சித்திரவதைகளை படம்பிடித்தால் மகிழ்ச்சி!
புகைப்படம் எடுப்பது..... தேவையான நபர்களை பின்தொடர்ந்து கடத்தி கொல்வதில்தான் பெரும்பாலான சீரியல் கொலைகார ர்கள் ஈடுபடுவார்கள். அதனை ஆவணப்படுத்தி பிவிஆர் சினிமாஸில் பின்னாளில் திரையிடலாமே என யோசிக்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. பாலியல் ரீதியாக துன்புறுத்தி வல்லுறவு செய்யும் சைக்கோ கொலைகார ர்கள், தங்களது சித்திரவதைகளை ஆவணப்படுத்துவார்கள். புகைப்படம், வீடியோ, ஆடியோ என பலவாறாக பதிவு செய்து தங்களது செயல்களை தாங்களே பார்த்து சபாஷ்டா மாப்ளே என சொல்லிக்கொள்வார்கள். இதில் முக்கியமான பிரச்னை, இப்படி ஆவணப்படுத்தும் பழக்கம் ஆபாசப் படங்களை விரும்புபவர்கள்தான் செய்வார்கள். இவர்களின் பாலியல் வல்லுறவு வன்முறையின் உச்சகட்டமாக இருக்கும். இதனை மட்டும் காவல்துறையினர் கைப்பற்றி விட்டால் போதும். ஆயுள்தண்டனை அல்லது மரணதண்டனை என இரண்டே வாய்ப்புகள்தான் நீதிபதிக்கு இருக்கும். அவர் பெரும்பாலும் சாகும்வரை சிறை என்பதை தேர்ந்தெடுப்பார். இயான் பிராடி, மைரா என்ற இருவருக்கும் ஹிட்லரின் மெயின் கெம்ப் நூல் பிடிக்கும். அதில் வதை முகாம்கள் எழுதப்பட்ட பகுதிதான் அவர்களது விருப்பம். இதனால் ஊக்கம் பெற்றவர்கள்