இடுகைகள்

சித்திரவதைகளை படம்பிடித்தால் மகிழ்ச்சி!

படம்
  புகைப்படம் எடுப்பது..... தேவையான நபர்களை பின்தொடர்ந்து கடத்தி கொல்வதில்தான் பெரும்பாலான சீரியல் கொலைகார ர்கள் ஈடுபடுவார்கள். அதனை ஆவணப்படுத்தி பிவிஆர் சினிமாஸில் பின்னாளில் திரையிடலாமே என யோசிக்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. பாலியல் ரீதியாக துன்புறுத்தி வல்லுறவு செய்யும் சைக்கோ கொலைகார ர்கள், தங்களது சித்திரவதைகளை ஆவணப்படுத்துவார்கள். புகைப்படம், வீடியோ, ஆடியோ  என பலவாறாக பதிவு செய்து தங்களது செயல்களை தாங்களே பார்த்து சபாஷ்டா மாப்ளே என சொல்லிக்கொள்வார்கள்.  இதில் முக்கியமான பிரச்னை, இப்படி ஆவணப்படுத்தும் பழக்கம் ஆபாசப் படங்களை விரும்புபவர்கள்தான் செய்வார்கள். இவர்களின் பாலியல் வல்லுறவு வன்முறையின் உச்சகட்டமாக இருக்கும். இதனை மட்டும் காவல்துறையினர் கைப்பற்றி விட்டால் போதும். ஆயுள்தண்டனை அல்லது மரணதண்டனை என இரண்டே வாய்ப்புகள்தான்  நீதிபதிக்கு இருக்கும். அவர் பெரும்பாலும் சாகும்வரை சிறை என்பதை தேர்ந்தெடுப்பார்.  இயான் பிராடி, மைரா என்ற இருவருக்கும் ஹிட்லரின் மெயின் கெம்ப் நூல் பிடிக்கும். அதில் வதை முகாம்கள் எழுதப்பட்ட பகுதிதான் அவர்களது விருப்பம். இதனால் ஊக்கம் பெற்றவர்கள்

அமெரிக்க வர்த்தக மைய தாக்குதலின்போது பிரபலமாக இருந்த மனிதர்கள்!

படம்
  செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பங்கேற்று முக்கிய ஆளுமைகள் பற்றிய குறிப்பு இது.  மேற்படி அமெரிக்க தாக்குதல் நடந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. அதற்குப் பிறகு அமெரிக்க மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து தாக்கி ஜனநாயகத்தை மலர வைக்க முயன்றாக கூறியது. பெரும்பாலும் அனைத்து முயற்சிகளிலும் ஆயுதங்களை விற்பனை செய்தது தவிர வேறு எந்த நன்மைகளும் இடைக்கவில்லை.  ஜார் ஜ் டபிள்யூ புஷ் அமெரிக்காவில் வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடந்தபோது, இரண்டாம் வகுப்பு மாணவர்ளுக்கு ஆடுபற்றிய கதையை வாசித்துக்கொண்டிருந்தார். புளோரிடாவில் அவர் மாணவர்களுடன் இருந்தபோது தாக்குதல் செய்திகள் கூறப்பட்டன. அப்போது அவரின் முகம் வெளிறிப்போய் இருந்த புகைப்படம், இணையத்தில் வைரலானது. அப்போது தொடங்கிய முஸ்லீம்களை தீவிரவாதிகளாக பார்க்கும் பார்வை இன்றுவரை மாறவில்லை. ஆப்கானிஸ்தான் விவகாரத்தை இன்றுவரையும் பின்தொடர்வதாக கூறிவருகிறார்.  காண்டலிசா ரைஸ்  இப்போது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஹூவர் அமைப்பில் இயக்குநராக உள்ளார். புஷ் ஆட்சியில் இருந்தபோது என்எஸ்ஏ அமைப்பில் ரைஸ் வே

உடல் உறுப்புகளை சாப்பிடுபவர்களின் மனநிலை!

படம்
  உடல் உறுப்புகளை சாப்பிடலாமா? இரையாக பிடித்தாலுமே அவர்களை மேலும் துன்புறுத்தவேண்டும். கொன்றாலும் பிணத்துடன் உறவு கொண்டாலும் மன திருப்தி ஏற்படாதபோது என்ன செய்வது? இங்குதான் உடல் பாகங்களை வெட்டி சமைத்து சாப்பிடுவது வருகிறது. அப்படி சாப்பிடுவதன் மூலம் இறந்தவர்களோடு சீரியல் கொலைகாரர்கள் தங்களை இணைத்துக்கொள்வதாக காவல்துறை விசாரணையில் கூறியிருக்கிறார்கள். இது எந்தளவு சாத்தியம் என்பதை பற்றி அவர்கள் கவலையே படுவதில்லை. இதெல்லாம் நடப்பது அவர்களுடைய உலகில் என்பதால், பிறரைப் பற்றி மக்கள் கருத்து பற்றியெல்லாம் அணுவளவும் கவலைப்படுவதில்லை.  போஸ் கொடுப்பது முக்கியம்! கொன்றவர்களை குறிப்பிட்ட போஸில் வைத்துவிட்டு செல்வது சிலருடைய பழக்கம். எதற்கு என்று கேட்கிறீர்களா? எல்லாமே அதிகாரத்தை உணர்த்துவதற்காகத்தான். இந்தவகையில் அவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடிகிறதே? காவல்துறை புகைப்படக்கார ரோடு வந்து கொலை செய்யப்பட்டவர்களை புகைப்படம் எடுப்பார்கள். இதனால் இறந்தவர்களின் உடல் எப்படி கிடந்தது என்பது வரலாற்றில் பதிவாகிறதே? இந்த வாய்ப்பை யாராவது விட்டுக்கொடுப்பார்களா என்ன? பெரும்பாலான கொலைகார ர்களைப் பொறுத்தவரை ஒர

பிணத்துடன் உறவுகொள்வதும், உடலை துண்டாக வெட்டுவதும் எதற்காக?

படம்
பிணத்துடன் உடலுறவு நான் அவளது பிராவையும் பேண்டீசையும் அகற்றி அவளுடன் உறவுகொண்டேன். எனது வாழ்க்கையில் பிணத்துடன் உறவுகொண்ட இந்த நிகழ்ச்சி முக்கியமானது என்று சீரியல் கொலைகாரர் ஹென்றி லூகாஸ் கூறியிருக்கிறார்.  இது ஒருவகையில் உடலை அவமானப்படுத்துவது என தியரியாக சொல்லலாம். இறந்த உடலை உடனே புதைத்து அல்லது எரித்துவிடுவது என்பதே மரபு. அப்படியல்லாமல் அதனை தலையை வெட்டுவது, உடல் உறுப்புகளை வெட்டுவது, நிர்வாணப்படுத்தி கழுகுகளுக்கு இரையாக்குவது என்பது குரூரமான புத்திக்கு உதாரணமாக கூறலாம்.  சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை பிணங்களுடன் உறவு கொள்வது என்பது ஒருவகைப் பிரிவினர் மட்டுமே. இவர்கள் ஒருவரை சித்திரவதை செய்து கொல்வதை உடலுறவுக்கு முன்னர் ஆண், பெண் இருவரும் செய்யும் முன்விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றனர். மற்றொரு காரணம், இறந்தவர்கள் எதிர்ப்பு காட்ட மாட்டார்கள். எனவே, விரும்பியதை செய்யலாம். இதனால்தான் இறந்து உடல் நாறாதவர்களிடம் சீரியல் கொலைகார ர்கள் உடலுறவு கொள்கிறார்கள். சிலர் செத்து நாறிய உடலை எடுத்து பாதுகாத்து வேண்டியபோது உறவு கொள்வார்கள். எப்படி ப்ரோ சாத்தியம் என கேட்காதீர்கள். கனவை நினைவாக்க

அலர்ஜியை சோதிப்பதற்கான பல்வேறு சோதனைகளை அறிந்துகொள்வோம்!

படம்
          ஒவ்வாமையைப் பொறுத்தவரை இதனை சாதாரண நோய்களைப் போல மருத்துவச்சிகிச்சை அளிக்க முடியாது . இங்கு நாம் மோதப்போவது நமது உடலின் கவசகுண்டலமான நோய் எதிர்ப்பு சக்தியுடன் . இதனால் மருத்துவர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பார்கள் ஒவ்வாமை என்று வரும் நோயாளியிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்பார்கள் . அவர்கள் வாழும் இடம் , சாப்பிடும் உணவுகள் , டயட் கடைப்பிடிக்கிறார்களா , அவர்களது படுக்கை எப்படி இருக்கிறது , செல்லப்பிராணிகளை படுக்கையில் படுக்க வைத்து உறங்குகிறார்களா , வேறு நோய்க்கான மருந்தை சாப்பிடுகிறார்களா என பல்வேறு விஷயங்களை கேட்பார்கள் . இதில் கிடைக்கும் பதில்களை வைத்துதான் ஒருவருக்கு என்ன மாதிரியான ஒவ்வாமை சோதனை செய்யவேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் . ரத்த சோதனை , தோல் சோதனை என இருவகையில் ஒவ்வாமையைக் கண்டுபிடிக்க சோதனை செய்கிறார்கள் . இதன்மூலம் ஒருவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு பொருட்களையும் , ஒவ்வாமைக்கான பாதிப்பு காரணிகளையும் கண்டுபிடிக்கலாம் . மூன்று ரத்த பரிசோதனை முறைகளை செய்து பார்ப்பார்கள் . முதல் இரண்டும் உடலில் கிருமிகளை எதிர்த்து போராடும் ஆன்ட

அலர்ஜிக்கான அறிகுறிகள் எவை?

படம்
        போலியான அலர்ஜி என்பது உணவில் உள்ள கலப்படங்களால் அதிகம் நடைபெறுகிறது . உணவில் கலக்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் , ஊக்கமூட்டிகள் , உலர்ந்த திராட்சை , உருளைக்கிழங்கு பொருட்கள் , ஹஸ்டாமைனை ஊக்குவிக்கும் சீஸ் , ஒயின் ஆகிய பிற பொருட்களும் அலர்ஜிக்கு முக்கிய காரணமாக அமைகின்றன . எளிதாக அலர்ஜி பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்களை மேலே சொன்ன பொருட்கள் அதிகம் பாதிக்கும் . இவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை சாதாரண சோதனைகளில் கண்டுபிடிக்க முடியாது . ஆன்டிபாடியான ஐஜிஇயை இதில் இருக்கிறதா என்று சோதிப்பார்கள் . போலியான அலர்ஜி என்பது நோயாளிக்கு செரிமானக் கோளாறு உள்ளதா என்பதை சோதிக்க உதவுகிறது . குடல் பகுதியில் பால் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி , டைரமைன் , ஹிஸ்டாமைன் ஆகியவை கொண்ட உணவுகளால் ஏற்படும அலர்ஜி . சீஸ் , மது , துனா , சாஜேஜ் உணவுகள் இதற்கு காரணமாக அமைகின்றன . குளூட்டேன் , ஒயின்களில் உள்ள பொருட்கள் காரணமாக அலர்ஜி ஏற்படுகிறது . உரம் , உணவு நிறமிகள் , பதப்படுத்தும் பொருட்கள் , ஊக்கமூட்டிகள் காரணமாக ஏற்படும் பொதுவான அலர்ஜி . அறிகுறிகள் அலர்ஜி

கொலை செய்யும்போது தங்களின் அடையாளங்களை கொலைகாரர்கள் விட்டுசெல்வது உண்மையா?

படம்
        ஒரே மாதிரியான முறையில் கொலை சீரியல் கொலைகாரர்கள், ஒரே மாதிரியான முறையில் கொலைகளை செய்கிறார்கள் என திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் காட்டுவார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஒரே மாதிரியான வேலையை செய்துகொண்டிருந்தால் யாருக்குமே போரடிக்கும்தானே? அது சீரியல் கொலைகாரர்களுக்கும்  பொருந்தும். முதலில் செய்யும் கொலைகளை ஒரு மாதிரி செய்து முடிப்பார்கள். பிறகு, அதனை அடுத்தடுத்த தாக்குதல்களில் நிறைவு செய்வார்கள்.  கொலையை எப்படி எத்தனை ஆயுதங்களை வைத்து செய்வது, சித்திரவதையை எப்படி நீட்டிப்பது என யோசித்து அதனை கற்பனை உதவியுடன் பிரைம் ஃபோகஸ் சிஜி போல மேம்படுத்துவார்கள். பிறகுதான் கொலைக்கான திட்டமிடல் தயாராகும். இப்படி செய்யும்போதுதான் கொலையை அனுபவித்து செய்ய முடியும் என சீரியல் கொலைகாரர்கள் நம்புகிறார்கள்.  இதற்கு உதாரணமாக சீரியல் கொலைகார ர் ஒருவரைப் பார்ப்போம்.  கேரி டெய்லர் என்ற சீரியல் கொலைகாரர், பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்களை மண்டையில் அடித்து மயங்க வைத்து தூக்கிச் சென்று கொல்பவர். இந்த முறை சலித்துப் போக அடுத்து துப்பாக்கியை கையில் எடுத்தார். பெண்களின் அறைப்பக்கம் சென்று படுக்கை அறையை குறிபார்த