இடுகைகள்

வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாசனைப் பொருட்களின் வரலாறும் பயன்பாடும் - மஞ்சள், லவங்கப்பட்டை

படம்
  மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு வந்ததே இங்குள்ள பல்வேறு இயற்கை வளங்களை கொள்ளையடித்து விற்கத்தான். அன்று ஆங்கிலேயர்கள் செய்தனர். இன்று இந்திய தரகர்கள், தொழிலதிபர்கள் வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் கைக்கூலியாக அதே வேலையை இடைவேளை கூட விடாமல் செய்து வருகின்றனர். அதை விடுங்கள். நாம் இங்கு பேச வந்தது. தெற்காசியாவில் உள்ள வாசனைப் பொருட்கள் பற்றித்தான். கொச்சியை வாசனைப் பொருட்களின் தலைமையகம் என்று கூறுகிறார்கள். அந்தளவு இப்பகுதியில் டச்சுகாரர்கள் ஆட்சி செய்தபோது வாசனைப் பொருட்களின் விற்பனை நடைபெற்றிருக்கிறது. முக்கிய வாசனைப் பொருட்கள் என்னென்ன? இன்றும் செட்டிநாடு ஓட்டல்களில் பயன்படுத்தும் பொருட்கள்தான். நம் குடலில் அழற்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டவைதான். அவை குறிப்பிட்ட அளவைக் கொண்டவை அல்ல. மற்றபடி மருந்தாக பயன்படுத்தினால் மகத்துவம் கொண்டவைதான்.  மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் இவைதான்.  தெற்காசிய வாசனைப் பொருட்கள் ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் ஆகியவற்றுக்கு இந்தோனேஷிய மாலுமிகளால் கொண்டு செல்லப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில்தான் வாஸ்கோட காமா ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வணிக வாசலைத் திறந்

சீனாவுக்கு கொடுக்கப்பட்ட ஹாங்காங்!

படம்
  இங்கிலாந்து மிகவும் தந்திரமான காரிய க்கார நாடு. தனது நலனுக்காக பிற நாடுகளை அழித்து மக்களைக் கொல்லவும் அது தயங்கியதில்லை. இந்தியாவை காலனி நாடாக்கிய தன்மையில் இதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை இந்த வகையில் சேர்க்கலாம்.  இங்கிலாந்து சீனாவில் இருந்து பீங்கான், தேயிலை, பட்டு ஆகியவற்றை இறக்குமதி செய்து வந்தது. இதற்கு தொகையாக வெள்ளியை வழங்கிவந்தது. ஒரு கட்டத்தில் சீனர்களின் பொருட்கள் தேவை, ஆனால் அவர்களுக்கு கொடுக்க வெள்ளி இல்லை. என்ன செய்வது? எனவே தந்திரமாக யோசித்த இங்கிலாந்து அரசியல்வாதிகள், வணிகர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அதுதான், போதைப்பொருட்களை சீனாவில் கள்ளத்தனமாக விற்பது. அதில் கிடைக்கும் தொகையை வைத்து வெள்ளி வாங்கி அதனை இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக கொடுத்துவிடுவது....  இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை சீன பேரரசர் அறிந்து தடுத்தார். இதனால் ஓபியம் தொடர்பான போரை சீனாவும் இங்கிலாந்தும் நடத்தின. இந்த வகையில், 1839, 1856 ஆகிய ஆண்டுகளில் போர்கள் நடைபெற்றன. சீனா படைக்கு அப்போது பெரிய படைகளும் கடற்படைகளும் இல்லை.எனவே இரும

அமெரிக்க, ஐரிஷ் மக்களுக்கு இடையிலான அதிகாரப்போர்! - கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க் - மார்ட்டின் ஸ்கார்சி

படம்
  கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க் மார்ட்டின் ஸ்கார்ஸி 2002 அமெரிக்கத் திரைப்படம். கருப்பினத்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் நடைபெறுகிறது. அங்கு, வாழும் அமெரிக்கர்களுக்கும் புதிதாக குடியேறும் ஐரிஷ் மக்களுக்குமான யார் நிலம் இது என்ற சண்டைதான் படம்.  நியூயார்க் நகரில் ஃபைவ் பாய்ண்ட்ஸ் குடிசைப்பகுதியில் வாழும் பில் என்பவர்தான் ஐரிஷ் மக்களை எதிர்க்கும் குழுவுக்கான தலைவர். இவருக்கு தொழிலே பன்றிக்கறி வெட்டுவதுதான். அப்படியே பன்றியை குத்தி இறுதியில் மனிதர்களை குத்திப்போடும் ரவுடி ஆகிறார். இவருக்கென தனி குழுவே உருவாகிறது.  நகரில் நடக்கும் அனைத்து தண்டால், வழிப்பறி, கொள்ளை என அனைத்துக்குமே கமிஷன், பர்சென்டேஜ் வந்தே ஆகவேண்டும். அப்படி வராதபோது கோடாரி சம்பந்தப்பட்ட ஆளின் முதுகில் பதிந்திருக்கும் அல்லது குறுவாள் வயிற்றில் குத்தியிருக்கும். இந்த நிலையில் சில பல ஆண்டுகளுக்கு முன்னர், ஐரிஷ் மக்களுக்காக ஒரு தலைவர் - பிரிஸ்ட் வாலன் போராடி சாகிறார். அவரை பில் தான் கொல்கிறான். அதற்குப் பிறகே அந்த பகுதியில் முழுக்க பில்லுக்கு அடிபணிகிறார்கள். ஐரிஷ் ஆட்கள் வேறுவழியின்றி பில்லை ஏற்க

இந்திய வரலாறு குறிப்பிட்ட நெறிமுறைப்படி எழுதப்பட்டது! - மிருதுளா முகர்ஜி, வரலாற்று ஆய்வாளர்

படம்
  மிருதுளா முகர்ஜி, வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் மிருதுளா முகர்ஜி வரலாற்று ஆய்வாளர்  மிருதுளா 2012-2014 காலகட்டத்தில் ஜேஎன்யூ சமூக அறிவியல் துறையின் தலைவராக செயல்பட்டார்.  2006 -2011 காலகட்டத்தில் நேரு நினைவு அருங்காட்சியகத்தில் தலைவராக செயல்பட்டார்.  குறிப்பிட்ட முறையில் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அப்படியென்றால் இங்கு, தகவல்களை மறைக்கிறார்களா? வரலாற்றை நேரடியாக எழுதுவது என்ற அதிகாரப்பூர்வ செயல்பாடு எங்குமே நடைபெற்றது இல்லை.வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அவர்களாகவே சுயமாக ஆய்வு செய்து எழுதுகிறார்கள். இந்த வகையில் முதல்தரமான ஆய்வாளர்கள் பாடநூல்களை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். காலனி கால ஆட்சியின் சுவடுகளை தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுதுவது முக்கியம்.  பிரிவினையை ஏற்படுத்தாத உண்மையான கருத்துகள் என்றால் அவை ஏன் வன்முறையை ஏற்படுத்தும் இயல்பில் உள்ளன? நீங்கள் கூறும் விதமாக எழுதப்படும் வரலாறு அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றப்படுவதுதான். இவை இயல்பான தேடுதலால் எழுதப்படுவதில்லை.  வலது சாரி வரலாற்று ஆய்வாளர்களை வரலாறு ஆய்வுகளை செய்ய அனுமதிப்பது, நூல்களை அங்கீகரிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழ

இந்தியா ஒளரங்கசீப் அழித்த கோவில்களைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்! - பேராசிரியர் மக்கன்லால்

படம்
பேராசிரியர் மக்கன் லால், டெல்லி இன்ஸ்டிடியூட் ஆப் ஹெரிடேஸ் ரிசர்ச் அண்ட் மேனேஜ்மென்ட்.    நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதுவதில் ஏன் பிரச்னை எழுகிறது? வரலாறு எப்போதும் எழுதப்பட்டு பிறகு மாற்றி எழுதப்பட்டுத்தான் வந்திருக்கிறது. வரலாற்றை மூன்று விதமான ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள் . ஒன்று, பிரிட்டிஷ் ஆய்வாளர்கள், மார்க்சிய ஆய்வாளர்கள், மூன்று தேசியவாத ஆய்வாளர்கள். நேரு, இந்திராகாந்தி காலத்தில் இடதுசாரி ஆய்வாளர்கள் வரலாற்றை மாற்றி எழுதினர். அந்தகாலத்தில் அவர்களுக்கு வரலாற்று அமைப்பில் முக்கியமான பதவி இடங்கள் கிடைத்தன. நிதியுதவியும் செய்தனர். இப்போது நிலை மாறிவிட்டது. இடதுசாரி ஆய்வாளர்கள் இப்போது இல்லை. அவர்களின் ஆதரவாளர்களுக்கு இது கஷ்டமாக இருக்கிறது. எனவே வரலாற்றை மாற்றி எழுதக்கூடாது என கூறி வருகிறார்கள்.  வரலாற்றில் ஒளரங்கசீப்  ஒருவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி கோவில்களை அழித்தார் என்று கூறப்படுவது ஏன்? ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் ஆகியோர் வரலாற்றில் மதிக்கப்படும் இடத்தைப் பெறவில்லை. ஆனால் அவர்களைப் பறிற நாம் இன்றும் விவாதம் செய்துகொண்டுதானே இருக்கிறோம். அப்படித்தான் ஒளரங்கசீப்பையும் நாம் விவாத

உலக நாடுகளை அச்சுறுத்திய காசநோய் வரலாறு!

படம்
  பான்டம் பிளேக் வித்யா கிருஷ்ணன் பெங்குவின் ஹவுஸ்  பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக நாடுகளை அச்சுறுத்திய காசநோய் எப்படி பரவியது, லட்சக்கணக்கான மக்களைக் கொன்றது என்பதைப் பற்றி எழுதியுள்ளார் வித்யா. நியூயார்க்கின் குடிசைகள் தொடங்கி நியூயார்க் வரை காசநோய் பாதிப்பு இருந்தது. கைவைத்திய மருந்துகள் முதல் ஆங்கிலமருத்துவ ஆராய்ச்சிகள் வரை காசநோயை அழிக்கும் பல்வேறு முயற்சிகளை நூல் ஆசிரியர் கூறுகிறார்.  வயலெட்ஸ் கியூங் சூக் சின் ஹாசெட் 699 1970ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெறும் கதை. சான், தனியாக வாழ்ந்து வரும் நபர். அவருக்கு நாமே என்ற என்ற பெண் ஸ்னேகிதி கிடைக்கிறார். சானுக்கு அவளை மிகவும் பிடித்துப்போகிறது. ஆனால் திடீரென ஒருநாள் மாலை அவளை நாமே நிராகரிக்கிறாள். பெண்ணின் மனம், ஆசை, சமூகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள் என நிறைய விஷயங்களை நூலில் கியூங் பேசுகிறார்.  மேட் இன் ஃப்யூச்சர் பிரசாந்த் குமார் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  ரூ.499 மார்க்கெட்டிங் தொடர்பான நூல் இது. இதில் எதிர்காலத்தில் மார்க்கெட்டிங்கை எப்படி செய்வது என பல்வேறு ஆலோசனைகளை சொல்லுகிறார் பிரசாந்த் குமார். ஊடகம், எழுத்து, பல்வேறு செல்வாக்கு ச

வரலாற்றை மாற்றும் ஆட்சியதிகாரம்!

படம்
  அதிகாரம் எந்த இடத்தில் பொய் சொல்லும்?  செல்வம், அரசியல்கட்சி அலுவலகம், காவல்துறை, ராணுவம்? இதில் எந்த பதிலைத் தேர்ந்தெடுத்தாலும் தவறுதான். ஏனெனில் அதிகாரம் என்பது அறிவை உருவாக்கும் இடத்தில் தான் பொய்களை ஏராளமாக கூறும். ஏன், அறிவை அதிகாரம் தேர்ந்தெடுக்கிறது? அதுதான் மக்களை உஷார் படுத்துகிறது. அவர்களை உயர்ந்தவர்களாக்குகிறது. எச்சரிக்கை செய்கிறது.  இங்கு அறிவு என்பது கருவிதான். அதை யார், எப்படி, என்ன பயன்பாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். ரஷ்யா, தனது பள்ளி பாடப்புத்தகங்களில் உக்ரைன் மீது எதற்கு போர் தொடுக்கிறோம் என்பதற்கான காரணங்களை கூறியிருக்கிறது என கார்டியன் பத்திரிகை கூறியிருக்கிறது. பிரிட்டிஷார் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, அவர்களின் தேவைக்கேற்ப பாடங்களை மாற்றியமைத்தனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு, சர்வே அறிக்கைகள், என நிறைய விஷயங்களை மாற்றியமைத்தனர். இப்படித்தான் இந்தியர்களின் மூளையை மாற்றியமைத்து தங்களுக்கு ஆட்சிக்கு சாதகமாக மாற்றினர். நாம் இன்றுவரையில் கூட அவர்கள் உருவாக்கிய பல்வேறு விஷயங்களிலிருந்து முழுமையாக மாறவில்லை.  சுதந்திரம் பெற்றபிறகு, காங்கிரஸ் கட்சி நீண்ட

பெருந்தொற்று கால வேதனைகளை மறக்கவேண்டும். பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும்! - ஆஞ்சல் மல்ஹோத்ரா

படம்
  ஆஞ்சல் மல்ஹோத்ரா ஆஞ்சல் மல்ஹோத்ரா எழுத்தாளர் இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும் பிரிவினை கலவரங்கள் நடைபெற்றும் 75 ஆண்டுகள் ஆகின்றன. இன்று பிரிவினையால் பாதிக்கப்பட்ட குடும்ப வாரிசுகள் பலரும் வெளிநாடுகளில் பரவி வாழ்கின்றன. எழுத்தாளர் ஆஞ்சல் மல்ஹோத்ரா, தி லாங்குவேஜ் ஆஃப் ரிமெம்பரிங் என்ற நூலை எழுதியுள்ளார். இதில் பிரிவினை பற்றிய பல்வேறு நினைவுகளை பதிவு செய்துள்ளார். அவரிடம் இதுபற்றி பேசினோம்.  நூலில் நீங்கள் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் பேரன்கள் ஆகியோருடன் பேசியுள்ளீர்கள். இந்த சூழல் எப்படியிருந்தது? பிரிவினையால் பாதிக்கப்பட்ட தாத்தா, பாட்டிகள், அவர்களின் வாரிசுகள், பேரன்கள் ஆகியோருடன் நிறைய நேரம் செலவிட்டுத்தான் நூலுக்கான தகவல்களைத் திரட்டினேன். பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் வெளிநாடுகளில் வாழ்கின்றனர் என்றாலும் அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை எளிதாக மறக்கமுடியாது. அதனை எளிதில் அகற்றிவிடவும் முடியாது.  பெரும்பாலான பேட்டிகளை நான் பாதிக்கப்பட்டவர்களின் பேரன்கள், வாரிசுகளிடம்தான் எடுத்தேன்.

ஜவகர்லால் நேருவுக்கு வரலாற்று ரீதியான மரியாதையை நாங்கள் வழங்கியுள்ளோம்! - நிரிபேந்திர மிஸ்ரா

படம்
  நிரிபேந்திர மிஸ்ரா நிரிபேந்திர மிஸ்ரா தலைவர், நேரு நினைவு அருங்காட்சியகம் புதிய அருங்காட்சியகம்  நாட்டின் முதல் பிரதமரான நேருவிற்கு நியாயம் செய்துள்ளதா? நாங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பிரதமர்களைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை சரியாக  சேகரிக்க முயன்றிருக்கிறோம். சீனாவுடன் நடந்த 1962 போர் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும். இந்த போரின்போது இந்தியா சரியான முறையில் தயார்படுத்தப்படவில்லை. நான் கூறும் கூற்றை உறுதிப்படுத்தும் கடிதங்கள் கிடைத்துள்ளன. 1975ஆம் ஆண்டு காலத்தில் இந்தியா ஓரளவுக்கு போருக்கு தயாராக இருந்தது. ஆனால் இதை விமர்சிக்க ஒன்றுமில்லை. ஏனெனில் நாம் நாடு இந்த முறையில் தான் பரிணாம வளர்ச்சி பெற்றது.  ஜவகர்லால் நேருவின் இடம் பற்றி கவனம் எங்களுக்கு எப்போதுமே உண்டு. அவர் பல்வேறு அடிப்படையான நிறுவனங்களை உருவாக்கினார். ஜனநாயக முறையை அவரே உருவாக்க உழைத்தார். பிரதான் மந்திரி சங்கராலாயாவில் முதல் பிரதமர் நேரு திட்டக்குழுவை உருவாக்கியது, நாடாளுமன்றத்தை கட்டியது என பல்வேறு விஷயங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு துணை கண்காட்சி மையங்கள் உள்ளன. இவற்றைப் பார்க்கும

புராணம் உண்மையல்ல என்று கூறுவது சிறுமைத்தனமானது! - எழுத்தாளர் அமிஷ் திரிபாதி

படம்
  எழுத்தாளர் அமிஷ் திரிபாதி அமிஷ் திரிபாதி எழுத்தாளர்  லெஜண்ட்ஸ் ஆப் ராமாயணா - அமிஷ் திரிபாதி அமிஷ் தற்போது டிஸ்கவரி பிளஸ்சில் தி லெஜண்ட்ஸ் ஆப் ராமாயணா என்ற டாக் - சீரீஸை தொகுத்து வழங்கி வருகிறார்.  வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் மூடப்படப்போகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது. அவர்கள்தான் உங்களது நூல்களை பதிப்பித்தவர்கள் அல்லவா? எனது மனம் உடைந்து போய்விட்டது. வெஸ்ட்லேண்ட் நிறுவனம் மட்டுமே பிறர் பிரசுரிக்க மறுத்த எனது நாவல்களை பிரசுரித்த நிறுவனம். இம்மார்டல் என்ற வரிசை நூல்களை அவர்கள் தான் பிரசுரத்திற்கு ஏற்றனர். வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தின் இயக்குநர் கௌதம் பத்மநாபன் சிறந்த நபர் என இதற்கு எழுதிய எழுத்தாளர்கள் அனைவருமே கூறுவார்கள். அவரது அப்பாதான் இந்த தொழிலை உருவாகி நடத்தினார். அவரது மகனான கௌதம் மனம் எப்படிப்பட்ட வலியை அனுபவித்திருக்கும் என நினைத்துப் பாருங்கள்.  டாக் சீரிசில் ராமனுக்கு சகோதரி ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது.. ஆனால் இதுபற்றி மக்கள் பலருக்கும் தெரியாதே? ராமாயணம் என்ற புராணத்திற்கு பல வெர்ஷன்கள் உண்டு. இந்த சீரிசின் நோக்கம் நகரத்திலுள்ள இந்தியர்களுக்கு

வரலாற்றை மாற்றும் அதிகாரம்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  pinterest முருகானந்தம் அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? நேற்று காலை மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் நல்ல கனமழை. நான் மழைக்கு முன்னமே ஆபீஸ் போய்விட்டேன். பட்டம் பதிப்பக பணிகள் இருந்தன. கூட்டுறவு வங்கிகளின் வீழ்ச்சி, உரிமம் ரத்து ஆகிய செய்திகளை படிக்க வேண்டியதுள்ளது. இவற்றையும் நூலில் இணைத்துவிடுவேன். நூலை எழுத தமிழ் இணையப் பல்கலைக்கழக வலைத்தளம் உதவியது. இதில் ஏராளமான நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்தகவல் முன்னமே தெரிந்திருந்தால் தொடராக எழுதும்போதே சிறப்பாக எழுதியிருக்கலாம். பரவாயில்லை. நூலாக எழுதி தொகுக்கும்போது, வலைத்தளம் உதவியது என வைத்துக்கொள்ளலாம்.  நகுலன் கதைகள் கொண்ட நூல் தொகுப்பை முத்து மாரியம்மன் பழைய பேப்பர் கடையில் நாற்பது ரூபாய்க்கு வாங்கினேன். ஒரு கதை மட்டுமே படித்தேன். இனிமேல்தான் நூலை முழுமையாக படிக்க வேண்டும்.  இந்தியாவைப் பற்றிய ஆய்வுச்செய்திகளை தேசிய ஆங்கிலமொழி இதழ்கள் சிறப்பாக உழைத்து எழுதுகிறார்கள். கட்டுரைகளை படிக்கும்போதே அதை அறிய முடிகிறது. உங்கள் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள்.  அன்பரசு 22.8.2021 -

நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள்! - மனுபிள்ளை, கனிஸ்க் தரூர், சம்ஹிதா அர்னி

படம்
  (இடது)எழுத்தாளர் சம்ஹிதா அர்னி சம்ஹிதா அர்னி எழுத்தாளர், பெங்களூரு சம்ஹிதாவுக்கு அப்போது நான்கு வயது. அவரது அப்பாவுக்கு வெளியுறவுத்துறையில் வேலை. அவரை கராச்சியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பணிமாற்றம் செய்தனர். அங்கு சென்றபோது, சம்ஹிதாவுக்கு நூலகத்தில் நூல்களை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.  அங்குதான் பல்வேறு புனைவு வடிவங்களில் மகாபாரத புராணக்கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நூல்களை பலவிதமாக படித்தார். பிறகுதான், அதனை படமாக வரைய முடிவெடுத்தார். இதன் அடிப்படையில் வியாசரின் மகாபாரத த்தை எழுதினார். அதாவது வரைந்தார். இப்படி தனது பனிரெண்டு வயதில் நூலை வரைந்து உருவாக்கினார். தி மகாபாரதா  எ சைல்ட்ஸ் வியூ என்ற நூலை  வெளியிட்டுவிட்டார். அந்த நூல் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் தனது ஆர்வத்தை அவர் விடவில்லை. இதனால்தான் 2012இல் சீதாவின் ராமாயணத்தை அவரால் நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் ஏற்ற முடிந்தது.   இந்த நூலுக்கான படங்களை மொய்னா சித்ரகார் என்பவர் செய்தார்.  இதைத்தொடர்ந்து   தி மிஸ்ஸிங் குயின் நூலை 2013இலும், தி பிரின்ஸ் என்ற பீரியட் நாவலை 2019இலும் எழுதினார்.  கனிஸ்க் தரூர் கனிஸ்க் தரூர் எ

நூல்களை தடை செய்வது என்றால் நாம் நாஜி ஜெர்மனி திசையில் நகர்கிறோம் என்று அர்த்தம்! - வினய் லால், பேராசிரியர்

படம்
  பேராசிரியர் வினய் லால் வினய்லால்  பேராசிரியர், வரலாற்றுத்துறை கலிபோர்னியா பல்கலைக்கழகம் சங் பரிவார் அமைப்புகள் வரலாற்றைத் திருத்தி எழுதுகின்றனர் என்ற பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். என்சிஇஆர்டி யில் கூட பாடத்திட்டங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஏன் இதனை யாருமே பெரியளவு எதிர்க்கவில்லை? இதை கொஞ்சம் விரிவான பார்வையில் பார்க்க வேண்டும். வரலாற்றை திருத்தி மாற்றி எழுவது புதிதான விஷயமல்ல. அதிகாரத்தில் உள்ளவர்கள் காலம்தோறும் செய்து வரும் விஷயம்தான் இது. உலகம் முழுக்க நடைபெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் நடந்துள்ளது என நினைத்து அதிர்ச்சியாகவேண்டாம். நான் இதைப்பற்றி பல்லாண்டுகளுக்கு முன்னரே கேள்விகளை எழுப்பியுள்ளேன்.  2003இல் எழுதிய தி ஹிஸ்டரி ஆப் ஹிஸ்டரி பாலிடிக்ஸ் அண்ட் ஸ்காலர்ஷிப் இன் மாடர்ன் இந்தியா வரலாற்றை எழுதுவதில் உள்ள அரசியலைப் பற்றியது இந்த நூல்.  உலக நாடுகளில் உள்ள வரலாற்றுப் பாடல் என்பது எப்போது விவாத த்திற்குரியதாகவே இருந்து வருகிறது. இது நாம் சிந்திக்கும் முறையில் உள்ள பிரச்னை. இந்திய பத்திரிகையாளர்கள், உலகின் பிற பகுதிகளில் உள்ள வ

வரலாற்றை திருத்தி எழுதி அதனை அரசியலுக்க சில கட்சிகள் பயன்படுத்துகின்றன! - பேராசிரியர் உபீந்தர் சிங், வரலாறு, அசோகா பல்கலைக்கழகம்

படம்
  உபீந்தர் சிங் உபீந்தர் சிங் பேராசிரியர் வரலாற்றுத்துறை அசோகா பல்கலைக்கழகம் நீங்கள் எழுதியுள்ள நூலில் தொன்மை இந்தியா பற்றி பேசியுள்ளீர்கள். அதில் மதங்களுக்கு இடையில் பன்மைத்தன்மை இருப்பதோடு மதரீதியான வன்முறைகளும் இருப்பதைக் கூறியுள்ளீர்கள்.  தொன்மைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அதற்காக நிறைய நேரத்தையும் ஆற்றலையும் செலவழித்துதான் ஆக வேண்டும். அகிம்சை, வன்முறை, கடவுள் நம்பிக்கை, நாத்திகம், சமூக பாகுபாடு பற்றி நான் நூலில் எழுதியுள்ளேன். இன்று மத வேறுபாடுகள் உருவாக்கப்படுவதைப் போலவே அன்றும் மத சம்பந்தமாக பிரச்னைகள் இருந்தன. அசோகர் பௌத்தத்தைப் பின்பற்றினார். மதம் தொடர்பான பன்மைத்துவத்தை கோட்பாடு அளவில் உருவாக்கினார். ஆனால் பிற அரசர்கள் இந்த அளவு யோசிக்கவில்லை. அவர்கள் இருக்கும் மத அமைப்புகளை அப்படியே பராமரித்தனர். மதங்களை பின்பற்றுவதில் பன்மைத்தன்மை நிலவியது.  அதேசமயம் மதரீதியான வன்முறைகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பௌத்த நூலான சூலவம்சத்தில் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. பல்லவர்களின் ராணுவம் இலங்கையில் உள்ள அனுராதபுரத்தின் புத்த சிலைகளை கொள்ளையடித்தது பற்ற

கல்வி என்பது மாணவர்களை சுதந்திரமாக்கவேண்டும்! - கல்வியில் வேண்டும் புரட்சி - வினோபா பாவே

படம்
  வினோபா பாவே கல்வியில் வேண்டும் புரட்சி! வினோபா தன்னறம் திருவண்ணாமலை பொதுவாக கல்வி என்பது எப்படி இருக்கவேண்டும்? அது ஒருவர் வாழும் நாடு சார்ந்தா, அவரின் தாய்மொழி சார்ந்தா, அவருக்கு கற்பிக்கப்படும் பிற நாட்டு வரலாறு சார்ந்தா என ஏராளமான கேள்விகளுக்கு வினோபா தன்னுடைய அனுபவம் சார்ந்து காந்திய வழியில் பதில் கூறுகிறார்.  குழந்தைகளாக இருந்தாலும் கூட அவர்களுக்கான கல்வியை அவர்களே சுதந்திரமாக தேர்ந்தெடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார். அனைத்து விஷயங்களையும் மேற்கு நாடுகள் பகுத்து பார்க்கின்றன. அந்தவகையில் சில அம்சங்களை நாம் கற்றாலும் சிறந்த நூல்களை இந்திய இலக்கியங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.  காந்திய முறை என்பதால் நூல்களை வாசிப்பது என்பது ஒரு பகுதிதான். அதைத்தாண்டி, உடல் உழைப்பு சார்ந்தும் ஒருவர் வாழக் கற்பது அவசியம் என்கிறார். நூலை படிப்பதை விட உடல் உழைப்பு சார்ந்தும் ஒருவர் பல்வேறு திறன்களை கற்பது வாழ்க்கைக்கு உதவும் என ஒரு இளைஞனின் கதை மூலம் விளக்குகிறார்.  அதாவது கல்வி என்பது கற்பனையில் ஒருவன் திளைப்பதற்கானது அல்லது அதிக சம்பளத்திற்கு வேலை

சீக்கிய மதத்தைப் பாதுகாக்கும் ராணுவப்படை நிகாங்குகள்!

படம்
  கடந்த வெள்ளிக்கிழமை அன்று, விவசாயிகள் போராட்டத்தில் 35 வயதான தலித் ஒருவரை நிகாங்க்  ஆட்கள் கோரமாக வெட்டிக்கொன்றனர். எதற்கு இந்தக்கொலை என்றபோது, சீக்கியர்களின் நூல்களை மதிக்கவில்லை என்று காரணம் சொன்னார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு நிகாங்குகள் உதவி சப் இன்ஸ்பெக்டரின் கையை சீவி எறிந்தனர். பொதுமுடக்க காலத்தில் விதிகளை பின்பற்ற முடியாது என நிகாங்குகள் கூறியதன் காரணமாக நடந்த தாக்குதல் இது.  நீலநிற உடை, அலங்கார தலைப்பாகை, வாள், இன்னும் பிற ஆயுதங்களைக் கொண்ட படையை நிகாங் என்கிறார்கள். 1699ஆம்ஆண்டு குரு கோவிந்த் சிங்கால் உருவாக்கப்பட்டது நிகாங் படை. இவர்களின் பெயருக்கு சமஸ்கிருதத்தில், பயமில்லாத உலகத்தில் லாப நஷ்டம் பற்றி கவலைப்படாதவர்கள் என்று அர்த்தம்.  பாபா புத்தா தல், தமா தல், தர்னா தல் என மூன்று பிரிவாக நிகாங்குகள் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றனர். பஞ்சாப்பில் நிகாங்குகளின் குழு 30க்கும் மேலாக சிறியதும் பெரியதுமாக செயல்பட்டு வருகிறது என்கிறார்கள்.  நாடோடிகளாக அங்கும் இங்கும் அலைவதால் நிகாங்குகளின் எண்ணிக்கையை முழுவதுமாக கணக்கிடமுடியவில்லை. சீக்கியர்களின் விழாக்களில் தற்காப்புக்கலைகளையும், குத

பாரதமாதாவின் ராஜபுத்திரனுக்கு இந்திய வரலாற்றில் இடம் கிடையாது!

படம்
  இப்படி சொன்னது காங்கிரசைச் சேர்ந்த தலைவர்கள் அல்ல. நேருவின் காலத்தில் அவரது கொள்கைகளை எதிர்த்த, ஆனால் அவரின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொண்ட முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜபாய். உடனே இன்றைய பிரதமர் மோடி போலத்தானே வாஜ்பாயும் கூறியிருக்கிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அவர் கூறியது பாரதமாதாவின் ராஜபுத்திரன் என்று மட்டுமே. இந்திய வரலாற்றில் இடம் கிடையாது என்று தனது செயல்கள் வழியாக கூறியிருப்பது தற்போதைய ஒன்றிய அரசு.  இந்தியா தனது 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இதற்கான போஸ்டர்களில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமருக்கு  இடமில்லை என்பது அனைத்து இடங்களிலும் சர்ச்சையாகி வருகிறது. நேருவுக்கு பதில் ஆங்கிலேயரை ஆதரித்த, சிறையில் இருந்தபோது மன்னிப்பு கடிதம் எழுதி தன்னைக் காப்பாற்றிக்கொண்ட சங் பரிவார் தலைவர்களை போஸ்டர்களில் இடம்பெறச் செய்து வருகிறது ஒன்றிய அரசு.  யாருக்கு யார் முக்கியமோ அவர்களை பதவியில் அமர்த்தலாம். ஆனால் வரலாற்றில் அப்படியான வசதிகள் கிடையாது. சுதந்திர இந்தியாவில் முதல் பிரதமராக அமர்ந்த நேருவை பற்றி பேசும்போது அவரின் தனிப்பட்ட விஷயங்களைப் பேசி களங்கப்பட

மருத்துவச் சேவையில் சாதனை படைத்த பெண்கள்!

படம்
          மேரி க்யூரி கதிர்வீச்சு அறிவியலாளர் அறிவியல் மற்றும் மருத்துவத்திற்காக கதிர்வீச்சு முறை பெரிதும் பயன்படுகிறது . அந்த ஆய்வில் மகத்தான சாதனைகளை செய்தவர் மேரி க்யூரி . இவர் செய்த ஆய்வுகளை குறித்து வைத்த காகிதங்கள் கூட கதிர்வீச்சு தன்மை கொண்டவை்யாக இருந்தன . இவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர் . அணுக்கள் அதிக சக்தி வாய்ந்த துகள்களை உமிழுகின்றன என்பதை க்யூரி கண்டுபிடித்தார் . அதில் ஒன்று போலோனியம் , மற்றது ரேடியம் . போலாந்தில்தான் க்யூரி பிறந்தார் . ரேடியத்திற்கு ரே என்ற வார்த்தைதான் காரணம் . இவரது கண்டுபிடிப்பு புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுகிறது . 1867 இல் போலந்தில் பிறந்தார் . பெற்றோர்கள் ஆசிரியர்கள் . அவர்களின் தூண்டுதலால்தான் படிப்பில் ஆர்வம் காட்டினார் . இயற்பியல் மற்றும கணிதம் படிக்க பிரான்சின் பாரிசுக்கு சென்றார் . அங்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு இயற்பியலாளர் பியரி க்யூரியை மணந்தார் . 1903 ஆம் ஆண்டு மேரியும் பியரியும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றனர் . மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பியரி விபத்து ஒன்றில் இறந்துபோன