இடுகைகள்

நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சிறுதீவுகளின் சூழல் முயற்சிகள்!

படம்
  சூழலைப் பாதுகாக்கும் சிறு தீவுகள்!  அயர்லாந்தின் வடக்குப் புறத்தில் நிறைய தீவுகள் அமைந்துள்ளன. இதில் எல் வடிவில் அமைந்துள்ள தீவு, ரத்லின் (Rathlin). இங்கு மின்சார வசதி கிடைத்ததே, தொண்ணூறுகளில்தான். மூன்று  காற்றாலைகள் நிறுவப்பட்டு காற்று மூலம் ஆற்றல் சேகரிக்கப்பட்டது.  ஆனால் பத்தாண்டுகளுக்குப் பிறகு, அதனை பராமரிப்பதற்கான வசதிகளும் பழுதடைந்த பாகங்களும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டது. இதற்குத் தீர்வாக, 2007ஆம் ஆண்டு ரத்லின் தீவு,  அயர்லாந்து நாட்டின் மின் அமைப்புடன் இணைக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டிற்குள் ரத்லின் தீவு, கார்பன் இல்லாத தீவாக மாறும் செயல்பாடுகளை செய்து வருகிறது. பிறரைச் சாராமல் தனக்கான செயல்பாடுகளை வரையறுத்துக்கொண்டு செயல்படுவதுதான் ரத்லின் தீவின் முக்கியமான சாதனை. டென்மார்க்கின் சம்சோ (Samso), கிரீசின் டிலோஸ் (Tilos), தென்கொரியாவின் ஜேஜூ (Jeju) ஆகிய சிறு தீவுகள் அனைத்துமே தூய ஆற்றலைப் பயன்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன.  தீவுகள் சிறியவை. இதிலுள்ள மக்களும் குறைவு. இவர்கள் தங்களின் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதால்

துருவப்பகுதியை உருக்கும் காட்டுத்தீ

படம்
  அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி! உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக,  ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.   இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார்.  ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்மதி பெரு

உருகும் பனி அதிகரிக்கும் வெப்பம்!

படம்
  ஆண்டிஸ் மலைத்தொடரில் உருகும் பனி! தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் நீர்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.  மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் 27 சதவீதம் உருகியுள்ளது. இதனால், மக்கள் நீருக்கு தவிக்கும் நிலை ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அன்டார்டிகா, க்ரீன்லாந்து, இமாலயம் ஆகிய பகுதிகளிலும் செய்த ஆய்வில் பனிப்பாறைகள் 37 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.  மேற்சொன்ன இடங்களில் பனிப்பாறைகள் அடர்த்தியாக இருந்தால், அது நீர்ப்பற்றாக்குறைக்கு தீர்வாக அமையும். ஆனால் அவை மெலிந்தால், குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலை உருவாகும். “ இப்போது பனிப்பாறைகள் பற்றி வெளியாகியுள்ள தகவல்தொகுப்பு, நீராதாரங்கள் விவகாரத்தில் தாக்கம் ஏற்படுத்தும்” என்றார் பிரான்சிலுள்ள கிர்னோபில் ஆல்ப்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரோமைன் மில்லான். இமாலயப் பகுதியில் பனிப்பாறைகள் உருகுவது குறைந்தது, அங்கு வாழும் மக்களுக்கு சாதகமான செய்தி. மற்றொருபுறம், ஆண்டிஸ் மலைத்தொடரில் பனிப்பாறைகள் உருகத் தொடங்குவது ஆபத்தான விஷயமாக உள்ளது.   எட்டு லட்சத்து 10 ஆயிரம் செயற்கைக்கோள் புகை

ஆர்க்டிக்கில் அதிகரிக்கும் வெப்பமயமாதல் விளைவுகள்!

படம்
  ஆர்க்டிக்கில் தீவிரமாகும் பருவச்சூழல் விளைவுகள்! சைபீரியாவின் ஆர்டிக் பகுதியில் வெப்பம் 10 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக கூடியுள்ளதை ஐ.நா அமைப்பு, சுட்டிக்காட்டியுள்ளது. இதுபற்றிய அறிக்கையை  உலக தட்பவெப்பநிலை அமைப்பு (WMO) வெளியிட்டது. ஆர்க்டிக் பகுதியில் இம்முறையில் அதிகரித்துள்ள வெப்ப அளவு, கடந்த கோடைக்காலத்தை விட அதிகம். இப்படி வெப்பம் அதிகரிப்பது காட்டுத்தீ மற்றும் பனிப்பாறைகள் உருகுவது ஆகியவற்றை நிகழ்ச்சிகளை அதிகரிக்கக்கூடும்.  கடந்த ஆண்டு சைபீரியாவில் செய்த ஆய்வில், 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே சமகாலத்தில் ஆர்க்டிக் பகுதியில் பதிவான  அதிக வெப்பநிலை ஆகும். பருவச்சூழல் மாறுபாடுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள ஐ.நா அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்ய நகரமான வெர்க்கோயான்ஸ்க் (verkhoyansk)என்ற இடத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நகரம் ஆர்க்டிக் பகுதியிலிருந்து 115 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தட்பவெப்பநிலை கணக்கீடு 1885ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது.  2020ஆம் ஆண்டு, உலகளவில் அதிக வெப்பநிலை நிலவிய மூன்று ஆ

சூரிய ஆற்றலை புதுமையான முறையில் சேமிக்கும் இஸ்ரேலிய நிறுவனம்!

படம்
  சோலார் ஆற்றலை சேமிக்கும் புதிய வழி!  இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் நிறுவனம், சோலார் ஆற்றலை சேமிக்க புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளது. சூரிய ஆற்றலை, சோலார் பேனல்களின் மூலம் பகலில் சேமிக்கலாம், ஆனால், இரவில் ஆற்றலை சேகரிப்பது கடினமானது. தற்போது இதற்கான தீர்வு கிடைத்துள்ளது. இஸ்ரேலின் தெற்குப்பகுதியில், பாறைகளை உள்ளடக்கிய பாலைவனம் உள்ளது. இங்கு சோலார் பேனல்களை வைத்து மின்சாரத்தை தயாரிக்கின்றனர். நாட்டில் பயன்படும் பெரும்பான்மையான மின்சார ஆற்றல், இங்கிருந்தே பெறப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும் ஆற்றல் தேவைக்கு, கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர்.  புதுப்பிக்கும் ஆற்றலை எளிதாக பெற்றாலும், அதனை சேமிக்க கூடுதலாக செலவழிக்கவேண்டியுள்ளது. இதனால் இதனைப் பலரும் பயன்படுத்த தயங்கி வருகின்றனர். கிப்புட்ஸ் யாஹெல் (kibbutz yahel) எனும் சிறு மக்கள் இனக்குழு, சோலார் ஆற்றலை குறைந்த விலையில் எளிதாக சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.  இவர்களால், இரவிலும் கூட ஆற்றலை சேமிக்க முடிவதுதான் இதன் சிறப்பம்சம்.  சோலார் பேனல்களில் பகல் நேரத்தில் கிடைக்கும் உபரி ஆற்றலை சேமிக்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி நிலத

பனிச்சிறுத்தையை அழிவில் இருந்து காக்கும் உயிரியலாளர் - முகமது

படம்
  ”விவசாயிகளுக்கு உதவி பனிச்சிறுத்தையை காக்கிறேன்” உலகில் பனிச்சிறுத்தைகள் வாழும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான். அவை, இங்கும் அழியும் நிலையில்தான் உள்ளது. உணவுக்காக, அங்குள்ள விவசாயிகளின் பண்ணைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மனிதர்களால் எளிதாக கொல்லப்படும் நிலையில் பனிச்சிறுத்தை உள்ளது.  உயிரியலாளரான முகமது, பனிச்சிறுத்தை இனத்தைக் காக்க முயன்று வருகிறார். இந்த விலங்கு பற்றி கிராமத்தினருக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்தார். கூடவே விவசாயிகளின் வளர்க்கும் விலங்குகளுக்கு காப்பீடும், தடுப்பூசியும் கிடைக்க உதவினார்.  2013ஆம் ஆண்டு தொடங்கி, பல்வேறு நாடுகளில் உலக பனிச்சிறுத்தை பாதுகாப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்படி பனிச்சிறுத்தைகள் வாழும் 12 நாடுகள் அடையாளம் காணப்பட்டன.   பாகிஸ்தானிலுள்ள பனிச்சிறுத்தை இனத்தைப் பாதுகாக்க அரசு மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், உள்ளூர் மக்கள் ஆதரவு ஆகியவற்றை முகமது ஒருங்கிணைத்து வருகிறார். பாதுகாப்பு பணியை மேலாண்மை செய்ய, 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு பயிற்சி  அளித்துள்ளார். விலங்குகளை வளர்ப்பவர்களுக்கு நஷ்டம

நீர்நிலைகளை அழிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்!

படம்
  மைக்ரோபிளாஸ்டிக்கிற்கு எதிரான போர்! நிலம், நீர்நிலைகளில் அதிகரிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் பற்றிய செய்தி புதிதல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் பல்வேறு கருவிகள் கண்டறியப்பட்டு வருகின்றன.   உலகளவில் ஆண்டுதோறும்  400 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக்குகள் உற்பத்தியாகிறது. இவை கடலில் மைக்ரோ அளவிலான துகள்களாக உடைந்து நீரை மாசுபடுத்துகிறது.  2004ஆம் ஆண்டு மைக்ரோ பிளாஸ்டிக் என்ற வார்த்தையை சூழலியலாளர் ரிச்சர்ட் தாம்சன் (richard thompson) அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்தின், கடற்புரங்களில் செய்த ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் துகள்களை கண்டுபிடித்து, உலகிற்கு சொன்னார். 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்ட பிளாஸ்டிக் துகள்களை மைக்ரோ பிளாஸ்டிக் என அறிவியலாளர்கள் வரையறுக்கின்றனர். இவை ஆழ்கடலில், ஆர்க்டிக்  பனியில் ஏன் நமது உடலிலும் கூட உள்ளன.  2019ஆம் ஆண்டு என்விரோன்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இதழில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மனிதர்கள் தினசரி 1 லட்சம் பிளாஸ்டிக் துண்டுகளை உண்பதாக கண்டறியப்பட்டது. மனித உடல் உறுப்புகளை, திசுக்களை பிளாஸ்டிக் சேர்மானங்களிலுள்ள வேதிப்பொ

தவளையைக் காக்கப் போராடும் சூழலியலாளர்! - மதுஸ்ரீ முட்கே

படம்
  மதுஸ்ரீ முட்கே தவளை இனத்தைப் பாதுகாக்கும் சூழலியலாளர்!  மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சூழல் ஆராய்ச்சியாளர்  மதுஸ்ரீ முட்கே (madhushri mudke ). கர்நாடகத்திலுள்ள, மணிபால் நகருக்கு பிசியோதெரபி படிப்பில் முதுகலைப் பட்டம் பெற வந்தார். படிக்கும்போது, அங்குள்ள இயற்கைவளம் மற்றும் பறவைகளால் ஈர்க்கப்பட்டார்.  இதன் விளைவாக, தனது வேலையைக் கூட சூழலியலுக்கு மாற்றிக் கொண்டார். 2015ஆம் ஆண்டு தொடங்கி நகரமயமாதலால் பாதிக்கப்படும் தவளை இனங்களைப்  பற்றி ஆராய்ந்து வருகிறார்.  மதுஸ்ரீயின் பெரும்பாலான ஆய்வுகள், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நடைபெற்றது. கோட்டிகெஹரா டான்சிங் ஃபிராக்கை (kottigehara dancing frog) காப்பாற்றுவது பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். தற்போது, பெங்களூருவில் உள்ள அசோகா டிரஸ்டில் (ATREE) முனைவர் படிப்பை படித்து வருகிறார். இந்த அமைப்பு இயற்கை மற்றும் சூழலியல் சார்ந்த ஆராய்ச்சிப்படிப்புகளை கொண்டுள்ளது. இங்கு ஆராய்ச்சி செய்யும் மதுஸ்ரீக்கு தேவையான உதவித்தொகையை, லண்டன் விலங்கியல் சங்கம் வழங்கிவருகிறது.   மாசுபாடு, அணை, காடுகள் அழிப்பு காரணமாக நடனத் தவளையின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ”தவ

எழுத்து என்பது நம்பிக்கையின் செயல்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன்  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  எனது மடிக்கணினி பழுதாகிவிட்டது. அதனை சரி செய்ய லினக்ஸ் தெரிந்த ஆட்களிடம் கொடுத்திருக்கிறேன். கணினியில் 60 பக்கம் எழுதிய நூல் இருந்தது. அதுவும் மெல்ல அழிந்துபோய்விட்டது. கணினியின் இயக்கமும் பாதிக்கப்பட்டுவிட்டது. இப்படி ஒருபோதும் நடந்ததே இல்லை என லினக்ஸ் நண்பர் சீனிவாசன் சத்தியம் செய்தார். என்னவென்று, எனக்கும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டேன். மேன்ஷனில் ஆட்கள் அதிகரித்துவிட்டதால், இப்போது கடையில்தான் சாப்பிடுகிறேன்.   வேலைப்பளுவில் சமைப்பதும் கடினமாகிவருகிறது. தாரகை - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலை 150 பக்கங்கள் படித்துவிட்டேன். கதை, அமெரிக்காவில் நடைபெறுகிறது. ட்ரேஸி என்ற பெண் எப்படி தன் அம்மா தற்கொலை செய்யக்கார ணமானவர்களை பழிவாங்குகிறார் என்பதே கதை.  படித்தவரை மேற்குலக நகரக் கதை என்றாலும் சிறப்பாகவே எழுதியிருக்கிறார். அலுவலகத்தில் கிறிஸ்மஸிற்கு விடுமுறை கிடையாது என கூறிவிட்டார்கள்.  நன்றி! அன்பரசு 24.12.2021 ---------------------------- எழுத்தாளர் இசபெல் அலண்டே அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலம

என்றென்றைக்கும் உலகிற்கு தேவைப்படும் காந்தி! - உரையாடும் காந்தி - ஜெயமோகன்

படம்
  காந்தி நன்றி -டைம்ஸ் ஆப் இந்தியா உரையாடும் காந்தி ஜெயமோகன் என்றைக்கும் இல்லாதபடி காந்தி இன்று மக்களுக்கு தேவைப்படுகிறார். அவரின் கொள்கைகள், ஆளுமை, ஊடக வெளிப்பாடு என அனைத்துமே இன்றுமே மக்களை வசீகரிக்கின்றன.  நிறைய ஊடக ஆளுமைகள், வலதுசாரி கருத்தாளர்கள் காந்தியை அவதூறு, வசை செய்வதற்காக அவரது தனிப்பட்ட ஆன்மிக பரிசோதனைகளைப் பற்றி பேசுவார்கள். ஆனால் அப்படியும் கூட அன்றைய காங்கிரசிலும் இன்றும் கூட யாரையும் விட செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தது காந்தி மட்டுமே.  இதை ஒத்துக்கொள்ள இன்றைய காங்கிரஸ் கட்சிக்கு கூட சங்கடங்கள் தயக்கங்கள் இருக்கலாம்.  உரையாடும் காந்தி நூலில் ஜெயமோகன், காந்தி மீது மக்களுக்கு உள்ள பல்வேறு சங்கடங்கள், தயக்கங்கள், கேள்விகள், அவதூறுகள், வசைகள் என அனைத்துக்கும் பதில் அளிக்கிறார்.  இந்த நூல் ஜெயமோகனின் வலைத்தளத்தில் எழுதப்பட்ட கருத்துக்களைக் கொண்டதே.  காந்தியைப் பற்றி எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என ஜெயமோகன் இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். இதன்படி காந்தியைப் பற்றி பல்வேறு ஊடகங்களில் அறிய வந்த பொய், வதந்தி, அவதூறு, வசைகளுக்கு சலிப்பே இல்லாமல் பதில் சொல்லுகிறார்.  காந்திய

கனடாவில் பன்மைத்தன்மையைக் காக்க போராடிவரும் விவசாயிகளின் அமைப்பு!

படம்
  பாரம்பரிய விதைகளைக் காக்கும் விவசாயிகளின் குழு!  நூற்றாண்டுகளுக்கு முன்னர், தனித்துவமான பழங்கள், காய்கறிகளை எளிதாக பெறமுடியும்.  அன்று காய்கறி, பயிர் விதைகளை எளிதாக விவசாயிகளிடமிருந்து பெற்றுவிட முடியும். ஆனால் இன்று தொழில்துறை வேகமாக முன்னேறியுள்ளது. பணப்பயிர்களை அதிகம் விளைவிக்கும்  நிலையில், பாரம்பரிய விதைகளை காண்பது குறைந்துவிட்டது. உலகெங்கிலும் சிலர் பாரம்பரிய விதைகளைக் காக்க தங்களை அர்ப்பணித்து செயல்பட்டு வருகின்றனர்.  வட அமெரிக்காவில் உள்ள 90 சதவீத பழங்கள், காய்கறிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. உலகம் முழுக்க  75 சதவீத பயிர்களில் பன்மைத்தன்மை அழிந்துவிட்டது அறிவியல் உண்மை. விதைகளை காக்கும் பணியில்  இயற்கை பேரிடர்கள், பூச்சிகளின் தாக்குதல் என சில சவால்கள் உள்ளன. கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் ஆகிய நகரங்களில் 1980களில் விவசாயிகள் ஒன்றுபட்டனர். பாரம்பரிய விதைகளை காக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.  இச்செயல்பாட்டில், தொடக்கத்தில் நூறு விவசாயிகள் பங்கேற்றனர்.  அக்காலகட்டத்தில் பெரு விவசாய நிறுவனங்கள், உள்நாட்டு விதை நிறுவனங்களை கையகப்படுத்தி வந்தன. அதன்மூலம், உள்நாட்டில் அதிக வில