மனநல குறைபாடுகளுக்கான பல்வேறு சிகிச்சை முறைகள்!
pixabay சைகோடைனமிக் தெரபி ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த உளவியல் மருத்துவரான சிக்மண்ட் ஃப்ராய்டின் விழிப்புற்ற மனம், விழிப்புணர்வற்ற மனம் எனும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது இந்த தெரபி. நோயாளியின் விழிப்புணர்வற்ற மனநிலையில் அவரின் குழந்தைப் பருவ, பள்ளிப்பருவ நினைவுகள் இருக்கும். ஆனால் இவற்றில் நடந்த ஏதாவது விஷயங்கள் தற்கால வாழ்க்கையை வாழவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும். அந்த சம்பவம் சார்ந்த கோபம், ஆற்றாமை, விரக்தி, துயரம், வலி, வேதனை மனதில் இருப்பது ஒருவரின் நிகழ்காலத்தை நாசமாக்கும் திறன் பெற்றது. எனவே உளவியல் வல்லுநர்கள் தெரபியில் நோயாளியை பேச வைத்து அவரின் மனதிலுள்ள வலியை துல்லியமாக தெரிந்துகொண்டு, அந்நினைவுகள் அவரின் வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதை பேசி புரிய வைக்கின்றனர். தெரபி வகுப்பை உளவியல் வல்லுநர் ஒருவர் நடத்துவர். ஒருவரை மட்டுமே அவர் சந்தித்து பேசுவார். அவருக்காக ஒதுக்கும் நேரம் ஒரு மணிநேரம். நோயாளி தனக்கு வரும் கனவுகளைப் பற்றி சொல்லவேண்டும். இதன் விளைவாக, அவர் மனதில் உள்ள எண்ணங்களை உளவியலாளர் குறிப்புகள் எடுத்துக்கொள்வார். கனவுகள் உணர்ச்சிகளின் குறியீடு என்பது ஃப