ஒற்றுமையை அழித்த படுகொலை! - மு.ராவின் வஞ்சகம்!
முதுகுளத்தூர் படுகொலை கா.அ.மணிக்குமார் பாரதி புத்தகாலயம் ரூ.150 4வது சென்னை புத்தகத்திருவிழா, YMCA இம்மானுவேல் சேகரன் 1957 ஆம் ஆண்டு முதுகுளத்தூரில் நடந்த தேவர், பள்ளர் படுகொலைகளின் பின்னணியை இந்நூல் அதற்கு முன்னும் பின்னுமான ஆதாரங்களுடன் விளக்குகிறது. எகனாமிக் பொலிட்டிக்கல் வீக்லி இதழில் மணிக்குமார் பங்களித்திருப்பது அவரின் எழுத்துக்களில் தெரிகிறது. அந்நாளைய தினசரிகளில் வெளிவந்த பல்வேறு செய்திகளை கதம்பமாக கோர்த்து தேவர்கள் எப்படி கலவரங்களை திட்டமிட்டு நிகழ்த்தி பள்ளர்களின் வீடுகளை கொள்ளையடித்தார்கள், தாழ்த்தப்பட்டவர்களை கொன்றார்கள், விவசாய நிலங்களை அழித்தார்கள் என விரிவான சித்திரத்தை எழுப்புகிறார். அதோடு குருபூஜை என்ற பெயரில் சமூக இனக்குழுக்களிடை பதட்டம் ஏற்படுத்தும் தேவர்(கள்ளர், மறவர், அகமுடையோர்) உள்ளிட்டோரின் செயல்களை சீர்தூக்கி பார்க்கும் இவரின் பார்வை முக்கியமானது. தேவர்களை எதிர்கொள்ள பள்ளர்களும் தயாராக இருந்ததையும், காங்கிரஸ் கட்சி அரசியலுக்காக செய்த பாகுபாட்டு விளையாட்டையும் இந்நூல் வெட்ட வெளிச்சமாக்குகிறது. முத்துராமலிங்கர் அமைதிப்பேச்சுவார்த்தையில் இம்ம