இடுகைகள்

தியோ ஏஞ்சலோ பவுலோஸின் சினிமா தத்துவம்

படம்
நீளமான காட்சி, தொடர்ச்சியான காட்சி, 360 கோணவாக்கிலான காட்சி என இந்த நிலைகள் அனைத்தும் பார்வையாளர்கள் அதனை குறிப்பிட்ட நேரத்திற்கு காண அனுமதிக்கிறது என்பது குறித்து இப்போது விவாதிப்போம். இந்தக்காட்சிகளில் நீங்கள் விரும்புவது இடைவெளி, காலம் குறித்தா அல்லது பார்வையாளரின் கவனம் குறித்து சிந்திப்பீர்களா? நாட்டின் கலாசார வரலாறு குறித்த மரபான கதாபாத்திரங்களை இதில் உருவாக்குவதோடு உண்மையான காரணம் என்றும் தொடர்புடையதுமாக உள்ளது என்று கூறலாமா?       பல ஆண்டுகள் சினிமா கண்டு வந்ததிலிலிருந்து கதாபாத்திரங்களின் தன்மைகளை நான் உருவாக்கிக் கொள்கிறேன். என்னை சுற்றி வெளிவரும் படங்களைப் பார்த்து அதிலுள்ள சுவாரசியமான அம்சங்களை குறித்து வைத்துக்கொள்வேன். பின்னர் நான் எழுதவும், படங்களை உருவாக்கத் தொடங்கியபிறகு, இவை அனைத்தையும் எனக்குள் கொண்டு வந்து எனது எழுத்தின் பாணியில் உருவாக்கத் தொடங்கினேன். நீளமான காட்சி தொடர்ச்சியான காட்சி என பொதுவாக இணை தொகுப்புக்கு உதவும் தன்மைகளை நான் ஏன் மறுத்தேன் என்பதற்கு அவை இழைபோல ஒன்றாகி உள்ளதை கூறவேண்டியுள்ளது. மான்டேஜ் காட்சிகளை வரலாற்றுக் காரணங்களு

தியோ ஏஞ்சலோ பவுலோஸின் சினிமா தத்துவம்

படம்
36 நாட்களில், பயணிக்கும் வீரர்கள், வேட்டைக்காரர்கள் மற்றும் மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் எனும் வரலாற்று பின்புலம் கொண்ட படங்களை இயக்கியுள்ளீர்கள். 1870 இல் மாரதோன் பகுதியில் கிரீக் பண்டிட்கள் ஆங்கில சுற்றுலாப் பயணிகளை கடத்தினர் என்பது போன்ற பாதியளவு உண்மைகளைத்தான் வரலாற்றில் இருந்து எடுத்து பயன்படுத்தியுள்ளீர்கள். 15 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த ஒருவரை விடுதலைப்போராளியை மெசியா என்று நாடே அவரை நினைக்க அவர் சிறிது காலத்திலேயே கடும் சர்வாதிகாரியாக மாறுகிறார் என்பது நிகழ்வாக இருக்கையில் படம் தன்னுள் இதுபோன்ற ஒன்றை புனைவாக தன்னுள் கொண்டிருக்கிறது. எதார்த்தம் மற்றும் கனவு எதார்த்தம் என இரண்டுக்கும் இடையில் உங்களுடைய படங்கள் எப்போது தோன்றத் தொடங்கின?   மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் தத்துவரீதியான – அரசியல் அதிகார பிரதிபலிப்பைக் கொண்ட அதிகாரத்தின் பிரச்சனைகளைப் பேசுகிற என்னுடைய மூன்று படங்களும் கசப்பான முடிவுகளைக் கொண்டுள்ள படமாகும். மனிதனுடைய நம்பிக்கை எப்படி குறிப்பிடப்பட்டாலும் என்னுடைய படத்தில் அவை தனக்குள்ளேயே சிறிதாகி மறைந்துபோகும் துன்பியல் தன்மையைக் கொண்டுள்ளது. மெக் அலெக்ஸாண்ட்ரோஸ் கிழக்

நூல்வெளி2: நம் காலத்து நாயகன்

படம்
நம் காலத்துக்கு நாயகன் மி.யூ. லேர்மன்தவ் தமிழில்: பூ.சோமசுந்தரம் சந்தியா பதிப்பகம் விலை: ரூ.80  போர்படையில் குறிப்பிட்ட பதவி வகிக்கும் ஒருவர் தன் பயண வழியில் படைப்பிரிவில் முக்கியமான பதவி வகிக்கும் மக்ஸீம் மக்ஸீமிச் என்பவரைச் சந்திக்கிறார். அவர் மெல்ல தன் வாழ்க்கையை போர்ப்படை வீரரிடம் கூறுகிறார். அப்போதுதான் பிச்சோரின் என்னும் மனிதரைப் பற்றி பகிர்ந்துகொள்கிறார். இந்நாவலின் நாயகனும் பிச்சோரின்தான். ஆனால் உண்மையில் இவனை நீங்கள் ஏற்றுக்கொள்வது என்பது மிக கடினமான ஒன்றே. ஆனால் நாயகர்கள் எல்லோரும் உண்மையில் அகம் புறம் இருபத்திநான்கு மணி நேரமும், ஏழு நாட்களும் எப்படி ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்களா என்ற சந்தேகமே வரும் பிச்சோரின் செய்வதையெல்லாம் பார்த்தால். கதையில் வரும் மக்ஸீம் பிச்சோரின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். ஆனால் பிச்சோரின் அவரைச் சந்தித்தாலும் முடிந்தவரை அவரைத் தவிர்த்து விட்டு கிளம்பவே விரும்புகிறான். அவன் எழுதிய குறிப்புகளை தன் வண்டிக்குள் வைத்திருக்கிற மக்ஸீம், அதை தனது பயண வழி நண்பரிடம் கொடுக்க மக்ஸீம் சொல்லி முடித்தவரையிலான கதை மெல்ல பிச்சோரின

நூல்வெளி2: ஐந்து சகோதரர்கள்

படம்
5 சீன சகோதரர்கள் சீன நாட்டுப்புறக் கதைகள் கூத்தலிங்கம் புக்ஸ் ஃபார் சில்ரன் விலை: ரூ. 10 இந்த நூலில் மொத்தம் நான்கு கதைகள் உள்ளன. அனைத்துமே எளிமையான தன்மை கொண்டதாக எதையும் பிரசாரம் செய்யும் தன்மையில் அமையாதவை என்பவை இதில் குறிப்பிடத்தக்கவை. ஏனெனில் இது ஒரட்டாங்கை குழுவினரது பதிப்பகம் சார்ந்த நூல் அல்லவா!     5 சகோதரர்கள் கதை ஒன்று போலவே இருக்கும் 5 சகோதரர்களின் இயல்பான சக்தி மூலம் அவர்கள் எப்படி ஒரு வழக்கிலிருந்து தப்பிக்கிறார்கள் என்று கூறும் கதை. இத்தொகுப்பில் மார்வெல் காமிக்ஸ் போல நம்மை வசீகரிக்கும் ஒரு கதை என்று கூறலாம்.      ஏழு வண்ண இளம்பெண்கள் கதை என்பது என்ன தலைப்பு கேட்டவுடன் தெரிந்துகொண்டிருப்பீர்கள். அதேதான். ஒற்றுமை என்பதை வெளிப்படுத்தும் கதை.       எதிரொலி கதை வனதேவதைக்கு நேர்ந்த சாபத்தின் வழி எப்படி காடு அல்லது மலை நமது குரலை ஒலிக்கிறது என்று தெரிந்துகொள்ளும் விதமாக உள்ளது.        பசுமை தேவதை கதையை நாம் தொடர்ந்து சிறு சிறு தொன்மைக் கதைகளை படமாக எடுத்து கல்லா கட்டும் டிஸ்னி வகையறா என்று கூறலாம். பல உணர்ச்சிகரமான காட்சிகள், மகிழ்ச்சி, நெஞ்சை பிழியும்

தியோ ஏஞ்சலோ பவுலோஸின் சினிமா தத்துவம்

படம்
நமது பார்வையாளர்கள் இங்க்மர் பெர்க்மனின் படங்களோடு பழகிப்போனவர்கள் அவர் உங்களைப் போலவே தானே கதையை எழுதி இயக்கியவராவார். அவரைப்போலவே நீங்களும் வழக்கமான ஒரே ஒளிப்பதிவாளரை (ஜியோர்கோஸ் அர்வானிட்டிஸ்) தொடர்ச்சியாக பயன்படுத்துவது என்பதிலிருந்து ஒரே நடிகர்களை நடிக்க வைப்பது என ஒற்றுமை உள்ளது என்றாலும், முக்கியமான வேறுபாடும் இருவருக்குமிடையே உள்ளது. பெர்க்மன் தன் கதையில் நடிப்பவர்களை மனதில் கொண்டு கதை எழுதுகிறார். ஆனால் நீங்கள் அப்படி செயல்படுவதில்லை. மேலும் அவரது கதைகளில் தனிப்பட்ட உளவியல் பிரச்சனைகள், நரம்பு தொடர்பானவை (இவற்றை வேறுவிதமாக குறிப்பிடவில்லை) இடம்பெறுகின்றன. உங்களது படத்தில் மரபான நாட்டின் வரலாற்றுடன் இணைந்த வாழ்க்கை ஹோமர், அச்சிலஸ், யுலிபிடெஸ், ஸோபோகில்ஸ், அலெக்ஸாண்டர் தி கிரேட் உள்ளிட்ட படங்களில் காட்டப்படுகிறது. இங்க்மர் பெர்க்மனோடு ஒப்புமைப்படுத்துவதன் மூலம் இருவரிடையே உள்ள விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது.       பெர்க்மனின் படங்களோடு என் படங்களுக்கு எந்த ஒற்றுமையும் இல்லை. என்னுடைய படம் உளவியல் சார்ந்தது அல்ல. ஏறத்தாழ காவியத்தன்மை சார்ந்தது. இது உளவியல் தன்மைக்கு

சமூகத்தின் முன் எழுப்பப்படும் கேள்விகள்தான் க்யூ: சஞ்சீவ் குப்தா

படம்
உத்திரப்பிரதேசம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த இயக்குநர் சஞ்சீப் குப்தா தனது க்யூ(q) படத்திற்கு 2015 ஆண்டிற்கான கொலுப்புடி ஸ்ரீனிவாஸ் விருது பெற்றிருக்கிறார். தங்களின் படமான க்யூ எதைப்பற்றியது?           8000 ரூபாய்க்கு விற்கப்படும் எட்டு வயதான சிறுமியின் பயணம் குறித்தது ஆகும். விலைக்கு விற்கப்பட்ட சிறுமி மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு  ஒரு குடும்பத்துடன் வாழ்கிறாள். அந்த குடும்பத்திற்கென ஒரு இலக்கு உள்ளது. ஆனால் சிறுமிக்கு வரும் காய்ச்சல் காரணமாக அந்த இலக்கு தவறுகிறது. அங்கு வாழும் ஒரு பெண்மணிக்கு அவளோடு எந்த உறவும் ஏற்படாமல் பிரிக்கப்பட்டு இருக்கிறாள். அவளின் குழந்தையோடு சிறுமிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அதன் பிறகு என்னவானது என்பதுதான் படம். க்யூ என்று உங்கள் படத்திற்கு பெயர் வைத்ததன் காரணம் என்ன? க்யூ எதைக் குறிக்கிறது?          இதில் பல கேள்விகள் சமூகத்திற்கு முன்பாக எழுப்பப்படுகிறது என்பதால் அதன் அடையாளமாய் படத்தின் தலைப்பு க்யூ என்பதாக உள்ளது. 1 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் இறுதி 20 நிமிடங்கள்தான் பார்வையாளர்களுக்கு முழுப்படத்தையும் புரிந்துகொள்ள உதவும

தியோ ஏஞ்சலோ பவுலோஸ் சினிமா தத்துவம்

படம்
10 ஏஞ்சலோ பவுலோஸின் திரைப்படத் தத்துவம் ஜெரால்ட் ஓ கிரேடி – 1990 ஆங்கில மூலம்: டான் பைனாரு தமிழில் - லாய்ட்டர் லூன்  செப். 2 ஞாயிறு தியோ ஏஞ்சலோ பவுலோஸின் ஏதேன்ஸ் அலுவலகத்திஃ அவரளித்த நேர்காணல் இது. கிரீக் திரைப்பட மையம் சார்ந்த ஜார்ஜ் காலோயேரோ பவுலோஸ் இருவருக்குமிடையே இடைமுகமாக செய்திகளை மொழிபெயர்த்தார்.  இப்பிரதியை மொழிபெயர்க்க உதவியவர்கள் ஸ்பீவ் தந்தோலாஸ் மற்றும் ஸ்பீஃபனோஸ் பாப்பஸாரியாஸ் ஆகியோராவர். 20 ஆண்டுகளில் நீங்கள் முழு நீளத்திரைப்படங்களாக எட்டு படங்களை உருவாக்கியுள்ளீர்கள். தங்களது படங்கள் ஐரோப்பா, ஜப்பான் உள்பட பல நாடுகளிலும் திரையிடப்பட்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது. ஆனால் இங்கே அமெரிக்காவிலோ உங்களது படங்கள் அரிதாகவே திரையிடப்படுகின்றன.  பிப்ரவரி மாதம் நவீன கலை அருங்காட்சியகம் தங்களைக் குறித்து அறிமுகம் இயக்குநர்களான அண்ட்டோனியோனி, மிஸோகுயூசி, தர்க்கோவ்ஸ்கி என மதிப்பிடப்படும் தங்களின் திரைப்படங்கள் குறித்து அமெரிக்க மக்களுக்கோ, திரைப்பட விமர்சகர்களுக்கோ கல்வி நிறுவனங்களுக்கோ கூட தெரியவில்லை. முதல் பணியாக தங்களது திரைப்

மூடுபனிநிலம் நிறைவுப்பகுதி: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
அந்தக்காட்சி குறிப்பிட்ட பொருளின் மீது பேராசை கொண்டு இருக்கும் தன்மையை (பெட்டிஷம்) வெளிப்படுத்துவதாகப்படுகிறது?       ஒரு மனிதனுக்கும் மோட்டார் சைக்கிளுக்குமான உணர்வெழுச்சியான உறவை ஈர்ப்பை நாம் அனைவரும் அறிவோம். நான் அந்த நடிகருக்கு படத்தில் நடித்ததற்காக சம்பளம் கொடுக்காமல், அதற்கு பதிலாக ஒரு மோட்டார்சைக்கிளை வாங்கித்தந்தேன். அவரது முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை நீங்கள் பார்க்கவேண்டுமே! அது முற்றிலும் கலவரமான நிலை என்று கூறலாம்.       உங்களது படங்களில் ஒவ்வொரு தனிக்காட்சிக்கும் கூட சீரான தொடர்ச்சியான இயக்கம் உள்ளது. அது இயல்பான ஆழமான தன்மையிலேயே அமைந்துவிடுகிறதா? நேரத்தின் பரிமாணங்களை விவரிக்கும் எனது தனிப்பட்ட திரைப்பட மொழியினால் அமைந்திருப்பது காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு காட்சியின் கருத்தில் நீங்கள் நுழையும் முன் நடிகர்களுக்கும் நிலப்பரப்பிற்குமான உறவு விளக்கப்படுவதற்கான நேரம் கொடுக்கப்படுகிறது. எனக்கு தார்க்கோவ்ஸ்கியின் ‘ஸ்டாக்கர் ’ படம் மிகவும் பிடித்திருந்தது. ‘நாஸ்டாலஜியா‘ எனக்கு சிறிதே பிடித்திருந்தது. சேக்ரிஃபைஸ் எனக்கு பிடிக்கவில்லை. இந்த மூ

மூடுபனிநிலம்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
இவற்றைப்படத்தில் கூறுவதோடு அல்லாமல் இயக்குநர் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோருக்கிடையேயான உறவுவின் வழி குறித்தும் கூறலாமல்லவா?       ஆம். அது சரியானதுதான். மாஸ்ட்ரோயன்னி, நடிகர் தாம் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை படத்தில் ஏற்று நடிக்கும் முன்னமே அந்த கதாபாத்திரத்திற்கான கருத்துகள், நியாயங்கள் குறித்து அவர்கள் முன்னமே பேசுவது என்பதை அவர் சரியானதாக எண்ணவில்லை. கதையினை மெல்ல தன் மனதில் நிறைத்து கதையோட்டத்தில் நகர்ந்து செல்லும் கதை மாந்தர்களையே அவர் விரும்புகிறார்.       படத்திற்கான எழுத்துப்பணி என்பது மிகவும் நீண்டதா? அது முழுமையடைவதற்கான காலம் எவ்வளவு? படப்பிடிப்பிற்கான திரைக்கதையை கையில் கொண்டிருக்கிறீர்களா?       இல்லை. எனது படத்திற்கான காட்சிகள் என்பவை உண்மையான திரைக்கதையைச் சார்ந்ததல்ல. ஒரு நாவல் போல தோற்றமளித்தாலும், பொதுவான இலக்கிய நாவல் போல அதன் கருவை ஒரே தன்மையில் புரிந்துகொள்ள முடியாது. உதாரணத்திற்கு, ஒரு கவர்ச்சியும் வசீகரமும் கொண்ட இளைஞன் ஒருவன் கதையில் வருகிறான் என்றால், நான் அந்த கதாபாத்திரம் பெற்றிருக்கும் வசீகரம் அல்லது  அழகு என்பதை அழித்து அக்