இடுகைகள்

பாதுகாப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களின் மனதில் பயத்தை புகுத்தினால், அபார வெற்றி - பெருநிறுவனங்களின் உளவியல் யுக்தி

படம்
  பயம். சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள பெரும்பாலான பொருட்களை விற்க வைக்க பயம்தான் தூண்டில். விளம்பரங்கள் மூலம் மக்களின் மனதில் பயமே தூண்டிவிடப்படுகிறது. அண்மையில் ஒரு பாத்திரங்களைக் கழுவுவதற்கான லிக்விட் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். அதில், தண்ணீர் மூலம் கழுவி வைத்த தட்டுகளை எடுத்து துடைத்து மேசையில் அமர்ந்துள்ள பிள்ளைகளுக்கு அம்மா உணவு பரிமாறுகிறார். உடனே, அங்கு வெள்ளைக் கோட் போட்டு வரும் மருத்துவர், ‘’அந்த தட்டில் நோய்க்கிருமிகள் உள்ளது’’ என்று சொல்லி, ஜெர்மன் நாட்டு ஃபினிஷ் என்ற பாத்திரம் கழுவும் லிக்விட்டை வாங்க வற்புறுத்துகிறார். மைக்ரோஸ்கோப்பில் பார்த்தால் தெரியும் நோய்க்கிருமிகள் சாப்பிடும் தட்டில் ஏராளமாக இருக்கின்றன. அதில் உணவு போட்டு சாப்பிட்டால் பிள்ளைகள் உடல்நலம் கெட்டுவிடும் என்பது நேரடியான மிரட்டல்.   இந்த விளம்பரத்தில் பயம் என்பது முக்கியமான கிரியா ஊக்கியாக உள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், மருத்துவமனைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு காரணம், மக்களிடையே அவர்கள் ஏற்படுத்தும் பயம்தான். வீட்டில் பணம் வைத்திருப்போம். அதை எளிமையா

முழுமையானவராக வாழ்ந்தால் புறவயமான பாதுகாப்பைத் தேடவேண்டியதில்லை - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  கே.நீங்கள் ஒருபோதும் ஏழையின் வாழ்க்கையை வாழ்ந்தவரில்லை. மறைமுகமாக பணக்கார நண்பர்களின் ஆதரவு, இருந்து வந்துள்ளது. ஆனால் மக்கள் தம் வாழ்க்கையில் அனைத்து வித பாதுகாப்புகளையும் விட்டு விட வேண்டுமென்று பேசி வருகிறீர்கள். ஏற்கெனவே இங்கு பலகோடி மக்கள் அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்கள். நீங்கள் வறுமையான சூழலை அனுபவிக்காதவர், அதேநேரம் , புறவயமான பாதுகாப்பின்மையை அனுபவிக்காதவர். எப்படி இதுபோல பாதுகாப்பை கைவிடவேண்டுமென கூறுகிறீர்கள்? பதில். இந்த கேள்வி தொடர்ச்சியாக என்னிடம் கேட்கப்பட்டு வருவதுதான். நான் இதற்கு முன்னமே பதில் அளித்திருந்தாலும், மீண்டும் பதில் கூறுகிறேன். நான் இங்கு பாதுகாப்பு என்று கூறுவது, மனம் உருவாக்கும்   இசைவான சொகுசான சூழல்களைத்தான். புறவயமான பாதுகாப்பு என்பது, மனிதர்கள் உயிரோடு வாழ ஓரளவுக்கு உதவுகிறது. அதை நான் மறுக்கவில்லை. இந்த இடத்தில் இரண்டையும் ஒன்றாக்கி குழப்பிக்கொள்ளவில்லை. நீங்கள், இப்போது உடல் மட்டுமல்லாமல் மனம் பற்றிய பாதுகாப்பையும் பேசுகிறீர்கள். இதன் வழியாக உறுதியான தன்மை உருவாகிறது. பாதுகாப்பு பற்றி தவறாக புரிந்துகொண்டால், அதைப்

நாம் வாழும் வாழ்க்கையில் பாதுகாப்பு கிடையாது - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி நாம் உண்மையைத் தேடவில்லை; ஆறுதலைத் தேடுகிறோம் மனம், இதயம் ஆகியவை பற்றி ஆராயத் தொடங்கினால் புதிய சிந்தனை, வாழ்க்கைத் தெளிவு, உணர்வு நிலை ஆகியவற்றைக் கண்டறியலாம். வாழ்க்கையை இந்த வகையில் மாறுபட்டதாக்கி அமைத்துக்கொள்ளலாம்.   நீங்கள் உண்மையில் உங்களுக்கு   மனதில் திருப்தி ஏற்படுத்தும் விளக்கங்களை தேடுகிறீர்கள். உங்களில் பெரும்பாலானோர் உண்மையைப் பற்றிய வரையறையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வரையறையைக் கண்டுபிடித்தவர்கள் தங்கள் வாழ்வை அழியாத பெருஞ்ஜோதியில் ஐக்கியமாக்கிக் கொள்ள முடியும். உங்கள் தேடுதலின் லட்சியம் உண்மைதான் என்றால்,   நீங்கள் தேடிக்கொண்டிருப்பது உண்மையல்ல. ஆறுதல் அல்லது சொகுசான வேறு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் தினசரி வாழ்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள், முரண்பாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைக்கிறீர்கள். உண்மையைத் தேடுவதில் உள்ள கஷ்டங்களைக் கடந்து பார்த்தால், நாம் பிறந்ததே உண்மையைத் தேடி அறிவதற்குத்தான் என புரிந்துகொள்ள முடியும்.   உண்மையைத் தேடுவதில் உள்ள சிரமங்கள், மனநிலையைக் குலைத்து தேடலை

செய்தி ஆதாரங்களை பாதுகாப்பது முக்கியம்

படம்
  பத்திரிகையாளர்களுக்கு செய்திகளைக் கொடுக்கும் ஆதார ஆட்கள் பல்வேறு துறைகளிலும் இருப்பார்கள். இவர்கள், பத்திரிகையாளர்கள் எழுதிக் கொடுக்கும் செய்தியில் ஆதிக்கம் செலுத்துவார்கள். செய்தி ஆதார மனிதர்கள் இல்லையென்றால் துறைசார்ந்த பல்வேறு முக்கிய தகவல்களை நாளிதழ்களில் எழுதுவது சாத்தியப்படாது. செய்திகளைத் தரும் ஆதாரங்களிடம் தொழில்முறையாக நேர்மையாக, மரியாதையாக நடந்துகொண்டு வருவது முக்கியம். செய்தி ஆதாரங்களிடம் மிகவும் நெருங்கிப் பழகுவது, செய்தியைப் பார்க்கும் கோணத்தை மாற்றிவிடும். எனவே, சற்று தள்ளி இருந்து செய்திகளைப் பெறுவது நல்லது. இந்த முறையில் செய்திகளை பல்வேறு கோணத்தில் பார்வையில் பார்த்து எழுத முடியும். பத்திரிகையாளர், ஆதார மனிதர்கள் என இருதரப்பிலும் நம்பிக்கை உருவாவது முக்கியம். அப்போதுதான் செய்திகளை எளிதாக பெறமுடியும். செய்தி ஆதார மனிதர்களின் பெயர்களை, பத்திரிகையாளர் எந்த சூழ்நிலையிலும் வெளியிடக்கூடாது. வெளியிடும் செய்தி காரணமாக பத்திரிகையாளர் அரசு அதிகாரத்தால் மிரட்டப்படும்போது கூட செய்தி ஆதார மனிதர்களை பாதுகாக்க வேண்டும். செய்தி ஆதார மனிதர்கள் கொடுத்த ஆதாரங்கள், ஆவணங்கள் தவறானவை எ

இந்திய நாயினங்கள் பற்றி கவனிக்க கோரும் முக்கியமான நூல்! - இந்திய நாயினங்கள் - தியடோர் பாஸ்கரன்

படம்
  இந்திய  நாயினங்கள்  தியடோர் பாஸ்கரன்   காலச்சுவடு  மின்னூல்  இந்தியாவில்  உருவான 25  நாயினங்களை வரிசைக்கிரமமாக விவரித்து அதன் வரலாற்றைப் பேசும் நூல் இது. கூடுதலாக நாய்களால் ஏற்படும் ரேபீஸ் நோய்,அதற்கு செலவாகும்தொகை, தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் தலையிடும் விலங்கு நல சங்கங்களின் விவகாரம், பாதிக்கப்படும் மக்கள் என இறுதிப் பக்கங்களில் பேசியுள்ளதும் முக்கியமான விவகாரம்தான்.  கோம்பை,ராஜபாளையம், பஷ்மி, சடை  நாய்கள், இமாலயன் மஸ்டிஃப் என பல்வேறு  நாய்களின் உடல் அமைப்பு, தனித்திறன்களைப்  பற்றி நூலில் விவரித்துள்ளார் ஆசிரியர். ஏறத்தாழ நாய்களைப் பற்றிய ஆய்வு நூலாக உருவாகியுள்ளது. நாய் என்ற பெயர் வந்தது எப்படி, அதன் பொருள் என்ன, இலக்கியத்தில் நாயை குறிப்பிட்டுள்ளனரா என்று தொடங்கப்பட்டிருப்பது நூலின் நோக்கத்தை  தெளிவுபடுத்துகிறது. பல்வேறு நாய்களின் புகைப்படங்களை பார்த்து அடையாளம் கொள்ள முடியும். அப்படி பார்க்க முடியாத நாய்களை ஓவியமாக நூலில்  காட்டியுள்ளார் ஆசிரியர்.  இந்திய நாயினங்களைப்பற்றி கள ஆய்வுகளை இந்திய அரசு நிறுத்தியதை வருத்தத்தோடு பதிவு செய்யும் ஆசிரியர், இந்திய  நாய் சங்கம் நாய்களை க

இந்தியாவின் பசுமைப்பரப்பை காக்க இந்திராகாந்தி எடுத்த நடவடிக்கைகளும், செயல்பாடுகளும்! - இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

படம்
              இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு முடவன் குட்டி முகமது காலச்சுவடு மூல ஆசிரியர் - ஜெய்ராம் ரமேஷ் நூல் மொத்தம் 500 பக்கங்களைக் கொண்டது. அத்தனையிலும் நாம் அறிவது முழுக்க எதிர்மறையாக கூறப்படும் அரசியல் தலைவரைப் பற்றி.. இந்திரா பிரியதர்ஷினி எனும் நேருவின் மகளைப் பற்றியதுதான் நூல். நூலில் அவர் அதிகாரத்தில் இருந்தபோதும், இல்லாதபோதும் எப்படி சூழலியல் பற்றி கவனம் கொண்டிருந்தார், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு பிடித்த விஷயங்களை செய்யாமல், மாநில முதல்வர்களுக்கு இயற்கை சூழலியல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வைத்தது பற்றி நூலில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எமர்ஜென்சி நிலையை உருவாக்கியவர் என்று மட்டுமே இந்திராவை ஊடகங்கள் அடையாளப்படுத்தி அவரது பிற செயல்களை மறைத்துவிட்டனர். ஜெய்ராம் ரமேஷ் ஆங்கிலத்தில் எழுதிய இந்திரா பற்றிய இந்த நூல் சூழலியல் பல்வே்று ஆபத்துக்குள்ளாகி வரும் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. நூலில் இந்திரா எழுதிய பல்வேறு கடிதங்கள் இயற்கை அமைப்புகள், பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம், ஆவணக் காப்பகங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு

கனடாவில் சூழல் விருது பெற்ற இரண்டு சூழலியலாளர்கள்!

படம்
  ஏமி லின் ஹெய்ன் விருது பெற்ற சூழலியலாளர்கள்! மேரி அசெல்ஸ்டின் ஸ்கொம்பெர்க், கனடா 35 ஆண்டுகளாக கிராம மக்களின் இனக்குழு சார்ந்து செயல்பட்டுவருகிறார். டஃப்ரின் மார்ஸ் அமைப்பைத் தோற்றுவித்த உறுப்பினர்கள் ஒருவர். இயற்கைச்சூழலைக் காப்பதற்கான பல்வேறு பிரசாரங்கள், செயல்பாடுகளை செய்து வருகிறார். இவருக்கு, ஸ்கோம்பெர்க் கிராமத்திலுள்ள பள்ளிக்குழந்தைகள் வைத்த செல்லப்பெயர், தவளை அத்தை. யார்க் பல்கலைக்கழகத்தில் புவியியல் படிப்பில் முதுகலைப்பட்டம் பெற்றவர் மேரி அசெல்ஸ்டின். நடப்பு ஆண்டில் மேரி  செய்த பல்வேறு சூழல் பணிகளை பாராட்டி,  கனடா காட்டுயிர் கூட்டமைப்பு (CWF) சூழல் பணிகளுக்காக ரோலண்ட் மிச்னர் கன்சர்வேஷன் விருது (Roland Michner Conservation Award) வழங்கியுள்ளது.  ”இயற்கை மீதான நேசம் பற்றிய சிந்தனைகளை நான் பிறருக்கு பகிர்ந்து வருகிறேன். இயற்கை  வழங்கிய  ஆச்சரியமான அனுபவங்களே அதைப் பாதுகாக்கும் ஊக்கத்தை பிறருக்கு தரத்தூண்டியது ” ஏமி லின் ஹெய்ன் கல்காரி, கனடா தாவரங்களை ஓவியங்களாக வரையும் ஓவியக்கலைஞர். வரைவதற்கான இங்கையும் இயற்கையான பொருட்களிலிருந்து  தயாரித்து பயன்படுத்துகிறார். எ பின்ட் சைஸ்டு இ

ஆய்வகத்தில் பாதுகாப்பாக ஆய்வுகளை செய்வதற்கான முன்னெச்சரிக்கை முறை!

படம்
  ஆய்வகத்தில் பாதுகாப்பு! மாணவர்கள் ஆய்வகத்தில் அறிவியல் சோதனைகளை செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்க உதவும் முன்னெச்சரிக்கை குறிப்புகள்தான் இவை.  பாதுகாப்பு கண்ணாடிகள் (Safety Googles) திரவ வடிவில் உள்ள  வேதிப்பொருட்களைக் கையாளும்போது, அவை குழாய்களிலிருந்து வெளியே சிதறும் வாய்ப்புகள் அதிகம். இச்சூழலில், மாணவர் பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்திருப்பது அவசியம்.  பன்சன் பர்னர்ஸ் (Bunsen burners) பன்சன் பர்னரைப் பயன்படுத்தும்போது, அருகில் நிறைய பொருட்களை வைக்கக் கூடாது. நெருப்பு சுடரில், மாணவரின்  தலைமுடி படாமல் கவனித்துக் கொள்வது முக்கியம். தீச்சுடரில் எத்தனால், ஆல்கஹாலை எப்போதும் சூடு செய்யக்கூடாது.  சோதனைக்குழாய் (Test tube) சோதனைக் குழாய்களை சூடுபடுத்தும்போது, அவற்றை கிளாம்ப் கருவி (Clamp) கொண்டு பிடிக்கவேண்டும். மேலும் சூடு தாங்கும் கையுறைகளையும் பயன்படுத்தலாம். கண்ணாடி குடுவைகளை எப்போதும் மேசையின் மையப்பகுதியில் வைத்திருப்பது அவசியம்.  கெமிக்கல் ஃப்யூம் ஹூட் (Chemical Fume Hood) ஆபத்தான வேதிப்பொருட்களை சோதனைக் குழாய்களில் வைத்து சோதிக்கும்போது, எழும் புகை வெளியே செல்ல கெமிக்கல் ஃப்யூம்

பிட்ஸ் - தேனீக்கள்

படம்
  பூமியில் 20 ஆயிரம் தேனீ இனங்கள் உள்ளன. அன்டார்டிகாவைத் தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் தேனீக்கள் வாழ்கின்றன. 2 மி.மீ. நீளத்திற்கும் குறைவான தேனீக்களும் உண்டு. இதில் பெரியது, 4 செ.மீ. நீளம் கொண்ட வாலஸ் ஜெயன்ட் பீ.  தேனீக்களில் சில இனங்களைத் தவிர பிற தேனீ இனங்கள் (Honey bees, bumble bees, stingless bees) காலனியாக ஒன்றாக இணைந்து வாழ்கின்றன.  5 கி.மீ. தூரத்திற்கும் அதிக தொலைவுக்கு பயணித்துச் சென்று தேனைச் சேகரித்து கூடு திரும்புகின்றன.  அனைத்து தேனீக்களும் தேனை சேகரித்து வைப்பதில்லை. 7 தேனீ இனங்களே தேனை சேகரித்து வைக்கின்றன.  9 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் தேனீக்களிடமிருந்து தேனைப் பெற்று வருகின்றனர். உலகில் நடைபெறும் 75 சதவீத மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களே முக்கியக் காரணம்.  National geographic kids Mar.2022

முக்கியமான சூழல் வலைத்தளங்கள்!

படம்
  சூழல் வலைத்தளங்கள்! www.afforestt.com 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம். பெங்களூரு மற்றும் நியூ டில்லியில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 12. இயற்கையான சூழலை மீட்டெடுக்க மண்ணுக்கு உகந்த மரக்கன்றுகளை நட்டு பசுமை பரப்பை உருவாக்கிவருகின்றனர். இதன் நிறுவனர் , சுபேந்து ஷர்மா. Greenyatra.org இந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில்மரக்கன்றுகளை நடும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மியாவகி காடுகளை, நிலப்பரப்பிற்கான ஆய்வுகளைசெய்து மரக்கன்றுகளை, தாவரங்களை நட்டு பராமரிக்கிறது. இதன் நிறுவனர், பிரதீப் திரிபாதி.  Careearthtrust.org 2000ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பு. பள்ளிக்கரணை சதுப்புநிலம், நன்மங்கலம் காடுகளை பாதுகாத்து மேம்படுத்தியதில் முக்கிய பங்காற்றியுள்ளது.  இப்பணிக்காக , மத்திய அரசின் சூழல், வனத்துறை அமைச்சகத்தில் இந்திராகாந்தி பார்யவரனன் விருது (The Indira Gandhi Paryavaran Puraskar) பெற்றுள்ளது. கேர்எர்த்ட்ரஸ்ட் அமைப்பு, பல்லுயிர்த்தன்மை கொண்ட காடுகளை வளர்ப்பது பற்றிய கொள்கைகளை உருவாக்கி மத்திய, மாநில அரசுகளுக்கு

வெப்பநிலையால் பாதிப்புக்கு உள்ளாகும் பவளப்பாறை!

படம்
வெப்பநிலையைத் தாங்கும் பவளப்பாறை! உலகில் உள்ள உயிரினங்களில் மூன்றில் ஒருபகுதி, பவளப் பாறைகளை வாழிடமாக கொண்டுள்ளன. 2100ஆம் ஆண்டு உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் என உயரும்போது பவளப்பாறைகள் முழுவதுமாக அழிந்துவிடும் வாய்ப்புள்ளது. இதிலிருந்து பவளப் பாறைகளை காக்கும் முயற்சிதான் சூப்பர் பவளப் பாறைகளை (super coral)வளர்ப்பது.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் மெடலின் வான் ஆப்பென், பவளப்பாறை வளர்ப்பு  முயற்சியை, சில ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டார். அப்போது இவரின் முயற்சிகளுக்கு உயிரியலாளர் ரூத் கேட்ஸ் துணையாக இருந்தார். 2018இல் ரூத் காலமாகிவிட, மெடலின் தனது ஐடியாவை  பிற ஆராய்ச்சிக் குழுவினரோடு பகிர்ந்துகொண்டு இயங்கி வருகிறார். பவளப்பாறைகளில் சிலவற்றை எடுத்து அதில் மரபணு மாற்றம் செய்கிறார்கள்.  மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சில பவளப்பாறை இனங்களைத் தேர்ந்தெடுத்து அதனை வெப்பநிலையை தாங்கிக்கொள்ளும்படி மாறுதல்களை செய்ய முயன்று வருகிறார்கள். இந்த வகையில் சில இனங்களை கலப்பின முறையில் உருவாக்குகிறார்கள். ”பத்தாண்டுகளுக்கு மேல் ஆராய்ச்சி செய்ய நமக்கு நேரம் கிடையாது என்பதால், பவளப்பாறைகளை வேகமாக உருவ

இயற்கைச் சூழல் என்பது அனைத்து உயிரினங்களுக்குமானது! - நிதின்சேகர்

படம்
  நேர்காணல் நிதின் சேகர் இயற்கை செயல்பாட்டாளர், எழுத்தாளர் காட்டுக்குள் நீங்கள் தங்கியிருந்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு பிடித்தமான நினைவுகள் ஏதேனும் இருக்கிறதா? நாங்கள் ஒரு யானையைப் பிடித்து கட்டி வைத்திருந்தோம். அதன் பெயர், திகாம்பர். ஒருநாள் நான் அதன் நின்றபடி நோட்டில் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென எனது நெஞ்சில் ஏதோ ஒன்று வேகமாக வந்து பட்டது. கீழே விழுந்த பொருளைப் பார்த்தேன். அப்போதுதான் பிடுங்கி எறியப்பட்ட செடி.  திகாம்பர் தான் சலிப்பு தாங்காமல் என்மேல் செடியை எறிந்துள்ளது என புரிந்துகொண்டேன். திரும்ப அதே செடியை அதன் காலடியில் போட்டேன். திரும்ப திகாம்பர் என் மீது செடியை தும்பிக்கையால் பற்றி என் மீது எறிந்தது. ஆம் இப்போது நாங்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை சில நிமிடங்களுக்கு பிறகே அறிந்தேன். யானையை சுதந்திரமாக வைத்திருக்க நினைக்கிறோம். அதற்காக சூழலியலாளர்களாக நாங்கள் நிறைய உழைக்கிறோம்.  காட்டின் நடுவே சிறு குடிலைக் கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்கிறீர்கள். அதுவும் அங்கு வாழும் மக்களின் மொழியும் கூட உங்களுக்குத் தெரியாது அல்லவா? மேற்கு வங்கத்தில

நுண்ணுயிரிகளிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் ஆன்டிபயாடிக்!

படம்
  நோய்களின் அரண் - முறிமருந்து(Antibiotic) நமது இயற்கைச்சூழலில் ஏராளமான நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. நமது உடலிலும் கூட வாழ்கின்றன. ஒருவருக்கு நிம்மோனியா எனும் காய்ச்சல் ஏற்பட பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகளே முக்கியக் காரணம். நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளை தடுக்க முதலில் மருத்துவர்கள் தடுமாறினர். பிறகுதான், நோய்க்கு காரணமான நுண்ணுயிரிகளை தடுக்கும்  வேறுவகை நுண்ணுயிரிகள் உண்டு என்பதை கண்டறிந்தனர். இப்படி சிலவகை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிடமிருந்து பெறும் வேதிப்பொருட்களை ஆன்டிபயாடிக்காக (முறி மருந்து) பயன்படுத்தினர்.  இந்த கண்டுபிடிப்பு மூலம் தீர்க்கவே முடியாது என கருதப்பட்ட பாக்டீரியா தொடர்பான நோய்களை எளிதாக  குணமாக்க முடிந்தது. தற்போது தயாரிக்கப்படும் முறிமருந்துகளுக்கு, ஆதாரமாக ஸ்ட்ரெப்டோமைசிஸ் (Streptomyces) எனும் பாக்டீரியாக்களை பயன்படுத்துகின்றனர். இந்த பாக்டீரியா, பெரும் காலனியாக வளர்ந்து பெருகுகிறது.  பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த முறிமருந்துகளை நெடுங்காலமாக மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, நோய் உண்டாக்கும் பாக்டீரியங்கள் மெல்ல வலுப்பெற்று வருகின்றன. ஸ்டேபிலோகாக்

சட்டவிரோத வேட்டையைத் தடுக்க உதவும் மின் வாகனங்கள்!

படம்
  விலங்கு வேட்டையைத் தடுக்கும் மின்வாகனங்கள்! மொசாம்பிக் நாட்டின் தேசியப் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. 2021ஆம் ஆண்டுவரையில், இங்கு நடைபெற்ற சட்டவிரோத வேட்டைகளின் எண்ணிக்கை அதிகம்.  வனக்காவலர்கள் குழு, வேட்டைக் குழுக்களைத் தடுக்க இரவில் ரோந்து சென்றாலும் கூட நிலைமை மேம்படவில்லை.  இதற்கு முக்கியக் காரணம், வனக்காவலர்களின் பைக்குகள் தான்.  அவை இயங்கும்போது எழுப்பும் சத்தம் அதிகம்.  இதன் சத்தத்தை வைத்து வனக்காவலர்களின் நடமாட்டத்தை, வேட்டை கும்பல் எளிதாக அடையாளம் கண்டுகொண்டது. உடனே, தேசிய பூங்காவில் உள்ள பல்வேறு சதுப்புநிலங்கள், புதர்ப்பகுதிகள் ஆகியவற்றில் மறைந்து தப்பித்து வந்தனர்.  சாமர்த்தியமாக வன விலங்குக ளை வேட்டையாட, வேட்டை நாய்களையும் பயன்படுத்தினர்.  சத்தமின்றி பாதுகாப்பு ஆனால் இன்று வனக்காவலர்கள், சட்டவிரோத வேட்டையை வெற்றிகரமாக தடுத்து வருகிறார்கள்.  இதற்கு அவர்கள் கையாளும் இ பைக்தான் காரணம். ஸ்வீடனின் வாகன தயாரிப்பு நிறுவனம் கேக் (CAKE), வனக் காவலர்களுக்கு இ பைக்குகளை வழங்கியுள்ளது. இதன் காரணமாக, அதிக ஒலி எழுப்பாமல் வேட்டைக்காரர்களை பிடிக்க முடிகிறது. வன விலங்

காடுகளின் பல்லுயிர்த்தன்மையை பாதுகாக்கும் பழங்குடிகள்!

படம்
  பல்லுயிர்த்தன்மைக்கு பாதுகாப்பு!  உலகில் உள்ள பல்லுயிர்த்தன்மை கொண்ட காடுகளை அரசுகளும் தன்னார்வ அமைப்புகளும், பழங்குடிகளும் பாதுகாத்து வருகின்றனர். ஆர்க்டிக் முதல் தெற்கு பசிபிக் கடல் வரையிலான 80 சதவீத காடுகள் பாதுகாக்கப்படும் நிலையில்தான் உள்ளன.  “ 17 சதவீத காடுகளின் பரப்பை சொந்தமாக கொண்டு அதனை பாதுகாத்து வருபவர்கள் பூர்வகுடியினரான பழங்குடி மக்கள்தான். இவர்கள் அரசுகளை விட சிறப்பாக காடுகளை பாதுகாக்கின்றனர் ” என்றார் உலக காட்டுயிர் நிதியத்தின் முன்னாள் அறிவியலாளரான எரிக் டைனர்ஸ்டெய்ன்.  உலக நாடுகளிலுள்ள அரசுகள், பழங்குடிகள் வாழும் நிலத்தை அவர்களுக்கானதாக கருதுவதில்லை. அப்படி அரசு கருதும்போது அதிலுள்ள பல்லுயிர்த்தன்மையை காப்பது எளிதான பணியாக மாறுகிறது. தொலைநோக்கில் பார்க்கும்போது மலிவான வகையில் அதிக விளைவுகளை, தாக்கத்தை ஏற்படுத்தும் செயல் இது. தொடக்ககால சூழல் பாதுகாப்பு மாநாடுகளில் பழங்குடிகளை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் இன்று நிலை மாறி வருகிறது.  கடந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஐயுசிஎன் உலக பாதுகாப்பு மாநாட்டில், பழங்குடி மக்கள் முதன்முறையாக பங்கேற்றனர். 2010 முதல் 2020ஆம் ஆண்டு

காடுகள் சட்டத்தில் மாறும் விதிகள்!

படம்
  வனவிலங்கு மேலாண்மையில் புதிய சீர்திருத்தம்! இந்தியாவில் வன விலங்குகளையும், அவை வாழும் காடுகளையும் பாதுகாக்க வனப்பாதுகாப்பு சட்டம் உள்ளது. 1972ஆம் ஆண்டு இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. தற்போதுவரை இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.   2021ஆம் ஆண்டு மத்திய அரசு, வனப் பாதுகாப்பு சட்டத்தில் சில மாறுதல்களை செய்துள்ளது. இதில், விளைநிலங்களுக்குள் வரும் விலங்குகளை வேட்டையாடுவது குற்றமல்ல என்ற ஷரத்து இடம்பெற்றிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய சட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.  மேற்குலக நாடுகளில் விலங்குகளை வேட்டையாடுவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிமங்களை அரசு வழங்குவது, வருவாய்க்கான முக்கிய வழி. “பாதுகாக்கப்பட்ட பகுதி, தேசியப் பூங்கா ஆகிய பகுதிகளைத் தவிர்த்து, பிற இடங்களுக்கு வரும் விலங்குகளை வேட்டையாடுவது  விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்க உதவும்” என ட்ரூ கன்சர்வேசன் அலையன்ஸ்(TCA) என்ற அமைப்பு கூறியுள்ளது. மேலும், வனப்பாதுகாப்பு சட்டம் என்பதை வன ஆதாரங்கள் மேல

அணுக்கழிவுகளை பாதுகாக்க பின்லாந்து செய்யும் முதல் முயற்சி!

படம்
  அணுக்கழிவுகளுக்கான நிரந்தர பாதுகாப்பிடம்! ஃபின்லாந்தின் மேற்கு கடற்புரத்தில் அமைந்துள்ளது, ஒல்கிலூடோ தீவு (Olkiluoto). இங்குதான் உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிரந்தர அணு உலைக் கழிவுகளுக்கான பாதுகாப்பிடத்தை உருவாக்கி வருகின்றனர்.   இங்குள்ள அணுக்கழிவு செயல்பாட்டு அறைகள், கதிர்வீச்சைத் தடுக்க  தடிமனான கான்க்ரீட் சுவர்களால் கட்டப்படுகின்றன. பாதுகாக்கவேண்டிய யுரேனியக் கழிவு, உயரமான செம்பு பெட்டகத்தில் அடைக்கப்படுகிறது. பிறகு, பெட்டகம் பென்டோனைட் களிமண்ணால் (Bentonite) உறுதியாக அடைக்கப்படுகிறது.  பின்னர், பெட்டகம் கடல்மட்டத்திலிருந்து 420 கி.மீ. கீழே பாறைகள் சூழ்ந்த இடத்தில்தான் பாதுகாப்பாக வைக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அணுக்கழிவுகளைப் பாதுகாப்பதற்கென பூமியின் ஆழத்தில்  430 சுரங்கங்களை உருவாக்கி வருகின்றனர். பல்வேறு நாடுகளிலும் அணு உலை மின்சார உற்பத்தியை மெல்ல குறைத்து வருகின்றனர். காரணம், அணுஉலை கழிவுகளால், சூழலுக்கு ஏற்படுத்தும் மாசுபாடுகளே காரணம். ஃபின்லாந்து, கார்பன் வெளியீடு இல்லாத மின்சாரத்தை தயாரிப்பதாக, ஐரோப்பிய யூனியனில் கூறியுள்ளது. நான்கு ரியாக்டர்கள் ஒல்கிலூடோ  தீ

காட்டுத்தீயிலிருந்து விலங்குகளைக் காப்பாற்ற ஹேபிடேட் பாட்ஸ் உதவும்! அலெக்ஸாண்ட்ரா கார்தே

படம்
  அலெக்ஸாண்ட்ரா கார்தெ காட்டுயிர் ஆராய்ச்சியாளர் 2019 - 2020 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பாதிப்பு ஏற்பட்டது. இவை போன்ற நிகழ்ச்சிகளிலிருந்து சிறு விலங்குகளை பாதுகாக்க ஹேபிடேட் பாட்ஸ் என்ற சிறு கூடார அமைப்பை மெக்குவாரி பல்கலைக்கழக காட்டுயிர் ஆராய்ச்சியாளர் அலெக்ஸாண்ட்ரா கார்தெ உருவாக்கியுள்ளார்.  ஆராய்ச்சியில் ஆர்வம் வந்தது எப்படி? இயற்கை உலகம் பற்றிய கேள்விகளுக்கு அறிவியலில் பதிலைத் தேடி அறிவது எனக்குப் பிடித்திருந்தது. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது புதுமைத்திறன், பிரெஞ்சு மொழி, உளவியல் ஆகிய பாடங்களை எடுத்தேன். இது தவறான தொடக்கம் தான். பிறகு, பேராசிரியர்களின் உரைகளால் சூழலியல், முதுகெலும்பு உயிரினங்களைப் பற்றி படிக்கத் தொடங்கினேன்.  சிறு விலங்குகளுக்கான கூடார அமைப்பை எப்படி வடிவமைத்தீர்கள்? ஹேபிடட் பாட்ஸ் எனும் இந்த கூடார அமைப்பை உருவாக்க ரீப் டிசைன் லேபைச் சேர்ந்த அறிவியலாளர் அலெக்ஸ் கோட் உதவினார். இதற்கான முதல் கூடார அமைப்பை, கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்டோம். எங்களது கண்டுபிடிப்பை ஆஸ்திரேலியாவில் உள்ள காட்டுயிர்  பாதுகாப்பு அமைப்பு, நியூ சௌத்வேல்ஸ் தேசிய பூங்கா ஆகிய அ

இருவாட்சியை பாதுகாக்க காவலர்களான பழங்குடி மக்கள் - அபராஜிதா தத்தாவின் சூழல் பாதுகாப்பு முயற்சி!

படம்
  இருவாட்சியைப் பாதுகாக்கும் பழங்குடிகள்! அருணாசலப் பிரதேசத்தில், நைஷி பழங்குடிகள் (Nyishi tribe)வாழ்கிறார்கள். இவர்கள் அங்குள்ள காட்டில் தென்படும் பல்வேறு பறவைகளை வேட்டையாடி வந்தனர். அதில், இருவாட்சி பறவையும் ஒன்று. தற்போது, பழங்குடிகள் பறவைகளைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு பெற்றுவிட்டனர். எனவே, அவற்றைப்  பாதுகாக்கத் தொடங்கியுள்ளனர்.  தி ஹார்ன்பில் நெஸ்ட் அடாப்டேஷன் புரோகிராம் ஆப் அருணாசலப் பிரதேசம் எனும் திட்டம் (Hornbill Nest Adoption Program (HNAP)), 10ஆவது ஆண்டாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  பக்கே (Pakke) புலிகள் காப்பக பகுதியில் இருவாட்சி பாதுகாப்புத் திட்டத்தை பத்து பழங்குடி மக்கள் செயல்படுத்தி வருகிறார்கள். காடுகளில் விதைகளை பரப்பும் வேலையை இருவாட்சி பறவைகளே செய்கின்றன. உலகம் முழுக்க இருவாட்சி பறவைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்துவருகிறது. இதற்கு அதன் வாழிடம் அழிப்பு, வேட்டையாடப்படுவது ஆகியவை முக்கிய காரணங்கள். பக்கே புலிகள் காப்பகத்தில் கிரேட் ஹார்ன்பில் (The great hornbill,), ரூபோஸ் நெக்ட் ஹார்ன்பில் (Rufous-necked hornbill), ரேத்ட் ஹார்ன்பில் (Wreathed hornbill ), ஓரியன

வனவிலங்குகளை பாதுகாக்க உதவும் நாய்!

படம்
  வன விலங்குகளை பாதுகாக்க உதவும் நாய்! மனிதர்களோடு வாழும் முக்கியமான உயிரினங்களில் நாயும் ஒன்று. ஆட்டு மந்தைகளுக்கு பாதுகாப்பு, வீடுகளுக்கு காவல், வேட்டையாடுவது என நாயின் பங்களிப்பு மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானது. தற்போது காட்டுயிர் வாழ்க்கையைப் பாதுகாப்பதிலும் நாய் உதவிவருகிறது.  சட்டவிரோத கடத்தல் 2017ஆம் ஆண்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சட்டவிரோத வேட்டையாடல் அதிகரித்து வந்தது. காட்டுயிர் பாதுகாப்புத்துறை, பென்னி என்ற லாப்ரடார் இன நாயை, கடத்தலைத் தடுக்க பணியமர்த்தினர். அப்போது, யானைத் தந்தம், சுறாமீன் துடுப்பு, காண்டாமிருக கொம்பு ஆகியவற்றை கடத்தல்காரர்கள் கடத்தி வந்தனர்.  மோப்பநாய் பென்னி, இவற்றை வேகமாக கண்டுபிடித்து தடுத்தது. ஆப்பிரிக்காவிலும்  சட்டவிரோத கடத்தலைத் தடுக்க மோப்பநாய்களையே பயன்படுத்துகின்றனர்.   கழுகுகளுக்கு விஷம் 2003ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில்,  33 கழுகுகள் (Griffon,Cinereous,Royal kites) ஆட்டிறைச்சியில் வைக்கப்பட்ட விஷத்திற்கு பலியாயின. விஷம், காட்டுநாய்களைக் கொல்ல வைக்கப்பட்டது.  ஐரோப்பிய நாடுகளில் ஓநாய், கரடிகளைக் கொல்ல இறைச்சியில் விஷம் வைக்கப