இடுகைகள்

கடனால் பாதிக்கப்பட்ட விவசாயியை அடையாளம் காண்பது இனி ஈஸி!- நபார்ட் வங்கியின் விவசாயிகளுக்கான தொகுப்பு பட்டியல்(FDI)

படம்
  நபார்ட் வங்கியை கேள்விப்பட்டிருப்பீர்கள். விவசாயத்திற்கான கடன்களை வழங்கிவரும் வங்கி இது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான தொகுப்பு பட்டியல் ஒன்றை உருவாக்க உள்ளது. இதன் மூலம் உண்மையில் உதவி தேவைப்படும் விவசாயிகளை எளிதாக அடையாளம் காண முடியுமாம்.  சின்ன டேட்டாவைப் பார்த்துவிடுவோம்.  தேசிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கிய கடன் தள்ளுபடி தொகை ரூ.60 ஆயிரம் கோடி - 2008 2012 - 2013 ஆம் ஆண்டில் கடன் தள்ளுபடியை அறிவித்த மாநிலங்களின் எண்ணிக்கை 13 2019ஆம் ஆண்டு உ.பி அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தொகை  36 ஆயிரம் கோடி 2017இல் மகாராஷ்டிர அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தொகை 30 ஆயிரம் கோடி  இத்தனை தள்ளுபடி கொடுத்தபிறகுதான் ஒன்றிய அரசுக்கு உண்மை ஒன்று தெரிந்தது. நாம் சரியான ஆட்களுக்குத்தான் கடனை தள்ளுபடி செய்தோமா இல்லையா என்று. பஸ்ஸை விட்டு இறங்கியபிறகு கண்டக்டரிடம் மீதி சில்லறையை வாங்கவே இல்லையே என்பது போலத்தான் இதுவும். இருந்தாலும் அரசு யோசிக்கிறதே, அந்த மட்டில் அதனை பாராட்டித்தான் ஆக வேண்டும்.  கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு வழங்கினாலும் கூட 60 சதவீத சிறு குறு விவசாயிகள் இப்பயன்களை பெற முடியவில்லை

பாமாயிலால் அழியும் உராங்குட்டான்கள்!

படம்
  மழைக்காடுகளில் வளர்க்கப்படும் பனைமரங்களிலிருந்து பாமாயில் பெறப்படுகிறது. இதற்கு கொடுக்கும் பெரிய விலையாக உராங்குட்டான்களின் வாழிடம் அழிக்கப்படுகிறது.  பாமாயில் மேற்கு ஆப்பிரிக்க பனை எனும் மரத்திலிருந்து பாமாயில் பெறப்படுகிறது. இதனை நீங்கள் பெரும்பாலும் வெஜிடபிள் ஆயில் என்ற வார்த்தையின் கீழ் புரிந்துகொள்ளலாம். இன்று பிரிட்டானியா, ஐடிசி, யுனிபிக், மெக்விட்டிஷ், ஓரியோ என அனைத்து பிஸ்கெட் கம்பெனிகளிலும் மலிவான முதல் விலை உயர்ந்த அனைத்து பொருட்களிலும் பாமாயில் பயன்படுகிறது. பாமாயில் என்ற பெயர் வர மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் பரவியதும், பருவ மழைக்காடுகளில் அதிகம் விளைவிக்கப்படுவதும் முக்கியமான காரணம்.  உலகளவில் பயன்படுத்தும் பாமாயில் 85 சதவீதம் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. இங்குதான் உராங்குட்டான்கள் காடுகளில் வாழ்கின்றன.  பாமாயிலுக்காக பனை மரங்களை விளைவிக்க காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் உராங்குட்டான்கள் மட்டுமல்ல பிற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் வாழிடமும் அழிக்கப்படுகிறது. இதனால் உணவுக்காக அவை நகரங்களுக்குள் வருவது தவிர்க்க

புதிய சூப்பர் ஆப்பில் என்ன இருக்கிறது? டாடா நியூ

படம்
  புதிதாக சந்தையில் சூப்பர் ஆப் ஒன்று களமிறங்கியுள்ளது. புதிதாக என்றால் இதற்கு முன்னால் ஏதாவது ஆப் இருக்கிறதா என மிகச்சிலர் கேள்வி கேட்கலாம். நிச்சயமாக.. மைஜியோ, பேடிஎம் ஆப் ஆப்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மை ஜியோ ஆப்பில் நீங்கள் அந்த நிறுவனம் வழங்கும் பல்வேறு தினசரி மளிகை தொடங்கி எலக்ட்ரானிக்ஸ், உடைகள், சினிமா, இணையம் வரையிலான சேவைகளைப் பெறலாம். இதில் பணத்தை பிறருக்கு அனுப்பும் சேவைகளையும் செய்யலாம். பேடிஎம் இந்த வகையில் பிரபலமாக இருந்தது. இப்போதுதான் பங்குச்சந்தை சரிவால் சற்று தடுமாற்றத்தில் உள்ளது. பேடிஎம் ஆப்பில் பேடிஎம் மால் என்ற வசதியைப் பயன்படுத்தி நிறைய பொருட்களை சேவைகளைப் பெறலாம்.  2016இல் அறிமுகமான மை ஜியோவில் 100 மில்லியன் பேர், 2010இல் அறிமுகமான பேடிஎம்மில் 100 மில்லியன் பேர் உள்ளனர். இப்போது அதாவது ஏப்ரல் 2022இல் அறிமுகமான டாடா நியூவில் ஒரு மில்லியன் பேர் உள்ளனர். உள்ளனர் என்ற அர்த்ததை ஆப்பை தரவிறக்கம் செய்தனர் என புரிந்துகொள்ளுங்கள். இன்று வரையில் இந்த ஆப்களை அவர்கள் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்று துல்லியமாக தெரியவில்லை.  சூப்பர் ஆப் என்பதன் அடிப்படையே

ஏடிஹெச்டியைக் கண்டுபிடித்த நான்காம் வகுப்பு ஆசிரியர்!

படம்
  கனடாவின் ஒன்டாரியோவில் உள்ளது பிராம்டன் நகரம். அங்குள்ள பள்ளி ஒன்றில் சத்னம் சிங் படித்து வந்தான். அவன் எப்போதும் போல வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வந்தாலும் மதிப்பெண்கள் என்னமோ சி, டி என அடுத்தடுத்து தரத்தின் அளவுகோல் குறைந்துகொண்டே வந்தது. அதையெல்லாம் விட முக்கியமான பிரச்னை பள்ளியிலிருந்து வந்துகொண்டே இருக்கும் புகார்களின் அழைப்புதான். பாடங்களை கவனிக்க மாட்டேன்கிறான், சண்டை போடுகிறான், பேச மாட்டேன்கிறான் என வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள் அனைவரும் மறக்காமல் சத்னம் சிங்கை குறைசொல்லாமல் வகுப்பை நிறைவு செய்யவில்லை.  இதில் ஒரே ஆசிரியர் மட்டும் சத்னம் சிங்கின் பிரச்னையை வேறுமாதிரி பார்த்தார். அவர்தான், அவனுக்கு இருந்த சிக்கலை கண்டுபிடித்து பெற்றோருக்கு சொன்னார். ஆம். சத்னத்திற்கு ஏடிஹெச்டி குறைபாடு இருந்தது. இந்த குறைபாடு உள்ளவர்களை ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார வைக்க முடியாது. உட்கார வைத்தாலும் பேசுவதை கட்டுப்படுத்த முடியாது. அப்படி கட்டுப்படுத்தினாலும் அது போரின் தொடக்கமாகவே இருக்கும். பரபரவென ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள். மேலும் அடிக்கடி மூர்க்கமாக சண்டையும் போடுவார்கள். இதெல்லா

பெண்களை தொழில்முனைவோராக்கும் அங்கிதி போஸ்!

படம்
  அங்கிதி போஸ் அங்கிதி போஸ் தொழில்முனைவோர், ஸில்லிங்கோ 2015ஆம் ஆண்டு. அங்கிதிக்கு வயது 23. அப்போதுதான் தனது வேலையை விட்டு விலகி தனக்கென தனி வணிக நிறுவனத்தைத் தொடங்கினார்.ஸில்லிங்கோ என்பதுதான் அதன் பெயர்.  வணிக நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனம் இது.  சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் வணிக ரீதியான பிரச்னை ஏற்பட்டு வந்த சமயம். பாங்காக் சென்றிருந்தார் அங்கிதி. அங்கு சிறு, குறு வணிகர்கள் தங்களுக்கென இணையநிறுவனங்களே இல்லாமல் வேலை செய்து வந்தனர். அவர்களின் பொருட்களை இணையத்தில் வாங்க முடிந்தால் இன்னும் எளிதாக வருமானத்தை அவர்கள் பெறலாம் என அங்கிதி நினைத்தார்.  இதற்காக துருவ் கபூருடன் சேர்ந்து ஸில்லிங்கோ நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க வணிகர்கள் சீனாவிலிருந்து பொருட்களை வாங்குவதை கைவிட்டு வேறு நிறுவனங்களை தேடி வந்தனர். இந்த நேரத்தில் தெற்காசியாவில் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வந்தன. ஆன்லைனில் இந்த  நிறுவனங்கள் இருந்தால் எளிதாக வணிக வாய்ப்பை பெற்றிருக்க முடியும். இதற்கான பல்வேறு கட்டமைப்புகளை, வசதிகளை அங்கிதி, வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்க தொடங்கினார்.  இந்தோனேஷி

பெண்கள் தங்கள் கனவை எப்போதும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது! ஃபர்கா சையத், ஃபேஷன் டிசைனர்

படம்
  ஃபர்கா சையத் ஃபேஷன் டிசைனர் சிறுவயதிலிருந்து பொம்மைகளுக்கு துணிகளை பொருத்திப் பார்த்து தைத்துக் கொண்டிருந்தவர், இன்று ஃபேஷன் டிசைனராக மாறியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லைதான். சிறிய நிறுவனமான தனது தொழிலைத் தொடங்கியவர் இன்று எஃப் எஸ் குளோசட் என்ற நிறுவனமாக வளர்ந்திருக்கிறார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தனது ஃபேஷன் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் ஃபர்கா.  தனது திறமையால் இன்று இந்தி திரைப்பட உலகிலும் நுழையவிருக்கிறார். அவரிடம் பேசினோம்.  ஃபேஷன் டிசைனிங் துறைக்குள் வர உங்களைத் தூண்டியது எது? எனக்கு சிறுவயதில் இருந்தே இத்துறையில் ஆர்வம் இருந்தது. எனது டிசைன் சார்ந்த வணிகத்தை 2018இல் தொடங்கினேன். எனக்குப் பிடித்ததை சரியாக செய்யவேண்டும் என்பதுதான் லட்சியம். எனது பிராண்டை பிரபலப்படுத்த நான் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். இன்று என்னுடைய பிராண்ட் பலருக்கும் தெரியும் விதமாக மாறியிருக்கிறது.  இத்துறையில் உங்களுக்கு ஊக்கம் கொடுத்தது யார்? சிக்கலான சவால்களை சமாளித்து தங்களை காத்துக்கொள்ள முன்னிலைப்படுத்திக்கொள்ள போராடும் அனைத்து பெண்களுமே எனக்கு ஊக்கம் கொடுத்தவர்கள் தான். அவர்கள் த

இந்தியாவில் பரவும் வெறுப்பெனும் நச்சு! - நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்

படம்
  வெறுப்பு மதவாத பேச்சு வாக்குவங்கி அரசியலுக்காக வெறுப்பு அரசியல் மக்களின் மனதில் செலுத்தப்பட்டு வருகிறது. மதவாத வெறுப்பு இந்தியாவை இதுவரை யாரும் பார்த்திராத முறையில் மாற்றி வருகிறது.  என்னை இந்தியா டுடே ஆசிரியர், பிரிவினை அந்தளவு ஆழமாக இருக்கிறதா என்று கேட்டார். மதவாத வன்முறை, படுகொலைகள், பசு பாதுகாப்பு தாக்குதல்கள் ஆகியவற்றை நான் உடனே நினைவுபடுத்தவில்லை. இப்போது கர்நாடகத்தில் நடைபெறும் ஹிஜாப், ஒலிப்பெருக்கி பிரார்த்தனைகள், ஹலால் முறை இறைச்சி ஆகியவற்றையும் கூட நான் நினைக்கவில்லை. பிரிவினை பாதிப்பை நேரடியாக எனது அனுபவத்தில் உணர்ந்த மூன்று சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.  சசிதரூர் 1 ஜெய்ப்பூரில் நான் தங்கநிற முடிக்கற்றை கொண்ட லெபனான் நாட்டுப் பெண்ணை சந்தித்தேன். அவர் இந்தியாவுக்கு கைவினைப் பொருட்கள் வணிகத்திற்காக 15  ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கிறார். வெளிநாட்டினராக இருந்தாலும் அவரை மக்கள் வரவேற்று பேசுவது வழக்கம். அவரது பெயர் நூர், இதற்கு வெளிச்சம் என்று பொருள். என்ன அழகான பெயர் என்று கூறி பேசியிருக்கின்றனர். ஆனால் இப்போது நூர் என்றால், நீங்கள் முஸ்லீமா என்று முதல் உரையாடலிலேயே வார்த்தையிலே

மொழியைப் பேச தெரியாமல் இன்னொரு மொழி படத்தில் நடிக்க முடியாது! - அர்ஜூன் ராம்பால், இந்தி நடிகர்

படம்
  அர்ஜூன் ராம்பால், இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால் இந்தி நடிகர் லண்டன் டயரிஸ் படத்தில் உங்களுடைய பாத்திரம் தனிப்பட்ட ரீதியில் தாக்கம் ஏற்படுத்தும்படி இருந்ததா? தனியாக யாரும் இல்லாமல் ரகசியங்களை தேடித்திரியும் துப்பறிவாளன் ஒருவரின் கதை. பொதுவாக நாம் அனைவரும் பெருந்தொற்று காலத்தில் தனியாக இருந்திருப்போம். அப்போது கூட நமக்கென குடும்பம், மனிதர்கள் என ஒரு வட்டாரம் இருந்திருக்கும். ஆனால் இப்படி ஏதுமின்றி ஒரு மனிதன் இருந்தால் எப்படியிருக்கும்? நான் ஏற்று நடித்த பாத்திரம் அப்படித்தான் எனக்குள் சுவாரசியமான தாக்கத்தை ஏற்படுத்தியது.  ஓடிடி உங்களுக்கு சவாலான பாத்திரங்களை வழங்கியதா? அப்படி சொல்ல முடியாது. கடந்த சில ஆண்டுகளாக நான் நடித்த பல படங்கள் தவறான தேர்வுகளைக் கொண்டவை. அபர்ணா சென்னின் தி ரேப்பிஸ்ட், தாக்கத் ஆகிய படங்களை நான் தேர்ந்தெடுத்தேன். இவை உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டவை. நீங்கள் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்ததே? நடிக்க கேட்டார்கள். எனக்கு தெலுங்கு மொழி தெரியாது. இந்த நிலையில் அங்கு போய் எப்படி நடிப்பது என நான் என்னால் முடியாது என மறுத்துவ

மார்க்கெட்டைப் புரிந்துகொண்டு வளர வேண்டும்! - ஐஸ்வர்யா ரெட்டி, கென்சு

படம்
  ஐஸ்வர்யா ரெட்டி, கென்சு ஐஸ்வர்யா ரெட்டி நிறுவனர், கென்சு ஐஸ்வர்யா, இந்திய வடிவமைப்பில் சற்று நவீனத்துவத்தை குழைத்து பல்வேறு நாற்காலிகள் மற்றும் உள் அலங்காரங்களை செய்து வருகிறார். இவரது வடிவமைப்பு மூலம் தொன்மையான இந்திய வடிவமைப்பில் அமைந்த பொருட்கள் நவீனத்துவ அழகுடன் மிளிர்கின்றன. 2019ஆம் ஆண்டில்தான் கென்சு என்ற சொகுசு பொருட்களுக்கான நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.  உங்கள் தொழிலில் முக்கியமான ஊக்கம் என்ன? எனது தந்தை நாகராஜ் ரெட்டி, எனக்கு பெரும் ஊக்கம் தருகிறார். குறிப்பிட்ட காலத்தில் வணிகம் செய்யும் நாகராஜ் பல்வேறு சவால்களை சந்தித்து தொழிலை செய்தவற்கான ஊக்கத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்.  நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? மார்க்கெட்டை புரிந்துகொண்டு காலத்திற்கேற்ப மாறி வளர்ச்சி பெறவேண்டும் என்பதைத்தான் கற்ற பாடம் என்பேன்.  தொழில்முனைவோராக நீங்கள் கூற நினைக்கும் அறிவுரை என்ன? பொறுமை விடாமுயற்சி தொழிலுக்கு முக்கியம். எதுவுமே இல்லாமல் அடிப்படையின்றி முன்னேறி வளர்வது எளிதல்ல. நமக்கான நெட்வொர்க்கை நாம் உருவாக்கிவிட்டால் தொழிலை எளிதாக  செய்ய முடியும். வாடிக்கையாளர் கொடுக்கும் கருத்துகளை திற

பசித்த வயிற்றின் மீது எதற்கு கோபம்? - உணவு அரசியலால் தவிக்கும் குழந்தைகள்

படம்
  உணவை மக்களுக்கு விநியோகிப்பவர்கள் அதன் மீதான ஆதிக்கத்தை செலுத்துகின்றனர். எந்த உணவை மக்கள் சாப்பிடவேண்டுமென அறிவியல் பூர்வமான ஆய்வுகளை புறக்கணித்து தங்கள் மனதில் உள்ள நம்பிக்கையை புகுத்த தொடங்கிவிடுகின்றனர். இலவசமாக கொடுக்கும் உணவுகள் பெரும்பாலும் சைவமாகவே இருப்பது தற்செயலானது அல்ல.  கடந்த ஆண்டு, கர்நாடகத்தில் எம்என்எம் மகளிர் பள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் இருந்து முட்டை திடீரென நீக்கப்பட்டது. இதற்கு உள்ளூரைச்சேர்ந்த அரசியல்வாதிகளே காரணம் என மாணவிகள் அறிந்தனர். கர்நாடகத்தில் கொப்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பள்ளியின் சுற்றுவட்டாரத்தில் ஊட்டச்சத்து சார்ந்த பிரச்னை நீங்காமல் இருக்கிறது. இந்த நிலையில் மதிய உணவுத்திட்டத்தில் இருந்து முட்டையை நீக்கினால் எப்படி? இதை அங்குள்ள மாணவி அஞ்சலி தீவிரமாக எதிரொலித்தார்.  தற்போது மத்திய அரசின் மதிய உணவுத்திட்டத்திற்கு பிஎம் போஷான் என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதை பெருமைப்படுத்தும் விதமாக இதுவரை உணவில் இருந்த முட்டையை நீக்கிவிட்டனர். இப்போது மதிய உணவில் சமைத்த காய்கறிகள் சேர்த்த உணவு மட்டுமே வழங்கப்படுகிறது.  நாங்கள் என்ன சாப்பிடவேண்டும் என

மரப்பாச்சி சொன்ன ரகசியம் நாவல் - இனி இலவசமாக யாரும் அச்சிட்டு விற்கலாம்!

படம்
  பல்வேறு ஊடகங்களில் வேலை பார்த்து வந்த பத்திரிகையாளர் திரு.பாலபாரதி அவர்களின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை பேட்டி இது. இந்த பேட்டிக்கு முன்னரே, தனது வலைத்தளத்தில் மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலை யார் வேண்டுமானாலும் அச்சிட்டு விற்றுக்கொள்ளலாம் என அனுமதியை வழங்கிவிட்டார்.  மின்னூல், ஊடக படைப்பாக்கங்களுக்கு அனுமதி தேவை என கூறியிருப்பது பொதுவுடமை ஆட்களுக்கு சற்றே கஷ்டமாக இருக்கலாம்.  குழந்தைகள் மீதான  பாலியல் வல்லுறவு பற்றிய கதையைப் பேசும் நூல்  மரப்பாச்சி சொன்ன ரகசியம். இலவசமாக, எழுதிய ஆசிரியருக்கு ராயல்டி தராமல் அச்சிட்டுக்கொள்ளலாம் என்று கூறிய முயற்சிக்கு எந்தளவு ஆதரவு இருக்கும் என்று தெரியவில்லை. ஏதாகிலும் இப்படி வெளிப்படையாக அறிவித்த திரு. பாலபாரதி அவர்களுக்கு நன்றி கூறவேண்டும்.  எழுத்தை வாழ்க்கையாக வாழ்வாதாரமாக கொண்ட எழுத்தாளர்கள் இப்படி துணிச்சலாக அறிவிப்பை வெளியிட நிறைய நெஞ்சுரம், விட்டுக்கொடுத்தல் தேவை. செல்லுமிடமெங்கும் தன்னை இடதுசாரி சிந்தனையாளர் என தைரியமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் திரு. பாலபாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்.   நூல், பாலபாரதி டாட் நெட் வலைத்தளத்தில்