைப்புகளுக்கான மதிப்பீட்டு கமிட்டி தலைவர் எழுத்தாளர் ரோகித் சக்ரதீர்த்தா.  பானன்ஜே கோவிந்தாச்சார்யா (சுகான்சனா உபதேஷா) சமஸ்கிருத கல்வியாளர். இவர் 2020ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார். 13ஆம் நூற்றாண்டு த த்துவ அறிஞர் ஸ்ரீ மாதவாச்சாரியாவின் பல்வேறு படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். சமஸ்கிருத இலக்கிய படைப்புகளை மொழியாக்கம்செய்து கன்னட இலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். இந்த வகையில் 150 நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் கன்னடர்கள், துளுவர்கள் ஆகிய இனக்குழுக்களுக்கு இடையில் பிரபலமானவை. புராணங்களை பேசுவது, எழுதுவது ஆகியவற்றில் கைதேர்ந்த எழுத்தாளுமை.  சதாவதானி கணேஷ் (ஷ்ரேஷ்ட பாரதிய சின்டனேகலு) இவர் சமஸ்கிருத கவிஞர், கல்வியாளர்

ட்விட்டரை பணிய வைக்க படாதபாடு படும் மத்திய அரசு!

படம்
                 சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியாவின் குடியரசுத் தலைவர் முகமது புகாரி, தனது கருத்தை வெளியிட மறுத்து நீக்கிய ட்விட்டருக்கு தடை விதித்தார். அரசின் தணிக்கை முறைக்கு ஆதரவான கூ செயலிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு புதிய தகவல்பாதுகாப்புக்கொள்கையை உருவாக்கி அதற்கு ஏற்பட சமூக வலைத்தள நிறுவனங்கள் கட்டுப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன. ட்விட்டர் மட்டும் முரண்டு பண்ண அதனை பின்விளைவுகளை எ ண்ணிப் பாருங்கள் என மத்திய அரசு மிரட்டி வருகிறது. பாஜக வைச் சேர்ந்த சம்பித் பத்ரா காங்கிரஸ் கட்சி கோவிட்டைப் பயன்படுத்தி டூல்கிட் பிரசாரங்களை, திட்டங்களை வகுக்கிறது என குற்றம் சாட்டினார். ட்விட்டரையும் கூட போகிற போக்கில் செய்திகளை மாற்றி வெளியிடுகிற ஊடகம் என்று திட்டினார். இதற்கு தகவல் தொடர்புத்துறை அமைச்சகமும் முட்டுக்கொடுத்தது. குருகிராமில் இருந்த ட்விட்டர் நிறுவனமும் மிரட்டப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை அதிகாரியாக ட்விட்டர் நியமிக்கவேண்டும் என்பதுதான் அரசின் சட்டம் சொல்லும் நியதி. மே 27இல் , அரசின் சட்டங்களைப் படித்த ட்விட்டர், அரசு, ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக செயல

கலையை முழுக்க அரசியலாக மாற்றுவது அனைத்து மக்களுக்கும் பிடித்தமானதாக இருக்காது! - ஆர்ஜித் சென், ஓவிக்கலைஞர்

படம்
              நான் உருவாக்குவதற்கு நான்தான் பொறுப்பு ! ஓவியர் ஆர்ஜித் சென் கோவாவைச் சேர்ந்த கலைஞர் ஆர்ஜித் சென் . இவர்தான் இந்தியாவில் முதல் கிராபிக் நாவலை 1994 இல் ரிவர் ஆப் ஸ்டோரிஸ் என்ற பெயரில் எழுதினார் . அரசின் சட்டங்கள் , கொள்கைகள் பற்றி கார்டூன்களை வரைவது இவருக்கு பிடித்தமானது . அடிக்கடி வைரலாகும் கார்ட்டூ்ன்களில் இப்போது காமிக்ஸ் சென்ஸ் என்ற பெயரில் பத்திரிகை ஒன்றைத் தொடங்கியுள்ளார் . சென்னும் அவரது மனைவியும் பீப்பிள் ட்ரீ என்ற வடிவமைப்பு மையம் ஒன்றைத் தொடங்கி செயல்பட்டு வருகின்றனர் . சென் , இந்தியாவில் நடைபெறும் அனைத்து கலை விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார் . இதுபற்றி அவரிடம் பேசினோம் .      காமிக்ஸிற்கான இதழ் தொடங்கவேண்டுமென எப்படி தோன்றியது ? எனது எட்டு வயதிலிருந்து இப்படி காமிக்ஸ் இதழ் தொடங்கவேண்டுமென்று நினைத்து வருகிறேன் . இப்போது தொடங்கியுள்ள காமிக்ஸ் சென்ஸ் இதழ் , பதிமூன்று முதல் பதினெட்ட வயது வரையிலானவர்களுக்கு . இந்த வயதிலுள்ளவர்கள் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள் . அவர்களை அதிலிருந்து மாற்றி வாசிப்பு பக்கள் கொண்ட

ஜனநாயக இந்தியா - நேருவின் உரைகள் தமிழில் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  இந்தியாவின் நவீன சிற்பிகளில் ஒருவரான நேரு, மேற்குலகில் மிகச்சிறந்த நிர்வாகி என்பதை விட சிந்தனையாளராகவே அறியப்படுகிறார். தனது வாழ்நாளில் நேரு ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவரளவுக்கு உலக வரலாற்றை ஆய்வு நோக்கில் அணுகி இந்தியாவின் நிலை என்ன எப்படி வளரவேண்டும் என்று கனவுகண்ட தலைவர் யாருமில்லை எனலாம். இந்த நூலில் மொத்தம் 24  உரைகள் உள்ளன. இவை மதவாதம், தேசியவாதம், ஹைதரபாத்தை இந்தியாவுடன் இணைத்தது, கலவரங்கள், தேசியகீதம் உருவாக்கம் பல்வேறு விஷயங்களைப் பற்றிய தனது கருத்துகளை கூறுகிறார்.  உலகம், இந்தியா, இந்திய மாநிலங்கள் பற்றி பிரதமர் ஒருவர் வெளிப்படையாக பேசுவது ஆச்சரியமான ஒன்று. இதில் அரசியல் கலக்காமல் தனது சிந்தனைகளை பேசியுள்ளார். பிரதமரின் பெருமை குலையும்போது நாட்டின் பெருமையும் குலைந்துவிடும் என்று பிரனாப் முகர்ஜி கூறிய கூற்றை நினைவுபடுத்திக்கொண்டால் நேரு சிறப்பாகவே அனைத்து விவகாரங்களையும் கையாண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும்.   காஷ்மீர் விவகாரம், இந்து முஸ்லீம் ஒற்றுமை பற்றி பேசும்போதும் இரு தரப்பினருக்குமான யோசனைகளை முன்வைத்து பேசியுள்ளார். ராணுவ தரப்பிலும் ஆதரவாக பேசவில்லை. மக்களின் எந்

மக்களின் தகவல்களை அவர்கள் அறியாமல் திருடுவது ஜனநாயகத்தன்மை அல்ல! - டிம் பெர்னர்ஸ் லீ

படம்
            நேர்காணல் சர் டிம் பெர்னர்ஸ் லீ எம்ஐடி பேராசிரியர் . இணையத்தை கண்டுபிடித்தவர் . ஓப்பன் டேட்டா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தை தொடங்கியவர் . பிரைவசி என்பதை ஏன் முக்கியமாக கருதுகிறோம் ? இணையத்தில் பிரைவசி என்பது முக்கியமானதுதான் . காரணம் , நிறுவனங்கள் உங்களை அறிந்துகொண்டு பல்வேறு பொய்களை சொல்லி குறிப்பிட்ட வலைத்தளத்தை கிளி்க் செய்யச் சொல்லுகிறார்கள் . இதன் மூலம் அந்த நிறுவனம் உங்களின் தகவல்களை வைத்து வருமானம் பார்க்கிறது . ஆனால் இந்த விஷயம் நாம் நினைப்பதை விட அபாயகரமானது . இப்படி தகவல்களை திருடுவது , விற்பது என்பது அரசியல் , வணிகம் , குற்றம் என பல்துறை சார்ந்ததுதான் . ஒருவரின் தகவல்களை திருடுவதால் அதனைப் பயன்படுத்தி அவர் தவறான விஷயங்களைச் செய்யவும் வாய்ப்புள்ளது . உங்களுடைய கண்டுபிடிப்பு தவறாக பயன்படுத்தப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்ழ மனிதர்கள் இணையத்தை மனிதநேயத்துடன் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் . அதில் நல்ல , கெட்ட விஷயங்களும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம் . 2016 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஊழல் வெளிவந்தபோது , மக்க

நம்பிக்கை அளிக்கும் பெண்கள்! - நவோமி ஒசாகா, ஷானி தண்டா, என்கோஸி ஐவியலா, ஆரோரா ஜேம்ஸ், கிரண் மஜூம்தார்

படம்
            ஷானி தண்டா மாற்றுத்திறனாளி செயல்பாட்டாளர் உறுப்புகளின் செயல்திறன் குறைபாட்டை நான் குறைபாடாக பார்க்கவில்லை . இப்படி இருப்பதும் கூட என்னை அப்படி நினைக்கச் செய்வதில்லை . ஆனால் என்னை வேறுபடுத்தி பார்ப்பவர்களால்தான் அப்படி ஒரு நினைவு எனக்கும் உருவாகிறது என்று வோக் பத்திரிக்கைகைக்கு பேட்டி கொடுத்தார் ஷானி . பிறக்கும்போதே பிரிட்டல் போன் டிசீஸ் என்ற எலும்பு சார்ந்த மரபணு நோய் இவரை பாதித்தது . இதனால் இவர் பதினான்கு வயதில் இவரது கால் எலும்பு ஆறு முறை முறிந்திருக்கிறது . ஆனால் இவரது அம்மா இவரை பாகுபடுத்தி பார்க்காமல் உதவிகளை செய்துகொடுத்து வளர்த்தியிருக்கிறார் . பிறரிடம் உதவி கேட்பதை விட தனக்குத்தானே என்ன செய்யமுடியுமோ அதனை செய்துகொள்ள பழகுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறார் ஷானி . ஆசியன் டிஸேபிளிட்டி நெட்வொர் அமைப்பைத் தொடங்கியவர் , வர்ஜின் மீடியாவில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார் . ஆசியன் வுமன் ஃபெஸ்டிவல் ஆகிய விழாவை ஒருங்கிணைத்து வருகிறார் . இதன் காரணமாக இவரது பெயர் , பிபிசிஇன் 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது . கொரோனா காரணமாக பல்வேறு

தலைநகரான டெல்லியை சட்டங்களால் குதறும் மத்திய அரசு! - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊதாசீனப்படுத்தப்படும் வரலாற்று களங்கம்!

படம்
          ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால்     மத்திய அரசு, மெல்ல தனது கட்சி ஆட்சியில் இல்லாத அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் ஆட்சி நடத்துவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாநில உரிமைகள் மெல்ல பறிபோகத்தொடங்கியுள்ளன. இதில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள மாநிலங்கள் கூட விதிவிலக்கின்றி அனைத்து சமாச்சாரங்களும் டெல்லி மூலமே தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரே பிரதமர் ஒரே நாடு என்று கூறும்படி பிற அதிகாரிகள், ஏன் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் கூட செல்லாக்காசு நிலைக்கு மாறி வருகிறார்கள்.   இதற்கு சாட்சிதான் அண்மையில் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் இதன் காரணமாக அங்கு மக்களால் தேர்ந்தெடுக்ககப்பட்டு ஆறு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசுக்கு இனி எந்த அதிகாரங்களும் இருக்காது. வகுப்பறையில் இருக்கும்போது பாத்ரூம் செல்ல ஆசிரியரிடம் அனுமதி கேட்பது போலவே சாலை, கல்வி, மருத்துவம் என அனைத்து விஷயங்களூக்கும் ஆளுநரின் தலையசைப்பிற்கு யூனியன் பிரதேச முதல்வர் காத்திருக்க வேண்டி வரும்.  அதன் பொருள், இனிமேல் அங்கு தேர்தல் தேவையில்லை

தேசத்தந்தையின் உண்மை, வலிமை, மனிதநேயத்தை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்! - ஜவாகர்லால் நேரு

படம்
                நியமன நாள் நமது நியமன நாளை விதி உருவாக்குகிறது . அதை இந்திய மக்களான நாம் சுதந்திரமான நாட்டை உருவாக்கி அதற்காக நிலைநிறுத்தவேண்டும் . இறந்த கால சம்பவங்கள் நாம் இப்போது செய்யவிருக்கும் பல்வேறு செயல்களில் எதிரொலிக்கலாம் . நாம் இந்தியாவில் வாழும் வாழ்க்கையை வரலாறாக பிறர் எழுதுவார்கள் . இதில் திருப்புமுனை என்று முன்னர் கூறப்பட்டவையெல்லாம் இறந்த காலமாக மாறும் . விதி இயற்றப்படும் முக்கியமான தருணம் இது . ஆசியா மற்றும் உலகத்திற்கானது . கிழக்கில் புதிய விண்மீன் உதிக்கிறது . அதன் பின்னணியில் சுதந்திரம் மற்றும் நம்பிக்கை உள்ளது . நமது நம்பிக்கை ஏமாற்றப்படாதபோது , விண்மீன் அஸ்தமிக்கும் நிலை ஏற்படாது . நமது மக்களைச் சுற்றிலும் சோக மேகங்கள் இருந்தாலும் , வேறு பிரச்னைகளால் வாடி நின்றாலும் கூட நாம் பெற்றுள்ள சுதந்திரத்தைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளவேண்டும் . நாம் இந்த நேரத்தில் நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தேசத்தந்தை , சுதந்திரத்தை வடிவமைத்தவர் , நம்மைச்சுற்றி இருந்த இருளை நீக்கியவரை நினைவுகூரவேண்டும் . நாம் அவரைப் பின்பற்றாத மக்களாக இருந்தாலும் கூட அடுத்தடுத்த த

நவீன ஜனநாயக இந்தியாவிற்கான கனவு எளிதாக இருக்கப்போவதில்லை! - ஜவாகர்லால் நேரு

படம்
              விதியுடன் ஒரு போராட்டம் ! பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்தியா விதியுடனான போராட்டத்தை தொடங்கியது . அதற்கான உறுதிமொழியையும் எடுத்தது . இன்று நாம் அதே நிலையை எட்டியுள்ளோம் . முன்னர் நாம் செய்த உறுதிமொழியைப் போல அல்லாமல் இம்முறை தற்போதைய சூழலுக்கு ஏற்ப போல முடிவெடுக்கலாம் . முழு உலகமும் அமைதியாக உறங்கும் நேரம் இந்தியா தனது சுதந்திரம் மற்றும் வாழ்க்கைக்காக விழித்திருக்கிறது . இத்தனை ஆண்டுகாலமாக கஷ்டப்பட்டு வந்த மக்கள் பழைய காலம் முடிந்து அனைவரும் புதிய உலகில் நுழைகிறோம் . நாம் இந்தியாவிற்கான சேவைக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வதோடு , ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தீர்க்கவும் உறுதிபூணவேண்டும் . இந்தியாவின் வரலாற்றில் நாம் கண்டறிய முடியாத நூற்றாண்டுகளாக வெற்றியும் தோல்வியும் உள்ளன . அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டமான நிகழ்ச்சிகள் நடந்தபோதும் இந்தியா தனது பார்வையை இழக்கவில்லை . அவற்றின் வழியே தன்னை மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டது . நாம் இன்று இந்தியாவின் சாதனைக்காக கொண்டாடிக்கொண்டிருந்தாலும் இன்னும் பெரும் சாதனைகள் எதிர்காலத்தில் நமக்காக காத்திருக்கின்றன . எதிர்காலத்தில