இடுகைகள்

நட்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேருவுக்கும் சோவியத்திற்குமான உறவு! கடிதங்கள்- கதிரவன்

படம்
          நட்பா , பணமா ? அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நாளிதழ் வேலைகள் மெதுவாக செல்கின்றன . பாட நூல்களிலிருந்து கருத்துகளை எடுத்து கட்டுரைகளை எழுதுவது கடினமாக உள்ளது . அடிப்படையில் பொதுவான செய்திகளை எடுத்து எழுதுவது ஈஸி . கடந்த ஞாயிறு குங்குமம் தலைமை உதவி ஆசிரியரான சக்திவேல் சாரின் அறைக்குப் போக நினைத்தேன் . இதை செய்தியாக அவருக்கு போனில் அனுப்பியபோது , போனில் அழைத்து தான் இன்னொரு நண்பரைப் பார்க்கப் போவதாக கூறிவிட்டார் . எனவே , வேறு வழியில்லை . அறையில்தான் ஜாகை . மோகன் அண்ணா ஷேர் மார்க்கெட்டில் வெறியாக இருக்கிறார் . அவர் கேட்டதற்காக நட்பிற்காக எனது கையிருப்பில் உள்ள தொகையை இழக்கவிரும்பவில்லை . அவரிடம் நான் இப்போது பேசுவதில்லை . ட்ரெய்ன் டூ பூஷன் தென்கொரியப் படம் பார்த்தேன் . ஜோம்பி படம்தான் . படத்தில் வைரஸ் பற்றி பேசாமல் நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் உணர்வுகள் , கடமைகள் , பொறுப்புகளைப் பற்றி பேசியிருக்கிறார்கள் . நன்றாக எடுத்திருக்கிறார்கள் . நேற்று இயர்போன் ஒன்றை புதிதாக வாங்கினேன் . பிலிப்ஸ் இயர்போன் வலது பக்கம் கேட்கிறது . ஆனால் இடது பக

சவால் விடும் காதலிக்காக நண்பர்களை ஏமாற்றி பாங்காங் செல்லும் அக்மார்க் காதலன்! -டிஸ்கோ -நிகில் சித்தார்த், சாரா சர்மா

படம்
                 டிஸ்கோ நிகில் சித்தார்த், சாரா சர்மா இன்னும் உங்களின் அபிமான நட்சத்திரங்கள் பலர் தெலுங்கு கதை, இயக்கம் - ஹரி கே சந்தூரி டிஸ்கோ, நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்க கூடியவன். அதேசமயம் அவனுக்குத் தேவையென்றால் நண்பர்களென்று பாராமல் சித்திரவதை செய்தாவது தேவையானதைப் பெற்றுக்கொள்ள தயங்காத ஆள். அப்படிப்பட்டவன், நண்பன் ஒருவனுக்கு ரௌடி ஒருவரின் குடும்பத்தில் திருமணத்தை செட் செய்கிறான். பிறகு, அதற்காக பார்ட்டி செய்வோம் என நண்பர்களை பாங்காங்கிற்கு அழைத்து செல்கிறான். இதற்கான பணம் வங்கியில் கடன் வசூலிக்கும் வேலையில் இருந்து கிடைக்கிறது. கிடைக்கிறது என்பதை விட பாஸ்கர பட்லா என்ற சிறு ரௌடியின் ஆட்களை அடித்துப் புரட்டி பணத்தைப் பெறுகிறார்கள். அந்தப் பணம் தெலுங்கு பேசும் டான் ஒருவருக்கு சொந்தம் என பில்ட் அப் கொடுக்கிறார்கள். உண்மையில் அந்த பணம் யாருடையது, அவர் பாங்காங்க் செல்லும் நான்கு நண்பர்களையும் பழிவாங்கினாரா என்பதே கதை. படம் பாதி நேரம் எதைநோக்கி செல்கிறது என்றே தெரியாமல் பயணிக்கிறது. அந்த நேரலத்தில் எல்லாம் நம்மை காப்பாற்றுவது நிகில் சித்தார்த்தான். அவர் தான் படத்தில் டிஸ்கோ. இவரின் அ

மாற்றுத்திறனாளி தங்கையைக் காப்பாற்றத் துடிக்கும் பாச அண்ணன்! வீரபத்ரா 2006 - பாலகிருஷ்ணா, சதா, தனுஸ்ரீ தத்தா

படம்
  வீரபத்ரா 2006 தெலுங்கு பாலகிருஷ்ணா இயக்குநர் - ஏ.எஸ். ரவிகுமார் சௌத்ரி வசனம் மருதுரி ராஜா  இசை - மணி சர்மா  முரளி கிருஷ்ணா, தனது சொந்த ஊரிலிருந்து ஹைதராபாத்திற்கு வருகிறார். தனது சகோதரியை நல்ல கல்லூரி தேடி படிக்க வைப்பதுதான் நோக்கம். அவரது சகோதரி யார் என முரளி கிருஷ்ணா  வாழும் காலனி மக்களே தேடும்போதுதான் அவரது பின்புல வரலாறு தெரிய வருகிறது. அவருக்கும் சிறையில் கொலைக்குற்ற தண்டனை அனுபவிக்கும் பெத்திராஜூக்கும் பெரும் பகை உள்ளது. அவரது ஆட்கள் முரளி கிருஷ்ணாவைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இதுதான் கதை.  பாலகிருஷ்ணா படம் முழுக்க யாரையோ ஒருவரைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார். காலனி மக்களைப் பாய்ந்து பாய்ந்து காப்பாற்றுவதே போதுமானது. படம் நெடுக அவர் முழு முயற்சியாக மனிதர்களைக் காப்பாற்றுகிறார். ஆனால் படத்தைக் கைவிட்டுவிடுகிறார். இயக்குநரும் படப்பிடிப்பின்போது அப்படியே டீக் குடிக்க போய் பிரியாணி சாப்பிட சென்றுவிடுகிறார்கள் என்றுதான் நினைக்கவேண்டும். பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே ஆகிய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நடிக்கவேண்டாம் என கடுமையாக ஆணையிட்டுவிட்டார்கள் போல. அவர்களும் நிறைய காட்சிகள

வெற்றிபெற்ற தருணத்தை மறக்கமுடியாது! - நிகாட் ஜரீன், குத்துச்சண்டை வீரர்

படம்
  வெற்றி பெற்ற தருணம்.... நிகாட் ஜரீன் உலக சாம்பியன் பட்டம் பெற்ற குத்துச்சண்டை வீரர் நிகாட் ஜரீன், குத்துச்சண்டை வீரர் வெற்றிபெற்ற பிறகு என்ன செய்தீர்கள்? நான் அந்த இரவு முழுக்க தூங்கவில்லை. என் குடும்பம், மனதிற்கு பிடித்தமானவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். போனில் வந்த பல்வேறு குறுஞ்செய்திகளை வாசித்துக்கொண்டு இருந்தேன்.  உங்களது பயணம் துருக்கியில் 2011ஆம் ஆண்டு தொடங்கியது. முதலில் ஜூனியர், யூத், இப்போது சீனியர் என பட்டங்களை வென்றிருக்கிறீர்கள். இந்த பதினொரு ஆண்டுப் பயணம் எப்படியிருந்தது? நிறைய ஏற்ற இறக்கங்கள் வெற்றி தோல்விகள் இந்த காலகட்டத்தில் இருந்தது. நான் தங்கமெடலை வென்றபோது நான் சந்தித்த சவால்கள், கஷ்டங்கள் தகுதியானவைதான் என்று தோன்றியது. எனக்கு நேர்ந்த சம்பவங்கள்தான் என்னை வலிமையானவளாக ஆக்கியது.  போராட்டம் சவால்களைப் பற்றி சொன்னீர்கள். அதனால்தான் ரெஃப்ரி உங்கள் கையை உயர்த்தியதும் அந்தளவு உணர்ச்சியை வெளிக்கொட்டினீர்களா? இதுவரை நீங்கள் இப்படி இருந்ததே இல்லை? எனது கை உயர்த்தப்பட்ட நொடியில் நான் உலகின் மிக மகிழ்ச்சியான மனிதராக மாறியிருந்தேன். ஆனால் அதேசமயம் இந்த வெற்றிக்காக எனது போரா

புதிய மின்னூல் வெளியீடு - மயிலாப்பூர் டைம்ஸ் - அமேஸானில் வாசியுங்கள்

படம்
  பிளாக்குகளில் அதாவது வலைப்பூவில் எழுதுவது என்பது டயரிக்குறிப்பு போலத்தான் அதற்கு மேல் அதில் ஏதுமில்லை என்று கணியம் சீனிவாசன் ஒருமுறை கூறினார். வலைப்பூவில் எழுதப்படும் கட்டுரைகளைப் பொறுத்து இப்படி கூறலாம். அவர் கூறுவதற்கு மயிலாப்பூர் டைம்ஸ் கட்டுரைகள் சற்று ஒத்துவரும். இந்த நூலில், எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தற்போது வரையிலான  நிகழ்ச்சிகளை சுட்டப்பட்டுள்ளன.  மயிலாப்பூர் என்பது காஞ்சிபுரம் போலத்தான். இங்கும் தெருவுக்கு தெரு கோவில்கள் உண்டு. தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கும் பிராமணர்களின் குழுக்கள் உண்டு. கபாலீஸ்வரர் கோவில், அதைச்சுற்றியுள்ள முக்கியமான நூல், உணவு நிறுவனங்கள் என பேச ஏதாவது விஷயங்கள் உண்டு. ஆண்டுதோறும் அனைத்து மாதங்களிலும் இங்குள்ள கோவில்களில் ஏதேனும் ஒரு விசேஷம் நடந்தவாறே இருக்கும். இங்கு வாழும் ஒரு பத்திரிகையாளன் பார்க்கும், கேட்கும், அனுபவித்த விஷயங்களின் தொகுப்புதான் நூல்.  இந்த அனுபவங்களை வாசிக்கும் யாவரும் புன்னகையுடன் அதை வாசிக்க முடியும். நூலின் கட்டுரைகள் அனைத்துமே சுய எள்ளல் தன்மையுடன் தான் உள்ளன. எனவே, வெறும் டயரிக் குறிப்பாக மட்டும

அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ளும் கோஸ்டிங் மனநிலை!

படம்
  திடீரென காணாமல் போகும் காதலி!  கோஸ்டிங் என்பது இப்போதைக்கு டேட்டிங் ஆப்ஸ்களில் அதிகம் நிலவும் ஒரு சூழல் என வைத்துக்கொள்ளலாம்.  ஒருவர் உங்களோடு நன்றாக பழகிக்கொண்டிருக்கிறார். தொலைபேசி எண், வாட்ஸ்அப், டெலிகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து கணக்குகளிலும் ஒன்றாக இருக்கிறீர்கள். சாட் செய்கிறீர்கள். இன்பாக்ஸில் செய்தி போடுகிறீர்கள். வீக் எண்டில் சந்திக்கிறீர்கள் என இருக்கும் உறவு ஒருநாள் திடீரென மாறுகிறது. எப்படி என்றால் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் நண்பர், தோழி திடீரென அனைத்து தொடர்புகளையும் உங்களுடன் துண்டித்துக்கொள்கிறார். உங்களுக்கு என்னாகும்? என்னாச்சு என பதற்றமாவீர்கள். ஆனால் அவர் அழைப்பு, குறுஞ்செய்தி, சமூக வலைத்தள செய்தி என அனைத்தையும் புறக்கணிக்கிறார். இது மனதளவில் யாரையும் பாதிக்க கூடியது.  இதைத்தான் கோஸ்டிங் என்கிறார்கள். ஒருவர் தான் கொண்டுள்ள உறவை அனைத்து மட்டங்களிலும் துண்டித்துக்கொண்டு கண் பார்வைக்கே படாமல் காணாமல் போவது.  கோஸ்டிங் என்பது உறவுகளுக்கு மட்டுமல்லாது, பல்வேறு குற்றங்களுக்கும் கூட ஆதாரமாக இருக்கலாம் என டேட்டிங் ஆப்கள் நினைக்கின்றன. எனவே, அவை இத

குரல் வழியாக நீர்யானை தன் குழுவை அறியுமா?

படம்
  எதிரிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் நீர்யானை! அண்மையில் நீர் யானைகள் எப்படி தகவல் தொடர்பு கொள்ளும் என்பதைப் பற்றிய ஆய்வு நடைபெற்றது. இதில், இந்த உயிரினம் எப்படி தனது நண்பர்கள், அந்நியர்களை அடையாளம் காண்கிறது என்பதே ஆய்வின் முக்கியமான கருத்து.   நிலத்தில் வாழும் பாலூட்டி இனங்களில் முக்கியமானது, நீர்யானை. இதனை பொதுவாக அறிந்தவர்கள் கூட இதன் குணங்களை பற்றி அதிகம் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். பகலில் நீர்நிலையில் இருக்கும் நீர்யானைகள், இரவில் மட்டுமே நிலத்திற்கு வருகிறது. இதனை நாள் முழுவதும் கவனித்து பார்த்து ஆய்வு செய்வது கடினமான பணி. நீர்யானை மட்டுமல்ல பிற விலங்குகளையும் அதன் குணங்களை அறிய அதிக ஆண்டுகள் தேவை. அப்போதுதான்,  கவனித்து கண்காணித்து தகவல்களை சேகரிக்க முடியும்.  பிரமாண்டமான நீர்யானை , அதேயளவு ஆபத்தும் நிறைந்தது. பெரிய உடம்பு என்றாலும் அந்நியர்களைக் கண்டால் முரட்டு கோபத்தோடு தாக்க முயலும். நீர், நிலம் என இரண்டிலும் ஓடக்கூடிய, நின்ற நிலையிலேயே சடாரென திரும்பும் திறன் கொண்ட விலங்கு என்பதை விலங்கு ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர்.  அருகில் போகாமல் நீர்யானைகளை ஆராய, அதன் ஒலியை ஆய்வு செய்

ஓவர் பேச்சு கணவனைப் பிரிய வித்தியாசமாக யோசிக்கும் மனைவி! ஹே சினாமிகா - பிருந்தா

படம்
  ஹே சினாமிகா இயக்கம் பிருந்தா இசை  கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு  ப்ரீத்தா கதை - திரைக்கதை - பாடல்கள் -வசனம்  மதன் கார்க்கி நவீன கால திருமண உறவு பற்றி பேச முயலும் படம். மனைவிக்கு ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்கும் கணவரின் ஓயாத பேச்சு பிடிக்கவில்லை. இதனால் அவரை எப்படி கழற்றிவிடுவது என யோசிக்கிறார். இதற்காக உளவியல் வல்லுநர் ஒருவரின் உதவியை நாட அதன் விளைவு என்னாகிறது என்பதே கதை.. மௌனாவை பார்த்ததும் யாழனுக்குப் பிடித்துப்போய் விடுகிறது. காதலைச் சொல்லுகிறார். மௌனாவுக்கும் சம்மதம்தான். மணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெடிகுண்டு வெடிக்கிறது. யாழன் வீட்டில் சமையல், தோட்ட வேலைகளை செய்கிறான். மௌனா கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.  மனைவியின் சம்பளத்தில்தான் யாழன் பொருட்களை வாங்குகிறான். அவனிடம் உள்ள கெட்ட பழக்கம் என மௌனா நினைப்பது, பேசுவது. நாம் எப்படி தன்னியல்பாக சுவாசிக்கிறோமோ அதுபோல பேசுபவன் என காட்சிகளாக காட்டுகிறார்கள். அது அந்தளவு ஒட்டவில்லை. யாழன் பேசுவது குறிப்பிட்ட மனிதர்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும், பேசும் விஷயங்களில் நியாயமான தன்மை உள்ளது.  ஆனால் மௌனாவுக்

நண்பன், காதலி தூரம் தள்ளிப்போக இசைவாழ்க்கையை தக்க வைக்க போராடும் கலைஞனின் கதை! டிக் டிக் பூம்

படம்
  டிக் டிக் பூம் ஆண்ட்ரூ கார்பீல்ட் படம் அமெரிக்க இசைக்கலைஞரான ஜொனாதன் லார்சன், வாழ்க்கையைப் பேசுகிறது.  ஜொனாதன் லார்சனாக ஆண்ட்ரூ கார்பீல்ட் நிறைய பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் காட்சி தொடங்கி படம் முடியும் வரை அவரின் அர்ப்பணிப்பு உணர்வு அசத்தலாக இருக்கிறது.,  ஜொனாதனுக்கு சில நாட்களில் 30 வயது தொடங்கவிருக்கிறது. அதுநாள் வரை அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என அவருக்கே கேள்வி எழுகிறது. எனவே, அவர் இத்தனை நாட்களும் பிராட்வே நாடகங்களுக்கு இசையமைப்பும் வாய்ப்பை பெற முயன்று வந்தார். ஆனால் ஏதோ ஒரு விஷயம் இசையில் வேலை செய்யவில்லை. எனவே, வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் காதலியும் நடனம் சார்ந்த வேலைக்காக வேறு இடத்திற்கு போக நினைக்கிறாள். சிறுவயது நண்பன் நடிக்கும் வாய்ப்பு தேடி முயன்று தோற்று வேலை தேடி வேறு இடம் நோக்கி போகிறான்.  எனவே, தன் வாழ்க்கை சார்ந்து வேகமாக யோசிக்கும் நிலைக்கு ஜொனாதன் தள்ளப்படுகிறான். வாழ்க்கையை நடத்த இசை மட்டுமே போதாது அல்லவா? இதனால் துரித உணவகம் ஒன்றில் வெய்ட்டராக வேலை பார்க்கிறான்.  ஜொனாதனின் சிறப்பே, அவன் எழுதும் பாடல்கள் அனைத்துமே தினசரி வாழ்

எனக்கு கிடைத்த மறக்க முடியாத நண்பர் நீங்கள்! கடிதங்கள்

படம்
            அன்பு நண்பர் கதிரவனுக்கு , நலமா ?    உங்கள் வீட்டில் உள்ளவர்களும் நலமாக இருப்பார்கள் என நினைக்கிறேன் . பெருந்தொற்று காலகட்டத்தில் வேலையை காப்பாற்றிக்கொள்வதே கடினமாக உள்ளது . இதழ்களில் விளம்பரங்கள் கிடைப்பது வெகுவாக குறைந்துவிட்டது . பொதுவாக அனைத்து தொழில்களும் தள்ளாடி வருகின்றன . பொதுமுடக்கம் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளது . நீலகண்ட பறவையைத் தேடி என்ற நாவலின் சில பகுதிகளை படித்தேன் . வங்கதேச முஸ்லீம்களின் வாழ்க்கையை பேசும் நூலில் 60 பக்கங்கள் நிறைவு பெற்றுள்ளன . இப்போதுள்ள நிலையில் மனநிலையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு வேலையை செய்வது கடினமாக உள்ளது . படங்கள் பார்ப்பதை விட யூட்யூபில் டிவி தொடர்களை பார்த்து வருவதே எனது பொழுதுபோக்காக மாறிவிட்டது . கொரிய டிவி தொடர்களில் புதிய ஐடியாக்கள் , பாத்திரங்கள் , இந்திய மனநிலை , மதிப்புகள் என நிறைய விஷயங்களை அழகாக பேசுகிறார்கள் . பேரிளம் பெண்ணின் அழகிய வனப்பும் வளங்களும் , குழந்தையின் மனமுமாக கொரிய டிவி தொடர் பெண்கள் காட்டப்படுவது புதுமை . சீரியல் கொலைகாரர்களின் மனநிலை பற்றிய நூல்களை படித்து வருகிறேன் . இதனை எதிர்வரும் நாட்களில

நூற்றாண்டுகளாக காதலியைக் கரம் பிடிக்க காத்திருக்கும் காதலன்! மூன்ஷைன் அண்ட் வேலன்டைன்

படம்
            மூன்ஷைன் அண்ட் வேலன்டைன் சீன டிவி தொடர் யூட்யூப் பூமியில் வாழும் நரிக்குலம் வடக்கு , தெற்காக பிரிந்து தனியாக வாழ்கிறது . இதில் தெற்கில் வாழ்பவர்கள் வடக்கில் இருப்பவர்களை விட சிறப்பாக மனிதர்களுடன் இணக்கமாக வாழ்கிறார்கள் . வடக்கில் வாழ்பவர்கள் மனிதர்களுடன் அதிக இணக்கமின்றி தனியாக இருக்கிறார்கள் . ஒட்டுமொத்த குலத்திற்கும் தலைவராக சதிகள் நடக்கின்றன . இதில் ஜிங்டிங் என்ற பார்வையில்லாத தெற்கு குல தலைவரின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதுதான் கதை . கதையை மேலே சொன்னபடியும் சொல்லலாம் . பல நூறாண்டுகளாக தொடரும் காதல் உறவை எப்படி நவீனத்திலும் காப்பாற்றி மண உறவில் முடிக்கிறார்கள் இரண்டு காதலர்கள் என்றும் கூறலாம் . தெற்கு நரிக்குலத் தலைவராக இருப்பவர் ஹெலன் ஷி . இவரின் அதிகாரப்பூர்வ பெயர் , ஜிங்டிங் . இவருக்கும் இவரது தந்தைக்கும் திருமண விஷயத்தில் நடக்கும் பிரச்னையால் குலமே இரண்டாகிறது . ஹெலன் அப்பாவை அதிகம் விமர்சிக்காமல் அமைதியாக தனது வா்ழ்க்கையை நடத்துகிறார் . இவர் நரிக்குலத்திற்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவில் பிறந்தவர் . இதனால் என