இடுகைகள்

கொள்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சில சவாலான சூழல்கள்!

படம்
  இப்போது சில சூழ்நிலைகளைப் பார்ப்போம். அதைப் பத்திரிகையாளர்களாக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள் என ஆராய்வோம். இதற்கான பதில்கள் ஒன்றுக்கும் மேலாக இருக்கலாம். இதை நீங்கள் உங்கள் சக நண்பர்கள், வழிகாட்டிகளுடன் ஆராய்ந்து பதில் கூறலாம். அல்லது உங்கள் அனுபவத்தை வைத்து மட்டுமே பதில் கண்டுபிடிக்கலாம். நாட்டின் மத்திய நிதியமைச்சர் கலந்துகொள்ளும் மாநாடு பற்றிய செய்தியை நீங்கள் பதிவு செய்யவிருக்கிறீர்கள். அந்த நேரத்தில் நிதியமைச்சர் தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குச் செல்கிறீர்கள். அறை வாசலில் அன்றைய மாநாடு தொடர்பான தகவல்களைக் கொண்ட தாள்கள் கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பார்ப்பீர்களா? நீங்கள் வேலை செய்யும் நாளிதழ், செய்திக்காக எவரிடமிருந்தும் அன்பளிப்புகள், பரிசுகள், பணம் வாங்க கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. விதியாகவும் மாற்றியுள்ளது. அந்த நேரத்தில் உங்களது சக நண்பரும், தோழியுமான ஒருவர் போனில் பெருநிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரிடம் பேசுகிறார்.   தனக்கு ஒரு நகை ஒன்றை பரிசாக பெற்று வீட்டு முகவரியைக் கொடுத்து அனுப்பி வைக்க சொல்கிறார். இந்த செய்தியைக் கேட்கும் நீங்கள், இதைப் பற்

செய்திகளை எழுதும்போது கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள்!

படம்
  ஒரு விவகாரத்தில் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்கிறீர்கள் என்றால், முதலில் அந்த விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள முயலுங்கள். அதில் மக்களுக்கு கூறவேண்டிய விஷயம் என்னவென்று பத்திரிகையாளர்கள் இறுதியான முடிவுக்கு வரவேண்டும். ஒரு விவகாரம் சரியா, தவறா என்று முடிவெடுப்பது உண்மையான கொள்கை ரீதியான தன்மையைக் குறிக்காது. அந்த விவகாரத்தில் ஏதும் செய்யாமலேயே சரியான முடிவு கிடைத்துவிடும் என்றாலும் கூட அதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒரு பிரச்னையை வெவ்வேறு வழிகளில் சரியானது என்று சொல்லும்படி தீர்க்க முடியும் என்றால் கீழ்க்கண்ட கேள்விகளை பத்திரிகையாளர் கேட்டுக்கொண்டு பதில் கண்டறிவது முக்கியம். பிரச்னையை இந்த வகையில் தீர்க்கும்போது உலகத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா? அரசு, சட்ட விதிகள், மத கோட்பாடுகள் ஏதேனும் பாதிக்கப்படுமா? அவை என்ன மாதிரியான எதிர்வினைகளை வெளிப்படுத்தும்? அனைத்து மக்களுக்கும் சமரசமாக செல்லும்படியான தீர்வு, நடுநிலையான முடிவு ஏதேனும் இருக்கிறதா? பெரும்பாலான மக்களுக்கு நன்மை கிடைக்கும்படி என்னால் செயல்பட முடியுமா? எனது செயல்பாட்டால் மக்கள் பயன் பெறுவார்களா? பிரச்னையை நான

செய்திகளை எழுதுவதில் எந்தப்பக்கம் நிற்பது? - எது சரி, எது தவறு?

படம்
  கொள்கை ரீதியான சவால்கள் இதழியலைப் பொறுத்தவரை நவீன காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அச்சு ஊடகம் கடந்து காட்சி ஊடகங்கள் சக்தி பெற்றுள்ளன. கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், தனி ஒரு ஊடகமாக செயல்படத் தொடங்கிவிட்ட காலமிது. எப்படி இயங்கினாலும் செய்திகளை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் அதுவும் இதழியலில்தான் சேரும். இதழியலைப் பொறுத்தவரை நிருபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கும் பெரும் சவால். ஒரு விவகாரத்தில் எடுக்கும் நிலைப்பாடு ஒரு சூழலில் சரியாக இருக்கும். மற்றொரு சூழலில் தவறாக இருக்கும். அதை முட்டாள்தனம் என்று கூட பிறர் கருதலாம். செய்தி தொடர்பாக முடிவெடுக்கும்போது தொழில் சார்ந்த கொள்கைளை அடிப்படையாக கொள்ளவேண்டும். ஆசிரியர் குழுவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் நாம் அதற்கு சரியான பதிலைக் கண்டுபிடித்தால்தான் முன்னே நகர முடியும். இரண்டு இடங்களில் நாம் என்ன முடிவெடுப்பது என தடுமாறி நின்றுவிடுகிறோம். ஒன்று. எது சரி அல்லது எது தவறு என குழம்புவது. அடுத்து நாம் எடுக்க வேண்டிய ஒரே முடிவு. ஒரே முடிவால் நாம் செய்யும் செயல்களுக்கு கிடைக்கும் சரியான ப

நேர்மை, சுதந்திரம், பாகுபாடற்ற தன்மை எனும் மூன்று நம்பிக்கை கொள்கைகள்! - இதழியல் அறம்

படம்
  உலக நாடுகளிலுள்ள பத்திரிகை ஊடக நிறுவனங்கள் அவற்றுக்கே உரிய கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன. இதில், நிலப்பரப்பு, உள்ளூர் கலாசாரம் சார்ந்து சில அம்சங்கள் மாறுபடலாம். உலகளவில் புகழ்பெற்ற மதிக்கப்படும் ஊடக நிறுவனமான ராய்ட்டர்ஸ், பின்பற்றும் இதழியல் கொள்கைகளுக்கு ட்ரஸ்ட் பிரின்சிபல் என்று பெயர். இந்த நம்பிக்கை கொள்கைகளில் சுதந்திரம், பாகுபாடற்ற தன்மை, நேர்மை ஆகியவை அடங்கியுள்ளன. இந்த மூன்று கொள்கைகளையும் நிருபர் / செய்தியாளர், ஆசிரியர் ஆகியோர் அனைத்து செய்திகளிலும், கட்டுரைகளிலும் கடைபிடிப்பது அவசியம். இப்போது பத்து முக்கியமான கடைபிடிக்கவேண்டிய விஷயங்களைப் பார்ப்போம். 1.     செய்திகளில் எப்போதும் துல்லியம் இருக்கவேண்டும். 2.       நேரும் தவறுகளை வெளிப்படையாக ஏற்று சரி செய்யவேண்டும். 3.     பாகுபாடற்ற தன்மையை சமநிலையாக பராமரிக்க வேண்டும். 4.     ஆர்வமுள்ள செய்திகளைப் பற்றி மேலாளர் / மூத்த ஆசிரியரிடம் கூறவேண்டும். 5.     ரகசியமான செய்திகளை எப்போதும் மதிக்க வேண்டும். 6.     செய்திகளைக் கொடுக்கும் ஆதாரங்களை, அதிகாரத்திடமிருந்து பாதுகாக்கவேண்டும். 7.     கட்டுரை அல்லது செம்மைப்

சமூகத்தில் பத்திரிகையாளரின் பணி என்ன?

படம்
  ஒரு சமூகத்தில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க நேர்மையாக செயல்படும் நிருபர்கள், செய்தியாளர்கள் முக்கியம். அவர்கள் அரசியல், நிதி, வணிக, சமூக அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை கவனமாக கண்காணித்து வருகிறார்கள். இவர்களின் முக்கியமான பணி, மோசடி முறைகேடுகளை வெளிப்படுத்துவதும், அதன் வழியாக மக்களுக்கு கல்வியை அளிப்பதும்தான். பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் அரசு மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான பாலம் போன்றவர்கள். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் அரசின் கொள்கைகளை மக்களுக்கு விளக்குகிறார்கள். பின்னர், அதுபற்றிய அவர்களின் கருத்துகளை எதிர்வினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் சமூகத்தின் மதிப்பைக் காப்பாற்றுவதோடு, இதழியல் சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டும். நம் சமூகத்தில் நிருபர் / செய்தியாளர்களின் பணிகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல், சமூக, பொருளாதார நாகரிகங்களை விளக்குவது அரசு, நீதிமன்றம், வணிகம் ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடிகள், வெற்றிகள், தோல்விகளை விமர்சிப்பது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் ஆதார மையங்களை வெளிப்படுத்துவது முறை

வெற்றிக்கான கொள்கைகள் என்னென்ன? எம்இ மாத இதழ் சொல்லும் ரகசியம்

படம்
  பெருநிறுவனங்கள் அனைத்துமே அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கான இதழ்களை நடத்துகின்றன. அதில் பல்வேறு தொழில் முன்னேற்றங்கள், பணியாளர்களின் சாதனை, நிறுவனரின் லட்சியம், தற்போதைய இயக்குநரின் தொழில்கொள்கை இடம்பெறும். இந்த வகையில் மகிந்திரா எம்இ என்ற இதழை நடத்துகிறது. அதில் வந்த தொழில் அறிவுறுத்தல் கொள்கைகளைப் பார்ப்போம். எப்போதோ ரெடி தொழிலில் வெல்வதற்கான வாய்ப்பு என்பது எப்போது வரும் என தெரியாது. எனவே, நிறுவனம் குறிப்பிட்ட சந்தையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இறங்கினால் திட்டங்களை அறிவிக்கும் வேகத்தில் பணியாளர்களை முடுக்கிவிட தலைவர் தயாராக இருக்கவேண்டும். இல்லையெனில் வெகு விரைவில் வாய்ப்பை இழந்து கையில் உள்ள சந்தையையும் இழந்துவிடுவோம். அத்தனையும் வேண்டாம் கையில் உள்ள அத்தனை பணத்தையும் தொழில் முதலீடாக பயன்படுத்த வேண்டியதில்லை. அதில் ஆபத்துகள் அதிகம். பெரிய முதலீடு மூலம் பெரிய வருமானம் கிடைக்கும் என்பது மூடநம்பிக்கை.   சமரசமற்ற வாழ்வு மேசையை விட்டு விலகி வர தைரியம் இல்லாதபோது அறைக்குள்   நுழையவே கூடாது. செய்யும் வேலையில் அழுத்தம் என காரணம் சொல்லி தரத்தையும், மதிப்பையும் சமரசம்

காப்புரிமைப் போர்!

படம்
    நிறுவனத்தை முதன்முதலில் ஸ்டார்ட்அப்பாக தொடங்குபவர், அதற்கான கொள்கை, லட்சியத்தை உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் சுமப்பார். மற்றவர்கள் இதை அப்படியே பின்பற்றுவார்கள். அந்த வகையில் ஹூவாவெய் நிறுவனத்தில் புகழ்ச்சிக்கு எந்த மரியாதையுமில்லை. உழைத்தே ஆகவேண்டும். தங்களை நிரூபிப்பவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு உண்டு. நிறுவனத்தின் பங்குகளும் கூடுதலாக வழங்கப்படும்.   நிறுவனம் எதற்கு தொடங்கப்படுகிறது? அதன் லட்சியம் என்ன? நினைத்த லட்சியத்தை சாத்தியப்படுத்துமா என்பதற்கான பதில்களே தேடிக் கண்டுபிடிப்பது முக்கியம். அப்படி இல்லாதபோது நிறுவனம் விரைவில் டைட்டானிக்காக தொழில்துறையில் சவால்களை சந்திக்க முடியாமல் மூழ்கிவிடும். இந்த வகையில் ஹூவாவெய் தனது இலக்குகளை அறிந்தேயுள்ளது என்றார் ரென். அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கவேண்டும் என்பதுதான் ஹூவாவெய்யின் லட்சியம்.   அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு காரணமாக குவால்காம், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் மென்பொருள், வன்பொருள் சேவைகளை ஹூவாவெய்யிடமிருந்து விலக்கிக்கொண்டனர். இதனால் உங்களுக்கு நஷ்டம்தானே என சிஎன்பிசி சேனல் பேட்டியில்

1991 பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வயது 30!

படம்
                  1991 சீர்திருத்தங்களுக்கு வயது 30 நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில் டாக்டர் மன்மோகன் நிதியமைச்சராக இருந்து கொண்டு வந்த தாராளமயமாக்கள் கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்து நடப்பு ஆண்டோடு 30 ஆண்டுகள் ஆகின்றன . 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியில் தடுமாறிய இந்தியா சீர்திருத்தங்களின் விளைவாக 6.5 சதவீத வளர்ச்சியை இருபத்தைந்து ஆண்டுகளில் பெற்றது மகத்தான சாதனை . உடனே நாம் சீனாவுடன் நம்மை இணைத்துப் பார்க்க கூடாது . அங்கு ஒரு கட்சி ஆட்சிமுறையோடு அரசியல் கொள்கையும் வலுவாக இருந்ததால் பொருளாதாரத்தில் இந்தியா எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுவிட்டார்கள் . உள்நாட்டிற்கான வணிகத்திலும் நிலையான இடத்தை பிடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும்படி வளர்ந்துவிட்டார்கள் .    இந்திய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட ஐந்து மடங்கு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது . ஆனால் வறுமை ஒழிப்பில் பெரிதாக சாதிக்க முடியவில்லை . நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் உள்ள வர்க்கத்தினரை பெரிதாக மேலே கொண்டு வர இயலவில்லை . ஆனாலும் சந்தையை விரிவாக்கியதில் இந்தியா முக்கியமான சாதனையை செய்துள்ளது

இந்த தேர்தலில் நாங்கள் வெல்ல விரும்புகிறோம்! - கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

படம்
                  கமல்ஹாசன் மக்கள்நீதிமய்யம் தலைவர் நீங்கள் கடந்த மக்களவை தேர்தலில் 3.7 சதவீதம் வாக்குகளைப் பெற்றீர்கள் . இப்போது எந்தளவு வாகுகளைப் பெறுவீர்கள் என்று ஏதேனும் திட்டமிடல் உள்ளதா ? நான் எந்த ஆய்வுகளையும் நம்புவதில்லை . மக்களை மட்டுமே நம்புகிறேன் . மக்களுக்கு எங்கள் மீது ஆர்வம் உள்ளது . அதை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கவிருக்கிறோம் . 2019 ஆம் ஆண்டிலிருந்து என்ன விஷயங்கள் கற்றுக்கொண்டீர்கள் ? அந்த ஆண்டில்தான் அரசியல்வாதியாக நாங்கள் களம் கண்டோம் . நாங்கள் நிறைய விஷயங்களை சரிசெய்துகொண்டிருக்கிறோம் . நாங்கள் மூன்றிலக்க எண்ணிக்கையை மனதில் கொண்டிருக்கிறோம் . நாங்கள் பத்து சதவீத த்தை கடக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சொன்னால் அதுவே எங்கள் வெற்றி . நாங்ங்கள் இந்த விளையாட்டில் இருக்கிறோம் என்பதை விட விளையாட்டை மாற்றுவோம் என்று சொல்ல விரும்புகிறேன் . உங்கள் நம்பிக்கை சரிதான் . உண்மையை புரிந்துகொள்ளவேண்டுமே ? நாங்கள் இத்தேர்தலில் வெல்லப்போகிறோம் என்று கூறவில்லை . நாங்கள் வெல்ல விரும்புகிறோம் என்றுதான் கூறுகிறேன் . வெற்றி , தோல்வி என எது நடந்தாலும

பிரேசில் நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தில் இந்தியா கற்கவேண்டியது என்ன?

படம்
                நேரடி பணப்பரிமாற்றத்தில் இந்தியா கற்கவேண்டியவை ! இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் முதல் 52 அமைச்சகங்களை ஒன்றாக இணைத்து , 384 நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றுசேர்வதற்கான முயற்சிகளை செய்து வந்த்து . நேரடி வங்கிக்கணக்கு பரிமாற்றம் மூலம் நலத்திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்திவருகிறது . பிரதான் மந்திரி காரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டம் மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதோடு வறுமை ஒழிப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவுகிறது . நீண்டகால நோக்கில் இதனை விரிவுபடுத்தி , குறைகளைக் களைந்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றுசேரும் . இந்திய அரசின் சிந்தனைகள் சரியாக இருந்தாலும் அனைத்து திட்டங்களிலும் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாததால் மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பு திட்டம் , பிரதான் மந்திரி மாட்ரி வந்தனா யோஜனா ஆகிய திட்டங்களில் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களுக்கான பயன்களைப் பெற முடியவில்லை . 2015 ஆம் ஆண்டு டில்லியில் நிதி அமைச்சகம் ஒருங்கிணைத்த பொருளாதார மாநாட்டில் , ஜன்தன் ஆதார் திட்டம் விவாதிக்கப்பட்டது . இதில் பிரேசில்

அறிவியல், ஆராய்ச்சி தொடர்பான மசோதாவில் என்னென்ன அம்சங்கள் மக்களுக்கு உதவும்? -மத்திய அரசின் புதிய கொள்கை வரைவு

படம்
                தொழில்நுட்பம் மற்றும் அறிவியலுக்கான கொள்கை ஜனவரி 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . இதில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன , மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை டாக்டர் அகிலேஷ் குப்தா விளக்குகிறார் . முதலில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கொள்கைகள் நினைத்த இலக்கை எட்டவில்லை . தற்போதையை ஐந்தாவது தொழில்நுட்பக் கொள்கை மையப்படுத்தப்படாதது , வல்லுநர்களைக் கொண்டது , கீழே வரை வளர்ச்சியை ஏற்படுத்துவது , குறிப்பிட்ட காலத்தில் இதனை ஆய்வு செய்வது , மேம்படுத்துவது , இதுதொடர்பான கருத்துகளைப் பெறுவது ஆகியவற்றை உள்ளடக்கமாக கொண்டது . பத்தாண்டுகளுக்குள் உலகின் மூன்று முக்கிய அறிவியல் ஆற்றல் கொண்ட நாடாக இந்தியா மாறவேண்டும் என்பதே இலக்கு . முழுநேர ஆராய்ச்சியாளர்கள் . தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு , ஆராய்ச்சிக்கான நிதியுதவி ஆகியவை இதில் கிடைக்கும் . தற்சார்பு இந்தியாவின் கீழ் பல்வேறு திட்டங்கள் இதில் உள்ளன . உலக அங்கீகாரத்தோடு விருதுகளும் இதன் மூலம் வழங்கப்படவுள்ளது . இதில் ஒருவர் செய்யும் ஆராய்ச்சியை மக்கள் அனைவரும் ஆர்வமுடன் அணுகி அதனைப் படிக்கமுடியும் . அர

ஜோ பைடன் மாற்றம் செய்யவிருக்கும் கொள்கைகள் இவை

படம்
                ஜோ பைடன் மாற்றம் செய்யவிருக்கும் கொள்கைகள் இவை வணிகம் ட்ரம்ப் சீனாவுடன் செய்த வணிகப்போர் வேறுவகையில் தொடரும் . கூட்டணி நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு மறைமுகமான வழியில் சீனாவுக்கு வர்த்தக அழுத்தம் தரப்பட வாய்ப்புள்ளது . அணுஆயுத ஒப்பந்தம் ஈரான் அமெரிக்காவுடன் அணுஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ள வாய்ப்புள்ளது . இதன்மூலம் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அமெரிக்க நீக்கிக்கொள்ள வேண்டியிருக்கும் . இருநாட்டு உறவுகள் சீர்ப்பட ஒப்பந்தம் மிகவும் அவசியம் . சூழல் ஒப்பந்தம் தூய ஆற்றல் திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது . 2018 ஆம் ஆண்டு அதிக கார்பன் வாயுவை வெளியிட்ட நாடுகள் வரிசையில் சீனா , ஜப்பான் , அமெரிக்கா , இந்தியா , ரஷ்யா ஆகியவை உண்டு் . 1.7 டிரில்லியன் டாலர்கள் மதிப்பில் கார்பன் வாயுவை வெளியிடுவதற்கான கடும் சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது . அமெரிக்காவில் தயாரிப்போம் சாத்தியமில்லாத திட்டம்தான் . ஆனால் தேசியவாதம் வளர்ந்து வரும்போது என்ன செய்வது ? டிரம்ப் ஏற்படுத்திய மேட் இன் அமெரிக்காவை இன்னும் பெரிய