இடுகைகள்

அலர்ஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோய் எதிர்ப்பு சக்தி தன்னுடனே போராடும் போராட்டம்! - ஒவ்வாமை எப்படி ஏற்படுகிறது?

படம்
        அலர்ஜி என பொதுவாக அனைவரும் சொல்வது இதைத்தான் . தூய தமிழில் இதனை ஒவ்வாமை என்று கூறலாம் . சாதாரணமாக பார்த்தால் தோல் சிவப்பது , கொப்புளஙகள் ஏற்படுவது , அதில் சீழும் ரத்தமும் கலந்து வருவது , பிறகு இதுவே தீவிரமானால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரும் கூட போகலாம் . இதனை மருத்துவ முறையில் பார்த்தால் நோய் எதிர்ப்பு சக்திக்கும் வெளியிலிருந்து உடலுக்குள் செல்லும் பொருட்களுக்குமான போர் என்று கூறலா்ம் . வளர்ந்து வரும் நாடுகள் , வளரும் நாடுகள் , வல்லரசு நாடுகளிலும் ஒவ்வாமை தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன . ஒவ்வாமை தொடர்பாக நான் மேலே கூறியவை மிகச்சில அறிகுறிகள்தான் . இதையும் தாண்டி மலக்கட்டு , வயிற்றுப்போக்கு , குழந்தைகளின் அதீத செயல்பாடு , மைக்ரேன் தலைவலி , மன அழுத்தம் , ஆஸ்துமா , கண்களில் நீர் கொட்டுவது , கண் எரிச்சல் , ரைனிடிஸ் ( மூக்கில் ஏற்படும் பாதிப்பு ), உடல் சோர்வு , தோலில் அரிப்பு , எடை குறைவு ஆகியவை ஏற்படும் . பொதுவான அலர்ஜியால் ஆஸ்துமா , கண் , மூக்கு எரிச்சல் , தோல் அரிப்பு , உணவு தொடர்பான பிரச்னைகள் ஆகியவை ஏற்படுகின்றன . இதற்கு அறிகுறிகளை மட்டும

பெண்களைப் பற்றிய பார்வையில் என்ன பிழை இருக்கிறது? - கடிதங்கள்

படம்
               பெண்களைப் பற்றிய பார்வையில் என்ன பிழை? 19.10.2020 அன்புள்ள சபா , நன்றாக இருக்கிறீர்களா ? இக்கடிதம் உங்களை வந்து சேரும்போது கொரோனா பாதிப்பு குறைந்து அறைக்கு மீண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . நீங்கள் காதலித்த பெண்களைப் பற்றி பேசும்போது மனதில் ஒரு கேள்வி தோன்றியது . ஒரு பெண்ணுடன் கூடவா மனது ஒட்டவில்லையென . குறிப்பிட்ட தேவையைக் கருதித்தான் உறவை வளர்கிறார்களா என்றும் புரியவில்லை . நீங்கள் உங்கள் பார்வையில் பெண்களைப் பற்றி சொன்னீர்கள் . அவர்கள் பார்வையில் உங்களைப் பற்றி என்ன நினைத்தார்களோ ? மனிதர்களின் இருட்டான உளவியல் பக்கம் எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்துகிறது . அதனால் , அசுரகுலம் நூலை எழுதியபோது , கொலை செய்த மனிதர்களின் மனநிலை என்னை பெரிதும் பார்த்தேன் . எனோலா ஹோல்ம்ஸ் என்ற படம் ஆங்கிலப்படத்தை பார்த்தேன் . துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோல்ம்ஸின் தங்கை பற்றிய படம் இது . எனோலா , தனது வாழ்க்கையை சுதந்திரமாக எப்படி வாழத் தொடங்குகிறாள் என்பதை படம் நகைச்சுவையாக விவரிக்கிறது . படத்தில் எனோலாவாக நடித்த நடிகைதான் இதன் தயாரிப்பாளரும் . கூட . போனில் கர ப

குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி ஆபத்து!

படம்
  குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி ஆபத்து!  குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு செயல்முறையில், உணவு ஒவ்வாமைக்கான விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை.  நவீன கால குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவுகளான வேர்க்கடலை, முட்டை , பால் ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். ஒவ்வாமைக்கு முக்கிய காரணம் உணவுதான். ஆயினும், குழந்தைகளின் பள்ளி, அவர்களின் வீடு, நிகழ்ச்சிகள் ஆகிய இடங்களில் கூட ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  உணவு மூலமாக ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பு பொதுவானது. ஆனால், அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ஆபத்து. கடந்த ஆண்டு, உணவு விடுதியில் பாதுகாப்பான உணவு என்று நம்பிச் சாப்பிட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த இருவர் ஒவ்வாமை பாதிப்பில் இறந்தனர். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சி பெறாத நிலையில் என்னாகும்? இங்கிலாந்து அரசு தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு திட உணவுகளை குறிப்பிட்ட வயது வந்தபிறகுதான் சாப்பிட வழங்கவேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.  தற்போது இங்கிலாந்தில் ஒவ்வாமை பாதிப்பு 7 சதவீதமாக உள்ளது. அங்கு கடந்த இருபது ஆண்டுகளில் ஆறுமடங்கு அதிகமாக ஒவ்வாமை நோயாள

விமானத்தில் ஜன்னல்கள் வட்டமாக இருப்பது ஏன்?

படம்
            சாகச விளையாட்டு பற்றி சொல்லுங்கள் ? விங் சூட் என்ற ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இந்த வகை உடைகள் 1930 இல் உருவாக்கப்படத் தொடங்கிவிட்டன . ஹெல்மெட் , பறவைகளின் இறக்கை போன்ற அமைப்புகளுடன் ஹெலிகாப்டரிலிருந்து எட்டி குதித்தால் போதும் . இதில் ஒருவரின் வேகம் மணிக்கு 165 கி . மீ . ஆகும் . உடலை சரியானபடி அமைத்துக்கொண்டால் மணிக்கு 250 கி . மீ வேகத்தில் பறந்து நிலத்தை அடையலாம் . இன்றைய விங் சூட்டை பின்லாந்து நா்ட்டைச் சேர்ந்த ஜாரி குவாஸ்மா என்பவர்தான் உருவாக்கினார் . பாய்ண்ட்பிரேக் என்ற படத்தில் விங் சூட்டில் குழுவாக பறக்கும் காட்சி வரும் . அதைப் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் உடலை எப்படி கட்டுப்படுத்தி வேகத்தை குறைக்கவும் அதிகரிக்கவும் செய்கிறார்கள் என்பதை அறியலாம் . பறவைகள் காற்றில் பறப்பதற்கும் , அந்த திறமை இல்லாத மனிதர்கள் காற்றில் பறப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு . விங் சூட்டின் வடிவத்தை ஏரோபில் என்று கூறு்வார்கள் . ஒலி வெவ்வேறு ஊடகங்களில் செல்லும்போது வேகம் மாறுபடுவது ஏன் ? ஊடகங்களில் அடர்த்தி மாறுபடும்போது ஒலியின் தன்மை மாறுபடுகிறது . ஒ

மனிதர்களை நம்பாமல் வாழும் இளம் தொழிலதிபர் ரோபோவுடன் காதலில் வீழ்கிறார்! - ஐயம் நாட் எ ரோபோட் - கொரிய சீரியல்

படம்
                aji3 robot         ஐயம் நாட் எ ரோபோட் 30 பிளஸ் எபிசோடுகள் கிம் பினான்சியல் நிறுவனத்தின் இயக்குநர் கிம் யின் கியூ. தனி மாளிகை ஒன்றில் அலர்ஜி காரணமாக தனியாகவே வாழ்கிறான். பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தனியாக வாழ்க்கை நண்பர்கள் இல்லை. விருந்தினர்கள் இல்லை. அனைத்தும் மெஷின்கள்தான். இந்த நிலையில் அவனுக்கு சான்டா மரியா என்ற ரோபோ நிறுவனத்திடமிருந்து அழைப்பு வருகிறது. மனிதர்களைப் போன்ற உணர்வுகளைக் கொண்ட ரோபோவை தயாரித்துவிட்டோம் என்று. அப்படியா என ஆச்சரியத்தோடு செல்கிறான். பார்த்தவுடனே அஜி3 என்ற ரோபோவை பிடித்து விடுகிறது. அதனை வாங்கிக்கொள்வதோடு அவர்களின் ஆராய்ச்சிக்கும் உதவுவதாக சொல்லுகிறான். கிம் பரிசோதனை செய்து பார்ப்பதாக கூறும் நேரத்தில் ரோபோவை அனுப்பி வைக்கமுடியாத தவறு ஒன்றை ஆராய்ச்சியாளர் செய்துவிடுகிறார். இதனால் டாக்டர் ஹான், தனது முன்னாள் காதலி ஜோ ஜியாவை ரோபோ போல நடிக்க கேட்டுக்கொள்கிறார். அஜி3 யின் முகம் கூட ஜோ ஜியாவை மாடல் செய்ததுதான். அந்த நேரத்தில் பணக்கஷ்டத்திலும் தங்க இடம் இல்லாமலும் கஷ்டப்படும் ஜியா அதனை ஏற்கிறாள். கிம்மின் வீட்டுக்கு சென்று நடிக்கத் தொடங்குகிறாள்.

குளூட்டேன் - ஒவ்வாமைக்கு மூல காரணமா?

படம்
gluten குளூட்டேன் இன்று குளூட்டன் இல்லாத உணவுப்பொருட்களை மக்கள் தேடத் தொடங்கியுள்ளனர். குளூட்டேன் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதன்விளைவாக குளூட்டேன் இல்லாத பிரெட், பாஸ்தா உள்ளிட்டவற்றையும் பிற பொருட்களை மக்கள் தேடி வருகின்றனர். மரபணுரீதியாக ஏற்படும் பிரச்னைகளால் ஒவ்வாமை இன்று பெருமளவு தலைதூக்கி வருகிறது. குளூட்டேன் என்பது கோதுமையில் காணப்படும் சங்கிலி அமைப்பிலான ஓர் புரதம். வெறும் கோதுமையை வாயிலிட்டு மென்றால் சூயிங்கம் போல திரண்டு வரும். இந்த தன்மைக்கு குளூட்டேன்தான் காரணம்.  பிரெட் தயாரிப்பில், குளூட்டேன் முக்கியமான பகுதிப்பொருள். அதன் நெகிழ்வான தன்மைக்கு குளூட்டேன் உதவுகிறது. கோதுமை மாவில் நீரைச் சேர்த்து குளூட்டேனை நீக்க முடியும். நேரடியாக கோதுமையிலிருந்து குளூட்டேனை நீக்குவது சாத்தியம் அல்ல. குளூட்டேன் இல்லாத உணவு காய்கறிகள், பழங்கள், இறைச்சி ஆகியவற்றில் குளூட்டேன் இல்லை. இன்று குளூட்டேன் நீக்கப்பட்ட நிறைய உணவுப்பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் விலை பிற பொருட்களை விட விலை சற்று கூடுதலாக இருக்கும். ஒவ்வாமை ஏற்படுவதன் முக்கியக் காரண

குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி! - பாதிப்புகளை எப்படி குறைப்பது?

படம்
இன்று குழந்தைகளுக்கு ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்கும் பழக்கம் பின்பற்றப்படுவதில்லை. கிராமம், நகரம் இரண்டிலும் அதிகரித்துள்ள பொருளாதார தேவை, குழந்தை வளர்ப்பையும் பாதித்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஆறுமாதங்களுக்கு உள்ளாக தாய்ப்பால் புகட்டுவதை தவிர்த்து திட  உணவுகளை தரத் தொடங்குகின்றனர். இதனால் குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியை பாதிக்கும் குறைபாடுகள், நோய்கள் ஏற்படுகின்றன. இதில் முக்கியமானது ஒவ்வாமை. இன்று பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் காரணமாக ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னை குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. எக்சிமா என்பது இதில் முக்கியமான பாதிப்பு. இதனை குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஆங்கில மருத்துவமுறையில் ஆயின்மென்டுகள் மூலம் தீர்ப்பதாக கூறினாலும், அது இருக்கின்ற இடத்தில் அதனை உள்ளே அழுத்தி மறைப்பதே.. ஒவ்வாமை ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக இருப்பவை பால் பொருட்கள், வேர்க்கடலை, பாதாம் பருப்பு உள்ளிட்டவை. இவற்றை நேரடியாக எடுத்துக்கொண்டாலும் அல்லது உணவின் பகுதிப் பொருட்களாக இருந்தாலும் ஒவ்வாமை பாதிப்

அலர்ஜியை ஏற்படுத்தும் சோடியம் லாரல் சல்பேட்! - அறிந்துகொள்ளுங்கள்!

படம்
pixabay சோடியம் லாரல் சல்பேட்டின் ஆபத்து என்ன? நாம் தினசரி பயன்படுத்தும் பற்பசை, முகத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்கள் என பெரும்பாலான பொருட்களில் இந்த வேதிப்பொருள் உள்ளது. எதற்கு? முகத்தை ஃபேஸ்வாஷ் போட்டு கழுவியதும் எண்ணெய் நீங்கியது போன்ற உணர்வு ஏற்படுகிறது அல்லவா அதற்குத்தான். முக்கியமாக, அழகு சாதனப் பொருட்களில் உள்ள எண்ணெய் பொருட்களையும் பிற பொருட்களையும் ஒன்றாக சேர்க்க சோடியம் லாரல் சல்பேட் அவசியம். பொதுவாக தோல் நமது உடலில் பல்வேறு நோய்களைத் தடுக்கும் விதமாக உள்ளது. இதனை பாதிப்பதில் முக்கிய வேதிப்பொருளாக சோடியம் லாரல் சல்பேட் உள்ளது. தோலின் அடுக்குகளை பாதித்து அவற்றின் நோய் தடுக்கும் திறனை அகற்றுகிறது. பின் அதில் ஓவ்வாமையை ஏற்படுத்துகிறது.  ஏன் இதனைப் பயன்படுத்துகிறார்கள் என்று உங்களுக்கு கேள்வி எழும். காரணம் இதன் விலை மிகவும் குறைவு. மேலும் இதன் அளவு 0.5 முதல் 2.5 கிராம் வரையில்தான் இப்பொருட்களில் இருக்கிறது. இதனை நீங்கள் உடலில் அதிகநேரம் வைத்திருப்பதில்லை என்பதால் இதன் பாதிப்பும் குறைவு. எனவே பல்வேறு நாடுகளில் இதன் அளவைக் குறைத்து பயன்படுத்தி வருகின்றனர். எக்

தலைமுடியால் நமக்கு அலர்ஜி ஏற்படுமா?

படம்
மிஸ்டர் ரோனி நமது தலைமுடி நமக்கு அலர்ஜி ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதா? அலர்ஜி என்பது விலங்குகளின் அல்லது நமது தலைமுடியால் ஏற்படும் வாய்ப்பு இல்லை. காரணம், அவற்றில் கெராட்டின் என்ற புரதம் மட்டுமே இருக்கிறது. ஆய்வுப்படி இதில் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தப் பொருட்களும் கிடையாது. ஆனால், விலங்குகளின் எச்சில், தோல் செல்கள் நமக்கு அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு ள்ளது. விலங்குகளின் முடி நமது உடலுக்குள் சென்றால் அவை பாதிப்பை ஏற்படுத்தலாம். அதுவும் பெரியளவு பாதிப்பு இருக்காது. நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்

அலர்ஜி, உடல் சோர்வு இரண்டுக்குமான தொடர்பு!

படம்
- அலர்ஜி, உடல் சோர்வு இரண்டுக்கும் தொடர்பு உண்டா? வெயில், மழைக்காலத்தின்போது பலரும் சந்திக்கும் பிரச்னை உடல் வறட்சி, சளி உள்ளிட்ட பிரச்னைகள், வெயில், வியர்வை, மழையின் ஈரம் ஆகியவற்றின்போது உடலில் நுண்ணுயிரிகளின் பாதிப்பால் படர்தாமரை, எரிச்சல் ஆகியவை ஏற்படுகின்றன. அலர்ஜியின்போது உடலுக்குள் வரும் நோய்க்கிருமிகளை நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு எதிர்த்து போரிடுகிறது. அதன்பொருட்டு உடலின் பிற அமைப்புகளுக்கான சக்தி குறைகிறது. அதனால்தான் உடல் அலர்ஜியின்போது சோர்வுறுகிறது. அப்போது நீங்கள் வேறு வித உடல் உழைப்பில் ஈடுபட்டால், உடலில் நோய் எதிர்ப்பு பணிகள் நலிவுறும். நன்றி: லிவ் சயின்ஸ்