இடுகைகள்

பழிக்குப்பழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடல் தாண்டியும் பழிவாங்குவான் தெலுங்குவாடு!

படம்
              ஜெய் சிரஞ்சீவா சிரஞ்சீவி, பூமிகா சாவ்லா, சமீரா ரெட்டி     தனது தங்கை மகளை துப்பாக்கியை சுட்டு காண்பிக்கும் முறையில் கொல்லும் தீவிரவாத அமைப்பு தலைவனை தீர்த்துக்கட்டும் கிராமத்து விவசாயியின் கதை.  படத்தில் சிரஞ்சீவி, கிராமத்து விவசாயியாக வருகிறார். டிராக்டர் ஓட்டுகிறார். தங்கை பிள்ளையை கொஞ்சுகிறார். அதேவேகத்தில் அந்த சந்தோஷம் தொலைந்துபோக அதற்கு காரணமானவர்களை போட்டு பொளக்கிறார். இதுதான் கதை. இதற்குள் சிரஞ்சீவி இரண்டு பெண்களை காதலித்து அவர்களுடன் நிறைய பாடல்களை ஆடிப்பாடிமகிழ்விக்கிறார். கூடவே வேணு வேறு இருக்கிறார். காமெடிக்கு கேட்கவா வேண்டும்.  தொடக்க காட்சியில் அதிரடியாக இளம்பெண் ஒருவரை குழு வல்லுறவு பிரச்னையிலிருந்து அடி உதை மூலம் மீட்டு என்ட்ரி கொடுக்கிறார் ஆந்திரப் பிரதேச சூப்பர் ஸ்டார். பிறகுதான் ஹைதராபாத்திற்கு காப்பு கட்டுமளவு ரவுடிகளை அடித்து பிளக்கிறார். படத்தின் இறுதிவரை அவர் தனது தங்கை பிள்ளைக்காக மட்டுமே பழிவாங்குகிறார். வில்லனின் தீவிரவாத செயல்கள் மூலம் நிறையப் பேர் பாதிக்கப்படுவதை அழிவதைப் பற்றியெல்லாம் இயக்குநரும் கவலைப்படவில்லை. எனவே சிரஞ்சீவியும் கவலைப்படவில்

எதிரியை கொன்று குடும்பத்தை ஒன்றுசேர்க்கும் போலீஸ் அண்ணன், திருடன் தம்பி! மாத்தோ பெட்டுக்கோக்கு - பாலைய்யா

படம்
  மாதோ பெட்டுக்கோக்கு பாலைய்யா, ரம்பா, ரோஜா, சுஜாதா மற்றும் உங்களின் அபிமான நட்சத்திரங்கள்.  இயக்கம்  - கொடண்டராமி ரெட்டி  இசை - மாதவப்பெடி சுரேஷ்  கதை - பார்கவ் தயாரிப்பு நிறுவன கதை இலாக்கா 1995இல் வெளியான படம். அதைவிட பழைய காலக்கதையைக் கொண்டுள்ளது. ஒரே ஆறுதல் பாலைய்யா இரண்டு வேடங்களை போட்டு நம்மை குஷிப்படுத்துவது மட்டுமே.... அர்ஜூன் ஐபிஎஸ் அதிகாரி. அநியாயம் என்றால் காழ்ச்சி பாரேஸ்தா கொடுக்கா என பாயும் குணம் கொண்டவர். இவருக்கான இன்ட்ரோவே, வல்லுறவு செய்ய முயலும் இன்ஸ்பெக்டரை போட்டு அடித்து பிளந்து ஏறக்கட்டுவதுதான். அடிக்கிற காட்டு அடியில் சம்பவ இடத்திலேயே வல்லுறவு இன்ஸ்பெக்டர் ஏறத்தாழ கோமாவுக்கு போய்விட்ட மாதிரிதான். அப்போதுதான் உயரதிகாரி வந்து அர்ஜூனைத் தடுக்கிறார். அந்த உரையாடலில் அர்ஜூன், எனக்கு சீதாபுரம் காவல் நிலையத்தில் பதவி கொடுங்கள் என்கிறார்.  இது ஒரு பாலைய்யாவின் சீரியஸ் கதை. அதாவது அண்ணன், இன்னொரு பாலைய்யாவின் பெயர் கிட்டய்யா. இவருக்கு போங்கு வேடங்களை போட்டு திருட்டு, கொள்ளையடிப்பதுதான் ஒரே வேலை.  யாருக்கு யார் ஜோடி என்று சொன்னால் படம் பார்த்த திருப்தி தங்களுக்கு கிடைத்துவிட

வெயில் காயும் பாலைவனத்தில் பழிக்குப்பழி! தார் - ராஜ் சிங் சௌத்ரி

படம்
  தார் ஹர்ஷ்வர்த்தன், அனில் கபூர் இயக்கம் ராஜ் சிங் சௌத்ரி வசனம் அனுராக் காஷ்யப் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தை ஒட்டிய கிராமம். அங்கு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவர் ஒருவர், துப்பாக்கியால் சுடப்பட்டு முகம் கை கால்கள் சிதைக்கப்பட்டு தூக்கில் தூக்கிக் கட்டப்படுகிறார். இதை விசாரிக்கிறார் சுரேகா சிங். அவர் விரைவில் இன்ஸ்பெக்டராக இருந்து பணி மூப்பு பெறவிருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு இக்கொலை வழக்கு தலைவலியாக மாறுகிறது. கொலை வழக்கை விசாரிக்கும்போது அந்த கிராமத்துக்கு பொருட்களை வாங்கி விற்பவராக இளைஞர் ஒருவர் வருகிறார். அவர் யார், எதற்கு அங்கு வந்தார், இறந்தவருக்கும் அவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதே படம்.  படத்தின் ஸ்பெஷலே, தார் பாலைவனம்தான். அதன் வறண்ட தன்மையும். அங்கு வாழ்பவர்களின் இரக்கமேயில்லாத தன்னைக் காத்துக்கொள்ள நினைக்கும் குணமும்தான் படத்தின் முக்கியமான அம்சம்.  டெல்லியில் இருந்து கதை ராஜஸ்தானுக்கு மாறி முழுக்க பாலைவனத்திலேயே நடக்கிறது. பழிக்குப் பழி கதைதான். அதை பாலைவனப் பின்னணி முழுக்க மாற்றி விடுகிறது. மேய்ச்சல் மாடுகள், ஆடுகள், இறந்து பாலைவனத்தில் கிடக்கும் மாட்டின் உ

ஐஏஎஸ் சா, அப்பாவா முடிவெடுக்க தடுமாறும் மகன்! - போருகாடு -2008

படம்
  போருடு 2008 அப்பா ரௌடி, மகன் குடிமைத்தேர்வில் வென்று நேர்காணலுக்கு செல்லவிருக்கிறார். இதுவே பொங்கலுக்கு வடகறி போல இருக்க, அவர்கள் வாழும் நகரில் உள்ள இரு மாஃபியா குழுக்களுக்கு இடையில் தகராறு. இதில் ஒரு குழுவில் நாயகனின் அப்பா இருக்க, வேறு என்ன நடக்கும்? அப்பாவுக்காக மகன், மகனுக்காக அப்பா என பாசம் ஆவேசம், ஆக்ரோஷத்தை வளர்க்க படம் 2.30 நிமிடம் ஓடுகிறது.  படத்தில் முக்கியமானது அப்பாவுக்கும், மகனுக்குமான பாசம் நேசம் முரண்பாடுகள்தான். அப்பாவைப் பொறுத்தவரை தான் ஆதரவின்றி நிற்க, தன்னை பாதுகாத்து வளர்த்த நாயக் தெய்வம். எனவே, சுயமாக அறியாமலேயே நாயக்கின் சட்டவிரோத விஷயங்களுக்கு துணையாக நிற்கிறார். அப்பா பாண்டுவுக்கு விசுவாசம் முக்கியம். அவருக்கு மகன் படித்து வேலைக்கு எதற்கு போகவேண்டும்? தன் அருகில் இருந்தாலே போதும் என நினைக்கிறார். ஆனால் மகன் அஜய்யைப் பொறுத்தவரை அப்பா மீது பாசம் உண்டு, அக்கறை உண்டு. ஆனால் அவரின் முதலாளி மீது கிடையாது. அவரின் செயல்பாடுகளை அஜய் இறுதிவரை ஏற்பதும் இல்லை.  ஐஏஎஸ் நேர்காணலுக்கான பயிற்சியில்... தற்காப்புக்கலை கற்றுக்கொண்டு அதை பகுதிநேரமாக மாணவர்களுக்கு சொல்லித்தருவதே அஜ

தனது நண்பனைக் கொன்றதற்கு பழிவாங்க நாகர்களை தேடி பயணிக்கும் சிவன்! - நாகர்களின் ரகசியம் - சிவா முத்தொகுதி 2

படம்
  நாகர்களின் ரகசியம் அமிஷ் திரிபாதி பவித்ரா ஸ்ரீனிவாசன் வெஸ்ட்லேண்ட் அமிஷ் திரிபாதி குணாக்களின் பிரதிநிதியான சிவா, நீலகண்டராக மெலூகா நாட்டினரால் வணங்கப்படுகிறார். இந்த நேரத்தில் அவருக்கு அவர் செய்யும் செயல்பாடுகளை விளக்க கோவிலில் வாசுதேவர்கள் உதவுகின்றனர். இவர்கள் சிவாவின் மனதில் எழும் கேள்விகளுக்கு கூட பதில் சொல்லும் வல்லமை பெற்றவர்கள். இந்த நேரத்தில் ப்ரஹஸ்பதி என்ற ஞானி ஒருவரை சிவா சந்திக்கிறார். இவர்தான் மந்த்ரமலை என்ற இடத்தில் சோமரஸத்தை ஆய்வு செய்து தயாரிக்கிறார். அதை மேம்படுத்த முயன்றுவருகிறார்.  சதியை மணம் செய்துகொள்ள சிவன் விரும்புகிறார். இதற்கான வழிமுறையை வாசுதேவர் தான் சொல்லித் தருகிறார். அதன்படி சிவா சதியின் மனத்தை வெல்கிறார். திருமணம் நடைபெறுகிறது. விகர்மாவான சதியை மணந்துகொள்ள மெலூகாவில் உள்ள விகர்மா சட்டத்தை மாற்றுகிறார். சட்டத்தை எப்போதும் மீறாத சதி, காதல் வந்தபிறகு அவளால் சிவனை தவிர்க்க முடியாமல் போகிறது.  இந்த நூலில் முக்கியமான விஷயம் நாகர்கள் யார் என்பதுதான். நாகர்களை மெலூகர்கள், ஸ்த்பவ நாட்டைச் சேர்ந்த மக்கள், காசி மக்கள் என பலரும் நாகர்களை வெறுக்கிறார்கள். இத்தனைக்கும

அப்பாவைக் கொன்றவர்களை பழிவாங்கும் முரட்டு முட்டாள் பாண்டி சகோதரர்களின் கதை! கடசீல பிரியாணி

படம்
  கடசீல பிரியாணி கடசீல பிரியாணி படத்தின் மையக்கதை அப்பாவைக் கொன்றவர்களை தேடிப்பிடித்து கொல்வதுதான். அதனை படத்தின் இயக்குநர் அவல நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார். அதுதான் படத்தை தனித்துவமாக காட்டுகிறது.  ஆனால் தலைப்பு எதற்கு கடசீல பிரியாணி என வைத்திருக்கிறார்கள் என சிலர் கேட்கலாம். அதற்கான பதிலையும் இயக்குநர் இறுதியில் பதிலாக வைத்திருக்கிறார்.  பாண்டி குடும்பத்தார் மொத்தம் இருவகை. மனைவி, மாமனார், அத்தை என குடும்பமே வன்முறை கொண்டவர்களாக இருக்க கணவன், தனது கடைசிப்பிள்ளையை மட்டும் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார். மூன்றாவது பிள்ளையோடு தனியாக வாழ்கிறார். இவரது மூத்த இருபிள்ளைகளும் வன்முறையான ஆட்கள் என்பதால், அவர்களை அப்பா சந்திக்கவிரும்புவதில்லை. அவர்கள் தாயோடு வெட்டும் குத்தும் கறிச்சோறுமாக வாழ்கிறார்கள்.  இந்த நேரத்தில் அப்பா, தொழில் சார்ந்து சிலரால் படுகொலை செய்யப்படுகிறார். அதனால் மூத்த இருபிள்ளைகளுக்கும் அம்மா, கொன்றவர்களை பழிவாங்கவேண்டும் என்று சொல்லி பாடம் போட்டு அனுப்புகிறார். எனவே, அவர்கள் ஒரு எமோஷனல் சப்போர்ட்டுக்காக கடைசி பிள்ளையான தம்பியையும்  கூட்டிக்கொண்டு வருகிறார்கள். தம்பிக்க

அமெரிக்கர்களின் தனிமையைப் பேசும் நூல்! - நூல் அறிமுகம் ஜூலை மாதம் 2021

படம்
              ரேஷர் பிளேட் டியர்ஸ் எஸ் . ஏ . காஸ்பை தனது மகன்களையும் , தம்பதிகளையும் கொன்ற கொலைகாரர்களை அவர்களின் தந்தை யர் இருவரும் சேர்ந்து எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதுதான் கதை . நிகழ்கால கதையின் நடுவே பழிவாங்குபவர்களின் கடந்தகால வாழ்க்கையு்ம் வந்துபோகிறது . அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் நடைபெறும் வன்முறையான சம்பவங்கள் கொண்ட கதை . கோஸ்ட் ஃபாரஸ்ட் பிக் சுயன் ஃபங்   அப்பா இறந்த பிறகு அவரைப் பற்றிய இறந்த கால விஷயங்களை மகள் எப்படி தெரிந்துகொள்கிறாள் என்பதைப் பற்றி இந்த நூல் விவரித்துச் செல்கிறது . இந்த கதையில் மகளின் மனதிலுள்ள கேள்விகள் , குடும்பம் , அவளுக்கு கிடைத்த அன்பு பற்றிய ஏராளமான விஷயங்களுக்கு பதில் கிடைக்கிறது . சீக் யூ கிரிஸ்டன் ராட்கே வரலாறு , தனிமை , ஒருவருக்கொருவர் எப்படி தகவல் தொடர்பு கொள்வது என பல்வேறு விஷயங்களை விளக்கி கிராபிக் கட்டுரை நூலாக ஆசிரியர் எழுதியுள்ளார் .

மகனின் இறப்பில் தொடங்கும் பழிக்குப்பழி வன்மம்!

படம்
              ரேத் ஆப் தி மேன் கய் ரிட்சி பிரெஞ்சில் வந்த படனத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள் . படத்தின் கதை எளிமையானதுதான் . அமெரிக்காவில் உள்ள கேங்ஸ்டர் ஒருவரின் மகனை முன்னாள் கொள்ளையர்களின் குழு கொன்றுவிடுகிறது . இதற்கு கேங்ஸ்டர் தந்தை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் மீதிக்கதை . படத்தின் கதையை நகர்த்தி செல்வதில் ஒளிப்பதிவும் இசையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன . மென்மையாக தொடங்கும் கிடார் கம்பிகளின் மீட்டலே படத்தின் ரத்த வேட்கையான சண்டைக்காட்சிகள் மற்றும் பழிவாங்கும் உணர்ச்சிகளை பார்வையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கிறது . ஜேசன் ஸ்டாதம் இருக்கிறார் படத்தில் . அப்புறம் வேறென்ன வேண்டும் என இயக்குநர் நினைத்திருக்கிறார் . அதுதான் படத்திற்கு பலவீனமாகிறது . அனைத்து சண்டைக்காட்சிகளுமே மிகவும் ஜென்டில்மேன்தனமாக உள்ளது . துப்பாக்கியில் சுட்டு வரவு செலவு தீர்ப்பதாக இருப்பதால் , சில சமயங்களில் ஆக்சன் காட்சிகளில் ஈர்ப்பு குறைகிறது . நேருக்கு நேரான மோதல்களே இல்லாமல் இருப்பது ஜேசன் படங்களை பார்ப்பவர்களுகு இழப்பாக தோன்றும் . போர்ட

தனது குடும்பத்தை அழித்த டிவி நிருபரை பழிவாங்கப் போராடும் சகோதரர்களின் கதை! பினாக்கியோ - கொரிய தொடர்

படம்
                  பினாக்கியோ கொரிய தொடர் 10 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர்    Genre: Romance, Drama, Comedy, Family Written by: Park Hye-ryun Directed by: Jo Soo-won, Shin Seung-woo   Pinocchio is a 2014–2015 South Korean television series starring Lee Jong-suk, Park Shin-hye, Kim Young-kwang and Lee Yu-bi தீயணைப்பு வீரரின் குடும்பம் எப்படி ஊடகங்களின் தவறான செய்தியால் அழிகிறது . அதில் மிஞ்சிய அண்ணன் அதற்கு காரணமான ஆட்களை கொலை செய்ய திட்டமிட்டு வாழ்ந்து வருகிறான் . அவன் தற்கொலை செய்துகொண்டதாக கருத்ப்படும் தம்பி சொய் தொல்போ என்ற பெயரில் வயதான ஒருவரால் தத்து எடுக்க்ப்பட்டு வளர்க்கப்படுகிறான் . விதிவசத்தால் அவனை கடலிலிருந்து மீ்ட்டு வளர்க்கும் குடும்பம் வேறு யாருமில்லை . அவனது குடும்பத்தை அவதூறு செய்து அம்மா தற்கொலை செய்துகொள்ள காரணமான செய்தி ஆசிரியர் சாவ் கீ யின் கணவர் குடும்பம்தான் . மனைவி தன் பேச்சை கேட்காத காரணத்தால் அவளை விவகாரத்து செய்துவிட்டு தனது தந்தையுடன் வாழ்கிறார் சாவ் கீ கணவர் . சாவ் கீயின் மகளை இன்கா ஒரு பினாக்கியோ குறைபாடு கொண்ட சிறுமி . இந்

எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது! - ரோன் மால்கா, இஸ்ரேலிய தூதர், இந்தியா

படம்
            ரோன் மால்கா இஸ்ரேல் தூதர் , இந்தியா     இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்துள்ளது . இதனை எப்படி அறிந்தீர்கள் ? எங்களது அமைப்பு மிகவும் வேகமாக தகவல்களை அறியக்கூடியது . அதனால் குண்டுவெடிப்பு நடந்தவுடனே அதிகாரிகளிடமிருந்து எனக்கு தகவல் கிடைத்துவிட்டது . இப்படி நடந்திருப்பதால் நாங்கள் விழிப்புடனும் , அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு தயாராகவே இருக்கிறோம் . கடந்த சில நாட்களாகவே நாங்கள் பல்வேறு மிரட்டல்களை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறோம் . இந்த வெடிகுண்டு மூலம் அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் யூகித்துவிட்டோம் . எனவே தேவையான முன்தயாரிப்பு நடவடிக்கைகளை எடுத்து விட்டோம் உங்களுக்கு வந்த மிரட்டல்களை பற்றி சொன்னீர்கள் . அதனை விரிவாக சொல்ல முடியுமா ? இவையெல்லாம் இஸ்ரேல் தொடர்புடையதுதான் . நாங்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் . இதனால் ஈரான் அரசு , லெபனானின் ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளிடமிருந்து எங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன . நாங்கள் எங்கள் எதிரிகளை குறை்த்து மதிப்பிடவில்லை . நாங்கள் இவற்றை தீவிரமாகவே அண

பச்சோந்தியாக குணம் மாறினாலும் காதலை மறக்காதவன்தான் டோனி! - ஊசரவெலி - சுரேந்தர் ரெட்டி

படம்
            ஊசரவெல்லி   காஷ்மீரில் என்டிஆர் ஜூர்(டோனி), தமன்னாவை(நிகாரிகா) சந்திக்கிறார். தீவிரவாதிகள் ஒவ்வொருவராக பிடித்து வைத்துள்ளவர்களை கொன்று கொண்டு இருக்கிறார்கள். இதனால் என்டிஆர், தான் இன்னும் காதல், முத்தம், கல்யாணம் என எதுவுமே செய்யவில்லை என ஆதங்கப்பட அவருக்கு நச்சென முத்தம் கொடுத்து வாழ்க்கையை பூரணமாக்குகிறார். பின்னர் அங்கிருந்து தப்பிவிடுகிறார்கள். பின்னர் இருவரும் சந்திக்கிறார்கள். டோனி நிகாரிகாவை காதலிக்க தொடங்குகிறான். அது அவளது தோழிக்கு  வித்தியாசமாக தோன்றுகிறது. ஆனால் டோனிக்கு முன்பாகவே மந்திரியின் மகன் நிகாரிகாவை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுவிடுகிறான். ஆனால் டோனியைப் பொறுத்தவரை அதனால் என்ன என்று பதினைந்து நாள் டைம் கொடுங்கள் என்று நிகாரிகாவிடம் நேரம் கேட்டு காதலிக்கிறான். படத்தில் என்னதான் கதை என இந்த இடத்தில் நிறையப் பேர் பொறுமையிழந்து விட வாய்ப்பு அதிகம்.    ஆனால் இது சுரேந்தர் ரெட்டியின் படம். எனவே படத்தின் பின்பகுதி அழுகையான கதைக்கு முன்னதாகவே நிறைய காமெடி காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவை அத்தனையும் பிரமாதமாகவே படத்திற்கு மேட்ச் ஆகின்றன. ரகுபாபு, ரகு கர