இடுகைகள்

இங்கிலாந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிக நிறுவனங்களுக்கு சமூக பொறுப்புணர்வு உண்டு என்பதை நிரூபித்தவர்! - தி பாடி ஷாப் - அனிதா ரோடிக்

படம்
                சூப்பர் பிஸினஸ்மேன் அனிதா ரோடிக்     அனிதா , தனது வணிக வெற்றியை விட அதனைப் பெற எந்த வழியில் சென்றார் , எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தினார் என்பதற்காக அவரை பலரும் வியந்து போற்றுகின்றனர் . 2007 ஆம் ஆண்டு அனிதா காலமானார் . வணிகம் சார்ந்து சூழலை பாதிக்காமல் வணிகம் செய்வது பேச்சாக இருந்த காலகட்டத்தில் அதனை செயலாக மாற்றியவர் அனிதா . இவர் வெஸ்ட் சசெக்ஸ் பகுதியில 1942 ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று பிறந்தார் . இத்தாலியைச் சேர்ந்த அகதிகளாக இவரது பெற்றோர் இங்கிலாந்தில் குடியேறியவர்கள் . இவர்கள் இங்கிலாந்தில் கஃபே நடத்திக் கொண்டிருந்தார்கள் . அனிதாவின் அம்மா , அவரது அப்பாவின் தம்பி ஒருவரையே பின்னாளில் திருமணம் செய்துகொண்டார் . ஹென்றி என்ற இவர் , சில ஆண்டுகளிலேயே காலமானார் . கல்வி கற்று இஸ்ரேலில் பணிபுரிந்தார் அனிதா . பிறகு , இவரது அம்மா மூலம் கோடன் ரோடிக் என்பவர் அறிமுகமானார் . அனிதாவுக்கும் ரோடிக்கும் பழக்க வழக்கங்கள் ஒன்றாக இருக்க சில நாட்களிலேயே அவரது வீட்டில் தங்கி ஒன்றாக வாழத் தொடங்கினார் இவர்களது வாழ்க்கை அதன் பிறகு நாற்பது ஆண்டுகள் ஒன்றாகவே கழிந

அடையாளம் தெரியாத கடவுள் காப்பாற்றும் கிராஃபிட்டி எனும் புரட்சிகர கலை!

படம்
இங்கிலாந்தில் பாங்ஸி என்ற கலைஞர் அரசியல் கிராஃபிட்டிகளை வரைந்தே புகழ்பெற்றவர். அவரை பாங்ஸி என்று சொல்லி அழைத்தாலும் கூட அவரது முகத்தை யாருமே பார்த்தது இல்லை. அமெரிக்காவில் தான் கிராஃபிட்டி முதலில் தொடங்கியது. அரசு, தனியார் என்றெல்லாம் கிடையாது. உடனே ஸ்ப்ரே பெயின்டை குலுக்கிக்கொண்டு வரையத்தொடங்கிவிடுவதுதான் கிராஃபிட்டி கலைஞர்களின் ஸ்டைல்.  சட்டவிரோதம் என்று சொல்லி காவல்துறை அடிக்கடி துரத்தினாலும் அதற்கெல்லாம் கிராஃபிட்டி கலைஞர்கள் பயப்படுவதில்லை. ஆரஞ்ச் தெலுங்குபடத்தில் ராம்சரண் கிராஃபிட்டி வரைந்துகொண்டு கல்லூரியில் படிப்பவராக நடித்திருப்பார். இந்த கிராஃபிட்டி என்ற வார்த்தை கிரேக்கத்தின் கிராபீன் என்ற வார்தையிலிருந்து உருவானது. இப்படி வரைபவர்கள் சிலர் மட்டும்தான் பெயரை எழுதுவார்கள். பலர் ஓவியத்தை வேகமாக வரைந்துவிட்டு இடத்தை காலி செய்துவிடுவார்கள்.  இப்போது பல்வேறு முரல் கலைஞர்களும் கூட்டமாக சுற்றுவது இன்ஸ்டாவில்தான். சுவர்களில் வரைவதும் பெரிதாக மவுசு குறையாமல் சென்றுகொண்டிருக்கிறது.  இங்கிலாந்தின் பிரிஸ்டலில்தான் பாங்ஸி வசிக்கிறார். கிராஃபிட்டி கலைஞர் என்றால் பலருக்கும் இவர்தான் நினைவுக

நோயிலிருந்து ஒருவரைக் காப்பாற்ற ஒரு டோஸ் தடுப்பூசி போதும்!

படம்
                      ஒரு டோஸ் போதும் ! இங்கிலாந்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான அமைப்பின் தலைவர் கேட் பிங்காம் , ஒரு முறை தடுப்பூசியை உடலில் செலுத்திக்கொண்டால் போதும் . அதுவே பெருந்தொற்றிலிருந்து ஒருவரைக் காப்பாற்றும் என்று கூறினார் . மருத்துவர் பால் ஸ்டோபில்ஸ் ஒருமுறை செலுத்திக்கொள்ளும் தடுப்பூசியை அவசியமானது என்று கூறியதோடு , இரண்டாவது பூஸ்டர் ஷாட்டை போட்டுக்கொள்வது கொரோனாவிலிருந்து ஒருவரைக் காக்கும் என்று கூறினார் . இருமுறை தடுப்பூசியை போடவேண்டுமென்று கூறிவந்த இந்தியா , இப்போது தடுப்பூசி இல்லாத நெருக்கடியில் ஒரு டோஸ் மட்டும்தான் மக்களுக்கு வழங்கி வருகிறது . மருத்துவமனைகளிலும் கூட இரண்டாவது டோஸை இல்லையென்று சொல்லிவரும் நிலை உள்ளது . ட்விட்டரில் இதுதொடர்பாக விவாதங்கள் நடந்தன . இறுதியாக நிதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர் விகே பால் கோவிஷீல்டு மருந்து மக்களுக்கு இரண்டு டோஸாக வழங்கப்படுவது உறுதி . அதில் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார் . இங்கிலாந்தில் முதலில் தடுப்பூசியை ஒருமுறை மட்டுமே வழங்க ஏற்பாடானது . அப்போதைய நிலையில் ஏராளமான உயிர்கள் பறிபோய்கொண்டிருந்தன

டேட்டா கார்னர்! - நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியை பார்க்க மெனக்கெடும் இங்கிலாந்து மக்கள்!

படம்
  5.2 மில்லியன் அளவிலான பாதுகாப்பு கேமராக்கள் இங்கிலாந்திலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸை முதல் அலையின்போது கட்டுப்படுத்த 20 நாட்கள் இங்கிலாந்து அரசுக்கு தேவைப்பட்டது.  அமாங் அஸ் எனும் விளையாட்டு உலகமெங்கும்  74.8 மில்லியன் அளவுக்கு மக்களால் தரவிறக்கப்பட்டுள்ளது.  உலகிலுள்ள ஒரு சதவீத வேளாண் நிறுவனங்கள் 70 சதவீத நிலங்களைக் கட்டுப்படுத்தி பயிர் விளைச்சலை மக்களுக்கு வழங்குகின்றன.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 சதவீத நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு மூன்று மாதங்களுக்குள்ளாக உளவியல் சிகிச்சையும் தேவைப்பட்டது.  உலகில் 3 சதவீத விளையாட்டு மேம்பாட்டாளர்கள் நினென்டோ நிறுவனத்தின் விளையாட்டு சாதனங்களை மேம்படுத்த உழைத்து வருகின்றனர். இப்பணி கடுமையானது.  இங்கிலாந்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சிகளைக் காண 750 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை, முந்தைய ஆண்டில் செலவிடப்பட்ட தொகையை விட அதிகமாகும். 

இங்கிலாந்தில் தேர்ச்சியைக் கணிக்கும் அல்காரிதம்! - ஏழை மாணவர்களை ஓரங்கட்டும் புதிய முறை

படம்
          தேர்ச்சியைக் கணிக்கும் அல்காரிதம் ! இங்கிலாந்தில் கொரோனா தொற்று பிரச்னையால் , மாணவர்களின் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டு முந்தை ஆண்டு மதிப்பெண்களே வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டது . ஆனால் இதற்கிடையில் அவர்களின் மதிப்பெண்களை மதிப்பிட கல்வி அமைச்சகம் அல்காரிதம் ஒன்றைப் பயன்படுத்தியது . இதன் விளைவாக வெளியான தேர்வு முடிவுகளில் ஏ கிரேட் மாணவர்கள் 40 சதவீதம் பேர் மிகவும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர் . ஆசிரியர்களின் கணிப்பை விட அல்காரிதத்தின் கணிப்பு முறை மாணவர்களின் தேர்ச்சி தரத்தை குறைத்துள்ளது நாடெங்கும் சர்ச்சையானது . மாணவர்கள் தெருவுக்கு வந்து போராடத்தொடங்கினர் . இப்பிரச்னையைத் தீர்க்க இங்கிலாந்து கல்வி அமைச்சகம் , ஆசிரியர்களின் யூக தேர்ச்சி முறையை செயல்படுத்துவதாக அறிவித்துவிட்டது . அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலரும் அல்காரித முறையில் தேர்ச்சியை இழந்துள்ளனர் . இவர்கள் சட்டம் , இலக்கியம் ஆகிய படிப்புகளை படித்தவர்கள் ஆவர் . அல்காரிதத்தில் ஆசிரியர்களின் பரிந்துரை , மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண்கள் ஆகியவை உள்ளீடு செய்யப்படவில்லை . எனவே வ

என் அப்பாவின் வாழ்கையிலிருந்துதான் மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்! - டெரி வெய்ட், மனிதநேய செயல்பாட்டாளர்

படம்
  டெரி வெய்ட் 1987-1991 காலகட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர் டெரி வெய்ட் உலகின் கவனத்தை ஈர்த்தார் . ஹிஸ்புல்லா இயக்கத்தினரால் ஐந்து ஆண்டுகள் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தவர் இவர் . லெபனானில் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்டவருக்கு இன்று வயது 81 ஆகிறது . உங்கள் சிறுவயது எப்படி தொடங்கியது ? நான் செஷையர் பகுதியில் பிறந்தேன் . நூற்பு ஆலை அருகே இருந்த ஸ்டைல் என்ற கிராமத்தில் வளர்ந்தேன் . அது தொழில்நுட்ப புரட்சியின் தொடக்க காலம் . சாமுவேல் கிரெக் ஊரக தொழில்துறையை உருவாக்கி வந்தார் . பின்னர் அந்த தொழிற்சாலைகள் கைவிடப்பட்டன . இன்று அது அருங்காட்சியமாகி உள்ளது . உங்கள் அப்பா காவல்துறை அதிகாரி அல்லவா ? அவரது சம்பளத்திற்கு நாங்கள் நல்ல வீட்டில்தான் வாழ்ந்தோம் . அப்பாவின் குறைவான சம்பளத்தில் பெரிய வீடுதான் அது . அங்கேயே தோட்டமும் இருந்தது . நாங்கள் எங்கள் வீட்டிற்கான பழங்கள் , காய்கறிகளை விளைவித்துக்கொண்டோம் . சில சமயங்களில் குற்றவாளிகளை விசாரணை செய்யவும் வீட்டின் அறைகளைப் பயன்படுத்துவார் . முடிந்தவரை அங்கு அமைதி நிலவுமாறு

தேர்ச்சியை கணிக்க அல்காரிதங்களே சிறந்தவையா? - மாணவர்களை பிளவுபடுத்தும் அல்காரிதங்கள்

படம்
              தேர்ச்சியைக் கணிக்கும் அல்காரிதம் ! இங்கிலாந்தில் கொரோனா தொற்று பிரச்னையால் , மாணவர்களின் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டு முந்தை ஆண்டு மதிப்பெண்களே வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டது . ஆனால் இதற்கிடையில் அவர்களின் மதிப்பெண்களை மதிப்பிட கல்வி அமைச்சகம் அல்காரிதம் ஒன்றைப் பயன்படுத்தியது . இதன் விளைவாக வெளியான தேர்வு முடிவுகளில் ஏ கிரேட் மாணவர்கள் 40 சதவீதம் பேர் மிகவும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர் . ஆசிரியர்களின் கணிப்பை விட அல்காரிதத்தின் கணிப்பு முறை மாணவர்களின் தேர்ச்சி தரத்தை குறைத்துள்ளது நாடெங்கும் சர்ச்சையானது . மாணவர்கள் தெருவுக்கு வந்து போராடத்தொடங்கினர் . இப்பிரச்னையைத் தீர்க்க இங்கிலாந்து கல்வி அமைச்சகம் , ஆசிரியர்களின் யூக தேர்ச்சி முறையை செயல்படுத்துவதாக அறிவித்துவிட்டது . அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலரும் அல்காரித முறையில் தேர்ச்சியை இழந்துள்ளனர் . இவர்கள் சட்டம் , இலக்கியம் ஆகிய படிப்புகளை படித்தவர்கள் ஆவர் . அல்காரிதத்தில் ஆசிரியர்களின் பரிந்துரை , மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண்கள் ஆகியவை உள்ளீடு செய்யப்படவில்லை . என

சர்ச்சை பிளஸ் சாகசம் = மாரடோனா!

படம்
              தங்கச் சிறுவன் மாரடோனா ! அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் டியாகோ மாரடோனா 60 வயதில் மாரடைப்பால் காலமானார் . 1986 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு உலகப்கோப்பை பெற்றுத்தந்த வீரர் என மாரடோனா புகழப்படுகிறார் . இப்போட்டியில் காலிறுதிச்சுற்றில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஹேண்ட் ஆப் காட் கோல் முறை அனைத்து ஊடகங்களிலும் புகழப்பட்டு , நூற்றாண்டிற்கான கோல் என வரலாற்றில் இடம்பிடித்தது . இதுதொடர்பாக உருவான ஆவணப்படத்தில் அந்த கோல் , ஃபாக்லாந்து போரில் இங்கிலாந்து பெற்ற வெற்றிக்கான பழிவாங்கல் என்று குறிப்பிட்டார் மாரடோனா . கால்பந்து மைதானத்திலும் , நிஜ வாழ்க்கையிலும் கலககாரராக மாரடோனா இருந்தார் . மாஃபியா குழுக்களோடு தொடர்பு , பெண்களிடம் அதீத ஈர்ப்பு , கோகைன் , மதுபானம் ஆகியவற்றின் மீதான பிரியம் எப்போதும் ஊடக வெளிச்சம் இவர்மீது படும்படியாகவே வாழ்ந்தார் . மாரடோனாவுக்கு நான்கு மனைவிகள் மூலம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர் . ப்யூனோ ஏர்ஸின் வெளிப்புறத்தில் வில்லா டேவடோ என்ற இடத்தில் மாரடோனா வளர்ந்தார் . வறுமையான சூழலில் மூன்று வயதில் கால்பந்தை பரிசாக பெற்றார் . கால்பந்து விளை