இடுகைகள்

அமெரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிகரிக்கும் கொலைக்குற்றங்கள் - தடுமாறும் அமெரிக்க காவல்துறை

படம்
  கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் ஹாக்கின்ஸ். இவர் 2019 ஆம் ஆண்டு தொடங்கி மாகாணமெங்கும் புகைப்படங்களைக் கொண்ட பில்போர்டுகளை வைத்து வருகிறார். அதில், படுகொலையாகி குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத மனிதர்களின் முகங்கள் உள்ளன. எங்களை கொன்றவர்கள் யார்? என தலைப்பிட்டு புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தகவல் கொடுக்க காவல்துறையின் தொடர்புஎண் உள்ளது. ஹாக்கின்ஸ் எதற்கு இப்படி செய்கிறார்? ஏனெனில் 1995ஆம் ஆண்டு டிசம்பர் ஆறு   அன்று, அவரது மகன் ரெகி பத்தொன்பது வயதில் தெருவில் சுடப்பட்டு படுகொலையாகி கிடந்தார் 27 ஆண்டுகளாகியும் காவல்துறையால் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை. முயற்சிக்காமல் இல்லை ஆனால் குற்றவாளி கிடைக்கவில்லை.   அந்த ஆண்டில் நடைபெற்ற 838 கொலைகளில ரெகியும் ஒருவராக பட்டியலில் ஆவணப்படுத்தப்பட்டார். மகன்தான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்த   ஹாக்கின்ஸ் மனதளவில் நொறுங்கிப்போனார். அவர் கணக்காளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஹிப் ஹாப் இசைக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த இளைஞன், அங்குள்ள உள்ளூர் குழுக்களில் சேர்ந்து சிறுசிறு கடத்தல்களுக்கு குருவியாக செயல்பட்டு பின்னாளில் உயிர் இழந்துள்ளான். ரெகி என்ற ஹாக்கின

அமெரிக்காவில் அதிகரிக்கும் காலநிலைமாற்ற பதற்றம் - கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வானிலை ஆப்கள்

படம்
  காலநிலை மாற்ற பதற்றம் கொரோனாவுக்குப் பிறகு மக்களின் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. பலரும் வேலை என்பதை விட குடும்பம் முக்கியம் என மாறிவிட்டனர். சொந்த ஊருக்கு திரும்பி சென்று தெரிந்த வேலைகளைப் பார்க்கிறார்கள். அதைவிட முக்கியமாக எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்தில் வாழத் தொடங்கிவிட்டனர். அலுவலகத்தில் செய்து வந்த பணிகள் பெரும்பாலும் வீட்டில் இருந்தே செய்யுமாறு மாறிவிட்டன. பெருநிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்ப உத்தரவிட்டும் வேலை செய்தவர்கள் பணிக்கு திரும்பவில்லை. ஏராளமானோர் வேலையைக் கைவிட்டனர். இதெல்லாமே மனிதர்களின் பதற்றமான மனநிலையை அடையாளம் காட்டுவதுதான். பெருந்தொற்றுக்கு முன்பே வெப்ப அலை பிரச்னை இருந்தாலும் தற்போது அது தீவிரமாகிவருகிறது. அண்மையில் அமெரிக்காவின் டெக்ஸாஸில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தது. அங்கு வாழ்ந்தவர்கள் பீதியடைந்து, இங்கேயே இருக்கலாமா, வெப்பம் அதிகரித்தால் வேறு நகரங்களுக்கு போகலாமா என யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.   இவர்களின் உளவியல் பீதியை வானிலை ஆப்கள் மேலும் அதிகரித்தன. அமெரிக்கர்களில் 50 சதவீதம் பேர் வானிலை ஆப்களை பயன்ப

வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் வேளாண்மை!

படம்
  வெப்ப அலை தாக்குல்களால் பற்றாக்குறையாகும் உணவு தக்காளி விலை உயர்ந்தது பற்றி பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவசியமான கவலைதான். உலகம் முழுக்க வெப்ப அலை பாதிப்பு அதிகரித்து வருவதால், காய்கறி, பழங்கள், உணவுப்பயிர்கள் என அனைத்துமே மெல்ல அழிந்து வருகின்றன. சூரியனின் வெப்பம் காரணமாக, ஏராளமான உயிரினங்களுக்கு வாழ்விடமான கடலும் வளம் குன்றி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளில் வெப்பஅலை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூலை மாதம், எதிர்கொண்டதிலேயே அதிக வெப்பநிலை கொண்டதாக மாறி   மக்களை வதைத்தது. இன்று சந்தை முழுக்க உலகமயம் ஆகிவிட்டது. ஒரு நாட்டில் காய்கறி விளையாதபோது இன்னொரு நாட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கலாம். இந்த கோணம் தவறு என்று கூறமுடியாது. ஆனால் இதன் இன்னொருபக்கம் இருக்கிறது. இதன்படி, காய்கறிகள் பழங்கள் சந்தையில் கிடைக்கும். ஆனால் அதிக விலை வைத்து விற்கப்படும். எனவே, அனைவராலும் வாங்க முடியாது.   இப்படியான சூழல் ஏற்கெனவே உருவாகிவிட்டது. 2018ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் வெப்ப அலை தாக்குதல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு விளைவித்த உணவு

விண்வெளியில் பேரரசு - அமெரிக்காவை முந்தும் சீனா -இரண்டாவது அத்தியாயம்

படம்
  தியான்காங் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்வெளியில் பேரரசு – சீனாவின் மகத்தான கனவு சீனாவில் ஏராளமான ராக்கெட் ஏவுதளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை சீன தேசிய விண்வெளி நிர்வாக அமைப்பு, நிர்வாகம் மேற்பார்வை செய்துவருகிறது. சீனாவில் உள்ள முக்கியமான ராக்கெட் ஏவுதளங்களைப் பார்ப்போம். கோபி பாலைவனத்தில் உள்ள விண்வெளி மையத்தின் பெயர், தையுவான். இங்கிருந்து வானிலைக்கான செயற்கைக்கோள்கள ஏவப்படுகின்றன. கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையும் இங்கு சோதனை செய்திருக்கிறார்கள். சிச்சுவான் பகுதியில் ஷிசாங் செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு சீன கடல் தீவில் வென்சாங் விண்வெளி ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கு, விண்வெளிக்கு சென்று வரும் வீரர்கள் திரும்ப வந்திறங்குகிறார்கள். கூடவே, மனிதர்கள் இடம்பெறாத விண்கலன்களை அனுப்பி வைக்க இந்த ஏவுதளம் பயன்படுகிறது.   ஷாங்காய் நகரிலிருந்து இரண்டரை மணி நேரம் பயணித்தால், நிங்க்போ என்ற துறைமுகப் பகுதி வரும். இங்கு ராக்கெட்டுகளை ஏவும் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. வணிக ரீதியான செயல்பாடுகளை செய்வதற்கான இடம். இங்கு ஆண்டுக்கு நூறு வணிக ராக்கெட்டுகளை ஏ

பெருநிறுவனங்களின் அதீத வணிகத்தைக் கட்டுப்படுத்த துடிக்கும் உலக நாடுகள்!

படம்
  பெருநிறுவனங்களின் வணிக வெறி பெரு நிறுவனங்களை உலக நாடுகள் எதிர்க்க காரணம்! குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள வணிக நிறுவனங்கள் காலப்போக்கில் வலிமை கொண்டதாக மாறுகின்றன. இதன் விளைவாக, பல்வேறு சமூக, பொருளாதார கொள்கைகளை கூட இயற்றுவதற்கு அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பிரமாண்டமாக வளர்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கு, இப்படி வளரும் பெரு நிறுவனங்களால் வரி வருவாய் கிடைத்தாலும். அவை அதன் அதிகாரத்திற்கு அச்சறுத்தலாக மாறுகின்றன. குறிப்பாக, எண்ணெய், பருப்பு ஆகியவற்றின் விலையை அரசு குறைக்க நினைக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதால், அதை குறைக்கச் செய்யும் நடவடிக்கை என கொள்ளலாம். மேற்சொன்ன இரு பொருட்களையும் நாட்டின் சிக்கலான நிலையைக் கருதி, விலையை குறைத்துக்கொள்ள வியாபாரிகள் தயாராக இருக்கலாம். ஆனால், பெருநிறுவனங்கள் அந்த நேரத்தில் கிடைக்கும் அதிக லாபத்தை விட்டுவிட தயாராக இருப்பதில்லை. இதனால, நாட்டில் எண்ணெய், பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டாலும் அரசு அதை தடுக்க முடியாது. காரணம் பெருநிறுவனங்களின் பொருள் விநியோக கடைகள் அ

தொழிற்சாலை வேலை என்பது மத்தியதர வர்க்க மக்களைக் காப்பாற்றாது!

படம்
  தொழிற்சாலை வேலை எனும் மாயத்திரை தொழிற்சாலையில் வேலை எனும் மூடநம்பிக்கை தொழிற்சாலையில் வேலை என்பது உலகம் முழுக்க உள்ள அரசியல்வாதிகளால் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படுகிறது. உண்மையில் இன்று தொழிற்சாலைகள் எப்படி இயங்குகின்றன என்ற குறைந்தபட்ச புரிதல் உள்ளவர்கள் கூட இதை ஏற்க மாட்டார்கள். பேசுவதுதான் முக்கியம். பேசுவதை செயல்படுத்தினால்தானே பிரச்னை என அரசியல் தலைவர்கள் நினைக்கலாம். அப்படித்தான உலகம் முழுக்க நடப்பு இருக்கிறது. ‘’தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறும்போது சமூகத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், அடிமை முறை ஆகிய சமூக தீமைகள் ஒழியும்’’ என ஃபெர்னான்டோ கலியானி என்ற சிந்தனையாளர் கூறினார். அவர் இந்தக் கருத்தைக் கூறி 250 ஆண்டுகள் ஆகியும் அரசியல்வாதிகள் இதே கருத்தில் கடந்த காலத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். சிந்தனையாளர் கூறிய கருத்தில் பெரிய தவறு இல்லை. ஆனால், அது இன்றைய காலத்திற்கு பொருந்தாது. காலநிலை மாற்றம், மத்தியவர்க்கத்தின் வேலை, பொருளாதார வளர்ச்சி சுணக்கம், புவியியல் ரீதியாக அரசியல் நெருக்கடி என அனைத்துக்கும் சர்வரோக நிவாரணியாக தொழிற்சாலைகளைத் தொடங்குவதை அரசியல் தலைவர்கள் முன்வைக்க

காவல்துறைக்கு மாற்றாக பணியாற்றும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவன காவலர்கள் - அதிகரிக்கும் குற்றங்கள்

படம்
  பிங்கர்டான் நிறுவன பாதுகாப்பு காவலர்கள் அமெரிக்காவில் தனிநபர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு நிறுவனங்கள்! -   நம்பிக்கையிழந்து தடுமாறும் காவல்துறை 2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி, ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரை இனவெறி காரணமாக கொன்றார். இதற்கு அன்றைய அதிபர் ட்ரம்ப் தொடங்கி வைத்த வெறுப்புவாதம், இனவெறி, நிறவெறி என பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நடைமுறையில் காவல்துறையில் சேர்ந்த ஆட்கள் கூட காவல்துறையில் இப்படித்தான் நிலைமையா என பணியை விட்டு வேகமாக விலகி அடுத்தவேலைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதம் பேர் இப்படி காவல்துறைக்கு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பின்னாளில் விலகி விட்டதாக ஆராய்ச்சி அமைப்புகள் தகவல் கொடுக்கின்றன. பிலடெல்பியா, லாஸ்ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் காவல்துறைக்கு குற்றங்களை தடுக்க போதுமான அதிகாரிகள் இல்லை.இதனால் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை, வல்லுறவு ஆகியவை அதிகரித்து வருகின்றன. பிலடெல்பியாவில் ஏடிஎம் கொள்ளை அடிக்கப்பட்டு ஆறுமணிநேரங்களுக்கு பிறகு காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அரசு காவல்துற

'அந்த லெவல்' விற்பனைக்கு டீனேஜர்களை அடிமையாக்க வேண்டும் - அமெரிக்க நிறுவனங்களின் வணிக யுக்தி

படம்
  குழந்தைகளைக் கவர பெருநிறுவனங்கள் என்ன செய்கின்றன? மிகவும் எளிமையான விஷயம். வறுத்த கோழி விற்கும் நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம். அவர்களின் அடிப்படையான அடையாளம் இரண்டு நிறங்களாக இருக்கும். சிவப்பு, மஞ்சள் அல்லது வெள்ளை இப்படி.. இவர்கள் தங்களுக்கென தனி லோகோ ஒன்றை வைத்திருப்பார்கள். பழைய உறைந்துபோன இறைச்சியை சூடுபடுத்திக் கொடுத்தாலும் அதை எப்படி அலங்காரம் செய்து கொடுக்கிறார்கள், அதை விளம்பரப்படுத்தும்போது என்னவிதமாக ஒலியை உருவாக்கிக் காட்டுகிறார்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது. ஆறு மாத குழந்தைகளால் டிவி சேனல்களில் காட்டப்படும் படங்களை உள்வாங்கிக் கொள்ள முடியும் என மேற்குலக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். 36 மாத குழந்தைகளால் நூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் லோகோக்களை நினைவுகூர முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.   விளம்பரங்களில் காட்டப்படும் பெருநிறுவனங்களின் எண்ணிக்கையை நினைவுகூர்ந்து கூறும் திறன் என்பது குழந்தைகள் வளர வளர அதிகரித்துக்கொண்டே செல்லும். கடையில், தனக்குத் தேவையான பொருட்களை வாங்கும் போது, அவர்கள் தங்கள் நினைவில் உள்ள பெருநிறுவனங்களின் பிராண்டுகளுக்கு முக்கியத்துவ

வயதான பெண்மணிகளைத் தேர்ந்தெடுத்து வல்லுறவு செய்த மர்ம ஆசாமி

படம்
  ஒரே ஆண்டில் மக்களை மீளாத பயத்தில் ஆழ்த்த முடியுமா? அதை வல்லுறவு ஆசாமி ஒருவர் செய்தார். இவரை வெஸ்ட் சைட் ரேபிஸ்ட் என்று அழைக்கிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1974-1975ஆம் ஆண்டில் மட்டுமே 33 பெண்களை மர்ம ஆசாமி வல்லுறவு செய்தார். அதில் பத்து நபர்களைக் கொன்றார். இறந்த பெண்கள் அனைவருமே 63 – 92 வயது கொண்டவர்கள். முதிய பெண்களை தேடிக் கொல்வதால் பலரும் பீதியடைந்தனர். எனவே, சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்து துப்பாக்கி, கத்தி, கோடாரி என வாங்கத் தொடங்கினர். எல்லாம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத்தான்… வேறு எதற்கு? யார் கொலையாளி என பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களையே சந்தேகமாக பார்த்துக்கொண்டார்கள். தூங்கும்போதும் கூட கைவிரல்கள் துப்பாக்கி ட்ரிக்கரை தொட்டபடி இருந்தன. 1974ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று, மேரி   என்ற 72 வயது பெண்மணி கொல்லப்பட்டார். அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் வயதான பெண்கள் தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டனர். முன்னர் சொன்னது போல அதில், பத்து பேர் கொல்லப்பட்டனர்.   காவல்துறை முடிவு இல்லாத தேடுதலை நடத்திக்கொண்டிருந்தனர். ஆனால் கொலையாளி கிடைத்த பாடில்லை. ஆனால் அதற்கு பதிலாக வயதான பெ

குற்றங்களை கணக்கீடு செய்வதில் ஏற்படும் தடுமாற்றங்கள், ஆய்வறிக்கை செயல்பாடு

படம்
  பொதுவாக காவல்துறையில் வழக்குகளை எளிதாக பதிய மாட்டார்கள். பதிந்தால் அதை விசாரிக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என நிறைய நடைமுறை பிரச்னைகளை உண்டு. அதேநேரத்தில் பதிவாகும் வழக்குகளை வைத்துதான் குறிப்பிட்ட வட்டாரத்தில் குற்றங்கள் நடைபெறுகின்றனவா, அதன் சதவீதம் என்ன, குற்றத்தை குறைக்க என்னென்ன விஷயங்களைச் செய்யலாம் என்று அரசு யோசித்து திட்டமிடுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டத்தில் இதற்கென தனி அறிக்கைகளை வெளியிடுகிறது. 1970ஆம் ஆண்டு அமெரிக்காவில்   ஹூட், ஸ்பார்க்ஸ் ஆகியோர் செய்த ஆய்வில் மூன்றில் இருபங்கு குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தங்களது அறிக்கையில் கூறினர். அதே சமயம் இங்கிலாந்தில் பதிவான குற்றங்களை ஆராய்ந்தபோது, அதில் கொள்ளை சார்ந்த குற்றச்செயல்கள் எழுபது சதவீதமும், 27 சதவீத குற்றங்கள் சைக்கிள் திருட்டாகவும் இருந்தது.   மோசடி, பாலியல் குற்றங்கள், மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகியவை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. செல்வாக்கு மிக்க குடும்பங்கள், சாதி, மதம் சார்ந்த பிரச்னைகள் எல்லாம் பெரும்பாலும் ஆவணங்களில் பதிவு செய்யப்படாமலேயே தீர்த்து வைக்கப்படுகின்றன. சாதாரணமா

இந்தியா எதிர்காலத்தில் அணு ஆயுத சோதனைகளை செய்ய வாய்ப்புள்ளது! - ஆஸ்லே டெல்லிஸ்

படம்
  ஆஸ்லே டெல்லிஸ்  ஆஸ்லே டெல்லிஸ், டாடா ஸ்ட்ரேட்டஜிக் அஃபேர்ஸ் பிரிவு தலைவராக இருக்கிறார். இவர் முன்னதாக கார்னெகி உலக அமைதி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். தற்போது அசிட்ரிமிக்ஸ் – நியூக்ளியர் ட்ரான்ஸ்மிஷன் இன் சதர்ன் ஆசியா நூலை எழுதி வெளியிட்டுள்ளார். உங்கள் நூலில் நீங்கள் கூறியுள்ள அடிப்படையான விஷயம் என்ன? 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் அணு ஆயுதங்கள் பற்றி நூல் எழுத நினைத்தேன். அதனால் அமெரிக்காவில் அதிபர் புஷ் நிர்வாகத்தில் எனக்கு வேலை கிடைத்தது. இதனால் நூலை எழுத முடியவில்லை. மீண்டும் திரும்ப நூலை எழுதியபோது சில விஷயங்களை நான் கவனத்தில் கொண்டேன். அமெரிக்க –இந்திய அணு ஒப்பந்தம் நடந்தபோது நான் அமெரிக்காவில்தான் வேலை செய்துகொண்டிருந்தேன். தெற்காசியாவில் சீனாவுக்கு முக்கியமான இடம் உண்டு. இதற்கு இடையில் சீனாவுக்கும் ரஷ்யாவிற்கும் விரோதம் உருவானது. சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளும்   1998ஆம் ஆண்டு முதலே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து முக்கியமான தெற்காசிய நாடுகளாக மாறிவிட்டன. மேற்சொன்ன நாடுகளின் விவகாரங்கள்தான் நூலின் அடிப்படையான மையம். 1998ஆம் ஆண்டு முதலாக அது ஆயுதங்கள் தய

தன் குடும்பத்தை நிர்மூலமாக்கியவர்கள் பஞ்ச பூதங்கள் மூலம் கொல்லும் நாயகனின் கதை! - சாட்சியம் - ஸ்ரீவாஸ்

படம்
  சாட்சியம் தெலுங்கு  பெல்லகொண்டா ஸ்ரீனிவாஸ், வெண்ணிலா கிஷோர் தலைப்பில் சொன்னதுதான். கிராமத்தில் சகல சௌக்கியங்களோடு வாழும் சரத் குமார். பசுக்களை அடித்து பிடித்து வாங்கி கறிக்கடைக்கு விற்கும் ஜெகதி பாபு சகோதரர்களை பகைத்துக்கொள்கிறார். பசு ஒன்றையும், அதன் கன்றுக்குட்டியையும் காப்பாற்றுகிறார். இதன் விளைவாக முழு குடும்பத்தையும் ஜெகதி பாபு வெட்டிக்கொல்கிறார். இதில் பிழைப்பது ஒரே ஒரு குழந்தை மட்டுமே. அதனை கன்றுக்குட்டி ஒன்று காப்பாற்றுகிறது. அந்த குழந்தை சிவன் கோவிலில் கிடக்கிறது. அதை குழந்தையில்லாத தம்பதியினர் எடுத்து வளர்க்கிறார்கள்.  பிறகு கதை அமெரிக்காவில் நடைபெறுகிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பெரிதாகிறது அதுதான் நாயகன் பெல்லகொண்டா ஸ்ரீனிவாஸ்.  ஜெகதி பாபு சகோதரர்களின் குற்றங்கள் நாளுக்குள் நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதனை எதிர்ப்பவராக உள்ளவர் ஊரில் ஒருவர்தான். அவர்தான் ராவ் ரமேஷ். அவரையும் லாரி மூலம் மோதி கொல்வதற்கான முயற்சி நடைபெறுகிறது. அதிலும் அவர் பிழைக்கிறார். அவரின் மகள் தான் நாயகி. நாயகியை சந்திப்பதற்காக நாயகன் கிராமத்திற்கு வர வில்லன்களை சந்திக்கிறார். அப்போதும் கூட அவரது

மக்கள் இனக்குழுவிற்கு அதிகாரம் தேவை - மெலிசா லின் பெரல்லா, என்ஆர்டிசி

படம்
  மெலிசா லின் பெரல்லா வழக்குரைஞர், சூழல் செயல்பாட்டாளர் சூழல் நீதி என்ற விவகாரம் காலப்போக்கில் எப்படி மாறியுள்ளதாக நினைக்கிறீர்கள்? முதலில் சூழல் பணிகளை அதன் முடிவு எப்படியிருக்கும் என நினைத்து அதை சோதிப்பேன். இப்போது அதை செய்யும் முறை எப்படி இருக்கவேண்டுமென யோசித்து செய்து வருகிறேன். உள்ளூர் இனக்குழு மக்கள், அவர்களின் ஒருங்கிணைப்பாளர், தலைவர்களுக்கு உதவும்படி செயல்பாடுகளை நான் மாற்றி வருகிறேன்.  சூழல் நீதி என்பதை வருமானம் குறைந்த வறுமை நிலையிலுள்ள மக்கள் குறைந்த மாசுபாடு கொண்ட செயல்களை செய்யுமாறு சூழலை அமைத்துக்கொடுப்பதே எங்கள் பணி. இதன் மூலம் மக்கள் இனக்குழுவின் அதிகாரம் கூடும்.  என்ஆர்டிசியில் தங்களுடைய பணியை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்? மாசுபாட்டைக் குறைத்துக்கொள்வதோடு மட்டுமே என்ஆர்டிசி அமைப்பு நிறுத்திக்கொள்வதில்லை. அவர்கள், இனக்குழு சார்ந்த மக்களின் வேலைவாய்ப்பு வளர்ச்சி பற்றியும் யோசிக்கிறார்கள். பசுமை பரப்பை உருவாக்க மக்களுடன் சேர்ந்து உழைத்து வருகிறோம்.  சிறுவயதில் ஆசியர் என்பதற்காக கேலி, கிண்டல் செய்யப்பட்டது காரணமாகவே வழக்குரைஞர் ஆனீர்களா? நான் என்னுடைய இனம், மதம், நிறம்,

எண்ணெய் வளத்தைப் பற்றி அறிந்த ஆய்வாளர்! ரால்ப் அர்னால்ட்

படம்
  ரால்ப் அர்னால்ட் ( 1875-1961) அர்னால்ட், ஐயோவா மாகாணத்தின் மார்ஷ்மாலோ டவுனில் பிறந்தார். பெற்றோர் டெலோஸ் அர்னால்ட் - ஹன்னா ரிச்சர்ட்சன் மெர்சர். டெலோஸ் வழக்கறிஞராக பணியாற்றியவர், பின்னாளில் செனட் சபையில் பிரதிநிதியாக செயல்பட்டார்.  அர்னால்ட், த்ரூப் பாலிடெக்னிக் பள்ளி மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். சான் பெட்ரோ எனும் பகுதியில் பிளியோசீன் காலகட்ட படிமங்களை டெலோஸூம், அர்னால்டும் சேகரித்தனர். அர்னால்ட், 1900இல் கலிஃபோர்னியா புவியியல் ஆய்வு அமைப்பில் களப்பணி உதவியாளரானார்.  இதுபற்றிய கட்டுரையையும் 1903ஆம் ஆண்டு ஜூன் 27இல் அறிவியல் கழகத்தின் வழியே எழுதி வெளியிட்டார்.  1908ஆம் ஆண்டு புவியியலாளராக அங்கீகாரம் பெற்று, கலிஃபோர்னியாவிலுள்ள 4,234 சதுர மைல்களை எண்ணெய் வளம் உள்ளது என கண்டறிந்தனர். ஸ்ட்ராடிகிராபி எனும் பாறை அடுக்குகளை ஆராயும் முறையை முறைப்படுத்தியவர், ரால்ப் அர்னால்ட்தான். கலிஃபோர்னியாவில் ஷேல் எனும் வகை பாறை அமைப்பை கண்டறிந்து எண்ணெய் வளத்தைப் பற்றிய தகவல் கொடுத்தவர் இவரே.  https://archives.datapages.com/data/bull_memorials/045/045011/pdfs/1897.htm

நிலவில் மனிதர்கள் கால் வைத்த வரலாற்று நாள்! - 53ஆவது ஆண்டு

படம்
  ஜூலை 20, 1969 நிலவில் அமெரிக்கர்கள் கால் வைக்கவே இல்லை என நிறைய கான்ஸ்பைரசி தியரிகள் உண்டு. நாம் அதன் வழி சென்றால் இந்த கட்டுரையை எழுத முடியாமல் போய்விடும். எனவே நாம் இடது பக்கம் இண்டிகேட்டர் போட்டு அதேபக்கம் திரும்புவோம்.  நாசாவின் அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவில் அமெரிக்க வீரர்கள் கால் வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது ஜூலை மாதம் 20ஆம் தேதிதான். நீளமான வாக்கியம் அல்லவா? சாதனை அந்தளவு பெரியதுதான். நிலவில் ஆராய்ச்சி செய்து மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுபோய்.. பாருங்கள் இதை எழுதும்போது நமக்கே இதெல்லாம் சாத்தியமா என்று தோன்றுகிறது. எப்போதும் குறைந்த தவறுகளை செய்து நிறைவாக டீல் பேசி முடிக்கும் அமெரிக்கர்கள் என சும்பைப் பயல்களா என்ன? சோவியத் ரஷ்யாவிற்கு முன்னர் நாம் தான் நிலவில் கால் வைத்து அவர்களை முந்த வேண்டும். கேவலப்படுத்தி சிரிக்கவேண்டும் என்பதுதான் நிஜ பிளான்.  நிலவுக்கு செல்லும் பயணக்குழுவின் தலைவர் வேறுயார் நீல் ஆம்ஸ்ட்ராங் தான். அவர் தலைமையில் தான் குழு ஒன்றாக இணைந்தது. இவருக்கு உதவி செய்த மற்றொரு வீரர் எட்வின் ஆல்ட்ரின். அப்போலோ லூனார் மாடுலின் பெயர் ஈகிள். இதன் வழியாக நீல்

வேட்டையில் முந்தும் பூமா!

படம்
  வேட்டையில் முந்தும் பூமா! பூமா, ஜாக்குவாருக்கு இணையாக ஒப்பிடப்படும் உடல் அமைப்பைக் கொண்ட விலங்கு. இரவில் துடிப்பாக வேட்டையாடும். காடு தொடங்கி பாலைவனம் வரை தன்னை தகவமைத்துக் கொண்டு  வாழும் இயல்புடைய விலங்கு. பூமாவை குறிப்பிட ஆங்கில மொழியில் மட்டும் நாற்பது பெயர்கள் உண்டு.  அறிவியல் பெயர்: பூமா கான்கலர் (Puma concolor) குடும்பம்:  ஃபெலிடே (Felidae) வேறுபெயர்கள்:  கூகர் (Cougar), பாந்தர் (Panther), காடாமௌன்ட்(Catamount) தாயகம்: அமெரிக்கா அடையாளம்  மார்பும், வயிறும் வெள்ளை நிறத்தில் இருக்கும். மீதியுள்ள இடங்களில் பழுப்பு நிற முடி இருக்கும். வாலின் முனையில் கறுப்பு நிறம் உண்டு. வட்டவடிவில் வயிறு, சிறிய தலையைக் கொண்டது.  சிறப்பம்சம் சிறுத்தை போல முதுகெலும்பு நீளமாக இருப்பதால், வேட்டையாடும் வேகம் மணிக்கு 80 கி.மீ. மேற்புறமாக பாறைகளின் மீது 5.4 மீட்டரும்,  கீழ்ப்புறமாக 12  மீட்டர் தூரமும் தாவும் திறன் கொண்டது. இரையின் பின்னாலிருந்து கழுத்தை குறிவைத்து தாக்கி வீழ்த்தும்.  நீளம்  ஆண் (2.4 மீ.), பெண் (2.05 மீ.) எடை  ஆண் (52 முதல் 100 கி.கி வரை), பெண் (29 முதல் 64 கி.கி வரை) வேகம் - மணிக்கு 64 -