இடுகைகள்

பழங்குடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழங்குடிகளுக்கு இலவச கல்வி அளிக்கும் அச்சுதா சமந்தா!

படம்
  பழங்குடிகளுக்கு கல்வி தரும் அச்சுதா சமந்தா!  ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர், அச்சுதா சமந்தா. இவர்,  30 ஆயிரம் பழங்குடி மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார். தொடக்க கல்வி மட்டுமல்ல, அவர்கள் முதுகலைப் பட்டம் பெறுவது வரையிலான கல்விச்செலவுகளை ஏற்கிறது அச்சுதாவின், கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் அமைப்பு.  கலிங்கா இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர் , அச்சுதா சமந்தா. இவர், ஒடிஷாவின் கலாபரபன்கா கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது, நான்காவது வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். அதற்குப் பிறகு குடும்ப பொறுப்பை ஏற்றார். வீட்டுக்கு அருகிலுள்ள  மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து சம்பாதித்தார்.  கிடைத்த வருமானம் மூலம் குடும்ப செலவுகளைச் சமாளித்தார்.  முதுகலைப் பட்டத்தை படித்து முடித்தவர், பழங்குடி மாணவர்களின் கல்விக்கு உதவ தீர்மானித்தார். 1993ஆம் ஆண்டு பழங்குடி மாணவர்களின் கல்விக்காக கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் (KISS) என்ற அமைப்பை உருவாக்கினார்.  இந்த அமைப்பு, பழங்குடி மாணவர்களுக்கு  தங்குமிடம், உணவு,கல்வி ஆகியற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் கீழ் பள்ளி, கல்லூரி, பல்

உண்ணிச்செடியில் கைவினைப்பொருட்களை செய்யலாம்!

படம்
  உண்ணிச்செடியில் என்ன செய்யலாம்? கர்நாடக மாநிலத்தில் சோளகர் பழங்குடிகள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள், வருமானத்திற்கு கைவினைப் பொருட்களை செய்து வருகின்றனர். இதற்கு அவர்கள் லாந்தனா எனும் உண்ணிச்செடியைப் பயன்படுத்துகின்றனர். பழங்குடிகளுக்கான கைவினைப் பயிற்சியை பெங்களூருவிலுள்ள அசோகா சூழல் ஆராய்ச்சி அறக்கட்டளை (ATREE) வழங்கிவருகிறது. மேற்கிந்திய மலைத்தொடரில் உள்ள காடுகளின் 40 சதவீதப் பரப்பை, உண்ணிச்செடி ஆக்கிரமித்துள்ளது.  உண்ணிச்செடிக்கு தாயகம், தென் அமெரிக்கா. 1800ஆம் ஆண்டு, இத்தாவரம், பிரிட்டிஷார் காலத்தில் இந்தியாவுக்குள் அலங்காரச்செடியாக வந்தது.  நிலப்பரப்பை வேகமாக ஆக்கிரமித்து வளரும் தன்மை கொண்டது உண்ணிச்செடி. இந்திய அரசின் வனத்துறை அறிக்கை 2021 இல், 29 ஆக்கிரமிப்புத் தாவரங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதில் உண்ணிச்செடியும் உண்டு. இந்திய நிலப்பரப்பில், ஆக்கிரமிப்புத் தாவரங்கள், 9,793 ச.கி.மீ தூர நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளன.  2003ஆம் ஆண்டு, மகாதேஸ்வரா மலையில் வாழும் சோளகர்கள், லாந்தனா கைவினைப்பொருட்கள் மையத்தை உருவாக்கினர். சிறு தொழில்நிறுவனமாக உள்ள இந்த மையம், 650 பழங்குடிகளுக்

காலக்கோடு வடிவில் திரௌபதி முர்மு வாழ்க்கை! - ஆசிரியர் பணி முதல் குடியரசுத்தலைவர் பணி வரை....

படம்
  பழங்குடி இன தலைவர் முதல் குடியரசுத்தலைவர் பயணம்! 1958 திரௌபதி முர்மு, ஒடிஷாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உபர்பேடா எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை, நாராயண் பிராஞ்சி டுடூ, விவசாயி. 1979 ஒடிஷாவின் புவனேஷ்வரில் ராம்தேவி பெண்கள் பல்கலைக்கழகத்தின் பி.ஏ. நிறைவு செய்தார். படிப்பை முடித்தவுடனே கௌரவ உதவி பேராசிரியராக ஸ்ரீஅரபிந்தோ கல்வி ஆராய்ச்சிக்கழகத்தில் பணியாற்றினார். 1980 ஒடிஷாவின் பகத்பூரைச் சேர்ந்த வங்கிப்பணியாளரான ஷியாம் சரண் முர்முவை மணந்தார்.  1983  நீர்பாசனம் மற்றும் மின்வாரியத்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். 1997 ராய்ரங்பூர் நகர கவுன்சிலராக தேர்வு பெற்றார்.  2000 ஒடிஷா மாநில அரசில் வணிக போக்குவரத்துத் துறை அமைச்சராக (2000 மார்ச் 6 - 2000 ஆகஸ்ட் 6) நியமிக்கப்பட்டார்  2002 -2004 மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சரானார் (2002 ஆகஸ்ட் 6 - 2004 மே 16)  2007 சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான நீல்கந்தா விருது (Nilkantha award) பெற்றார்.  2009 முதல் மகன் லஷ்மண் உடல்நலக்குறைவால் காலமானார்.  2013 இரண்டாவது மகன் சிபுன், விபத்து காரணமாக காலமானார்.  2014 ஏற்கெனவே உடல் நலிவுற்றிருந

பழங்குடி மக்களின் விதைவங்கி!

படம்
  பழங்குடி மக்களின் விதைவங்கி! ஜார்க்கண்ட் மாநிலத்தில்  உள்ள மலைப்பகுதி மாவட்டங்கள் பாகுர், கோட்டா. இங்கு வாழும் பழங்குடி மக்கள் இனமான பகாரியா, விதை வங்கிகளை உருவாக்கியுள்ளனர். இந்த விதை வங்கியில், தாங்கள் பயிரிடும் தொன்மையான பயிர் ரகங்களைப் பாதுகாத்து வருகின்றனர். தொடக்கத்தில் நிலங்களில் பயிரிடுவதற்கான பயிர்களை உள்ளூர் வட்டிக்காரர்களிடம் பெற்று வந்தனர்.  பயிர்களை நடவு செய்து கடுமையாக உழைத்து பன்மடங்காக பெருக்கினாலும் கூட சரியான விலைக்கு விற்கமுடியவில்லை. மேலும் அவர்களின் உணவுக்காக கூட விளைந்த பயிர்களை பயன்படுத்தமுடியவில்லை. வட்டிக்காரர்களின்  பயிர்க்கடனை அடைக்க விளைந்த தானியங்களை மொத்தமாகவே விற்க வேண்டியிருந்தது. பல்லாண்டு காலமாக பாகுர், கோட்டா மாவட்டங்களில் வாழ்ந்த பழங்குடிகளின் வாழ்க்கை இப்படித்தான் நடந்து வந்தது.  பழங்குடி மக்கள், 2019ஆம் ஆண்டு நான்கு விதை வங்கிகளை உருவாக்கினர். இதற்கு டிராய்ட் கிராஃப்ட், பத்லாவோ பௌண்டேஷன், சதி ஆகிய மூன்று நிறுவனங்கள் உதவியுள்ளனர். இதற்குப் பிறகு, பயிர்களை வட்டிக்காரர்களிடம் கடனுக்கு வாங்கும் பிரச்னை மெல்ல குறைந்துவிட்டது.   பழங்குடி மக்கள் நாட்டு

மரங்களை அடையாளம் காணும் முறை!

படம்
  மறைந்திருக்கும் காடுகள்! பல்லாயிரக்கணக்கான மர இனங்கள், அறிவியலாளர்களால் இன்னும் அறியப்படாமல் உள்ளன.  மரங்களைப் பற்றிய பல்லுயிர்த்தன்மை ஆய்வுக்கட்டுரை , அறிவியல் இதழொன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 9,200 மர இனங்கள் இன்னும் ஆவணப்படுத்தப்படாமல் உள்ளது என கூறப்பட்டுள்ளது.  ”மரங்களை முழுமையாக ஆராய்ச்சி செய்வது கடினமான பணி. அவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை அறிந்தால் மட்டுமே வேறுபாடுகளை அறிய முடியும்”  என்றார் வேக் ஃபாரஸ்ட் சூழல் உயிரியலாளர் மைல்ஸ் சில்மன்.  புதிய ஆராய்ச்சியில் மரங்களை அடையாளம் காண இரு முறைகளைப் பின்பற்றியுள்ளனர். உலக காடுகள் பல்லுயிர்த்தன்மை திட்டம் மூலம், காடுகளில் உள்ள மர இனங்களை பதிவு செய்தனர். அடுத்து, ட்ரீசேஞ்ச் எனும் வழியில், தனியாக வளரும் மர இனங்களை பதிவு செய்துள்ளனர். இந்த இருமுறைகளிலும் சேர்த்து மொத்தமாக 64,100 மர இனங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆய்வில், 60 ஆயிரம் மரங்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.  ”ஆய்வாளர்களின் இந்த ஆய்வில் கண்டறிய வேண்டிய மர இனங்களின் எண்ணிக்கை கூட குறைவுதான். 6 ஆயிரத்திற்கும் அதிகமான மர இனங்கள் நாம் இன்னும் அறியப்படாதவையாக இ

காடுகளின் பல்லுயிர்த்தன்மையை பாதுகாக்கும் பழங்குடிகள்!

படம்
  பல்லுயிர்த்தன்மைக்கு பாதுகாப்பு!  உலகில் உள்ள பல்லுயிர்த்தன்மை கொண்ட காடுகளை அரசுகளும் தன்னார்வ அமைப்புகளும், பழங்குடிகளும் பாதுகாத்து வருகின்றனர். ஆர்க்டிக் முதல் தெற்கு பசிபிக் கடல் வரையிலான 80 சதவீத காடுகள் பாதுகாக்கப்படும் நிலையில்தான் உள்ளன.  “ 17 சதவீத காடுகளின் பரப்பை சொந்தமாக கொண்டு அதனை பாதுகாத்து வருபவர்கள் பூர்வகுடியினரான பழங்குடி மக்கள்தான். இவர்கள் அரசுகளை விட சிறப்பாக காடுகளை பாதுகாக்கின்றனர் ” என்றார் உலக காட்டுயிர் நிதியத்தின் முன்னாள் அறிவியலாளரான எரிக் டைனர்ஸ்டெய்ன்.  உலக நாடுகளிலுள்ள அரசுகள், பழங்குடிகள் வாழும் நிலத்தை அவர்களுக்கானதாக கருதுவதில்லை. அப்படி அரசு கருதும்போது அதிலுள்ள பல்லுயிர்த்தன்மையை காப்பது எளிதான பணியாக மாறுகிறது. தொலைநோக்கில் பார்க்கும்போது மலிவான வகையில் அதிக விளைவுகளை, தாக்கத்தை ஏற்படுத்தும் செயல் இது. தொடக்ககால சூழல் பாதுகாப்பு மாநாடுகளில் பழங்குடிகளை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் இன்று நிலை மாறி வருகிறது.  கடந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஐயுசிஎன் உலக பாதுகாப்பு மாநாட்டில், பழங்குடி மக்கள் முதன்முறையாக பங்கேற்றனர். 2010 முதல் 2020ஆம் ஆண்டு

காடுகளை பாதுகாக்க அர்ப்பணிப்பாக பணியாற்றும் பழங்குடி காவலர்கள்!

படம்
  தேசியப்பூங்காவை பாதுகாக்க மெனக்கெடும் பழங்குடி மக்கள்! ஒடிஷா மாநிலத்தின், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சிமிலிபால் தேசிய பூங்கா (Similipal National Park ) அமைந்துள்ளது. தேசியப்பூங்கா 2,750 சதுர கி.மீ. பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இது, புலிகள் காப்பகம் என்பதால், பாதுகாப்பிற்கென 700 பாதுகாப்பு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள், இங்குள்ள மரங்களோடு விலங்கினங்களையும் நன்கு அறிந்துவைத்துள்ளனர்.  பாதுகாப்பு உதவியாளர்கள், மரங்களில் ஏற்பட்டுள்ள நோய், இலையில் ஏற்படும் மாறுபாடு,  பட்டுப்போன மரம் என எதையும் கவனிக்காமல் விடுவதில்லை. இதன் விளைவாக, சிமிலிபால் பூங்காவில் முன்னர் நடந்த சட்டவிரோத மரக்கடத்தல், காட்டுத்தீ  சம்பவங்கள் குறைந்துவருகின்றன. உதவியாளர்கள், காட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளை உடனே ஜிபிஎஸ் முறையில் தெரிவிக்க தனி ஆப் உள்ளது. அதன் பெயர், எம்எஸ்டி ஆர்ஐபிஇஎஸ் (Monitoring System for Tigers: Intensive Protection and Ecological Status MSTrIPES).  இந்த ஆப் வழியாக புலிகள் காப்பகம் பற்றிய பல்வேறு தகவல்களை எளிதாக பதிவு செய்யமுடியும். படைகள்  எங்கு இருக்கின்றனவோ அதுபற்றிய தகவலையும் ஆப் ப

இருவாட்சியை பாதுகாக்க காவலர்களான பழங்குடி மக்கள் - அபராஜிதா தத்தாவின் சூழல் பாதுகாப்பு முயற்சி!

படம்
  இருவாட்சியைப் பாதுகாக்கும் பழங்குடிகள்! அருணாசலப் பிரதேசத்தில், நைஷி பழங்குடிகள் (Nyishi tribe)வாழ்கிறார்கள். இவர்கள் அங்குள்ள காட்டில் தென்படும் பல்வேறு பறவைகளை வேட்டையாடி வந்தனர். அதில், இருவாட்சி பறவையும் ஒன்று. தற்போது, பழங்குடிகள் பறவைகளைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு பெற்றுவிட்டனர். எனவே, அவற்றைப்  பாதுகாக்கத் தொடங்கியுள்ளனர்.  தி ஹார்ன்பில் நெஸ்ட் அடாப்டேஷன் புரோகிராம் ஆப் அருணாசலப் பிரதேசம் எனும் திட்டம் (Hornbill Nest Adoption Program (HNAP)), 10ஆவது ஆண்டாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  பக்கே (Pakke) புலிகள் காப்பக பகுதியில் இருவாட்சி பாதுகாப்புத் திட்டத்தை பத்து பழங்குடி மக்கள் செயல்படுத்தி வருகிறார்கள். காடுகளில் விதைகளை பரப்பும் வேலையை இருவாட்சி பறவைகளே செய்கின்றன. உலகம் முழுக்க இருவாட்சி பறவைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்துவருகிறது. இதற்கு அதன் வாழிடம் அழிப்பு, வேட்டையாடப்படுவது ஆகியவை முக்கிய காரணங்கள். பக்கே புலிகள் காப்பகத்தில் கிரேட் ஹார்ன்பில் (The great hornbill,), ரூபோஸ் நெக்ட் ஹார்ன்பில் (Rufous-necked hornbill), ரேத்ட் ஹார்ன்பில் (Wreathed hornbill ), ஓரியன

நகர இளைஞரை மயக்கும் இயற்கையின் பேரழகு! வனவாசி - விபூதிபூஷன் வந்தோபாத்யாய

படம்
  வனவாசி விபூதிபூஷன் வந்தோபாத்யாய விடியல் ரூ.270 மொழிபெயர்ப்பு - த.நா.சேனாபதி நகரவாசி ஒருவர், எப்படி வனத்துக்குள் வேலை செய்ய வந்து வனவாசி ஆகிறார் என்பதே கதை.  தினந்தந்தி போல ஒருவரியில் கதையை இப்படி சொன்னாலும் படிக்கும்போது நாம் பார்க்கும் மனிதர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நாவல் முடியும் வரை புதிய மனிதர்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். நாவலின் புதிய பாணி என கொள்ளலாம்.  கல்கத்தாவில் விடுதி ஒன்றில் தங்கி வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்தான் கதை நாயகன். விடுதி மெஸ்சில் அக்கவுண்ட் வைத்து சாப்பிடுபவருக்கு, வேலை கிடைத்தால் தான் சாப்பாட்டுக்கடனை அடைக்க முடியும். இந்த நிலையில் நண்பர் அழைத்தார் என விழா ஒன்றுக்கு செல்கிறார். அங்கு நிம்மதியாக சாப்பிட்டுவரும்போது கல்லூரி நண்பர் ஒருவரைப் பார்க்கிறார்.  அவர் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் மூலம் பூர்ணியா எனும் காட்டுப்பகுதியில் உள்ள நிலங்களை கவனித்துக்கொள்ளும் வேலைக்கு செல்கிறார். நகரில் இருக்கத்தான் இளைஞருக்கு விருப்பம். ஆனால் வேலை வேண்டுமே என்பதற்காக ஜமீன் காரியாலயத்திற்கு செல்கிறார். அங்கு செல்வதற்கான பயணமே காரியாலய வாழ்க்கை 

வடகிழக்கு பெண் என்பதால் எனது மொழி உச்சரிப்பை கிண்டல் செய்தனர்! - ஆண்ட்ரியா கெவிசூசா

படம்
  ஆண்ட்ரியா கெவிசூசா இந்தி சினிமா நடிகை - அனெக் திரைப்படம் ஆண்ட்ரியா கெவிசூசா உங்கள் பின்னணி பற்றி சொல்லுங்கள்? நான் கோகிமாவில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு ஐந்து சகோதரிகள் உண்டு. அதில் இளையவள் நான். எனது அப்பா அங்காமி பழங்குடியைச் சேர்ந்தவர். அம்மா ஆவோ பழங்குடியைச் சேர்ந்தவள். அப்பா காலமாகிவிட்டார். பெண்களான எங்களுக்கு எதை செய்யவேண்டும், செய்யக்கூடாது என பெரிய லிஸ்ட்டே உண்டு. பெற்றோர் நிறைய கண்டிப்புடன் வளர்த்தார்கள். பத்தாம் வகுப்பு வரை லிட்டில் பிளவர் பள்ளியில் பத்தாவது வரை படித்தேன். அதற்கு முன்னர் கத்தோலிக்க பெண்கள் பள்ளியில் படித்தேன். பிறகு மேகாலயாவின் சில்லாங்கிற்கு இடம்பெயர்ந்தோம். பிறகு படிப்பு அங்கே அமைந்தது. பதினைந்து வயதிலிருந்து நான் மாடலிங் செய்து வருகிறேன்.  நடிகர் ஆவது என்பது பற்றி கனவு கண்டீர்களா? எனக்கு சிறுவயதிலிருந்து இருந்தது ஒரே கனவுதான். மருத்துவம் படித்து மருத்துவராகி எனது கிராமமான கோகிமா சென்று மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது மட்டுமே எனது ஆசை. ஆனால் நான் படிக்கும்போது எனக்கு வந்த வாய்ப்புகளை பின்பற்றி இப்போது நடிகராகி இருக்கிறேன். இப்படி கிரியேட்டிவிட்டி கொண்ட த

டான்ஸ் வீடியோக்கள் மூலம் சாதிக்கும் பழங்குடி தம்பதி! - இது மகாராஷ்டிர காதல் பாட்டு!

படம்
 மகாராஷ்டிரத்தில் கேட்கும் காதல் பாட்டு! யூட்யூப் வந்தபிறகு இந்தியர்களின் வாழ்க்கை நிறைய  மாறுதல்களை அடைந்துவிட்டது. அதில் வரும் வீடியோக்களைப் பார்த்து தொழில்முனைவோர் ஆவது முதல், பொழுதுபோக்காக அதில் நடனம் கற்று அப்படியே இமிடேட் செய்து ஆடி பிறரை மகிழ்விப்பது வரை தினுசு தினுசான விஷயங்களை மக்கள் செய்து வருகிறார்கள். இப்படி செய்து வருபவர்களின் வீடியோக்கள் மக்களின் கவனத்தைக் கவருகின்றன. இதனால், கூகுள் நிறுவனம், யூட்யூப் சேவைகளின் பங்களிப்பாளர்களுக்கு மாதம் குறிப்பிட்ட தொகை என வங்கிக்கணக்கில் செலுத்தி ஊக்குவிக்கிறது. இதற்கான தூண்டுதலை முதலில் உருவாக்கியது சீன நிறுவனமான டிக்டாக் தான். பிறகு வீமேட் என்ற சேவைகள். இப்போது யூட்யூப் தருவதை விட அதிகளவு தொகையை டிக் டாக் வீடியோக்கள் பதிவு செய்தவர்கள் பெற்றனர். பிறகு அது தடைசெய்யப்பட்டவுடன் பலரும் வேறு வீடியோ சேவைகளுக்கு மாறினர். உள்ளூரிலும் மோஜ், டகாடக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என முயற்சிகள் வரிசை கட்டின.  பாஸே பர்தி எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர், பவார். இவர், மகாராஷ்டிரத்தில் ஜாம்டே கிராமத்தில் வாழ்கிறார். இவர் டிக் டாக்கில் தனது இரண்டு மனைவிகளான

மக்களின் பிரச்னைகளைப் பேசும் பத்திரிகையாளர்! - ரூரல் மீடியா ஷியாம் மோகன்

படம்
ஷியாம் மோகன் ஒளிப்பதிவாளருடன் பழங்குடிகளின் பிரச்னையைப் பேசும் பத்திரிகையாளர்! பேஸ்புக் வந்தபிறகு யூட்யூப் மெல்ல பின்தங்கியது கண்கூடாக தெரிந்தது. ஆனால், அந்தரங்க தகவல்களின் அத்துமீறல், அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு கமுக்கமாக வேலை பார்த்தது எல்லாம் அந்த சமூக வலைத்தள சேவைக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது. கூடவே பெருந்தொற்று காலம் வேறு வர, பேஸ்புக் மெல்ல செல்வாக்கை இழந்தது. அந்த இடத்தில் யூட்யூப் மெல்ல புகழ் பெறத் தொடங்கியது.  இன்று யூட்யூப் மூலம் இந்தியர்கள் சம்பாதிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 6,800 கோடி. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டில் இதன் பங்களிப்பும் உண்டு என 2020 ஆம் ஆண்டு மதிப்பீட்டுபடி கூறியிருக்கிறது ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு.  இந்தியாவில் வாட்ஸ் அப் அமைப்பிற்கு 53 கோடி, யூட்யூப்பிற்கு 44.8 கோடி பயனர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் சமூக வலைத்தள சேவைகளெல்லாம் இதற்கு பின்னர்தான். இப்படி யூட்பூப் வைத்து சம்பாதிப்பவர்கள் தங்களுக்கான இடத்தை எப்படி அடையாளம் கண்டுகொண்டனர் என்பது முக்கியமானது. உலகம் முழுக்கவே இப்போது எழுத்தை விட காட்சிகளைப் பார்க்கவே விரும்புக

பழங்குடி மக்களிடம் உள்ள கனிம வளங்களை பற்றி மட்டுமே இந்திய அரசு கவலைப்படுகிறது! பிரகாஷ் லூயிஸ்

படம்
  பிரகாஷ் லூயிஸ்  எழுத்தாளர் நீங்கள் ஸ்டேன் சுவாமியிடம் அவரைப் பற்றி நூல் எழுதுவதாக கூறினீர்களா? இல்லை. சில சம்பவங்களால் நான் அவரைப் பற்றி நூல் எழுதுவதை கூறமுடியவில்லை. அவரின் அலைபேசி அவரிடம் இருந்து நீக்கப்பட்டுவிட்டதும் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. அவரைச்சுற்றி இருந்தவர்களிடம் பேச முயன்றாலும் அதுவும் சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் முன்னாடியே சிலரிடம் இதுபற்றி பேசியிருக்கிறேன்.  நான் எழுதியுள்ள நூலில் ஸ்டேன் சுவாமி, அவரது காலகட்டம், அவரின் செயல்பாடுகள் ஆகியற்றை விளக்கியுள்ளேன்.  ஸ்டேன் சுவாமி இறந்து சில மாதங்களிலேயே அவரைப் பற்றிய நூலை வெளியிட்டு விட்டீர்கள். ஜூலை 5 இல் அவர் மறைந்தார். அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே அவரது செயல்பாடுகளைப் பற்றி தகவல் சேகரித்து எழுத முடிந்ததா? 2018ஆம் ஆண்டு பீமாகரேகான் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போதிலிருந்தே நான் நூலுக்கான தகவல்களை சேகரித்து வந்தேன். தேசிய புலனாய்வு முகமை உள்ளே வந்தபோது நான் தகவல்களை சேகரித்து ஆராய்ந்துகொண்டிருந்தேன். பிறகுதான் ஸ்டேன்சுவாமி கைதுசெய்யப்பட்டார். சட்டவிரோத செயல்களுக்காக அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சட்டவிரோ

பத்தாவது பெயிலா? கொடைக்கானலில் எனது வீட்டில் வந்து தங்குங்க!- புதுமை மனிதர் சுதீஷ்

படம்
  செய்திஜாம் ஆஹா! சமையல் சாதனை! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜஸ்டின் நாராயணன், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் வென்றிருக்கிறார். இந்திய வம்சாவளியைச்  சேர்ந்த இவர் சமையல் நிகழ்ச்சியின் 13 ஆவது சீசனின் வெற்றியாளராகி 1.86 கோடி ரூபாயை வென்றிருக்கிறார். ”உங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ள மனிதர்களைக் கண்டுபிடியுங்கள். அவர்களை எப்போதும் உங்கள் பின்னால் வைத்துக்கொள்ளுங்கள். தினந்தோறும் உங்களை ஆச்சரியப்படுத்திக்கொள்ளும்படியுங்கள். இதை வாசிக்கும் அனைவரையும் நான் நேசிக்கிறேன்” என இன்ஸ்டாகிராமில் செய்தி வெளியிட்டுள்ளார் ஜஸ்டின்.  https://www.indiatimes.com/entertainment/celebs/indian-origin-justin-narayan-wins-masterchef-australia-season-13-takes-home-rs-186-crore-544905.html காட்சிப்படம் ! காட்டுத்தீயை அணைக்க முயலும் விமானம்! இடம் அமெரிக்கா, வாஷிங்டன் அபாரம்! பசியின் மொழி! ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சையத் உஸ்மான் அசார் மெக்சூசி. இவர் பசிக்கு மதமில்லை என்ற திட்டத்தை தொடங்கி ஐந்து நகரங்களில் உள்ள 1,500 மக்களுக்கு தினசரி உணவிட்டு வருகிறார். இதனை பத்து ஆண்டுகளாக செய்துவருபவருக்கு ஐ.நா அமைப்பு, காமன்வெல்த் பாய்ன்ட

பழங்குடிகளை முன்னேற்றிய காடுகள் வளர்ப்பு!

படம்
  பழங்குடிகளை முன்னேற்றிய காடுகள் வளர்ப்பு கர்நாடக மாநிலம் உடுப்பியில் கொரகா பழங்குடி இனத்தினர், காடுகள் வளர்த்து தம் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்டுள்ளனர்.  கர்நாடகத்திலுள்ள பழங்குடி இனங்களில் மிகவும் பிற்பட்டவர்கள் கொரகா பழங்குடியினர். இவர்கள் தற்போது ஆக்சன் எய்டு இந்தியா, கொரகா பௌண்டேஷன் ஆகிய அமைப்புகள் மூலம் நிதியுதவி பெற்று பழமரங்களை வளர்த்து வருகின்றனர். முதலில் குத்தகை முறையில் பழமரங்கள், நெல் ஆகியவற்றை வளர்த்தவர்கள் இன்று சொந்தமாக நிலங்களை வாங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.  கர்நாடகத்தின் வனச்சட்டம் 1963, 1972 ஆகியவற்றால் காட்டில் வாழ்ந்த கொரகா பழங்குடிகள் அங்கிருந்து வெளியேற நேரிட்டது. நகருக்குள் வந்தவர்கள் பிரம்பு பொருட்களை செய்தும், மனிதக்கழிவுகளை அகற்றியும் வாழ்ந்து வந்தனர்.  இவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் செய்த உதவியால் பல்வேறு நிலப்பரப்புகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தனர்.  இதன் விளைவாக, 49  ஆயிரம் ஏக்கர் வனப்பரப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதில் 47 ஆயிரம் ஏக்கர் கொரகா உள்ளிட்ட பழங்குடி இனக்குழுவினர் உருவாக்கியதாகும்.  இச்சாதனையைப் பாராட்டி இங்கிலாந்தில் உள்ள வேர்ல்ட் ஹேப

பெருந்தொற்று காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றமுடியும்? ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முதல்வர்

படம்
                    ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வர் கடந்த ஓராண்டாக உங்கள் அரசின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள் . என்ன சவால்களை சந்தித்தீர்கள் . வெளிமாநிலத்திற்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களை மாநிலத்திற்கு அழைத்துக்கொண்ட மாநிலங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் . கோவிட் -19 தொற்றை வெற்றிகரமாக சமாளித்து மீண்டுள்ளோம் . சிறப்பாக செயல்பட்டு நோய்த்தொற்றை குறைத்த மாநிலங்களில் நாங்களும் முக்கியமான மாநிலம் . தினமும் பல்வேறு சவால்களை சந்தித்து வெற்றிகரமாக அதற்கு தீர்வு கண்டு வருகிறோ்ம் . எதிர்க்கட்சிகள் கடந்த ஓராண்டாக உங்கள் அரசு ஏதும் செய்யவில்லை என்று பிரசாரம் செய்து வருகிறார்களே ? பெண்கள் , சமூகப் பாதுகாப்பு , சுகாதாரம் , கல்வித்துறைக்கான சட்டங்களை உருவாக்கியுள்ளோம் . மேலும் கோவிட் -19 சமாளிப்பதற்கான உதவிகளை வழங்கியுள்ளது . நிதித்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு கொள்கைகளை மாற்றியுள்ளோம் . சுற்றுலா , விளையாட்டு தொடர்பான புதிய விஷயங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளோம் .   ஜிஎஸ்டி வருவாய் வழங்குவது தொடங்கி மத்திய அரசுடன் பல்வேறு

உடலின் வெப்பநிலை அளவுகள் மாறிவருகின்றன!- பழங்குடிகளிடம் செய்த ஆய்வில் தெரிய வரும் உண்மைகள்!

படம்
      சட்டென மாறுது உடலின் வெப்பநிலை ! சராசரியாக கருதப்பட்ட 37 டிகிரி செல்சியஸ் உடல் வெப்பநிலை , தற்போது உலக நாடுகளில் வாழும் மக்களிடையே மாற்றம் காணத் தொடங்கியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர் . அமெரிக்கா , இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்களின் சராசரி உடல் வெப்பநிலை , மெல்ல 37 டிகிரி செல்சியலிருந்து மாற்றம் கண்டு வருகிறது . பொலிவியா நாட்டில் பழங்குடி மக்களின் உடல்நிலை பற்றிய ஆராய்ச்சி 16 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது . இதுதொடர்பான ஆய்வு அறிக்கை சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியாகியுள்ளது . இதிலுள்ள பல்வேறு அம்சங்களைப் பொருத்திப்பார்த்தால் பொதுமக்களின் உடல்வெப்பநிலை மாறுபடுவதற்கான காரணங்களை புரிந்துகொள்ள முடியும் . 1851 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் கார்ல் ரெய்ன்கோல்டு ஆகஸ்ட் வொண்டர்லிச் , 25 ஆயிரம் நோயாளிகளை ஆராய்ச்சி செய்து தெர்மாமீட்டருக்கான அளவீட்டை உருவாக்க முயன்றார் . 1868 ஆம் ஆண்டு கார்ல் எழுதி வெளியிட்ட நூலில் , மனிதரின் சராசரி உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்று உறுதி செய்து கூறினார் . அண்மையில் வெளியான பல்வேறு