இடுகைகள்

விற்பனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹால்மார்க் கட்டாயமாக்கப்படுகிறதா?

படம்
                  ஹால்மார்க் சட்டங்களால் பாதிப்பு உண்டா ? ஜூன் 16 முதல் தங்க நகைகள் , அதில் செய்யப்படும் கலை பொருட்களுக்கு ஹால்மார்க் அங்கீகாரம் அவசியம் என மத்திய அரசு கூறியுள்ளது . இதுதொடர்பாக ஹால்மார்க் சட்டத்தையும் கடந்த ஆண்டே உருவாக்கியுள்ளது . இதுபற்றி பார்ப்போம் . ப்ரியூ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ஸ் அங்கீகரித்த மையங்கள் மூலம் ஹால்மார்க் சா்ன்றிதழ்களை நகை தயாரிப்பாளர்கள் பெறலாம் . தங்க நகையின் தரம் இவ்வளவுதான் என்று மக்களிடம் கூறும் தரத்திற்கான சான்றிதழ்தான் ஹால்மார்க் ்என்பது . 22 கே 915 என்று முக்கோண வடிவம் பொறிக்கப்பட்டிருப்பதுதான் ஹால்மார்க் அங்கீகாரம் . இதில் நான்கு வகை உண்டு . தங்கம் எந்தளவு தூய்மையாக உள்ளது என்பதையு்ம் ஹால்மார்க் மூலம் அறியலாம் . 14, 18, 20,22 என பல்வேறு கேரட் தங்கங்களுக்கு ஹால்மார்க் அங்கீகாரங்கள் வழங்கப்படுகின்றன . குறிப்பிட்ட நகை ஒன்றுக்கு ஹால்மார்க் சான்றிதழ் வழங்க அரசுக்கு ரூ . 35 பிளஸ் ஜிஎஸ்டி வரியோடு வழங்கவேண்டும் ஒருவரிடம் ஹால்மார்க் அங்கீகாரம் இல்லாத தங்கம் இருந்தாலும் கூட அதனை தங்க நகைக்கடையில் விற்கலாம் . அவர்கள் அதனை உருக

மார்க்கெட்டிங்கில் மாஸ் மகராஜா ஆவது எப்படி? - மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள்- சதீஸ் கிருஷ்ணமூர்த்தி

படம்
      sample/pixabay           மார்க்கெட்டிங் பஞ்சமாபாதகங்கள் சதீஸ் கிருஷ்ணமூர்த்தி கிழக்கு ஒரு பொருளை எப்படி மார்க்கெட்டிங் செய்வது , அதனை விற்பனை செய்வது என இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நூலாசிரியர் ஏராளமான உள்நாட்டு எடுத்துக்காட்டுகளை வைத்து விளக்கியுள்ளார் . மார்க்கெட்டிங்கின் அடிப்படை என்ன , அதில் பிரபல நிறுவனங்களாக இருந்தாலும் செய்த தவறுகள் என்ன , அதனை திருத்திக்கொள்வது எப்படி என விளக்கியுள்ளார் . ஒருவகையில் மார்க்கெட்டிங்கை பற்றி தெரியாதவர்கள் இந்த நூலைப்படித்தால் கூட அதனை எப்படி செய்வது என அடிப்படையைக் கற்றுக்கொள்ளலாம் . பெரிதாக அவர்கள் சாதிப்பார்களோ இல்லையோ , இதில் சதீஸ் கூறியுள்ள தவறுகளை நிச்சயம் செய்யமாட்டார்கள் . அந்தளவு நூலில் ஏராளமான நம் தினசரி வாழ்க்கையில் பயன்படும் பல்வேறு பொருட்களை உதாரணம் காட்டி விளக்கியுள்ளார் . நூலை வாசிக்க உதவுவது சதீஸ் பயன்படுத்தியுள்ள மொழிதான் . நம் தோள் மீது கைபோட்டு நண்பர் ஒருவர் மார்க்கெட்டிங் பற்றி சொல்லிக்கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு மொழியுடன் நூல் உள்ளது . பிராண்டின் செக்மெண்ட் , டார

கடிகாரங்களை வடிவமைத்த முன்னோடி அறிவியலாளர்கள்! - மாற்றங்கள் நடந்தது இப்படித்தான்

படம்
            கடிகாரங்களை வடிவமைத்த முன்னோடிகள் பீட்டர் ஹென்லெய்ன் 1480-1542 இவர்தான் முதல் கடிகாரத்தை வடிவமைத்தவர் . அது பித்தளையில் செய்யப்பட்டது . எளிதில் எடுத்துச்செல்லும் வகையில் செய்யப்பட்ட இந்தக் கடிகாரம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது . இதன்மூலம் அவருக்கு ஜெர்மன் காஸ்டில் கடிகாரத்தை வடிவமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது . கிறிஸ்டியன் ஹியூஜென்ஸ் 1629 -1695 டச்சு நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி . பெண்டுலம் கடிகாரத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றவர் . கலிலீயோ கண்டுபிடித்த இயக்க தியரியைப் பயன்படுத்தி இந்த கடிகாரத்தை வடிவமைத்தார் . எலி டெரி 1772-1852 டெரி வீடுகளுக்கான கடிகாரங்களை தயாரிக்க தொடங்கினார் . இதற்காகவே தொழிற்சாலைகளை உருவாக்கினார் . மரசெல்புகளில் அலங்காரமான கடிகாரங்களை செய்தார் . அமெரிக்காவில் இந்த வகை கடிகாரம் பெரும் புகழ்பெற்றது . லூயிஸ் எசென் 1908-1997 எசென் , திறமையான இயற்பியலாளர் . அவர் உடலின் முதல் அணு கடிகாரத்தைக் கண்டுபிடித்தார் .

கொரோனாவை சந்தித்து மீண்டு வந்த இந்திய புத்தக கடைகள்! - நிலையை எப்படி சமாளித்தனர்?

படம்
            தாக்குப்பிடித்த புத்தக கடைகள் ! உலகம் முழுவதும் பொதுமுடக்கம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது . புத்தக கடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ? அப்படி தப்பி பிழைத்த புத்தக கடைகள் பற்றி இங்கு பார்ப்போம் . என்ன சாகசங்கள் செய்து ்தங்களை காப்பாற்றிக்கொண்டனர் என்பதை பார்ப்போம் . பாக்தண்டி புனே நேகா , விஷால் பிபாரியா ஆகியோர்தான் இந்த புத்தக கடையை நடத்தி வந்தனர் . பொதுமுடக்கத்தை எதிர்கொள்ள இவர்களுக்கு கிடைத்த ஐடியா , கிப்ட் வ வுச்சர்கள்தான் . அதனை தங்களது வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ள கூறினர் . அப்படி வாங்கியவறை பிற்காலத்தில் பயன்படுத்திக்கொள்ளமுடியும் . இப்படிக் கிடைத்த தொகை மூலம் மூடப்பட்ட நாட்களை சமாளித்துள்ளனர் . ஆன்லைனில் வலைத்தளங்கள் கொடுக்கும் தள்ளுபடிகளை புத்தககடைகள் கொடுக்க முடியாது என்பது நிதர்சனம் . எங்களது வாடிக்கையாளர்கள் மூலமே நாங்கள் இன்றுவரை இயங்கி வருகிறோம் என்கிறார்கள் நேகா அ்ண்ட் கோ . விட்டுக்கொடுக்காமல் இருந்தது . புத்தக கடை என்பதை முழுமையான அனுபவமாக மாற்றியது இக்கடையின் வெற்றி என்கிறார்கள் . ரச்சனா ஸ்டோர்ஸ் காங்டொக் ரா

செயற்கை வைரங்களை நோக்கி நகரும் வைர விற்பனை நிறுவனங்கள்! - இயற்கை வைரத்தை அகழ்ந்தெடுக்க கூடுகிறது பொருட்செலவு

படம்
            செயற்கை வைரங்களை நோக்கி நகரும் உலகம் ! செய்தி ஆஸ்திரேலியாவின் கிழக்கு கிம்பர்லி பகுதியில் செயல்பட்டு வந்த பழமையான ஆர்கைல் வைரச்சுரங்கம் , லாபகரமாக இயங்கவில்லை என்பதால் மூடப்பட்டிருக்கிறது . பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் வைரச்சுரங்கங்கள் காமதேனு போல வைரங்களை கொடுத்துக்கொண்டே இருக்காது . ஆர்கைல் வைரச்சுரங்கம் லாபகரமாக இயங்கவில்லை என்று அதன் உரிமையாளர் ரியோ டின்டோ கூறி , அதனை மூடியுள்ளார் . 1983 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கிய இச்சுரங்கத்தில் 8 கோடியே 65 லட்சம் கேரட் வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன . உலகில் விற்பனையாகும் 90 சதவீத பிங்க் வைரங்கள் ஆர்கைல் சுரங்கத்திலிருந்துதான் பெறப்பட்டன . தொண்ணூறுகளில் அதிக விலைக்கு விற்காத தரம் குறைந்த பழுப்பு மற்றும் பல்வேறு நிறமுடைய வைரக்கற்களை வாங்கி , பட்டை தீட்டி விற்பனை செய்தது இந்தியாவிலுள்ள குஜராத் மாநில வியாபாரிகள்தான் . ஆர்கைல் சுரங்கம் மூடப்படுவதால் இனி இருப்பிலுள்ள வைரங்களை நகை வணிகர்கள் விற்கலாம் . அரியவை என்பதால் அதன் விலை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது . இனி விற்பனைக்கு வரும் வைரங்கள் ஆய்வகத

மாடர்ன் பிரெட்டின் கதை! - இந்தியா, சிங்கப்பூர், மெக்சிகோ என மூன்று நாடுகளை சுற்றி வந்த பிரெட்!

படம்
  இந்திய பிரெட்டின் கதை மாடர்ன் பிரெட்டைப் பற்றி தெரியாதவர்கள் கூட அதனை ஒருமுறையாவது சாப்பிட்டிருப்பார்கள். அந்தளவு ஏராளமான வெரைட்டிகளில் பிரெட்டையும், பன்களையும் விற்றுவருகிற தனியார் நிறுவனம் அது. 1965ஆம் ஆண்டு மத்திய அரசால் சென்னையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. பின்னாளில் இங்கிலாந்தைச் சேர்ந்த யூனிலீவர் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. குறைந்த விலைக்கு விற்கப்பட்ட மத்திய அரசின் நிறுவனம் என்ற சர்ச்சை இன்றுவரை தீரவில்லை. மத்திய அரசு தொடங்கி நடத்திய உணவு நிறுவனம், லாபகரமாக இயங்கியது பலருக்கும் ஆச்சரியம்தான். இதனை 2000ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக முன்னணி தலைமையிலான அரசு சுருக்கமாக பாஜக அரசு முதலீடுகளைக் குறைத்துக்கொண்டு தனியார் நிறுவனமான ஹெச்யூஎல்லுக்கு விற்றது. இந்த நிறுவனம், மாடர்ன் பிரெட்டை விரிவாக்கி ஏராளமான புதிய  வெரைட்டிகளை கொண்டு வந்தது. பிறகு, 2016இல் சிங்கப்பூரைச் சேர்ந்த ஈக்விட்டி நிறுவனமான எவர்ஸ்டோன் குளோபலுக்கு விற்றது.  தற்போது இந்த நிறுவனம் மெக்சிகோவைச் சேர்ந்த பிரெட் தயாரிப்பு நிறுவனமான குருப்போ பிம்போவுக்கு மாடர்ன் நிறுவனத்தை விற்றுவிட்டது. என்ன விலை என்பது தெரியவில்லை.  குருப்

தனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்!

படம்
  தற்போது,  இந்திய அரசின் நிர்வாகத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட  பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் தவிர பிற நிறுவனங்கள்,  தனியார் நிறுவனங்களிடம் விற்கப்படலாம் அல்லது மூடப்படலாம் எனும் நிலையிலுள்ளன. மத்திய அரசு, நிதி ஆயோக் அமைப்பின்  அறிக்கைப்படி பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை 12 ஆக குறைக்கவிருக்கிறது. மொத்தமாக மூன்று அல்லது நான்கு பொது நிறுவனங்களை மட்டுமே அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகிக்கவிருக்கிறது.  அரசிடமுள்ள பொது ஆதார நிறுவனங்களாக எரிபொருள் (பெட்ரோல், நிலக்கரி), மின்சாரம், விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, காப்பீடு, வங்கி, கனிமம் ஆகியவற்றைக் கூறலாம். இத்துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசு தன்னுடைய முதலீட்டை விலக்கிக் கொள்ளவிருக்கிறது. மேலும் இந்நிறுவனங்களை தனியாருக்கு விற்க  திட்டமிட்டுள்ளது. இப்படி விற்பதன் மூலம் தனியார் துறையினரின்  வழியாக அந்நிய முதலீடும் இந்தியாவுக்கு கிடைக்கும்.  பொது நிறுவனங்களை தனியார் துறையினருக்கு விற்பதன் மூலம் அரசுக்கு அதிகளவு வருமானம் கிடைக்கும். இதன் மூலம் கோவிட் -19 கால பொருள

2020 இல் கற்றுக்கொண்டதை இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்! ஆலியா பட், இந்தி நடிகை

படம்
                ஆலியாபட் இந்தி நடிகை 2020 ஆம் ஆண்டில் நிறைய சவால்களை சந்தித்துள்ளோம் . இக்காலகட்டத்தை எப்படி சமாளித்தீர்கள் ? நான் பெருந்தொற்று காலத்தை எழுதுவதில் செலவிட்டேன் . இது மனிதர்களுக்கும் பூமிக்கும் கூட எளிதான கால கட்டம் அல்ல என்பது உண்மை . இந்த ஆண்டில் கற்ற விஷயங்களை அடுத்த ஆண்டில் பயன்படுத்தி பார்க்கவேண்டும் என்பதே எனது ஆசை . 2021 இல் நீங்கள் நடித்த பிரம்மாஸ்திரா , கங்குபாய் கதியாவடி என்ற இரு முக்கியமான படங்கள் வெளிவரவிருக்கின்றன . ஆர்ஆர்ஆர் என்ற படம் 2022 இல் வெளியாகவிருக்கிறது . பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? நான் படத்தை தேர்நெதடுப்பது கதை மற்றும் எனது கேரக்டர் சார்ந்து மட்டும்தான் . இவற்றோடு இயக்குநரின் படங்கள் பேசும்படியாக இருந்தால் படம் பெரிதாக தோன்றும் . படங்கள் என்பது முழுக்க இயக்குநரின் தோளில்தான் உள்ளது . அவர் எப்படி கதையை சொல்லவேண்டும் என நினைக்கிறாரோ அதைப்பொறுத்து படம் பெரியதாகவே பட்ஜெட்டிலோ அமையும் . ஆடைகளுக்கான பிராண்டு எப்படி உருவாக்கவேண்டும் என்று தோன்றியது ? நாம் பயன்படுத்த

நவீன மார்க்கெட்டிங் உத்திகள் - வெற்றி பெற தேவையான ஸ்மார்ட் வார்த்தைகள்

படம்
      நவீன மார்க்கெட்டிங் உத்திகள் என்ன ? காலம்தோறும் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை உத்திகள் மாறி வருகின்றன . இதனை வல்லுநர்கள் குழு பன்னாட்டு நிறுவனங்களி்ல் வடிவமைத்து நிறுவனத்தை தரமான வாடிக்கையாளர்கள் மேல் பரிவுகொண்ட அக்கறையுள்ள நிறுவனமான மாற்றுகிறார்கள் . இதை வைத்தே அந்நிறுவன பொருட்களின் விற்பனை எகிறுகிறது . உலகளவில் வெற்றிபெற்ற நடைமுறையில் உள்ள மார்க்கெட்டிங் விஷயங்களைப் பார்ப்போம் . ஹியூமனைனிங் இதனை ஓரியோ பிஸ்கெட்டுகளை உலகம் முழுக்க விற்கும் மாண்டெல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது . இவர்கள் ஓரியோ பிஸ்கெட்டுகள் , பிலடெல்பியா க்ரீம் சீஸ் ஆகியவற்றை விற்பனை செய்கின்றனர் . ஹியூமனைனிங் என்பதை இவர்கள் மக்களிடம் உருவாக்கிக்கொள்ளும் இணைப்பு என்பதாக கருதுகிறார்கள் . இனிமேல் பொருட்களின் விற்பனைக்காக மார்க்கெட்டிங் செய்வது கைகொடுக்காது என்கிறார்கள் . அட்லாப் விளம்பர நிறுனவனத்தின் உத்தி என்னவாக இருக்கும் ? பொருட்களின் மார்க்கெட்டிங்தான் . பொருட்களைப் பற்றிய கவனத்தை நாம் விளம்பரம் பார்க்கும்போது தவறவிட்டால் கான்செப்ட் சரியாக இருந்தாலும் அது

அரசின் இயந்திரத்தில் தேசியவாத இஞ்சின் மட்டுமே இயங்குகிறது!

படம்
நேர்காணல் வளர்ச்சி இல்லாத தேசியவாதம் கேலிக்கூத்தானது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், மாநிலங்கள்அவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும்  தன் மனதில் தோன்றிய கருத்துகளை வெளிப்படையாக முன் வைக்க கூடியவர். அவரிடம் பேசினோம். தற்போதைய பொருளாதார மந்தநிலையைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்? பாஜக அரசு, தன் பட்ஜெட்டின்போதே மக்களின் எதிர்ப்பைச் சந்தித்தது. இப்போது கார்ப்பரேட் நிறுவன வரிவிதிப்பைக் குறைத்தபின்னும் மக்களின் எதிர்ப்பு குறையவில்லை. இந்த வரி குறைப்பு ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கழித்தால்தான் பலன் கொடுக்கும். இதுவும் கூட யூகம்தான். மக்களின் தேவை என்பது இன்று குறைந்துவிட்டது. முதலீடு, ஏற்றுமதி ஆகியவை ஏறத்தாழ தேக்கமடைந்துவிட்டன. அரசின் வாகனத்திலுள்ள ஒரே இயக்கம் கொண்ட இஞ்சின் தேசியவாதம் மட்டுமே. அதுவும் கூட பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்கவில்லை. காங்கிரஸ் இதற்கு மாற்றான தீர்வாக என்ன வைத்திருக்கிறது? காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களுக்கு ஆதரவான பொருளாதார முடிவுகளை எடுத்து வந்தது. அரசிடம் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகள்

சீனாவில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்! - சீனாவின் நடவடிக்கை என்ன?

படம்
giphy.com நவ.11 ஆம் தேதி உலக அளவில் சிங்கிள்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. தினம் என்று வந்தால் யாருக்கு கொண்டாட்டம்? ஆம். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்குத்தானே? 2009ஆம் ஆண்டிலிருந்து அலிபாபா நிறுவனம், இதனை மிகப்பெரிய விற்பனைக்கான நாளாக பார்க்கிறது. அப்படித்தான் தனது வலைத்தளத்தில் விளம்பரம் செய்கிறது. 2015 ஆம் ஆண்டு 140 மில்லியன் பார்சல்களாக இருந்த விற்பனை, 2017ஆம் ஆண்டு 331  மில்லியன் பார்சல்களாக உயர்ந்துள்ளது. நான்கில் ஒருவர் என ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர். இங்கு கூறியது சீனாவில் மட்டும் என நினைவில் கொள்ளுங்கள். இதனை எப்படி கற்பனை செய்யலாம் தெரியுமா? அமெரிக்க நாட்டிலுள்ள ஒட்டுமொத்த குடிமகன்களும் ஆளுக்கொரு பார்சல் வாங்கியுள்ளதாக கருதலாம். விற்பனை, சாதனை என மார்தட்டிக்கொள்வது சரிதான். ஆனால், இதனால் ஆண்டுதோறும் 9.4 மில்லியன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருகின்றன என்று க்ரீன்பீஸ் அமைப்பு மற்றும் ஃப்ரீ டு பிளாஸ்டிக் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு சிங்கிள்ஸ் தினத்தில் அலிபாபா நிறுவனம் 22 பில்லியன் டாலர்களுக்கு வணிகம் ச

அமெரிக்கர்களை மகிழ்வித்த ஃபுளோரிடாமேன்! - உண்மையா - பொய்யா?

படம்
es.sott.net தெரிஞ்சுக்கோ! அமெரிக்காவில் இணையம் புகழ்பெறத்தொடங்கிய காலகட்டம். உள்ளூர் பத்திரிகைகள் செய்த காரியம், பத்திரிக்கை துறையையே மாற்றியது. இல்லாத ஒரு கதாபாத்திரத்தை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம் உருவாக்கியது. புளோரிடா மேன் நாயை கிளப்பில் அனுமதிக்காததால் போலீசை அழைத்தார், மருத்துவமனையை கொளுத்தினார் என்கிறரீதியில் செல்லும் செய்தி மக்களுக்கு எதிர்பார்த்த சுவாரசியத்தைத் தந்தன. ஆனால் மலினமான பத்திரிக்கை செயல் என பின்னர் விமர்சிக்கப்பட்டது. இந்த கதாபாத்திரம் உணர்ச்சிவசப்பட்ட, மனநிலை சீரற்ற தன்மை கொண்டதும் இதற்கு காரணம். அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தில் மட்டுமே மனநலம் சார்ந்து செலவழிக்கும் தொகை குறைவு - 36 டாலர்கள் மட்டுமே செலவழிக்கின்றனர். இங்கு அனுமதிக்கப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை இருபது லட்சத்திற்கும் அதிகம். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் ஃபுளோரிடா மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இங்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான அலிகேட்டர் வகை முதலைகள் உண்டு. நன்றி: க்வார்ட்ஸ்

ஸ்கின்னி ஜீன்ஸ் டேட்டா!

படம்
ஸ இன்று டெனிம் ஜீன்ஸ்களில் நிறைய வகைகள் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் ஸ்கின்னி ஜீன்ஸ்கள். அவை பற்றிய டேட்டா இதோ.. 2006 ஆம் ஆண்டு டைம் இதழ், ஸ்கின்னி ஜீன்ஸ் விரைவில் உலகெங்கும் புகழ்பெறும் என்று கூறியது. அமெரிக்காவில் பெண்கள் ஸ்கின்னி ஜீன்ஸ் பேண்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இதன் அளவு 6 சதவீதம். 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஸ்கின்னி ஜீன்ஸ்களின் விலை 23 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் விற்கும் பெண்களுக்கான ஸ்கின்னி ஜீன்ஸ்களுக்கான அளவு 40 சதவீதம். ஆண்டுதோறும் விற்கும் ஸ்கின்னி ஜீன்ஸ்களின் அளவு 1.24 பில்லியன்கள் ஆகும் ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி. நன்றி: க்வார்ட்ஸ் 

விற்பனைக்கு வழிகாட்டும் ஆராய்ச்சிகள்! - விலைபோகும் ஆராய்ச்சியாளர்கள்

படம்
லாபத்திற்கான ஆராய்ச்சிகள்! செய்தி: அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் எனர்ஜி பேலன்ஸ் நெட்வொர்க்(GEBN), கலோரி குறித்து கூறிய கருத்து, ஆராய்ச்சித்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரம், பணபலம் குறித்த விவாதங்களைத் தொடங்கிவைத்துள்ளது. விவசாய, கல்வி பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்குப் பல்வேறு தலைப்பிலான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுகின்றன. இவை தொலைக்காட்சி, நாளிதழ்களில் வெளியாகி,  ஆராய்ச்சிக் கட்டுரைகளிலுள்ள விஷயங்கள் மக்களால் விவாதிக்கப்படுவது வழக்கம். மேற்சொன்ன செய்தியில் ஜிஇபிஎன் தன்னார்வ அமைப்பு, கலோரி குறித்து அறிக்கை வெளியிட்டு கருத்துக் கூறியது.  ஆனால் இந்த அமைப்புக்கு நிதியுதவி செய்வது பிரபல குளிர்பான நிறுவனம் என்பது தற்செயலானது அல்ல. நிதிப்பற்றாக்குறை! இந்தியாவில் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான உதவித்தொகை, ஆய்வகங்கள் ஆகியவற்றுக்கு பெரும் நிதியைச் செலவிடுகின்றன. இதனால் உணவுத்துறை பற்றிய ஆய்வுக்கு ஆராய்ச்சியாளர்கள் தனியார் நிறுவனங்களையே நம்பியுள்ளன. குளிர்பானங்களிலுள்ள அதிகப்படியான சர்க்கரை உடல் பருமனுக்கு காரணம் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல்

காதல் நாவல்களின் சாதனை!

படம்
Frank Joseph\pinterest காதலுக்கும், காமத்திற்கும் எப்போதுமே இந்தியாவிலும் சரி., உலகிலும் சரி மவுசு உண்டு. என்ன காரணம், எதார்த்தம் மோசம் என்றாலும் கனவிலும் கற்பனையாலும் நாம் அனைவராலும் விரும்பப்பட, அனைவரையும் விரும்பும் கதாபாத்திரமாகவே நினைத்துக்கொள்கிறோம். ரொமான்ஸ் நாவல்களும் இந்த தன்மையில் இருப்பதால் விற்பனையில் உலகமெங்கும் சக்கைபோடு போடுகின்றன. அமெரிக்காவில் மட்டும் காதல் நூல்களின் விற்பனை மதிப்பு 1.44 பில்லியன் டாலர்கள். இணைய உலகில் காதல் கதை எழுத்தாளருக்கு கிடைக்கும் சராசரி வருமானத்தொகை சதவீதம் 3. கடந்த ஆண்டு விற்ற இபுக் நாவல்களின் அளவு 70% இ.எல். ஜேம்ஸ் எழுதிய ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே நாவலில் நாயகி அனஸ்தாசியா ஸ்டீல் எத்தனை முறை உதட்டை கடித்தாள் தெரியுமா?  11 நூறுக்கும் மேற்பட்ட ரொமான்ஸ் நாவல்களை எழுதிக் குவித்தவர் டேனியல் ஸ்டீல். இவர் ஐந்து திருமணங்கள் செய்தவர். அண்மையில் தனது கணவரை 71 வயதில் 2002 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். மில்ஸ் அண்ட் பூண்ஸ் ரக நாவல்கள் ஆண்டுக்கு எவ்வளவு ரிலீசாகிறது தெரியுமா? 720 தினசரி இரண்டு மணிநேரம்  எழுதிய ஹெச்.எம். வார்டு