மக்களின் மனதில் பயத்தை புகுத்தினால், அபார வெற்றி - பெருநிறுவனங்களின் உளவியல் யுக்தி
பயம். சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள பெரும்பாலான பொருட்களை விற்க வைக்க பயம்தான் தூண்டில். விளம்பரங்கள் மூலம் மக்களின் மனதில் பயமே தூண்டிவிடப்படுகிறது. அண்மையில் ஒரு பாத்திரங்களைக் கழுவுவதற்கான லிக்விட் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். அதில், தண்ணீர் மூலம் கழுவி வைத்த தட்டுகளை எடுத்து துடைத்து மேசையில் அமர்ந்துள்ள பிள்ளைகளுக்கு அம்மா உணவு பரிமாறுகிறார். உடனே, அங்கு வெள்ளைக் கோட் போட்டு வரும் மருத்துவர், ‘’அந்த தட்டில் நோய்க்கிருமிகள் உள்ளது’’ என்று சொல்லி, ஜெர்மன் நாட்டு ஃபினிஷ் என்ற பாத்திரம் கழுவும் லிக்விட்டை வாங்க வற்புறுத்துகிறார். மைக்ரோஸ்கோப்பில் பார்த்தால் தெரியும் நோய்க்கிருமிகள் சாப்பிடும் தட்டில் ஏராளமாக இருக்கின்றன. அதில் உணவு போட்டு சாப்பிட்டால் பிள்ளைகள் உடல்நலம் கெட்டுவிடும் என்பது நேரடியான மிரட்டல். இந்த விளம்பரத்தில் பயம் என்பது முக்கியமான கிரியா ஊக்கியாக உள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், மருத்துவமனைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு காரணம், மக்களிடையே அவர்கள் ஏற்படுத்தும் பயம்தான். வீட்டில் பணம் வைத்திருப்போம். அதை எளிமையா