இடுகைகள்

சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதில் கிளர்ந்தெழும் ஆவேச உள்ளுணர்வு

படம்
  உளவியல் ரீதியான கோட்பாடுகள், ஒருவரின் ஆக்ரோஷமான குலைந்த மனநிலையை வேண்டுமானால் விளக்கலாம். ஆனால் அவரின் குற்றங்களை விளக்காது. இந்த வகையில் உளவியல் கோட்பாடுகளுக்கு வரம்புகள் உண்டு. குற்றம் செய்தவர்கள் அனைரையும் மனநிலை பிறழ்ந்தவர்கள், குறைபாடு கொண்டுவர்கள் என கூறிவிட முடியாது என உளவியலாளர் சீகல் கூறினார். இவரது கருத்து உண்மையா என்றால் உண்மைதான். துறை   சார்ந்து ஆராய்ச்சிகள் அதிகரிக்கும்போது வரம்புகள் உடையலாம். ஒருவர் தனியாக அமர்ந்து உளவியல் கோட்பாடுகளை உருவாக்கி அதன் நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்துகொண்டிருந்தால், அதில் குற்றவியல் சார்ந்த அம்சங்கள் குறைவாகவே இருக்கும். இதற்காக உளவியல் கோட்பாடுகளை ஒருவர் மேலும் துல்லியமாக்க மெனக்கெடலாம். குற்றம் நடைபெறுகிறது என்றால் அதற்கான உயிரியல், சூழல், உளவியல் காரணங்களை கண்டுபிடிக்க முடிந்தால் உளவியலின் பங்கு குற்றவியலில் உள்ளது என நம்பலாம். சூழல் சார்ந்த அம்சங்கள் என்றால் குற்றம் பற்றிய பொதுமக்களின் கருத்து, நீதிமன்றத்தின் தீர்ப்பு, வழக்குரைஞர்களின் வாதம் ஆகியவற்றைக் கூறலாம். இந்த வகையில் குற்றத்தைப் பற்றி தெளிவாக விளங்கிக்கொள்ள உளவியல் விசாரணை பயன

ஒருவர் குற்றங்களைச் செய்ய தயங்குகிறார் - அதற்கு என்ன காரணம்?

படம்
  ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரது முன்னே உள்ள மேசையில் நிறைய ஆயுதங்கள் உள்ளன. கத்தி, ஆணி, சுத்தி, கோடாரி, சாட்டை, கயிறு என நிறைய பொருட்கள். அனைத்துமே ஒருவரை தாக்குவதற்கும் சித்திரவதை செய்வதற்குமானது. நாற்காலியில் அமர்ந்திருப்பவர், தன் எதிரே இருப்பவரிடம் சொல்லுகிறார்.  மேசையில் உள்ள எந்த பொருட்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். என் மீது பயன்படுத்து என்கிறார். இப்படி சொல்லப்படும்போது எதிராளி என்ன செய்வார்? தான் செய்வதை பிறர் பார்த்தால் கவனித்தால் நிச்சயம் நாற்காலி மனிதரை தாக்க மாட்டார். ஆனால் யாரும் கவனிக்கவில்லை என்றபோது நிச்சயம் ஆயுதங்களை பயன்படுத்த மனம் அரும்பாடு படும். அதை தடுத்து நிறுத்தும்போதுதான் நம் மனது பற்றிய தெளிவு கிடைக்கும். மேலே சொன்ன சோதனை அகிம்சை பற்றி உண்மையாகவே நடத்தப்பட்டதுதான். அறம், நீதி, குற்றம் என்பதெல்லாம் நாம் மெல்ல உலகைப் புரிந்துகொண்டு வாசித்து பிறரை பார்த்து அறிந்துகொண்டு வாழ்வதுதான். குற்றம் செய்வதில் ஏற்படும் தடைகள் பற்றி பார்ப்போம். தண்டனை காரணமாக ஏற்படும் ஒழுக்கம். அரசு, குறிப்பிட்ட குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்குகிறது., இல்லையெனில் ஆயுள

மார்க்சிய கொள்கை அடிப்படையில் சமூக குற்றங்களைக் காணலாம்!

படம்
  மார்க்சிய கொள்கை வழியில் கோணத்தில் குற்றத்தைப் பார்ப்பது பற்றி படித்தோம். அதிலும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. முதலாளித்துவ சமூகம் என்றால் குற்றம் செய்பவர்கள் அனைவருமே அந்த கருத்தில் உடன்பாடு கொண்டவர்களா, அனைத்து பிரிவினரும் குற்றம் செய்கிறார்களா என நிறைய கேள்விகளும் அதில் உண்டு. நடைமுறை யதார்த்தம் சார்ந்து கருத்துகளைப் புரிந்துகொள்வது, கருத்துகளின் அர்த்தம் அறிவது, அதிலிருந்து கற்றுக்கொள்வது, கற்றதும், பெற்றதுமான அனுபவங்களிலிருந்து ஆளுமையை உருவாக்கிக் கொள்வது ஆகியவை முக்கியமானவை. அதிகாரம், பணபலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளவர்கள்தான் சட்டங்களை உருவாக்குகிறார்கள். நேரடியாக உண்மையை எதிர்கொள்வது கடினம் என்பதால் நாம் அதை வேறுவேறு பெயர்கள் கொண்டு அழைக்கிறோம். உண்மையில் அதிகாரமும், பணபலமும் கொண்ட சிறுகுழுக்கள்தான் சமூகம் இயங்குவதற்கான விதிகளை வகுக்கிறார்கள். வெளியிடுவதும், நடைமுறைப்படுத்துவதும் வேறு வேறு அமைப்புகள், ஆட்கள். இப்படி அமைக்கும் சட்ட அமைப்பில் ஒருவரைக் கொல்வது என்பது சட்டப்படி ஏற்புடையதாகவும் உள்ளன. போதைப்பொருட்களை விற்பது, பெண்களை ஆபாச படம் எடுப்பது, வல்லுறவு செய்வது ஆகியவற்றில

பெண்கள் அழகுக்காக மட்டும்தான்-

படம்
  பெண்கள் அழகுக்காக மட்டும்தான்- திட்டமிட்டு பொதுபுத்தியை உருவாக்கும் ஜப்பான் பல்கலைக்கழகங்கள்   கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் பின்னாளில் மாநில அரசியல் கட்சியில் ஏதாவதொரு பதவியில் உயர்வார். அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்வார். இது பொதுவான காட்சி. ஆனால் ஜப்பானைப் பொறுத்தவரை அங்கு பெண்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை படிக்கும்போதே மனதில் உறுதிபடுத்திவிடுகிறார்கள். ஜப்பான் வளர்ச்சி பெற்ற நாடு. பொருளாதார அளவில் இதைக் கூறுகிறேன். அதேசமயம் கலாசாரம் சார்ந்தும் அந்த நாடு உலகிற்கு கொடுத்த கொடைகள் அதிகம். ஆனால் பெண்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. இளம்பெண்ணின் வனப்பு, ஆனால் சிறுமியின் உடல் என்பது ஃபேஷன் உலகில் எதிர்பார்க்கப்படும் உடல் தகுதி. இதனால் நிறைய பெண்கள் வாழ்க்கை ஊட்டச்சத்து பற்றாக்குறையாகி நோய்வாய்ப்படுவதையெல்லாம் கட்டுரைகளில் வாசித்திருப்பீர்கள். ஆனால் இப்படி பெண்கள் இருப்பதை ஒரு சமூகமே விரும்பினால், அப்படித்தான் இருக்கவேண்டுமென சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்களை தெரிவித்தால் எப்படியிருக்கும்? இதுபோ

சமூகத்தில் தனியாக வாழ்வது சாத்தியமா?

படம்
அகம் புறம்  ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்   கே.ஒருவர் ஏன் சமூகத்தில் வாழ வேண்டும், அவர் தனியாகவே வாழ முடியுமே? ப. உங்களால் தனியாக வாழ முடியுமா? கே.நான் சமூகத்தில் வாழ்வதற்கு ஒரே காரணம், எனது பெற்றோர் இங்கு வாழ்வதுதான்.. ப. உங்களுக்கு வேலை கிடைத்து, நல்ல வாழ்க்கை அமைந்தால் நீங்கள் சமூகத்தில் வாழ மாட்டீர்களா? நீங்கள் தனியாக வாழ முடியும் என நினைக்கிறீர்களா? நீங்கள் உண்ணும் உணவு, அணியும் உடை ஆகியவற்றுக்காக இன்னொருவரை சார்ந்திருக்கிறீர்கள். இங்கு யாரும் தனியாக வாழ்ந்துவிடமுடியாது. தனியாக இருப்பது என்பது ஒருவர் இறக்கும்போது மட்டுமே நடக்கும். வாழும்போது வாழ்க்கை என்பது உங்கள் அப்பா, அண்ணன், வணிகர், பிச்சைக்காரர் என யாராவது ஒருவரைச் சார்ந்துதான் அமையும். நீங்கள் இந்த உறவுகளுக்குள் உள்ள முரண்பாடுகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை. உங்களுக்குள் எந்த முரண்பாடும் எழவில்லையென்றால், நீங்கள் தனியாக வாழ்வது பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. கே. நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்கிறீர்கள். அப்படியென்றால் இந்த சமூகத்தில் நாம் சுதந்திரமாக இருக்க முடியாதா? ப. நீங்கள் மனிதர்கள் கொள்ளும்

சமூகம் என்பது என்ன?

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் கே. சமூகம் என்பது என்ன? ப. சமூகம் , குடும்பம் என்றால் என்ன என்று பார்ப்போம். இதை நாம் படிப்படியாக கண்டுபிடிக்க முயல்வோம். எப்படி சமூகம் உருவாக்கப்பட்டது, குடும்பம் என்றால் என்ன இதுதான் எனது குடும்பம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.   இந்த அமைப்பில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை ஆகியோர் உள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், உடை, நகைகள் என தனியாக உள்ளன. இதைப்போலவே பிறரும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர். குடும்பம் என்பது ஒருவரின் பாதுகாப்பான வாழ்க்கைக்கானது. அப்பா, மகனைப் பாதுகாப்பார். அவரின் சொத்துக்களும் அப்படித்தான் குடும்பத்தினரால் பாதுகாக்கப்படும்.   இப்படித்தான் குடும்ப அமைப்பு செயல்படுகிறது. உங்களது குடும்பத்தைப் போலவே தான் பிறரது குடும்பமும் உள்ளது. ஒரு குடும்பத்திற்குள் இன்னொரு வெளி நபர் வரக்கூடாது என்பதற்காக சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில் அதிக உறுப்பினர்கள் கொண்ட குடும்பம், அதிக சொத்து, அதிக வாகனங்கள்,   உடைகளை என வாழ்கின்றனர். இவர்கள் பிற குடும்பங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பெறுகின்றனர். மேலும், சட்டங்களை

சுதந்திரமான மனதை பெறுவது எப்படி? ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்   கலாசாரங்களைப் பின்பற்றும் சமூகத்தில் இருந்துகொண்டு நாம் எப்படி சுதந்திரமான மனதைக் கொண்டிருப்பது? முதலில் சுதந்திரமாக சிந்திப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். வானில் பறவை பறப்பது போல, ஆற்றில் நீர் நுரையுடன் பெருகி பாய்வது போல உங்களுக்கு ஆர்வம் இருக்கவேண்டும். சுதந்திரமடைவதற்கு உங்களிடம் இப்படி ஒரு வேட்கை உண்டா? அப்படி இருந்தால் எது உங்களை தடுத்துவிடும்? சமூகம், பெற்றோர்   உங்களை மாற்றுவதற்கு முயல்வார்கள். அவர்களை எதிர்க்க முடியுமா? அதை செய்ய உங்கள் மனதில் உள்ள பயம் உங்களைத் தடுக்கிறது. எனவே, உங்கள் வெளியிலிருந்து வரும் அழுத்தங்களை எதிர்க்க முடியவில்லை. உங்களைச்சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்கள் என்ன சொல்லுவார்கள் என்று பயம் உங்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் உங்களை சுதந்திரமடைவதிலிருந்து தடுக்கிறது. இதனால்தான் பெற்றோர், சமூகத்தின் அழுத்தங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வது நடக்கிறது. நான் பட்டினியாக கிடந்தாலும் அழுகி கிடக்கும் சமூகத்திற்கு எதிராக போராடுவேன் என்று உங்களால் கூறமுடியுமா, எது நடந்தாலும் எத்தனை சவால்கள் வந்தாலும் நான் தட

உடைந்துபோன திருமண உறவு - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பிரேக் இல்லாத வண்டியை இயக்குவது போல ... அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எனது லினக்ஸ் கணினி பழுதானதால் இதுவரை எழுதிவந்த , எழுதி வைத்து சேமித் கோப்புகள் தானாகவே அழிந்துவிட்டன . சோதித்ததில் சில கோப்புகளை குப்பைத்தொட்டியில் பார்த்தேன் . மீட்க முடியவில்லை . அதை மீண்டும் எழுத வேண்டும் . லினக்ஸ் கணினியில் காணாமல் போன கோப்பைத் தேடுவது கடலில் கலந்துவிட்ட ஆற்று நீரை தனியாக பிரிப்பது போல கடினமாக இருக்கிறது . லினக்ஸ் அமைப்பு முறையை முழுமையாக கற்காமல் அதை பயன்படுத்துவது தவறு என இப்போது எனக்குத் தோன்றுகிறது . கணியம் சீனிவாசன் சார் உதவினாலும் கூட கோப்பை எளிதாக மீட்க முடியவில்லை . பேக்அப் எடுத்து வைத்திருக்கவேண்டும் என அரிய அறிவுரையைச் சொன்னார் . நல்ல அறிவுரை . ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது . பிரேக்கிற்கு இணைப்பு கொடுப்பதற்கு முன்னரே வண்டியை சாவி போட்டு இயக்கியாயிற்று . வண்டி இப்போது சேட்டாவின் டீக்கடை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது . இந்த நிலையில் லபோதிபோ என கத்துவது , ட்விட்டரில் போடும் அட்வைஸ்களை சொல்லி என்ன செய்வது ... இனி க்ளவுட்டில் கோப்பைச் சேமித்து வ

பெண்களின் பாலியல் விழைவை மறுக்கும் சமூகம்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  21.12.2021 மயிலாப்பூர்  அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  நீங்கள் சென்னைக்கு வந்தாலும் கூட உங்களை என்னால் பார்க்க முடியவில்லை. வருத்தம்தான். என்ன செய்வது  நேரம் குறைவு. நல்லபடியாக ஊருக்குச் செல்லுங்கள். இன்னொரு நாள் சந்திப்போம். டிசம்பர் மாத குளிர் இரவிலேயே தொடங்கிவிடுகிறது. நான் காலை எட்டு மணிக்கே எழுந்து குளித்து சவரம் செய்துவிடுகிறேன். அதற்கு பிறகு நேரம் ஆனால், வட இந்திய ஆட்கள் கழிவறை, குளியலறையைக் கைப்பற்றி விடுவார்கள். மூன்றாவது மாடியில், வட இந்தியர்களோடு இப்போது நாங்கள் 9 பேர் தங்கியுள்ளோம்.  திருமண வயது சட்டம் பற்றி படித்துக்கொண்டு இருக்கிறேன். பெற்றோர்கள் 21 வயது வரை பிள்ளைக்கு பாதுகாவலர்களாக இருப்பார்கள். பெண்களின் பாலியல் தேர்வுகளை, விருப்பங்களை மறுத்தே சமூகம் உயிர்பிழைத்து வந்திருக்கிறது. பல்வேறு சட்டங்கள் வழியாக பாஜக அரசு தனது கருத்தியலை சமூகமெங்கும் பதித்து வருகிறது. நன்றி! அன்பரசு  23.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  இன்று மடிக்கணினியை அன்வர் என்பவரிடம் பழுது நீக்க கொடுத்தேன். புதிதாக ஓஎஸ் பதிவாகும்போது அதில் உள்ள

உலக நாடுகளை அச்சுறுத்திய காசநோய் வரலாறு!

படம்
  பான்டம் பிளேக் வித்யா கிருஷ்ணன் பெங்குவின் ஹவுஸ்  பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக நாடுகளை அச்சுறுத்திய காசநோய் எப்படி பரவியது, லட்சக்கணக்கான மக்களைக் கொன்றது என்பதைப் பற்றி எழுதியுள்ளார் வித்யா. நியூயார்க்கின் குடிசைகள் தொடங்கி நியூயார்க் வரை காசநோய் பாதிப்பு இருந்தது. கைவைத்திய மருந்துகள் முதல் ஆங்கிலமருத்துவ ஆராய்ச்சிகள் வரை காசநோயை அழிக்கும் பல்வேறு முயற்சிகளை நூல் ஆசிரியர் கூறுகிறார்.  வயலெட்ஸ் கியூங் சூக் சின் ஹாசெட் 699 1970ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெறும் கதை. சான், தனியாக வாழ்ந்து வரும் நபர். அவருக்கு நாமே என்ற என்ற பெண் ஸ்னேகிதி கிடைக்கிறார். சானுக்கு அவளை மிகவும் பிடித்துப்போகிறது. ஆனால் திடீரென ஒருநாள் மாலை அவளை நாமே நிராகரிக்கிறாள். பெண்ணின் மனம், ஆசை, சமூகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள் என நிறைய விஷயங்களை நூலில் கியூங் பேசுகிறார்.  மேட் இன் ஃப்யூச்சர் பிரசாந்த் குமார் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  ரூ.499 மார்க்கெட்டிங் தொடர்பான நூல் இது. இதில் எதிர்காலத்தில் மார்க்கெட்டிங்கை எப்படி செய்வது என பல்வேறு ஆலோசனைகளை சொல்லுகிறார் பிரசாந்த் குமார். ஊடகம், எழுத்து, பல்வேறு செல்வாக்கு ச

பத்ம விருதுகளைப் பெற்ற சமூக செயல்பாட்டாளர்கள் - சிறு அறிமுகம்

படம்
  இந்தியாவில் உள்ள பத்ம விருதுகளுக்கு யாருடைய பெயரையும் யாரும் பரிந்துரைக்கலாம். இதற்கான குறிப்புகளை இணையத்தில் பதிவேற்றி அதனை கமிட்டி ஏற்றுக்கொண்டால் உள்துறை அமைச்சகம் இறுதிப்பட்டியலை வெளியிடும். விருதுகளை பெறுகிறவர்களை அமைச்சகம் போன் செய்து தகவல் தெரிவிக்கும். சிலர் அதனை ஏற்க மறுத்தால், அதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களது பெயரை உள்துறை அமைச்சகம் விருதுப் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கிவிடும். இதுதான் நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.  இப்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட சிலரைப் பற்றி படிக்கப் போகிறோம்.  கே வி ரபியா கே வி ரபியா 55 கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர். கழுத்துக்கு கீழே உடல் இயக்கம் கிடையாது. இதனால் வீல்சேரில்தான் வாழ்கிறார். அப்படியிருந்தும் கூட பிறரைப் பற்றி யோசிக்கிறார் என்ற நோக்கில் விருதை அறிவித்திருக்கிறார்கள். பனிரெண்டு வயதில் போலியோ பாதிப்பு, புற்றுநோய் ஆகியவற்றைக் கேட்டு மனமொடிந்தவரின் உடலும் மெல்ல செயலிழந்து போனது. இதனால் அப்படியே கலங்கி நிற்காமல், தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய முயன்று வருகிறார்

இருளர் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை வழங்கும் ஆசிரியர் இளவரசன்! - அரியலூரில் புதிய முயற்சி

படம்
  இன்று தேர்வு எழுதுவதும் அதில் தேர்ச்சி பெறுவதும் கடந்து நினைத்த லட்சிய படிப்பை படிப்பதற்கான வேட்கை அதிகம் உள்ளது. இதற்கு தடையாக ஒன்றிய அரசு பல்வேறு அரசியல் விளையாட்டுகளை விளையாடி ஏராளமான நுழைவுத்தேர்வுகளை புரியாத மொழியில் வைத்து சவால்களை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் மாணவர்களை ஜெயிக்க வைக்க சிலர் தங்களையே தீக்குச்சியாக எரித்துக்கொண்டு உழைத்து வருகிறார்கள். அரியலூரின் ஓலையூர், பாப்பன் குளம் பகுதியில் 67 இருளர் குழந்தைகள் உள்ளனர். இவர்களைப் போன்றவர்கள் வறுமையை சமாளித்து பள்ளிப்படிப்பை தாண்டுவதே கடினம். அதிலும் வென்று கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதெல்லாம் மனோரமா இயர் புக்கில் வெளிவந்தாலும் ஆச்சரியமில்லை.  இவர்களுக்கு பயிற்றுவிக்க இளவரசன் முன்வந்து உதவி வருகிறார். தனியார் பள்ளி ஆசிரியரான இவர், மாலை நேரங்களில் இருளர் குழுந்தைகளுக்கு வகுப்புகளை எடுத்து வருகிறார். ஞாயிறு மட்டும் விடுமுறை. இப்பணியை கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்து வருகிறார்.  1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார் இளவரசன். இவரது கல்வி நிலையத்திற்கு பெயர் மகாத்மா காந்தி மாலைநேர படிப்பகம். இங்கு க

அணைகளை எதிர்த்துப் போராடும் இயற்கை போராளி மேதா பட்கர்!

படம்
    இயற்கை செயல்பாட்டாளர் மேதா பட்கர் மேதா பட்கரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இயற்கை சார்ந்த இதழ்களில் இவரைப் பற்றி அதிகம் வந்திருக்கும். நர்மதா நதியில் கட்டப்படும் அணைகளை தடுத்து போராட்டங்களை நடத்திய வகையில் உலகம் முழுக்க பிரபலமானார். நர்மதா பச்சா அந்தோலன் எனும் அமைப்பை கட்டமைத்து அணையால் ஏற்படும் பாதிப்பால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என போராட்டம் நடத்தினார்.  இயற்கைப் போராளி மேதா பட்கர் சர்தார் சரோவர் எனும் அணையைக் கட்டக்கூடாது என 22 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய உறுதியான மனம் கொண்டவர் மேதா பட்கர். இந்த போராட்டங்கள் கூட 32 ஆண்டுகள் கள ஆய்வுகள், விவாதங்களுக்கு பிறகே நடைபெற்ற ஒன்று. டாடாவின் சமூக அறிவியல் கழகத்தில் சமூகப் பணி படிப்பில் எம்.ஏ படித்தவர் மேதா. மும்பையில் வாழும் குடிசைவாசிகளுக்கான வீடு கோருதல், ஆந்திராவில் கோவ்வாடா அணு உலை திட்டத்திற்கு எதிர்ப்பு, ஆக்கிரப்பு வீடுகளுக்கு எதிர்ப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்கங்களில் அரசியல்வாதிகள் இருப்பதற்கு எதிர்ப்பு என மேதா பட்கர் ஏராளமான பிரச்னைகளுக்கு போராடியுள்ளார்.    சாதி, மதவாதம் மக்களுக்கு எதிரான புறக்கணிப்புகள

சமூகத்திலிருந்து ஒருவர் தனிமைப்படுவதற்கான காரணம்!

படம்
                  பல்வேறு விழாக்கள் , கலந்துரையாடல் , நிகழ்ச்சிகள் என்று செல்லும்போது வயிற்றுக்குள் வெடிகுண்டு வெடிக்கிறதா ? தலை கிறுகிறுவென வருகிறதா அத்தனைக்கும் அடிப்படைக் காரணம் சமூக பற்றிய பதற்றம்தான் . இது அனைவருக்கும் என்று கூற முடியாது . சிலருக்கு இதுபோல பதற்றம் இருக்கும் . மது அருந்துபவர்கள் , வேலையில் மன அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கு சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது கடினமாகவே இருக்கும் . இவர்கள் பெரும்பாலான கூட்ட நிகழ்வுகளை தவிர்த்து விடுவார்கள் . பொதுவாக வேட்டையாடி பிழைக்கும் காலத்தில் மனிதர்கள் ஒன்றாக குழுவாக வாழ்ந்தார்கள் . அவர்கள் யாருக்கு யார் என்பது சமூக அந்தஸ்து அடிப்படையில் தெளிவாக தெரியும் . ஆனால் இன்று குழப்பாக சூழல் நிலவுகிறது . மக்கள் தனியாக வசிக்கிறார்கள் . வாழ்கிறார்கள் . எனவே அவர்களை ஒன்றாக இணைக்கும்போது பிறரைப் பற்றிய பயம் ஏற்படுகிறது . பதற்றத்தைக் குறைக்க பெரிய விழாக்களில் பிறரை வரவேற்பது , நண்பர்களுடன் பேசுவது என நிதானமாக இருந்தாலே போதும் . அதில் அணியும் ஆடையைக் கூட ஒத்திகை பார்த்து கொள்ளலாம் . தன்னைப்பற்றிய கவனம் , பதற்றம் இல்லாமல் இருக்

வெளிநாட்டு பெண்களை இணைக்கும் கிளப்புகள்! - சமூக, கலாசார உறவுகளை பெண்கள் எப்படி பேணுகிறார்கள்?

படம்
              பெண்களை இணைக்கும் சமூக கிளப்புகள் டெல்லியில் வாழும் எழுத்தாளர்கள் நாவலில் பலரும் படித்திருக்கும் விஷயம்தான் . மேல்தட்டு வர்க்க குடும்ப பெண்கள் கிளப்புகளில் வந்து உட்கார்ந்துகொண்டு பல்வேறு பிரச்னைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் . இந்த கிளப்புகள் குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் பேசுதவதற்கென உருவாக்கப்படுகின்றன . இவற்றில் சேருவதற்கு 4,500 முதல் ரூ .25 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள் . இதன் பிரயோஜனம் என்னவென்று சிலர் யோசிக்கலாம் . கிராமங்களில் உள்ள கல்லுக்கட்டு , சாவடி எதற்கு கட்டி வைக்கிறார்கள் . நாயம் பேசுவதறகும் , ஓய்வு எடுப்பதற்கும் , மக்கள் ஒன்றாக கூடும் ஓர் இடமாக இருக்கும் . அதேதான் இங்கும் . அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு டெல்லி , மும்பை , சென்னை என திரும்பி வந்துவிட்ட பெண்களுக்கு இங்கு இந்தியர்கள் வாழும் வாழ்க்கை புரிபடாது . வெகு ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தவர்களுக்கு திடீரென வாழ்க்கையை வேரோடு பிடுங்கி கொண்டு வந்து வைத்தால் எப்படியிருக்கும் ? கடினமாக இருக்கும் . யாரோடும் நம்பி ஒரு வார்த்தை பேசிவிட முடியாது . வெளியில் செல்லவே தயக்க