இடுகைகள்

இந்தியாவின் முதல் கேபினட் அமைச்சரவை! - பதினான்கு உறுப்பினர்கள் - இந்தியா 75

படம்
  இந்தியா 75 இந்தியாவின் முதல் கேபினட் அமைச்சரவை ஜவகர்லால் நேரு பிரதமர் நவ.14, 1889 - மே 27, 1964 சர்தார் வல்லபாய் படேல் உள்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அக்.31, 1875 - டிச. 15, 1950 ஆர்.கே. சண்முகம் செட்டி நிதித்துறை  அக்.17, 1892 - மே 5, 1953 சர்தார் பல்தேவ் சிங் பாதுகாப்புத்துறை  ஜூலை 11, 1902 - ஜூன் 29, 1961 ராஜேந்திர பிரசாத் விவசாயம் மற்றும் உணவு டிச.3, 1884 - பிப்.28, 1963 மௌலானா அபுல்கலாம் ஆசாத் கல்வித்துறை நவ.11, 1888 - பிப்.22, 1958 ஜான் மத்தாய் ரயில்வே மற்றும் போக்குவரத்துத்துறை ஜன் 10, 1886 - நவ.2, 1959 பி.ஆர். அம்பேத்கர் சட்டம் ஏப்ரல் 14, 1891 - டிச.6, 1956 ஜெகஜீவன்ராம் தொழிலாளர் துறை  ஏப்.5, 19008 - ஜூலை 6, 1986 சிஹெச் பாபா வணிகத்துறை ஜூலை 22, 1910, ஜூலை 29, 1986 ரஃபி அஹ்மத் கித்வால் தகவல்தொடர்பு பிப்.18, 1894 - அக்.24, 1954 ராஜகுமாரி அம்ரித் கௌர் சுகாதாரத்துறை பிப்.2, 1887 - பிப்.6, 1964 சியாம பிரசாத் முகர்ஜி  தொழில்துறை மற்றும் விநியோகம் ஜூலை 6, 1901 - ஜூன் 23, 1953 என்வி காட்கில் மின்சாரம் மற்றும் சுரங்கம் ஜன் 10, 1896 - ஜன் 12, 1966 டைம்ஸ் ஆப் இந்தியா

பறவையின் மூளை இயக்கங்களை பாடல்களாக மாற்றி மனிதர்களுக்கு உதவலாம்! - புதிய ஆராய்ச்சி

படம்
  பறவைகளின் மூளையில் ஒரு பாடல் பறவையியல் ஆராய்ச்சியாளர்கள், அதன் மூளை இயக்கத்தை ஆராய்ந்து அதனை பாடலாக மாற்றியிருக்கிறார்கள். பாட்டு எப்படியிருக்கும் என்று இப்போது நீங்கள் கேட்க கூடாது. எதற்கு இப்போது இந்த ஆராய்ச்சி என்று கேட்டால் கட்டுரையை நீங்கள் தாராளமாக வாசிக்கலாம்.  அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பறவைகளின் மூளை இயக்கத்தை பாடலாக மாற்றும் ஆராய்ச்சியை செய்துள்ளனர். இதன்மூலம் பேச முடியாத மக்களுக்கு குரல் அமைப்புகளை வடிவமைக்க முடியும் என்பதுதான் அவர்கள் சொல்லும் சேதி.  தற்போதுள்ள மருத்துவக்கருவி மூலம் ஒரு நிமிடத்திற்கு இருபது வார்த்தைகளை பேச முடிகிறது.  யோசித்துப் பாருங்கள். நீங்கள் பேசுவதை கூறும் கருவியை விட என்ன பேசலாம் என்று நினைப்பதை பிராஸ்தெடிக் கருவி மூலம் பிறருக்கு தெரிய வைத்தால் பிரமாதமாக இருக்குமே என்கிறார் உளவியல் மற்றும் நரம்பு உயிரியல் பேராசிரியர் டிமோத்தி ஜென்ட்னர்.  ஸீப்ரா ஃபின்ச் என்ற பறவைகளின் உடலில் எலக்ரோடுகளைப் பொருத்தி, செயற்கை நுண்ணறிவு மூலம் அதன் மூளை இயக்கங்களை படம்பிடித்துள்ளனர். இதன்மூலம் மூளை எப்படி குரல்  தசைகளை இய

மலேரியாவுக்கு புதிய முறையில் தடுப்பூசி தயாரிப்பு!

படம்
  மலேரியாவுக்கு புது மருந்து வெயிலுள்ள ப்ரூட் ஸ்மூத்தி குடிப்பது நல்லது என எலைட் இதழ்களில் எழுதுவார்கள். படித்திருப்பீர்கள். ஆனால் உடல் நலனுக்கு கொசு ஸ்மூத்தி வந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆராய்ச்சிகள் அப்படித்தான் அறிகுறிகளைக் காட்டுகின்றன.  லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மலேரியாவால் பாதிக்கப்பட்ட கொசுக்களின் உடலிலிருந்து ஒட்டுண்ணிகளை எடுத்து அதனை சுத்திகரித்து தடுப்பூசியாக பயன்படுத்த முடியுமா என்பதை சோதித்து வருகின்றனர். இந்த முறையில் வேகமாக ஒட்டுண்ணிகளை சேகரித்து அதனை சுத்திகரித்து தரமான மலேரியா தடுப்பூசியாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளனர்.  பிளாஸ்மோடியம் என்பதுதான் மலேரிய ஒட்டுண்ணி. இதுதான் பெண் அனோபிலஸ் கொசுக்களின் உடலைத் தாக்கி அக்கொசு கடிக்கும் போது மனிதர்களின் உடலில் நோயை ஏற்படுத்துகிறது.  பிளாஸ்மோடியம் தற்போது மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்துகளை எதிர்கொள்ளும் சக்தியை பெற்றுவருகிறது. எதற்காக மலேரியாவுக்கென திடீர் ஆராய்ச்சி? மலேரியாவால் உலகமெங்கும் 4 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இதில் 61 சதவீதம் பேர் குழந்தைகள்தான். அதுவும் ஐந

அலர்ஜி ஏற்படுவதில் மரபணுக்களின் பங்கு!

படம்
            உடலில் அலர்ஜி பாதிப்பு ஏற்படும்போது ஹிஸ்டமைன் என்ற ஹார்மோன் உடலில் எரிச்சல் , வீக்கம் என சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது . இதன் பணி என்பது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதல்ல . அலர்ஜி ஏற்படும்போது மட்டும் இப்படி நட்டு கழன்றது போல நடந்துகொள்ளும் . இதயத்திலுள்ள மின்தூண்டல் அளவு , ரத்த அழுத்த அளவு , வயிற்றிலுள்ள சீரணிக்கும் அமில அளவு ஆகிய்வற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் ஹார்மோன் இதுதான் . ஹிஸ்டாமைன் என்பதற்கென தனி இடம் கிடையாது . அனைத்து இடங்களிலும் பரம்பொருள் போலவே பார்க்க கிடைக்கும் . அலர்ஜி பாதிப்பு ஏற்படும் என்றால் அனைத்து பொருட்களும் உயிர் போகும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது . சில பொருட்கள் அலர்ஜி ஏற்படுத்துபவை என்றாலும் கூட அறிகுறிகளே இருக்காது . சில பொருட்கள் மட்டும் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு சித்திரவதை செய்துவிடும் . பொதுவாக உடனடியாக அலர்ஜி பாதிப்பு ஏற்படும் என்றால் இரண்டு மணிநேரம் தேவை . அதிகபட்சமாக ஆறு மணிநேரங்களில் அலர்ஜி பாதிப்புள்ளவருக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கும் . ஆ்ஸ்துமா இந்த வகையில் சற்று தாமதமாக பாதிப்பைத் தொடங்கினாலும் அதி

நோய் எதிர்ப்பு சக்தி தன்னுடனே போராடும் போராட்டம்! - ஒவ்வாமை எப்படி ஏற்படுகிறது?

படம்
        அலர்ஜி என பொதுவாக அனைவரும் சொல்வது இதைத்தான் . தூய தமிழில் இதனை ஒவ்வாமை என்று கூறலாம் . சாதாரணமாக பார்த்தால் தோல் சிவப்பது , கொப்புளஙகள் ஏற்படுவது , அதில் சீழும் ரத்தமும் கலந்து வருவது , பிறகு இதுவே தீவிரமானால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரும் கூட போகலாம் . இதனை மருத்துவ முறையில் பார்த்தால் நோய் எதிர்ப்பு சக்திக்கும் வெளியிலிருந்து உடலுக்குள் செல்லும் பொருட்களுக்குமான போர் என்று கூறலா்ம் . வளர்ந்து வரும் நாடுகள் , வளரும் நாடுகள் , வல்லரசு நாடுகளிலும் ஒவ்வாமை தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன . ஒவ்வாமை தொடர்பாக நான் மேலே கூறியவை மிகச்சில அறிகுறிகள்தான் . இதையும் தாண்டி மலக்கட்டு , வயிற்றுப்போக்கு , குழந்தைகளின் அதீத செயல்பாடு , மைக்ரேன் தலைவலி , மன அழுத்தம் , ஆஸ்துமா , கண்களில் நீர் கொட்டுவது , கண் எரிச்சல் , ரைனிடிஸ் ( மூக்கில் ஏற்படும் பாதிப்பு ), உடல் சோர்வு , தோலில் அரிப்பு , எடை குறைவு ஆகியவை ஏற்படும் . பொதுவான அலர்ஜியால் ஆஸ்துமா , கண் , மூக்கு எரிச்சல் , தோல் அரிப்பு , உணவு தொடர்பான பிரச்னைகள் ஆகியவை ஏற்படுகின்றன . இதற்கு அறிகுறிகளை மட்டும

வாய்தா கிடைக்காத வட்டார வழக்கு! -

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ் வாய்தா கிடைக்காத வட்டார வழக்கு இந்திய ஒன்றியத்தில் நிறைய வாய்க்கால் வரப்பு தகராறுகள் உண்டு. இவை மதம், இனம், மொழி  என பலதரப்பட்டது. இதில் முக்கியமானதாக தேசியக்கட்சிகள் மதத்தை நினைக்கின்றன. அதை முக்கியப்படுத்தி மக்களைப் பிரித்து மண்டலமாக்கினால் தேர்தலில் ஜெயித்து விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அதுவும் கூட கடினம்தான். தமிழ் பேசுபவர்களில்  நிறைய வேறுபாடுகள் உண்டு.  அதுதான் மண்டல ரீதியான வட்டார வழக்கு. கோவையிலும், ஈரோட்டிலும், திருவண்ணாமலையிலும் பேசுவது தமிழாக இருந்தாலும் அதில் என்ன பேசுகிறார்கள், எதைக் குறிப்பிடுகிறார்கள் என்று புரிந்துகொள்வது கடினம். குறிப்பிட்ட பொருளை என்ன வார்த்தை கொண்டு சொல்ல வருகிறார்கள் என்பதில்தான் அனைத்தும் மாட்டிக்கொள்கிறது. நான் சென்னைக்கு வந்த புதிதில் பேசும்போது, என்னுடைய ஊரில் இருப்பதாக நினைத்துக்கொண்டே பேசுவேன். இதெல்லாம் அறையில் இருந்த எனது ஊர்க்கார அண்ணன்களுக்கு சரிதான். அவர்கள் புரிந்துகொண்டார்கள். எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதுவே வெளியில் போய் பேசும்போது நிறைய பிரச்னைகள் கிளம்பின.  மயிலாப்பூரில் லக்கி என்ற ஸ்டேசனரி கடை உண்டு. அங

இந்தியாவின் முக்கியமான நிகழ்ச்சிகள்! இந்தியா 75

படம்
  இந்தியாவின் முக்கியமான நிகழ்ச்சிகள் இந்தியா 75 டெலிவரிக்கு ரெடி!  உலகம் முழுக்க இன்று இந்தியாவின் சமையல் பொருட்களை பயன்படுத்தி வருகின்றன. இப்போது அந்த பொருட்கள் இல்லாமல் ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.  2020ஆம் ஆண்டு 275. 5 பில்லியன் மதிப்பிலான பொருட்களை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா. இதில் பெட்ரோல், எண்ணெய், வைரம், அரிசி, மருந்துகள், நகை, கார்கள் ஆகியவை உள்ளடங்கும். அமெரிக்கா, சீனா, அரபு நாடுகள் நமது முக்கியமான வாடிக்கையாளர்கள்.  எல்லோருமே எஞ்சினியர்கள்தான் இப்படி கிண்டல் செய்தாலும் கூட ஆசியாவில் சிறந்த பொறியாளர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அரசு மானிய விலையில் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்து இருப்பதுதான். இதற்கான கட்டமைப்பு, நிதி ஆதாரம் எல்லாமே 1940 முதல் 50 களில் திட்டமிடப்பட்டது என்பதை யாரும் மறக்க கூடாது. வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் பெருமையை வெள்ளையர்களுக்கு புரிய வைத்து வென்றிருக்கிறார்கள் நமது எஞ்சினியர்கள்.  ஐடி ஆட்கள் ப்ரோ! ஐடி சார்ந்த சேவைகளை குறைந்த விலையில் அதிக தரத்துடன் செய்துகொடுப்பது இந்தியாதான். 1967ஆம் ஆண்டு த