இடுகைகள்

தோற்றுப்போவதற்கு செத்துவிடலாம் என நினைத்து போராடும் வக்கீலின் சதுரங்க ஆட்டம் - முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் - அபினவ் சுந்தர்

படம்
  முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் மலையாளம் வினித் சீனிவாசன் இயக்குநர் அபினவ் சுந்தர் நாயக்  சுகபோகங்களில் ஆசை கொண்ட வக்கீலின் அனைத்துக்கும் ஆசைப்படும் வாழ்க்கைக் கதை. முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் நினைத்தது போல வாழ்க்கையில் பிரேக் கிடைக்கவில்லை. பணம், புகழ் என ஏதும் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் சுய முன்னேற்ற நூல்களில் உள்ள அனைத்தையும் மாற்றுக்கருத்து   இல்லாமல் பின்பற்றுகிறவன்தான் முகுந்தன் உண்ணி. இப்படி இருப்பவனின் வாழ்க்கை ஒருநாள் மாறுகிறது. அவனது அம்மா, வீட்டுக்குள் நுழைந்த பாம்பு ஒன்றால் திகைப்புக்கு உள்ளாகி கீழே விழுகிறாள். இதனால், கால் எலும்பு விரிசல் காண்கிறது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய நினைக்கிறான். ஆனால், கையில் பணம் இல்லை. அப்போது அவன் வேலை செய்த வக்கீலின் நிறுவனத்திலிருந்தும் கூட   வெளியேறிவிட்டிருக்கிற சூழல். கட்டணத்தை குறைக்க, மருத்துவமனையின் பில்லிங்கில் உள்ள பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் எதிரில் உள்ள கவுண்டரில் பணத்தை ஒருவர் கற்றை கற்றையாக அள்ளி எடுத்து கட்டுகிறார். அதைப் பார்த்து அதன் பின்னால் உள்ள ரகசியங்களைக் கண்டுபிடிக்கிறான். அதே

நாட்டுக்குப் போராடிய ராணுவ வீரன், 5 ஏக்கர் நிலத்தைக் காக்க எம்எல்ஏவை எதிர்த்து நின்றால்... சண்டி - ரவிதேஜா

படம்
  சண்டி ரவிதேஜா, சார்மி, அதுல் குல்கர்னி, டெய்ஸி போபனா   ராணுவத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறான் சண்டி. அப்படி வரும் நிர்பந்த சூழ்நிலை, அவனது அப்பா மாரடைப்பால் இறந்த காரணத்தால் ஏற்படுகிறது. அப்பாவும், கண் பார்வையற்ற தங்கையும்தான் அவனுக்கு ஒரே சொந்தம். அப்பா இறந்த காரணத்தால் கிராமத்தில் தங்கி தங்கையைப் பார்த்துக்கொண்டு அவளுக்கு மணம் செய்ய நினைக்கிறான். இந்த நேரத்தில் அந்த ஊரில் உள்ள எம்எல்ஏ ராணுவ வீரன் சண்டிக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறான். அதை கைப்பற்றி சாலை போட்டுவிட்டால் அருகில் உள்ள தொழிற்சாலையை எளிதாக இயங்க வைக்கலாம் என நினைக்கிறார். இதற்கு அவர் செய்யும் செயல்களும், அதற்கான ராணுவ வீரன் சண்டியின் எதிர்வினைகளும்தான் படம்… நிலம் அதை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதுதான் மையக் கதை. நிலத்தை அடிப்படையாக வைத்துத்தான் பார்வைத்திறனற்ற தங்கையை கல்யாணம் செய்துகொடுக்க வேண்டும் என நிர்பந்தம் சண்டிக்கு உள்ளது. பிறகுதான் அவன் திருமணம் செய்துகொள்ள முடியும். நிலம் பற்றிய சிக்கல்கள் எழும் நேரத்தில் அவனை இரு பெண்கள் காதலிக்கிறார்கள். ஒருத்தி, உறவுக்காரப் ப

குற்றங்களை கணக்கீடு செய்வதில் ஏற்படும் தடுமாற்றங்கள், ஆய்வறிக்கை செயல்பாடு

படம்
  பொதுவாக காவல்துறையில் வழக்குகளை எளிதாக பதிய மாட்டார்கள். பதிந்தால் அதை விசாரிக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என நிறைய நடைமுறை பிரச்னைகளை உண்டு. அதேநேரத்தில் பதிவாகும் வழக்குகளை வைத்துதான் குறிப்பிட்ட வட்டாரத்தில் குற்றங்கள் நடைபெறுகின்றனவா, அதன் சதவீதம் என்ன, குற்றத்தை குறைக்க என்னென்ன விஷயங்களைச் செய்யலாம் என்று அரசு யோசித்து திட்டமிடுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டத்தில் இதற்கென தனி அறிக்கைகளை வெளியிடுகிறது. 1970ஆம் ஆண்டு அமெரிக்காவில்   ஹூட், ஸ்பார்க்ஸ் ஆகியோர் செய்த ஆய்வில் மூன்றில் இருபங்கு குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தங்களது அறிக்கையில் கூறினர். அதே சமயம் இங்கிலாந்தில் பதிவான குற்றங்களை ஆராய்ந்தபோது, அதில் கொள்ளை சார்ந்த குற்றச்செயல்கள் எழுபது சதவீதமும், 27 சதவீத குற்றங்கள் சைக்கிள் திருட்டாகவும் இருந்தது.   மோசடி, பாலியல் குற்றங்கள், மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகியவை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. செல்வாக்கு மிக்க குடும்பங்கள், சாதி, மதம் சார்ந்த பிரச்னைகள் எல்லாம் பெரும்பாலும் ஆவணங்களில் பதிவு செய்யப்படாமலேயே தீர்த்து வைக்கப்படுகின்றன. சாதாரணமா

மார்க்சிய கொள்கை அடிப்படையில் சமூக குற்றங்களைக் காணலாம்!

படம்
  மார்க்சிய கொள்கை வழியில் கோணத்தில் குற்றத்தைப் பார்ப்பது பற்றி படித்தோம். அதிலும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. முதலாளித்துவ சமூகம் என்றால் குற்றம் செய்பவர்கள் அனைவருமே அந்த கருத்தில் உடன்பாடு கொண்டவர்களா, அனைத்து பிரிவினரும் குற்றம் செய்கிறார்களா என நிறைய கேள்விகளும் அதில் உண்டு. நடைமுறை யதார்த்தம் சார்ந்து கருத்துகளைப் புரிந்துகொள்வது, கருத்துகளின் அர்த்தம் அறிவது, அதிலிருந்து கற்றுக்கொள்வது, கற்றதும், பெற்றதுமான அனுபவங்களிலிருந்து ஆளுமையை உருவாக்கிக் கொள்வது ஆகியவை முக்கியமானவை. அதிகாரம், பணபலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளவர்கள்தான் சட்டங்களை உருவாக்குகிறார்கள். நேரடியாக உண்மையை எதிர்கொள்வது கடினம் என்பதால் நாம் அதை வேறுவேறு பெயர்கள் கொண்டு அழைக்கிறோம். உண்மையில் அதிகாரமும், பணபலமும் கொண்ட சிறுகுழுக்கள்தான் சமூகம் இயங்குவதற்கான விதிகளை வகுக்கிறார்கள். வெளியிடுவதும், நடைமுறைப்படுத்துவதும் வேறு வேறு அமைப்புகள், ஆட்கள். இப்படி அமைக்கும் சட்ட அமைப்பில் ஒருவரைக் கொல்வது என்பது சட்டப்படி ஏற்புடையதாகவும் உள்ளன. போதைப்பொருட்களை விற்பது, பெண்களை ஆபாச படம் எடுப்பது, வல்லுறவு செய்வது ஆகியவற்றில

தற்கொலை செய்யத் தூண்டும் பேயை எதிர்கொள்ளும் அம்மாவும் மகனும் - பூதாக்காலம் - ராகுல் சதாசிவன்

படம்
  பூதாக்காலம் மலையாளம்  பூதாக்காலம் ஷான் நிகாம்,ரேவதி பூதாக்காலம் ஷான் நிகாம், ரேவதி பூதாக்காலம் ஷான் நிகாம், ரேவதி   பேய்ப்படம். ஆனால் அதை முடிந்தவரை எளிமையாக எடுத்து நம் முன் காட்டியிருக்கிறார்கள். வினு, அப்பா இல்லாத பையன். பி ஃபார்ம் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார். அவரது அம்மா ஆஷா, குழந்தைகளுக்கான ஆசிரியையாக இருக்கிறார். வீட்டிற்கான வருமானம், அம்மாவின் ஆசிரியர் பணி மூலமே கிடைக்கிறது. வீட்டில் ரேவதியின் அம்மா, சக்கர நாற்காலியில் முடமாகி வாழ்ந்து வருகிறார். இவர்கள் உள்ள வீடு சற்று அசாதாரணமான தன்மையில் இருக்கிறது. வினு, மருத்துவம் சார்ந்து படித்தாலும் நினைத்த வேலை கிடைக்கமாட்டேன்கிறது. அவரது நண்பர்கள் கிடைத்த வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு முதலில் அப்படி செல்வது விருப்பமில்லை. ஆனால் பொருளாதார நெருக்கடி அவனை அந்த வேலைக்கும் கூட செல்ல நிர்பந்திக்கிறது.  இந்த நேரத்தில் அவனுக்கு உள்ள பெண் தோழியுடனும் எதிர்பார்த்தது போல உறவு செல்லவில்லை. புகைப்பிடிக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் அதிகமாகிறது. இந்த நேரத்தில் ஆஷாவுக்கு மகன் தனது கணவர் போலவே மதுவால் அடிமையாக

பழிக்குப்பழி குணம் கொண்ட கான்ஸ்டபிளுக்கு சவால் விடும் தொடர் கொலைகாரர்! கூமன் - மலையாளம்

படம்
  கூமன் மலையாளம் இயக்கம் ஜீத்து ஜோசப் நடிப்பு – ஆசிஃப் அலி, ரமேஷ் திலக் தன்னை அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டரை பழிவாங்க நினைக்கும் கான்ஸ்டபிள் ஒருவரின் கதை. காவல்துறையில் இயங்கும் பலரும் உடலில் ஒரு வித திமிருடன் திரிவார்கள். அனைத்து விவகாரங்களிலும் தங்களின் கருத்து முடிவாக இருக்கும் என நினைப்பவர்கள். இந்த நிலையில் இப்படி இருக்கும் நாயகனை (கிரி சங்கர்) சிலர். தேவையில்லாமல் பகைத்துக்கொண்டு சில வார்த்தைகளை சொல்லிவிடுகிறார்கள். அதனால் அவன் அவர்களை தனது அதிகாரத்தை வைத்துக்கொண்டு பழிவாங்குகிறான். சாதாரண மனிதர்களுக்கு இப்படியென்றால்,  புதிதாக அலுவலகத்திற்கு வரும் இன்ஸ்பெக்டர் ஹரிலால் (பாபுராஜ்) அவனை உதாசீனப்படுத்துகிறார். ஒருமுறை ஊரில் நடக்கும் கபாடி போட்டியில், அரசியல்வாதி ஒருவனை பழைய பகையில் பழிவாங்க நாயகன் நினைத்து அடிக்கிறான்.அ ப்போது இன்ஸ்பெக்டர் அவனைப் பிரித்துவிட நினைத்து தள்ளிவிட சேற்றில் விழுந்துவிடுகிறான் நாயகன். அதை ஊரே பார்த்து சிரிக்கிறது. வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புகிறது. இதனால் இன்ஸ்பெக்டரின் மீது இருக்கும் கோபம், வன்மமாக மாறுகிறது. இன்ஸ்பெக்டரை பழிவாங்குவதற்கு நாயகன்

உதயமாகும் பேரரசன் - ஆனந்த் மகிந்திரா - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  ஆனந்த் மகிந்திரா வாகனத்துறையில் வேகமாக முன்னேறி வரும் தொழிலதிபர். தொடக்கத்தில் இரும்பு உற்பத்தி ஆலையாக தொடங்கப்பட்ட மகிந்திரா இன்று 20க்கும் மேற்பட்ட துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. உள்நாடு, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் வருமானத்தை பெருக்கும் பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இதற்கு பின்னால் உள்ளவர்தான், ஆனந்த் மகிந்திரா. ட்விட்டரில் தொடர்ச்சியாக மக்களிடம் உரையாடி அவர்களின் எண்ணங்களை தெரிந்துகொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறார். அவரின் சிந்தனைகள் எப்படியானவை, நோக்கம் என்ன, வெற்றி சூத்திரங்கள் என்ன என்பதை அறிய நீங்கள் இந்த நூலை வாசித்தே ஆகவேண்டும்.. அமேசான் வலைத்தளம் https://www.amazon.in/dp/B0BSLYLGBB