'மியான்மரில் ரோஹிங்கயாக்களுக்கு நடந்தது மாபெரும் அநீதி'
முத்தாரம் நேர்காணல் ' மியான்மரில் ரோஹிங்கயாக்களுக்கு நடந்தது மாபெரும் அநீதி ' பேராசிரியர் அஸீம் இப்ராஹிம் தமிழில் : ச . அன்பரசு மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லீம் மக்கள் ராணுவத்தினரால் தாக்கப்படும் நிகழ்வால் அவர்கள் இடம்பெயர்ந்து வங்கதேசம் , இந்தியா இடம்பெயர்வது அதிகரித்துள்ளது . இதில் இந்தியா அகதி மக்களை ஏற்க மறுப்பது , ரோஹிங்கயா சிறுபான்மையினரின் வாழ்வு உள்ளிட்டவற்றைப் பற்றி அமெரிக்க ராணுவக்கல்லூரியில் புள்ளியில் துறை பேராசிரியராக பணியாற்றும் அஸீம் இப்ராஹிமிடம் இது குறித்து பேசினோம் . ரோஹிங்கயா விஷயத்தில் ஆங் சன் சூகி எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் ? சூகி அதிக நாட்கள் அமைதி பேண முடியாது . மிலிட்டரி , புத்த மதத்தினர் என இருவருக்கும் எதிரியாக அவர் விரும்பவில்லை . எனவே மௌனம் காத்துநிற்கிறார் . இருதரப்பு வன்முறைக்கும் அவரே பொறுப்பேற்கும் அவலம் ஏற்பட்டுவிட்டது துரதிர்ஷ்டவசமான நிலை . சூகியின் ஆதரவாளர்களே ரோஹிங்கயா பிரச்னையில் முடிவெடுக்காததை கோழைத்தனமாகவும் அநீதியாக நடவடிக்கையாக கருதுகிறார்கள் . சூகி ரோஹிங்கயா விவகாரத்தால் தனது நோபல் பரிசை திருப்பி